ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 03:21.51 PM GMT ] திருகோணமலையில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்கின்றது. திருகோணமலை நகர்ப் பகுதியில் உள்ள பெரும்பாலான இராணுவக் காவலரண்கள் அகற்றப்பட்டிருந்தும் ஒருநாளுக்கு நான்கு தடவைகளுக்கு மேல் இவர்கள் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புலிகளை அழித்துவிட்டோம் என நாடாளுமன்றத்தில் மார் தட்டிக் கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தற்போது யாரை அழிப்பதற்காக இராணுவத்தை நடுவீதியில் நடக்க விட்டிருக்கின்றார்? இதேவேளை மேற்குலக நாடுகளை ஏமாற்றும் பொருட்டு நாட்டில் உள்ள அனைத்து இன, மத மக்களும் பயமின்றியும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய நிலையில் உள்ளனர் என்றும், தற்போது அபிவிருத்திப் …
-
- 5 replies
- 1.2k views
-
-
பதற்றமான பிரதேசங்களில் அதிரடிப்படை குவிப்பு Saturday, October 8, 2011, 10:15 இன்று நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலையிட்டு பல வாக்களிப்பு நிலையங்களில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என தேர்தல்கள் தொடர்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். பதற்றம் நிறைந்த பகுதிகள் என இனங்காணப்பட்ட பிரதேசங்களிலேயே விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். விசேடமாக, கொலன்னாவ, வெல்லம்பிட்டி,ராஜகிரிய, நுகேகொட, கல்கிஸ்ஸ – தெஹிவளை, அநுராதபுரம், காலி, மாத்தறை உட்பட பல பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலைங்களிலேயே விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அதிகளவு பொலிஸாரும் குவ…
-
- 0 replies
- 502 views
-
-
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு எச்சரிக்கை! Published on October 8, 2011-1:50 am காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் உரிய தரத்தினைக் கொண்டிருக்காமை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை நேற்று உத்தியோகபூர்வமாக எச்சரித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிகெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலி மைதான ஆடுகளத்தின் தரம் தொடர்பில் அதிப்தி தெரிவித்துள்ளதுடன் இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பின்னர் போட்டி நடுவரான கிறிஸ் பிரொட் சர்வதேச கிரிக்கெட் பேரவைய…
-
- 0 replies
- 651 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக சுவிஸ் பாராளுமன்றில் தமிழன் குரல். லுசர்ன் (LUZERN) மாநில பாராளுமன்ற உறுப்பினராக உள்ள லதன் சுந்தரலிங்கம் அவர்களை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.வருகிற ஐப்பசி 23 நடக்க உள்ள சுவிஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் SP கட்சி சார்பில் போட்டியிடுகிறார் எனும் செய்தியை எமது உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அன்பான லுசர்ன் (LUZERN) வாழ் தமிழ்மக்களே உங்களின் வாக்கு அட்டைகள் சென்றவாரம் தபால் மூலம் கிடைக்க பெற்று இருபீர்கள் என நம்புகிறோம்.அவற்றை எமது குரல் பாராளுமன்றத்துக்கு வெளியில் அல்ல, உள்ளே ஒலிக்க பயன்படுத்துவோம்.எமது வரலாறு தந்த இந்த ஈடுஇணையற்ற வாய்ப்பை எமது முழுமையான பங்களிப்பிநூடாக நிறைவேற்…
-
- 6 replies
- 1.7k views
-
-
2011ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவுசெலவுத்திடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சமர்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கவெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஹெகலிய ரம்பக்கவெல இதனை அறிவித்தார். வரவு செலவுத்திட்டத்துக்கு முன்னரான உத்தேச மதிப்பீட்டு அறிக்கையை 18ஆம் திகதி பிரதமர் டி.எம் ஜயரட்ன நாடாளுமன்றத்தில் வாசிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த நிதியாண்டுக்குரிய உத்தேச செலவினம் 2220பில்லியன் எனவும் மூலதன செலவீனம் 1111பில்லியன் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 938பில்லியன் ரூபாவாக இருந்தது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். உத்தேச வருமானம் 1115பில்லியன் எ…
-
- 1 reply
- 841 views
-
-
கொழும்பு மக்களை வன்னியில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் காணப்படும் 90000 வீடுகளை உடைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், வாக்காளர்கள் அரசாங்கத்திற்கு நல்ல பாடகம் புகட்ட வேண்டுமென இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமாயின் இந்தத் தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குஆதரவாக்க வாக்களிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக் குழு என்பதுராஜபக்க்ஷ பாசறையின் அழுக்கைக் கழுவும் இயந்திரம் எனக் கூறியுள்ளார் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவரான போதல ஜயந்த. ரிஆர்ரி சிங்கள வானொலிக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் அந்த வானொலிக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 ஒளிபரப்பிய ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணக் காணொளியை நிராகரிப்பதற்கான எந்தவித விளக்கத்தையோ அடிப்படை ஆதாரத்தையோ தெரிவிக்காமல் உடனடியாகவே இந்த ஆணைக்குழு நிராகரித்துள்ளது. மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் நண்பர்களைக் கொண்ட குழாமே இந்த ஆணைக் குழுவாகும். ஆகவே, இந்தக் ஆணைக் குழுவிடமிருந்து பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 675 views
-
-
வாய்ப்பாட்டு மற்றும் நுண்கலை கற்கும் மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் நோக்கோடு தமிழர் புனர்வாழ்வுக்கழம் பிரான்ஸ் ஆண்டு தோறும் நடாத்தி வரும் ராகமாலிகா, இராகசங்கமம் இசைத்திறன் போட்டி நிகழ்ச்சி 2011. ஒட்டோபர் 8ம் 9ம் திகதிகளில் (சனி ஞாயிறு) இலக்கம் 50 Rue de Torcy 75018 Paris (Metro : Marx Dormoy ) மண்டபத்தில் நடைபெறுகின்றது. எமது கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டுமானால் இளம் தலைமுறைக்கு கலைகளை கற்பிக்கவேண்டும். கற்கின்ற மாணவர்களுக்கு பல மேடை நிகழ்வுகளை ஏற்பாடுசெய்து ஊக்குவிக்கவேண்டும். கலை ரசனையும், சமூகக்கரிசனையும் கொண்ட மக்கள் பெரும்திரளாக வருகைதந்து சிறப்பிக்கவேண்டும் அப்பொழுதுதான் எமது கலைகள் தளைத்தோங்கும். அந்த வகையில் புலம் பெயர்ந்த மண்ணில் எமது அடுத்த தலை…
-
- 0 replies
- 586 views
-
-
சிறிலங்காவில் தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களுக்கு வரையறைக்குட்பட்ட காவற்றுறை அதிகாரத்தைவழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கிற்கு காவற்றுறை மற்றும் காணிஅதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்திவந்தது. ஆயினும் அவ்வாறான அதிகாரங்களை வழங்குவதற்கு அரசதரப்பினர்களிடையே எதிர்ப்பு இருந்து வந்தது. இதனிடையே வடக்கு கிழக்கிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவினாலான அதிகாரத்தை வழங்குவது குறித்து அரசாங்கம்ஆலோசித்து வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர்சந்திப்பின் போது சிறிலங்கா அமைச்சரவைப…
-
- 2 replies
- 1k views
-
-
யாழ். அரியாலைப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் சாந்தமோகன் (வயது 37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர் இவர் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து வாழ்பவர் எனவும் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். thx http://www.newjaffna.com
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆணித்தரமான, ஆனால் உறுதியான செய்தி அது - தாயகத்திலிருந்து ராசேந்திரன் முள்ளிவாய்க்கால் கரை மௌனமாகிய நாளில் இருந்து எல்லோருமே மௌனமாகி விட்டார்களோ என்று ஏங்கும் அளவுக்கு இங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் இடங்களிலும் அடர்ந்த மௌனமே நிலவியது. அச்சம் தரும் மௌனம் இது. எங்களின் விடுதலைப்போர் மூச்சு இழந்து போய்விட்டதோ என்று நானும் என்னைப் போன்ற பலரும் நித்தமும் எமக்குள்ளேயே மௌனமாக கதறுவோம். வாழ்நாளில் இனி எமது இனம் எழுந்துவிட்டது என்ற செய்தியை கேட்காமலேயே மரித்துப்போய் விடுவோமோ என்று இரவுகளில் கண்ணீர் சிந்தி இருக்கிறேன். ஆனால் எல்லா இரவுகளும் ஒருநாள் விடிந்தே தீரும் என்ற நம்பிக்கை இப்போது மெதுவாக முளைவிடத்தொடங்கியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி ஜெனீவாவில் நடைபெற…
-
- 5 replies
- 1.9k views
-
-
சிறுமிகளை எங்கு அழைத்துச் செல்கிறார்கள்? திடுக்கிடும் தலைநகரத் தகவல்கள். Friday, October 7, 2011, 10:19 பானு, வயது 13 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புறக்கோட்டை பஸ்நிலையத்தில் இரவு எட்டு மணியளவில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறாள். அதிகம் பேசாமல் சோர்ந்த முகத்தோடு காட்சியளித்த அவளுக்கருகில் பானுவின் அம்மாவும் இருக்கிறார். அன்று உலகளாவிய ரீதியில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த அக்டோபர் முதலாம் திகதி. “மகளுக்கு வீடொன்றில் வேலை வேண்டும். வேலை இருந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அந்த நாய்களுக்கு என் மகள் தீனியாகிவிடுவாள்” – இது பானுவின் தாய் வெளிப்படுத்திய வார்த்தைகள். நாய்கள் எனச் சுட்டிக்காட்டியது யாரை என்பது கேள்விக்குறியானது. யாரோ ஒருவரால் அல்லது ஒ…
-
- 1 reply
- 1k views
-
-
நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணசபைத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு கனடாவில் தேர்தலில் வாக்குரிமை பெற்ற மக்களில் வாக்களிக்கும் மக்கள் சராசரியாக 40 தொடக்கம் 60 வீpதத்தினரே. மிகுதியான வாக்காளர்கள் தேர்தல் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இதிலே தமிழ் மக்கள் அதிகமானளவிற்கு வாக்களிக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார்கள். இதில் இருதமிழர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கி இருந்தார்கள். சண் நீதன் என்டீபி கட்சி சார்பாகவும், சண் தயாபரன் கொன்சவேட்டிவ் கட்சி சார்பாகவும் தேர்தலில் நின்றிருந்தார்கள். தமிழர்கள் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் தமிழ்கள் வாக்குத் தமிழர்களுக்கே என்ற ரீதியில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் தேர்தலில் வெற்றபெறமுடியவில்லை. இதற்குக்காரணம் கட்சி…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிலம் பறிபோகிறது அதை தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்று தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு வருகை தந்த தினக்குரல் ஆசிரியர் சென்னை எக்மோரில் நடைபெற்ற உரையாடல் களம் நிகழ்வில் கலந்து கொண்டு போருக்குப் பிந்தைய இலங்கையும் ஊடகங்களும் என்ற தலைப்பில் பேசும் பொழுது இவ்வாறு தெரிவித்தார். இலங்கைத் தமிழர்கள் இன்று அரசியல் ரீதியான பலத்தை இழக்கும் ஒரு அபாய நிலையைத்தான் இலங்கை அரசு உருவாக்கி வருகிறது என்று குறிப்பிட்ட அவர் தமிழ் பேசும் மக்களுக்காக சிங்கள முற்போக்கு சக்திகள் யாரும் குரல் கொடுக்க முன்வரவில்லை என்றும் கருணாரட்ன போன்றவர்கள் குரல் கொடுக்கும் பொழுது அதை சிங்கள மக்கள்…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சந்தித்துப் பேசவுள்ளார். அத்துடன் அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன் உட்பட மேலும் சில தமிழ்த் தலைவர்களையும் சந்திப்பார் இதேவேளை ஈ.பி.டி.பி கட்சியினரையோ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையோ அவர் சந்திக்கமாட்டார் என இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூலம்
-
- 0 replies
- 918 views
-
-
நேற்று இரவு இந்திய மீனவர்களின் சுமார் 540 இயந்திர படகுகளை சிறிலங்காவின் நான்கு கடற்படை கப்பல்கள் சுற்றி வளைத்திருந்தது. சர்வதேச கடல் எல்லையில் சுமார் 15 மணித்தியாலங்கள் அவர்களை மீன்பிடிக்க விடாது தடுத்து வைத்திருந்தனர். ஆனால் அந்தப்பகுதிக்கு வந்த இந்திய கரையோர காவல் படையினர் வந்து பார்த்துவிட்டு உடனடியாக திரும்பி சென்று விட்டனர். மீனவர்களை என்ன நடக்குது என்றும் கேட்கவில்லை தம்மை மீட்கவும் உதவவில்லை என கூறியுள்ளனர் தமிழ் நாட்டு மீனவர்கள். தமிழக மீனவர்களுக்கு சிறிலங்கா கடற்படையும் ஒன்றுதான் இந்திய கடற்படையும் ஒன்றுதான் என்பதனை எப்போது உணர்வார்கள். மூலம்
-
- 2 replies
- 1.4k views
-
-
சாவின் விளிம்பில் நிற்கும் ஜெகதீஸ்வரன் நிலமை மோசமாகிக்கொண்டு போகிறது. ஆனாலும் விலங்குடன் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது விடுதலை தொடர்பாக பலவித முயற்சிகள் செய்தும் சரியான பலன் எட்டவில்லை. இவ்விடயத்தினை மனிதவுரிமை அமைப்புகள் மனிதவுரிமை ஆர்வலர்களுக்கு அனுப்பி ஜெகதீஸ்வரனின் உயிரைக் காக்க உதவுங்கள். உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பி ஜெகதீஸ்வரனின் உயிரைக்காப்பதோடு இத்தகைய நிலையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் மீட்சிக்கு உதவுங்கள். அனுப்ப வேண்டிய கடிதத்தின் ஆங்கில வடிவம் வருமாறு:- To all Human Rights Organizations Protect life of Tamil Political Detainee who is fighting for his life due to affect in the both kidneys. …
-
- 0 replies
- 666 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான வேட்பாளரான மிலிந்த மொறகொடவிற்கு ஆதரவு வழங்கும் முகமாக பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச ஒக்ரோபர் 03 அன்று கொம்பனித் தெருவிற்கு வருகை தந்தமை தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் தான் முறைப்பாடு செய்துள்ளதாக ‘ராவய’ பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் செயற்பாட்டாளருமான லசந்த றுகுனேஜ் [Lasantha Ruhunage], பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேசியாவிடம் தெரிவித்துள்ளார். “மிலிந்த மொறகொட வெற்றியீட்டுவதற்கேற்ப மக்கள் தமது வாக்குகளை வழங்கவேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கேட்டுக் கொண்ட…
-
- 0 replies
- 1.4k views
-
-
மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்டவர்களில் தமிழீழ விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றத் தடுப்புப் பிரிவால் இது குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா தப்பிச் செல்லவிருந்த 37 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் குறித்த 6 பேரும் இனங்காணப்பட்டதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் பல தீவிரவாத செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். http://www.saritham.com/?p=36827
-
- 0 replies
- 653 views
-
-
இலங்கைக்கு மூன்று நாள் விஜயமாக நாளை கொழும்புக்கு வரும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி அதிகார வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியிருக்கவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நாளை மறுதினம் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தை, போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற…
-
- 0 replies
- 761 views
-
-
பிரித்தானியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் நேற்று பிரித்தானியபிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அத்துடன் அவர்கள் தமது பிரச்சினைகள் குறித்த மகஜர் ஒன்றினையும் பிரித்தானிய பிரதமரிடம் கையளித்துள்ளனர். பிரித்தானியாவில் கல்வி பயிலும் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் விசேடமாக, தாம் கல்வி பயிலும் பல கல்வி நிறுவனங்களைப் பிரித்தானிய அரசு மூடி விடுவதற்கு எடுத்த தீர்மானமானது, தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை மீண்டும் செயற்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மகஜரில் கூட்டிக் காட்டப்பட்டுள்ள…
-
- 0 replies
- 983 views
-
-
இலங்கையின் கொலைக் களங்கள் விவரணம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிடப்படவுள்ளது சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக்களங்கள் விவரணம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் திரையிடப்படவுள்ளது. எதிர்வரும் 12 ஆந் திகதி புதன்கிழமை, மதியம் ஒரு மணிக்கு விவரணம் திரையிடப்படும். அதனைத் தொடர்ந்து, குழுநிலை விவாதமும் இடம்பெறும். மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, ஐவெநசயெவழையெட ஊசளைளை புசழரி ஆகிய அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து, விவரணத்தைத் திரையிடவுள்ளன. நாற்பதாயிரம் வரையான பொதுமக்களின் கொலைகளைத் தடுப்பதில் அனைத்துலக சமுகம் தவறியமை குறித்த பாரதூரமான கேள்விகளை இந்த விவரணம் எழுப்புவதாக அந்த ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
குரும்பசிட்டியில் மீள் குடியமர அனுமதித்த பகுதியில் இராணுவத்தினரின் புதிய காவலரண்கள்!(படங்கள்) Published on October 7, 2011-3:27 am வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் பாடசாலை மற்றும் 4 கோவில்கள் அடங்கலாக 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதி மீள் குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு குரும்பசிட்டியிலுள்ள பொன். பரமநாதர் வித்தியாலயத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க, அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள்கலந்து கொண்டனர். குரும்பசிட்டியின் J/242, J/243 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளே விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பகுதி மு…
-
- 0 replies
- 678 views
-
-
வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசு மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான புதிய வழிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் இன்று அறிவித்துள்ளதாக ஏ.எவ்.பி செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சிவில் உரிமைகள் பலப்படுத்தப்படுவதோடு சிறந்த மனித உரிமைகளுக்கான புரிந்துணர்வுடன் கூடிய இணக்கப்பாட்டினை காண முடியுமென சிறிலங்கா அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த செயற்திட்டம் குறித்து எதுவித விவரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஆனால், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு சட்டமீறல்கள் குறித்து கண்காணிக்கப்படுவதுடன் சிறந்த புரிந்துணர்வுடனும் கௌரவத்துடனும் சிவில் உரி…
-
- 1 reply
- 1.2k views
-
-
சமூகத்தில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதிலும், சமூகத்துடன் மீள இணைவதிலும் நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதாக முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். படையினரின் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிட்டுள்ளதாகவும் சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் போது 11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்திருந்தனர். இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக…
-
- 2 replies
- 542 views
-