Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு எழுதுகிறேன் - ஜீரீஎன்னிற்காக சுனந்ததேசப்பிரிய:- அன்புள்ள மகேந்திரன், இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். உங்களுக்கு கிடைத்தாலும் சிங்களத்தில் எழுதப்பட்ட இந்த கடிதத்தை எப்படி வாசிக்க போகிறீர்கள்?. சிறையில் இருக்கும் உங்களுக்கு இறுதியாக கடிதம் வந்த நாள் எதுவும் உண்டா?. அப்படி கடிதம் எதுவும் வராமலும் இருந்திருக்கலாம். அப்படி கடிதம் எழுத எவராவது இருந்திருந்தால், 18 வருடங்கள் வழக்குகள் இன்றி, உலகில் உன்னதமான நாட்டின் சிறைச்சாலையில் எப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியும்?. அதனை அறிந்தும் உங்களுக்கு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதவில்லை. அது எனக்காவும் இ…

  2. நிபுணர் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல – ஐ.நா ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. நிபுணர்கள் குழு இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும், விஜயம் செய்தால் அது பயனுள்ளதாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.விசாரணைகளின் போது இலங்கையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது…

  3. யாழ்.மாவட்டத்தில் இதுவரை 19 சுயேட்சைகள் கட்டுப்பணம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிச்சபைத் தேர்தலில் யாழ்.மாவட் டத்தில் போட்டியிடுவதற்கு நேற்றுமாலை வரை 19 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளன.அதேவேளை இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை வேட்பு மனுத் தாக்கலுக்குரிய கால எல்லை என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் கடந்த 5 தினங்களுக்குள் 19 சுயேட்சைக் குழுக்கள் மட்டுமே கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.யாழ்.மாவட்டத்தில் பிரத…

  4. குடாநாட்டில் உள்ள அரச அலுவலகங்களில் சுடிதார் அணியவும் தடை * Tuesday, January 25, 2011, 17:35 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் சேலை அணிந்தே கடமைக்கு வரவேண்டும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபரினால் பணிக்கப்பட்டுள்ளது. பெண் அரச ஊழியர்கள் அலுவலக கடமை நேரங்களில் பஞ்சாபி அல்லது சுடிதார் அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டை மற்றும் குட்டைப் பாவாடைகளை அணியக்கூடாது என்ற தடை ஏற்கனவே இருந்து வருகிறது. கடந்த வாரம் யாழ். செயலகத்தில் இடம் பெற்ற பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலில் பெண் ஊழியர்களை சேலை அணிந்து கடமைக்குவர பணிப்பதெனத் தீர்மானிக்க…

  5. மகிந்த ராஜபக்ஷேவின் கடந்த வருட October medical check - up and specimen report ஆய்வின்படி அவரது ரத்த அணுக்களில் சில வித்தியாசமான (malignant bizzarres) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது..... ஆனால் அது cancer cells தானா என்பதை கண்டுபிடிக்க அதன் வளர்ச்சியைப் பொறுத்து சிலமாத காலம் பொறுத்திருக்க வேண்டியிருந்தது......இன்சுலின் மருந்து அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் என்பதற்காக சில காலம் இன்சுலின் மருந்தின் அளவையும் குறைத்து சில உணவுக்கட்டுப் பாடுகளையும் மேற்கொண்டு வந்தார். இறுதியில் கடந்த வருடம் december மாதமளவில் அது ஒரு (malignANT GLIOMA GRADE I ) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நவீனத்துவ cancer சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கில் செலவிடும் பிரித்தா…

    • 7 replies
    • 2.3k views
  6. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறப் போகின்ற உள்ளூராட்சித் தேர்தல் இப்போது கவனிப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்தத் தேர்தல் நடக்கப் போகிறது. பொதுத்தேர்தல் என்று சொல்லும் அளவுக்கு இது கவனிப்புக்குரியதாக உள்ளது. பொதுத்தேர்தல் நடந்து இன்னமும் ஒரு வருடம் கூடக் கழியாதுள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்கள் வந்துவிடப் போகிறதா என்று எண்ணுகின்ற பலரும் உள்ளனர். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விடவும் கொஞ்சம் குறைவான ஆசனங்களையே ஆளும்கட்சி வென்றது. பின்னர் ஆட்களை இழுத்துப் பிடித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் பெற்றுக் கொண்டது. இந்தநிலையில் உள்ளூர…

    • 0 replies
    • 1k views
  7. தேசியத் தலைவரின் அம்மாவின் இன்றைய நிலைமை * Tuesday, January 25, 2011, 16:34 முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. ஈழ விடுதலைப் போரின் தலைவர்களான பிரபாகரனும், முகுந்தனும் மிக நெருக்கமாகப் பழகிய தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மகள் வயிற்றுப் பேத்தி. மற்றொருவர் திருமலை… இவர் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர். இவர்கள் …

    • 2 replies
    • 1.4k views
  8. கோதுமை மாவிற்கு நாம் பழக்கப்பட்ட கதையை பெரியதொரு வரலாறாக எழுதமுடியும்.அந்த அளவிற்கு அதன் ஊடுருவல் பெரிய கதை. காலையிலும்,மாலையிலும் அரிசி மாவை உணவாகக் கொண்டிருந்த நமக்கு கோதுமை மாவானது கடதாசிகளை ஒட்டுவதற்காக அறி முகமான பசைப் பொருளாகும். குறிப்பாக இறுதிச் சடங்கின் போது இறந்த வரை எடுத்துச் செல்லப் பயன்படும் ‘பாடைக்கு’ தாள்களை ஒட்டுவதற்காகவே கோதுமை மா பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு கோதுமை மா பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களைக் கூட எவரும் மீளப்பயன்படுத்துவது கிடையாது. யாருக்கும் தெரியாத இடத்தில் அந்தப் பாத்திரம் எறியப்படும். இப்படியாக எங்களிடம் நுழைந்த கோதுமை மா இன்று,அரிசி மாவுக்குப் பாடை கட்டிவிட்டு அந்த இடத்தைத் தான் பிடித்துக் கொண்டது. அந்தோ பரிதாபம்! இந்த மண்ணில் …

    • 0 replies
    • 869 views
  9. சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிடவில்லை: கோத்தாபய போரின் போது சரணடைந்த எவரையும் சுட்டுக் கொல்லுமாறு தான் உத்தரவிடவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். வெள்ளைக் கொடி விவகார வழக்கில் மேல் நீதிமன்றத்தில் நேற்றுச் சாட்சியமளித்த கோத்தாபய, சரத் பொன்சேகா அல்ல வேறு எவர் அந்தப் பதவியிலும் அதிகாரத்திலும் இருந்திருந்தால் கூட போரை வென்றிருப்பார்கள் என்று தெரிவித்தார். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும்படி தான் கட்டளை இட்டார் என்ற தகவல் அடங்கிய 'சண்டே லீடர்' பத்திரிகையின் 2009 டிசெம்பர் 13ம் திகதிய பத்திரிகையின் முன் பக்கத்தைத் தான் பார்வையிட்டார் என்றும் அதில் காணப்பட்ட தவறான உள்ளடக்கத்தால் அது கட்டமைக்கப…

  10. ராகுலையும் ஏமாற்றுவார் மஹிந்த தமிழர்களின் விடயம் தொடர்பாக இலங்கை அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ராகுல்காந்தி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினர். தமிழர்களின் விடயம் தொடர்பாக இலங்கை அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ராகுல்காந்தி அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவரது கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினர். "கருத்துக்களைக் கூறுவது அவரது சுதந்திரம்\\\'\\\' என மஹிந்தர் அவதானத்துடன் பதிலளித் திருந்தார். இது நடந்து முடிந்த பின்னர் அனைத்துலக ஊடகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று…

  11. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அல்லலுற்ற மக்கள் முகாம்களிலிருந்து வீடு திரும்பி ஒருவாரம் கடந்த நிலையிலும் அரச நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஒருநேரத் தேநீர் நக்கிக் குடிக்க முடியாதளவு 20 கிராம் சீனியும் தலைக்கு வைக்கப் போதாத அளவு 20 கிராம் தேங்காய் எண்ணெயும் 60 கிராம் பருப்பும் 250 கிராம் அரிசியும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு வழங்கப்படுவதாகவும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாகப் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்ட பொதிகளும் அரச நிவாரணம் என்று கூறிப் பிரதேச செயலாளர்களினால் வழங்கப்படுவதாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றஞ்சாட்டியுள்ளார். குருமன்வெளி 12 சக்தி சிக்கன சேமிப்…

    • 0 replies
    • 594 views
  12. http://www.yarl.com/files/110125_tamilnaadu-fisheman-murder.mp3

    • 0 replies
    • 669 views
  13. முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. ஈழ விடுதலைப் போரின் தலைவர்களான பிரபாகரனும், முகுந்தனும் மிக நெருக்கமாகப் பழகிய தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மகள் வயிற்றுப் பேத்தி. மற்றொருவர் திருமலை... இவர் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர். இவர்கள் இருவரையும் கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதிவரை நான்கு நாட்கள் இலங்கையில் சித்ரவதைக் க…

    • 0 replies
    • 702 views
  14. சிங்கள இராணுவ நலன்புரி கடை தீப்பற்றியது Tuesday, January 25, 2011, 11:27 யாழ் ஆரியகுளம் சந்தியிலுள்ள இராணுவ நலன்புரி கடை சற்றுமுன் தீப்பற்றியுள்ளது. tamilthai.com

  15. அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யக் கோரி, வெள்ளை மாளிகை முன் அமெரிக்க-கனடிய தமிழர்கள் ஆர்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர். திங்கட்கிழமை (24-01-2011) காலை 11மணி முதல் மாலை 3 மணி வரை இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், ஈழத்தமிழ் மக்களுடன் இணைந்து இந்திய தமிழகத்து உறவுகளும் பங்கெடுத்திருக்கின்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் ' மனித குலத்துக்கு எதிரான, இனப்படு கொலையிலும், போர் குற்றங்களிலும் சம்பந்தப்படுகின்றவர்கள் மீது, உலக நாடுகளும், உலகப் பொது மன்றமும் தார்மீகரீதிய மட்டுமல்ல சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளதெனவ…

  16. போர் காலத்திலும் சரி அதற்குப் பிறகும் சரி யாழ் மாவட்ட கல்வியில் பெரும் பங்கு வகுத்த இரண்டு முக்கிய தனியார் கல்வி நிறுவனங்கள் குறுகிய கால இடைவெளியில் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கல்வி நிறுவனங்களும் யாழ் நகரை மையமாக கொண்டு கல்வி கற்கும் மாணவர்களின் கல்வியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யாழ் கல்விச் சமூகத்தை சீரழிக்க யாழ் நூலகத்தை அன்று எரித்தார்கள். இன்று கிராமங்கள் தோறும் போய் கல்விக் கூடங்களை எரிக்கிறார்கள். Tutorial colleges burnt down in Jaffna. [TamilNet, Tuesday, 25 January 2011, 07:43 GMT] A leading tutorial college, Universal Tution Centre located near Hindu Ladies College in Jaffna was burnt do…

    • 2 replies
    • 1.1k views
  17. சிறிலங்கா அதிபர் மகிந்தராஜபக்சவுக்கு புற்றுநோய்..! ஆபத்தான கட்டத்தை தாண்டினார்.. உண்மையா? வதந்தியா? அமெரிக்காவில் சிகிச்சை நடப்பதாக சிறிலங்கா கார்டியன் இணைய ஊடகம் தகவல். [Tuesday, 2011-01-25 07:48:34] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெறவே அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் சிறிலங்கா கார்டியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் திடீரென அமெரிக்கா சென்றிருந்தார். அவரது பயணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவே அவர் அமெரிக்கா சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹொஸ்டனில் தனது சகோதரர் டட்லி ராஜபக்சவின் வீட்டில் இருந்தே மகிந்த ராஜபக்ச சிகி…

  18. அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்துடன் நீண்டகால தொடர்புடையவர்கள்: அமெரிக்கத் தூதுவர் அமெரிக்காவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான உறவுகள் 1813 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கிறது. அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்துடன் நீண்டகால தொடர்புடையவர்கள் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பட்றீசியா புட்டெனிஸ் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தகவல் நிலையத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றுகையில் கூறினார். யாழ்ப்பாணத் நான்காம் குறுக்குத் தெருவில் யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் அமெரிக்க தகவல் நிலையம் திறக்கப்பட்டது. யாழ் இந்திய துணைத் தூதரக இணைப்பாளர் மகாலிங்கம், சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் சுகிர்தராஜ், யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க. யாழ் மேயர் திருமதி பற்குணராசா. சமூக…

  19. யாழ். பிரதேச செயலகங்களில் தேசியக் கொடியேற்றி தேசிய கீதம் பாடுமாறு அரசாங்க அதிபர் பணிப்பு _ வீரகேசரி இணையம் 1/25/2011 3:41:32 PM யாழ். மாவட்டத்தில் இயங்கும் பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்கள் அனைத்திலும் அடுத்தவாரம் தொடக்கம் தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம்பாடி நாட்டின் அபிவிருத்தி பற்றி பதவிநிலை அலுவலர்கள் உரையாற்றிய பின்னரே தமது அலுவலகக் கடமைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலின் போது இத் தீர்மானத்தை எடுத்துள்ளார். அதேநேரம் கடந்த திங்கட் கிழமையிலிருந்து சில பிரதேச செயலகங்களிலும் ம…

    • 1 reply
    • 583 views
  20. துனீசியாவின் 'முத்துக்குமார்'! - குளோபன் மக்கள் புரட்சிக்கு வித்திட்டு, 23 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தியிருக்கிறது, துனிசிய இளைஞர் முகமது புவாஸிஸி-யின் தற்கொலை மரணம்! கடந்த 1956 ஆம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்ற துனீசியாவில், 1987-ல் ஆட்சியைப் பிடித்து அதிபரானார் ஸின் அல்-ஆபிதின் பென் அலி. அழகுமிகு கடற்கரைகளால் உலக உல்லாசப் பயணிகளை வசீகரித்த துனீசியாவுக்கு சுற்றுலாத் துறை மூலம் வருவாய் வெகுவாகக் கிடைத்தது. அதேவேளையில், பெரும்பாலான மக்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியதோடு, தங்கள் வாழ்வாதாரத்துக்கும் வழியின்றி வாடித் தவித்தனர். அதிபரின் குடும்பமும், அதிகார வர்க்கமும் செழிப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டதே தவிர, வறுமையில்…

  21. உள்ளுராட்சி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88ஆயிரத்து 916பேர்கள் வாக்களிக்கத் தகுதி * Tuesday, January 25, 2011, 11:25 எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88ஆயிரத்து 916பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதாக மன்னார் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மன்னார் பிரதேச சபைக்கு 24ஆயிரத்து 658பேரும், முசலி பிரதேச சபைக்கு 13ஆயிரத்து 151 பேரும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 18ஆயிரந்து 707 பேரும், நானாட்டான் பிரதேச சபைக்கு 16ஆயிரத்து 421 பேரும், மன்னார் நகர சபைக்கு 15ஆயிரத்து 979 பேரும்; வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் தேர்தல் திணைக்களம், தேர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.