Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் மற்றும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுகளில் மென்போக்கை கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது எனக் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று அரசின் அதிகாரபூர்வ இணையத்தளத்திடம், கருத்து வெளியிட்டுள்ள ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை நடத்த அரசு தயாராகவுள்ளது எனக் கூறியுள்ளார். மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்து கொ…

  2. பிரான்ஸில் புலிகள் சார்பான முத்திரைகள் வெளிவந்தததையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களைக் கொண்ட முத்திரைகள் கனடாவில் புழக்கத்திலுள்ளதை ஓட்டாவிலுள்ள இலங்கையர் நிறுவனமொன்று கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழமென காட்டப்பட்ட பகுதியின் படத்தைக் கொண்ட தனிப்பட்ட முத்திரைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் முகப்பு நிறுவனமான தமிழ் இளைஞர் நிறுவனம் கனடா தபால் சேவையை துஷ்பிரயோகம் செய்து வெளியிட்டுள்ளதாக இலங்கையர் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது. ‘நான் தமிழ் இன அழிப்பை நினைவில் வைத்துள்ளேன்’ என்னும் வாசகம் முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.இந்த முறைகேடான முத்திரையை புழக்கத்திலிருந்து அகற்றவும் இதை ச…

  3. பகைமையுணர்வை தோற்றுவிக்கும் விமல், சம்பிக்க கருத்துக்கள் ஆளும் கட்சியில் பிரதான அமைச்சர் பதவி வகிக்கும் விமல் வீரவன்ஸவும் சம்பிக்க ரணவக்கவும் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் இனங்களுக்கிடையில் மீண்டுமொரு பகைமையுணர்வை தோற்றுவிப்பதாகவே அமைந்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவ்வாறில்லாவிடின் இது நாட்டின் எதிர்கால சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோவதாக அமையுமென ரெலோ அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூ…

    • 0 replies
    • 675 views
  4. மகேஸ்வரன் கொலை முயற்சிக்கு பயன்படுத்திய ஆயுதத்தை காணவில்லை படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனை கொலை செய்ய 2004ம் ஆண்டு பயன்படுத்திய துப்பாக்கி காணாமற் போயுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு (CCD) இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு கொழும்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவர் மீது கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் வைத்து நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலில் மகேஸ்வரன் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் இவர் ஜனவரி 1, 2008 இல் கொச்சிக்கடை சிவன் கோயிலில் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது துப்பாக்கிதாரி ஒருவரினால் சுடப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்தார். …

    • 0 replies
    • 599 views
  5. திருமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சிறீலங்காவின் முப்படையினரும் காவல்துறையுடன் இணைந்து இன்று வியாழக்கிழமை வீடுவீடாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை திருமலை நகரின் மையப்பகுதியில் திடீரென கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்ட படையினரே இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். படையினரின் இந்த திடீர் முற்றுகையால் திருமலை நகரப் பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. நகரின் மையப்பகுதியையடுத்துள்ள பகுதிகளில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக திருமலை நகரப் பகுதிச் செய்திகள் தெரிவிக்கின்றன. வீடுவீடாகச் சென்ற படையினரும் காவல்துறையினரும் வீடுகளில் உள்ளவர்களின் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை போன்றவற்றை கேட்டு அவற்றை பரிசீலனை …

  6. தென்னாபிரிக்கா, தென்சூடான் தென்னாபிரிக்க காங்கிரஸ், நெல்சன் மண்டேலா மற்றும் அதனை அண்டிய நாடுகள் பலவற்றுடன் நாடு கடந்த தமிழீழ அரசு இணைந்து பணியாற்றி வருவதும் அத்துடன் மேலும் பல நாடுகள் தமது நிலைப்பாட்டினை ஏற்று தமக்கான பரிபூரணமான ஆதரவினை நல்க உள்ளார்கள் என.... ..புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இலங்கை இந்தியாவுக்கு நேர்முகமாக தமிழீழ பிரதமர் ருத்ரகுமாரன் விட்ட எச்சரிக்கையினை அடுத்து தற்போது கொழும்பு மிக வேகமாக செயற்பட ஆரம்பித்துள்ளது. தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம். அதற்காக மகிந்த கோத்தாவின் நேரடி கட்டளையில் சில நாடுகளுடன் புதிய தமது தூதரகங்களை திறந்து தமிழீழ அரசின் தமிழீழ அமைப்பு…

  7. 67 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களளும், விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நெடியவன், போதகர் இம்மானுவேல், ருத்ரகுமாரன் ஆகியோர் இணைந்து, இந்த வருடத்தில் இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டங்களை வகுத்துள்ளதாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமிழ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் தமிழகத்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் உரையாற்றி சோதிடர்கள் சிலர், 2012 ஆம் ஆண்டு தற்போதைய இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை இழக்கும் என தெரிவித்துள்ளனர். அத்துடன் ஈழ ஆதரவாளர்களின் பலம் அதிகரிக்கும் என கூறியுள்ளதாகவும் இதன் மூலம் இந்த திட்டம் உறுதியாகி உள்ளதாக திவயின கூறியுள்ளது. விஜய் தொலைக்காட்சி, இதனை ஒளிப்பரப்புவத…

  8. பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிடப்பட்டது. திங்கட்கிழமை, 02 ஜனவரி 2012 22:08 .தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தினையும் விடுதலைப் புலிகளின் இலட்சினையையும் கொண்ட நான்கு வகையான முத்திரைகள் இன்று பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அவை பாவனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளை பிரான்ஸ் தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.பிரான்ஸில் வாழும் தமிழர் அமைப்பின் வேண்டுகோளையடுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த முத்திரை ஒவ்வொன்றினதும் பெறுமதி அந்நாட்டு நாட்டு நாணயப்படி 60 சதமாகும். புலிகளின் தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை – தயான் ஜயதிலக்க தமிழீழ விடுதலைப் புலிகளினா…

  9. களனி நகர சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக அந்தத் தொகுதியில் சுவரொட்டி பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனைக்கமையவே இந்த சுவரொட்டிப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கப்பம் பெற்றக் குற்றச்சாட்டின் பேரில் ”காணாமல் போனோர்” பட்டியலிலுள்ள களணி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது உயிரை பாதுகாத்துத் தருமாறு கோரி, பாதுகாப்புச் செயலாளரிடம் மண்டியிட்டுள்ளனர். இதன்போது அமைச்சர் மேர்வின் சில்வாவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட கப்பம் பெறுதல், ஊழல், மோசடி குறித்த பல சம்பவங்களை பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் இணை…

  10. 'புலம்பெயர்ந்த தமிழர்களை திருப்பி அனுப்புவதை பிரித்தானியா மீள் பரிசீலனை செய்யவேண்டும்' என யாழ். ஆயர் அதிவணக்கத்துக்குரிய தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் தலைமையிலான குழுவினர் யாழ். ஆயரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போதே யாழ்.ஆயர் இவ்விதம் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளானது போதுமானதாக இல்லை எனவும் மீள்குடியேற்றம் துரிதப்படத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயம் ஆண்டகை பிரித…

  11. யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை தனியே சந்திக்க விரும்பிய பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினரது முயற்சி வடக்கு மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் குறுக்கீட்டினால்; தடைப்பட்டுப்போயுள்ளது. எனினும் அரச உயர்மட்ட அறிவிப்பினாலேயே தனியான சந்திப்பு தடுக்கப்பட்டதாகவும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் இதனால் ஏமாற்றமடைந்ததாகவும் மேலும் தெரியவருகின்றது. குறிப்பாக ஜனாதிபதி மகிந்தவினால் ஆளுனருக்கு பிறப்பிக்கப்பட்ட நேரடி உத்தரவு காரணமாகவே அரச அதிபரின் தனிச்சந்திப்பு தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் யாழ் விஜயம் செய்திருந்ததாக அரச அதிபர் சுகுமார் தெரிவித்தார்.தமது யாழ் விஜயத்தின்போது …

  12. பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. இவற்றுள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படம் பதித்த தபால் முத்திரையும், தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன. எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம். இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும். http://www.eeladhesa...ndex.php?opti…

  13. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையிலுள்ள பல லட்சம் ரூபா பெறுமதியான இரும்புகளை வெட்டி எடுத்துத் தென்னிலங்கைக்குக் கடத்த எடுத்த முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. தகவல் ஒன்றையடுத்து காங்கேசன்துறையில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் இரும்பு ஏற்றப்பட்ட நிலையில் லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லத் தயார் நிலையிலிருந்த ஒரு தொகுதி இரும்பும், லொறியுடன் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இரும்பு கடத்த முற்பட்டவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, ஓடித் தலைமறைவாகிவிட்டனர் என்று ஒரு தகவல் தெரிவித்தது. உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள சீமெந்துத் தொழிற்சாலையின் பெரும் இயந்திரங்கள் இரும்புகளாக வெட்டப்பட்டுப் பல வ…

  14. கொலை வெறிப்பாடல் வெளிவந்ததை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலைஞர்களும், ரசிகர்களும் பல்வேறுபட்ட பாடலின் பதிப்புக்களை வெளியிட்டவண்ணம் உள்ளனர். அதன் புதிய வடிவமாக தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது. கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும் பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமை…

  15. வன்னி விளாங்குளம் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் விடுதி வசதி , மின்சார வசதி இல்லாததினால் தூரத்திலிருந்து வரும் ஆசியர்கள் வகுப்பறையில் படுத்துறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கணினிக் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 10 கணினிகளும் இயங்க முடியாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைப்பாடு குறித்து கவலையும் விசனம் தெரிவித்துள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விச்சமூகம் ஆகியோர் பாடசாலையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுமாறு சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேத்தில் வன்னி விளாங்குளம் என்னும் இடத்திலுள்ள அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து 11 வ…

    • 0 replies
    • 842 views
  16. அதிகரிக்கும் குற்றச்செயல்கள்; மர்ம மரணங்களின் பின்னணி என்ன? சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் புரையோடிப்போயிருந்த யுத்தம் முடிவுற்று நாட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், நாட்டின் பல பாகங்களிலும் ஆட்கடத்தல்கள்;, மர்மக் கொலைகள், கப்பம் பெறுதல் என குற்றச்செயல்கள் இடம்பெற்றே வண்ணமே உள்ளன. அண்மைக்காலமாக அரங்கேறி வரும் இச்சம்பவங்களால் பொது மக்கள் தினந்தோறும் பீதியுடனேயே காலத்தைக் கழிக்கின்றனர். சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து நடவடிக்கைகள், சிவிலுடை தரித்த பாதுகாப்புப் பிரிவினரின் கண்காணிப்பு என பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் வெள்ளை வேன் ஆயுததாரிகளால்…

    • 0 replies
    • 757 views
  17. ஏ- 9 வீதி அகலிப்பின் போது யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் உள்ள "யாழ்ப்பாணம் வரவேற்கிறது" வளைவு உடைக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவரவதாவது: தற்போது ஏ-9 வீதியை அகலிக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அகலிக்கும் போது, யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான செம்மணிப்பகுதியில் யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற வாசகங்களுடன் உள்ள வீதிவளைவினை உடைக்கவேண்டியிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். இந்த வளைவை உடைப்பதால் உண்டாகும் இழப்பினை ஈடுசெய்வதற்காக பிரதேச சபைக்கு பத்து இலட்சம் ரூபாவை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கமுன்வந்துள்ளது. எனவே வீதி அகலிப்ப…

  18. இன்று அதிகாலை 2.45 மணியளவில் கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைக்கழக நினைவுச்சிலை தகர்ப்புக்காக குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். சம்பவம் இடம் பெற்றதை தொடர்ந்து உடனடியாக பொலிஸ் அவசர சேவை பிரிவு (119) மற்றும் மிரிஹான பொலிஸூக்கு அறிவித்தும் இதுரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சஞ்சீவ பண்டார குற்றம்சுமத்தியுள்ளார். மேலும், சிலைக்கு பாரியசேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டனார். இத்தகைய செயலை சாதாரண மாணவர்கள் மேற்கொண்டிருக்க முடியாது எனவும் இச்சம்பவத்துடன் இராணுவத்தினருக்கு நேரடியாகவோ மறைமுகமாவோ தொடர்பு இருக்கவேண்டும் என தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்…

  19. தாயகத்தில் தமிழ் இனத்தை அடிமையாக்கி முழுமையாக அழித்துவரும் சிறீலங்கா அரசை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் செயற் திட்டம் ஒன்றிற்கு, கடந்த இரண்டரை வருடங்களாக பாரிய பணியொன்றை முன்னெடுத்துச் செல்லும் பிரித்தானிய தமிழர் பேரவை பரந்துபட்ட எம் தமிழ் மக்களை இச்செயற் திட்டத்தில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்றைய நிலையில், சர்வதேச தலையீடு ஒன்றின் மூலம் தான் எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. சிறீலங்காவில் இருக்கும் அரசியல் சூழ்நிலையில் பேச்சுவார்த்தை என்ற போலி நாடகம் மூலம் காலத்தை இ…

  20. “JUST A COUNTRY LAWYER” By Colombo Telegraph - “He did not complete his Advanced Level (“A levels”) education, instead leaving his job as a clerk at the library at Sri Jayawarendapura University in the Colombo suburbs in 1970 to run for his late father’s seat representing his native Hambantota in Parliament.” the US Embassy Colombo informed Washington. The Colombo Telegraph found the related leaked cable from the WikiLeak database. The cable is classified as “CONFIDENTIAL” details biographic details on Sri Lanka’s fifth President Percy Mahendra Rajapakse. The cable was written on November 21, 20045 by the US Ambassador to Colombo Jeffrey J. Lunstead. Un…

  21. சமீபத்தில் தங்காலைப் பிரதேசத்தில் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக தங்காலை பிரதேச சபை அதிகாரி ஒருவர் கைதாகியிருந்தார் என்ற செய்தி பரவலாக வெளியாகியிருந்தது. 32 வயதான ஷைக்கா சமான் என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நபராவார். அவரது காதலியான விக்ரோரியா அலெக்ஸான்டநோவா என்பவர் சம்பவ தினமன்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக மதுபான விடுதி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசானது நடந்த இச் சம்பவதை மூடிமறைக்க மதுபான விடுதியில் நடந்த தகறாரில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவரது காதலி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் தெரிவித்துவருகிறது. ஆனால் அங்கே நடந்த கதையோ வேறு. ரஷ்யப் பெண்ணான விக்ரோரியா அலெக்ஸான்டநோவாவின் துணிகளை உரிந்த சிலர் அவரைக் கற்பழித்த…

    • 4 replies
    • 1.2k views
  22. தேசத்துரோகி கருணா தொடர்பாகவும் அவர் பல பெண்களோடு வைத்துள்ள கள்ளத்தொடர்புகள் தொடர்பாகவும் பல முறை பல ஊடகங்களும் ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் 2012 ஆண்டு வரவேற்பு நிகழ்வின் போது கொழும்பில் உள்ள நச்சத்திர விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கருணா மது அருந்திவிட்டு பெண்களுடன் போடும் ஆட்டத்தை பாருங்கள். தன் இனத்தையே காட்டிக்கொடுத்து சிங்களவனின் எச்சி எலும்புக்காக வால் ஆட்டும் கருணா இது போன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுவதற்காகவே தன் இனத்தையே காட்டிக்கொடுத்தார் என்பது இப்போது தெளிவாகிறது. இனத்தைக் காட்டிக் கொடுத்த கருணாவின் இன்றைய முகம் - இதுதான் சிங்களம் தந்த பரிசா!? தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலமாக தன்…

    • 11 replies
    • 2.2k views
  23. களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பட்டிருப்பு சந்தியில் அமைந்துள்ள பலசரக்கு கடைகள், உணவகங்கள் என்பவற்றை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் முற்றுகையிட்டு பரிசோதனை செய்தனர். இவ்வாறு சோதனை செய்த போது அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பான (சோடா) வகைகளை பரிசோதனை செய்த போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குளிர்பான சோடா போத்தல் ஒன்றினுள் எலியின் மலம் காணப்பட்டது. இதே போன்ற இன்னு மொரு சோடாபோத்தலில் நுளம்புகள் காணப்பட்டன. பொது சுகாதார பரிசோத கர்களான எஸ். யோகேஸ்வரன் (களுவாஞ்சிகுடி பிரிவு), கே. இளங்கோவன் (களுதா வளை பிரிவு), கே. சிவசுதன் (செட்டி பாளையம் பிரிவு) ஆகியோர் களுவாஞ்சிகுடி போலீசாரு…

  24. யாழ். பொலிஸ் நிலையங்களில் நாளை முதல் தமிழில் முறைப்பாடு பதிவு யாழ்.குடாநாட்டு பொலிஸ் நிலையங்களில் இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பொதுமக்களின் பொலிஸ் முறைப்பாடுகள் மற்றும் நீதிமன்றத்திற்கான குற்றப்பத்திரிகை தமிழ் மொழியில் பதிவு செய்யப்படவுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி. இந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொதுமக்களின் முறைப்பாடுகள் சிங்கள மொழியில் பதிவுகள் செய்யப்பட்டு வந்தன. எனவே, யாழில் தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை தமிழ் மொழியில் பதிவதற்கான நடைமுறைகள் நாளை முதல் நட…

  25. யாழ்.கோண்டாவில் ஜப்பன் சுவாமி பக்தர்கள் நேற்றையதினம்(28.12.2011) நல்லூர் தியாகராஜ மகேஸ்வரன் மண்டபத்திலிருந்து கோண்டாவில் ஐயப்பன் ஆலத்திற்கு பாதயாத்திரையாகச் சென்றனர். 1ஆம் திகதி ஆரம்பமான ஐயப்பன் விரதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த ஐயப்பன் விரதத்தை அனுஷ்டிக்கும் பக்தர்களே நேற்று ஐயப்பன் சுவாமியுடைய ஆபரணங்கள் மற்றும் இரு முடிகளைத் தலையில் சுமந்தவண்ணம் ஐயப்பனுடைய பாடல்களையும், நாமங்களையும் பாடிய வண்ணம் பாதயாத்திரையாகச் சென்றனர். கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் நிறைவடைந்த இந்த பாதயாத்திரையின் பின்னர் அங்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இந்த யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். thx http://newjaffna.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.