ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143368 topics in this forum
-
இலங்கையின் மூத்த சகோதரியான இந்தியா, இலங்கை மீது அன்பு இல்லை என்ற காரணத்துக்காக அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தமிழ் நாட்டு மச்சானுடன் இருக்கும் திருமண பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆதரவு வழங்கியது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஹாலிஎல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளைத் தோற் கடித்தபோது, இந்தியா இலங்கைக்குப் பெரும் உதவிகளைச் செய்தது. எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டு மச்சான் சின்னச் சண்டையைப் போட்டார். மூத்த அக்காளின் கணவர் தானே இந்த மச்சான். இந்த முறை தம்பிக்கு உதவ முடியாது. அப்படி உதவினால் நான் விவாகரத்துச் செய்வேன் என மச்சான் கூறினார். அவர் வ…
-
- 6 replies
- 2.4k views
-
-
சர்வதேசத்தை தொடர்ந்து ஏமாற்றினால் ரஷ்யா, சீனாவும் இலங்கையை கைவிடலாம்; தீர்மானத்தை மதித்துச் செயற்படக் கோருகிறது கூட்டமைப்பு சீனாவும், ரஷ்யாவும் தமது பக்கம் உள்ளன என்ற மமதையில் இலங்கை அரசு தொடர்ந்தும் உலகை ஏமாற்றுமானால், ஒரு காலகட்டத்தில் அந்நாடுகளும் இலங்கை யைக் கைவிடலாம். எனவே, ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்த்து இலங்கை அரசு அடம்பிடிக்காமல் செயற்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசுடன் பேசுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இருப்பினும், எமது நிலைப்பாட்டில் சிறிதளவேனும் மாற்றம் இல்லை என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஏற்று உரிய நடவடிக்கைகளை கையாளமாட்டோம் நாம் தொடர்ந்து…
-
- 1 reply
- 688 views
-
-
அமைதித் திட்டத்தை ஏற்றது சிரியா கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மார்ச், 2012 - 12:34 ஜிஎம்டி சிரியாவில் உள்ள அகதிகள் முகாம் சிரியாவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரச் செய்யும் கோஃபி அன்னானின் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐ நா மற்றும் அரபு லீக்கின் தூதராக செயல்படும் கோஃபி அன்னானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஐ நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எதிர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை கோஃபி அன்னானின் திட்டத்தில் அடக்கம். இந்தத் திட்டத்தின் வெற்றி அது எந்த அளவுக்கு முறையாக அமல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அம…
-
- 2 replies
- 783 views
-
-
தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-25 10:36:11| யாழ்ப்பாணம்] இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்குமாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும். உண்மையில் ஜெனிவாவில் தீர்மானம் நிறை வேறியதி…
-
- 27 replies
- 3.1k views
-
-
குடாநாடு இராணுவ மயம் : சகோதரத்துவத்தின் மக்கள் அரண் தெரிவிப்பு குடாநாடு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் தேசிய நூலக ஆவணங்கள் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சகோதரத்துவத்தின் மக்கள் அரண் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய அமைப்பின் இணை ஏற்பாட்டாளரும் எம்.பியுமான சுனில் ஹந்துன்நெத்தி தொடர்ந்து பேசுகையில், “யுத்தத்தால் இடம் பெயர்ந்த வன்னி மக்களை மீள்குடியேற்றி அம்மக்களுக்கு மறு வாழ்வளிக்கும் அரசாங்கத்தின் ‘பொறுப்பேற்கும் தன்மையை’ நிறைவேற்றாததன் காரணமாகவே இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணையையும் ஏகாதிபத்தியவாதிகளின் தலையீடுகளும் உருவாக்கம் பெற…
-
- 0 replies
- 577 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு முற்றாக எதிர்க்கிறது. இந்தத் தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கு எத்தகைய புதிய வழி முறைகளையும் அரசு ஏற்படுத்தாது. தொடர்ந்தும் தனது வழியிலேயே அரசு பயணிக்கும். சர்வதேச அழுத்தங்கள் அரசை ஒருபோதும் எந்த விதத்திலும் எந்தவேளையிலும் கட்டுப்படுத்த மாட்டா. எமது நாட்டு விடயங்களுக்குள் யாரும் எமது அனுமதி இன்றித் தலையிட முடியாது. அது ஐ.நா. ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் பொருந்தும். அனைத்தையும் கையாளும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. எனவே ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் யாரும் பயப்படத்தேவையில்லை. இவ்வாறு ஜெனிவாத் தீர்மானம் தொடர்பான தனது நிலைப் பாட்டைத் தெளிவாக அறிவித்தது இலங்கை அரசு…
-
- 0 replies
- 688 views
-
-
பிரித்தானியாவில் சிறுமி துஷாரா சுடப்பட்ட வீடியோ பதிவு வெளியிட பட்டுள்ளது. http://www.thesun.co.uk/sol/homepage/news/4220362/Gang-guilty-of-shooting-five-year-old-Thusha.html
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா அரசுக்கெதிராக உகண்டாவில் தீர்மானம் கொண்டுவரவுள்ள சிறிலங்கா எதிர்க்கட்சிகள் உகண்டாவில் நடைபெறவுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமர்வுகளின்போது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உகண்டாவின் கம்பலா நகரில் இம் மாதம் 30ம் திகதி தொடக்கம், ஏப்ரல் 6ம் திகதி வரை அனைத்து நடாளுமன்றக் குழு அமர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின்போது சிறிலங்காவிலுள்ள எதிர்க்கட்சிகளால் சிறிலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா நாடா…
-
- 0 replies
- 667 views
-
-
இலங்கைக்கும் மாலைதீவுக்குமான புதிய தூதுவராக வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரியான மிஷேல் சிஸன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுச் சேவையில் சிரேஷ்ட நிலையிலுள்ள இவர், பக்தாத்தில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தூதுக்குழுவின் உதவித் தலைவராக இதுவரை கடமையாற்றியவர் ஆவார். இலங்கைக்கான தூதுவராக சிஸன் ஈராக்கிற்கான தூதுவராக பிரெட் மக்கேக் ஆகியோரின் நியமனங்களை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ‘தமது புதிய பதவிகளில் இவர்கள் வழங்கவுள்ள நிபுணத்துவ சேவையினால் எமது நாடு பெரும் நன்மையடையும்’ என கூறினார். http://www.saritham.com/?p=55359
-
- 0 replies
- 538 views
-
-
மவோ தீவிரவாதிகளுடன் சில இலங்கையர்கள் இணைந்து செயற்பட்டு வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. கர்நாடாகவின் மேற்கு காட்ஸ் பகுதியின் வனப் பகுதியில் சிறியளவிலான மாவோ தீவிரவாதக் குழுக்களுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்துள்ளார். சீகமகலூர், உடுப்பீ, சிமோகா மற்றும் தக்ஸினகந்தா ஆகிய பகுதிகளில் மாவோ தீவிரவாதிகளுடன் இலங்கையர்கள் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாவோ தீவி;ரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாநில அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 3 replies
- 779 views
-
-
அமெரிக்கப் பிரேரணையை அரசாங்கம் அமுல்படுத்தாது சண்டித்தனம் காட்டினால் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலைமை நாட்டுக்கு உருவாகுமென எச்சரிக்கை விடுக்கும் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹன் பெர்னாண்டோ, இலங்கையின் தன்னார்வ அமைப்புக்களின் பிரதிநிதிகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஹன் பெர்னாண்டோ எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் இன்று இடம்பெறும் மனித உரிமை மீறல்களை மக்கள் நேரடியாகக் காண்கின்றனர். அரசாங்கத்தைச் சார்ந்த பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரே ஊ…
-
- 1 reply
- 887 views
-
-
இலங்கை மக்கள் மத்தியில் இந்தியா, அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி சீனாவுடன் நட்புறவை வலுப்படுத்தி இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுகிறார். ஐ.நா. வின் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர்.குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் இரண்டு படகுகளில் காலை வைத்துக்கொண்டு கொள்கைகளை முன்னெடுத்தமையே இன்றைய நிலைக்கு காரணமாகும். எனவே இந்த நிலையிலிருந்து மீண்டும் புதிய கொள்கைகளை நிரந்தரமானதாக வகுக்க வேண்டும். அமெரிக்காவும், இந்தியாவும் எமக்கு துரோகமிழைத்து விட்டன. எ…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை உடனடியாகச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்க அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், மேமாத நடுப்பகுதி வரை பொறுத்திருக்குமாறு அவருக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தகவல் அனுப்பியுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், கடந்த பெப்ரவரி மாத இறுதியில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்திலேயே சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறுல், வடக்கு மாகாணசபைத் தேர்தல…
-
- 2 replies
- 726 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா அளித்த வாக்கு, ஒரு ‘கணிப்பீட்டு வாக்கு‘ என்று இந்திய தேசிய பாதுகாப்பு சபையின் இராணுவ ஆலோசகரான ஓய்வுபெற்ற லெப். ஜெனரல் பிரகாஸ் மேனன் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு, போர்க்கலைத் துறை மற்றும் தென் பிராந்திய இராணுவ தலைமையகம் சார்பில், “21ம் நூற்றாண்டின் தேசிய பாதுகாப்பில் இந்தியாவின் சவால்கள்’ என்ற கருத்தரங்கங்கில் நேற்று பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். லெப்.ஜெனரல் ஜெனரல் சுப்ரட்டோ மித்ரா தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் லெப். ஜெனரல் பிரகாஸ் உரையாற்றியபோது, “சிறிலங்கா போரில் வென்றிருந்தாலும், நிச்சயமாக நீண்டகாலநோக்கில் அமைதியை இழந்து வருகிறது என்ற…
-
- 3 replies
- 504 views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பிரித்தானியா வரவேற்றுள்ளதுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று லண்டனில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக அமைச்சர் ஜெரிமி பிறவுண், "ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரின் முடிவு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முடிவைப் பெறுவதற்காக பிரித்தானியா கடுமையாக உழைத்தது. சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறோம். உலகில் உள்ள அரசாங்கங்கள் சிறிலங்காவில் நீடித்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்புகின்றன என்பதை இந்தத் தீர்மானம் சுட்டிக்காட்ட…
-
- 0 replies
- 566 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு முற்றாக எதிர்க்கிறது. இந்தத் தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கு எத்தகைய புதிய வழி முறைகளையும் அரசு ஏற்படுத்தாது. தொடர்ந்தும் தனது வழியிலேயே அரசு பயணிக்கும். சர்வதேச அழுத்தங்கள் அரசை ஒருபோதும் எந்த விதத்திலும் எந்தவேளையிலும் கட்டுப்படுத்த மாட்டா. எமது நாட்டு விடயங்களுக்குள் யாரும் எமது அனுமதி இன்றித் தலையிட முடியாது. அது ஐ.நா. ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கும் பொருந்தும். அனைத்தையும் கையாளும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. எனவே ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் யாரும் பயப்படத்தேவையில்லை. இவ்வாறு ஜெனிவாத் தீர்மானம் தொடர்பான தனது நிலைப் பாட்டைத் தெளிவாக அறிவித்தது இலங்க…
-
- 4 replies
- 772 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெர்மி பிறவுண் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் மூலம், இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உலக நாடுகள் காட்டி வரும் கரிசனை தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார். மனித உரி…
-
- 0 replies
- 417 views
-
-
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக மிசெல் சிசன் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். தற்போது பாக்தாத் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் தூதராக பணியாற்றி வரும் மிசெல் சிசன் - அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 442 views
-
-
news முல்லைத்தீவு முள்ளியவளையில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த இந்துக் கோயில் ஒன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான கடவுள் திருவுருவச் சிலைகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காப் படையினர் சுற்றி முகாமிட்டுள்ள, முள்ளியவளை கணுக்கேணி கற்பக விநாயகர் ஆலயத்திலேயே மேற்படி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இந்தக் கோயிலிலுள்ள, மிகப் பழமை வாய்ந்ததும், பெறுமதியானதுமான விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட, சுமார் பத்து விக்கிரகங்களின் பெறுமதி சுமார் 35 இலட்சத்திற்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்படி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும், குறித்த ஆலயத்தைச் சுற்றி சிறிலங்காப் படையினரின…
-
- 0 replies
- 355 views
-
-
சர்வதேச சட்டங்களை மீறி எந்தவொரு ஆட்சியாளரினாலும் செயற்பட முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாட்டை பலியாக்க முடியாது என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவர அமெரிக்காவின் பின்னணியில் 40 நாடுகள் ஒத்துழைப்புக்கள் வழங்கியிருந்தன. எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழு அளவில் நடைறைப்படுத்தப்படாவிட்டால் ஐ.நா. பொதுச் சபையில் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இங்கு வீட்டோ அதிகாரம் உள்ள சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவுகள் செல்லாது. ஆகவே, நாட்டை பாதுகாக்க தற்போதைய ஆட்சியாளரை மாற்றியமைக்க வேண்டும். இல்லையென்றால், முழு நாடும் ஏகாதிபத்திய வாதியிடம் அடிமைப்பட்டுவிடும் என்…
-
- 1 reply
- 700 views
-
-
இலங்கையில் ராணுவத்தினரின் காமப்பசிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கண்ணி வெடி அகற்றும் ஆபத்தான பணியில், இளம் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளம் விதவைப் பெண்கள், ராணுவ வீரர்களின் செக்ஸ் பசிக்கு இரையாக்கப்படுகின்றனர் என்று தமிழ் எம்.பி. சுமந்திரன் குற்றம் சாட்டினார். இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) எம்.பி. சுமந்திரன் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், : வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களின் அன்றாட பிழைப்புக்காக அரசால் “கூலிக்கு வேலைத் திட்டம்” தொடங்கப்பட்டது. அரசின் கட்டுமானப் பணிகள், மற்றும் சாதாரண வேலைகளில் மட்டுமே பெண்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது விதி ஆனால…
-
- 2 replies
- 1.5k views
-
-
ராஜபக்சவிடம் பிரமதர் மன்னிப்புக் கேட்டதற்காக வெட்கப்படுகிறேன் மனித உரிமைப் போராளி கவிதா சிறிவஸ்றவா 25 மார்ச் 2012 தமிழகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- "ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றிய மனித உரிமைகள் தீர்மானத்தில் வாக்களித்தமைக்காக இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் எமது நாட்டின் பிரமதர் மன்னிப்புக் கேட்டார் என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்று ராஜஸ்தான் ஜெயப்பூரைச் சேர்ந்த மனித உரிமைப் போராளியான கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மிதிபடும் ஜனநாகயமும் மனித உரிமைகளும் என்ற…
-
- 3 replies
- 862 views
-
-
தந்தை செல்வாவின் 114வது பிறந்த நாளில் சூளுரைப்போம்! பல்லின மக்கள் வாழும் இலங்கையில் சகல மக்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வாழக் கூடிய அரசியல் கோட்பாட்டை (சமஷ்டி அரசியல் அமைப்பு) 1949ல் அறிமுகம் செய்த அரசியல் மேதை மூதறிஞர் எஸ்.ஜே.வி செல்வநாயம் கியூ.சி ( தந்தை செல்வா) அவர்களின் 114வது பிறந்தநாள் மார்ச் 31 ஆகும். ஓற்றை ஆட்சியின்கீழ் இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படாது பெரும்பான்மை இனத்தவர் சிறுபான்மை இனத்தை நசுக்கும் நிலை ஏற்படும் பதவி ஆசை கொண்ட சிங்களத் தலைவர்கள் இனவாதப் பாதையில் செல்வதால் ஜனநாயகக் கோட்பாட்டை அனுசரித்து அரசியல் பாரம்பரியத்தைப் பேணுபவர்கள் அல்ல சிங்கள அரசியல்; தலைவர்கள் என்பதை அன்றே உணர்ந்த தீர்க்கரிசித் தலைவர் தந்தை செல்வா. …
-
- 5 replies
- 1.1k views
-
-
உலகத்திற்கு தகவல் வழங்கும்போது தமிழ்நாடு அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சில சமயங்களில் சில கருத்துக்கள் சர்வதேசத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட “தனி ஈழம்தான் எனது கனவு” என்ற கருத்து குறித்து சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அரசியல்வாதிகள் நல்ல நோக்கத்தை உண்மையில் நிதானத்துடன் வெளியிட வேண்டும். இல்லையேல் தமிழர்கள் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும்” உலகத்திற்கு தகவல் வழங்கும்போது தமிழ்நாடு அரசியல்வாதிகள் கவனமாக இ…
-
- 5 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியேறியதை அந்த அமைப்பின் முன்னாள் பணியாளர் ஒருவர் குறை கூறினார் வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தின்போது, தமிழர்களைக் கைவிட்டுச் சென்றதைப் போன்று தற்போதும் அவர்களைக் கைவிட முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறவேண்டுமென இலங்கை அரசு உத்தரவிட்டபோது அங்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு அலுவலகத்தில் பணிபுரிந்த பெஞ்சமின் டிஸ் (Dix) இந்தியாவின் அவுட்லுக் சஞ்சிகையின் ஊடகவியலாளர் ஒருவரிடம் இதனைக் கூறினார். வன்னிப் பகுதியில் இருந்த உதவிப் பணியாளர்களுக்கு பாதுகாப்பை தொடர்ந்தும் உறுதிப்படுத்த முடியாதென இலங்கை அர…
-
- 1 reply
- 1.1k views
-