ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
Published By: NANTHINI 13 DEC, 2023 | 09:34 PM இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை விமானப்படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் ஆளுநரை இன்று (13) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஷ, ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் நிரான் மல்லவராச்சி, வடக்கு மாகாண கல்விச் செய…
-
- 1 reply
- 686 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 DEC, 2023 | 09:24 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்திய, சீன உறவில் உண்மையான நண்பன் யார் என்பதை இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும். நமது அயல் நாடான இந்தியாவை உதட்டளவில் புகழ்ந்து உள்ளத்தின் ஊடாக சீண்டுவதனை தவிர்க்க வேண்டும். இங்கு பெருமைப்படும் பௌத்த மதமும் பாளி மொழியும், பௌத்த இலக்கியங்களும் இந்தியாவிலே தோற்றம் பெற்றன. இத்தகைய வரலாற்று தொடர்புகளை சீனாவுக்காக அறுக்கப் போகின்றீர்களா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்…
-
- 0 replies
- 466 views
- 1 follower
-
-
13 DEC, 2023 | 05:46 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யுத்த காலத்தில் எல்லைப் புறக் கிராமங்களை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் தலா 30 இலட்சம் ரூபாவை வழங்கி பணி நீக்குவதற்கு தயாராகி வருகிறது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நிலையியற் கட்டளை 27/2 கீழ் பாதுகாப்பு அமைச்சு சார் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில், அரச வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும் துறையாக பாதுகாப்புத் துறைய…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 DEC, 2023 | 09:51 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தமிழீழ வைப்பகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பலகோடி பெறுமதியாக தங்க நகைகளுக்கு நேர்ந்ததென்ன, தமது நகை தமக்கு கிடைக்கும் என தமிழ் மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். ஆகவே கைப்பற்றிய தங்கங்களை இலங்கை அரசாங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 DEC, 2023 | 05:29 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோமா, இல்லையா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க முடியாது. சர்வதேசமே அதனை தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதியின் பொருளாதார மீட்சி திட்டங்கள் 'சத்திரசிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி மரணம் ' என்பதற்கு ஒப்பானது. கண்கட்டி வித்தையால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் த…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
இலங்கையில் பாரிய அளவில் போராட்டம் ஒன்று வெடிக்கக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பிலான மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் மீண்டும் சமூக அமைதியின்மை மற்றும் போராட்டங்கள் வெடிக்க கூடிய சாத்தியங்கள் அதிக அளவில் காணப்படுவதாக சுட்டிக்…
-
- 4 replies
- 441 views
-
-
கோடிக்கணக்கான பண மோசடி : திலினியை 4 இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை : 1000 கோடியை தாண்டுமாம் By VISHNU 12 OCT, 2022 | 07:33 PM ! ( எம்.எப்.எம்.பஸீர்) செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியை இன்று (12) சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினர் நான்கு முன்னணி இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடாத்தியுள்ளனர். கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷேட அனுமதியின் பிரகாரம், சிறைக்காவலர்களின் பாதுகாப்பின் கீழ் அவர் இவ்வாறு அழைத…
-
- 37 replies
- 2.8k views
- 1 follower
-
-
யாழ். சாவகச்சேரிக்கு கிளிநொச்சி பகுதியில் இருந்து கஞ்சாவினை கொண்டு வந்த இருவர் இன்று(13.12.2023)மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸாரும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். மேலதிக விசாரணை இதன்போது கிட்டத்தட்ட ஏழு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மற்றும் கஞ்சாவினை எடுத்து வந்த வாகனம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://tamilwin.com/article/two-arrested-with-drugs-in-jaffna-1702481615
-
- 0 replies
- 327 views
-
-
13 DEC, 2023 | 05:33 PM மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர், அவரது மகன் இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் இன்று புதன்கிழமை (13) உத்தரவிட்டார். கடந்த நவம்பர் 27ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தினை அலங்கரிக்க மட்டக்களப்பு நகரில் இருந்து பட்டா ரக வாகனத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் மற்றும் கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர்…
-
- 1 reply
- 323 views
- 1 follower
-
-
பறந்துகொண்டிருந்த விமானத்தில் இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 49 வயதான இந்திய பிரஜை கைது விமானத்தில் வைத்து இலங்கையை சேர்ந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 49 வயதுடைய இந்திய பிரஜையாவார். பாதிக்கப்பட்ட சிறுமி இலங்கையை சேர்ந்த 8 வயதுடையவராவார். இன்று புதன்கிழமை (13) சவுதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் விமான பணியாளர்களிடம் விடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
- 7 replies
- 836 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்! ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் don davis கூறியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2009 ஆம் ஆண்டில் தமிழர் இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறினார். அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார். தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், …
-
- 4 replies
- 435 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதை போன்று லசந்த விக்கிரமதுங்க, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த ஆண்டு மார்ச் 21,செப்டெம்பர் 09,ஒக்டோபர் 04,ஒக்டோபர் 18,நவம்பர் 24, நவம்பர் 30, டிசெம்பர் 06 மற்றும் டிசெம்பர் 08 ஆகிய திகதிகளில் இரு…
-
- 1 reply
- 415 views
-
-
இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை அறிவிக்கவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார். இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து இடம்பெற்ற கடுமையான விவாதங்களின் போது பிரிட்டனின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யன் உறுதியான பதிலை வழங்கதவறியுள்ளார். கென்சவேர்ட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோர்ல்பேர்ன் அமைச்சர நோக்கி நேரடியாக பின்வரும் கேள்வியை எழுப்பினார். இலங்கையின் உயர் சமூகத்தை சேர்ந்த யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர் என நம்பகத…
-
- 0 replies
- 258 views
-
-
13 DEC, 2023 | 02:25 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. சீனியின் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனி தனியார் இறக்குமதியாளர்களிடம் இருப்பதாகவும் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாகவும்…
-
- 0 replies
- 350 views
- 1 follower
-
-
"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி மக்களுக்கு ஜே.வி.பி. தலைவர் அழைப்பு Published By: RAJEEBAN 10 DEC, 2023 | 01:09 PM எங்களுடன் இணையுங்கள் நாங்கள் உங்கள் தேவைகளைபூர்த்தி செய்வோம் என வடபகுதி மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஊழல்மிகுந்த ஆளும்குழுவை தோற்கடிப்பதற்கான தேசிய விடுதலை இயக்கத்திலும் நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்து நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் எங்களின் நெருங்கிய அயல்நாடான இந்தியா மிகவும் வலுவான அரசியல் பொருளாதார மையமாக மாறியுள்ளமை எங்களிற்கு தெரியும். ஆகவே பொருளாதார அரசி…
-
- 13 replies
- 706 views
-
-
13 DEC, 2023 | 09:57 AM வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினர் நெடுங்கேணி பொலிஸாரால் அழைக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் புத்தர் சிலையும் வைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றிருந்ததுடன், ஆதிசிவன் ஆலய விக்கிரகங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் வழக்கு விசாரணைகளின் பின்னர் தொல்பொருட்களை சேதப்படுத்தாது வழிபாடு செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
12 DEC, 2023 | 06:18 PM (எம்.மனோசித்ரா) கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி குளத்தின் மேற்பரப்பில் 1727 மில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்படவுள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவின் யுனைற்றட் சோலர் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பூநகரி குளத்திலிருந்து புதிய கிளிநொச்சி உப மின் நிலையம் வரை தேவையான மின்கடத்திக் கட்டமைப்பை நிர்மாணித்தல் உள்ளிட்ட 100 வீத மின்கல வலுசக்தி காப்புக் கட்டமைப்புடனான 700 மெகாவொட் சூரிய மின்சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக யுனைற்றட் சோலர் எனர்ஜி கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவை கொள்கை ரீதியில் ஏற்றுக்…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
12 DEC, 2023 | 12:44 PM கற்பிட்டி அழகிய கடலில் விளையாட்டுத்தனமான டொல்பின் மற்றும் இராட்சத திமிங்கலங்களை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொல்பின் மற்றும் திமிங்கலங்களை டிசம்பர் முதல் அடுத்த வருடம் ஏப்ரல் இறுதி வரைக் காணமுடியும். பொதுவாக காலை நேரங்களில் டொல்பின்களைப் காணமுடியும். குறித்த டொல்பின் மற்றும் திமிங்கலங்களை இலந்தையடி, கண்டகுழி, கற்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்க்கலாம். ஸ்பின்னர் டொல்பின்கள், பாட்டில்நோஸ் டொல்பின்கள், புள்ளிகள் கொண்ட டொல்பின்கள், ஃப்ரேசரின் டொல்பின்கள் மற்றும் இந்தோ-பசிபிக் ஹம்பக் டொல்பின்களும் கற்பிட்டி கடலில் காணப்படுகின்றன. அத்துடன், நீல திமிங்கலங்கள் , மின…
-
- 0 replies
- 472 views
- 1 follower
-
-
நாட்டில் இனி குற்றங்களுக்கு தண்டனை இல்லை ! : புது சட்டம்? வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எதிர்பார்க்கப…
-
- 3 replies
- 343 views
- 1 follower
-
-
12 DEC, 2023 | 04:17 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணத்திலுள்ள சிறிய தீவுகளில் இரட்டை ரக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாண தீபகற்பத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் குடியிருப்போருக்கு மின்சாரம் வழங்குவதற்காக 11 மில்லியன் டொலர் பங்கான நிதி அனுசரணையை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு இந்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கமைய குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக இந்திய ஒப்பந்ததாரர்களிடமிருந்து மட்டும் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
திஸ்ஸ விகாரைக்கு சிங்கள மக்கள் படையெடுப்பு - சிறப்பு ரயில்களில் வந்தனர் ஆதவன். யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகா ரைக்கு நேற்று சுமார் 400 சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு ரயிலில் அவர்கள் அழைத்து வரப்பட்டு, திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு சிறப்பு உதவித் திட்டங்களும் அவர்களால் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, தையிட்டியில் இதுவரை விடுவிக்கப்படாதுள்ள காணிகளையும் அந்த மக்கள் பார்வையிட்டுள்ளனர். இது, காணிகளை சிங்கள மக்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சியா? என்று அந்தப் பகுதியிலுள்ள மக்கள் சந்த…
-
- 1 reply
- 407 views
-
-
யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொலை அச்சுறுத்தல். யாழில் கும்பலொன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினமான நேற்று(11) மாலை, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 06 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய கும்பல் குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்க முற்பட்டதாகவும், இதன்போது அயலவர்கள் கூடியமையினால் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. போதைப்பொருள் …
-
- 1 reply
- 359 views
-
-
கூலிப்படையாக சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு. வெளிநாடுகளில் கூலிப்படையாக செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைச்சிற்கோ அல்லது நாட்டின் இராணுவத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டால் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க முடியும், இல்லையெனில், அத்தகைய நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலின் போது உக்ரேனிய வெளிநாட்டு படையணிக்காக போரிட்ட மூன்று இலங்கை முன்னாள் இராண…
-
- 0 replies
- 378 views
-
-
காணாமல் போன சிறுவர்கள் குறித்து பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்! நாட்டில் கடந்த இரு நாட்களில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பொரலஸ்கமுவ – வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனும், கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவனும், ஹற்றன் – பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியும், யடியன தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவரும் என 4 பேர் காணாமல் போன சிறுவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காணாமல் போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும், …
-
- 0 replies
- 183 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 DEC, 2023 | 08:55 AM குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் நேற்று குறித்த வழக்கு இடம்பெற்ற போது நீதிமன்றிற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று விவாதங்கள் நடைபெற்று 29 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2024 அன்று வழக்கு தவணையிடப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது, குருந்தூர் மலையை…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-