Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடையை நீக்கக் கோரி வழக்குத் தாக்கல் [Monday, 2011-06-06 04:47:02] ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டும் என்று கோரி புலிகளின் ஐரோப்பிய பிரிவின் சார்பாக அம்ஸ்ரர்டாமில் இயங்கும் பொஹ்லர் குரூப்பின் சட்டத்தரணி விக்ரர் கொப்பே கடந்த வியாழன் அன்று ஐரோப்பிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை அடைவதற்கு இப்போது இராணுவ வழிமுறைகள் எதையும் பயன்படுத்துவதில்லை என்றும், முள்ளிவாய்க்கால் சூழலுக்குப் பின்னர் அவர்கள் அரசியல் மற்றும் வன்முறையற்ற முறைகளைப் பயன்படுத்தியே தமிழர்களுக்கான நீதியை அடைய, தமிழ் மக்களின் சுய தீர்மானத்துக்கான உரிமையை நடைமுறைப்படுத்த …

  2. ஐநா நிபுணர்குழு அறிக்கையை இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்றிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட போர்க்கால குற்றம் குறித்த அறிக்கையினை இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்றிருக்கிறது. தமிழ்பேசும் மக்கள் மீது பகுத்தறிவற்றமுறையில் சிறிலங்காவின் கடந்தகால அரசுகளும், குறிப்பாக தற்போதைய அரசும் இராணுவ தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன என இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது. சிறிலங்கா அரசும், விடுதலைப்புலிகளும் புரிந்ததாக நிபுணர் அறிக்கையில் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிறிலங்காவிலு…

  3. பிரசுரித்தவர்: NILAA June 5, 2011Add a comment மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் முஸ்லீம் எல்லைக்கிராமத்தில் அமைந்துள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.இது ஏறாவூர் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21வருடங்களுக்கு மேலாக மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் ஏறாவூர் தமிழ் மக்களது காணிகளை தமிழ் தரகர்களை வைத்து பெருந்தொகைப் பணத்திற்கு வாங்கும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் அதில் முஸ்லீம் நாடுகளின் உதவியுடன் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு கடந்த மாதம் ஏறாவூர் ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலய முன்னாள் தலைவர் ஒருவரிடம் இருந்து 35இலட்சம் ரூபாய் கொடுத்து அரை ஏக்கர் காணியை வாங்கியுள்…

  4. [Monday, 2011-06-06 04:32:55] எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தாயார் நளனி விக்கிரமசிங்க காலமானார். 92 வயதான இவர் சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணியவில் இவர் காலமானார். இவரது இறுதி கிரியைகள் பொரளை கனத்தை மயானத்தில் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி.

  5. போர்க்கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கடினமான கேள்விகளுக்கு உரிய பதில் இல்லை! - த எக்கனோமிஸ்ட் சிறிலங்கா படைத்தரப்பின் 'தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம் - சிறிலங்காவின் அனுபவங்கள்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கடினமான கேள்விகளுக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 'த எக்கனோமிஸ்ட்' சஞ்சிகை கடந்த 3ஆம் திகதி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம். 'போர்க்குற்றங்களையும், மனிதவுரிமை மீறல்களையும் மூடிமறைப்பதற்காகவே சிறிலங்கா படைத்தரப்பு இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளதாக மனிதவுரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்…

  6. [Monday, 2011-06-06 04:27:29] இலங்கையின் வடகடலில் அத்துமீறிய இந்திய மீனவர்களது மீன்பிடியைத் தடுப்பதற்கு இந்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு குடாநாட்டிலுள்ள கடற்றொழிலாளர்கள் தீர்மானித்துள்ளார்கள். எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடமாகாண கடற்றொழில் சங்கங்களினால் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழில் கூட்டறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார். "எமது கடல் வளங்களை இந்திய மினவர்கள் அள்ளிச் செல்ல நாம் வீடுகளில் பட்டினியாய் இருக்கிறோம்" மீனவ சமூதாயத்தின் வற்றாத சொத்தான எமது கடல் வள…

  7. [Monday, 2011-06-06 06:44:00] அமைச்சர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்தால் அவர்களின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தெல்லிப்பழை தந்தை செல்வா தொடக்கப் பள்ளியில் நேற்று நடைபெற்ற வலி.வடக்கு மக்களின் மீள்குடியமர்வு தேவைகள் குறித்து ஆராயும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில், மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக வருகை தந்த அமைச்சர் ஒருவர் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக குரல் எழுப்பினார். அங்கு எம்மை பேசுவதற்கு அனுமதி வ…

  8. [Monday, 2011-06-06 03:07:01] காங்கேசன்துறைத் துறைமுகத்தை புனரமைப்பது தொடர்பாக மற்றொரு புரிந்துணர்வு உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்தியா செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தவாரம் இந்த உடன்பாடு கைச்சாத்திடப்படும் என்றும், இந்த உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ள நாள் பற்றிய அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தமாதம் வெளியிடப்பட்ட இந்திய மற்றும் சிறிலங்காவினது கூட்டறிக்கையை அடுத்து, சிறிலங்காவில் தனது திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு இந்தியா அழுத்ததங்களைக் கொடுத்து வருகிறது. இதன்படி, காங்கேசன்துறைத் துறைமுகத்தின் புனர்நிர்மாணப் பணிகளை வேகப்படுத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனால் காங்கேசன…

  9. ஓய்வூதியத் திட்டம் வாபஸ் .. 06 ஜூன் 2011 ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் - ஜே.வி.பி. ஓய்வூதியத் திட்டம் வாபஸ் .. தனியார்துறை ஓய்வூதியத் திட்டம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டமை ஊழியர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது. ஓய்வூதியத் திட்டம் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டமை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அடைந்த பின்னடைவாக கருதப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பின்னடைவு ஆரம்பமாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பெரும்பான்மை ஆதரவினை இழந்து வருவதா…

  10. TNA நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் இயக்குநருமான ஈசரவணபவனுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்:- 06 ஜூன் 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகை நிறுவனத்தின நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவனுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 9.25 மணியளவில் அவரது கைத்தொலைபேசிக்கு அநாமதேய அழைப்பு ஒன்று சென்றுள்ளது. அந்த அழைப்பில் பேசிய மர்ம நபர் ஷஷஇனிமேலும் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். அத்துடன் இரண்டு நாள்களுக்குள் நாட்டை விட்டுத் தப்பியோடாவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும். என அச்சுறுத்தியுள்ளார். பின்னர் இந்த அச்சுறுத்தல் குறித்து யாழ்.பொலிஸ…

  11. வணக்கம், யூரியூப்பில் தற்செயலாக கீழ்வரும் காணொளியை பார்த்தேன். கீழ்க்கண்ட காணொளி globaltamilnews எனும் பெயரில் Jun 5, 2011 அன்று தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது:

  12. ஒரு சிங்களவரின் (மனச்)சாட்சி http://www.youtube.com/watch?v=ZABuRZLwqus&feature=feedf

  13. தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்தினை அரசாங்கம் வாபஸ் பெற்றமை தொழிலாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். அரசாங்கத்திடம் உண்மையான அதிகாரம் இல்லை என்பது இதிலிருந்து தற்போது அம்பலமாகிவிட்டது. அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு அப்பால் பலமான சக்தி, அதிகாரம் மக்களிடத்தில் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது என்று ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெவித்தார். பாரியளவான நிதி பிரச்சினைக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற அரசாங்கம் தனியார் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டிருக்கும் நம்பிக்கை நிதியில் 40 வீதத்தினை அரச வங்கிகளுக்கோ அல்லது திறை சேரி பிணை முறிகளுக்கோ மாற்றிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றது. அதற்காக தனியார் ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்கை வேறு வழியில் முன்னெடுக்க முயற்சிக்கி…

  14. இலங்கையின் கீழ்த்தரமான அரசியல்: அமெரிக்கா எச்சரிக்கை வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 5, 2011 இலங்கை அரசாங்கத்தினால், போர் வெற்றிவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பாதுகாப்புத்துறை கருத்தரங்கில் அமெரிக்க தூததரக அதிகாரி பங்குபற்றியதாக சிங்கள அரசு பிரச்சாரம் செய்திருந்தது. அமெரிக்கா சார்பில் கலந்துகொண்டவர்கள் என சில கருத்துக்களையும் சிங்கள அரசு பரப்பியது. ஆனால் இத்தைகைய சிங்கள அரசின் பரப்புரையினை அமெரிக்கா முற்றாக மறுத்துள்ளதுடன் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் போர்க்குற்றம் விசாரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் சிபார்சுகளிற்கும் தாம் முழுமையான ஆதரவில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது. உண…

  15. High-level Indian team to visit Lanka COLOMBO: A high-level Indian team, comprising National Security Advisor Shivshankar Menon, Foreign Secretary Nirupama Rao and Defence Secretary Pradeep Kumar is likely to be in Sri Lanka on June 16 and 17 to discuss a wide range of bilateral issues, an India High Commission official said. The Indian team will meet a three-member Sri Lankan team comprising Secretary to President, Lalith Weeratunga, Minister of Economic Development Basil Rajapaksa, and Defence Secretary Gotabaya Rajapaksa. When the two teams were set up during the Eelam War IV, the understanding was that they would meet periodically to discuss all …

    • 1 reply
    • 380 views
  16. Posted by குணா on 05/06/2011 in செய்தி எங்களுடைய மண்ணை நாங்கள் ஆளும் நாள் வரும்வரைக்கும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என வலிகாமம் வடக்கில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். மேற்படிக்கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றும்போது. சுதந்திரத்திற்கான போராட்டத்தில் எமது இனத்தைப்போல் மிகப்பெரிய துன்பங்களைச் சுமந்தவர்களும் அந்தத்துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்காக அளப்பரிய தியாகங்களையும், இந்த உலகத்தில் வேறு எந்த இனமும் செய்திருக்கமுடியாது. எனவேதான் அயர்லாந்தின் விடுதலைக்காகப் போராடிய மக்ஸ்பெயின் என்ற போராளியின் இரத்த சாசனத்தை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்கின்றோம். அற்ப சொற்ப சலுகைகளுக்க…

    • 2 replies
    • 517 views
  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினர் முடியப்பு ரெமீடியஸ் நேற்று அரசதரப்பின் பக்கம் சேர்ந்து கொண்டார். சபையின் அரசதரப்பு உறுப்பினர்கள் மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் அமைப்பாளர்கள் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஆளும் தரப்பு உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தனுக்கு எதிரான தீர்மானத் திலும் கையெழுத்திட்டார். யாழ். மாநகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினராக சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சு.நிஷாந்தன், மாநகர முதல்வருக்கும் அரசதரப்புக்கும் எதிராகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்படி கோரும் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்காக யா…

  18. 900 முன்னாள் போராளிகள் விடுதலைபொய்யானது! உறவினர்கள் கண்ணீருடன் திரும்பினர் Sunday, June 5, 2011, 19:54 சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பயிற்சி முடிந்தவர்களை விடுதலை செய்யும் வைபவம் வவுனியா கலாசார மண்டபத்தில் ஆட்டம், பாட்டு, கூத்து என்று கொண்டாட்டத்துடன் நடத்தப்பட்டது ஆயினும் ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டதைப் போன்று, 900 பேர் விடுதலை செய்யப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். தமது கணவன்மாரும், பிள்ளைகளும் விடுதலை செய்யப்படுவதை ஆவண ரீதியாக ஏற்றுக்கொள்வதற்காக குடும்ப உறவினர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு கையெழுத்துக்கள் பெறப்பட்டன. 900 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள் என ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. வ…

    • 1 reply
    • 631 views
  19. சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே.. ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான…

  20. Sunday, June 5, 2011, 15:57இந்தியா, தமிழீழம் புரட்சியால் உருவான கியூபா போன்ற நாடுகளின் பச்சை துரோகமும், பொதுவுடைமை பேசும் நாடுகளின் தவறான பார்வை, இந்தியா வழங்கிய நிதி, ஆயுதம், இராணுவ உதவி ஆகியவையே ஈழ போராட்டத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்து விட்டன என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில், இலங்கை அரசின் யுத்த குற்றவாளியென கூறும் ஐ.நா. அறிக்கையை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்:- ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு பொருளாதார தடை விதித்து வரிவிலக்கு, ரத்து செய்வது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம் நம்பிக்கை ஒளி…

    • 2 replies
    • 875 views
  21. ஞாயிற்றுகிழமை, யூன் 5, 2011 இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனிதப் பேரவலத்தைப் பற்றி பிரிட்டனின் "சனல்4" தொலைக்காட்சி ஒருமணி நேர ஆவணப்படத்தைத் தயாரித்திருந்தது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் இந்த ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் காண்பிக்கப்பட்டது. பலநாடுகளின் தூதர்கள் அதனைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கலங்கினர். அதில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளைத் தம்மால் பார்க்க முடியவில்லை என்று கூறினர். பலர் திகைத்தே போயினர். . ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்ட போது இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டிருந்த பிரதி சட்டமா அதிபர் ஏ.எம்.டி.நவாஸ், அந்தக் காட்சிகள் பொய்யானவை என்று பின்னர் கலந்துரையாடலில் மறுத்தார். அந்த வீடியோ நம்பகத்தன்மையற்றது என்றார்…

    • 1 reply
    • 767 views
  22. Sunday, June 5, 2011, 19:28சிறீலங்கா வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் இணைந்து கடந்த இரண்டாம் திகதி ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்தது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இலங்கைத் தூதுவர்களை ஜனாதிபதி திட்டித் தீர்த்துள்ளார் . ஜேர்மனி, இத்தாலி, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்களின் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் போதுமான எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் மிக சொற்பமான மக்களே…

    • 1 reply
    • 1.2k views
  23. இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கு முன், 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வன்செயல்கள், இலங்கையின் அரசியல் போக்கையே மாற்றி அமைத்தன.நாட்டில் அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாகத்துக்கான ஒரு முன்னெடுப்பு என்று கூறப்பட்டு மாவட்ட அபிவிருத்து சபைகளுக்கான தேர்தல்களை ஜூன் மாதம் நான்காம் தேதி நடத்த இலங்கை அரசு முன்வந்தது. அப்போது கொழும்பில் ஆட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளர்களை வடக்கே யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைத்து தேர்தலில் தமக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்த முயன்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட, தமிழிர் ஐக்கிய விடுதலை கூட்டணியினர் நாச்சிமார்கோயிலடி என்ற இடத்தில் ஒரு தேர்தல் கூட்…

  24. யாழ். குடாநாட்டில் அடுத்த ஓரிரு வருடங்களில் பெரும் குடிதண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. தொடர்ச்சியாக நிலத்தடி நீரைப் பெருமெடுப்பில் உறிஞ்சுவது, மலக் கழிவுகள் வெளியேற்றப்படாமல் நிலத்துக்குள்ளேயே புதைக்கப்படுவது, தொடரும் மணல் அகழ்வுகள் என்பவற்றால் குடாநாட்டில் நிலத் தடி நீர் நச்சுத் தன்மையுடையதாக மாற்றமடைவதும் உவர் நீராக மாற்றம் அடைவதுமே குடிதண்ணீர் தட் டுப்பாடு ஏற்படக் காரணமாகும் என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகாரசபை பேரிடர் முகாமைத்துவ அமைச்சின் இயற்கை வள அலகு மற்றும் தேசத் தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் மனித உரிமைகள் பிரிவு என்பன இணைந்த…

  25. [sunday, 2011-06-05 05:55:02] ஆசியப் பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும் வலுப்படுத்துமென்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் நேற்று சனிக்கிழமை உறுதியளித்துள்ளார். தனது நேச அணிகளைப் பாதுகாப்பதற்காகவும் கடல் மார்க்கங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களுடன் அமெரிக்க இராணுவத்தின் வலுவான பிரசன்னம் தொடர்ந்திருக்கும் என்று அவர் கூறியுள்ளார். சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். வாஷிங்டனின் நிதிப் பிரச்சினைகள் மற்றும் பிராந்தியத்தில் சீனாவின் பலம் அதிகரித்துவருகின்றமை என்பது தொடர்பாக ஆசிய நாடுகளுக்கு மீள உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக…

    • 2 replies
    • 793 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.