ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகின. ஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது. மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது. சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்…
-
- 32 replies
- 3.6k views
-
-
தியாக தீபன் சீமான் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் சீறுவோர் சீறும் சிறுத்தை புலியே சிறைக்கு அஞ்சா சீமானே வணக்கம். ஆட்சியைப் பிடிக்கும் அவசரம் வேண்டாம், காட்சியை மாற்றுவதில் கவனம் செல்க, “இரண்டு பகையை எதிர்த்திடல் இயலாது இரண்டில் ஒன்றை இன்துணையாய்க் கொள்க, இயம்பிடும் வள்ளுவம், ஏற்றுச் செயல்ப்பட இணைத்திடுவீர் ஈழ ஆதரவாளர் எல்லோரையும்! நாட்டைச் சூறையாட நரிகள் கூட்டனி சேர, நரிகளை வேட்டையாட, நல்லவர்கள் இணைவதில் தயக்கம் என்ன? தயைகூர்ந்து அனுசரிப்பீர். தந்தை வயது நெடுமாறனைத் தலைவராக ஏற்பதில் தவறொன்றும் இல்லையே, தனயன் வை.கோ.வின் தம்பியாய்ச் செயல்படுவதில் தன்மானம் குறையாது. மற்ற வீரர்களை மார்போடு அணைப்பதால் மங்காது புகழ் மாறாக பொங்கிப் பொலியும…
-
- 0 replies
- 415 views
-
-
ஈகி முத்துக்குமரனின் சிற்றப்பா மற்றும் பாட்டி விடுதலைச்சிறுத்தைக்கட்சியில் இணைவு விடுதலைச்சிறுத்தைக்கட்சியினரால் 26.12.2010 அன்று நடத்தப்பட்ட தமிழர் இறையாண்மை மாநாட்டில் தமிழர்க்கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நிகழ்வின்பொழுது ஈகி முத்துக்குமரனின் சிற்றப்பா, பாட்டி மற்றும் சந்தனக்காடு வீரப்பனின் மகள் விசயலெட்சுமி ஆகியோர் விடுதலைச்சிறுத்தைக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். படங்களை காண>>> http://meenakam.com/
-
- 0 replies
- 430 views
-
-
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஜனவரி 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது. 6ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்குப் பேராளர் பதிவுடன் ஆரம்பமாகும் இம்மாநாட்டில் ஆய்வரங்குகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பேராசிரியர் கா.சிவத்தம்பின் உரையுடன் ஆரம்பமாகவுள்ளது. முதல் நாளான 6ஆம் திகதியன்று காலை ஆரம்ப விழாவும் மாலை கணினி வலைப் பதிவு பற்றிய ஆய்வரங்கும் நடைபெறவுள்ளன. ஏனைய மூன்று தினங்களிலும் காலை 8.30 மணி முதல் ஆய்வரங்குகள் நடைபெறும். ஈழத்துத் தமிழ் இலக்கியம், உலகத் தமிழ் இலக்கியம், நிகழ்த்து கலைகள், செவ்விதாக்கம், மொழிபெயர்ப்பு, நாட்டாரியல், சிற்றிதழ…
-
- 1 reply
- 600 views
-
-
தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இலங்கையில் அணுசக்தி உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான உதவிகளை வழங்குவதாக இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான காய் நகர்த்தல்களை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன. அணுசக்தி வர்த்தகத்தில் இணைந்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ள இந்தியாவும், ரஷ்யாவும் சிறியளவிலான அணுசக்தி நிலையங்களை இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் அமைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இந்திய ஆங்கிலத் தினசரி ஒன்று தெரிவித்திருக்கின்றது. ரஷ்யாவின் ஜனாதிபதி Medvedov அண்மையில் இந…
-
- 3 replies
- 998 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துடன் புரிந்துணர்வை பேணிக் கொள்வதில் மிகவும் கவனமாக இருந்த புதுடில்லி, அந் நாடு சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நெருங்கிச் செயற்படுமானால் இந்தியா ஏதாவது செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என குல்திப் நாயர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக தான் கடமையாற்றிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கிட்டுவை இலண்டனில் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பை தவிர்த்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்துடன் தவறான புரிந்து கொள்ளல் ஏற்படும் வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எவரையும் சந்திக்க வேண்டாம் என தனது இம் முடிவு குறித்து கருத்துத் தெரிவித்த புத…
-
- 1 reply
- 370 views
-
-
இராணுவ மற்றும் பொலிஸ் மயமாக்கப்பட்டிருக்கின்ற யாழ்ப்பாணத்தில் துணிகரமாக இடம்பெற்று வருகின்ற தொடர் படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த கொலை கொள் ளைச் சம்பவங்களுக்கு கடுமையான கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ள கூட்டமைப்பு, இவ்விடயத்தை எதிர்வரும் நான்காம் திகதி பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற தொடர் அசம்பாவிதங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்ப…
-
- 1 reply
- 340 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப் பட்டு விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பலர் விசாரணைக்கென்று காரணம் கூறப்பட்டாலும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது. யுத்த காலத்திலும் யுத்தத்திற் குப் பின்னரும் சரணடைந்த பல போராளிகள் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். எனினும் இவ்வாறு விடுவிக்கப் பட்டவர்கள் சிலர் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாத சிலரால் விசாரணைக்கென்றும் சில சமயங்களில் காரணம் எதுவும் கூறப்படாமலும் அழைத்து செல்லப்படுகின்றனர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ச…
-
- 1 reply
- 318 views
-
-
‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, நாடுகளுக்கு இடையே போர் நடந்தால் கூட பயன்படுத்தக் கூடாது என்று உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை தன் நாட்டு மக்கள் மீது வீசி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த இனப் படுகொலை அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்த ஆண்டில் பல முனைகளில் தலைகுனிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 2009ஆம் ஆண்டு மே 16,17,18ஆம் தேதிகளில் மட்டும் 50 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து போரை முடித்த மகிந்த ராஜபக்சவுக்கு, உலகத்தை அதிர்ச்சியுறச் செய்த இந்த படுகொலையை தடையின்றி நடத்தி முடிக்க தனக்கு உதவிய தெற்காசிய வல்லரசுகளான இந்தியாவும், சீனாவும், தடை செய்யப்பட்ட ஆ…
-
- 0 replies
- 363 views
-
-
திங்கட்கிழமை, 27, டிசம்பர் 2010 (22:14 IST) தமிழ் கைதிகளை நிர்வாணப்படுத்தி பரிசோதனை இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் பயங்கரவாத மற்றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை இலங்கையின் சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் திடீரென முப்படையினரும் சிறைச்சாலையினுள் சென்று பரிசோதனை செய்து வருவதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல் இந்த பரிசோதனை நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறைச்சாலையினுள் உள்ள ஒரு தனியான அறையினுள் மூன்று கைதிகள் வீதம் கொண்டு செல்லப்பட்டு முற்றிலும் நிர்வாணப்படுத்தப்பட்ட பின்பு அவர்கள் சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பரிசோதனைக்கு ஆளாகிய கை…
-
- 3 replies
- 555 views
-
-
திங்கட்கிழமை, டிசம்பர் 27, 2010 நேற்று இடம்பெற்றது ஒரு களியாட்டவிழா, அவ்விழாவிற்கு செல்லும் மனநிலையில் நாங்கள் இல்லை, ஏனெனில் இன்றும் யுத்தத்தின் தாக்கத்தால் பல மக்கள் இன்றும் இறந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நாம் அவர்களுடன் இணைந்து செத்தவீட்டை கொண்டாடுவதா? களியாட்ட விழாவை கொண்டாடுவதா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தினத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் - தேசிய கீதத்தினை தமிழிலா, சிங்களத்திலா, ஹிந்தியிலா அல்லது ஒப்பாரியாக பாடுவதா என்ற கேள்வி தான் தமிழ் மக்களின் மனதில் எ…
-
- 13 replies
- 1.4k views
-
-
தென் ஆபிரிக்காவில் சிங்கள மொழியில் சொற்பொழிவு - இலங்கைக்கு பாரிய தலைக்குனிவு திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 18:34 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் மாநாட்டில் இலங்கைகக்கு பாரிய தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்தன கூறுகிறார். கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர் மாநாட்டில் இலங்கை உயர்கல்வி அமைச்சரின் ஏற்பாட்டில் அங்கு சென்ற 180 பேர் அடங்கிய குழுவில் இருந்து பேசிய ஒருவர் சிங்களத்தில் உரையாற்றியதன் மூலம் 139 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இருந்த மண்டபத்தில் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியாத ஒரு தலைக…
-
- 2 replies
- 891 views
-
-
இலங்கையில் சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் முருகன் ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய நிர்வாகத்தினருக்கு தொல் பொருள் ஆராய்ச்சி அதிகாரிகள் எனக் கூறப்படுபவர்களினால் தொந்தரவு கொடுக்கப்படுவதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாந்தாமலை முருகன் ஆலய பிரதேசம் போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தற்போது ஆலய வளாகத்தில் பிள்ளையார் ஆலயமொன்று நிர்மாணிக்கப்பட்டுவரும் நிலையில், தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்திலிருந்து வந்ததாகக் கூறும் அதிகாரிகள், இந்தப் பிரதேசம் தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்பட்டது எனக் கூறி பிள்ளையார் ஆலயம் அமைக்கும் வ…
-
- 0 replies
- 564 views
-
-
ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 26, 2010 மஹிந்த அரசாங்கத்தில் பலர் விரக்தியுற்ற நிலையில் உள்ளனர். இதன் ஒருகட்டமாக பலர் ஆங்காங்கே தம் உள்ளக்கிடக்கையினைகொட்டி தீர்க்கின்றனர். நேற்று முந்தினம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் செயலரும் மூத்த அமைச்சருமாகிய மைத்திரிபால சிறிசேனா தமது அரசாங்கம் இரண்டு மூன்று வருடங்களில் கவிழ்ந்துவிடும் எனக்கூறியுள்ளார். லேக்கவுஸ் வட்டாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் உளறியமை மஹிந்த குடும்பத்தினை உலுப்பியுள்ளது. ஒருவரும் எமது அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ய தேவை இல்லை அது தன் பாட்டிலேயே கவிழ்ந்துவிடும் என கூறியுள்ளார் மைத்திரிபால சிறிசேனா. இதே வேளை ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைய 20 பிரதி அமைச்சர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. மஹிந்த அரசில் இந்த …
-
- 11 replies
- 1.7k views
-
-
மன்னார் முருங்கன் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக தேடப்பட்டு வந்த பாதிரியார் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து, குறித்த பாதிரியாரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் திருமதி கே.ஜீவரானி உத்தரவிட்டார். இச்சிறுவர் இல்லத்தினை சேர்ந்த இரண்டு சிறுமிகள் குறித்த பாதிரியாரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக மன்னார் நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி வழக்குத் தொடரப்பட்டது. அதையடுத்து குறித்த பாதிரியாரை கைது செய்யுமாறும் அச்சிறுவர் இல்லத்தினை மூடி அங்குள்ள சி…
-
- 1 reply
- 743 views
-
-
முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் தோல்வியில் முடிந்துவிட்டது. இனி வழியில்லை ஆழ்பவன் பின்னாலே செல்வோம்' என்று நினைத்தால் அங்குதான் நாம் பெரும் வரலாற்றுத் தவறை இழைக்கிறோம். தொடங்கிய இடத்தைவிடவும் மோசமாய் போராட்டம் பின்தள்ளப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால் வரலாறு எமக்குப் படிப்பினைகளையும் புதிய பாதைகளையும் தரத் தவறவில்லை. எல்லாம் முடிந்த கதைகளல்ல. முடிந்த கதைகளிலிருந்து புதிய பிறப்பு ஆரம்பமாகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும். ஒன்றின் முடிவே இன்னொன்றின் தொடக்கமாகிறது. ஒரு நூற்றாண்டுக்கு மேலான போராட்டமும் நியாயமும் களத்தை நன்றாகவே உழுது பண்படுத்தியுள்ளது. அந்த உழுத களத்தில் பயிரிடுங்கள். இப…
-
- 0 replies
- 580 views
-
-
கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 21:01 கடற்படையின் புதிய படகுகளுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் கிராக்கி ஏற்படுவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளதாக கடற்படையின் தலைமையகத்துக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மேலாக இராணுவம் வியந்து போன இன்னொரு விடயம் தான் அவர்களின் இயந்திரப் படகுத் தொழில்நுட்பமாகும். அதன் காரணமாக கடற்புலிகளின் இயந்திரப் படகுகள் மற்றும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த தொழில்நுட்பக் குறிப்புகள் என்பவற்றுடன், இராணுவத்தின் பிடியில் இருக்கும் கடற்…
-
- 4 replies
- 808 views
-
-
அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் கடற்படைகளுக்கு இலங்கை பயிற்சி:- கடற்படைத் தளபதி திசர சமரசிங்க. [Monday, 2010-12-27 03:35:20] உலகில் மிகப்பெரிய போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் அமைப்பை வெற்றிகண்டதனால், உலக நாடுகள் பலவற்றின் கடற்படைகளுக்கு பயிற்சியளிக்குமாறு இலங்கைக் கடற்படையினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி திசர சமரசிங்க தெரிவிக்கின்றார். தற்போதைக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் என பன்னிரண்டு நாடுகளின் கடற்படையினருக்கு இலங்கைக் கடற்படையின் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் குறித்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுவரை காலமும் ஒரு சில நாடுகளுட…
-
- 2 replies
- 840 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்மூன்றாவது உலக மகாயுத்தமே முதல் நடந்த இரு மகாயுத்தங்களும் இரு நாடுகளிடையே ஆரம்பமாகி பல நாடுகளிடையே பரவிய பலமுனைப் போர்களாகும். ஆனால், தமிழருக்கு எதிரான போரோ தொடக்கத்தில் முன்னைய போர்களைப்போல் இரு தேசங்களுக்கான போராக ஆரம்பித்தாலும் தமிழர் தேசத்துக்கு எதிராக சிங்கள தேசத்துடன் பல சக்திவய்ந்த நாடுகளின் பங்களிப்புடனேதான் இப்போர் முடிவு பெற்றது. சிறீலங்கா நாட்டின் தலைவர் மகிந்தா இராஜபக்சாவின் போருக்கு உதவிசெய்த இருபது நாடுகளுக்கான நன்றி உரை மற்றைய நாடுகளின் எண்ணிக்கையையும், அவர்களின் பங்களிப்பைபும் தெளிவாக்கியதுடன் உறுதிப்படுத்தியுமுள்ளது. முதலாவது உலகமகாயுத்தம் பெரும்பாலும் ஐரோப்பாவை மையமாகக் கொண்டே நடைபெற்ற ஓர் போர். இப்போரில் நேச நா…
-
- 0 replies
- 711 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு அதன் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஸ்ரீலங்கா அரசு அதற்கான வெற்றிவிழாவையும்கொண்டாடிய பின்னர், சர்வதேசப் பங்கரவாதமும், அதனை வைத்துத் தங்கள் சொந்த வளர்ச்சியில் மேலும் வளர்த்துக்கொள்ளவும் தங்கள் அரசியல் இருக்கைகளையும், இருப்புக்களையும் தக்க வைத்துக்கொள்ளுவதற்குமான செயற்திட்டங்களைச் சர்;வதேச அரசியற்பட்சிகளும், அரச பயங்கரவாதங்களும் செயற்பட்டுக்கொண்டிருப்பதானது, சர்வதேசத் தமிழினத்தை மேலும் விசனத்திற்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருப்பது ஈழத்திழர்களின் இன்றைய துர்ப்பாக்கிய நிலையே. இன்று பயங்கரவாதச் செயல்கள் சர்வதேசம் முழுவதும் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில், தங்க…
-
- 0 replies
- 639 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியொன்று இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் எனவும் அக்குழு இலங்கையின் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும் இந்திய புலனாய்வுப் பிரிவான றோ சிறிலங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த வருட இறுதியில் ‘றோ’ விடுத்துள்ள விடுதலைப் புலிகள் குறித்த இரண்டாவது எச்சரிக்கை இதுவாகும். முதலில், தமிழக முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகிய முக்கிய தலைவர்களைக் கொல்லும் நோக்கோடு விடுதலைப் புலிகள் அணி ஒன்று இந்தியாவினுள் ஊடுருவியிருப்பதாக ஏற்கனவே ஒரு புலனாய்வுத் தகவலை வெளியிட்டிருந்தது. அதன் பின்னர், விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படும் எனக் கருதப்படும் தலைவர்களது பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்ப…
-
- 2 replies
- 677 views
-
-
அமெரிக்க இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பற்றிய பேச்சு உலக நாடுகளை இன்னும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா எனும் தனியொரு வல்லரசு நாடு ஆசிய பிராந்தியத்தில் எந்தளவுக்கு தனது ஆதிக்கத்தைச் செலுத்த எத்தனிக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதேநேரம் ஏனைய நாடுகள் தங்கள் உள்விவகாரங்கள் கசிந்ததை மறைப்பதற்கு மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. எனினும் தமது நாடு குறித்து வெளியாகியுள்ள தகவல் பற்றி அந்தந்த நாடுகள் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விக்கிலீக்ஸ் இலங்கை குறித்து வெளியிட்டு வரும் தகவல்கள் சர்வதேசத்தின் பார்வையை இலங்கை பக்கம் திருப்பியுள்ளது எனலாம். இர…
-
- 5 replies
- 987 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு பிராந்திய புலனாய்வாளர்கள் மீண்டும் புத்துயிர் கொடுப்பதன் பின்னணி என்ன? * Monday, December 27, 2010, 15:51 2009 மே 19களில் விடுதலை புலி அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதாக அல்லது வேரோடு பிடுங்கி எறியப்பட்டதாக அல்லது துடைத்து எறியப்பட்டதாக இலங்கை அரசு வெள்ளி விழாக்களை கொண்டாடியது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாரகன் மற்றும் அவரது தளபதிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக பெரும் பட்டியலை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் படங்களுடன் பட்டியிட்டு இருந்தது. ஆரம்பத்தில் 17000 போராளிகள் சரணடந்தார்கள் என்று தொடங்கி இப்போது 9000 புலிகள் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதாக சொல்லி வருகின்றது. சரணடைந்து அல்லது கைது ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து ரணிலிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தெரிவிப்பு: [Monday, 2010-12-27 03:40:21] யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற சமாதான உடன்படிக்கையில் அரசாங்கத்தின் சார்பில் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்டிருந்தார். யுத்த நிறுத்த உடன்படிக்கை தோல்வியடைந்தமை முதல் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தமை வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உண்மை…
-
- 1 reply
- 439 views
-
-
(இந்த அறிக்கை நேற்று எனது மின்னஞசல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது) புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும் |கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின், உலகஅரங்கில் கடும் தொனியில் எதிரொலித்த ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற முழக்கத்தில் உண்மையான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதோ இல்லையோ, பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள், நசிந்தும், மெலிந்தும், உயிர்பிரிந்தும் போயுள்ளன. சிங்கள இனவாத அரசும், இந்தப் பொதுப்பதத்தை தன் கையில் கெட்டியாகப் பிடித்தே, பல நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான மூர்க்கத்தனமான, கோழைத்தனமான பெரும் போரை நடத்தி முடித்திருக்க…
-
- 10 replies
- 1.4k views
-