Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. யாழ் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது வழக்கறிஞர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கண்டறிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். கொழும்பு களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. யாழ். கள்ளியங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சின்னவன் என்று அழைக்கப்படும் ரட்ணசிங்கம் ரட்ணகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். வழக்கறிஞர் ஒருவர் குகநாதன் மீது தாக்குதல் நடத்துமாறு கேட்டுக் கொண்டாரென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அந்த வழக்கறிஞர…

    • 2 replies
    • 435 views
  2. வன்னியில் அடை மழை கூடாரங்களில் வாழ்வோர் பரிதவிப்பு Tuesday, August 16, 2011, 21:38 சிறீலங்கா, தமிழீழம் கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் இன்று கடும் மழை பெய்ததாகவும் சில பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு ஆரம்பித்த மழை சுமார் 3 மணிநேரம் தொடர்ச்சியாக பெய்ததாகவும் சில இடங்களில் மழையுடன் பனிக்கட்டிகளும் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் பெய்த மழையால் கூடாரங்களில் வாழ்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இராமநாதன் குடியிருப்பு, பரந்தன் சிவபுரம், மலையாளபுரம், பொன்நகர் பன்னங்கண்டி, சாந்தபுரம், மாயவனூர் போன்ற கிராமங்களில் மக்களில் பலர் கூடாரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு இன்னும் வீட்டுத் திட்டங்கள் எத…

  3. எம்மிடம் இன்னமும் இருக்கின்ற போர்க்குற்ற ஆதாரங்களை தொடர்ந்தும் வெளியிடுவோம்! - ஹெட்லைன்ஸ் ருடேயின் பிரதம ஆசிரியர் செவ்வி!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்குள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் தம்மிடம் இருக்கின்ற நம்பகத்தகுந்த ஆதாரங்களை தொடர்ந்தும் வெளியிடுவோம் என இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால் தெரிவித்துள்ளார். 'இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி - இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பியிருந்தது.இந்த ஆவணப்படம் தொடர்பாக, ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியின் பிரதம ஆசிரியர் ராகுல் கன்வால் கொழும்பு ஆங்…

  4. மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் (காணொளி இணைப்பு) பதிந்தவர்: ADMIN செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011 ராஜீவ் கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு இருபத்தொரு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணைமனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, "மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்" சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் சேரன், அமீர், கௌதமன், புகழேந்தி தங்கராஜ், சிபிச்சந்திரன், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, மருத்துவர் எழிலன், திருமுருகன், வழக்கறிஞர் ரஜினிகாந்த், டிவி.எஸ்.எஸ்.மணி, கவிஞர் இன்குலாப், மீனவர் அமைப்பைசார…

  5. பார்க்க முடியாது போன கொலைக்களம், வழங்குநர்கள் நிறுத்தியிருக்கலாம் என மக்கள் தெரிவிப்பு! பிரசுரித்தவர்: Sukkran August 16, 2011 Add a comment இலங்கையின் கொலைக்களம் வீடியோவை நேற்று இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பப் போவதாக அறிவித்த இந்தியத் தொலைக்காட்சியான சி தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையை நேற்றுப் பார்வையிட முடியாது போயுள்ளதால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த அலைவரிசை தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒளி பரப்பவில்லை என நேற்று கேபிள் ரிவி வழங்குநர்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் கொலைக்கள காட்சியை ஒளிபரப்பப் போவதாக அறிவித்த நிலையில் குறித்த தொலைக்காட்சி அலைவரிசையை கேபிள் ரி.வி வழங்குநர்கள் நிறுத்தியிருக்கலாம் என மக்கள் தெரிவித்தனர். …

  6. கிண்ணியா வைத்தியசாலை வைத்தியர்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதமில்லை! பொலீஸார் குவிப்பு. (Video in) Tuesday, August 16, 2011, 12:41 திருக்கோணமலை கிண்ணியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தற்போது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் பெருமளவான பொலீஸார்குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் காணப்படும் பாதுகாப்பு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சந்திக்க ஏப்பிட்டகடுவ குறிப்பிட்டார். பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து கிண்ணியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் தற்போது இயங்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார…

  7. கிளிநொச்சியில் 3,329 சிறுவர்கள் தமது பெற்றோரில் ஒருவரை இழந்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த 514 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சி.எஸ் இப்றாகிம் தெரிவித்துள்ளதாவது, அதிகார சபை மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் 3ஆயிரத்து 329 சிறுவர்கள் தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்துள்ளனர். இவர்களில் 514 பேர் இருவரையும் இழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறு பெற்றோர் இருவரையும் இழந்த சிறுவர்களில் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. …

  8. ஊனமுற்றோர் உள்ள குடும்பங்களுக்கு 3000 ரூபா வழங்க உடனடித் திட்டம் - சிங்கள மக்களுக்கே இந்த உதவி கிடைக்கும் ஊனமுற்றோர் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 3000ரூபா கொடுப்பனவு வழங்க சமூக சேவை அமைச்சு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க முதற்கட்டமாக அனுராதபுர மாவட்டத்தில் அத்தகைய ஊனமுற்றோர் உள்ள குடும்பங்களுக்கு குறித்த அப்பணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்டத்தில் ஊனமுற்றோர் உள்ள் 112 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 3000ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 28,56,000 ரூபா மொத்த கொடுப்பனவாக இக் குடும்பங்களுக்காக வழங்கப்பட…

  9. தமிழ்த் தலைமைகளின் பின்னடிப்பும் தமிழினத்தின் பின்னடைவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்தை நெருங்கும் இவ் வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தின்போது இருந்த துடிப்பும், வேகமும் பதவியேற்பதில் இல்லாமல் போனமை தமிழர்தரப்பின் பலவீனங்கள் எங்கேயுள்ளன என்பதை கோடிகாட்டும். தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்துவிட்டால் உடனடியாகவே பதவியை ஏற்று பணியை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் சுணைக்கெட்ட தமிழ்த் தலைமைகள் எதிலுமே பின்னடிப்பு. இந்த பின்னடிப்புத் தான் தமிழினத்தின் பின்னடைவுக்குக் காரணம் என்பது உணர்தற்குரியது. பரவாயில்லை, ஏதோ பதவியை ஏற்று உள் ளூராட்சி சபைகளின் ஆட்சிக்கு வந்த பின்னராவது…

    • 0 replies
    • 597 views
  10. 'விடுதலைக்கு விலங்கு’ - அவர்கள் காட்டியது தனு அல்ல.. அனுஜா! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், 'விடுதலைக்கு விலங்கு’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். அதிர​வைக்கும் தகவல்கள் இருக்கும் அந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கே! நான் ராபர்ட் பயஸ்! இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராசீவ் காந்தி கொலை வழக்கில் பிணைக்கப்பட்டு... இன்ற​ளவும் 'ஏன், எதற்கு, எப்படி?’ என்று பல விதமான கேள்விகளோடு நாட்களை நகர்த்திவரும் ஆயுள் தண்டனைக் கைதி! இலங்கை வந்த இந்திய அமைதிப்​ படையால் எனது வீடு தாக்கப்பட்டது. அதில் எனது குழந்தையை பறிகொடுத்தேன். இந்த நிலையில் 20. 09.1990 அன்று நானும் ஓர் அகதியா…

    • 0 replies
    • 1.9k views
  11. நீங்கள் சுதந்திரதினம் கொண்டாட ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரம் கேட்கமாட்டார்கள் என்று 65 வருடங்களாக நினைக்கிறீர்களே இது சரியா..? தென்னாசியாவில் இந்தியா, சிறீலங்கா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான், சீக்கிம் என்ற ஏழு நாடுகள் இருப்பதாக பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். 65 வருட இந்திய சுதந்திரம் இந்த ஏழு நாடுகளின் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வில் கனிதரும் மரமாக இருந்துள்ளதா இல்லை அவர்களை கண்ணீர்விட வைத்துள்ளதா என்பதுதான் இன்று நம்முன் உள்ள கேள்வி. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று தடவைகள் போர் செய்து, அந்த நாட்டுடன் தீராத பகையை வளர்த்துள்ளது. இரண்டு நாடுகளும் ஏட்டிக்கு போட்டி எதிரிகளாக உள்ளன. இதில் இந்தியாவா இல்லை பாகிஸ்தானா யார் குற்றவாளி என்ற தீர்ப்பு நமக்கு…

    • 0 replies
    • 1.1k views
  12. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சேத்துக்குடா பொலிஸ் காவலரணில் தற்போது கடமையாற்றி வரும் அனைத்துப் பொலிஸாரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். அத்துடன் புதிதாகக் காவலரணில் கடமைக்கு அமர்த்தப்படும் அனைத்துப் பொலிஸாரினது புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. . மர்ம மனிதர் ஒருவர் குறிப்பிட்ட காவலரணுக்குள் ஓடி மறைந்து கொண்டதனையடுத்து புதூர் பிரதேச மக்கள் புதூர் விமான நிலைய ஓடுபாதைக்கு அண்மித்தாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். . சேத்துக்குடா பகுதியில் நடமாடும் மர்ம மனிதர்கள் சேத்துக்குடா பொலிஸ் காவலரணுக்குள் ஓடி மறைந்து கொள்வதாகவும் இவ்வாறு தமது பகுதிக்குள் புதிதாக நடமாடுபவர்களை…

    • 0 replies
    • 550 views
  13. ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் பான் கி மூனின் கரங்கள் நேர்மையற்றனவாக இருப்பதனால் சீனா, பர்மா, இலங்கை போன்ற நாடுகள் நன்மை அடைந்துவருகின்றன. இவ்வாறு மனித உரிமை கண்காணிப்பு செயலகம் குற்றம் சாட்டி இருந்தது. இது உண்மைதான் என காடியன் தனது ஆசிரியர் பத்தியில் குறிப்பிட்டுள்ளது. ”United Nations: weak leaders wanted” என்ற தலைப்பில் எழுதப்பட்ட பத்தியில் ஐக்கிய நாடுகள் சபையானது தனது பணிகளில் உறுதியான தீர்மானங்களையோ அன்றி அதன் சட்டப்படியான நடவடிகைகளையோ செய்வதில் இருந்து நழுவி விடுகின்றது. பான் கி மூன் இப்போ இரண்டாவது தடவையாகவும் தனது பதவியினைப்பெற்றுக்கொண்டுள்ளார். அவர் எது தேவையோ அதனைப்பெற்றுவிட்டார். ஐக்கிய நாடுகள் 10 தடவை சமாதானத்திற்கான நோபிள் பரிசைப்பெற்றுள்ளது ஆன…

  14. இந்திய சுதந்திர தின நாளில் இந்தியாவை வாழ்த்துவது,சந்தோசப்படுவது ஈழத்தமிர்களுக்கு இன்றைய நிலையில் பொருந்துமா?

  15. சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி தான் தோன்றித்தனமாகச் செயற்படும் ஜனாதிபதி நாட்டை இராணுவமயப்படுத்த முயற்சிக்கிறார்! ஜயலத் ஜயவர்தன. [Tuesday, 2011-08-16 12:35:01] நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டுகிறார் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன. நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட முப்படையினருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.இதுதொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: அத்துடன், அவர் சர்வாதிகாரத்தை…

  16. http://www.youtube.com/user/tamilspace?feature=mhee#p/a/u/2/s4aAcKZxIbI

  17. நிபுணர் குழு அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை 16 ஆகஸ்ட் 2011 நிபுணர் குழு அறிக்கை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். எனினும், குறித்த அறிக்கையை அனுப்பி வைப்பதற்கு இன்னமும் கால அவகாசம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நிபுணர் குழு அறிக்கை ஒர் பொதுவான ஆவணமாகும் எனவும், இந்த தருணத்தில் குறித்த அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உறுப்பு நாடுகள் குறித்த அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ள…

  18. இலங்கைத்தமிழர் பிரச்சினை, அன்னா ஹராரே கைது ஆகிய உள்ளிட்ட விவாதங்கலால் இந்திய பாராளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டது. இலங்கைத்தமிழர் பிரச்சினை தொடர்பில் விவாதத்தினை தமிழக எம்பிக்கள் எழுப்பும் போது ஆழுங்கட்சியினர் குழப்ப முயன்றனர். இந்த விவாதங்கள் இந்திய பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் தலைமையில் இன்று நண்பகல் 12.05 அளவில் ஆரம்பிக்கப்பட்டது. . விவாதத்தை அதிமுக உறுப்பினர் ஆரம்பித்து வைத்து உரையாற்ற முற்பட்ட வேளையில் ஆளும் தரப்பினர் உள்ளிட்டோர் கூச்சலிட்டதனால் பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது. . இதனையடுத்து சபாநாயகர் மீரா குமார் பாராளுமன்ற நடவடிக்கைகளை நாளை முற்பகல் 11 மணிவரை ஒத்திவைத்துள்ளார். . இதேவேளை, ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் மசோதாவை உருவாக்கக்கோரி …

  19. தமிழ்நாட்டிடம் இருந்து கச்சதீவைப் பாதுகாக்கத் தயார் – இலங்கைக் கடற்படை! Published on August 15, 2011-10:24 am இந்தியாவின் சுதந்திர தினமான இன்று கச்சதீவில் இந்தியக் கொடியை ஏற்றுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த சில அமைப்புக்கள் முயற்சிப்பதாக வெளியான செய்திகளை அடுத்து அத்தகைய எந்த முயற்சிகளையும் தடுக்கத் தயார் நிலையில் இருப்பதாக கடற்படை அறிவித்துள்ளது. இதேவேளை, நேற்றுமுன்தினம் இரவு கச்சதீவுக்கு அருகே மீன்பிடிப்பதற்கு இலங்கைக் கடற்படையினர் தங்களை அனுமதிக்கவில்லை என்று தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு 10 வேகப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 511 படகுகளை அங்கிருந்து விரட்டியடித்தனர் என்று அவர்கள் முறையிட்…

  20. நல்லூப் முருகப் பெருமானின் 12ம் நாள் திருவிழாவின் மாலை நேர வெளிவீதி உலா வரும் காட்சி தங்களுக்காக thx http://www.newjaffna.com/index.php

  21. யாழில் அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தலின் பின்னர் இடைநிறுத்தம் யாழ். மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட துரித அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின் விநியோகம், குடிநீர் விநியோகம், வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, காணி வழங்கல் போன்ற திட்டங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் "வடக்கின் வசந்தம்' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த அத்தியாவசியமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தேர்தலுக்கு முன்னர் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தேர்தலின் பின்னர் அடிக்கல் நாட்டுவத…

  22. சந்தி சிரிக்கும் இந்திய மானம்! சமஸ் சர்வதேச அளவில் இந்தியா மீண்டும் தலைகுனிந்து நிற்கிறது. இந்த முறை அவமான உபயதாரர்கள் - இந்திய ராணுவத்தினர்! அமைதி காக்கும் பணிக்காக காங்கோ வுக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்கள், அங்கு பாலியல் முறைகேடுகளில் ஈடு பட்டது அம்பலமாகி, அசிங்கமாகி இருக்கிறது! ஆப்பிரிக்க உலகப் போர் ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ள…

    • 5 replies
    • 1.9k views
  23. புங்குடுதீவில் தென்னிலங்கை மீனவர்களை குடியமர்த்த முயற்சி .. 15 ஆகஸ்ட் 2011 உள்ளுர் மீனவர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை குடியமர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை கடற்படையினரது ஏற்பாட்டினில் நூற்றுக்கணக்கான தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் புங்குடுதீவுப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இவர்கள் சிலிண்டர் பொருத்தி கடலட்டைமற்றும் சங்கு பிடிக்கப்போவதாக கடற்படையினரால் உள்ளுர் மீனவர்களுக்கு தெரிரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்திய மீனவர்களால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உள்ளுர் மீனவர்கள் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை அ…

  24. சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகு மாளிகைக்கு தீ வைப்பு!ஆறு பேர் கைது. Monday, August 15, 2011, 20:47 சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகு வசந்த கால மாளிகைக்கு நெருப்பு வைத்த குற்றச்சாட்டில் ஆறு பேர் பொலனறுவையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நெருப்பு பற்றி எரிந்து இருக்கின்றது. இதனால் மாளிகையில் இருந்து பொருட்களும், மாளிகையின் சில சுவர்களும் அழிந்து விட்டன. கைதானவர்கள் இன்று பொலனறுவை ந்நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட உள்ளார்கள். http://www.tamilthai.com/?p=24267

  25. இராணுவத்தினரால் தாக்கப்பட்ட விவேகானந்தன் மற்றும் கலைப்பிரியா ஆகியோரின் செவ்வி.(Video in) Tuesday, August 16, 2011, 1:29 மட்டக்களப்பு துறைநீலாவணையில் நடந்த மர்ம மனிதன் பற்றிய சம்பவத்தில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட விவேகானந்தன் என்பவரின் செவ்வி ஒலி வடிவத்தில் http://www.youtube.com/watch?v=vAmJVET_5uU&feature=player_embedded#t=0s மட்டக்களப்பு பெரியபோரதீவில் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட செல்வி தெய்வேந்திரன் கலைப்பிரியா என்பவரின் சின்னம்மா வழங்கிய செவ்வி ஒலி வடிவத்தில்.னந்தன் என்பவரின் செவ்வி ஒலி வடிவத்தில். http://www.youtube.c...hHl-bNfjes#t=0s இது தொடர்பான செய்தி : மட்டக்களப்பு மாவட்டம், துறைநீலாவணையில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.