Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகவியலாளர் கைது _ வீரகேசரி இணையம் 4/25/2011 7:13:41 PM Share லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஊடகவியலாளரை கிரிந்திவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். சாந்த விஜயசூரிய என்ற ஊடகவியலாளரையே ஐவரடங்கிய பொலிஸ் குழுவொன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கைதான ஊடகவியலாளர் நாளை பூகொடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். __

  2. யாழ். குடாநாட்டில் இந்த வருடத் தொடக்கத்திலிருந்து நேற்று வரை 45 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்கில் தொங்கித் தற்கொலை, தீ மூட்டித் தற்கொலை, நஞ்சருந்தித் தற்கொலை எனப் பல்வேறு வகைகளில் இந்த 45 பேரும் மரணமடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 8 பேரும், பெப்ரவரி மாதம் 9 பேரும், மார்ச் மாதம் 16 பேரும் ஏப்ரல் மாதம் (நேற்று வரை) 12 பேரும் தற்கொலை மூலம் மரணமடைந்துள்ளனர்.இவற்றை விட நீரில் மூழ்கி ஜனவரி மாதம் 7 பேரும், பெப்ரவரி மாதம் 8 பேரும், மார்ச் மாதம் 10 பேரும், ஏப்ரல் மாதம் (நேற்று வரை) ஒருவருமாக 26 பேர் மரணமடைந்துள்ளனர்.குடும்பத் தகராறு மற்றும் ஏனைய காரணங்களால் கொலை செய்யப்பட்டவர்கள், ஜனவரி மாதம் 2 பேரும், பெப்ரவரி மாதம் 3 பேரும், மார்ச் மாதம் 6 ப…

  3. UN: Sri Lanka mass deaths may be 'war crimes' Deaths of tens of thousands in the government's final 2009 offensive against Tamil rebels 'may amount to war crimes.' Last Modified: 25 Apr 2011 22:02 A UN panel said that "tens of thousands" of deaths in the Sri Lankan government's final 2009 offensive against Tamil separatists may amount to war crimes. Ban Ki-moon, UN secretary-general, said on Monday that he could not order an international investigation into the deaths but he has decreed an inquiry into United Nations' actions during the conflict following criticism by the panel. The UN panel was set up following a visit by Ban to Sri Lanka shortly after…

    • 1 reply
    • 1.4k views
  4. Started by hari,

    Producer, DJ, singer, fashion designer. Sri Lankan pop star M.I.A. has global influence across many genres. That put her on this year's TIME 100 Read more: http://www.time.com/time/video/player/0,32068,21552990001_1894785,00.html#ixzz1KXVVu5NE

  5. வரலாற்றில் இந்தியாவின் இடம் எது? பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும், என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்துவைத்திருக்கும்! வரலாறு என்பது எப்போதுமே இப்படித்தான். அரபு உலகில் இப்போது அதுதான் நடக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா? துனிஷியாவின் ஸைன் அல் எபிடைன் பென் அலி; எகிப்தின் ஹோஸ்னி முபாரக்; லிபியாவின் மம்மர் கடாபி… இவர்கள் எவருமே மேற்கு உலகுக்கு எதிரிகள் அல்ல… குறிப்பாக அமெரிக்காவுக்கு! உலகின் பெட்ரோலியச் சுரங்கமான அரபு உலகின் இத்தகைய சர்வாதிகாரிகளே – மக்கள…

  6. செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 26, 2011 மலேசிய வாழ் தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையினை வரவேற்றுள்ளனர். பிரஸ் தொலைக்காட்சிக்கு இது குறித்து செய்தியினை வழங்கிய மலேசிய தமிழர்களின் ஈழ செயற்பாட்டிற்கான தலைவரும் அனைத்துலக தமிழர் நிவாரண குழுவின் தலைவருமான சட்டவாளர் பசுபதி சிதம்பரம் அவர்கள், நிபுணர் குழுவினை நாம் வரவேற்பதுடன் ஐக்கிய நாடுகளின் விசாரணையினையும் நாம் வரவேற்பதுடன் எமது ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்;என்றார். மேலும் பிரஸ் டிவி க்கு செவ்வி வழங்கிய ஈழத்தமிழ் வாலிபர் ஒருவர் தான் மெனிக் முகாம் வலையம் நான்கில் பட்ட கஸ்டங்களையும் இலங்கை அரசின் கொடூரங்களையும் எடுத்துரைத்துள்ளார். http://eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE…

    • 0 replies
    • 1.2k views
  7. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அறிக்கையினால், ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை அவமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிற்கு கடிதமொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கான ரோம அரசியலமைப்பிற்கு இலங்கையர் என்ற ரீதியில் கையொப்பம் இடவில்லை என்றாலும், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான அறிக்கையொன்றை தயாரித்திருப்பதன் மூலம் நாட்டிலு…

    • 0 replies
    • 1.3k views
  8. இன்று வெளியிடப்படுவதாக இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை இன்றும் வெளியாகவில்லை. இது தொடர்பாக இன்னசிற்றி பிரஸ் தெரிவிக்கையில், நாம் இன்று நிபுணர் குழு அறிக்கை எம்மிடம் தரப்படும் என எதிர்பார்த்திருந்தோம். அனால் ஐக்கிய நாடுகள் சபை இதுவரை தரவில்லை. ஆனால் நாம் ஐக்கிய நாடுகள் வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற ஸ்கான் கொப்பியினை இணையத்தில் பார்வைக்காக தரவேற்றம் செய்தோம். ஆனால் அதனை அகற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபை கூறியது இதனால் அகற்றிவிட்டோம். பான் கி மூன் ஏன் இப்படி காலதாமதம் ஆக்குகின்றார் என தெரியவில்லை. ஆனால் நாங்கள் ஊகிக்கின்றோம் என்னவென்றால்; அந்த அறிக்கையில் 171-172 ஆம் பக்கத்தில் வெள்ளைக்கொடி விவகாரத்தில் நம்பியார் சிக்குப்பட்டுள்ளார். இந்த சிக்கலை எப்பட…

    • 0 replies
    • 1.1k views
  9. வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல்களை பார்வையிட இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அரசு, வவுனியா அழைத்து செல்வதாக உறுதியளித்த போதும் இன்று தம்மை அழைத்துச் செல்லவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தம்மை அழைத்து செல்வதாக உறுதியளித்த அரசிடம் இன்று அது குறித்து வினாவிய போது எதுவித பதில்களும் இதுவரையில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். முன்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வவுனியா தடுப்பு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக கூறி ஏமாற்றப்பட்டதுடன், இன்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் கூட்டமைப்பு ஏமாற்றப்பட்டுள்ளமை குறி…

    • 2 replies
    • 1.3k views
  10. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தற்போதைய இலங்கை தொடர்பான அறிக்கை உள்நாட்டு அரசியலில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமைகள் மீறல்கள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளதால் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. மேலும், மனித உரிமை மீறல்களுடன் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பிரிவினர், அரசியல்வாதிகள், பாதாள உலகினர் கலக்கத்தில் உள்ளனர். யுத்தம் நடை பெற்ற காலப்பகுதியிலும் யுத்தம் முடிவடைந்த இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியிலும் நாம் எதைக் கூறிவந்தோமோ அதையே இன்று பான் கீ மூனின் அறிக்கையில் காண முடிகின்றது. காணாமல் போதல், அரசியல் கைதிகள், கொலை செய்யப்பட்டவர்கள், பயமுறுத்தல்களுக்கு ஆளானவர்கள், சொத்துகள் அழிக்கப்…

  11. ஐ.நாவுக்கு ஆதரவாக ஏன் தமிழினம் ஓரணியில் திரளக் கூடாது? வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் அநியாயமாகப் பலியாகிய பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற உண்மையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில் வன்னி இறுதிக் கட்டப் போரில் ஒலித்த அவலக் குரல்கள் அந்த மக்களுடன் மரணித்து விடவில்லை; சர்வதேசத்தின் மனச்சாட்சியை உசுப்பிக் கொண்டிருப்பதின் சாட்சியாகவே நிபுணர் குழு வடிவமெடுத்துள்ளது. இறுதிக் கட்டப் போரின்போது கனத்த மனதுடன் மனதுக்குள் அழுது புலம்பும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தனர். அந்தளவுக்கு வெற்றிக் கோஷங்கள் தமிழ் மக்களை வாய் மூடி மௌனிகளாக்கியது. இன்றும்கூட அதே நிலைதான். ஆ…

  12. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் எதிர்த்துள்ளன. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கெதிராக பாதுகாப்புச் சபையின் நான்கு நாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன. அவற்றில் வீட்டோ அதிகாரமுள்ள ரஸ்யா, சீனா ஆகிய நாடுகளும், தற்காலிக உறுப்புரிமை கொண்ட இந்தியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளும், இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. பாதுகாப்புச் சபையின் மொத்த உறுப்பினர் நாடுகளான பதினைந்து நாடுகளில் ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரம் கொண்டவையாகவும், மேலும் பத்து நாடுகள் இரண்டு வருட உறுப்புரிமை அடிப்படையில் தற்காலிகமாக சுழற்சி முறையில் இணைத்துக் கொள்ளப்படும் நாடுகளாகவும் உள்ளன. இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் நிபுண…

  13. தமிழ் ஈழரின் இலக்கிய போராளி எஸ்.பொ. அவர்களை வாழ்த்தும் நிகழ்வு நாள் : 23-04-2011, சனிக்கிழமை மாலை 5 மணி இடம்: கன்னிமரா நூலக அரங்கு, சென்னை இந்நிகழ்ச்சி தாயக நேரப்படி மாலை 6 மணிக்கு மீனகம் இணைய தளத்தில் நேரலை செய்யபடுகிறது

    • 2 replies
    • 1.1k views
  14. மண்டேலா தலைமையிலான ஜனநாயக அமைப்பு போர்க்குற்ற விசாரணைகளை வலிவுறுத்தும் நெல்சன் மண்டேலா தலைமையிலான உலகளாவிய ஜனநாயக அமைப்பு இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்துகின்றன. சர்வதேச நாடுகளின் முக்கிய தலைவர்கள் பலர் ஒன்று சோ்ந்து தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தலைமையில் “த எல்டர்ஸ்” எனும் பெயரிலான அமைப்பொன்றை உருவாக்கிக் கொண்டுள்ளனர். அந்த அமைப்பின் ஒட்டு மொத்த உறுப்பினர்களும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை யொன்றையும் வெளியிட அவர்கள் தீர்மானித்துள்ளனர். ” த எல்டர்ஸ்” அமை…

    • 5 replies
    • 1.4k views
  15. இலங்கைத் தமிழர்கள் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்: கலைஞர் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற அந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம் என, முதல் அமைச்சர் கலைஞர் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். செய்தியாளர்: இலங்கை பிரச்சினை குறித்து ஐ.நா. நியமித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. அதற்குள் இது தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே உள்ள பரஸ்பர விஷயமாகக் கருதப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவே? முதல்வர் கலைஞர…

  16. போர்க்குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் அறிக்கை கசிந்து இரண்டு நாட்களுக்கு மேலாகின்றது!! ... ஆனால் ஐநாவின் அறிக்கை வர முன்னம் சிங்கள அரசு, அதற்கெதிரான வலிந்த தாக்குதல்களிலும், தற்பாதுகாப்பு தாக்குதல்களிலும் மூர்க்கமாக ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.வீதிப்போராட்டங்களுக்கான அழைப்பு, சர்வதேசத்தை கட்டுப்படுத்த அவர்களின் சிநேக நாடுகளுடன் ஆலோசனை என ஓர் போரையே பிரகடனப்படுத்தியது போல் செயற்படுகிறார்கள்!!! ஆனால் இற்றைவரை நமக்கான அரசென்று தேர்ந்தெடுத்தவர்கள் மூச்சே விடாமல் நித்திரையில் இருக்கிறார்கள்??? அல்லது பிணங்களாகி விட்டதனால் மூச்சு விடாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை???? இந்த நாடு கடந்த அரசுதான் வாய் திறக்க வெட்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு போட…

  17. A doctor's photos document the humanitarian crisis unfolding in Sri Lanka Read more: http://www.time.com/time/video/player/0,32068,18775639001_1889799,00.html#ixzz1KXWF62Kj

    • 0 replies
    • 1.6k views
  18. வவுனியா நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 25, 2011 லங்கா ஈ நியூஸ் இணைய தள ஆசிரியர் களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டவாளர் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். லங்கா ஈனியூஸ் இணையத்தள ஆசிரியர்களுள் ஒருவரான சாந்த விஜேசூரியா ஆவர்களே கைது செய்யபப்ட்டுள்ளவராவார். Eelanatham

    • 0 replies
    • 932 views
  19. நிச்சயமற்றதொரு நிலையில் சிறிலங்காவிற்கான இந்தியாவின் வீட்டுத் திட்டம் [ திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011, 09:01 GMT ] [ அ.எழிலரசன் ] போரினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவினது வடக்குப் பகுதியில் 50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக கேள்விமுறையின் ஊடாகத் தேந்தெடுக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்களின் செயற்பாடு தொடர்பாக எழுந்த பிணக்கே இந்த வீட்டுத் திட்டம் தொடர் தாமதங்களைச் சந்திப்பதற்குத் தாமதம் எனப்படுகிறது. . ஒப்பந்த அடிப்படையில் இந்த வீட்டுத் திட்டத்தினை முன்னெடுப்பதற்காக கேள்வி முறையின் ஊடாக இரண்டு இந்திய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். 500,000 ரூபாய் பெறுமதியில் வீட்டினை நிர்மாணிக்க முடியும் என ஆரம்பத்தில் கூறிய இந்த இந்திய நி…

  20. சுவிஸ் சிவராம் நினைவுப் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ‘சிவராம் மறைவின் பின் 6 வருடங்கள்’, ‘ஸ்ரீலங்காவின் ஊடக சுதந்திரமும் சட்ட அமுலாக்கமும்’ எனும் தலைப்பில் நினைவுப் பேருரையொன்று நடைபெறவுள்ளது. இதில், சுவிட்ஸர்லாந்தில் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஸ்தாபக தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுனந்த தேசப்பிரிய உரையாற்றவுள்ளார். இம்மாதம் 24ஆம்திகதி பிற்பகல் 3.30 மணிக்கு பேர்ண் நகரில் Bernstrasse 171, 3052 Zollikofen (BE) இல் இந்த நினைவுப் பேருரை நடைபெறவுள்ளது. தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் (ஆகஸ்ட் 11, 1959 – ஏப்ரல் 28, 2005) இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம…

    • 1 reply
    • 759 views
  21. மோஹான் பீரீஸ் இன் வாயை மூடிய அமெரிக்க தூதுவர் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் நடத்திய விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறீலங்கா நீதி ஆணையாளர் நாயகம் மோஹான் பீரீஸ் இற்கும் கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீசிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மோஹான் பீரீஸ் ஐ.நாவின் பரிந்துரைகள் தொடர்பில் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவே விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்தால் விசனமடைந்த அமெரிக்கத் தூதுவர்…

    • 3 replies
    • 1.4k views
  22. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் வடக்கில் கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் மட்டும் 35 பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதுக்குக் குறைந்த சிறுமிகளாவர். குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிளிநொச்சியிலும் இக்குற்றங்கள் பதிவாகி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிறுமியர் 10 வயதுக்கும் குறைந்தவர்களாவர். 10-16 வயதுக்கு உட்பட்ட 22 சிறுமிகளும் 16 வயதுக்கு மேற்பட்ட 8 பெண்களும் இவ்வாறு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிகிறது…

    • 8 replies
    • 1.8k views
  23. ஐ.நா அறிக்கையை வெளியிடாது தடுக்க இந்தியா துணைபோகின்றதா? - தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் கேள்வி! சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை வெளியிடவிடாமல் தடுக்க இந்தியா துணைபோவதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் தொ.பரமசிவம் குற்றம் சுமத்தியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைக்கு இந்தியாவும் முணை நின்றதால், ஈழத்தமி;ழ் மக்களிடம் மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'இலங்கைத் தமிழர் இனப்படுகொலை குறித்து ஐ.நா தயார் செய்துள்ள அறிக்கையை வெளியிட க…

  24. இந்த இணையத்திற்குச் சென்று உங்கள் வேண்டுகோளைப் பதிவு செய்வதோடு கருத்துகளையும் எழுதுங்கள். இதுவரை 416 பேர் பதிவிட்டுள்ளார்கள். அதிகமாகத் தமிழ்நாட்டுறவுகளாகவேயுள்ளது குறிப்பிடத்தக்கது. Urge Indian Government to prosecute War Criminals of Sri Lanka: www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka www.change.org/petitions/urge-indian-government-to-prosecute-war-criminals-of-sri-lanka

  25. கொழும்பின் புறநகர் பகுதியான கொட்டகேனா பகுதியில் வசித்துவந்த சோலைக்கிளி ஜெயபிரசாத் (31) என்ற தமிழ் இளைஞர் ஒருவர் கடந்த சித்திரைப்புதுவருடத்தை தொடர்ந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடையில் இருந்து சில பொருட்களை வாங்குவதற்காக கடந்த 15 ஆம் நாள் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்ற ஜெயபிரசாத் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என அவரின் உறவினர்கள் முகத்துவாரம் சிறீலங்கா காவல்நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். வெள்ளைவானில் வந்தவர்கள் முச்சக்கர வண்டியை நிறுத்தி அவரை கடத்திச் சென்றுள்ளதாக அதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் செல்லிடத்தொலைபேசியும் செயலிழந்துள்ளது என உறவினர்கள் தமது முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.