ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
கனடாவில் புலி ஆதரவாளர்களின் பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை வீதியில் இறக்கிப் போராட்டங்களை மேற்கொள்வோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர இன்று கொழும்பில் ஆரவாரப்பட்டுள்ளார். இந்நிகழ்வில் தனித் தமிழீழத்தை வலியுறுத்தி கூட்டமைப்பினர் உரையாற்றியுள்ளனர். இவர்களை நாடு திரும்பியதும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=51564&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 1.1k views
-
-
இது என்ன கொடுமையடா? துரோகிகள் வரிசையில் இன்று முழுத் தமிழினமும் வெடகி தலைகுனிய வேண்டும்! பொய் பொய் பொய் இன்னும் எத்தனை பொய்கள்? போதும் உங்கள் பசப்புகள்.. மாவீரர்களை நாம் வணங்க இந்த சில்லறை பொறுக்கிகளிடம் போவதை விட ஒரு தேவாலயத்திலோ அல்லது கோயிலிலோ சென்று வணங்குவதே சாலச்சிறந்தது... இன்று மெயிலில் வந்த ஒரு பிரச்சாரம்... எச்சரிக்கை - எக்ஸல் மண்டபத்தில் இலங்கை அரசு ஒழுங்கு செய்து நடாத்தும் மாவீரர்தின நிகழ்வு தேசப்பற்றுடன் எத்தனையோ தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்த நாம், எமது விடுதலைப் போரட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடவின் சந்தர்ப்பத்தை பாவித்து எமக்குள் இருக்கும் பணம், பொருள், பெண மற்றும் பதவி ஆசைகொண்ட பலர் இப்போதுதான் தமது ஆட்டத்தைக் காட்டவெளிக்க…
-
- 9 replies
- 2.2k views
-
-
... நேற்றைய தினம் ஓர் நண்பர் வீட்டிற்கு சென்ற நேரத்தில், அவரது தாயாரிடமிருந்து, அவர் பிரான்ஸில் வாழ்பவர், தொலைபேசி அழைப்பு வந்தது, ... அவர் கதைத்துக் கொண்டிருந்த போது, தாயார் கூறினார் அவருக்கு ... ... "... எட தம்பி, இங்க புலியள்(?) கொரில்லாத்தாக்குதல்களை தொடங்கீட்டினமாம்! ... .... நேற்று இங்கு வாள்/கத்தி/பொல்லுகளால் மூண்டு பேரை முடிக்க பார்த்தவங்களாம்??? அதுவும் சன நடமாட்டம் உள்ள இடத்தில் பூந்து விளையாடி இருக்கிறாங்களாம்!!! ..... இனி அங்கு புலி அழிந்து போட்டுது என்ற கவலைகளை விட வேணும், இப்பவெல்லாம் பல வெளிநாட்டுக்காரங்கள் புலியளில் சேருகிறாங்களாம், ......... இது அதை கவர் பண்ணும்! எடேய் இங்கு நடந்த உந்த பேய்த்தின ஊடறுப்புத்தாக்குதல்களும் செய்தது வெளிநாட்டுக்கார…
-
- 5 replies
- 2.1k views
-
-
குறிப்பு: ஈசன் என்பவரை கனடா உலகத்தமிழர் இயக்கமே நியமனம் செய்து கொண்டது. அது மாத்திரமின்றி உலகத்தமிழர் பத்திரிகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர்களுக்கு முதலிடமும் கொடுக்கப்பட்டது. இதன் பின்னணியல் யார் உள்ளனர்? இவர் ஒரு புளோட் உறுப்பினர் என்பதும், சித்தாத்தனின் நெருங்கிள சினேகிதனும் ஆவர், இவரின் கடந்தகால செயற்பாட்டின் காரணமகா விடுதலைப்புலிகள் அமைப்பால் தண்டனை பெற இருந்தவர் என்றும், அதில் இருந்து தப்பியவரும் ஆவார். இவர் தற்போது கனடாவில் புலத்தில் என்னும் பத்திரியையை நடாத்தி வருவதும். உலகத்தமிழர் இயக்கத்தின்; ஆதரவுடன் புலிதோல் போத்த சிங்கம் இன்று தமிழ் தேசியத்தை சிதறடித்து வருகின்றது என்பது உண்மை. தேசியத்தலைமையின் நம்பிக்கையிலும், மாவீரரின் தியாகத்திற்கு…
-
- 2 replies
- 1.3k views
-
-
கடாபியின் படுகொலையும் சிறிலங்கா அரசின் இரட்டை நிலைப்பாடும் [ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 07:33 GMT ] [ நித்தியபாரதி ] puthinappalakai கடாபியின் மரணம் தொடர்பாக விளக்கம் தரவேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்தமையானது மறைமுகமாக இது தொடர்பாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதைக் குறிக்கின்றது. இவ்வாறு சிறிலங்காவில் ஊடக சுதந்திரத்திற்காக போராடும் Groundviews இணையத்தளத்தில் ஊடகவியலாளர் Sunanda Deshapriya தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, முஅம்மார் கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இன்றுவ…
-
- 0 replies
- 670 views
-
-
சம்பந்தன்- பான் கீ மூன் சந்திப்பு – கடைசிநேரத்தில் கைவிடப்பட்டது ஏன்? Thursday, November 3, 2011, 16:43 ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் நியுயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பான் கீ மூனுடனான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டதால், ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரச் செயலர் லைன் பாஸ்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது போருக்குப் பிந்திய …
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகளின் மனிதவள அபிவிருத்தி தொடர்பான தரப்படுத்தலில் நோர்வே முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளதுடன், கொங்கோ ஜனநாயக குடியரசு இறுதி இடத்தினைப் பெற்றுள்ளது.செழிப்பு, கல்வியின் தரம், ஆயுள் ஆகியவற்றின் அடிப்படையில் 187 நாடுகள் இதன்கீழ் தரப்படுத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து, கனடா, அயர்லாந்து, லிஸ்டன் ரைன்ஸ், ஜேர்மனி, சுவிடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஜப்பான், ஹொங்கொங், தென் கொரியா, சிங்கப்பூர், ஆகிய ஆசிய நாடுகளும் அதிஉயர் மனிதவள அபிவிருத்தி கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மத்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மக்களுக்கு நிகரான உரிமை பெற்றவர்களாக முஸ்லிம்களும் வாழ வேண்டும்: கனடாவில் சம்பந்தன் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு சர்வதேசம் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதை நாம் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் சகல உரிமைகளுடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கனடாவில் தெரிவித்தார். கனடாவின் ஸ்காபுறோ நகரிலுள்ள ஐயப்பன் ஆலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்த…
-
- 1 reply
- 785 views
-
-
பொது நலவாய நாடுகள் சபையில் சிறிலங்கா அரசாங்கமானது நடந்துகொண்ட விதத்தினை தமிழர் எதிர்ப்பு பத்திரிகையான த ஹிந்து பாராட்டியுள்ளது. பொது நவாய நாட்டில் மனித உரிமை குழு அமைக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை காட்டிய எதிர்ப்பையே அது பாராட்டியுள்ளது. . சிறிலங்கா மற்றும் இந்தியா இதன்போது செயற்பட்ட விதம் பாராட்ட தக்கது என ஹிந்து செய்திதாளின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவை தெரிவித்த போதிலும் இலங்கை காட்டிய எதிர்ப்பை தொடர்ந்து, ஏனைய நாடுகளும் அதனை எதிர்த்தனை எனவும் சுட்டிகாட்டியுள்ளார் ஹிண்டு ஆசிரியர் மூலம்
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐ.நா உதவிச் செயலருடனேயே தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு – பான் கீமூனை சந்திக்கவில்லை: 03 நவம்பர் 2011 இலங்கை அரசு வழங்கிய கடுமையான இராஜதந்திர அழுத்தத்தையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெற வில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் அந்தஸ்திலுள்ள உயரதிகாரியான லிங்க் பாஸ்கோவைச் சந்தித்த தமிழ்க் கூட்டமைப்பினர் அவருடன் பேச்சுகளை நடத்திய பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்திருக்கின்றனர். முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்தித்துப் பேசுவதற்குப் பூர்வாங்க …
-
- 2 replies
- 533 views
-
-
மழையுடன் கூடிய காலநிலை மாத இறுதிவரை தொடரும் எம்.நேசமணி வீரகேசரி தேசிய நாளிதழ் 11/3/2011 11:24:05 AM நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மாத இறுதிவரை தொடரும் என்றும் மன்னார் மாவட்டத்திலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலைய அதிகாரி ஆனந்த ஜயசிங்க வீரகேசரிக்குத் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் கடந்த முதலாம் திகதியே அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மன்னாரில் அன்றைய தினம் 103.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் நேபொடை களுத்துறையில் 76.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் யாழ்ப்பாணத்தில் 56.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34709
-
- 0 replies
- 716 views
-
-
முல்லைத்தீவு சங்கிலிப் பாலத்தில் காணி அபகரிப்பு! – சிவசக்தி ஆனந்தன் Thursday, November 3, 2011, 12:19 முல்லைத்தீவு சங்கிலிப் பாலத்தில் காணி அபகரிக்கப்பட்டு மண்நிரப்பப்படுவதாகவும், இதனால் அந்தப் பகுதியில் பல்வேறு சூழல் பாதிப்புகள் ஏற்படுவதுடன், விவசாயச் செய்கை மற்றும் தொழில்துறை பாதிப்பும் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அமைப்புக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு மாவட்டம் முல்லைத்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முல்லைத்தீவு தெற்கு கிராம அலுவலர் பிரிவின் முல்லைத்தீவு பரந்தன் வீதியை சின்னகல்லாறு குறுக்கறுக்கும் இடத்தில் அமைந்துள்ள சங்கிலிப் பாலத்துக்கு அண்மையில் அண்ண…
-
- 0 replies
- 580 views
-
-
மஹிந்தவின் பிறந்த நாளில் வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு Thursday, November 3, 2011, 11:14 சரத்பொன்சேகாவிற்கு எதிராக தொடரப்பட்ட வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு இந்த மாதம் 18 ஆம் திகதி அறிவிக்கப்படுகின்றது. இதே திகதிதான் மஹிந்தவின் பிறந்த நாள் ஆகும். தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது எப்போதே தீர்மானிக்கப்பட்டதொன்று அது மஹிந்த குடும்பத்திற்கு சார்பாகவே வரும் ஏனென்றால் வழக்கை நடத்திய நீதிபதிகள் குழுவின் தலைவர் திபாலி விஜேசுந்தர மஹிந்த குடும்பத்தின் நெருங்கிய நண்பர். . நீதிபதி திபாலியின் மகளின் திருமனத்தினை மஹிந்தவே அண்மையில் நடத்தி வைத்துள்ளார். ஆகவே தீர்ப்பு எப்படி இருக்கும் என எல்லோரும் ஊகிக்கலாம். இதே வேளை கோதாபய ராஜபக்ஷ வழக்கை விசாரணை செய்த நீதியரசர்கள் கு…
-
- 0 replies
- 800 views
-
-
கூட்டமைப்புக்கு சர்வதேசத் தோல்வி; நியூயோர்க்கில் இருந்து சவேந்திர சில்வா ஐ.நா. செயலர் பான் கீமூனைச் சந்திக்கவுள்ளனர் என பெருமை கூறித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, அவரைச் சந்திக்க முடியாமல் போனது சர்வதேச ரீதியில் ஏற்பட்ட படுதோல்வியாகும். இந்தத் தோல்வியை கூட்டமைப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு நியூயோர்க்கிலிருந்து நேற்று இரவு உதயனுக்குத் தெரிவித்தார் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அமெரிக்காவில் வைத்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்த…
-
- 0 replies
- 845 views
-
-
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நாளை மறுதினம் 5 ஆம் திகதி லண்டனில் களமிறங்குகின்றனர். லண்டனில் மூன்று தினங்கள் தங்கியிருக்கும் இவர்களுக்கு நெருக்கமான நிகழ்ச்சிநிரலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிட்டன் கிளை தயாரித்துள்ளது.நாளைமறுதினம் 5 ஆம் திகதி காலை லண்டன் செல்லும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலர் மாவை சேனாதிராசா, சுமந்திரன், சுரேஸ் பிரமச்சந்திரன் ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்பர். அன்று மாலை கூட்டமைப்பின் பிரிட்டன் கிளை உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெறும். தொடர்ந்து 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு…
-
- 0 replies
- 653 views
-
-
முன்னாள் புலிப் போராளிகள் வீடு திரும்புவதற்கும், புதுவாழ்வை தொடங்குவதற்கும் அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும். இது மிகமிக அவசியமாகும். அவர்களின் அவசரத் தேவைகளை நிறைவுசெய்வதற்கான பணியை குடியேற்றத் திட்ட நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. முன்னாள் போராளிகள் தங்கள் வாழ் வாதாரங்களை மேற் கொள்வதற்கும், வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான அடித்தளத்தை இந்நிறுவனம் அமைத்துக் கொடுக்கும். இவ்வாறு நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் நோர்வே தூதுவர் ஹில்டி ஹெரல்ட் ஸ்டெட் பேசுகையில் தெரிவித்தார்.கொழும்பு நோர்வே தூதரகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நோர்வே தூதுவர் ஹில்டி ஹெரல்ட் ஸ்டெட்டும், குடியேற்றத் திட்ட நிறுவனத் தலைவர் ரிச்சார்ட் டென் ஜிக்கரும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில…
-
- 0 replies
- 486 views
-
-
50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இலங்கை ரூபா மதிப்பில் ஒவ் வொருவருக்கும் தலா ரூபா 5 இலட்சத்து 50 ஆயிரம் (இந்திய ரூபா மதிப்பில் 2 லட்சத்து 45 ஆயிரம்) வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக ரூபா 1,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்க ளுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க இந்திய அரசு உறுதியளித்தது. இதன்படி தமிழர் பகுதிகளான மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் பகுதி யில் 1,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட…
-
- 0 replies
- 717 views
-
-
[ வியாழக்கிழமை, 03 நவம்பர் 2011, 00:29 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்துக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்று பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய இராணுவத்தின் உயர் கட்டளை கற்கைநெறியைப் பயிலும் அதிகாரிகள் குழுவே வன்னிக்குச் சென்றுள்ளது. இந்திய விமானப்படையின் அதிகாரியான எயர் கொமடோர் பி.ஆர்.நவல்கர் தலைமையிலான இந்தக் குழுவில் 16 இந்திய இராணுவ அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஆறுநாள் பயணத்தின் ஒரு கட்டமாக இந்தக் குழுவினர் வன்னிப் படைகளின் தலைமையகம், ஆட்டிலறிப் பாடசாலை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பணியகம், மற்றும் பல தொல்பொருள் ஆய்வு, வ…
-
- 1 reply
- 691 views
-
-
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2011, 00:05 GMT ] [ கார்வண்ணன் ] மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான ரஸ்யாவின் கஸ்பரோம் நிறுவனம் முன்வந்துள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்த தகவல் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான ஆய்வுகளுக்காக கஸ்பரோம் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவொன்று விரைவில் சிறிலங்கா வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மன்னாரில் எரிவாயு உற்பத்தியில் கூட்டாக இணைந்து செயற்பட கஸ்பரோம் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விருப்பம் வெளியிட்டிருந்தது. கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பு வந்த கஸ்பரோம் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினர் சிறிலங்கா அரச…
-
- 0 replies
- 596 views
-
-
மன்னாரில் எண்ணெய் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட ரஷ்யாவிலிருந்தும் நிபுணர் குழுவாம் – சுசில்! Published on November 3, 2011-5:24 am மன்னார் கடல் பரப்பில் எண்ணெய் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடவென ரஷ்யாவிலிருந்து விசேட நிபுணர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு தெரிவிக்கிறது. ரஷ்யாவின் ‘சர்வதேச காஸ்போர்ம் நிறுவனத்துடன் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இன்னும் மூன்று வாரங்களில் குறித்த நிறுவனத்தின் விசேட தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை வரவுள்ளனர். நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ள அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ரஷ்ய அரசுடனும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான ரஷ்ய அரச…
-
- 0 replies
- 376 views
-
-
பொதுநலவாய மாநாடு இலங்கைக்கு வெற்றியா? _ ஜீவா சதாசிவம் /வீரகேசரி இணையம் 11/3/2011 10:44:11 AM 'கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்ற கதையாகத்தான் இன்றைய இலங்கை அரசாங்கத்தின் நிலை இருக்கின்றது. ஆம், போர்க்குற்றச்சாட்டுக்கள் அல்ல எந்தவொரு குற்றச்சாட்டுக்கள் எம்மீது சுமத்தப்பட்டாலும் கூட நாம் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடிபணியப்போவதில்லை என்பதனையே ஆளுந்தலைமை உட்பட அரசாங்க அமைச்சர்கள் அனைவரினதும் கருத்தாக இருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நடத்திய ஊடகவியலாளர் மாநட்டில் பொதுநலவாய மாநாட்டில் இலங்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று பெருமிதம் அடைந…
-
- 0 replies
- 506 views
-
-
அரசாங்கம் வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை குடியேற்றவில்லை – உதயகாந்த 03 நவம்பர் 2011 அரசாங்கம் வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை குடியேற்றவில்லை என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் சிரேஸ்ட துணைச் செயலாளர் பீ.எம்.பீ. உதயகாந்த தெரிவித்துள்ளார். சிங்கள மக்களுக்கு அதிகளவில் காணிகளை வழங்கி சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கி;ழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்னம் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 20000 ஏக்கர் காணிகள் சிங்கள மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக துரைரட்…
-
- 0 replies
- 474 views
-
-
அமெரிக்கா என்ன செய்யப் போகிறது? இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?இந்தக் கேள்வியும் இதற்குத் தேடவேண்டிய பதிலும் இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக - ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சூழல் இது. இந்தப் பத்தி எழுதப்பட்ட போது, வோஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது தெரியாத ஒரு பின்னணியில், அதைச் சார்ந்து இந்தப் பத்தி எழுதப்படுகிறது. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தீர்க்கமானதொரு பங்கை வகிக்க…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் தென்னிலங்கையில் பெரும் உணர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கூட்டமைப்பு அமெரிக்காவுடன் எது குறித்துப் பேசப் போகின்றது என்பது தமிழ் மக்களுக்கே தெரியாது. அது மாத்திரமல்ல, அமெரிக்காவுக்குத் தெரியாத இலங்கை விவகாரம் இருக்குமா? என்பது கூட சந்தேகமே. எனினும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் முதற் கொண்டு பல தரப்பினர் கூட்டமைப்பினரின் அமெரிக்க விஜயத்தை இனவாதமாக்கி இலங்கையின் இறைமைக்கு எதிராக கூட்டமைப்பும் அமெரிக்காவும் சதி செய்வதாகவும் தென்னிலங்கை மக்களுக்கு பூதாகரமாக்கி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். போதாததற்கு சிங்கள ஆங்கில நாளிதழ்களும் இந்த இனவாதத்திற்கு எண்ணெய் வார்த்து தென்னிலங்கை மக்களை அரசியல்வாதிகள…
-
- 1 reply
- 728 views
-
-
கூட்டணியின் தொடர்கதை பாகம் - 2 அதாவது 1965 - 1980 இடைப்பட்டகாலங்களில் தமிழரசு கட்சிக்காரர்கள் அரசியல் பொது மேடைகளில் சுதந்திரம்இ உரிமைப்போராட்டம்இ விடுதலை பற்றி முழங்கும் போது நாங்கள் போரடத்தொடங்கினால் எங்களுக்காக ரஷ்சியா வரும். இந்தியா வரும் நாங்கள் பலமான பக்கத்துணை வைத்திருக்கின்றோம் என்று முழங்குவார்கள். நாங்கள் அப்போது சின்னவர்கள். அதைக்கேட்டு கைதட்டி ஆர்ப்பரிப்போம். இவர்களின் முழக்கம் அடுத்த ஆண்டில் தமிழீழம் கிடைத்திடும் போல எண்ணிவிடுவோம். பின்னர் தமிழர் கூட்டணிஆகி ஆயுதப்போராட்டமாகி அழிந்த கதை வேறு. இப்போது ஆயுதப்போரட்டம் முற்றுப்பெற்ற நிலையில்இ திரும்பவும் கூட்டணித்தொடர்- 2 ஆரம்பமாகியுள்ளது. அதே வழி வந்த மனிதர்கள் தான். திரும்பவும் 1957களில் இருந்து தொடங்குக…
-
- 1 reply
- 815 views
-