ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதி ஷவேந்திர சில்வா, பான் மூனின் அமைதிக்காப்பு படைக்கான சிரேஸ்ட ஆலோசனைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் தாம் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு அப்போது 58 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய ஷவேந்திர சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசை அமைதி காப்பு படைகளுக்கான பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகளுக்கான ஆசியக்குழுவும் மத்தியக்கிழக்கு குழுவுமே நியமித்துள்ளன. எனவே போர்க்கு…
-
- 11 replies
- 1.1k views
-
-
கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் கடந்த மாதத்தில் இலங்கை தொடர்பாக பிராந்திய, சர்வதேசிய மட்டங்களில் நடந்து வரும் நகர்வுகள் தொடர்பான செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதனை அடியொற்றி தமிழ் இணையதளங்களிலும் அந்தச் செய்தி தொடர்பான அனுமானங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எம்.எஸ்.கிருஷ்ணாவின் இலங்கைப் பயணம், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்திலுள்ள தென் ஆசியப் பிராந்தியம், மனித உரிமை, போர்க்குற்றத் துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் இலங்கை விஜயங்களின் பின்னணியை கொழும்பு டெலிகிராப் கட்டுரை பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறது. இலங்கை சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களில் பங்கு பெறாமல், அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்காமல்,இந்தியாவிலுள்ள ஷிர்டி சாய்பாபா கோவிலுக…
-
- 8 replies
- 1.5k views
-
-
டீசல் 31 ரூபாவினால் அதிகரிப்பு; பெற்றோல் 12 , மண்ணெண்ணை 35 ரூபாவினால் கூடும் பெற்றோல் விலை லீற்றருக்கு 12 ரூபாவினாலும் டீசல் விலை லீற்றருக்கு 31 ரூபாவினாலும் மண்ணெண்ணை விலை லீற்றருக்கு 35 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. இவ்விலை அதிகரிப்பையடுத்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (சி.பிசி.) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீற்றர் 90 ஒக்டேன் பெற்றோல் விலை 149 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 167 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசல் வீலை 115 ரூபாவாகவும், மண்ணெண்ணை விலை லீற்றருக்கு 106 ரூபாவாகவும் இருக்கும். லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலையை லீற்றருக்கு 12 ரூபாவி…
-
- 12 replies
- 1.7k views
-
-
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்கும் அமெரிக்காவின் சதி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர 13ஆவது திருத்தத்திலிருந்து காணி பொலிஸ் அதிகாரங்களை உடனடியாக இரத்துச் செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்திருப்பதாவது: ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்துள்ளமையானது ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. இனப்பிரச்சினை இங்கில்லை, பயங்கரவாதமே இருக்கின்றது என்பதை அன்று அமெரிக்கா ஏற்க மறுத்தது. ஆனால் இன்ற…
-
- 0 replies
- 630 views
-
-
விடுதலைப் புலிகளை தோற்கடித்த சிறீலங்கா அரசாங்கத்தை அமெரிக்கா பழிவாங்க முயற்சிக்கின்றது: விமல் வீரவன்ச தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த இந்த அரசாங்கத்தை அமெரிக்கா, பழிவாங்க முயற்சித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். பயங்கரவாதத்தின் மூலம் இலங்கையை மற்றுமொரு இஸ்ரேலாக மாற்ற அமெரிக்கா முயற்சித்தது. பிராந்திய வலய நாடுகளின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதே அமெரிக்காவின் திட்டமாக அமைந்திருந்தது. எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் இந்த சதி முயற்சிகள் முறியடிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிக்கு அமெரிக்கா ஆதரவள…
-
- 1 reply
- 940 views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை இலக்காக கொண்டு,ஈழத்தமிழினத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைக்கும் சிங்கள ஆட்சியாளர்களது சர்வதேச பரப்புரைகளை முறியடிக்கும் நோக்கிலான கைநூல் ஒன்று, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்றது. சிறிலங்கா அரச படைகளினால் ஈழத்தமிழனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றுக்கான சுயாதீன சர்வதேச விசாரணைக்கான பொறிமுறையினை வலியுறுத்தும் நோக்கில் இந்த கைநூல்உருவாக்கப்பட்டுள்ளது. இரத்தம்படிந்த சிங்களத்தின் உண்மை முகத்தை, சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்தும் இந்த பிரச்சாரச் கைநூலானது, ஆங்கில மொழியில் வெளிவருகின்றது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்க…
-
- 1 reply
- 585 views
-
-
வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷேனுகா செனவிரத்ன தொடர்பாக இதுவரை வெளிவராத சில தகவல்களை, அந்த அமைச்சின் செயலாளர் திலக் கருணாரத்ன அமுனுகம ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார். ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயத்தில் இணைந்துகொண்ட செயலாளர் அமுனுகம, சேனுகா செனவிரத்னவின் ஊழல், மோசடிகளையும் அவரது சரித்திரத்தையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். சேனுகா செனவிரத்ன ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் எனத் தெரிவித்துள்ள அமுனுகம, அவர் வெளிவிவகார அமைச்சில் இணைந்துகொள்வதற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.எவ்.எம். ஹமீட்டே காரணம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார். ஊடகவியலாளர் மஹின் சில்வாவவே சேனுகாவை முன்னாள் அமைச்சர் ஹமீட்டிடம் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இதன்பின்னர…
-
- 2 replies
- 690 views
-
-
கனடாவுக்கு செல்ல முயன்று டோகோ நாட்டில் கைதியாகி நாடு திரும்பியவரின் கதை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு சட்டரீதியான முறையில் ஆட்களை அனுப்புவதாகக் கூறி பல லட்சம் பணத்தை பெற்றபின் ஏதாவது ஒரு நாட்டில் இறக்கிவிட்டு பணத்தைச் சூறையாடுபவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என கடனடாவுக்கு அனுப்பப்படுவதாக கூறி டோகோவில் கைவிடப்பட்டு அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபின் நாடு திரும்பியுள்ள மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார். கனடாவை நோக்கிய தனது பயணத்தின்போது ஏற்பட்ட தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த நான் படித்துப் பட்டம் பெற்று 5 வருடங்களாகியும் வேலைகள் எதுவும் கிட…
-
- 0 replies
- 859 views
-
-
புலிகளின் தபால் முத்திரை குறித்து ஜெர்மனி மன்னிப்பு கோரியுள்ளது தமிழிழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால்முத்திரைகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் ஜெர்மன் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. வேண்டுமென்றே தபால் முத்திரை வெளியிடப்படவில்லை என ஜெர்மன்அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான புலிச் சின்னங்கள் தாங்கிய தபால் முத்திரைகள்எதிர்காலத்தில் அச்சிடப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. தபால் முத்திரைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பைஅறிந்து கொள்ளாமல் முத்திரைகள் வெளியிடப்பட்டதாக ஜெர்மன் தபால் திணைக்களத்தின் துணைத்தலைவர் டொக்டர் ரெனியர் வென்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை மக்களிடமும், இலங்கை அரசாங்கத்திடம்மன்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நெடுங்கேணியில் இன்றிரவு பொதுமக்கள் மீது படையினர் நடத்திய சரமாரியான தாக்குதல் சம்பவத்தினால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வீதியால் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர்களை இலக்கு வைத்தே படையினரும் காவற்துறையினரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பெரும்பாலும் மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர். வீதி வேலைகளுக்காக அங்கு சென்று தங்கியுள்ள சிங்கள தொழிலாளர்கள் முன்னிலையில் அவர்கள் வேடிக்கை பார்த்திருக்க இத்தாக்குதல்கள் நடந்துள்ளது. தமது காவலரணை இவர்கள் தாக்க முற்பட்டதாக படையினர் இப்பகுதி மக்களுக்கு வியாக்கியானமும் செய்துள்ளனர். மாலை வேளை சில இளைஞர்கள் வழமை போன்று படை முகாம் முன்பதாகவுள்ள வீதியால் பயணித்துள்ளனர். அவ்வேளையில்…
-
- 0 replies
- 756 views
-
-
மட்டக்களப்பு நகரில் உள்ள மங்களராம விகாரதிபதி வண.அம்பிட்டிய சுமனரத்ன தேரர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை தொடக்கம் இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்களின் காணிகள் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டு போலி உறுதிகள் கொண்டு தயாரிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டு அம்மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கையெடுக்க கோரி வலியுறுத்தியே அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் சிங்கள மொழி பயன்பாட்டில் இல்லை என்பதால் அங்குள்ள சிங்கள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேரரின் ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்ட…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஏமாற்றப் பட்டனர் பொதுமக்கள் டாண் ரீவி குழுமத்தினால் நடத்தப்பட்டு வந்த டொல்பின் தொலைக்காட்சி சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இத்தொலைகாட்சி சேவைக்கென பணத்தைச் செலுத்தி வாங்கிய பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சிலமாதங்களுக்கு முன்னர் டாண் ரீவி குழுமத்தினால் ஆரம்பிக்கப்பட்ட டொல்பின் என்ற தொலைக்காட்சிச் சேவை திடீரென்று நித்தப்பட்டுவிட்டததால் அதனை பார்வையிடவென பல ஆயிரம் ரூபாக்களைச் செலுத்தி இணைப்புக்களை பெற்ற பொதுமக்கள் நட்டாற்றில் கைவிடப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் கொக்குவில் பகுதியிலிருந்து டாண் ரீவி குழுமத்தினால் டொல்பின் என்ற பெயரில் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கென அவர்கள் தனியான டிஜ…
-
- 0 replies
- 967 views
-
-
மட்டக்களப்பு, மங்களராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிற்றிய சுமணரத்தினதேரர் இன்று காலை முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்கொண்டு வந்துள்ளார். மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விகாராதிபதியின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்ட பின்னர் தேரரின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதி மொழி வழங்கியதையடுத்து இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. சிங்களம், முஸ்லிம், தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு கோரியும் கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஏழை மக்களுக்கு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொ…
-
- 0 replies
- 513 views
-
-
தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்ட ஈழத்தமிழர் ஒருவர் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று மதியம் தனது துணைவியார், மூன்று பிள்ளைகள் சகிதம் பாங்கொக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் செயலகத்திற்கு சென்ற கை.தேவகுமார் (37) என்ற குடும்பத்தவர், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் வழங்குமாறு கோரி தனது உடலில் எரிபொருளை ஊற்றித் தீமூட்டிக் கொள்ள முற்பட்டுள்ளார். மிகவும் பதற்றமான நிலையில் காணப்பட்ட இவரை அணுகிய ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், இவரை சாந்தப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றதோடு, பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இறுதி யுத்தத்தில் தமிழீழத்திலி…
-
- 0 replies
- 655 views
-
-
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் அமெரிக்காவின் முடிவில் மாற்றம் இல்லை; கூட்டமைப்புடனான நேற்றைய சந்திப்பில் பிளேக் குழு அதிரடியாக அறிவித்தது இலங்கை அரசு என்ன உறுதி மொழிகளை வழங்கினாலும் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றங்களையும் செய்யப்போவதில்லை என்று அமெரிக்கா நேற்று அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஓட்டேரோ மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்…
-
- 16 replies
- 1.1k views
-
-
கிழக்கு பல்கலை புதிய உப வேந்தராக கலாநிதி கி.கோவிந்தராஜா நியமனம் கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக கனடாவிலுள்ள கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு பல்கலைக்கழ நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் உப வேந்தராக கடமையாற்றிய கலாநிதி என்.பத்மநாதன் 2010ஆம் ஆண்டு நடு பகுதியில் எதிர்நோக்கிய நெருக்கடி நிலையொன்றின் காரணமாக பதவி விலகியதிலிருந்து குறித்த பதவி வெற்றிடம் காணப்பட்டது. இந்நிலையில், குறித்த பதவிக்கு கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் ஆர்.சிவக்கநேசன், கிழக்கு பல்கலைக்கழக விவ…
-
- 0 replies
- 522 views
-
-
பதியப்பட்ட நாள்February 14th, 2012 நேரம்: 0:01 பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மேஜர் கேடில்ஸ் மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை தாயின் மடியில் : 14-05-1966 தாயக மண்ணில் : 14-02-1987 கண்டாவளையிவ் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும்,…
-
- 10 replies
- 1.3k views
-
-
பதியப்பட்ட நாள்February 13th, 2012 நேரம்: 22:40 லெப்.கேணல் பொன்னம்மான்(அற்புதன் யோகரத்தினம் குகன்) கலட்டி, யாழ்ப்பாணம் 23-12-1956 – 14-02-1987) வீரவணக்க நாள். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை …
-
- 7 replies
- 1k views
-
-
தமிழ் புலம்பெயர் சமூகத்தினால் போர்க் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை! – சிறிலங்கா அரசாங்கம் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக தமிழ் புலம்பெயர் சமூகத்தினால் நிரூபிக்க முடியவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹ_லுகல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு ஆதரவாளர்கள், புலம்பெயர் தமிழர்களினால் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றப் பிரசாரங்கள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. சனல்-4 காணொளி போலியானது என அரசாங்கம் நிரூபித்துள்ளது. இந்தக் காணொளி தொடர்பில் எவ்வித பதிலும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக…
-
- 6 replies
- 1.2k views
-
-
சிங்கள விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 யுத்த விமானமொன்று புத்தளம் மாவட்டத்தின் தும்மலசூரிய பொலிஸ் பிரிவிலுள்ள ஹெவன பகுதியில் சற்றுமுன் வீழ்ந்துள்ளது. விமானம் வீழ்வதற்கு முன்னர் விமானத்திலிருந்து விமானி வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளார் என விமானப்படை பேச்சாளர் குறூக் கப்டன் அன்டி விஜேசூரிய தெரிவித்தார். ரஷ்ய தயாரிப்பான இவ்விமானம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு வழக்கமான பயிற்சிநடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விமானம் வீழ்ந்தமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் தொழில்நுட்ப கோளாறினால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. http://www.tamil.dailymirror.lk/…
-
- 6 replies
- 1.8k views
-
-
கொழும்பில் தமிழ் வர்த்தகரைக் கடத்திச் சென்ற ஆயுதக்குழுவினர் அவரது குடும்பத்தினரிடம் 100 மில்லியன் ரூபா கப்பம் கோரியுள்ளனர். வெள்ளவத்தை கனல் வீதியில் உள்ள தனது வீட்டின் முன்பாக கடந்த சனிக்கிழமை மாலை 42 வயதான பிரபல வர்த்தகர் ராமசாமி பிரபாகரன் அடையாளம் தெரியாத ஆயுதக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். வெள்ளை வானில் துப்பாக்கிகளுடன் வந்த ஏழு பேர் கொண்ட குழுவொன்று அவரது மனைவி மற்றும் மகள் முன்பாகவே வர்த்தகரைக் கடத்திச் சென்றது. வர்த்தகரைக் கடத்திச் சென்றவர்கள் அவரது மனைவியிடம் சனிக்கிழமை இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 100 மில்லியன் ரூபா பணம் தந்தால் அவரை விடுவிப்பதாக கூறியுள்ளனர். கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவியதாக குற்…
-
- 7 replies
- 1.3k views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரபூர்வமான சில பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளபோதும் சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு அமைய அறிக்கை முழுமையடையவில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு இரு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அறிக்கை தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் இன்று (13) அறிக்கை ஒன்றின் மூலம் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து இரு தரப்பினர் மீதும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக கெவின் ரூட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் குறித்து அறிக்கை முழுமையாக வெளியிடப்படாததால் இலங்கையி…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழரின் அமைதியான வாழ்வுக்காக நீதி கோரி பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் சளைக்காத மனவுறிதியுடன் இன்று 9வது நாளாகவும் தொடர்கிறது. நாளைய தினம் ஜெர்மன் நாட்டுக்குள் பிரவேசிக்க உள்ள இவர்களை வரவேற்பதற்கு அங்குள்ள தமிழ் உறவுகள் தயாராகி வருகின்றனர். இன்றைய தினம் இலண்டனில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவரும் பிரான்சில் வசிக்கும் சிலரும் இந்த நடைப்பயணத்தில் இணைந்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர். அத்தோடு தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுமகன் தமிழீழ தேசியக்கொடியை ஏந்தி சென்ற இவர்களை கண்ணுற்று ஆறத்தழுவி தனது ஆதரவினை உணர்வுடன் வெளிப்படுத்தினார். இலங்கையில் வடக்கு கிழக்கை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தேசியம், தாயகம், தன்னாட்ச்சி என்பவற்றை…
-
- 2 replies
- 838 views
-
-
இலங்கைத்தீவில் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழர் மீதான அநாகரீகமற்ற தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் ஜெனீ வாவில் நடத்தப்படும் மனித உரிமை அமர்வுகளில் தமிழ் பிரமுகர்கள் கலந்து கொள்வது வழக்கமாகியது. ஆனால் இவ் அமர்வுகளில் ஒரு சிலரை தவிர வேறு யாரும் தொடர்ச்சியாக கலந்து கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்க வில்லை. தெற்கிலுள்ள சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் 1987 ஆம் ஆண்டின் பிற்பகுதிகளிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை தெற்கில் ஏற்பட்ட வன்முறைகள், காணாமல் போதல் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்க்ஷ உட்பட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சருமான திலக் மாரப்பன் போன்றோருடன் அரசசார்பற்ற பிரதிநிதிகள…
-
- 3 replies
- 726 views
-
-
http://naathamnews.com/2012/02/13/hrc-us/ சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த சிறிலங்காவுக்கு வாய்ப்பை அளிக்கும் நோக்கில், ஐ நாவின் மனித உரிமைச் சபைக்கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் செய்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க துணைச் செயலாளர் மரியா ஒட்டேரோ அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான உதவி செயலாளர் மரியா ஒட…
-
- 8 replies
- 983 views
-