Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சர்வதேசம் ஏற்கனவே கோரிக்கை விடுத்தபோதெல்லாம் அவற்றை நிராகரித்த இலங்கை அரசு மேலும் காலநேரம் கோருவதையிட்டு மனித உரிமை கண்காணிப்பகம் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது. ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கையில் மனித உரிமை மீறல் மீறல் தொடர்பில் உள்நாட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகக் கூறினார். இந்த நிலையில் மனித உரிமை விடயங்களில் காலம், நேரம் பற்றி இலங்கை கதைப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல என சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலன்டா பொஸ்டர் தெரிவித்துள்ளார். விசாரணை குறித்து மேலும் மேலும் வலியுறுத்திய போதெல்லாம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை மீறிச் செய…

  2. ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தரும்படி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வடக்கு,கிழக்கு மக்களால் ஜனநாயக முறைப்படி பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் தாம் இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட சிறிலங்கா அரசினால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குற…

    • 8 replies
    • 1.2k views
  3. சனல் 4வினால் வெளியிடப்படவுள்ள இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்குற்றங்கள் தொடர்பிலான ஆவணப்படம் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரைவ முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவையின் பதில் பேச்சாள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தண இவ்வாறு தெரிவித்தார். இன்றைய செய்தியாளர் மாநாட்டில் சனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது சனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படம் தொடர்பில் எங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. சனல் 4 இதற்கு முன்னர் வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் பிரபல பகுப்பாய்வாளர்களைக…

  4. அமெரிக்கா, சிறிலங்காவின் எதிரியல்ல. ஜெனிவாவில் என்ன நடந்தாலும், இருநாடுகளுக்கும் இடையிலான நல்ல உறவுகள் தொடரும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிஸ் தெரிவித்துள்ளார். “நாம் இப்போது இறுக்கமானதொரு நேரத்தில் இருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், நல்ல உறவுகள் தொடரும் என்று நம்புகிறொம். நல்லிணக்க ஆணைக்குழு சிறிலங்கா அரசாங்கம் நியமித்த குழு. அதன் பரிந்துரைகளில் சில மிகச்சிறந்தவை. பொறுப்புக்கூறுதலில் அது ஏமாற்றத்தை தந்துள்ளது என்பதை நான் கூறவேண்டும். இந்த நாட்டில் உள்ள சிலர் அதற்குப் பதிலளிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனாலும் இது நல்ல அறிக்கை தான். இதுகுறித்த நடவடிக்கைத் திட்டம் …

  5. By naatham On 1 Mar, 2012 At 01:32 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை இம்முறை உலகத் தமிழர்கள் நிறைந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர். சிறிலங்காவை நோக்கிய தீர்மானமொன்று நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் நிறைந்த காணப்படுகின்றது. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச் சபை தொடர்பிலான செய்திகளை நிகழ நிகழ தொகுத்து வழங்கும் வண்ணம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் http://ungeneva.wordpress.com/எனும் வலைப்பூவினை உருவாக்கியுள்ளது. ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் வழங்குகின்ற செய்திகள் மற்றும் சர்வத…

  6. ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும் போர் குற்றம் சுமத்தப்படும் எவரையும் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். தாம் பிரதமராக இருந்த காலத்தில் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்பதால், இலங்கையின் தலைவர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே முன்னாள் நீதியரசர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்; கூற்றை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை தற்போது வேண்டுமானாலும் ரோம் உடன்பாட்டின் பங்காளியாகலாம். ச…

    • 1 reply
    • 569 views
  7. ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றை நிறைவேற்ற அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவு பெற்றுக்கொடுக்கும் இராஜதந்திரச் செயற்பாடுகளில் தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவருமான தக்ஸின் ஸின்வத்ரா களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஸின் ஸின்வத்ரா, தற்போதைய தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஸின்வத்ராவின் சகோதரராவார். இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் தக்ஸின் ஸின்வத்ரா மிக நெருக்கமான நட்புறவைக் கொண்டிருப்பதால் …

  8. இலங்கையில் பிரத்தியேக உரிமைகளை இந்தியா எதிர்பார்க்கக்கூடாது: ரஜீவ இலங்கையில் இந்தியா பிரத்தியேக உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது என ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ரஜீவ விஜேசிங்க புதுடில்லியில் கூறியுள்ளார். இலங்கையில் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்திய அசௌகரியமடையக் கூடாது எனவும் நோபாளத்திற்குச் செல்லும் வழியில் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார். இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் நாம் நண்பர்கள். இரு நாடுகளுக்கும் தாராளமான இடமுண்டு என அவர் தெரிவித்தார். இலங்கையின் பூகோள அமைவிடம் காரணமாக அது இரு நாடுகளையும் ஈர்க்கிறது. எனினும் பிரத்தியேக உரிமைகளை பெறுவதற்காக இந்தியா நே…

    • 0 replies
    • 529 views
  9. தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க முன்வரும்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் விமல் வீரவன்ச, சம்பிக ரணவக்க ஆகியோர் மக்கள் மீது சுமைகள் சுமத்தப்படும்போது ஏகாதிபத்தியத்தை மறுத்து விடுகின்றனர் என இடதுசாரி முன்னணி தெரிவித்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையில் எழுத்து மூலமான உறுதிமொழியை பெற்றுக் கொள்ளவே இந்தியா முயற்சிப்பதாகவும் அம் முன்னணி அறிவித்தது. இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நியமித்தார். …

    • 2 replies
    • 1.2k views
  10. இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது நிகழ்த்திய போர்க்குற்றத்திற்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட ஜரோப்பிய நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் ... ...மனித உரிமை அமைப்புக்கள் ஐ.நா மனிதஉரிமைகள் கூட்டத்தொடரில் தீர்மானத்தை எடுக்க இருக்கும் நிலையில் மகிந்த அரசாங்கம் தொடர்ந்தும் தன்னையும் தனது குடும்ப போர்க்குற்றவாளிகளையும் காப்பாற்றும் நோக்கில் மக்களையும் குறிப்பாக தம்மால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்களை தனது படைகளையும் படைப்புலனாய்வாளர்களையும் கொண்டு மிரட்டி அழைத்துவந்து ஐ.நா சபையையும் அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளையும் எதிர்த்தும் அவமதித்தும் ஊர்வலங்களையும் நடத்திவருகின்றது. கிளிநொச்சியில் ஈ.பி.டி.பி தேசவிரோதக்கும்பல் பா.உறுப்பினரான சந்திரகுமாரும் மகிந…

  11. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் இந்தியாவின் மௌனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையும் பயங்கரமான சதித்திட்டத்தின் வகிபாகமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து அரசாங்கமே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியாவின் தேவைக்காகவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணையை கொண்டு வருகிறது. எனவே தான் இந்தியா மௌனத்தை கடைப்பிடிப்பதோடு பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்தினால் ம…

    • 1 reply
    • 922 views
  12. பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 52 இலங்கையரை கொண்ட மற்றுமொரு தொகுதியினர் 120 பிரித்தானிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பலத்த பாதுகாப்புடன் இன்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர். பிரித்தானிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்ட இவர்கள் விசேட விமானமொன்றின் மூலம் ஹீத்துரூ விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 29 தமிழர்கள், 10 முஸ்லிம்கள் மற்றும் 13 சிங்களவர்கள் காணப்பட்டனர். இவர்களில் 45 ஆண்களும் ஏழு பெண்களும் உள்ளனர். கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, களுவாஞ்சிக்குடி, திருகோணமலை, வத்தளை, வவுனியா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இவர்கள், 30 – 40 வயது பிரிவுக்குட்பட்டவர்களாக காணப்பட்டனர். இவர்களில் சிலர் ப…

  13. யாழில் அரச அலுவலகங்கள் ஸ்தம்பிதம், ஊழியர்கள் பேரணியில்;மக்கள் திண்டாட்டம்! யாழ்ப்பாணத்தில் இன்று மதிய உணவு இடைவேளைக்குப் பின் சகல அரச அலுவலகங்களும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜனாதிபதிக்கு ஆசி வேண்டியும் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை நடத்தியமையாலேயே இந்த ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. மதிய போசன இடைவேளைக்குப் பின் சகல ஊழியர்களும் ஊர்வலமாக செல்வதற்கான முன் ஏற்பாடுகளையும் பதாதைகளையும் தயார் செய்வதில் வேண்டா வெறுப்பாக ஈடுபட்டதோடு, 2.30 மணியளவில் காரியாலயங்களை விட்டு(கடமை நேரத்தில்) வெளியேறினர். இவ் விடயம் தொடர்பான தகவல்களை ஊர்கிதம் செய்து கொள்ளும் ம…

    • 2 replies
    • 1.2k views
  14. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு வெளிநாட்டு அரச தலைவர் என்பதால் அவருக்கு சிறப்பு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக ஒபாமா நிர்வாகம் கூறியுள்ளதை அடுத்து, தான் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டியுள்ளதாக அமெரிக்க மாவட்ட நீதிபதி Colleen Kollar-Kotelly அறிவித்தார். இதுதொடர்பாக தனது தீர்ப்பில் அவர், “ நீதிமன்றம் இந்த முடிவை சாதாரணமாக எடுக்க முடியாது. வாதிகளின் முறைப்பாடுகள் அமெரிக்க மற்றும் அனைத்துலக சட்டங்களுக்கு முரணான வகையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்த அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகளை கொண்டுள்ளது. இந்த வழக்குத் தள்ளுபடி செய்…

  15. இலங்கையில் ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நாட்டில் அமுல்படுத்துமாறு அதிகாரத்திலுள்ளவர்கள் தூண்டவேண்டும். அத்துடன் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில், உயர்மட்ட தொகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் வில்லி சொவன்டல் என்பவரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில், மனித உரிமை மீறல்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு பற்றிய விடயங்களில் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள…

  16. கடந்த 2009 மே 17ம் திகதி இரவு 12.00 மணி தொடங்கி இன்றுவரை சிறீலங்கா அரசு போர்க்குற்றத்தை மறைக்க செய்த தகிடுதத்தங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். ஒரு குற்றத்தை மறைக்கப் புறப்பட்டால் ஒன்பது குற்றங்களை செய்ய நேரும் என்பது பழமொழி. மறைப்பு 01: பீரீஸ் தலைமையில் ஒரு குழு உலக நாடுகள் முழுவதும் பறந்து சிறீலங்காவிற்கு ஆதரவு தேடியது.. மறைப்பு 02: மகிந்த ராஜபக்ஷ இரவு பகலாக பாகிஸ்தான், சீனாவிலிருந்து சிங்கப்பூர்வரை ஆதரவு தேடி ஓடினார். மறைப்பு 03: இந்தியாவுக்கு விசேட இராஜதந்திரிகள் குழுவை அனுப்பி டெல்லியில் பேச்சுக்களை நடாத்தினார். மறைப்பு 04: உண்மைகளை ஏட்டிக்கு போட்டியாகக் கூறக்கூடிய சரத் பொன்சேகாவை சிறையில் போட்டார்கள். மறைப்பு 05: தமிழர் கூட்டமைப்பை இந்திய…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் வரலாற்றுத் துரோகத்துக்கு பின்னும், சர்வதேச சமூகத்தின் சிறீலங்காவின் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உச்சக்கட்டமாக, சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த ஐ.நா தலையிட வேண்டியது அவசியம் என்று பிரித்தானிய அமைச்சர் ஜெரிமி பிறவுண் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விடுத்த அழைப்பு சிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய மனிதஉரிமைகளுக்குப் பொறுப்பான பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் ஜெரிமி பிறவுண், “பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கத் தவறினால் அனைத்துலக சமூகம் தலையிட வேண்டும்“ என்று வலியுறுத்தியிருந்தார். …

  18. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், 4ஆம் நாளான இன்று இலங்கை விவகாரம் தொடர்பாக முக்கியமானதொரு உரை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9 மணியளவில் சிரியா நிலைமை தொடர்பாக இரண்டு மணி நேர அவசர விவாதம் ஒன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 11 மணி தொடக்கம் 12 மணி வரையும், மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரையும் உயர்மட்ட பிரதிநிதிகளின் உரைகள் மற்றும் விவாதங்களும் இடம்பெறவுள்ளது. இதன்போது, அமெரிக்காவின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ்நிலைச்செயலாளர் மரியா ஒரேரோ உரை நிகழ்த்தவுள்ளார். அவ்வுரையில், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்த முக்கியமா…

  19. பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவுக்கான ஆபத்துக்களை எதிர்நோக்குவதாக இரு மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளதை பிரிட்டன் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. மற்றுமொரு தொகுதி இலங்கையர்கள் இன்று நாடு திருப்பி அனுப்பப்படவுள்ள நிலையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மற்றும் பிரீடம் ஃபுரம் டோச்சர் (சித்ரவதையில் இருந்து விடுதலை) ஆகிய அமைப்புக்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் அங்கு கொடூரமாக நடத்தப்படுவார்கள் என்று கூறி, அவர்களை அங்கு அனுப்புவதகான விமானம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுள்ளன. ஒவ்வொரு நபரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் போது அங்கு அவருக்கு எந்தவிதமான பாதுகாப்பும் …

    • 1 reply
    • 610 views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளோரில் ஒரு தொகுதி தமிழர்கள் நிதி உதவி செய்து வருவதாக அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர், அட்மிரல் திஸர சமரசிங்க குற்றம்சாட்டியுள்ளார். அட்மிரல் திஸர சமரசிங்க அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே மேற்கண்டவாறு குற்றம்சாட்டியுள்ளார். புலம்பெயர் நாடுகளில் மொத்தமாக சுமார் 800,000 இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர், இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கிழமைக்கு தலா ஒரு டொலர் சேகரிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இதன் அடிப்படையில் பார்த்தால் ஒருவரிடமிருந்து 52 டொலர்கள் ஒரு ஆண்டுக்கு சேர்க்கப்படுகிறது. அதன்படி 8 லட்சம் பேரிடம் ஆண்டுக்கு சேர்க்கப்படுவது ம…

  21. இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்னமும் கலந்துரையாடப்பட்டு வருகிறது!- றொபோ்ட் பிளேக்! இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் இன்னமும் கலந்துரையாடலில் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். தீர்மானம் குறித்து இன்னமும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. இது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு பெரும் வாய்ப்பாக அமையும்.“ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அமைதிகாக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவுக்கு நியமிக்கப்பட்டது பற்றிய கேள்விக்கும் பிளேக் பதிலளித்து…

  22. ஜெனிவா ஐ.நா. மனித உரிமைக் கூட்டம் தொடரில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உருவாகியிருக்கும் குழப்ப நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை தொடர்பில் கலந்தாலோசிப்பதற்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்வரும் 2ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைக் கூட்டத்தொடரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாததையிட்டு புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தாயக தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள குழப்பநிலை த…

  23. கூட்டமைப்பு சார்பாக சம்பந்தர் : ஐ.நா. மனித உரிமை 19ஆவது தொடரின் 47அங்கத்துவ நாடுகளுக்கு கடிதம் -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- TNA Leader R. Sampanthan has written a letter dated February 27th 2012 to all 47 member countries in the UN Human Rights Council. UN HUMAN RIGHTS COUNCIL – 19TH SESSION, GENEVA, MARCH 2012 27th February 2012 I write to you as the leader of the Tamil National Alliance (TNA), the principal elected representative of the Tamil people in the North and East of Sri Lanka, to extend my gratitude for …

    • 4 replies
    • 740 views
  24. ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா தமக்கு ஆதரவளிக்கும் என இலங்கைத் தரப்பினர் தெரிவித்திருக்கும் பின்னணியிலேயே முதலமைச்சர் ஜெயலலிதா விஷேட கடிதம் ஒன்றின் மூலம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பதாக சென்னைத் தகவல்கள் தெரிவித்தன. இதற்கு முன்னதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, மறுமலர்ச்சி தி.மு.க. தலைவர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பஇநெடுமாறன் ஆகியோரும் இதே கோரிக்கையை மத்திய அரசிடம் மு…

  25. வன்னியில் வெள்ளை வானில் வந்தோரால் முன்னாள் போராளியான குடும்பஸ்தர் கடத்தல் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளியொருவர் கடந்த 27 ஆம் திகதி இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி உதயபுரம் கிழக்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான முத்தையா சுப்பிரமணியம் (வயது 60) என்பவரே கடத்திச் செல்லப்பட்டவராவார். சம்பவ தினம் இரவு 9 மணியளவில் இவரது வீட்டுக்கு வெள்ளை வானொன்றில் வந்த ஒரு குழுவினர் தாங்கள் ஒருவரைத் தேடி வந்திருப்பதாக கூறி இந்த குடும்பஸ்தரை வெளியே அழைத்துள்ளனர். அவர் வெளிவாசலுக்கு வந்தபோது அவரைக் கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் நேற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.