ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகு மாளிகைக்கு தீ வைப்பு!ஆறு பேர் கைது. Monday, August 15, 2011, 20:47 சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகு வசந்த கால மாளிகைக்கு நெருப்பு வைத்த குற்றச்சாட்டில் ஆறு பேர் பொலனறுவையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நெருப்பு பற்றி எரிந்து இருக்கின்றது. இதனால் மாளிகையில் இருந்து பொருட்களும், மாளிகையின் சில சுவர்களும் அழிந்து விட்டன. கைதானவர்கள் இன்று பொலனறுவை ந்நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட உள்ளார்கள். http://www.tamilthai.com/?p=24267
-
- 2 replies
- 2.1k views
-
-
இராணுவத்தினரால் தாக்கப்பட்ட விவேகானந்தன் மற்றும் கலைப்பிரியா ஆகியோரின் செவ்வி.(Video in) Tuesday, August 16, 2011, 1:29 மட்டக்களப்பு துறைநீலாவணையில் நடந்த மர்ம மனிதன் பற்றிய சம்பவத்தில் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட விவேகானந்தன் என்பவரின் செவ்வி ஒலி வடிவத்தில் http://www.youtube.com/watch?v=vAmJVET_5uU&feature=player_embedded#t=0s மட்டக்களப்பு பெரியபோரதீவில் மர்ம மனிதனால் தாக்கப்பட்ட செல்வி தெய்வேந்திரன் கலைப்பிரியா என்பவரின் சின்னம்மா வழங்கிய செவ்வி ஒலி வடிவத்தில்.னந்தன் என்பவரின் செவ்வி ஒலி வடிவத்தில். http://www.youtube.c...hHl-bNfjes#t=0s இது தொடர்பான செய்தி : மட்டக்களப்பு மாவட்டம், துறைநீலாவணையில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை …
-
- 0 replies
- 717 views
-
-
இயக்குனர்கள் சேரன்,அமீர்,டி.எஸ்.எஸ்.மணி,திருமுருகன் ஆகியோரின் பேட்டி(Video in) Tuesday, August 16, 2011, 0:41 ராஜீவ் கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு இருபத்தொரு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணைமனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, ‘மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்’ சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு 13-8-2011 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் சேரன், அமீர், கௌதமன், புகழேந்தி தங்கராஜ், சிபிச்சந்திரன், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, மருத்துவர் எழிலன், திருமுருகன், வழக்கறிஞர் ரஜினிகாந்த், டிவி.எஸ்.எஸ்.மணி, கவிஞர் இன்குலா…
-
- 0 replies
- 941 views
-
-
யாழ் மாவட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அரசியல் அமைப்புக்கு முரணானது! - சரத் என் சில்வா யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க தேர்தல் ஆணையாளர் எடுத்த நடவடிக்கை அரசியல் அமைப்புக்கு முரணானது என சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் எண்ணிக்கையை குறைத்தமை அப்பகுதி மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கின்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'இலங்கையில் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அரசியலமைப்பின் 98(9) …
-
- 0 replies
- 349 views
-
-
நாட்டை இராணுவ மயப்படுத்தும் முயற்சியே முப்படைகளுக்கான ஜனாதிபதியின் அழைப்பு; சாடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டில் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுகின்றது என சர்வதேசத்திற்கு காட்டி, அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்து நீடித்து நாட்டை முற்றுமுழுதாக இராணுவமயமாக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது. அத்துடன், அமைதியைப் பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு உள்ள நிலையில், இந்த விடயத்தில் முப்படையினருக்கு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 25 மாவட்டங்களிலும் அமைதியை ஏற்படுத்துமா…
-
- 0 replies
- 749 views
-
-
கள்ளரிடம் நாங்களோ வலியப் போய் நகைகளைக் கொடுக்கிறம்.... கும்பலாக வந்து குத்திக் களவெடுத்துப் போய்விடுகிறாங்கள்.....? அவங்கள் இருக்கேக்க முந்திப் பெரிதாய் களவுகள் நடக்கவில்லை... ஆனால் இப்போ ஏன் இப்புடி????? கள்ளருக்கு உங்களில் பயமில்லையோ????? சிரிப்புப் பொலிசு என்று நினைக்குறாங்களோ???? என்று நல்லூரில் லக்ஸ்பீக்கரைப் பார்த்து மனதுக்குள்ளே கேள்வி கேட்ட வயதான பாட்டியின் நினைப்பு இது thx http://newjaffna.com/index.php
-
- 3 replies
- 1.1k views
-
-
வன்முறைகள் தொடர்ந்தால் போர்க்கால சூழலுக்குள் செல்ல வேண்டி வரும் – கிழக்குப் படைகளின் தளபதி மிரட்டல் [ திங்கட்கிழமை, 15 ஓகஸ்ட் 2011, 02:24 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ] கிழக்கில் மர்மமனிதன் விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடிகள் பற்றி ஆராய நேற்று மட்டக்களப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா இராணுவத்தின் கிழக்குப் படைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா பொதுமக்களை, குறிப்பாக முஸ்லிம்களை கடுமையாக மிரட்டும் வகையில் உரையாற்றியுள்ளார். கிழக்கில் நூற்றுக்கணக்கில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாழ்வின் பெரும்பாலான நேரத்தை வீதியில் கழிக்க வைப்பேன் என்றும், வீடுகளுக்குள் புகுந்து சோதனையிட்டு கைது செய்வேன் என்றும், கடைகளை மூடவைத்…
-
- 1 reply
- 813 views
-
-
வட புலத்து தமிழ் அதிகாரிகளின் சொல்லொணாத் துன்பம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-08-15 10:33:53| யாழ்ப்பாணம்] வட புலத்தின் தமிழ் அரச அதிகாரிகளின் நிலைமை இப்போது மிகவும் பரிதாபத்திற்குரியது. நிர்வாக வேலைப்பளுவிற்கு அப்பால் நாளாந் தம்பணிகளை முரண்பாடில்லாமல் செய்துமுடிப்பதிலேயே போதுமென்றாகி விடுகின்றது. திணைக்களம் ஒன்றில் ஒரு சாதாரண நிகழ்வு என்றால் கூட எப்படி நிகழ்ச்சி நிரல் தயாரிப்பது என்பதில் தொடும் குழப்பம், சம்பந்தப்பட்ட தமிழ் அதிகாரிகளின் மூளையை சிதறவைத்து விடும். உதாரணத்திற்கு தேசிய கீதத்தை எடுத்துக் கொண்டால்,தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுவதா?தமிழில் பாடுவதா?இந்தத் தீர்மானத்தை எடுக்க முடியாத திண்டாட்டம். சிங்களமும் வேண்டாம். தமிழும் வேண்டாம் இசை வடிவில…
-
- 0 replies
- 858 views
-
-
ங்கட்கிழமை, ஆகஸ்ட் 15, 2011 Lieutenant Colonel Nandasena Gotabhaya Rajapaksa RWP, RSP, GR சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் செயற்படு இயந்திரமாக விளங்கும் சிறிலங்கா தேசிய புலனாய்வு சேவையின் இரண்டாம் தலைமையகத்தினை யாழ்ப்பானத்தில் நிறுவ கோத்தா ( Lieutenant Colonel Nandasena Gotabhaya Rajapaksa RWP, RSP, GR ) திட்டமிட்டுள்ளார். சிறிலங்கா தேசிய புலனாய்வு சேவை (State Inteligence Service - SIS) இந்தப் பெயரைக்கேட்டாலே அது சிறிலங்காவின் இரத்தம் தோய்ந்த சிங்கத்தின் நகங்களையும் தாடைகளையும் தான் நினைவு படுத்தும். அந்தளவு தமிழர் மீது மிருகத்தனமாக கட்டவிழ்த்துவிடபப்டும் அனைத்து படுகொலைகள், ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் ஆகியவற்றை நீண்டகால அடிப்படையில் செ…
-
- 1 reply
- 1.6k views
-
-
போர்க்குற்றத்திற்கான சரியான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.: ஹெட்லைன்ஸ் ருடே கடந்த வாரம் ஹெட்லைன்ஸ் ருடே இலங்கையில் இனப்படுகொலை: எனது சாட்சியம் என்ற தலைப்பில் காணொளி ஒன்றினை ஒளிபரப்பியது. இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஹெட்லைன்ஸ் ருடே பிரதம ஆசிரியரை சிலகேல்விகள் கேட்டிருந்தனர். . அதன் போது ஹெட்லைன்ஸ் ஆசிரியர் பதில் அளித்தார். கேள்வி: உங்களால் பெறப்பட்ட தகவல்கள் போர்க்குற்ற சாட்டுக்களுக்கான நம்பிக்கையான உண்மையான ஆதாரங்களாக இருக்கும் என நீங்கள் நம்புகின்றீர்களா? பதில்: ஆம் ஒரு சொல்லில் சொல்வதானால் ஆம் என்றே கூறுவேம். ஏனென்ரால் எமது ஊடகவியலாளர் நேரடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் விபரங்களைச் சேகரித்துள்ளார். அவர்களிடம் தேவையான புகைப்படங்கள், பெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை கடற்படை அட்டூழியம் வேதாரண்யம் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. வலைகளை அறுத்து, மீன்களை பறித்துக்கொண்டும் விரட்டியத்துள்ளது இலங்கை கடற்படை. மேலும் வெள்ளப்பள்ளம் மீனவர்களை 4 மணி நேரம் கடலில் நீந்த செய்து சிதரவதை செய்து அதனை ரசித்து பார்த்து சிரித்துள்ளனர் இலங்கை கடற்படையினர். மீனவர்களின் ஆடைகளை கழற்றச் செய்து அவர்களை துப்பாக்கியால் அடித்ததாகவும் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=59533
-
- 0 replies
- 792 views
-
-
மகிந்தவுக்கு தமது இரத்தத்தை பலி கொடுக்க லட்சக்கணக்கான யுவதிகள் தயாராம்– அமைச்சர் பௌசி! மகிந்த ராஜபக்ஷவிற்கு தங்களது இரத்தத்தினை பலி கொடுப்பதற்கு லட்சக் கணக்கான யுவதிகள் வரிசையில் காத்திருப்பதாக சிறிலங்காவின் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச். எம் பௌசி தெரிவித்தார். பொத்துவில் பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் பௌசி பொத்துவில் பெரிய பள்ளி வாசலில் வைத்து மக்கள் மத்தியில் இதனை பகிரங்கமாக தெரிவித்தார். கொலைவெறியன் மகிந்தர் தனது ஆயுள் முழுவதும் பதவி வகிப்பதற்கு 2 ஆயிரம் யுவதிகளது மார்பு பலியிடப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆயிரமல்ல லட்சக்கணக்கான யுவதிகள் தங்களது மார்புகளையும் இரத்தங்களையும் மகிந்த ராசபக்சவுக்காக பலி கொடுப்பதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர் என்றும் …
-
- 7 replies
- 1.8k views
-
-
கிண்ணியாவில் பதற்றம்: கடற்படை முகாம் மீது தாக்குதல் Monday, August 15, 2011, 10:15 கிண்ணியா கடற்படை முகாமினுள் மர்ம மனிதர் (கிறீஸ் யக்கா) ஒருவர் சென்றார் எனக் கூறி ஒரு குழுவினர் கடற்படை முகாம் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தியதனை அடுத்து அங்கு பதற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு இன்று அதிகாலை விரைந்த பொலிஸ் ஜீப் ஒன்று தாக்கப்பட்டதில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சந்தேகத்துக்கு இடமான தோற்றத்துடன் ஒருவர் கார் ஒன்றில் கிண்ணியா பைசால் நகர் கடற்படை முகாமுக்குள் சென்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து பாரிய குழுவினர் கடற்படை முகாமினை சுற்றிவளைத்து கல்வீச்சு நடத்தியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ப…
-
- 0 replies
- 945 views
-
-
தலா பதினைந்து இலட்சம் செலுத்தி இலண்டன் சென்ற 80 மாணவ, மாணவியர் நடுத்தெருவில் விடப்பட்டனர்: [Monday, 2011-08-15 10:02:44] இலண்டனிலுள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாணவ மாணவியர் 80 பேர் அங்கு கைவிடப்பட்டு நடுத்தெருவில் நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களை பிரிட்டனுக்கு அழைத்துச்சென்ற இரு நிறுவனங்களுமமாணவர் ஒருவரிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபா என்ற ரீதியில் 12 கோடி ரூபா வரையிலான தொகையை மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கொழும்பு, கொள்ளுப்பிட்டி மற்றும் நீர்கொழும்பிலுள்ள இரு வர்த்தக நிறுவனங்கள் மூலமா…
-
- 0 replies
- 766 views
-
-
கிளிநொச்சியில் நேற்று கொட்டித் தீர்த்தது மழை கூடாரங்களில் வசிக்கும் மக்கள் பேரவலம் Monday, August 15, 2011, 10:27 கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் நேற்று கடும் மழை கொட்டித் தீர்த்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சியில் சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்த மழை சுமார் 3 மணி நேரம் தொடர்ச்சியாகப் பெய்ததாகவும் சில இடங்களில் மழையுடன் பனிக்கட்டிகளும் வீழ்ந்தன எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியில் பெய்த மழையால் தறப்பாள் கூடாரங்களில் வாழ்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். இராமநாதன் குடியிருப்பு, பரந்தன், சிவபுரம், மலையாளபுரம், பொன்நகர், பன்னங்கண்டி, சாந்தபுரம், மாயவனூர் போன்ற கிராமங்களில் மக்களில் பலர் தறப்பாள், தகரக் கொட்டகைகளிலேயே வாழ்…
-
- 0 replies
- 335 views
-
-
எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள் வணக்கம். உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கி…
-
- 1 reply
- 1k views
-
-
“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்கத் தூதரின் கருத்தினால் சர்ச்சை [ சனிக்கிழமை, 13 ஓகஸ்ட் 2011, 11:58 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத்தூதுவர் தமிழர்கள் கறுப்பானவர்கள் அழுக்கானவர்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்கத் தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய அமெரிக்கத் துணைத்தூதுவர் மொறீன் சாவோ, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது கலாசாரம் மற்றும் மொழி பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்ததாக கூறியிருந்தார். டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு தொடருந்து மூலம் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும், ஆனால் 72 மணிநேரம் கடந்தும் அந்தத் த…
-
- 10 replies
- 2.1k views
-
-
ராஜீவ் கொலை விசாரணை:கார்த்திகேயன் கருத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சிலர் கோரி வருகின்ற நிலையில், அரசும் நீதிமன்றம் அப்படி கருதினால் அதைச் செய்யட்டும் என்று அந்த விசாரணையை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான டி. ஆர். கார்த்திகேயன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் மே மாதம் 21 ஆம் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையின் மூத்த அதிகாரியாக இருந்த டி ஆர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகளை நடைபெற்றன. புலன் விசாரணை…
-
- 0 replies
- 727 views
-
-
முற்றுப்பெறாத தமிழீழ விடுதலைப் போராட்டமும், நியூட்டனின் மூன்றாவது விதியும்! நியூட்டனின் மூன்றாவது விதி சிங்கள அரசை நன்றாகவே ஆட்டிப் படைக்கின்றது. ஒரு பக்கம் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை சர்வதேச நாடுகளின் சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை அதிகரிக்க மறு பக்கம் சனல் – 4 இன் ‘சிறிலங்காவின் கொலைக்களம்’ ஆவணக் காட்சிப்பதிவு சிங்கள தேசத்தின் ஒட்டுமொத்த விம்பத்தையும் அடித்து நொருக்கி அம்மணமாக்கியுள்ளது. எந்த விலை கொடுத்தாவது சிங்கள அரசைக் காப்பாற்ற முயன்ற இந்திய நடுவண் அரசுக்கும் சனல் – 4 வெளியிட்ட காட்சிப் பதிவு சிக்கலை உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்காலில் வைத்து ஈழத் தமிழர்கள் ஈவிரக்கமின்றிப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள்: [sunday, 2011-08-14 21:30:43] வணக்கம். உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தன…
-
- 1 reply
- 726 views
-
-
இந்தியப் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் நாளை விவாதத்திற்கு வருகிறது Monday, August 15, 2011, 0:22 இந்தியப் பாராளுமன்றம்இந்தியப் பாராளுமன்றத்தில் நாளை 16ஆம் திகதி இலங்கை தொடர்பாக குறுகிய கால விவாதம் இடம்பெறவுள்ளது.போருக்குப் பின்பு இலங்கைத் தமிழர்களின் மீள்குடியேற்றம், நிவாரணப் பணிகள் மற்றும் அவர்களின் நலன்களை மேம்படுத்துவது தொடர்பில் இந்திய அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகள் குறித்து இந்த விவாதத்தில் ஆராயப்படும். இந்தியப் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஒரே நேரத்தில் இந்த விவாதம் இடம்பெறும். யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை நிலைவரம் தொடர்பாகத் தமது கருத்துகளை வெளிப்படுத்த எம்.பிக்கள் பலர் ஆவலாக இருக்கின்றனர். இலங்கைத் தமிழர்களின் துன்பங்களுக்குத் துரித…
-
- 0 replies
- 676 views
-
-
14 ஆகஸ்ட் 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். சர்வதேச அபிவிருத்திக்கான மனித உரிமைகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புது டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளனர். எதிர்வரும் 23ம் 24ம் திகதிகளில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலை, அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…
-
- 4 replies
- 1.6k views
-
-
வாழைச்சேனையில் அகப்பட்ட மர்ம மனிதன் வாழைச்சேனை பிரந்துருச்சேனை கிராமத்தில் நேற்று இரவு நடமாடிய மர்ம மனிதன்என்ற சந்தேகத்தில் ஒருவரை இன்று மாலை பொதுமக்கள் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து அடையாளம் காட்டியதனை அடுத்து அங்கு பதற்றநிலை உருவாகியது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாழைச்சேனை பிரந்துருச்சேனையில் மர்ம மனிதனின் நடமாட்டம் இருந்ததாக செய்தி பரவியதைத் தொடர்ந்து பெரும் பதற்றநிலை ஏற்பட்டது. இதன்போது அங்கு நடமாடிய மர்ம மனிதர்கள் எனக் கருதப்பட்ட இனந்தெரியாத நபர்களை பொதுமக்கள் பிடிக்க முற்பட்ட போது தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6.00 மணியளவில் வாழைச்சேனை புகையிரத நிலையத்தில் வைத்து நேற்று இரவு நடமாடிய மர்ம மனிதன் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந…
-
- 17 replies
- 2.5k views
-
-
முள்ளிவாய்க்காலில் இருந்தே நாம் ஜனநாயக போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் வவுனியா நகரசபை உபதலைவர் வவுனியா நகரசபைக் கூட்டத்திலே இனக்குரோதமான வார்த்தைகளை சில உறுப்பினர்கள் கூறி முள்ளிவாய்க்கால் பேரவலத்தினையும் காரணம் காட்டியிருந்தனர். ஆனால், முள்ளிவாய்க்காலில் நாம் தோற்றுப் போகவில்லை. அங்கிருந்தே எமது ஜனநாயகப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளோமென வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் மையவாடியில் கட்டடம் கட்டப்படுவதையும் நகரசபைத் தலைவர் மற்றும் உபதலைவருக்கு "ஜிஹாத்' என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைக் கண்டித்தும் வவுனியா நகரசபை முன்றிலில் இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 633 views
-
-
கல்முனையில் பொலிஸார், இராணுவத்தினர் மீது கல்வீச்சு Sunday, August 14, 2011, 23:16 சிறீலங்கா இன்று மாலை சாய்ந்தமருதில் வைத்து மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட இரு நபர்களை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததை தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது கல்முனை நகரில் வைத்து கற்களால் வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இதேவேளையில் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாட் மற்றும் சமூகப் பெரியார்கள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸார் ஆகியோர்களுக்கிடையே சந்திப்பொன்று நடைபெற்றது. பிடிக்கப்பட்ட மர்ம நபர்கள…
-
- 0 replies
- 654 views
-