ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
நாம் தேர்தலுக்கு மக்களிடம் செல்லும் போது ஒற்றுமையை பற்றி பேசுகின்றோம். உணர்வுபூர்வமாக எமது உரிமைக்காக, விடுதலைக்காக ஒன்றுபடுங்கள் ஐக்கியப்படுங்கள் என மேடைகளில் பேசி வரும் நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அந்த ஒற்றுமையை கட்டிக்காக்கின்றோமா என்றால் அதில் நாம் தோல்வி அடைந்திருக்கின்றோம் தோல்வி அடைந்து வருகின்றோம் என்றே கூற வேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியிலும் ஓற்றுமையின்மை இருந்து வருகின்றது. இவற்றை நாம் நிவர்த்தி செய்தேயாகவேண்டும். இல்லையேல் எந்த தீர்வையும் தமிழ் மக்களுக்கு எம்மால் பெற்றுக்கொடுக்க முடியாது போய் விடும் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் வினோ தெரிவித்தார். தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் …
-
- 0 replies
- 766 views
-
-
பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மா நாட்டில் இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ? 16 அக்டோபர் 2011 அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் (கொமன் வெல்த்) தலைவர்கள் உச்சி மா நாட்டில், கனேடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹாபரினால் இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங் கள் குறித்த விவகாரத்தை இந்த மாநாட்டில் எழுப்ப ஹாபர் உறுதியாக இருப்பதனால் கொமன்வெல்த் மாநாட்டில் பிளவுகள் ஏற்படலாம் என கனடாவில் இருந்து வெளியாகும் திகசட் என்ற பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறு…
-
- 0 replies
- 392 views
-
-
பிரான்சில் ஜீ.எல்.பீரிசின் ஊடகவியலாளர் சந்திப்பை அந்நாட்டு ஊடகவியலாளர்கள் புறக்கணித்துள்ளனர்? 16 அகடோபர் 2011 பிரான்சுக்கு கடந்த புதன் கிழமை விஜயம் செய்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பை பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் புறக்கணித்துள்ளனர். இதனால், அந்த ஊடகவயலாளர் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது. 12 ஊடக நிறுவனங்களுக்கு, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரே ஒரு ஊடகவியலாளர் மாத்திரமே கலந்துக்கொண்டார். பிரான்ஸ் சென்றிருந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியின் வெளி…
-
- 0 replies
- 654 views
-
-
வல்வெட்டித்துறை நகரசபையின் உப தலைவர்; தனது பதவியில் இருந்து ராஜினாமா Sunday, October 16, 2011, 14:42 யாழ்.வல்வெட்டித்துறை நகரசபையின் உப தலைவர் கே.சிவாஜிலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா சற்று முன்னர் தெரிவித்தார். இவர் ராஜினாமா கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தன்னிடம் இது பற்றித் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிவாஜிலிங்கத்தின் ராஜினாமாவையடுத்து, விருப்பு வாக்கின் அடிப்படையில் நகரசபையின் உப தலைவர் நியமிக்கப்படுவர் எனவும் தேர்தல் ஆணையாளர் கூறியுயதாகவும் தெரிவித்துள்ளார். http://www.tamilthai.com/?p=28548
-
- 0 replies
- 541 views
-
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் மன்ற தலைவர் மீது தாக்குதல் Sunday, October 16, 2011, 16:20 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவர் மன்ற தலைவர் தவபாலன் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலையில் கடுமையான தாக்குதலுக்குள்ளான 24 வயதுடைய தவபாலன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கந்தர்மடம் பகுதியினூடாக வந்துகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் தவபாலன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இத்தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilthai.com/?p=28554
-
- 1 reply
- 397 views
-
-
இலத்திரனியல் பதிவுக்குள் இலங்கையர்கள் வீரகேசரி இணையம் 10/16/2011 2:12:21 PM இலங்கையர் அனைவரையும் இலத்திரனியல் பதிவுக்கு உட்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென தேசிய இலத்திரணியல் பதிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்பதிவுகளை மேற்கொள்வதற்கென 14.5 பில்லியன் ரூபாக்கள் செலவிடப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக சகலரும் மேற்படி நடைமுறையின் கீழ் இலவசமாக உள்வாங்கப்படவுள்ளனர். இது இலங்கையிலுள்ளவர்களின் விபரங்கள் உள்ளடக்கிய தேசிய இலத்திரனியல் பதிவு ஒன்றையே பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்ளவுள்ளது. நாட்டின் எதிர்கால நலன் கருதியே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் ஏற்கனவே ஜுலை மாதம் …
-
- 0 replies
- 550 views
-
-
ஜேர்மனி சிறுமி இலங்கையில் துஷ்பிரயோகம் _ வீரகேசரி இணையம் 10/16/2011 4:11:11 PM ஜேர்மனியிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சிறுமியொருவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ள சம்பவமொன்று பெந்தோட்டைப் பகுதி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஹோட்டல் ஊழியரொருவரையும் கைது செய்துள்ளனர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=34385
-
- 0 replies
- 587 views
-
-
காதலனால் கடலில் தள்ளிவிடப்பட்ட காதலி! நீந்தி வந்து கரையேறிய அதிசயம்!! ஊர்காவற்றுறைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந் நிலையில் இவர்கள் இருவரும் இரகசியத் திருமணம் செய்வதற்காக நெடுந்தீவுப் பகுதிக்குச் செல்லத் தீர்மானித்திருந்தனர். இதன்படி அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பிளாஸ்ரிக் படகு மூலம் நெடுந்தீவுக்கான பயணத்தை ஆரம்பித்தனர். இதனிடையே தனது காதலனுடன் இரகசியத் திருமணம் செய்ய நெடுந்தீவுக்குப் புறப்படுவதற்கு முன் குறித்த பெண் தனது வீட்டில் இருந்த 75 ஆயிரம் ரூபாய்களையும், 25 பவுண் நகைகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். எனவே இதனை அபகரிக்கும் திட்டத்துடன் காதலனும், பிளாஸ்ரிக் படக…
-
- 4 replies
- 1.5k views
-
-
[saturday, 2011-10-15 12:43:33] வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவினது மீள்குடியேற்ற பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இலங்கையைச் சேர்ந்த எந்தத் தமிழரும் வெளிநாட்டுப் புலிகளுக்கு பணம் அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களும் தெரிந்தவன் நான் மட்டுமே. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராகச் சர்வதேசம் யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமானால் அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலி…
-
- 19 replies
- 1.6k views
-
-
சிட்னியில் நடக்கவிருக்கும் அவுஸ்த்திரேலிய தமிழ்க் காங்கிரஸின் மாநாடு அவுஸ்த்திரேலியா சிட்னி நகரில் வருகிற வியாழனன்று அவுஸ்த்திரேலியத் தமிழ்க் காங்கிரஸின் அனுசரணையுடன் மாநாடு ஒன்று நடைபெறவிருக்கிறது. அதில் இந்திய ரோ வின் முன்னால் ஆலோசகர் பேராசிரியர் சூரிய நாராயணன், முன்னால் ஜே வி பி அரசியல்க்குழு உறுப்பினர் போபல்லகே, மெல்பேனைச் சேர்ந்த சிங்கள ஆனால் தமிழ் ஆதவுப் பேராசிரியர், மூன்று மலேசிய தமிழ் அரசியல் பிரமுகர்கள், உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வணக்கத்துக்குரிய ஜே. இம்மானுவேல் அடிகள், தமிழ்நாட்டைச் சேநர்ந்த அரசியல் பிரபலங்கள் இன்னும் சில உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் அறிஞர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். ஆர்வமுள்ளவர்களைப் பங்கேற்குமாறு அவுஸ்த்திரேலிய தமிழ்க் காங்கிரஸின் உறு…
-
- 0 replies
- 485 views
-
-
தனது உடற்பயிற்சி வைத்தியரான ஈலியந்த வைட்டிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் சிகிச்சை பெறவுள்ளார். இதற்காக இந்தியப் பிரதமர் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளார் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பின்னர் தனக்கு நெருக்கமான ஊடகவியலாளரிடமே இந்தத் தகவலை வெளியிட்டார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியப் பிரதமரின் வருகைக்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் அண்மையில் இலங்கை வந்திருந்தார் எனவும் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்திருந்தார். மூலம்
-
- 5 replies
- 1.3k views
-
-
அரசியல் தீர்வை உடன் முன்வைக்க வேண்டும் மாவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடனேயே செயற்படுகின்றது. எனினும், அரசு ஒருமித்த கருத்துடன் செயற்படுகிறதா என்பது சந்தேகமே. கூட்டமைப்புக்குத் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையையும், சர்வதேசத்தின் எதிர்பார்ப்பையும் கருத்திற்கொண்டு அரசே தீர்வை விரைந்து முன்வைக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றுத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த கருத்துடன் பேசுவதற்கு முன்வரவேண்டும் என நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக…
-
- 1 reply
- 728 views
-
-
[saturday, 2011-10-15 21:24:50] யாழ்.குடாநாட்டில் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகள் ஆதாரங்கள் மூலம் தமக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்: எனக்கு கடிதங்களாகவும், சீடிகள் மற்றும் தகவல் மூல ஆவணங்களாகவும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, தயவு செய்து பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் முதலில் அதை நிறுத்துங்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்தால் பெண்கள் அமைப்புக்களை அணிதிரட்டி…
-
- 2 replies
- 1.5k views
-
-
யேர்மனியில் நடந்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் வழக்கும் அதன் பின் ஒழிந்திருக்கும் உண்மையும் - நேர்காணல் திரு விராஜ் மென்டிஸ் (சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமன்) பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் வெளிநாட்டு வியாபாரச்சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியாளர்களில் சசி, செந்தில் ,அகிலன் ஆகிய மூவர் கடந்த புதன்கிழமை யேர்மனிய நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பல ஆதரங்களையும் சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் வீடியோப்பதிவும் நீதிமன்றில் சமர்ப்…
-
- 1 reply
- 631 views
-
-
அரசியல் அழுத்தத்தினால் தனது பாதுகாப்புச் செயலாளர் பதவியைத் துறந்தான் சிங்களப் பயங்கரவாதிகளின் நண்பன் - லியாம் பொக்ஸ் சிங்களப் பயங்கரவாதிகளுடனான தனது நெருங்கிய உறவு, தனது நண்பனை தனது அரசியல் பயணங்களில் சேர்த்துக்கொண்டமை, சிங்களப் பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக தான் ஆரம்பித்த போலியான நிதிக்கட்டமைப்பு, ஒருபால் புணர்வு தொடர்பாக தனக்கெதிராக இங்கிலாந்து மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் ஊகங்கள் என்பவற்றின் அழுத்தம் காரணமாக இந்தச் சிங்களப் பயங்கரவாதிகளின் நண்பன் நேற்று வெள்ளிகிழமை தனது பதவியைத் துறந்தான். தனது அரசியல் நடவடிக்கைகளில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அறிந்தே இடம் கொடுத்ததன் மூலம், தன்னைப்பற்றிய தவறான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் வருவதற்கு தானே காரணாமைவிட்டதால் தன…
-
- 10 replies
- 1.4k views
-
-
கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று இரண்டு தினங்கள் செல்லும் முன்னர், தான் உள்ளிட்ட தமது குடும்பத்தினர் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு முன்னாள் இராணுவ தளபதியும், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், வோஷிங்டனில் உள்ள ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி கேபிள் தகவல்களை அடிப்படையாக கொண்டு, அந்த இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் நோக்கி செல்லவே சரத் பொன்சேக்கா கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இலங்கை படையினர் அவர் தங்கியிருந்த விடுதியை சுற்றிவளைத்திருந்ததுடன், அவர் போய் வரும் இடங்கள்…
-
- 0 replies
- 787 views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்று கனேடியப் பிரதமர் கொடுத்து வரும் அழுத்தங்களால் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் பிளவுகள் ஏற்படலாம் என்று கனேடிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 28ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர், இந்த விவகாரத்தை எழுப்பவுள்ளார். சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் தமக்குத் திருப்தி தராது போனால் 2013இல் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர் கூறியுள…
-
- 5 replies
- 901 views
-
-
Defence Secretary Liam Fox has resigned. He has been under pressure after a week of allegations over his working relationship with friend and self-styled adviser Adam Werritty. In a letter to David Cameron, Mr Fox said he had "mistakenly allowed" his personal and professional responsibilities to become "blurred". The BBC's political editor Nick Robinson said Mr Cameron concluded Mr Fox could no longer continue. The defence secretary has faced allegations about his links to his former flatmate Adam Werritty after it emerged that the lobbyist had accompanied him on 18 foreign trips despite having no official role. Mr Fox was being investigated …
-
- 12 replies
- 1.3k views
-
-
சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 36 வயதான ஜேசுதாஸன் என்பவர் உயிரிழந்து விட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதனையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.. கொழும்பு, விளக்கமறியல் சாலையில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், இரு தினங்களுக்கு முன்னர் நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டார் என பொலிஸ் ஊ…
-
- 1 reply
- 976 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் நோர்வே அமைச்சரான எரிக் சோல்ஹெய்மை அண்மையில் சந்தித்து ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்தார். அத்துடன் இனப்பிரச்சினை தொடர்பில் சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புக் குறித்தும் விளக்கியிருந்தார். இந்த நிலையில், சிறிலங்கா அரசின் அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர் எரிக் சோல்ஹெய்மை நேற்றுச் (14) சந்தித்துள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. . சிறிலங்கா அரசினால் ‘வெள்ளைப் புலி’ (சுது கொட்டியா) என அழைக்கப்படும் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
“The order read thus “Pursuant to Fed. R. Civ. P. 4(f)(3), Plaintiffs’ [6] Motion for Service by Publication or Alternative Means is GRANTED IN PART. Plaintiffs are authorized to complete service upon the Defendant in his personal capacity by December 27, 2011 by publishing in two Sri Lankan newspapers with the largest national circulation three times per week on a staggered schedule to cover six days each week for a period of four weeks and by posting the full summons and complaint on the main page of the TamilNet website. Plaintiffs shall file proof of service upon Defendant by publication by December 27, 2011. Plaintiffs’ motion is DENIED to the extent it seeks to serv…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலம் பெயர் நாடுகளை நோக்கிப் பொன்முட்டைகள் : சுதர்சன் வரலாறு தெரிந்த காலம் முதல் வளரும் தலைமுறை சமூகவிரோதச் சிந்தனை அனைத்தையுமே நியாயமான வாழ்க்கை முறை என்று கேட்டே முதுமை கொள்கிறது. பெரும் வியாபார நிறுவனங்களின் கொள்ளையை நயம் மிக்க வியாபாரத் தந்திரம் என்று விதந்து போகிறார்கள். அத் திருட்டுக்கள் சமூகத்தின் பொதுச் சிந்தனையாகிவிட்டது. அளவுக்கு அதிகமான நுகர்வையும் ஆடம்பரக் கொள்வனவையும் திறமை என்கிறார்கள். இவ்வாறான வரையறைக்குள் சமூகத்தைப் பேணிக்கொள்ளும் அரசியலையே ஜனநாயகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதங்களை மட்டுமே நம்பியிருக்கும் வன் முறை செயற்பாடாக மாற்றமடைந்த போது கூட ஒடுக்கு முறை உருவாக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
(செய்தி தொகுப்பு – இளந்தி -15/10/2011) தமிழக மீனவர்களைத் தாக்கும் சிறிலங்கா கடற்படை புத்தம் புதிய துணைப் படையை உருவாக்கியுள்ளது. அதற்கு சோமாலியா பைறேற்ஸ் (Somalia Pirates) என்று பெயரிடப் பட்டுள்ளது. சிங்களக் கரையோர மக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர்கள் இந்தக் துணைப் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சோமாலியா பைறேற்ஸ் என்றால் கடற் கொள்ளையர்கள் என்று பொருள். சோமாலியா நாட்டுக் கடற் கொள்ளையர்களைப் போல் சிறிலங்கா கடற்படை உருவாக்கியுள்ள துணைப் படையும் கடற்கொள்ளையில் ஈடுபடுகிறது. சர்வதேசச் சட்டத்தின் கீழ் கடற்கொள்ளை ஒரு பாரிய குற்றச் செயல். அதைச் செய்வதும், ஊக்குவிப்பதும், கொள்ளை நடவடிக்கைக்கு உதவுவதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்தச் சூழலில் கடற் கொள்ளையர் அணியை உர…
-
- 0 replies
- 1.6k views
-
-
வல்வெட்டித்துறை நகரில் அமைக்கப்படும் புதிய விகாரைக்கான பணிகளை நிறுத்த வத்திக்கானுக்கு வேண்டுகோள்:- 15 அக்டோபர் 2011 வல்வெட்டித்துறை நகரப்பகுதியினில் படைத்தரப்பால் அமைக்கப்பட்டுவரும் புதிய விகாரைக்கான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்;கம் வத்திக்கானுக்கு அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார். வரலாற்றுப்பெருமை மிக்கதும் மூன்று நூற்றாண்டுகளை கடந்ததுமான வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் தேவாலயத்தின் முன்பதாகவே இவ்விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஒரிரு தினங்களாக படையினர் முழுவீச்சினில் இந்நிர்மாணப் பணிகளினில் ஈடுபட்டுவருகின்ற நிலையிலேயே கே.சிவாஜிலிங்க…
-
- 5 replies
- 753 views
-
-
கனடாவில் சிறீலங்கா சுற்றுலா கண்காட்சி ரத்து! [saturday, 2011-10-15 11:15:20] ஓக்டோபர் மாதம் 16ம் 17ம் திகதிகளில் மிஸிஸாகா நகரில் உள்ள லிவிங் ஆர்ட்ஸ் மண்டபத்தில் நடக்கவிருந்த சிறீலங்கா அரசின் சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சி காரணங்களின் அறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இத் தகவலை மிஸிஸாகா நகர பொலீஸார் இன்று கனடிய தமிழர் பேரவைக்கு தெரிவித்தனர். எதுவித காரணங்களின் அறிவிப்புமின்றி மேற்படி கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் கனடிய தமிழரின் ஒருங்கிணைந்த எதிர்ப்பும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் புறக்கணிப்பு ஆர்ப்பாட்டமுமே முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அரசியல் ஆர்வலர்களால் கருத்துத் தெரிவிக்கப்பெற்றுள்ளது. இக் கண்காட்சி ரத்து செய்யப்பட…
-
- 2 replies
- 803 views
-