ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143359 topics in this forum
-
முழங்காவில் - முழங்காவிலில் உள்ள அரச மருத்துவமனையில் ஒரு சிங்கள இளைஞரே மருத்துவராக கடமையாற்றுகிறார். அங்கே தமிழ் மருத்துவர்கள் இல்லை. இருக்கின்ற மருத்துவருக்கு தமிழ் ஒழுங்காகத் தெரியாது. மக்களுக்கோ சிங்களம் சரியாக விளங்காது. இந்த நிலையில்தான் நோயாளிகளுக்கும் மருத்துவருக்கும் இடையில் உறவும் மருத்துவமும் நிகழ்கின்றன. அக்கராயன் - அக்கராயனில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவரே இல்லை. இதுதான் மூன்றாம் கட்ட யுத்தகாலத்தில் வன்னியில் இயங்கிய தலைமை மருத்துவமனை. கிளிநொச்சியில் இயங்கிய மாவட்ட வைத்தியசாலை இந்த மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது இந்த மருத்துவமனை வளாகத்தில் மாடுகள் படுத்து உறங்குகின்றன. இந்த மருத்துவமனைக்கு ஒரு நிரந்தர மருத்துவ…
-
- 5 replies
- 707 views
-
-
தென்மராட்சியின் மறவன்புலோ- தனங்களப்பு பகுதியில் கடந்த நவம்பர் மாதமளவில் காணாமல் போயிருந்த யுவதியொருவர் இரண்டு மாதங்களின் பின்னர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். 28 வயதுடைய சுபபிரமணியம் அற்புதமலர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் நவம்பர் 13ம் திகதியளவில் இவர்; வீட்டிலிருந்து வெளியே சென்ற வேளை காணாமல் போயிருந்ததாக குடும்பத்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக்காணாமல் போதல் தொடர்பில் அவர்கள் பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளையும் செய்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட அறுகுவெளி-கேரதீவு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் கைவிடப்பட்ட இராணுவ மண் அணை ஒன்றினை அண்மித்த பகுதியில…
-
- 2 replies
- 1.1k views
-
-
அண்மையில் தமிழ் பேசும் புத்திசீவிகள் என்போர் (சிங்கள அரசு ஆதரவாளர்கள்.. மற்றும் அதன் தமிழ் கொலைக்குழு ஆதவாளர்கள்) வெளியிட்ட சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களை ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டி விடும் அறிக்கை தற்போது செயல் வடிவம் எடுத்துள்ளது. இதன் கீழ் அண்மையில் முஸ்லீம் அரசியல்வாதி ஒருவரின் வழிகாட்டலின் கீழ் ஈழத்தின் வடக்கு மன்னாரில் தமிழ் மக்கள் சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களால் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில்.. வீடுகளை விட்டு வெளியேற பணிக்கப்பட்டனர். தற்போது ஈழத்தின் கிழக்கில் மட்டக்களப்பில் இருந்தும் தமிழ் மக்களை வெளியேற்ற... சிங்கள அரசு சார் முஸ்லீம் குழுக்களின்.. நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அடாவடித்தனங்கள் 1990 இலும் சிங்கள…
-
- 0 replies
- 786 views
-
-
சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ள 4000 பேரில் தமிழ் அரசியல் கைதிகளையும் உள்ளடக்குங்கள் ஜனாதிபதிக்கு அரிய நேத்திரன் எம். பி. கடிதம் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுதலை செய்யவுள்ள 4000 சிறைக்கைதிகளில் இலங்கையின் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு உறுப்பினர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் நான்காம் திகதி நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 4000 அரசியல் கைதிகள் பொது மன்…
-
- 0 replies
- 447 views
-
-
இலங்கையிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 161 வெளிநாட்டவர்கள் அல் குவைதா அமைப்பினால் வழி நடத்தப்படுவர்கள் என சர்வதேச காவற்துறை மற்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் என்பன தகவல்கள் வெளியிட்டுள்ளதாகவும் இந்த இஸ்லாமிய அமைப்பினரின் வெளிநாட்டு பயணங்களுக்கான நிதியுதவிகளை அல் குவைதா அமைப்பு வழங்கி, அவர்களுக்கான விசா அனுமதியை பெற்று கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது என சிங்களப் பத்திரிகையான திவயின கூறியுள்ளது. அத்துடன் 2006 ஆம் ஆண்டு மும்பாயில் 166 பேர் உயிரிழக்க காரணமாக தாக்குதலுடன் இந்த ஜமாத் இயக்கத்தினருக்கும் தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் கிழக்கில் பிரசாரங்…
-
- 1 reply
- 666 views
-
-
இலங்கை கடற்பரப்பில் மீன்படித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான தமிழகத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் எதிர்வரும் 27 ஆம் தேதி விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டிணம் அக்கரைப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த இவர்களும் அவர்கள் பயணித்த ஆறு விசைபடகுகளும் விடுவிக்கப்பட்டு இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதாக தமிழக அரசின் நாகை மாவட்ட துணை மீன்வளத்துறை இயக்குநர் தெரித்ததாக உள்ளூர் பஞ்சாயத்தார் திருவளர்ச் செல்வன் தமிழோசையிடம் கூறினார். முன்னதாக இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்ததாக இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்தின் வடகடல் பரப்பில் இவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்தார்கள…
-
- 0 replies
- 379 views
-
-
http://a2.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/397042_239435646131387_189745421100410_549640_1522608388_n.jpg கிளம்பிட்டாருய்யா கைப்புள்ள! ‘தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையில் மத்திய அரசின் தாமத்தை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது’ என தி.மு.க. தலைவர் கருணாநிதி பொங்கி எழுந்திருக்கிறார். 'ஆகா... கைப்புள்ள கிளம்பிட்டாருய்யா...' என்பதைத் தவிர வேறு எதையும் சொல்லத் தோன்றவில்லை. பின்னே... ஆட்சியில் இருக்கும்போது கடிதம் எழுதுவது... கீழே இறங்கிவிட்டால் இப்படி பொங்குவது... இதைத்தானே காலகாலமாக செய்து கொண்டிருக்கிறார்! பின் குறிப்பு: ஏற்கெனவே பொங்கிக் கொண்டிருந்த, ஜெயலலிதா... தற்போது ஆட்சியில் அமர்ந்த இந்த ஆறு மாத காலத்தில் இரண்டு மூன்று கடிதங்களை அனுப்பிவிட்…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்கள் பழிவாங்கப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பில் சம்பந்தன் பேசவில்லை! - விக்கிலீக்ஸ் இலங்கையின் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் இரா.சம்பந்தன் அச்சம் காரணமாக பேசவில்லை என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றெனீசினால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த இரகசிய தகவல் குறிப்பிலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பழிவாங்கப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக இலங்கையின் இடம்பெற்ற…
-
- 0 replies
- 878 views
-
-
காணாமல் போனோரை கண்டறிய... ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் இன்று செவ்வாய்க்கிழமையுடன் இரு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, எக்னலிகொடவையும் வடக்கு கிழக்கில் காணாமல் போன பிள்ளைகள் மற்றும் கணவர்களை கண்டறியக்கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் சத்தியாக்கிரகமொன்று நடைபெற்றது. காணாமல் போனோரை தேடியறியும் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சத்தியாக்கிரகத்தில், காணாமல் போனோரின் குடும்பத்தினர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/34876-2012-01-24-17-51-21.html
-
- 2 replies
- 694 views
-
-
மஹிந்த சிந்தனை இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கும்: அஜித் கப்ரால் மஹிந்த சிந்தனை அடுத்த சில வருடங்களில் இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ளல் மற்றும் அனைத்து மக்களும் சம அளவிலான அபிருத்திகளை மேற்கொள்ளல் ஆகியனவே மேற்படி இரண்டு சவால்களாகும் என அவர் குறிப்பிட்டார். சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தினால் நல்லிணக்கத்திற்கான தேசிய மாநாடு (பகுதி – 2) நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 'நல்லிணக்கத்தில் வர்த்தக சமூகத்தில் பங்கு' எனும் தொனிப்பொருளில் சிறப்புரையாற்றும் போதே அஜித் நிவாட் கப்ரால் ம…
-
- 2 replies
- 1.2k views
-
-
<p><p>http://a6.sphotos.ak...896877117_n.jpg http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/402479_2549868752361_1423116401_32187239_896877117_n.jpgTHANKS-facebook
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரான்சை தலைமையகமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவிலாளர் அமைப்பினால் (Reporters Without Borders -RSF) ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஊடக சுதந்திரம் குறித்த பட்டியலில் இந்த ஆண்டில் சிறிலங்கா பின்தள்ளப்பட்டுள்ளது. 2011-12ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் சிறிலங்காவுக்கு 163வது இடமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் சிறிலங்கா 158வது இடத்தில் இருந்தது. சிறிலங்காவில் போர் தீவிரமாக இடம்பெற்ற 2009ம் ஆண்டில் கூட 162வது இடத்திலேயே சிறிலங்கா வரிசைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊடகங்கள் மீதான கெடுபிடிகள், தாக்குதல்கள், இணையத் தளங்கள் மீதான நேரடியான கட்டுப்பாடுகள், தணிக்கைகள் காரணமாகவே சிறிலங்கா இந்தப் பட்டியலில் பின்தள்ளப்பட்டதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்ப…
-
- 0 replies
- 578 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா நிபுணர்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர் வலியுறுத்திய வட்டமேசை மாநாட்டுக்கு சிறிலங்கா அழைக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவா அக்கடமியில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மாநாட்டுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகமே ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதனால், அழைப்பு இல்லாமல் சிறிலங்கா இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனது. மேற்குலக நாடுகளில் ஜெனிவாவுக்கான பிரதிநிதிகள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். ஜெனிவாவில…
-
- 0 replies
- 799 views
-
-
விடுதலைப் புலிகளால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பதிவை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால், சுமார் 30 அரசியல்கட்சிகளின் பதிவுகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள், கணக்கு அறிக்கைகள் மற்றும் கொள்கை அறிக்கைகளை பல ஆண்டுகளாகச் சமர்ப்பிக்கத் தவறிய 30 அரசியல் கட்சிகளின் பதிவுகளை நிறுத்தும் செய்ய சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது. சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில் 67 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 30 கட்சிகள் பல ஆண்டுகளாகச் செயற்பாட்டு நிலையில் இல்லை. இவற்றின் பதிவுகள் உடனடியாக இடைநிறுத்தப்படவுள்ளன. விடுதலைப் புலிகளால் 1990ம் ஆண்டில பதிவு செய்யப்ப…
-
- 0 replies
- 641 views
-
-
புதிய மகசின் சிறைச்சாலை கலவரத்தையடுத்து. சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது பாதுகாப்பு குறித்து அச்சசம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அரசியல் தலைவர்களைச் சந்திக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர. புதிய மகசின் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற களேபரத்தின்போது தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியையடுத்து, வேறு சிறைச்சலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது பாதுகாப்பு குறித்து கவலையும் அச்சமும் அடைந்துள்ளார்கள். காலத்திற்குக் காலம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையும், இதன்போது தமிழ்க் கைதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்…
-
- 0 replies
- 432 views
-
-
ஸ்காபரோ நகரில் Middlefield and McNicoll சந்திப்புக்கருகில் அமைந்திருக்கும் DTS Jewellery மற்றும் Fresh Jasmin Flowersவர்த்தக நிலையத்தில் நேற்று முந்தினம் இரவு 9.00 மணியளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழர்களின் நிர்வாகத்தில் இயங்கும் இவ் வர்த்தக நிறுவனத்தில் இடம்பெற்ற மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் நபர்கள் எவர்கள் மீதும் தாக்குதல் சம்பங்கள் இடம்பெறவில்லை என்றும், இது தெடர்பான விசாரணைகள் இடம் பெறுவதாகவும் ரொறோன்டோ பொலிசார் தெரிவிக்கின்றனர். இதேவேளை இக்கொள்ளைச் சம்பவம் நடைபெற்றபோது இவ்வர்த்தக நிறுவனத்துக்குள் அமைந்திருந்த நகைக்கடை மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 667 views
-
-
மகசீன் சிறைச்சாலையில் கலவரம் 15பேர் வரையில் காயம் மகசீன் சிறைச்சாலையில் இன்று காலை பதினொரு மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அண்மையில் மகசீன் சிறைச்சாலைக்கு நியமிக்கப்பட்ட எமில் நிறஞ்சன் என்ற அதிகாரியின் கடும் போக்கிற்கு எதிராக இன்று சிங்களக் கைதிகள் அதிகாரிகள் மீது பொல்லுகள் கல்லுகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நடவடிக்கைக்கு எதிராக கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு 15கைதிகள் வரையில் காயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதலில் தமிழ்க் கைதிகளும் பாதிப்படைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நிலமை மிகவும் பதட்டமான நிலையில் இருப்பதாகவும் தற்போது மகசீன் சிறைச்…
-
- 16 replies
- 1.2k views
-
-
எத்தனை ஆண்டுகள் போனாலும் போர்க்குற்றம், மானிடப் பெரும் படுகொலைகள் போன்ற குற்றச் செயல்களை செய்த நாடுகள் அதிலிருந்து தப்பிவிட முடியாது என்பதற்கான இன்னொரு அழுத்தமான சம்பவம் நேற்று பிரான்சிய செனட்சபையில் நடைபெற்றுள்ளது. 1956 ம் ஆண்டில் இருந்து 2009 ம் ஆண்டுவரை இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் படுகொலைக்கான குற்றத்தை சிங்கள அரசு என்றாவது ஒரு நாள் ஏற்றேயாக வேண்டும் என்ற புதிய நம்பிக்கையை இந்த விவகாரம் தந்துள்ளது. கடந்த 1915 – 1916ம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்களை துருக்கி கொன்றொழித்தது. இது உகாண்டா, சிறீலங்காவில் நடைபெற்றது போன்ற மானிடப் படுகொலைகளை ஒத்ததாக இருக்கிறது. ஆண், பெண், குழந்தைகள், முதியோர் என்ற பேதம் பார்க்காமல் மக்களை கொன்றால் அத மானிட…
-
- 3 replies
- 1.7k views
-
-
சீனாவின் கொன்சு பகுதியில் புதிய இலங்கை தூதரக அலுவலகம் ஒன்றை அமைக்க சீனா இலங்கைக்கு அனுமதி அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி சீனாவில் மூன்றாவது தூதரக அலுவலகத்தை திறக்கும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன் ஊடாக இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான நல்லுறவு, பொருளாதார உறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொன்சு பகுதி தூதரகத்திற்கான தூதுவரை இலங்கை ஏற்கனவே பெயரிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2007ம் ஆண்டு சீனாவின் சாங்காயிலும் 2009ம் ஆண்டு செங்டு பகுதியிலும் இலங்கை தூதரக அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சீனாவின் பிரதான வர்த்தக தலைநகரான கொன்சு பகுதியில் மூன்…
-
- 1 reply
- 731 views
-
-
யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் வைத்து அப்துல்கலாமை நோக்கி ஏதோ ஒரு நோக்கத்திற்காக கேட்கப்பட்ட ஒரே ஒரு கேள்வி இது அப்துல்கலைமைக் கண்டு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தீர்கள் என காதலன் காதலியை கேட்கும் உணர்வு போல் இருந்ததாக அங்கு குமிழியிருந்த மாணவர்களில் சில தெரிவித்தனர். இன்னும் சிலர் இதற்கு வேறு விதமாக அர்த்தம் தெரிவித்தனர். யுத்தம் நடைபெற்ற போது எம்மைப் பற்றி சிந்திக்காது இருந்தீர்களே என்று நினைத்து கேள்வி கேட்டவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனவும் கருத்துத் தெரிவித்தனர். thx http://newjaffna.com
-
- 22 replies
- 3.3k views
-
-
பிரித்தானியாவில் கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி மன்செஸ்டர் முதல் லண்டன் வரை தமிழர்களஅல் மேற்கொள்ளப்படும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது. இந்த நடைபயணத்தில் திரு. ஜெயசங்கர், திரு. குமார், திரு. சிவச்சந்திரன், திரு, தேவன் ஆகியோரோடு வெள்ளை நிறத்தவரான பிரித்தானியாவைச் சேர்ந்த திரு. போல் என்பவரும் கடந்த எட்டு நாட்களாக இந்த நடைபயணத்தில் பங்குபற்றுகின்றனர். http://youtu.be/o8vKz_P_9is ஏழாவது நாளான நேற்று மாலை மில்ரன்கீன்ஸ் பகுதியை வந்தடைந்த நடைபயணத்தை மேற்கொள்ளும் ஐவரையும் மில்ரன்கீன்ஸ் வாழ் தமிழ்மக்கள் 40 ற்கும் மேற்பட்டவர்கள் சென்று வரவேற்றனர். அதன் பின் அங்கு இரவு ஓய்வ…
-
- 1 reply
- 560 views
-
-
Tamil Videos | Cultural Events | Business Media - M. A. Sumanthiran MP. Speech,CTC 5th Annual Thai P www.tamilbizcard.com http://www.tamilbizcard.com/ http://www.tamilbizcard.com/media/index.php?option=com_hwdvideoshare&task=viewvideo&Itemid=2&video_id=386 Part 1 video http://www.tamilbizc...=2&video_id=385 part 2 (video)
-
- 4 replies
- 960 views
-
-
கொழும்பில் இந்திய அமைதிப்படை வீரர்களின் நினைவிடத்தில் அப்துல்கலாம் அஞ்சலி. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே அவர், இந்திய அமைதிப் படை வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் மும்மொழித் திட்டத் துவக்க விழாவிலும் கலந்து கொண்டார். இலங்கை நாட்டவர் அனைவரும், மூன்று மொழிகளையும் கற்றுக் கொள்ளும் நோக்கில், தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மும்மொழித் திட்டம், கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தனது உரையில், இத்திட்டத்தை அப்துல் கலாம் வரவேற்றுப் பேசினார். பின், பண்டார நாயக்க சர்வதேச ஆய்வு மையத்தில் உரையாற்றினார். இதையடுத்து, கொழும்பின் புறநகர்ப் பகுதிய…
-
- 12 replies
- 2.8k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவிபிள்ளை அடுத்த மாதமளவில் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை இரத்துச் செய்துவிட்டார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று இராஜதந்திரவட்டாரங்களை மேற்க்கொள்காட்டி செய்திவெளியிட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கை, இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதன் காரணமாகவே நவநீதம்பிள்ளை தனது பயணத்தை ரத்துச் செய்துள்ளார் என்று தெரியவருகிறது. ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் வேளையில், மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் எடுத்துள்ள இந்த அதிரடியான தீர்மானத்தால் கொழும்பு அதிர்ச்சியடைந்துள்ளது . நல்லிணக்க ஆணை…
-
- 2 replies
- 826 views
-
-
புரியாத புதிராக குடாநாட்டின் வேலை வாய்ப்பு அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் ஏற்பாட்டில் “யாழ் மற்றும் வடக்கில் புதிராக விளங்கும் தொழிலாளர் சந்தை” எனும் தலைப்பிலான பகிரங்க பொது மன்றம் ஒன்று யாழ் பொது நூலகத்தில் இந்த மாதம் மூன்றாம் திகதி இடம்பெற்றது. இதன் பிரதான ஆய்வாளரான கலாநிதி.மு.சர்வானந்தா, இங்கு பரிமாறப்பட்ட கருத்துக்களை தொகுத்து ஆய்வு கட்டுரை ஒன்றினை ஒன்லைன் உதயனுக்காக வழங்கியிருந்தார். இதிலிருந்து சில பகுதிகள் : அரசாங்க வேலையே வேண்டும்! தனியார் பொறியியலாளர் நிறுவனம் ஒன்று அண்மையில் சில வேலை வாய்ப்புக்களுக்காக விண்ணப்பங்களை யாழ்ப்பாணத்தில் கோரியிருந்த போது, அதற்கு எதுவிதமான விண்ணப்பங்களும் கிடைக்கவில்லை. மறுபுறத்தில், மாவட்டச் செயலாளர் இமெல்டா…
-
- 7 replies
- 1.3k views
-