Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாகிஸ்தானிய இரு கடற்படை கப்பல்கள் கொழும்புக்கு நல்லெண்ண விஜயம்! [Wednesday, 2011-08-10 11:27:46] பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பி.என்.எஸ். ஷம்ர் மற்றும் பி.என்.எஸ்.நாஸர் ஆகிய இரண்டு கப்பல்களையும் கடற்படை சம்பிரதாய முறைப்படி இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். சீனாவில் நடைபெற்ற �புரூனே கடற்படைத் தொகுதி மீளாய்வு-2011� நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு நாடு திம்பும் வழியிலேயே அதன் நடவடிக்கைத் தளபதி கொமடோர் முஹம்மத் அம்ஜாத் தலைமையில் இக்கப்பல்கள் இலங்கை வந்துள்ளன. இவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என கடற்படை பேச்சாளர் கொமாண்டர…

  2. தமிழர்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும் - மாவை 10 ஆகஸ்ட் 2011 மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த வீடுகளில் வாழ வேண்டும். தமிழ் மக்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும். எமது மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சொந்த வீடுகளில் வாழவேண்டும். அரசு மேற்கொள்ளும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்பதை எமது மக்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். தமிழ் மக்களின் உணர்வுகள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் மூலம் தீர்ப்பு அளித்துள்ளன. இதனை இந்த அரசு உணர்ந்து செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். நேற்…

  3. வடமராட்சிக் கிழக்கு கரையோர நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் இராணுவத்தினர் Wednesday, August 10, 2011, 8:48சிறீலங்கா வடமராட்சிக் கிழக்கு கரையோர நிலங்களைக் கைப்பற்றி தம்வசமாக்கும் முயற்சியில் அங்கு நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் மும்முரமாக செயற்படத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக மருதங்கேணி ஆழியவளை வெற்றிலைக்கேணி உடுத்துறை ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களது கரையோர நிலங்களை சட்டப்படி எழுதித் தருமாறு கேட்ட இராணுவத்தினர், அக்காணி, நிலங்களுக்கு எவ்வளவு பெறுமதி வேணுமானாலும் எம்மால் தரமுடியும் ஆனால் எங்களுக்கு அக்காணி நிலங்களை சட்டப்படி எழுதித் தாருங்கள் என கட்டாயப்படுத்தி கேட்டுவருகின்றனர். அவ்விடங்களுக்கு சமீபகாலத்தில்தான் மக்கள் மீள்குடியேற்றப்ப…

  4. லண்டனில் வன்முறைகள் - கோத்தாபயவுக்கு சுவாரசியமாம் [ புதன்கிழமை, 10 ஓகஸ்ட் 2011, 07:53 GMT ] [ தா.அருணாசலம் ] லண்டனில் கலவரங்களை அடுத்து பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்- மோதலுக்குப் பிந்திய சூழலை பிரித்தானியா எவ்வாறு கையாளப் போகிறது என்று சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். லண்டனில் ஏற்பட்டுள்ள கலவரங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், கட்டுநாயக்கவில் சிறிலங்கா காவல்துறையினர் வன்முறைகளைக் கையாண்ட விதத்தை விமர்சித்தவர்கள் லண்டனில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். கட்டுநாயக்க மோதலை அடுத்து ஜேர்மனித் தூதுவர் சிறிலங்காவை அச்சுறுத்தும்…

  5. தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளுக்கு சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை [ புதன்கிழமை, 10 ஓகஸ்ட் 2011, 07:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] தென்னிந்தியாவில் உள்ள சில அரசியல்கட்சிகள் சிறிலங்கா எதிர்ப்பு உணர்வை இந்தியாவில் பரப்பி வருவதாக குற்றம்சாட்டியுள்ள சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க இத்தகைய பரப்புகளை உடனடியாகக் நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா எதிர்ப்புணர்வுகள் பரப்பப்படுவதால் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் தென்னிந்தியாவில் நெருக்கடிகளை சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். …

  6. அன்னை சோனியாவுக்கு வன்னி உறவுகளின் ஆறுதல் கடிதம் அன்பின் அன்னை சோனியாவுக்கு வணக்கம். இந்திரா காந்தியை அன்னை என்றுதான் அழைப்போம். அதன்பால் இந்திராவின் மருமகள் என்ற வகையில் உங்களையும் அன்னை என்று உரிமையோடு அழைத்து இக்கடிதத்தை வரைகின்றோம். நீங்கள் நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக அறிந்து அதிர்ந்துபோனோம். எதிர்பார்க்க முடியாத செய்தி. அன்னை இந்திரா காந்திக்கு நல்ல மருமகள் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. அதேநேரம் அன்னை இந்திராவின் மரணம், தொடர்ந்து உங்கள் கணவர் ராஜீவ் காந்தியின் இழப்பு என எல்லாமும் உங்கள் வாழ்க்கையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தன. இருந்தும் பாரதத்தின் பண்பாட்டு எல்லைகளுக்குள் நின்றுகொண்டு உங்கள் பிள்ளைகளை நேருவின், இந்திரா காந்தி…

  7. சிறிலங்கா அரசு எம்மை எல்லாம் நம்ப வைத்து நட்டாற்றில் விட்டுவிட்டது. இந்தா பாருங்கள் தங்கச்சி. 2009 ஆம் ஆண்டு குண்டு போட்டு இடிக்கப்பட்ட எங்கள் வீடு இப்போதும் அப்படித்தன் இருக்கின்றது. போர் முடிந்து இரு வருடங்களாகியும் நாளாந்தம் உணவுக்கு பிச்சை எடுக்கும் நிலைதான் இப்போதும். இவ்வாறு கூறினார் வன்னியில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்த தாய். . நேற்று இரவு டில்லியில் இருந்து ஹெட்லைன்ஸ் ருடே சிறிலங்காவில் இனவழிப்பு என்ற காணொளியை ஒளிபரப்பியது. அந்த காணொளி ஹெட்லைன்ஸ் ருடேயினால் அனுப்பப்பட்ட ஒரு பெண் ஊடகவியலாளர் சிறிலங்காவிற்கும் தமிழர் பிரதேசங்களுக்கும் சென்று போரில் சிக்கிய மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்தார். . சிங்கள அரசாங்கத்தினால் உருவ…

    • 0 replies
    • 1.7k views
  8. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. பெயர்தான் மழைக்கால கூட்டத் தொடரே தவிர, காமன்வெல்த் ஊழலில் டெல்லி முதல்வர் பதவி விலகும் கோரிக்கை, பிரதமர் மீது ஊழல் புகார் என கூட்டத்தொடரில் அனல் தகிக்கிறது. இதற்கிடையில், கடந்த வாரம் இலங்கை எம்.பி.க்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தனர். ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் என நாடாளுமன்றத்தில் பரபரப்பு பற்றியெரிந்த போதுகூட, புன்சிரிப்போடு உறுப்பினர்களை சாந்தப்படுத் திய சபாநாயகர் மீரா குமார், சிங்கள எம்.பி.க்களுக்கு எதிர்ப்பு என்றதும் கொந்தளித்துப் போனார். அவரது கடுகடுத்த முகம் அதுவரை நாடாளுமன்றம் காணாதது. …

  9. இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா வேவு - 09 ஆகஸ்ட் 2011 படைகளை தயார் நிலையில் வைக்குமாறு குணதாஸ அமரசேகர கோரிக்கை இலங்கை மீதான பாரிய முற்றுகை ஒன்றுக்காக அமெரிக்கா இலங்கையை வேவு பார்ப்பதாகவும், எனவே, அரசாங்கம் படைகளுடன் எந்த நேரத்திலும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமன்றி, உள்ளூர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் இராஜதந்திரத் தொடர்புகளை அவசரமாக கையாள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர குறிப்பிடுகின்றார். அமெரிக்காவின் பத்து போர் விமானங்கள் இலங்கை வான்பரப்பில் அத்து மீறி ஊடுருவியது தற்செயலாக இடம…

  10. ஹெட்லைன் ருடே வெளியிட்ட புதிய போர்குற்ற ஆதாரங்கள் (video in ) Wednesday, August 10, 2011, 2:25இந்தியா, உலகம், காணொளி, தமிழீழம் ” ஹெட்லைன்ஸ் டுடே” காட்சி ஊடகத்தில் , “போருக்கு பிறகு” தமிழீழப் பகுதிகளில் “நேரடியாக” ஒரு ஊடகவியலாளர் சென்று, ” இலங்கை அரசாங்க அனுமதியோ” அல்லது அவர்கள் நிபந்தனை விதிப்பதைப் போல ” பாதுகாப்பு அமைச்சக அனுமதியோ” பெறாமல், அதனாலேயே “சுதந்திரமாக” யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கும், அங்குள்ள ” இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்கும்” சென்று அவர்களது நேர்காணல்களையும், காநோளிகளையும் “கைகேமரா” மூலம் பதிவு செய்து வந்துள்ளவற்றை காணலாம். சென்னையில் உள்ள அந்த காட்சி ஊடகத்தின் பெண் ஊடகவியலாளரான” பிரியம்வதா” அந்த சாதனையை செய…

    • 3 replies
    • 1.3k views
  11. கோத்தேபய ராஜபக்சேவை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் Tuesday, August 9, 2011, 23:14இந்தியா தமிழர்களை படுகொலை செய்த இலங்கை அரசு மீது ஐ.நா. சபை பொருளதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.இதை விமர்சித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தேபய ராஜபக்சே விமர்சனம் செய்து பேட்டியளித்துள்ளார். இதை கண்டித்து புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாசிலை அருகில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கோத்தேபயே ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். போலீசார் ஓடிவந்து அந்த கொடும் பாவியை பிடுங்கி தீயை அணைத்தனர். ஆர்பாட்டம் குறித்து மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது: …

    • 2 replies
    • 535 views
  12. Started by nunavilan,

    http://indiatoday.intoday.in/site/video/sri-lankan-war-tamil-survivors/1/147592.html

    • 3 replies
    • 626 views
  13. சிறிலங்காவின் புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி நியமனம் [ செவ்வாய்க்கிழமை, 09 ஓகஸ்ட் 2011, 14:28 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்காவின் புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். நாளை சிறிலங்கா இராணுவ தலைமையத்தில் இவர் தனது கடமையைப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும் செயற்படுவார். சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் உபய மெடவெல வெளிநாட்டுப் பயிற்சி ஒன்றுக்குச் செல்லவுள்ள நிலையிலேயே இந்தப் பதவிக்கு பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?2…

  14. மாலை 5.45 மணிக்கு ஆட்டுக் கடாய் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேதராய் வெளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தைச் சென்றடைந்தான் நல்லூர்க் கந்தன் thx http://www.newjaffna.com

    • 0 replies
    • 489 views
  15. லண்டனில் ஆரம்பித்துள்ள கலவரம் படிப்படியாக பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. 09 ஆகஸ்ட் 2011 கலவரங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் பல நகரங்களில் பாரியளவில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. லண்டன், பெர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்டர், பிரிஸ்டல் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் இடம்பெற்று வரும் கலவரம் காரணமாக விடுமுறைக்காக சென்றிரந்த பிரதமர் அவசரகமாக நாடு திரும்பியுள்ளார். கலவரங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைச் சம்பவங்களினால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிற…

  16. இலங்கைத்தமிழர் சமஉரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு; இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆயுத மோதல்கள் முடிவுற்று, இரண்டு ஆண்டுகளாகியும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு சம உரிமை, அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசும், …

  17. தமிழர்களுக்கு அதிகாரங்கள் தேவையில்லை-கோத்தபாய! பிரசுரித்தவர்: NILAA August 9, 2011 இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழ்வதற்கு தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டம் போதுமானதாகும். இவ்வாறான நிலையில் தமிழர்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். “ஹெட்லைன்ஸ் டுடே’ எனும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்திச் சேவையில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒருமித்து வாழ்வதற்கு தற்போதுள்ள அதிகாரம் போதுமானது. இவ்வாறான நிலையில் மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியம் என்ன இருக…

  18. தமிழீழ மக்கள் அரசியலில் இன்று கூட்டமைப்பு ஒரு முக்கிய திருப்பு முனையில் நிற்கிறது. சிறிலங்கா அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் காத்திரமான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படாததைத் தொடர்ந்து கடும் அதிருப்தி கொண்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு தொடர்பில் மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து இரு வாரங்களுக்குள் சிறிலங்கா அரசாங்கம் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. இக்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலமான பதிலை வழங்காது விட்டால், பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக நேரிடும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…

  19. கோட்டாபயவின் கருத்தை கருணாநிதி நிராகரிப்பு தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அரசியல் லாபத்திற்காகவே இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளிக்கின்றனர் என இலங்கை பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளமை முற்றிலும் தவறான கருத்து என தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறியுள்ளார். திமுக அரசியல் லாபத்திற்காகத்தான் அதைச் செய்கிறது என கோட்டாபய கருதினால் அது முற்றிலும் தவறானது. திமுக நீண்டகாலமாக அதற்காக போராடுகிறது. திமுக, இலங்கைத் தமிழரின் விடுதலையை விரும்புகிறது என்பதை அவர் நன்றாக அறிவார் என கருணாநிதி கூறியுள்ளார். போராட்டத்தின் மூலமாக உரிமையை பெற விரும்பும் மக்கள், அவர்களின் அரசியல் உரிமையை நிராகரிப்போரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கருணாநி…

  20. 'மீளக்குடியேற செல்லும் முஸ்லிம்களை வடக்கிலுள்ள அரச அதிபர் துரத்துகிறார்' தமிழீழ விடுதலை புலிகளினால் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேறாமால் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை காண முடியாது என வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் இன்று செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த முஸ்லிம்கள் தற்போது கூடாரங்களில் வாழ்வதாகவும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர கால சட்ட விவாதத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார். சில முஸ்லிம்களை வடக்கிலுள்ள அரசாங்க அதிபர் துரத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். புத்தளத்தில் வசிக்கும் இந்த மக்கள் மீளக்குடியேற்ற செல்லும் போது மேற்படி அரசாங்க அதிபர் ஏன் இங்கு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.