ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
ஐ.நா.வில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவி - அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் மனிதவுரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலக்குகளை எட்டுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் நெதர்வாந்து வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இவ்விகாரம் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரான டேவிட் க…
-
- 4 replies
- 1.3k views
-
-
இவரின் பெயர் ஜானகி அம்மா. கொல்லத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் இவரது இல்லம் உள்ளது. ஜானகி அம்மாவின் தாயுடன் கூடப் பிறந்த ஆறு சகோதரர்களில் ஒருவர்தான் வேலுப்பிள்ளை. ஜானகி அம்மாவின் தாயின் பெயர் நானி அம்மா. எனவே தான் பிரபாகரனுக்கு மைத்துனி உறவுமுறை என உரிமை கொண்டாடுகின்றார் ஜானகி அம்மா. இவ்வாறு உறவுமுறை கொண்டாடும் ஜானகி அம்மாவை என் டீ ரீவி பேட்டி எடுத்துள்ளது. ஜானகி அம்மாவின் அம்மப்பா அதாவது வேலுப்பிள்ளையின் தகப்பன் இறந்தபோது வேலுப்பிள்ளை செத்த வீட்டுக்கு சென்று இருக்கின்றார். பிறந்த மண்ணுக்கு வேலுப்பிள்ளை சென்றிருந்த கடைசி தருணம் அதுதான். அப்போது ஜானகி அம்மாவுக்கு வயது 11. அதற்கு பின் வேலுப்பிள்ளையை ஜானகி அம்மா காணவே இல்லையாம். ஜானகி அம்மாவின் தாய் …
-
- 7 replies
- 3k views
-
-
இலங்கையின் கொலைக்களங்களை' கலிபோர்னியாவில் திரையிட ஏற்பாடு இலங்கை தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' வீடியோபடம் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் திரையிடப்படவுள்ளதாக ட்ரூத்டைவ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் பாலோ அட்லோ நகரின் 3990 வென்சுரா கோர்ட்டிலுள்ள வென்சுரா சமூக நிலையத்தில் இந்த வீடியோ திரையிடப்படவுள்ளதாக மேற்படி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி ஜிம் மெக்டொனால்; இலங்கை விவகாரம் தொடர்பான நிபுணரும் சமசமிதி நிதிய அதிபருமான கிருஷாந்தி தமராஜ் ஆகியோரின் உரைகளும் இதன்போது இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் உ…
-
- 1 reply
- 1k views
-
-
பிரித்தானிய ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் 04.02.1948 இல் பெரும்பான்மை சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய நாளே ஈழத்தமிழர்களின் உரிமை முழுமையாக மறுக்கப்பட்ட நாளாகவும் ஆனது. அந்நியரின் வருகைக்கு முன்பு ஈழத்தமிழர்களின் இராட்சியம் தமிழ் மன்னர்களாலேயே ஆளுகை செய்யப்பட்டது. இலங்கைத் தீவை அடிமைப்படுத்திய அந்நியர்கள் தமது ஆளுகை வசதிக்காக ஒரே அலகாக இலங்கைத்தீவை மாற்றினர். அதன் விளைவு இன்று எம் தமிழினம் எமது சொந்த மண்ணிலேயே வாழ்வதற்காக போராடவேண்டி உள்ளது. 1948 ற்குப் பின்னர் அறவழியில் ஆரம்பித்த எமது விடுதலைப்பயணம் ஆயுதப்போராட்டமாக மாறி மண்மீட்புப் போரில் வெற்றியின் எல்லையைத் தொட்டிருந்த வேளை அனைத்துலக நாடுகளின் உதவியுடன் அ…
-
- 1 reply
- 636 views
-
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவருக்கு ஜக்கிய நாடுகள் சபையினால் “V Awards ” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச தன்னார்வத் தொண்டர்கள் தினம் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கையில் அமைதியாக சேவையாற்றும் தன்னார்வத் தொண்டர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு “V Awards” விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவ் விருது வழங்கும் வைபவமானது இரத்மலானையிலுள்ள Stain Studioவில் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளது. அத்துடன் போட்டியாளர்களினது தனித்திறமைகள் அவர்கள் சமூகத்திற்கு செய்யும் அர்ப்பணிப்புகள் அவர்களால் நாட்டுக்கு கிடைக்கும் நன்மைகள் என்பன அனைத்தும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு ஜேர்ம…
-
- 17 replies
- 1.9k views
-
-
'எனது முகத்துடன் கோபம் என்பதற்காக எனது மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள்தனமான காரியத்தை நான் ஒருபோதும் செய்வதில்லை. ஐதேகவுடன் எமக்கு கடும் முரண்பாடுகள் இருக்கின்றன. அதுபற்றி மறைப்பதற்கு எதுவும் கிடையாது. ஆனால் ஐதேகவை பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக எமது பொது எதிரியான இந்த மக்கள் விரோத மஹிந்த அரசாங்கத்திற்கு சாதகமான நிலைப்பாடுகளை என்னால் ஒருபோதும் எடுக்க முடியாது. கோடிக்கணக்கான ரூபாய் கையூட்டுகளை வாங்கிகொண்டு மேயர் முஸம்மில் ஹாஜியாரின் கொழும்பு மாநகரசபை நிர்வாகத்தை சீர்குலைப்பதற்கு என்னால் துணை போக முடியாது. இந்த அரசியல் முதிர்ச்சியும், நேர்மையும் என்னிடம் இருக்கின்றன' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிர…
-
- 0 replies
- 934 views
-
-
சுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம் பாரீர் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-04 09:24:22| யாழ்ப்பாணம்] இலங்கைத் திருநாட்டின் 64ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. காலனித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை மீட்சி பெற்றதனை ‘சுதந்திரம்’ என்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். சுதந்திரம் என்ற சொற்பதம் பற்றி ஆள்பவர்களும் அடக்கப்படுபவர்களும் கொண்டுள்ள பொருள் வித்தியாசமானது. ஆள்பவர்கள் அடக்கப்படுபவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்காமல் தடுப்பதை தங்கள் சுதந்திரமாக கருதுகின்றனர். அடக்கப்படுபவர்களோ ஆட்சியாளர்களிடம் இருந்து உரிமை பெறுவதை தமது சுதந்திரமாக நினைக்கின்றனர். இங்குதான் ‘சுதந்திரம்’ என்பது வேறுபட்டு நிற்பதைக் காண முடிகின்றது. இந்…
-
- 0 replies
- 623 views
-
-
இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தின் கூட்டு முயற்சி பலனளிக்குமா? இலங்கைக்கு எதிரான இந்தியாவின் ஆதரவை பெறும் நோக்கில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19-வது கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மேற்கத்தேய நாடுகள் இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் அவரது விஜயம் அமைந்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்ப…
-
- 3 replies
- 838 views
-
-
பூநகரியில் ஆள ஊடுருவும் சீனா - அதிர்ச்சியில் இந்தியா! போரின் பின்னரான இலங்கையில் இந்தியா மற்றும் சீனா போட்டி போட்டு கொண்டு இலங்கையின் வளங்களை தன்னப்படுத்த கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. அந்த வகையில் சீனாவின் உதவியுடன் வன்னி பூநகரிப்பகுதியில் சர்வதேச விமான நிலையமொன்றை அமைக்க..., இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் முதல் கட்டமாக அப்பகுதியிலிருந்து மண் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதற்கென பெருமளவு நிலப்பரப்பினை கையகப்படுத்தவுள்ளதுடன் அதற்கான அளவீட்டுபபணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே புலிகள் வசமிரு…
-
- 8 replies
- 3.2k views
-
-
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் மாபெரும் அரசியல் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்குவதால்தான், அரசாங்கம் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி வருகின்றதே தவிர இது முஸ்லிம் மக்களை புறக்கணிப்பதாக அர்த்தமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல தடவைகளாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது. பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம் மக்கள் சார்பாக அ…
-
- 0 replies
- 475 views
-
-
பொறுப்புக்கூறும் விவகாரத்தில் கவனம் செலுத்துக! - ஐ.நா.வுக்கு மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை அத்துடன், இவ்விகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் நியூயோர்க்கைக் தளமாகக் கொண்டியங்கும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஜெனிவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது கூட்டத் தொடர் தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கும் கடிதத்திலேயே மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இலகையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிக்கும் கட…
-
- 1 reply
- 700 views
-
-
சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் சிக்கினாரா ? விடுதலைப் புலிகளின் கடல் தளபதி சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிக்கினார் என்ற செய்தியை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி இலங்கை வான்படைகள் கிளிநொச்சியில் உள்ள இரகசிய இடம் ஒன்றைத் தாக்கினர். அங்கே அதிகாலை 6 மணியளவில் இருந்த சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்டார். இருப்பினும் தாம் வேறு ஒரு நபரையே தாக்க முற்பட்டதாக இராணுவ பேச்சாளராக இருந்த பிரிகேடியர் நாணயகார அமெரிக்கத் தூதுவருக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிவித்துள்ளார். தாம் கடற்படைத் தளபதி சூசை அவ…
-
- 8 replies
- 1.5k views
-
-
லலித்குமார், முருகானந்தன் கடத்தல் வழக்கு: இராணுவத்தளபதி, பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபருக்கு அழைப்பாணை யாழ்ப்பாணத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான வீரராஜா லலித்குமார் மறறும் கிட்னன் முருகானந்தம் ஆகியோரின் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் சூரிய, அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மேஜர்ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸ் மா அதிபர், அச்சுவேலிபொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர்; ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று கட்டளை பிறப்பித்தது. நீதிபதிகள் ரஞ்சித் சில்வா, நளின் பெரேரா ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாம் இந…
-
- 0 replies
- 698 views
-
-
-
- 0 replies
- 777 views
-
-
நோபல் சமாதானப் பரிசுக்கு சனல் 4 தொலைக்காட்சி பரிந்துரைப்பு! பொங்குதமிழ் முன்னெடுத்த முயற்சி 2009 ம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தினை வெளியிட்டு சிறிலங்காவின் போர்க்குற்ற மீறல்களை உலகுக்கு அம்பலப்படுத்துவதில் பெரும்பங்காற்றிய சனல் 4 தொலைக்காட்சி குழுமம் 2012ம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்பரிந்துரையை மேற்கொள்ளுவதற்கான முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் பொங்குதமிழ் இணையத்தளம் மேற்கொண்டிருந்தது. கடந்த பெப்பிரவரி 1ம் திகதி, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் Siobhain Ann McDonagh மற்றும் அவுஸ்திரேலிய செனட்சபை உறுப்பினர் Lee Rhiannon ஆகியோர் …
-
- 1 reply
- 1.1k views
-
-
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது மரண விபத்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரொன்று பாதையைவிட்டு விலகியதால் 26 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த நவம்பர் 27 ஆம் திகதி திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்பட்ட முதலாவது விபத்து இதுவாகும். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/35369-2012-02-03-02-20-52.html
-
- 1 reply
- 769 views
-
-
மட்டக்களப்பின் எல்லைப்புறக் கிராமங்களான 35,37,39ஆம் கொலனி, கெவுளியாமடு, வைக்கியல்ல, பாலையடிவட்டை உட்பட பல கிராமங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்பா.அரியநேத்திரன் விஜயம் ஒன்றினை நேற்று வியாழக்கிழமை மேற்கொண்டார். இதன்போது தமிழர்களின் கால்நடைகள் சுடப்படுவது, காணிகள் சூறையாடப்படுவது, நன்னீர் சிறு மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உட்கட்டுமான புனரைமப்பு வேலைகள், போக்குவரத்து வசதிகள் ஆலயங்களின் நிர்மாண பணிகள் பற்றியும் அங்குள்ள மக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக் கூறியிருந்தனர். இவற்றிற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருவது தொடர்பில் முயற்சிகளை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அம்மக்களிடம் தெரிவித்தார். …
-
- 2 replies
- 818 views
-
-
இலங்கை மீது சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் பிரித்தானியா குழு! இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றினூடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டியதன். அவசியத்தை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்படி பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 'பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பிரித்தானியாவின் தமிழர்களுக்கான சர்வ…
-
- 1 reply
- 778 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 42 பேர் எதிர்வரும் 8ம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அநுராதபுரம் – ஓயாமடுவ பகுதியில் இடம்பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் வைத்து எதிர்வரும் 8ம் திகதி இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் 10,450 சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் கூறியுள்ளது. http://www.ilankathir.com/?p=3917
-
- 0 replies
- 691 views
-
-
ரொபர்ட் ஓ பிளக் இலங்கைக்கு திடீர் விஜயம் வெகு விரைவில்! அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் பதினொராம் திகதி கொழும்பு வருகிறார். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் நெருங்கிவரும் நிலையிலும்..., அந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்துக்கான முன்மொழிவை ஆதரிக்க வோஷிங்ரன் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பிளேக் கொழும்பு வருகிறார். அவரது இந்த அவசர பயணத்தின் பின்னணி குறித்து உடனடியாக விவரம் வெளிவரவில்லை. எனினும் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை உ…
-
- 2 replies
- 1.2k views
-
-
உலகின் மிக மோசமான பங்குச் சந்தைகளில் ஒன்றாக இலங்கைப் பங்குச் சந்தை மாறியுள்ளது உலகில் மிக மோசமாகச் செயற்படும் பங்குச் சந்தைகளின் வரிசையில் இரண்டாவது இடத்தை இலங்கைப் பங்குச் சந்தை பெற்றுள்ளதென அறிவிக்கப்படுகிறது. Bespoke Investment Group என்ற நிறுவனம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. உலகில் மிகவும் அதிக பெறுமதி அதிகரிப்பைக் காட்டிய சந்தையென்ற பெருமையைப் பெற்றிருந்த கொழும்பு பங்குச் சந்தை, ஜனவரி மாதம் பாரிய சரிவைச் சந்தித்தது. அதன் சுட்டி, 7.94 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. மிக அதிகமாக, 14.66 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்த பங்களாதேஷின் பங்குச் சந்தைக்கு அடுத்த நிலையில் இலங்கையின் பங்குச் சந்தை உள்ளது. 2009 ஆம் ஆண்டு 125 சதவீதமும், 2010 ஆம் ஆண்டு 96 ச…
-
- 2 replies
- 987 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவுடன் கை கோர்க்கும் இந்தியா அதிர்ச்சியில் மஹிந்த! ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மேற்கத்தேய நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ புதுடில்லி சென்றுள்ளார். இந்தியா - இலங்கை இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை புதுடில்லியில் ஆரம்பமாகியது. இதில் கடலோரப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இந்…
-
- 6 replies
- 2.3k views
-
-
கனடாவில் 6மாதத்திற்கு முதல் காணாமல் போன தமிழ் பெண்- தகவல் தருமாறு காவல்துறை வேண்டுகோள் Published on January 28, 2012-9:45 am · கனடா ரொறன்ரோ பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழ் பெண்ணான 31வயதுடைய சிவலதா செல்லத்தம்பி கடந்த 6 மாதத்திற்கு முதல் காணாமல் போய் விட்;டதாகவும், இவர் பற்றிய தகவல் கிடைத்தால் தமக்கு அறிவிக்குமாறு கனடா காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஜேன் அன்ட் பிஞ்ச் சந்திப்பை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற பெண் கடந்த யூன் 15ம் திகதி, 2011ல் இருந்து காணாமல் போயுள்ளார். அவர் ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரமுடையவர் என்றும் ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் தங்களுடன் 416,808,3100 என்ற இ…
-
- 7 replies
- 1.6k views
-
-
சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்றிருந்த 125 இலங்கையர்கள் இன்று திருப்பி அனுப்பட்டுள்ளனர். மேற்படி நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்றிருந்த இவர்கள் தாம் வேலை செய்த இடங்களில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களுள் குவைத்திலிருந்து 35 பெண்களும், 08 ஆண்களும், சவூதி அரேபியாவிலிருந்து 77 ஆண்களும், 05 பெண்களுமாக 125 பேர் நாடு திரும்பியுள்ளனர். கட்டுநாயக்கா வந்த இவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் வீடுகளுக்குச் செல்வதற்கான கொடுப்பனவுகளை அவர்களுக்கு வழங்கி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. h…
-
- 2 replies
- 718 views
-
-
13ஐ தாண்டினால் அரசிலிருந்து வெளியேறுவோம் 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டத்தைஅரசாங்கம் வழங்கினால் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற நேரிடும் என ஜே.என்.பி கட்சியின்தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதித் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலஅரசியல் நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கோரிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்ரகுமாரினிடம் முன்வைக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரங்களை பகிரக் கூடாது என்பதே தமது கட்சியின்நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 1 reply
- 943 views
-