Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குடாநாடு இராணுவ மயம் ஒரு குடும்பத்திற்கு நான்கு இராணுவ வீரர்கள் குடாநாடு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளரும் எம்.பியுமான சுனில் ஹந்துன்நெத்தி தொடர்ந்து பேசுகையில், “யுத்தத்தால் இடம் பெயர்ந்த வன்னி மக்களை மீள்குடியேற்றி அம்மக்களுக்கு மறு வாழ்வளிக்கும் அரசாங்கத்தின் ‘பொறுப்பேற்கும் தன்மையை’ நிறைவேற்றாததன் காரணமாகவே இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணையையும் ஏகாதிபத்தியவாதிகளின் தலையீடுகளும் உருவாக்கம் பெற்ற…

    • 5 replies
    • 935 views
  2. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு உள்நாட்டில் பெரும் கண்டனத்தை எழுப்பிய இலங்கை அரசுத் தரப்பினர், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் அத்துமீறி நடந்து கொண்டு, அசிங்கப்பட்டுத் திரும்பி இருக்கிறார்கள். ஜெனீவா நகரில், பெப். 27-ம் தேதி தொடங்கிய ஆணையத்தின் 19-வது கூட்டத் தொடர், மார்ச் 23-ம் தேதி முடிவு அடைந்தது. இதில், இலங்கை அரசுத் தரப்பினர் நடந்து கொண்ட விதம், உலக நாடுகளின் பிரதிநிதி களை முகம் சுளிக்க வைத்தது. இந்த நிகழ்வுகள் நடந்தபோது நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன். இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர். அந்த அடிப்படையில் ஜெனீவா சென்ற அவர் நம்மிடம் விவரிக்கிறார். இலங்கையில் இருந்து வந்த மனித உரிமைச்…

  3. மற்றொரு பிரேரணையை தவிருங்கள்; மூத்த தலைவர்கள் வலியுறுத்தல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய நடப்பதன் மூலம் இது போன்ற இன்னொரு தீர்மானம் கொண்டுவரப்படுவதை இலங்கை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்ட உலக மூத்த தலைவர்கள் குழு, இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது. கொடூரமான யுத்தம் முடிந்த பின் நல்லிணக்கம் ஏற்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டுமெனக் கோரும் தீர்மானம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியதையிட்டு முன்னாள் உலகத் தலைவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளரும் அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியுமான மேரி றொபின்சன் பீ.பீ.சி சந்தேசயவுக்கு வழங்கிய…

    • 2 replies
    • 647 views
  4. இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்துமாறு புதுடில்லி கொழும்பிடம் வலியுறுத்தவுள்ளது. இதற்கான இராஜதந்திர நகர்வுகளில் இந்திய அரச தலைமை ஈடுபட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. ஜெனிவாவில் இலங்கை மீது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் நெருக்கடி நிலையில் இருந்து இலங்கை அரசு மீள்வதற்குப் பல காத்திரமான உறுதியான நடவடிக்கைகளை நாட்டில் மேற் கொள்ள வேண்டியுள்ளன என்று புதுடில்லி கருதுகிறது. அதனையே இலங்கையிடம் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. எனவே இந்தவேளையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடைபெறுவதற்கான வழியை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை ஓரளவேனும் விடுபட முடியும் என இந்தியா இலங்கைக்கு …

    • 4 replies
    • 510 views
  5. ஆறுமுகன் தொண்டமான் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்தன. எனினும் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இந்த ராஜினாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38335-2012-03-26-15-12-57.html

  6. இலங்கை அரசாங்கம் மிகுந்த விரக்தி நிலையில் இருப்பதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் தற்போதய அரசியல் நிலை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு 30 நிமிடங்கள் தெரிவித்த கருத்துக்கள் thx http://newjaffna.com 1) தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மாத்திரம் ஜெனிவா தீர்மானம் கொண்டு வருவதற்கு காரணமல்ல 2) புலம்பெயர் தமிழர்கள் எல்லோரதும் உழைப்பால்தான் ஜெனிவா தீர்மானம் வந்தது 3) இந்தியாவின் மாற்றத்திற்கு காரணம் தமிழக உறவுகள் 4) தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் பல உள்வீட்டு பிரச்சனைகள் இருக்கின்றன. இவை தொடர்பாக தொடர்ந்தும் பொறுமையாக இருக்க முடியாது 5) தமிழத்தேசியக் கூட்டமைப்புகள் இ…

  7. யாழ் மேயரின் அரச விசுவாசத்தின் உச்சம்: ஜெனீவா தீர்மானத்தை எதிர்த்து தீர்மானம் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இலங்கை அரசு தானாகவே பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று யாழ் மா நகரசபை தீர்மானம் இயற்றியுள்ளது. சிங்கள விசுவாசத்தின் அதியுச்ச எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.. . புலம்பெயர்ந்த மக்களுக்கு இந்த நாட்டைப் பற்றி அக்கறை இல்லாமல் இருக்கும். சில முஸ்லிம் நாடுகளில் அமெரிக்கா மூக்கை நுழைத்து நாட்டை சின்னா பின்னப்படுத்தியுள்ளது. மனித குலத்துக்கு எதிரான நாடான அமெரிக்காவின் தீர்மானத்தை நாங்கள் கண்டிக்கிறோம் என எம்.ரமீஸ் தெரிவித்தார். கூட்டமைப்பு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பேசுகையில் நல்லிணக்கத்திற்கு தடையாக இங்கே பேரினவாத…

  8. அமெரிக்காவின் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று சொன்ன விமல் வீரவன்ச, அதை இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்த இந்தியாவுக்கு சொல்லியிருந்தால் கோவணத்துடன்தான் வீரவன்ச இங்கு இருந்திருப்பார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார் கலாபூசணம் இரா.அரசகேசரியின் களுவாஞ்சிகுடி கலைக்களஞ்சியம் முதலாம் பாகமும் காவடிச்சிந்தும் நூல்வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். களுவாஞ்சிகுடி கிராமதலைவரும் முகாமை ஆலயம் மற்றும் ஸ்ரீவீரபத்திரர் ஆலய தலைவருமான அ.கந்தவேல் தலைமையில் இந்தநிகழ்வு இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்…

    • 0 replies
    • 566 views
  9. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என ரஸ்யா சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் பேரவையின் நன்மதிப்பிற்கு ஏற்பட்ட களங்கமாகவே ரஸ்யா கருதுகின்றது என இந்தியாவிற்கான ரஸ்ய தூதுவர் அலெக்ஸான்டர் கடாகின் தெரிவித்துள்ளார். நாடுகளின் அடிப்படையில் ஏன் திடீரென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏதேனும் ஓர் நாட்டின் மீது மற்றுமொரு நாடு அழுத்தங்களை பிரயோகிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இலங்கையின் சகவாழ்வுக்கு, சர்வதேச தலையீடுகள் மூலம் அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாது என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விளடீமீர் மிகா…

    • 2 replies
    • 572 views
  10. மகிந்தவின் விசுவாசியான சுகி சிவத்தின் நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது தமிழகத்து ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிங்கள போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்‌ஷவின் நண்பருமான சுகி சிவம் அவுஸ்த்திரேலிய நகரங்களான பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் நடத்துவதாகவிருந்த நிக்ழச்சிகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக இதனை ஒழுங்குசெய்த அமைப்பினர் அவசர மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியிருக்கின்றனர். தனது அண்மைய யாழ்ப்பாண விஜயமொன்றினை சிங்களப் போர்க்குற்றவளிகளை நியாயப்படுத்தவும், போர்க்குற்றங்களை மறக்கும்படி தமிழர்களைக் கேட்கவும் பயன்படுத்திய இந்த சொற்பொழிவாளரின் செயலால் கொதிப்படைந்த புலம்பெயர் தமிழர்கள் இவரது நிகழ்ழ்சி பற்றி மிகவும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்ததோடு நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும்…

    • 17 replies
    • 2.4k views
  11. கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்கள் தொடர்ந்தும் மீட்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 28 மார்ச் 2012 அடையாளம் தெரியாத வகையிலான வெடி பொருட்களென அறிவிக்குமாறு பாதுகாப்பு தரப்பு அறிவுறுத்தல்:- வன்னியின் மேலும் சில பகுதிகளினில் கொத்து குண்டு எனப்படும் கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்கள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருவதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிக்கிறார். அவற்றினை அடையாளம் தெரியாத வகையிலான வெடி பொருட்களென அறிவிக்குமாறு பாதுகாப்பு தரப்பு மனித நேயக்கண்ணி வெடியகற்றல் அமைப்புக்களை நிர்ப்பந்தித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அண்மையில் கிளிநொச்சி நகரிலுள்ள மனித நேய கண்ணிவெடியகற்றல் அமைப்பொன்றின் அலுவலகத்தில் கொத்து குண்டு மாதிரிகள் வைக…

  12. ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக யாழ் மாநகர சபையில் தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு எதிராக யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாநகர முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்.மாநகர சபை கூடியதும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் பிரேரணை ஆளும் ஈபிடிபி மாநகர சபை உறுப்பினர் கிளாவேடாவேசியரால் கொண்டுவரப்பட்டது யாழ்.மாநகர சபையின் எதிர்தரப்பினரின் கடும் எதிர்ப்பை அடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 12 இற்கு 8 என்ற வீதத்தில் வாக்கொடுப்பில…

  13. ஜெனீவா தீர்மானத்திற்கு பிறகு , தமிழர்களுக்கு சாதகமா பாதகமா என்பதயும் தாண்டி தமிழர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை தொடங்கியிருக்கிறது. இந்தப்புள்ளியில் ஆரம்பித்து பார்த்தால் தமிழ் ஈழம் சாத்தியமா ? தமிழ் ஈழம் அடைவதற்கு என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதை விவாதிக்கவே இந்த திரி. அமெரிக்கா என்ன செய்யும் இந்தியா என்ன செய்யும் யார் தடையாக இருக்கிறார்கள் என்பதை விவாதிப்பதைவிட , தமிழர்களாகிய நம்மிடம் என்னென்ன தடைகள் இருக்கின்றன என்பதை மட்டும் விவாதம் செய்யலாம். நம்மிடம் உள்ளகுறைகளை அலசி ஆராய்வது ஒற்றுமையை ஏற்படுத்துவது முக்கியம். அதற்காகவே இந்த திரி

  14. ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சிலையாய் உள்ள தலைவர்களிடம் மனு கொடுக்கிறேன்: புதுச்சேரியை கலக்கிய ரவீந்திரன் இலங்கைத் தமிழர்களுக்காக காலில் சங்கிலி கட்டிக்கொண்டு நடைபயணம் மேற்கொண்ட சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர், இலங்கையில் வாழும் தமிழர்களைதமிழராக மட்டும் பார்க்காமல், மனிதர்களாகவும்பார்க்க வேண்டும், இலங்கை தமிழர்கள் படும்துயரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும்வகையில், 26.03.2012 அன்று காலை நூதன போராட்டம் நடத்தினார். சிலுவை போன்ற மரக் கட்டையை ஏந்தி, கை மற்றும் கால்களைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டு, கடற்கரை காந்தி சிலை அருகிலிருந்து,நேற்று காலை நடைபயணத்…

  15. ஈரான் மீதான தடைகளால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதியும் ‘படுக்கும்‘ ஆபத்து [ புதன்கிழமை, 28 மார்ச் 2012, 00:42 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையால், சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்று சிறிலங்கா அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சிறிலங்காவிடம் இருந்து தேயிலையை கொள்வனவு செய்யும் இரண்டாவது பெரிய நாடாக ஈரான் விளங்குகிறது. ஈரான் மீதான பொருளாதார தடையால், சிறிலங்காவுக்கு பாரிய தாக்கம் ஏற்படாது என்று கூறப்படுகின்ற போதும், சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதியின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது என்று தனது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்கா தேயிலைச் சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித…

    • 3 replies
    • 833 views
  16. ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றப் போவதாக அரசாங்கம் அடிக்கடி கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால், தற்கால நிகழ்வுகளும், பொருளாதார நிலைமையும் அதற்கு நேர்மாறான நிலையிலேயே சென்று கொண்டிருக்கின்றன. ஒருபக்கத்தில் மத்திய வங்கி ஆளுநர் நாட்டின் பொருளாதாரம் உறுதியான நிலையில் இருப்பதாகச் சொல்கிறார், இன்னொரு பக்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவோ, ஐரோப்பாவுக்கு கடன் கொடுக்கும் காலம் விரைவில் வரும் என்கிறார். ஆனால், நடைமுறை யதார்த்தங்களோ எதிர்மாறான திசையில் இருக்கின்றன. கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக அமெரிக்க டொலன் மதிப்பு உயர்ந்து இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த வருடத் தொடக்கத்தில் இருந்ததை விட, டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின்…

  17. சிட்னி மாநிலத்தில் (Epping Leisure Centre) எப்பிங் லேசர் சென்றரில் (Sri Lanka Reconciliation Forum)கும் போர்குற்றவாளி திசர சமரசிங்காவிற்கு சிட்னி வாழ் தமிழ் மக்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். தமிழ் மக்கள் ஒன்று கூடி பதாகைகள் தாங்கியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது, அந்த இடத்தில் வாழும் வேற்றின மக்கள் இங்கு என்ன நடைபெறுகிறது. என்று கேட்டார்கள். அப்போது நாம் எமது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன அழிப்பை பற்றியும் போர்குற்றவாளி யார் என்பதையும் எடுத்துக் கூறினோம். அவர் கூறினார், அப்படியான போர் குற்றவாளியை அவுஸ்ரேலியாவில் (Sri Lankan High Commissioner) எப்படி இருக்க முடியும் என்று கேட்டார். பின்பு எங்களுடன் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு திசர சமர சிங்காவிற்கு எதிர்ப்பு தெர…

  18. ஜெனீவா பிரேரணையை நடைமுறைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் : விமல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் கருத்துக் கணிப்பையோ, பொதுத் தேர்தலையோ நடத்தி இதற்கான அனுமதியைப் பெற வேண்டும். இதனைவிடுத்து அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தனது கௌரவத்தை இழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பெலவத்தையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணி…

  19. கூவாத குயில்கள் ஈழ மண்ணில் வாழும் தமிழர்களை கூவாத குயில்களாக கூட்டுக்குள் அடைத்து வைத்து வேண்டிய பொழுதுகளில் அவர்கள் குரல்வளையை அறுத்தும் தங்கள் பசிக்கு இரையாக்கியும் சின்னாபின்னமாக்கியே சிங்கள மக்களரசு முனைப்புடன் பல்லாண்டு செயல்ப்பட்டது இன்றும் அவ்வண்ணமே நடந்து கொள்கின்றது என்பதற்கு அண்மையில் நெடுந்தீவு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையினை வைத்து அறிந்து கொள்ளலாம். நாட்டுக்குள் இருங்கள் நமக்கு அடிமையாய் செயல்ப்படுங்கள் இதுவே நமது நீதி என்று புத்தரின் பாதை செல்வதாக கூறுவோர் கூறும் சனநாயக தர்மம் சிங்களத்து மேலிடங்கள் சொல்லும் புதிய வேதம். மண்டியிட்டு மங்களம் பாடுவோருக்கு ஏற்புடைத்தாயினும் தன்மானம் சூடு சுரணை உள்ளவர்களுக்கு அடிபணிந்து வாழ விரும்பாதோருக்கு பாகற்காய…

    • 1 reply
    • 869 views
  20. கடிக்கும் நாயும் குரைக்கும் நாயும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-27 11:37:56| யாழ்ப்பாணம்] உலகிலேயே மிகவும் இழிந்த பிறப்பாக நாய் கருதப்படுகிறது. நன்றியும் மோப்ப சக்தியும் காவல் கடமையும் கொண்ட நாயை கடைப்பிறப்பென்று கூறப்படுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா? என்றால் ஆம்! இதற்கு மூன்று காரணம் உண்டென்று கூறலாம். ஒன்று நாயானது எலும்பைக் கடிக்கும்போது நாயின் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும். தனது இரத்தத்தை எலும்பிலிருந்து வருகின்ற இரத்தம் எனக் கருதும் நாய் அந்த எலும்பை விடாமல் கடித்துக்கொண்டே இருக்கும். இது ஒரு காரணம். இரண்டாவது காரணம் நாயின் போகநிலை. உலகில் எந்த ஜீவராசிக்கும் இல்லாத துன்பத்தையும் வேதனையையும் போக சுகத்தின் பின் நாய்கள் அனுபவிக்கின்றன. அடுத்தது,…

    • 0 replies
    • 1.8k views
  21. ஜெனீவாவில் ஆதரவளித்த சவூதி அரேபியா அமைத்த வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்குங்கள்: முஸ்லிம் உலமா கட்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சவூதி அரேபியா ஆதரவாக செயற்பட்டமைக்கு நன்றி கடனாக குறித்த நாட்டு அரசாங்கத்தினால் அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட சுனாமி வீடுகளை முஸ்லிம்களிடம் கையளிக்குமாறு முஸ்லிம் உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம் உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் உலமாகட்சி தலைவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது, "சவூதி அரேபியாவானது அரசியல் நலன்களை பொறுத்த வரை அமெரிக்காவின் அரசியல் ஆத…

  22. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு மே 18ம் நாள் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் கலந்துரையாடுவதற்கு இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் எதிர்பார்த்துள்ளார்.“ என்றும் அவர் கூறியுள்ளார். ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுப்படுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த…

  23. எதிர்காலத்தில் அரசுக்கு எதிராக எழக்கூடிய மக்கள் சக்திப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஜனாதிபதி மகிந்தவின் கண்காணிப்பின் கீழ் விசேட குண்டர் படை குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் மேற்பார்வையின்கீழ் இந்தக் குழு செயற்படவுள்ளது. இந்தக் குழுவிற்கான இணைப்பு நடவடிக்கைகளை எயார்ஃபோஸ் நிஷாந்த என்ற நபர் மேற்கொள்கிறார். கடந்த கால நாடாளுமன்ற சபை அமர்வுகளிலும் இந்த நபர் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இதற்கு மேலதிகமாக, மேர்வின் சில்வா, டிலான் பெரேரா, ரோஹித்த அபேகுணவர்தன, சுசந்த புஞ்சிநிலமே ஆகிய அமைச்சர்களும், கனக ஹேரத், உதித லொக்குபண்டார ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், இரத்மலான தேர்தல் தொகுதி அமைப்பாளர் சந்…

  24. நியூயார்க் (மார்ச் 27, 2012). ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், பிளேக்கின் அழைப்பை ஏற்று கடந்த பெப்ரவரி 29இல் பிளேக்கையும் வேறு பல அமெரிக்க இராஜாங்க உத்தியோகத்தர்களையும் வோஷிங்டனில் சந்தித்தனர். அங்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இலங்கையில் துயருறும் தமிழ் மக்களைப் பற்றி கதைத்தனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு 31,000 மேற்பட்ட கையொப்பங்கள் அடங்கிய, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை ஆதரிக்கக் கோரிய மனு ஒன்றை பிளேக்கிடம் கையளித்தனர். இன்னுமொரு பிரதி மனுவை கிளின்டனிடம் கொடுக்கும்படி பிளேக்கிடம் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட பிளேக் உடனே தனது அலுவலக மேலாளரிடம் கொடுத்து அதை கிளின்டனிடம் கொடுக்கும்படி கொடுத்தார். கடந்த வருடம் தென்சூடானில் நடந்தது போன…

  25. ஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையை போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறச் சொல்கிறது?ஜே.எஸ்.திசைநாயகம் 27 மார்ச் 2012 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் -தேவ அபிரா “வரலாற்றில் நிகழ்ந்த சில சம்பவங்களை அவதானிக்கும் போது இலங்கை விடையத்தில் ஐக்கியநாடுகள் சபையின் நடுநிலைத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதாக இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்” கடந்த வியாழக்கிழமை ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பிரேரணை இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இலங்கையைப் பொறுப்பு கூற நிர்ப்பந்திக்கும் சர்வதேசத்தின் நம்பிக…

    • 1 reply
    • 709 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.