ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
தமிழீழத் தேசியத் தலைவருக்கு இயக்குனர் சிவா அவர்களின் வாழ்த்து மற்றும் மாவீரர் நாள் சூளுரை . http://youtu.be/u35pp1t6Odc http://www.tamilthai.com/newsite/?p=94
-
- 0 replies
- 810 views
-
-
இன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள்! தமிழீழ விடுதலை என்ற புனித இலட்சியத்தினை தமது இதயக்கூட்டில் சுமந்தவாறு நமது தேசமெங்கும் களமாடித் தமது குருதியால் தமிழீழத் தேசத்தின் எல்லைகளை வரைந்த நமது தேசத்தின் புதல்வர்களின் நினைவுநாள்! விடுதலைப்போராட்டம் என்பது நெருப்பாற்றைக் கடப்பது போன்றது என்ற நமது தேசியத்தலைவரின் வார்த்தைகளுக்கு இணங்க தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம்; சந்தித்;த பல நெருப்பாறுகளை தமது அளப்பரிய வீரத்தாலும் ஈகத்தாலும் தாண்டி முன்னகர்ந்த அற்புதமான மனிதர்களை நாம் வணங்கும் நன்நாள். மாவீரர்கள் நமது தேசத்தின் இருளகற்ற ஓயாது ஒளிர்ந்த ஒளிவிளக்குகள். தமது அற்புதமான வாழ்வினூடாகவும் வீரச்சாவினூடாகவும் இவர்கள் தமிழீழ தேசத்தின் சுதந்திர வேட்கையினை உணர்த்…
-
- 0 replies
- 465 views
-
-
என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே, வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும் தலைமை அற்றிருந்த ஒரு காலத்தில் தனது ஆட்சிமையை இழந்திருந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, காலனி ஆதிக்கம் செய்த ஐரோப்பியர் வெளியேறியதும், இனப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு, இலங்கையில் நமதருமைத் தமிழினத்தின் மீது சிங்கள, பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் பூட்டிய அடிமைத் தளையை உடைத்தெறிய, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய விடுதலைப் படையில் தம்மை இணைத்துக்கொண்டு, அந்த மாபெரும் வீரப்போரின் வெற்றிக்காக தம்மையே ஈகையாகத் தந்த மாவீரர்களை உலகத…
-
- 0 replies
- 612 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய லீன் பாஸ்கோ விரைவில் இலங்கை விஜயம்! ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் லீன் பாஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விஜயம் அமையவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த செப்ரெம்பர் மாதம் சந்தித்து கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே லீன் பாஸ்கோ கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல…
-
- 0 replies
- 505 views
-
-
மாவீரர் தின நிகழ்வுகள்: படையினரின் மிரட்டல்கள் மக்களை அடிபணிய வைக்கப் போவதில்லை! - சுரேஸ் வடக்குக் கிழக்கில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிக்கக் கூடாது என சிறிலங்கா படைத்தரப்பினர் விடுத்து வருகின்ற மிரட்டல்களும் எச்சரிக்கைகளும் தமிழ் மக்களை ஒருபோதும் அடிபணிய வைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா படைத்தரப்பினரின் இத்தகைய மக்கள் விரோதச் செயல்கள் இனங்களுக்கு இடையில் பகைமை உணர்வை வளர்க்குமே ஒழிய, நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வரும்…
-
- 0 replies
- 453 views
-
-
கொழும்பு: சுதந்திர தமிழீழம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவு, தாகம். இந்த இனம் உள்ளவரை தமிழீழ தாகம் தொடரும் என்று விடுதலைப் புலிகள் தங்கள் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் நவம்பர் 26 மற்றும் 27-ம் தேதிகள் தமிழர்களின் சரித்திரத்தில் முக்கிய நாட்களாகப் பார்க்கப்படுகின்றன. நவம்பர் 26-ம் தேதி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள். அடுத்த நாள் தமிழீழத்துக்காக உயிர்த் தியாகம் செய்த போராளிகளின் நினைவாக மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் வழக்கமாக பிரபாகரன் தோன்றி உரை நிகழ்த்துவார். கடந்த மூன்று தினங்களாக விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் இந்த உரையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு மாவீரர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண…
-
- 0 replies
- 780 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011, 00:19 GMT ] [ கார்வண்ணன் ] சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கா விட்டால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்றும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. வெள்ளைக்கொடி வழக்கு முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அமைச்சர் ஒருவருடனான சந்திப்பின் போது அமெ…
-
- 4 replies
- 1.4k views
-
-
GTV நேரடி ஒளி பரப்பு மாவீரர் நாள் 2011 http://85.25.153.59/gtv நன்றி http://www.tubetamil...wtype==
-
- 2 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்தில் பல பகுதிகளில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளை போல், இம்முறை தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள், வடமேற்கு லண்டன் பகுதியில் கார்த்திகை 27, காலை 10.30 மணிக்கு .. Copland Community School Cecil Avenue Wembley Middlesex HA9 7DU எனும் மண்டபத்தில் ஒழுங்கு செய்யபட்டிருக்கிறது. முன்னதாக நிகழ்வுகள் நடைபெற இருந்த மண்டபம் சில காரணங்களினால், இம்மண்டபத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
- 1 reply
- 1.4k views
-
-
கார்த்திகை 27 மாவீரர்தினத்தில் ஆண்டவனுக்குக்கூடத் தடையா? நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. உணர்ச்சி மயம் எழுதியது: krishna on கார்த்திகை 26th, 2011 . . நவம்பர் 27 இல் அனுஷ்டிக்கப்படும் தமிழர்களின் ஒரே ஒரு பெருவிழாவான மாவீரர் தினத்தில் கோயில்களில் மணியடித்துப் பூஜை செய்வதற்கு அந்த ஆண்டவனுக்கே தடைவிதிக்கப்படுகிறது. போரில் மடிந்த வீரர்களுக்கு பூ வைக்க முடியாமல் துயிலும் இல்லங்கள் அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நாடாளுமன்றில் உணர்வு கொப்பளிக்கத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். நாடாளுமன்றில் நேற்று வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேல…
-
- 2 replies
- 892 views
-
-
அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வழங்கிய அறிக்கையின் நகல் அரசிடம் சிக்கியது; கொழும்பு அரசியலில் பரபரப்பு; தீர்வு முயற்சி பாதிக்கப்படும் அபாயம் அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே, வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும் தலைமை அற்றிருந்த ஒரு காலத்தில் தனது ஆட்சிமையை இழந்திருந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, காலனி ஆதிக்கம் செய்த ஐரோப்பியர் வெளியேறியதும், இனப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு, இலங்கையில் நமதருமைத் தமிழினத்தின் மீது சிங்கள, பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் பூட்டிய அடிமைத் தளையை உடைத்தெறிய, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய விடுதலைப் படையில் தம்மை இணைத்துக்கொண்டு, அந்த மாபெரும் வீரப்போரின் வெற்றிக்காக தம்மையே ஈகையாகத் தந்த மாவீரர்களை உலகத்…
-
- 0 replies
- 955 views
-
-
தமிழகப் பெண்கள் - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 57ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம். [saturday, 2011-11-26 13:58:47] தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 57ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழகப் பெண்கள் செயற்கள ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமையில் 100 பேர் குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழகப் பெண்கள் செயற்களம் 9094430334 , 9841268676
-
- 0 replies
- 1k views
-
-
கோயில் மணியடிக்கத் தடை: பிபிசிக்கு பேசியவர் வீடு தாக்கப்பட்டது விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் கொண்டாடப்படுகின்ற இந்த வாரத்தில் இலங்கையின் வடக்கே யாழ்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் மணியொலிக்க கூடாது என்று இராணுவம் தடை விதித்துள்ளதாக பிபிசிக்கு தெரிவித்த பிரதேச சபைத் தலைவரின் வீடு தாக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் தலைவரான வேலாயுதம் ஆனைமுகன் இராணுவம் இது போன்ற தடையுத்தரவை வழங்கியுள்ளதாக தமிழோசையிடம் நேற்று வெள்ளிக்கிழமையன்று குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவரின் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். எரிவாயு நிரப்பப்பட்ட போத்தல்கள் மூலம் சில நபர்கள் இத்தாக்குதலை நடத்தியதாகவும் அதில் அவரின் வீட…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்த தகுதியில்லை ; வணங்குகிறேன். வால்ட்டர் வில்லியம்ஸ் : நிறைவாகும் வரை, நீ மறைவாகவே இரு ; பலம் வாய்ந்த பகைவர்களின் படை அணிகளை எதிர்கொள்ளுகின்ற அளவுக்குப் பலம் பெறுகின்ற வரையிலும் மறைவாகவே இரு; இருப்பாய் விடுதலை நெருப்பு எங்கள் தமிழீழ மண்ணில் நெஞ்சமெல்லாம் பூத்து நிற்கும் வீரத்தோடு புலிப்படை நாள்தோறும் தலைவரின் ஆணைக்கு காத்து நிற்கும் படை கூடி எதிர்ப்பினை தமிழீழ மண்ணை எவனடா எவன் வெல்லுவான் பகைவனை கேளுங்கள் பலமுறை தோற்றவன் அவனே பதில் சொல்லுவான். அடிமைகள் தாய்மண் விடிவுறும் வரைக்கும் புலியின் அனல் விழி உறங்காது படை ஒரு கோடி எதிர்ப்பினும் காற்றில் பறக்கும் புலிக…
-
- 16 replies
- 2.2k views
-
-
பல்கலைக்கழகப் பக்கமாக வெடிச்சத்தம்!அதிர்ந்த யாழ் நகரம் 26.11.11 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பக்கமாக சற்று முன் வெடிச்சத்தங்கள் கேட்டன. இதனால் வீதிகளில் பயணிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது. அதேவேளை இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புறச் சூழல்களில் அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே இவ் வெடிச் சத்தம் வெடித்ததுடன், மக்கள் பதறியடித்தவாறு வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர். இரண்டாம் இணைப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளி வீதிகளில் தற்போது வாகனங்கள் சகிதம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பல்கலைக்கழகக் காவலாளியுடன் இராணுவ வீரர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடி தரணியெங்கும் தன்முனைப்புடன் வாழ்வது தானைத்தலைவன் வரவினாலே….! காலத்தால் அழியாத கல்லணை கண்ட கரிகாலன்… சரித்திரம் போற்றும் தஞ்சைப் பெருங்கோயில் அமைத்த ராசராசன்… ஈழஅரசமைத்து சிங்களத்தை சிதைத்த எல்லாளன்… யாழ்பாண இராச்சியம் ஆண்ட சங்கிலியன்… வணங்கா மண் வன்னியை மான்புடன் ஆண்ட பண்டாரவன்னியன்… ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தம்வீரத்தால் நல்லாட்சி தந்தவர்கள் அல்லவா இந்த மாமன்னர்கள். தடம்மாறிய பயணத்தால் ஈழத்தீவில் கால்பதித்தான் சிங்களன். பொருள்தேடி கடலோடிய மேலைத்தேயர்களது வருகை தாய் மண்ணை நிறம் மாற்றியது. வாள் கொண்டு வேல் கொண்டு எதிர்நின்ற பகை வென்று தரணியெங்கும் தமிழ்க் கொடி நாட்டிய வேந்தர்கள். இவர்க…
-
- 2 replies
- 2.1k views
-
-
ஜேர்மனியில் மாவீரர் படங்கள், நினைவு கல்லறைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு தீவைப்பு! Published on November 26, 2011-11:34 am · No Comments ஜேர்மனியில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலக மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக செய்யப்பட்ட கல்லறைகள், மற்றும் மாவீரர் படங்கள், துயிலும் இல்ல முகப்பு, தமிழீழ வரைபடம், மற்றும் சோடனைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு கடந்த இரவு சில விஷமிகள் தீவைத்துள்ளனர் என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜேர்மனி ரெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. முன்சன்கிளப் பார்க் ( கொமர்சியல் பார்க்) என்ற இடத்திலேயே விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தன. …
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் திடீரென புகுந்த பொலிசாரும் இராணுவத்தினரும் அங்கு துருவி துருவி விசாரணைகளை மேற்கொண்டனர். மூலை முடுக்கெல்லாம் தேடுதல் செய்தபின்னர் திரும்பியுள்ளனர். . மாணவர்கள் மாவீரர் நாளுக்காக மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்ற தகவலை அடுத்தே இந்த தேடுதலாம். ஆனால் அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை என்பதால் பொலிசார் தேடுதல் செய்த பின்னர் திரும்பி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. . பல்கலைக் கழகத்துக்குள் பொலிஸார் குவிக்கப்பட்டும் சூழலில் அயலில் இராணுவத்தினர் தயார் நிலையில் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டும் இருந்ததால் சிறிது நேரம் அந்தப்பகுதியில் பதற்றம் நீடித்தது. "பல்கலைக் கழகத்தினுள் நிலைமையை அவதானிப்பதற்காக யாழ்ப்பாண பொலிஸ் …
-
- 1 reply
- 1k views
-
-
தமிழீழ விடுதலைபுலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுக்காக புதிய தலைவர்களை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் பொறுப்பு என்று சர்வதேச பயங்கரவாத விவகாரம் தொடர்பான நிபுணர் றொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதனிடையே, ஐக்கிய நாடுகளில் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அழைக்காததன் காரணத்திலேயே, இறுதி நேரத்தில் அந்தக்குழு, தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரசார தகவல்களை மாத்திரம் வைத்துக்கொண்டு தமது இறுதி அறிக்கையை தயார்செய்ததா…
-
- 1 reply
- 770 views
-
-
தமிழீழத்தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் 57 வது பிறந்த நாளை முன்னிட்டு வன்னியில் இருந்து கவிஞர் சீராளனின் வாழ்த்துக் கவிதை “எமக்கென்றும் நீ வேண்டும் திரும்ப நீ வரவேண்டும்” வல்வையின் வடிவே: தமிழர் வாசலின் நிமிர்வே ஜயா! சொல்லிய திசையில் சுடரும் சூரிய தேவே! தழுவும் மெல்லிய காற்றே: பாசம் மேலிடும் ஊற்றே: உன்னை அள்ளியே அணைக்க ஆசை ஆவலோடு உள்ளோம் வாராய்! 00 அற்றைத்திங்கள் நீதான். அவ்வெண் நிலவும் நீதான் ஓற்றைக்காற்றும் நீதான், ஓண்டமிழ்க் குரலும் நீதான், கோற்றவைப் பிள்ளை நீதான், கொடியர சாள்வாய் நீதான், இற்றைவரைக்கும் நீதான், இனியும் இனியும் நீதான் 00 நேற்று நீ இருந்த…
-
- 14 replies
- 3.1k views
-
-
"தேசத்தின் சொத்து" தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 57வது அகவை நிறைவு நாளும் தமிழினத்தின் விடுதலையினை வென்றெடுக்கும் களத்தில் நடைபோடும் 58வது பிறந்தநாள் துவக்க நாளும் இன்றாகும். தம்பி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தலைவன் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சத்திலும் வீற்றிருந்து இரத்த நாளங்களிலும் சுவாசத்திலும் விடுதலை தாகத்தை கடத்திவருவதனால் அவரது பிறந்தநாள் உலகத்தமிழர்களது போற்றுதலுக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய நாளாக மாறிவிட்டது. இந்த பேறு பெற்றவர்கள் தமிழுலகில் இன்றளவும் யாரும் இல்லை என்றால் மிகையாகாது. இவ்வாறு சிறப்புப்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பிறந்தநாளாகிய இன்று தாய்த்தமிழக மக்கள் தன்னெழுச்சியுடன் கொண…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத்தமிழர் இதயத்தின் முழு முதலான வீரமகன் வாழியவே! தமிழன் வீரத்தில் வரலாறு எழுதிய வெற்றியின் நாயகன் வாழியவே! கண் தூங்கா விண்ணுயர் காவலனாம் கலங்கரை விளக்கம் வாழியவே! போராட்ட பரிமன் கூர் தீட்டி புதுமைகண்ட விஞ்ஞானி வாழியவே! நவீன சிந்தனையில் வரி தொகுத்த நாலடி விருத்தம் வாழியவே! தீமையின் கண்களுக்கு தீயான சிம்ம சொப்பனம் வாழியவே! அரசியல் செய்யாமல் அகிலம் வென்ற ஆளுமையின் சிகரம் வாழியவே! தன்நலன் கொள்ளா புதுமை கொண்ட தனித்தலைவன் வாழியவே! அளவில்லா ஆற்றல் கொண்ட நடமாடும் ஆதவன் நீ வாழியவே! சோவென்று மழைபோன்ற செருக்களத்தின் செயல் வீரன் வாழியவே! தந்தவனின் கடன் தீர என்றைக்கும் ம…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் 57 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் மக்கள் கொண்டாடியுள்ளனர். தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியதுடன் பல இந்து ஆலயங்களில் தலைவருக்கு நல்லாசி வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழவும் விசேட பூசைகள் நடைபெற்றன. இப் பூசைகளிலும் மக்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் இந்நிகழ்வுகள் இடம் பெற்றன. மேற்படி நிகழ்வுகள் தற்போது வெளிநாடொன்றில் தங்கியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டில் அவரின் ஆதரவாளர்களினால் …
-
- 0 replies
- 717 views
-
-
அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு விசேட அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பினர் ராஜாங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர். இந்த அறிக்கையின் ஒரு பிரதியே இப்போது இலங்கை அரசின்…
-
- 1 reply
- 1.2k views
-