Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மஹிந்தரின் ஆணைக்குழு அறிக்கையில் படையினர் போரின் இறுதிப்பகுதியில் பல தவறுகளைசெய்துள்ளதாகவும் ஆனால் அவறுக்கு சரத்பொன்சேகாவும் அவர்களின் கீழ் இருந்த சில கட்டளை அதிகாரிகளுமே காரணம் என கூறப்பட்டுள்ளதாம். . மஹிந்தரும் கோத்தாவும் தாம் தப்புவதற்காக சரத்பொன்சேகா மீதும் அவரது நெருங்கிய அதிகாரிகளும் பலிக்கடாவாக்கப்படுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதனை அறிந்துதான் சரத் பொன்சேகாவும் தேர்தலில் குதித்து வெற்றி வெற்று அரசியல்வாதியாகப் பார்த்தார். ஆனால் அவருக்கு நேரம் சரியில்லாமல் போய்விட்டது. . நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றம் புரிந்த படையினர்க்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என கூறப்பட்டு இருக்கின்றது.இதன்படி பொன்சேகாவிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இனிம…

  2. இலங்கைக்கு எதிராக மத்திய அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர் பாதுகாப்பு தொடர்பிலான கருத்துக்களை இலங்கை செவிமடுக்கத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இது தொடர்பில் மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டுமென ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன் மோகனிடம் கடிதம் ஊடாக கோரியுள்ளார். மீன…

  3. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையால் சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்கள் அதிகரிப்பு சிறிலங்காவை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகி வருவதாக கொழும்பு ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையைச் சமர்ப்பிக்க வழங்கப்பட்டுள்ள காலக்கெடு எதிர்வரும் 15ம் நாளுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த அறிக்கை எப்போது சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்பது குறித்த குழப்பமான தகவல்கள் வெளியாகின்றன. நவம்பர் 18ம் நாள் சிறிலங்கா அதிபரின் பிறந்த நாளன்று இந்த அறிக்கை கையளிக்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது. அதேவேளை, காலக்கெடு முடிந்த நான்கு நாட்களின் பின்னர் நவம்பர் 19ம் ந…

  4. இன்றைய சர்வதேச அரசியல் சூழ் நிலையில் தமிழ் மக்களின் அரசியற் பலம் எவ்வாறானது?!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜ திங்கட்கிழமைஇ 07 நவம்பர் 2011இ 07:48.32 யுஆ புஆவு ஸ தமிழ் மக்களுக்கு சர்வதேச அங்கீகாரம் எந்தளவுக்குத் தேவையானதோ அந்தளவுக்கு இலங்கையில் நகர்வுகளைக் செய்ய முயலும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தேவையாகவுள்ளது. தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் மிகப் பலமான தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது என்ற கவலை இலங்கைத்தீவிலும்இ புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தொடர்கின்றது. சர்வதேச சமூகம் தனது பூகோள அரசியல் நலன்களை பேணுவதற்காக புலிகளை அழிக்க வேண்டும் என்ற தேவை அதற்கு இருந்த நிலையில்இ இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்தின் துணைகொண்டு அழிப்பதற்கான சந்தர்ப்பம…

  5. மக்கள் எழுச்சி ஏற்படும்: ஐ.தே.க. எச்சரிக்கை செயற்பாடு குறைந்த நிறுவனங்கள் மற்றும் பயன்பாடு குறைந்த சொத்துக்களை சுவீகரித்தல் சட்டத்தை அறிமுகப்படுத்தல் போன்ற செயற்பாடுகளால் அரசாங்கம் ஜனநாயகத்தை மீறுமாயின் மக்கள் எழுச்சி ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. ஸிம்பாப்வேயில் எதேச்சதிகார ஆட்சியாளர் ரொபர்ட் முகாபேயும் அந்நாட்டின் சொத்துக்களை சுவீகரிப்பதற்கு இதுபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தியதாக ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று செய்தியாளர் மாநாடொன்றில் கூறினார். 1956 ஆம் ஆண்டு தனியாருக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள், பஸ் கம்பனிகள், சுரங்கங்கள் என்பன அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டபோது உள்நாட்டு தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது எனவும் தற்போத…

    • 1 reply
    • 1.1k views
  6. சுமனசிறிலியனகே- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- Minister Mervin with Kudu Lal இலங்கை அரசியலில் குற்றவாளிகளும் போதைப் பொருள் வர்த்தகளும் முக்கிய பங்கு வகித்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் பீட விரிவுரையாளர் சுமனசிறி லியனகே தெரிவித்துள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் முரண்பாடான நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள் குற்றவாளிகளைப் பயன்படுத்திக் கொண்ட காலம் மாறி தற்போது குற்றவாளிகளே நேரடியாக அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறைமை மற்றும் விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறைமை ஆகியன அரசி…

    • 2 replies
    • 744 views
  7. தமிழ் தேசிய எதிர்ப்பாளர் DBS ஜெயராஜ் வீட்டில் சுமந்திரன் டாரா ! [ Monday, 07 November 2011, 01:20.53 PM. ] manathan.com அமெரிக்கா சென்று அங்கிருந்து கனடாவுக்கும் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்கள் கனடாவில் DBS ஜெயராஜ் வீட்டில் தங்கியுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.விடுதலைப் புலிகளை படு மோசமாக விமர்சித்து சிங்களவர்களுக்கு சிலிர்ப்பூட்டும் செய்திகளை எழுதிவரும் மிக மோசமான ஊடகவியலாளர் DBS ஜெயராஜ் என்பது யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகளைப் பற்றி அவர் மோசமாக விமர்சித்தாலும் பரவாயில்லை அது அவர் விருப்பு வெறுப்பு என்று கூறிவிடலாம். ஆனால் தமிழ் தேசியத்தையும், தனி நாட்டுக்கோரிக்கையையும் பிழை என வர்ணிக்கும் இவரது வீட…

  8. திங்கட்கிழமை, 7, நவம்பர் 2011 (20:6 IST) 5 செய்தி இணைய தளங்களுக்கு இலங்கை தடை நாட்டு நலனுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 5 செய்தி இணையதளங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு ஊடக நிறுவங்கள் விமர்சித்துள்ளன. அமெரிக்க தூதரகம், இதனை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. இலங்கை சட்டப்படி, எந்த செய்தி நிறுவங்களையும் தடை செய்ய வழியில்லை என்றாலும், அவற்றின் மீது அவதூறு வழக்குதொடுக்கலாம். இருந்தபோதும், இலங்கை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் கனேகல, இந்தத் தடையை அறிவித்துள்ளார். இலங்கைச் செய்திகள் குறித்து எழுதும் எந்த ஒரு இணைய தளமும், இலங்கை அரசிடம் பதிவு ச…

    • 2 replies
    • 1.4k views
  9. அமெரிக்கா நுழைய சீமானுக்குத்தடை: காரணம் அவர் புலியாம் அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: உலகத் தமிழர் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள் அமெரிக்காவில் தங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதற்கான முறையான பயண அனுமதியும் அந்நாட்டு அரசிடமிருந்து பெற்று சீமானின் பயண ஏற்பாடுகளை உறுதி செய்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு சீமான் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சீமான் நியூயார்க் சென்று சேர்ந்தபோது, அவரை நாட்டிற்குள் …

  10. பிரபாகரன் மீது ஆணையாக வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன்: பதவியேற்பு விழாவில் பரபரப்பு Monday, 07 November 2011 13:07 உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்திய பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். அல்லது பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி …

  11. அவமானத்தில் முடிந்த சிறிலங்காவின் இராஜதந்திர வெற்றி - ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால்?!... [ Monday, 07 November 2011, 06:13.07 AM. ] சிறிலங்கா அதிபர், பிரித்தானிய மகாராணியாருக்கு கைலாகு கொடுக்கும் போது எடுக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட ஒளிப்படம், போலியானது என்பது உண்மையானால், சனல் 04 ஆவணப்படம் போலியானது, ஏமாற்றுத்தனமானது என்று சிறிலங்கா எப்படிக் கூறமுடியும்? என்று ‘தி நேசன்‘ வார இதழில் எழுத்தியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் ‘கலன சேனாரத்ன‘. பொதுநலவாய அமைப்பின் தலைவர்கள் ஒன்று கூடிய உச்சிமாநாடானது இந்த அமைப்பு 54 உறுப்பு நாடுகளிலும் இடம்பெறும் மனிதஉரிமை விடயங்கள் தொடர்பாகக் கையாள்வதற்கான திறனைக் கொண்டுள்ளதா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ள…

    • 0 replies
    • 1.2k views
  12. விடுதலைப் போராட்டம் தோற்றது எதனால்? – லண்டனில் காரணம் சொன்னார் சக்தி எப்எம் குணா! (விளாத்தியடி விண்ணாணம்) வணக்கம் பாருங்கோ, எப்பிடி இருக்கிறியள்? நல்லாய் இருக்கிறியளே? புதினங்கள் பல பல விதமாக வருகுது பாருங்கோ… நேற்றுப் பாருங்கோ லண்டனில கூட்டமைப்பின்ர தலைவர் சம்பந்தன் எதிர்காலத் தலைவர்எண்டு சொல்லிக் கொள்ளுற சுமந்திரன் அவையள் பங்கு கொண்ட கூட்டம் ஒண்டு நடந்ததெல்லே? அதில விசேசம் என்னண்டால் பாருங்கோ, அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்புரை செய்தவர் யார் தெரியுமே? தமிழினத்த பாரிய அழிவுப் பாதைக்குக் கொண்டு போன ரணில் விக்கிரமசிங்கவ தேசியத் தலைவராகக் கொண்டு செயற்படுற மகாராஜா நிறுவனத்தின்ர சக்தி வானொலியில பத்து வருசத்துக்கும் மேலாக பணியாற்றின குணா என்ற நபர் பாருங்கோ. அவர் பாருங்…

    • 2 replies
    • 2k views
  13. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் அலிஸ் ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த வாரம் எழுப்பிய கேள்வி தொடர்பில் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு இவ்வாண்டின் ஆரம்பத்தில் தான் மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான எந்த விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வில்லை என அவர்…

    • 1 reply
    • 789 views
  14. கிளிநொச்சி நகரில் பெரிய எழுத்துக்களில் இது கௌதம புத்தரின் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் இருப்பை அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தமிழ் மக்கள் காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகின்றது என “நாம் இலங்கையர்' அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொய்யான நடிப்பை புரிந்து கொள்வோம் என்ற தலையங்கத்தில் நாம் இலங்கையர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகளை அமைத்து பெரும் சத்தத்துடன் பிரித் பாராயண…

    • 2 replies
    • 1.1k views
  15. இலங்கையின் வடபுலமெங்கும் அடுத்துவரும் சில மாதங்களில் மீண்டும் பாஸ் நடைமுறைமையினை அமுல்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக தெரியவருகின்றது. வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து வரும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தவே இந்த பாஸ் நடைமுறைமை அமுல்படுத்தப்பட உள்ளதாக அரச தரப்பினில் கூறப்பட்டு வருகின்றது. ஏற்கனவே யாழ்.குடாக்கடலை அண்டிய குருநகர், பாசையூர், நாவாந்துறை மற்றும் கொட்டடி போன்ற மீனவ கிராமங்களில் படையினர் மீண்டும் பாஸ் நடைமுறையினை அமுல்ப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. நடந்து முடிந்த ஒவ்வொரு தேர்தல் காலப்பகுதியிலும் பாஸ் நடைமுறைமையினை இடைநிறுத்துவதாக அரசு உறுதி மொழிகளை வழங்கியே வந்திருந்தது. ஆனாலும் தேர்தலின் பின்னர் அவ்வறிவிப்புக்கள் …

  16. வன்னியில் தொடரும் ஆயுத முனைக் கொள்ளைகளின் பின்னணியில் படைத்தரப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வன்னியில் தொடரும் ஆயுத முனைக் கொள்ளைகளின் பின்னணியில் படைத்தரப்பை சேர்ந்தவர்களே இருப்பதாக சந்தேகிகப்படுகின்றது. நேற்று முன்தினம் (05.11.11) தினம் கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் இவ்வாறு ஆயுத முனைக் கொள்ளையொன்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு உருத்திரபுரம் பகுதியினில் அதே பாணியினில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர் அவலக்குரல் எழுப்பியிருந்த நிலையில் அங்கு வந்த கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் ஆகாயத்தை நோக்கியே வேட்டுக்களை தீர்த்திருந்த நிலையில் பொதுமக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்ல…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை புறக்கணித்தே வந்துள்ளனர் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சமுர்த்தி உற்பத்தி மற்றும் விற்பனைக் கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சிறிலங்கா பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர் என்பதற்கு நல்ல உதாரணம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஐரோப்பிய விஜயத்தின் போது கூட்டமைப்பைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப…

  18. ஜனாதிபதித் தேர்தல்களில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவையும் பின்னர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்தது தவறு என்று கூறியுள்ளது அளித்துள்ளது ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான போரைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததன் மூலம், தேசியப் பிரச்சினைகளை மஹிந்த அரசு புறந்தள்ள வாய்ப்பளித்து விட்டதாகவும் அது மகாதவறு என்றும் அந்தக் கட்சி முதல் தடவையாக நேற்று ஒப்புக்கொண்டது. இனிவரும் காலங்களில் யாருடனும் தேர்தல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவையும் அது அறிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. முழுமையான ஆதரவு தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு அவரது முக்கிய எதிரியாகப் போட்டியிட்ட, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவள…

  19. நிபுணத்துவ ஆலோசகருக்கு விண்ணப்பம் கோரியுள்ளது நோர்வே தூதரகம் _ வீரகேசரி இணையம் 11/7/2011 12:11:28 PM இலங்கைப் பத்திரிகை நிறுவனம் மற்றும் ஊடக வளங்கள் பயிற்சி மையம் ஆகியவற்றின் செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு நோர்வே தூதரகம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கென இலங்கையில் உள்ள நிபுணத்துவ ஆலோசகர் ஒருவரின் தேவையைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான விண்ணப்பத்தையும் தூதரகம் கோரியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுடைய பரிந்துரைகளையும் அதற்கான செலவினத்தையும் குறிப்பிட்டு இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேற்படி மீள்பரிசீலனை டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் 2012 பெப்ரவரி முதலாம் திகதி வ…

  20. கிளிநொச்சியில் இது கௌதம புத்தன் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் அரசாங்கம் 07 நவம்பர் 2011 இனவாதத்தை தூண்டுகின்றது - நாம் இலங்கையர் கிளிநொச்சி நகரில் பெரிய எழுத்துக்களில் இது கௌதம புத்தன் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் இருப்பை அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தமிழ் மக்கள் காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகின்றது என 'நாம் இலங்கையர்' அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொய்யான நடிப்பை புரிந்துகொள்வோம் என்ற தலையங்கத்தில் நாம் இலங்øகயர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெ…

  21. டியூனிஷியா, எகிப்து பாணி மக்கள் சக்தி தேவை: ஜே.வி.பி தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு டியூனிஷியா, எகிப்தில் நடந்ததைப் போன்று மக்கள் சக்தி பயன்படுத்தப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி. நேற்று வலியுறுத்தியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி. நாடாளுமன்ற குழுத் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, டியூனிஷியா போன்ற நாடுகளில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்கம் மக்கள் சக்தியினால் கவிழ்க்கப்பட்டது எனக் கூறினார். இலங்கையிலும் சர்ச்சைக்குரிய தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்தை வாபஸ் பெறச் செய்வதற்கு மக்கள் சக்தி பயன்படுத்தப்பட்டது என அவர் கூறினார். டியூனிஷியா…

  22. திங்கட்கிழமை, 07 நவம்பர் 2011, 01:57 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரும் நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மீது தாக்குதல் தொடுக்கத் தயாராகி வருவதாக கொழும்பு ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையைச் சமர்ப்பிக்க வழங்கப்பட்டுள்ள காலக்கெடு எதிர்வரும் 15ம் நாளுடன் முடிவடைகிறது. ஆனால் இந்த அறிக்கை எப்போது சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்பது குறித்த குழப்பமான தகவல்கள் வெளியாகின்றன. நவம்பர் 18ம் நாள் சிறிலங்கா அதிபரின் பிறந்த நாளன்று இந்த அறிக்கை கையளிக்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டது. அதேவேளை, காலக்கெடு முடிந்த நான்கு நாட்களின் பின…

  23. ஜனாதிபதித் தேர்தல்களில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவையும் பின்னர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்தது தவறு என்று கூறியுள்ளது அளித்துள்ளது ஜே.வி.பி. புலிகளுக்கு எதிரான போரைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததன் மூலம், தேசியப் பிரச்சினைகளை மஹிந்த அரசு புறந்தள்ள வாய்ப்பளித்து விட்டதாகவும் அது மகாதவறு என்றும் அந்தக் கட்சி முதல் தடவையாக நேற்று ஒப்புக்கொண்டது. இனிவரும் காலங்களில் யாருடனும் தேர்தல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவையும் அது அறிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. முழுமையான ஆதரவு தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு அவரது முக்கிய எதிரியாகப் போட்டியிட்ட, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது. தற்ப…

  24. லண்டன் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரைச் சந்திக்கவுள்ளனர். அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் லண்டனில் களமிறங்கினர். முற்பகல் 10.40 மணிக்கு ஹீத்துறூ விமான நிலையத்தில் வந்தடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை,ஆதரவாளர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்றனர்.மூன்று நாள்கள் லண்டனில் தங்கியிருக்கவுள்ள இவர்கள் இன்று திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரைச் சந்திக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.