Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேசத் தொலைக்காட்சியான அல்ஜசீராவில், இலங்கையில் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் உட்பட, இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது. காணொளி..... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4244:2012-04-02-03-33-39&catid=1:latest-news&Itemid=18

  2. தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும் 02 ஏப்ரல் 2012 "மழை பெய்கிறது ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது தமிழர்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள் ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல்; ஈரத்திலேயே உணவு உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்." மார்ச் மாதம் இருபத்திரண்டாம் நாள் இலங்கை பற்றிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு தமிழர்களில் பலருடைய – குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலருடைய – செயற்பாடுகளைப் பார்க்கிற போது பாரதியின் மேற்கூறிய வரிகள் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை (புலிகளாக இருந்த தமிழர்களை …

    • 0 replies
    • 573 views
  3. April 2nd, 2012 அன்று வெளியிடப்பட்டது - கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரத்தில் உள்ள மிகவும் பழமையான ஆலயமான உருத்திரபுரீச்சரத்தை இலங்கை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு புத்தர் சிலை ஒன்று இருப்பதாகவும் அதனை மீட்கும் நடவடிக்கையாகவும் இலங்கை இராணுவத்தினர் கோயில் பகுதியில் ஆயுதத்துடன் முற்றுகையிட்டுள்ளனர். கோயில் பூசகர்கள் மற்றும் நிர்வாகிகளை அச்சுறுத்தியதுடன் தம்மிடம் புத்தர் சிலையை ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.புத்தர் சிலையை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில் ஆலயத்தை இடிக்க நேரிடும் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உருத்திரபுரீச்சரம் ஈழத்தின் ஈச்சர சிவாலயங்களில் ஒன்று. மிகவு…

    • 0 replies
    • 550 views
  4. கடந்த மார்ச் 18ம் திகதி ஸ்காபுறோவில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருதுகள் விழாவில் இலங்கைக்கான சர்வதேச சிறப்பு விருதினைப் பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு மாவை சேனாதிராஜாவை கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற சிறு வைபவம் ஒன்றில் தலைவர் திரு இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டு தமது வாழ்;த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். கனடா உதயன் விருது விழா நிறுவனர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் விடுத்த வேண்டுகோளை கொழும்பிலுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அலுவலக நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டு மேற்படி வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மார்ச் …

  5. ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கூறியதாகவும், அவர் அவ்வாறு கூறியதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டுக் கிடந்த ஒளிப்படமே காரணம் என்றும் ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ தகவல் வெளியிட்டுள்ளது. வாக்கெடுப்புக்கு சில நாட்கள் முன்னதாக சனல்-4 வெளியிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது உள்ளிட்ட தமிழர்களின் அவலங்கள் பற்றிய காட்சிகள் சோனியாகாந்திக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுவதாக தம்மை அடையாளம்காட்ட விரும்பாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. தமிழ் ஊடகங்களில் வெளியான இந்தப் படங்கள் ஒரு புயலையே தோற்ற…

  6. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர்; ஜி.எல்.பீரிஸ் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவில் மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேறிய பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை அடுத்து அவர் பதவி விலகவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமக்கு நம்பிக்கையான மூத்த அமைச்சர்களுடன் அமைச்சர் பீரிஸ் மனந்திறந்து பேசியதாகவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறியதாகவும் தெரியவருகிறது. முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம மீண்டும் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகிறது. அதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ரோஹித போகொல்லாகம தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பின…

  7. அப்பக்கடைச் சந்தியில் திடீரென அருள்பாலிக்கும் புத்தபிரான்! March 30th, 2012 அன்று வெளியிடப்பட்டது - யாழ்.கொக்குவில் கலட்டி சந்திப் பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த முகாம் காணியினுள் இராணுவத்தினரால் புத்தர் கோவில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,சமாதான காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களைக் கண்காணிப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த குறித்த பகுதியில் இராணுவத்தினரால் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அப்பக்கடை பல்கலைக்கழக மாணவர்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ முகா…

  8. புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் சிலரை தாம் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. நேற்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ராமகிருஷ்ன மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 380 பேர் இதில் விடுவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுகளில் பெண் போரளிகளை நாகரீக உடைகள் அணிந்து கலந்து கொண்டனர். கெட் வாக்கில் வரும் முன்னாள் போராளிகளின் படங்கலை பார்க்க.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4231:2012-03-31-13-46-23&catid=1:latest-news&Itemid=18

  9. இந்தியாவானது தனக்கு தெற்கே அமைந்துள்ள சிறிலங்காவுடன் நட்பைப் பேணவேண்டிய நிலையிலும், தனது பிராந்திய ஆதிக்கத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கவேண்டும் என்கின்ற இருதலைக் கொள்ளி நிலையில் இந்தியா மாட்டிக்கொண்டது. இவ்வாறு Global Spin வலைத்தளத்தில் AMANTHA PERERA எழுதியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புதினப்பலகைக்கா மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் அதாவது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கடமையாற்றிய சிறிலங்கா இராஜதந்திரிகள் கொழும்புடன் தீவிர தொலைபேசி தொடர்பாடல்களை மேற்கொண்டனர். தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்த…

  10. . தமிழ்க் குழந்தை...க்காக களம் இறங்கும் பிரித்தானிய காவல்த்துறை. பிரித்தானியாவில் தெற்கு லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெற் ஒன்றில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்டமையால் வாழ்நாள் முழுவதும் எழுந்து நடமாட முடியாத பேரவலத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்ற இலங்கைத் தமிழ் சிறுமி துஸா கமலேஸ்வரனின் வைத்திய சிகிச்சைக்காக மனிதாபிமான நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றது லண்டன் பொலிஸ். துப்பாக்கி சுட்டு அனர்த்தம் இடம்பெற்று ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனால் துஸா வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றார். வார இறுதி நாட்களில் மாத்திரம் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றார். இவருக்கு விசேட உபகரணம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுக்க பெற்றோர் பகீரத …

  11. ஆசியாவில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு 8ம் இடம் ஆசிய தரப்படுத்தலின்படி கொழும்பு பல்கலைக்கழகம் 8வது இடத்தை பிடித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க பாராளுமன்றில் இன்று (30) தெரிவித்தார். அதுபோல பேராதனை, ரஜரட்டை, களனி, ஜயவர்த்தனபுர மற்றும் நாவல ஆகிய பல்கலைக்கழகங்கள் கடந்த 2011 வருடத்துடன் ஒப்பிடும்போது 2012ம் வருடம் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் றுஹுணு பல்கலைக்கழகம் தரப்படுத்தலில் வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும் அதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் சங்கம் அங்கு இயங்கி வருகின்றமையே காரணம் எனவும் உயர் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் பல்கலைக்கழகம் குறித்து மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற…

  12. மேற்குலகு கொண்டுவந்த இலங்கையின் போர்க்குற்ற ஆவணப்படங்களை தோற்கடிக்க இந்தியா எடுக்கவிருக்கும் ஆவணப்படம் ! சிங்களத்தின் போர்க்குற்றங்களை ஆவணப்படமாக்கி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ந்த மேற்குலக ஆவணப்படங்களைத் தோற்கடிக்கவும், சிங்களத்துடன் தான் வன்னியில் அரங்கேற்றிய இனப்படுகொலைய முற்றாக மறைக்கவுமென இந்திய வெளியுறவுத்துறை தனது பாணியில் ஒரு ஆவணப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இதுக்கென இந்தியாவின் மிகவும் பிரபலமான சினிமா தயாரிப்பாளர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் வேலைக்கு அமர்த்தியிருக்கும் இந்தியா,மிந்த ஆவணப்படத்தில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்‌ஷவின் நீண்ட பேட்டியொன்றைப் பதிவுசெய்யவிருப்பதோடு, வன்னியில் இன்னும் நடைபெற்றுவருவதாகச் சிங்களம் கூறும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்…

  13. சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயது ஏழைச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவில் கோட்டக் கல்வி பணிப்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிணையில் இன்று வெள்ளிக்கிழமை வெளியில் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தரணியான என்.சிறிகாந்த தனது வாதத்திறமையினால் மன்றில் தூள் கிளப்பி ஏழைச் சிறுமியின் கண்ணில் இரத்தக் கண்ணீர் வடிக்க விட்டுள்ளார். பாலியல் குற்றவாளிகளை பெரும் தொகைப் பணத்தை பேரம் பேசி எடுத்து பாலியல் குற்றவாளிகளை பிணையில் வெளியில் எடுத்தே ஆவேன் என ஊடகவியலாளருக்கு சலால் விடுத்திருந்தார். கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு வாரகாலமாக விளக்கமறியலில் வைக்…

  14. தமிழ் மக்களுக்கு கிடைத்த எவ்வளவோ சந்தர்பங்களை நாம் இழந்து விட்டோம் அதனால் தான் இன்று முள்ளிவாய்க்காலில் நின்று அழுகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார்.தந்தை செல்வாவின் 114 ஆவது ஜனன தின நிகழ்வு யாழ். நாவலர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய இனத்துக்கு உரித்தான இறைமையைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்று எமக்கே உரித்தான ஆட்சியைப் பெறுவதற்காக நாம் இன்றும் போராடி வருகின்றோம். எமது உரிமையை யாரும் பறித்துவிட முட…

  15. எனது அரசியல் தொடர்புகளாலேயே கடத்தல்காரர்கள் என்னை விடுவித்தனர் கப்பம் கோரிகடத்தப்பட்ட வர்த்தகர் தெரிவிப்பு தனது அரசியல் தொடர்புகள் காரணமாக கடத்தல்காரர்களிடமிருந்த தான் தப்பி வந்ததாக அண்மையில் கடத்திச் செல்லப்பட்டு பல மணித்தியாலங்களின் பின் வீதியோரத்தில் விடப்பட்ட வர்த்தகரான சாகர சேனாரட்ன கூறியுள்ளார். ராஜகிரியவில் வசிக்கும் வாகன உதிரிப்பாக வர்த்தகம் மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த இவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்பதுடன் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான் அதிர்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை எனக்கூறும் சாகர சேனாரட்ன தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருப்பதா அல்லது தான் 10 வருடகாலம் வசித்த அவுஸ்திரேலியாவுக்க…

  16. குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓர் தரப்பை, அந்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்குமாறே ஜெனிவா தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களை நோக்குகையில் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற வகையிலே தமிழ்த் தேசத்திற்கு எந்த விதமான நன்மையும் இவ் ஜெனிவா தீர்மானத்தின் வாயிலாக கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் சர்வதேச நலன்சார் போட்டிகளுக்குள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பாகவும் வீரகேசரியின் வாரவெளியீட்டுக்கு அவரளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனான பேட்டி வருமாறு.. கேள்வி- ந…

  17. 21 பிள்ளைகளை பெற்ற தாய்க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விருது வழங்கிக் கௌரவித்து உள்ளார். பலாங்கொடயைச் சேர்ந்த எச். எம். பொடி நோனா என்பவருக்கே அபிமன் மாதா என்கிற ஜனாதிபதி விருது கிடைக்கப் பெற்று உள்ளது. இவ்விருது வழங்கல் வைபவத்தில் அமச்சர்களான ஜோன் செனவிரட்ண மற்றும் பவித்ரா வன்னியாராச்சி, சப்ரகமுவா மாகாண ஆளுனர் லொக்கு பண்டார ஆகியோர் உட்பட பிரமுகர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். http://www.lankasri.com/ta/link-3Oc3Y2SaeEe608SdW3v4.html

  18. ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொல்வதற்கு அல்லது உயிருடன் பிடிப்பதற்கு இந்தியா தனது படைகளை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எழுதியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ‘சீனாவை அச்சுறுத்தும் கனவு, அமெரிக்காவின் கனவு: அடுத்த உலக சக்தியாக இந்தியா‘ என்ற நூலிலேயே அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரி வில்லியம் எச். அவெரி இவ்வாறு கூறியுள்ளார். பில் கிளின்ரன் மற்றும் ஜோர்ஜ் புஸ் நிர்வாகங்களில் இந்தியாவிலும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திலும் இவர் இராஜதந்திரியாகப் பணியாற்றியுள்ளார். அவர் தனது நூலில், “ராஜிவ்காந்தி படுகொலை இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க சக்தி என்ற ந…

  19. பூகோள வெப்பமடைதலுக்கு நாடுகளே உண்மையான போர்க் குற்றவாளிகள் : ஜனாதிபதி பூகோள வெப்பமடைதல் அதிகரிப்பதற்கு உதவும் நாடுகளே உண்மையான போர்க் குற்றவாளிகள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பூகோள வெப்படைதல் காரணமாக அனைத்து தாவர, விலங்கு இனங்களும் அழிவடையலாம். உண்மையான போர்க் குற்றவாளிகளும் மனித உரிமைகளை மீறியவர்களும் பூகோள வெப்பமடைதல் அதிகரிப்பதற்கு உதவும் நாடுகளே என ஜனாதிபதி தெரிவித்தார். இவ்விதிகளை மீறுபவையாக மேற்குலக நாடுகள் உள்ளன என கண்டியில் நடைபெற்ற புவி மணித்தியால நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்தார். புள்ளிவிபரங்களின்படி, பூகோள வெப்பமடைதலுக்கு காரணமான மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூ…

  20. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் : பான் கீ மூன் உண்மையைக் கண்டறியும் ஆணைக்கழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பான் கீ மூனின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நல்லாட்சி தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் மட்டுமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பான் கீ மூன் கருதுகின்றார் என அவர் தெ…

    • 0 replies
    • 786 views
  21. வடமாகாண சபைத் தேர்தல் நடக்கும் பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் தயாராகி வருவதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதற்காக அவர் தன்னைத் தயார்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தயா மாஸ்டர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் உயர் பதவி வகிப்பதுடன் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த ஊடக நண்பர்கள், வடமாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அவர் இல்லையெனப் பதிலளிக்கவில்லை. அதன் மூலம் அவர் தனது விருப்பத்தையும், சம்மதத்தையும் தெரியப்படுத்தியுள்ளார். எனினும் தான் எந்தக் …

  22. மௌனம் கலைத்த சிறீதரன் – தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் – சரிதம் ஆசிரியர் பீடம்!(காணொளி) April 1st, 2012 அன்று வெளியிடப்பட்டது சரிதம் இணையத்தளம் தொடங்கப்பட்டது முதல் இற்றைவரையில் தேசியத்திற்கான பயணத்தில் பயணிக்கும் தலைவர்களின் பாதைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கின்றது. இதனால் ஆசியர் பிடத்திற்கு நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆசியர் பீடத்தினர் துரோகிகள் என்றும் சில கட்சிகளின் எடுபிடிகள் என்றும் கூட விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் கூட பொது நோக்கம் அறுவடை என்பதால் தனிப்பட்ட விமர்சனங்களைப் பெரிதாக தலைகளில் தூக்கிக் கொண்டு சரியானதைப் பிழை என்றோ, பிழையானதை சரி என்றோ தடம் மாறுவதற்கு சரிதம் ஆசியர் பீடம் தயார் நிலையில் இல்லை. தமிழ்த் த…

    • 0 replies
    • 843 views
  23. இலங்கை நாடாளுமன்றத்தில் ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது இலங்கை நாடாளுமன்றத்தில் ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் இரண்டு நாள் முழுநேர விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு நியாயங்களை துணிவுடன் கேட்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கேட்டுள்ளார். இதன் மூலமே எமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நாம் விவுவாசமாக நடந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடைபெற உள்ள விவாதம், படிப்பினைகள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழு பற்றிய விவாதம் அல்ல. இது ஜெனீவா தீர்மானம் பற்றிய விவாதம் ஆகும். இந்த விவாதத்தில் இரண்டு நாட்களும் கலந்துகொண்டு எமது நிலைப்…

    • 1 reply
    • 570 views
  24. உண்மையைக் கண்டறியும் ஆணைக்கழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பான் கீ மூனின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆணைக்குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நல்லாட்சி தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் மட்டுமே இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம்…

    • 2 replies
    • 563 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.