ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
கடந்த மே 13 தேதி வெளியான தமிழக தேர்தல் முடிவுகளானது, உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு காரணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை இனவெறி அரசு, ஈழத்தில் காவுக்கொள்ள துணைப்போன காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் வாங்கிய பலத்த அடிதான். தமிழனை அழிக்க துணைப்போன காங்கிரஸ் கட்சி, இப்பொழுது தமிழ்நாட்டில் அழிந்து போகும் நிலை வந்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளில், 58 தொகுதிகளில் தோல்வியை கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிரிந்ததால்தான், அந்த 5 தொகுதிகளில் கூட காங்கிரஸ் வென்றுள்ளது. தமிழக மண்ணில், காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள இந்த மிகப்பெரும் சரிவுக்கு காரணம்…
-
- 2 replies
- 649 views
-
-
காங்கிரசின் தோல்வியே நெடியவனின் கைதுக்கு காரணம் – இந்தியாவின் எல்லை கடந்த பயங்கரவாதம் May 25th, 2011 ஐரோப்பிய செய்தியாளர் அண்மையில் தமிழகத்தில் இந்திய காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்விக்கு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் நெடியவன் தலைமையிலான புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தான் வலுவான காரணம் என நம்பியுள்ள இந்திய புலானாய்வு அமைப்பு நெதர்லாந்து அரசுக்கு கொடுத்துள்ள அழுத்தம் காரணமாகவே நெடியவன் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமான த டெய்லி மிரர் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குமரன் பத்மநாதனின் தலைமையை நெடியவன் உட்பட தமிழகத் தலைவர்களான வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது நட…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பின்னணியில் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இந்திய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத்துறையான றோ மேற்கொண்டிருக்கின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்க…
-
- 4 replies
- 1.2k views
-
-
நீண்டபோராட்டத்தின் பின் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம்- இன்னும் சவால்கள் காத்திருக்கின்றன! Published on May 25, 2011-5:13 pm · No Comments கடந்த 9ம் திகதி மாவட்டபுரம் கந்தசாமி கோவில் கிழக்கு வீதியில் 1000 ற்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட இடைவேளைக்குப்பிறகு பெரும் எதிர்பார்ப்புடன் கூடியிருந்தார்கள். அதற்கு காரணம் வலி வடக்கில் மேலும் சில கிராமங்களில் பிற்பகல் 3.00 மணியளவில் மீளக்குடியமர்வு இடம்பெறவுள்ளதாகவும் விசேட பூஜை வழிபாட்டுடன் மீள குடியமர்வு இடம்பெற உள்ளதாகவும் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகமாயிருந்தார்கள். அக்கூட்டத்திற்கு முன்னர் அரசாங்கத்துடன் இர…
-
- 0 replies
- 809 views
-
-
சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.பி.உரைத்த யதார்த்தம் – வலம்புரி! பிரசுரித்தவர்: admin May 25, 2011Add a comment அரசாங்கம் தனது நலன் கருதியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நம்பிக்கையுடன் பேசுகிறது. ஆனால் அரசோ தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதாக இல்லை. ஆறுதடவைகள் அரசுடன் பேசிவிட்டோம். அந்தப் பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இது விடயத்தில் நாடாளுமன்ற உறுப…
-
- 0 replies
- 1.2k views
-
-
மீள்குடியேறியுள்ள மக்களின் குமுறல்கள்! இலங்கையில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகின்றன. எனினும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகள் மீள்குடியேற்றப்பகுதிகள் அனைத்திலும் சீராக நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அடிப்படை வசதிகளின்றி மீள்குடியேறிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் அளவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் அந்த மக்கள் அனுபவிக்கும் கஸ்டங்கள் அனைத்தும் வெளியில் தெரிவதில்லை. இருப்பினும் இந்தக் கஸ்டங்களின் கோர முகத்தைக் காட்டும் வகையில் வவுனியா பூவரசங்கு…
-
- 0 replies
- 578 views
-
-
அரசை நம்பாவிட்டால் சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேசுங்கள் – கூட்டமைப்புக்கு சிறிகாந்தா கோரிக்கை! Published on May 25, 2011-6:01 pm · No Comments அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்று வருகின்ற பேச்சுக்கள் முறியும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு கருதினால் அதிலிருந்து உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியேறவேண்டும் அதைவிடுத்து அரசாங்கமே முறிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அது எந்த வகையான அரசியல் என்று தமக்கு தெரியவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார். தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் சிறிகாந்தா இன்று மாலை அதன் யாழ். அலுவலகத்தில் நடாத்…
-
- 0 replies
- 988 views
-
-
மன்னாரில் இன்ரநெட் கபே நோக்கி மாணவர்கள் படை எடுப்பு- பாலியல் காட்சிகளை பார்ப்பதாக குற்றச்சாட்டு! Published on May 25, 2011-1:06 pm · No Comments மன்னார் மாவட்டத்தில் இயங்கும் தனியார் இணைய நிலையங்களினூடாக (internet) பாலியல் தொடர்பான படங்களை மாணவர்கள் அதிகம் பார்வையிட்டு பிரதிசெய்து பாடசாலைகளுக்கு கொண்டு செல்வதாகவும் அதனை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் அரச செயலகத்தின் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அலுவலகர் மைக்கல் கொலின் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட இணைய நிலையங்கள் உள்ளன. மன்னாரில் உள்ள பாடாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் இணைய நிலையத்திற்குச் சென்று பாலியல் தொடர்பான…
-
- 2 replies
- 1.1k views
-
-
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு தொடர்பான கேள்விகளால் பதற்றமடைந்த ரஜீவ! புதன், 25 மே 2011 17:47 அவுஸ்திரேலியாவின் கன்பரா பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் “வடபகுதியின் நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த 23 ஆம் திகதி “வடபகுதியின் நிலை” என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ரஜீவ விஜேசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் எழுப்பிய கேள்விகளால் அவர் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, நல்லிணக்கப்பாடு …
-
- 1 reply
- 1.2k views
-
-
மேர்வினை கண்காணித்துவரும் ஐரோப்பிய பாதுகாப்பு படையினர் Posted by இரும்பொறை on 25/05/2011 in செய்தி | 0 Comment எதிர்வரும் வாரம் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கூட்டத்தொடரை ஜெனீவாவில் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். இதனை அறிந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேர்வினின் ஆட்கள் தொடர்பில் உன்னிப்பான அவதானிப்புக்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது நாடுகளில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளால் தமது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என ஐரோப்பிய நாடுகள் அச்சமடைந்துள்ளன. தனது அணிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மைய…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு அப்பால்: ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி – நூல் வெளியீடு ராஜீவ் காந்தி. இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது. இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ? மேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா ? இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா ? இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள்” என்ற புத்தகம் வெளிவருகிறது. …
-
- 0 replies
- 1.9k views
-
-
சீன இராணுவ பிரதிதளபதிக்கு இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திக்க அனுமதி இல்லை! Published on May 25, 2011-1:18 pm · No Comments கொழும்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு மே 31 தொடக்கம் ஜூன் 2 வரை நடத்தவிருக்கும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் அனுபவங்கள் பற்றிய கருத்தரங்கிற்கு செல்லும் வழியில் சீன நாட்டு இராணுவத்தின் பிரதி தளபதி ஜெனரல் மாஷியாசென் புதுடில்லியில் ஒரு நாள் தங்கி நின்று இந்திய இராணுவ அதிகாரிகளை சந்திப்பதற்கு இந்தியா அனுமதிக்கவில்லை. சீன இராணுவ உயர் அதிகாரி இது தொடர்பாக விடுத்த கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி நிராகரித்து விட்டார் என்று ஐஏஎன்எஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அக்காலத்தில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பாகிஸ்தான், ஜேர்ம…
-
- 0 replies
- 704 views
-
-
புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு ஆண்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் ஆட்சி செய்கிறார் என பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். லக்பிமவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பாகத் தொடர்ந்தும் கூறுகையில், யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்ஸிலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 25 பேரில் 13 பேர் டக்ளஸ் தேவானந்தாவால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதேபோன்று யாழ்.பல்கலைக்கழக கவுன்ஸில் கூட்டம் நடைபெறு முன்பாக டக்ளஸினால் ஒரு கவுன்ஸில் கூட்டம் நடாத்தப்படும். பல்கலைக்கழக கவுன்ஸில் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான முடிவுகள் அங்கு எடுக்கப்பட்டு விடும். துணைவேந்தர் தெரிவில…
-
- 0 replies
- 775 views
-
-
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை! இலங்கையின் உத்தியோகபூர்வ பதிலை பான் கீ மூன் எதிர்பார்க்கிறார் [ புதன்கிழமை, 25 மே 2011, 11:02.40 AM GMT ] இலங்கையின் போர்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ பதிலை இன்னமும் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கு அனுப்பவில்லை என்றும், அதனை செயலாளர் நாயகம் பான் கீ மூன் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இ;ந்த விடயத்தை ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் பேச்சாளர் மார்டின் நெசக்கி நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை இன்னும் ஜெனீவாவின் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் …
-
- 0 replies
- 605 views
-
-
ஜெயலலிதாவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்: பழ.நெடுமாறன் புதன், 25 மே 2011( 16:19 IST )'' முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்'' என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவ…
-
- 0 replies
- 494 views
-
-
"தென்மேற்குப் பருவக்காற்று" திரைப்படத்தை இயக்கியமைக்கான தேசிய விருதை தேசியத்தலைவரின் தாயாரான பார்வதியம்மாளுக்குச் சமர்ப்பித்த இயக்குனர் சீனு ராமசாமி அண்மையில் வெளிவந்த தமிழ்ப்படமான தென்மேற்குப்பருவக்காற்றை இயக்கியமைக்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் அவ்விருதை தமிழீழத் தேசியத்தலைவரின் தாயாரான காலம்சென்ற பார்வதியம்மாளுக்குச் சமர்ப்பிப்பதாகக் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உலகெங்குமிலுமுள்ள ஈழத்தமிழர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் பலரிடமிருந்து சீனு அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் வந்துகொண்டிருக்கின்றன. தனக்குக் கிடைத்த தேசியவிருதினை விடவும் உலகெங்குமுள்ள ஈழத்தமிழர் மற்றும் ஈழ ஆதரவாளர்களின் பாராட்டுதலும், நட்புமே பெரியது என்று இந்த இயக்க…
-
- 1 reply
- 983 views
-
-
புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு ஆண்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் ஆட்சி செய்கிறார் - 25 மே 2011 பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்:- புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு ஆண்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் ஆட்சி செய்கிறார் என பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார். லக்பிமவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் இது தொடர்பாகத் தொடர்ந்தும் கூறுகையில், யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்ஸிலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 25 பேரில் 13 பேர் டக்ளஸ் தேவானந்தாவால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதேபோன்று யாழ்.பல்கலைக்கழக கவுன்ஸில் கூட்டம் நடைபெறு முன்பாக டக்ளஸினால் ஒரு கவுன்ஸில் கூட்டம் நடாத்தப்படு…
-
- 5 replies
- 988 views
-
-
சிங்கப்பூரில் திருட்டுத்தனமாக தங்கியிருந்த 48 இலங்கையர் கைது [ புதன்கிழமை, 25 மே 2011, 04:50.00 AM GMT ] சிங்கப்பூரில் திருட்டுத்தனமாக தங்கியிருந்த 48 இலங்கையர் நேற்று முன்தினம் சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் செயற்படும் அனைத்து தங்குவிடுதிகளையும் நேற்று முன் தினம் குடிவரவுத்திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்ட போதே சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 48 இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 15-70 வரையான வயதுப் பருவங்களைக் கொண்டவர்கள் என்றும் தற்போது அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன. அத்துடன் கடந்த வாரமும் சிங்கப்பூரி…
-
- 1 reply
- 900 views
-
-
ஜெ.வை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்ப 'ரா' முயற்சி? செவ்வாய், 24 மே 2011( 16:23 IST ) முந்தையது|அடுத்தது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'ரா' மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய ) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும், அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது. இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்பு கொண்…
-
- 0 replies
- 651 views
-
-
May 24, 2011 / பகுதி: செய்தி / ஐநா நிபுணர்குழு அறிக்கையின் சமகால நிலவரம் - ஆய்வு நீதி என்பது காலதாமதம் இல்லாமல் வழங்கினால் தான் பயனுள்ளதாக இருக்கும். இழுபறிப்பட்டுக் கால வரையின்றிச் செல்லும் நீதி நடவடிக்கை எதிர்பார்த்த பயனைத்தருவதில்லை. இழுபறிப்பட்ட நீதி நீதியல்ல என்று சொல்வதில் அர்த்தமிருக்கிறது. இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐநா நிபுணர்குழு அறிக்கை 2011 மார்ச் 31ம் நாள் வெளிவந்தது. ஐநா பாதுகாப்புச்சபை எடுக்கும் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை தங்கியிருக்கிறது. இது செயலாளர் நாயகத்தின் வாக்குமூலம். எனது கடமை முடிந்துவிட்டது. இதற்கு மேல் என்னால ஒன்றும் செய்ய முடியாது என்பதைப்போல் பான் கீ மூனின் பேச்சும் நடவடிக்கைகளும் இருக்கின்றன. அவர் அறிக்கை தொடர்…
-
- 0 replies
- 667 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வர உத்தேசித்து உள்ளது. இக்குழுவினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலி முக்கியஸ்தர்கள் 13 பேரை இலங்கையில் விசாரிக்கின்றமைக்கு எண்ணி உள்ளார்கள். இதற்கான அனுமதியைப் பெறுகின்றமை தொடர்பாக இலங்கையின் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுடன் பேசி வருகின்றார்கள். இதே போல அமெரிக்கா சென்று விசாரணை நடத்துகின்றமைக்கும் யோசித்து உள்ளார்கள். புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்கிற வழ…
-
- 12 replies
- 2.5k views
-
-
A top LTTE leader Kumaran Pathmanathan has apologised to India for V Prabhakaran's "mistake" of killing former Prime Minister Rajiv Gandhi. He said Rajiv's assassination was "well planned and done actually with Prabhakaran and (LTTE intelligence chief Pottu Amman). Everyone knows the truth". In an interview to CNN-IBN Firstpost, Pathmanathan, who was Treasurer of LTTE and its chief arms procurer, said, "I want to say to the Indian people and especially to the Gandhi family...I want to apologise for Prabhakaran's mistake. Please forgive us. We beg you....Sorry for all this. We know the feelings of the son (Rahul) of Rajiv Gandhi....How father and daughter are att…
-
- 50 replies
- 6.5k views
- 1 follower
-
-
சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதில் கூட்டமைப்பின் அணுகுமுறை! - சம்பந்தன் விளக்கம் [ புதன்கிழமை, 25 மே 2011, 04:54.40 AM GMT ] தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அணுகுமுறைகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது கூடுதலான அளவுக்கு இந்தியாவிடமும் அமெரிக்காவிடமுமே நெருக்கமாகத் தொடர்புகளை வைத்திருக்கிறோம் என்று கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார். அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரஷ்யா, சீனா போன்ற நாடுகளைக் கேட்டுக்கொள்ளவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பில் சம்பந்தனிடம் வினவிய போதே அவர் இவ்வ…
-
- 0 replies
- 663 views
-
-
தமிழர் தேசம் பௌத்த பூமியாகிறதா? ஜிரிஎன் இற்காக ஞான. கௌதமன் 25 மே 2011 இலங்கையில் சிங்கள மக்களால் பின்பற்றப்படும் பௌத்த மதமும் அதன் கடவுளரான புத்தரின் சிலையும் ஈழத் தமிழர்களின் நிலப்பகுதியை அதிகமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இலங்கையில் அறுபதாண்டு அறவழிப் போரும் முப்பாதாண்டு ஆயதப் போரும் ஒரு நெருக்கடியான கால கட்டத்தை அடைந்துள்ள இன்றைய நிலையில் தமிழர்களின் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் பௌத்த மதத்தை பரப்பும் நடவடிக்கைகளில் இலங்கை அரசும் இலங்கை இராணுவத்தினரும் வெளிப்படையாக ஈடுபட்டு வருகின்றனர். ஈழத் தமிழர்கள் ஒரு ஆபத்தான எதிர்காலத்தை அடைவதற்காகவே இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு மேற் கொள்ளப்படுகின்றன என்று பரவலாக மக்கள் மத்தியில் பதற்ற நிலமைகள் உருவாகியுள்ளன. …
-
- 0 replies
- 831 views
-