Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு சிலாவத்துறையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் காயம்: [Tuesday, 2010-11-16 05:59:05] முல்லைத்தீவு சிலாவத்துறை பகுதியில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மரத்தின் கீழ் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்கு தீ மூட்டிய போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பற்றுள்ளது. காயமடைந்த சிறுமிக்கும், சிறுவனுக்கும் முறையே 4,2 வயதுகளே எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெடிப்புச் சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. se…

  2. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை பிரேசில் நாடு கடத்தியுள்ளது. 16 November 10 04:34 am (BST) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்களை பிரேசில் நாடு கடத்தியுள்ளது. இவர்கள் பிரேசிலிலிருந்து ஈக்வடோர் நாட்டுக்குச் செல்லத் தயாராகவிருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (15) கட்டுநாயக்க விமானத்தைச் சென்றடைந்த இந்த இளைஞர்களிடம் இரகசியக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=32473&cat=1

  3. அன்பார்ந்த தமிழீழ மக்களே! அன்புக்குரியவர்களே இதனை ஒரு வேண்டுகோளாக உங்களிடம் விண்ணப்பிக்கின்றோம். மானிடப்பிறப்பும் மானிடஉயிரும் என்றும் விலைமதிக்க முடியாதவை. 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்கள் படும் துன்பங்கள் இழப்புக்கள் சொல்லிமாளாதவைகள். இந்த இழப்புக்கள் துயரங்களும் தமிழீழத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இன்று ஏற்பட்டுள்ளது. தமிழீழ மக்களுக்கு நிரந்தரமானதோர் சமாதானம் வேண்டும் என்ற ஏக்கங்களும் எதிர்பார்ப்பும் எமது தாயக மக்களிடம் அதிகமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மேலாக கடந்த 8 ஆண்டுகளாக போர் நிறுத்தம் தமிழ் மக்களின் நம்பிக்கைகளைத் தகர்த்து வன்னியில் சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்களைப் படுகொலைக்கு உள்ளாக்கியுள்ளது. சிங்கள் தேசத்தின் கொல…

  4. நாவற்குடியில் இடம்பெற்றுவரும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உரியவர்கள் தடுப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் எம் மண்ணை நாம் காப்பதற்காக நாம் நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் சட்டதரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும்கூறுகையில் நாவற்குழியில் அரச காணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள், அரசியல் பின்னணியைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. இருந்தும் அதுவொரு சட்டவிரோத குடியேற்றமாகும். இங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் சொந்த காணிகள் இருக்குமானால் ஏன் அங்கு செல்லவில்லை? 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் இவர்கள் யாழ்ப்பாணத்தி…

  5. ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010 ரூபவாஹினி கூட்டுத்தாபன அலைவரிசையில் நமல் ராஜபக்‌ஷவிற்கு விசேடமாக ஓர் சனல் வழங்க மஹிந்த உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு அமைய ரூபவாகினி அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்து நமலுக்கு ஓர் சனல் இனை வழங்கியுள்ளது. இந்த சனல் இணையோர் சனல் என்ற பேரில் நமல் இராஜபக்சவின் அரசியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். ஈழ நாதம்

  6. எவரும் வெள்ளை,கறுப்புக்கொடிகளுடன் வரவும் இல்லை வழக்கு விசாரணையில் மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப்புலிகள் பக்கமிருந்து சரணடைய வரும் எவரையும் சுடுமாறு உத்தரவிடப்படவில்லை எனவும் அக்காலப் பகுதியில் எவரும் சுடப்படவில்லை எனவும் அப்போதைய 58 ஆவது படையணியின் தளபதியான, தற்போதைய ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சந்தனசில்வா நேற்றையதினம் இடம்பெற்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணையின்போது சாட்சியமளிக்கையில் தெரிவித்தார். வெள்ளைக்கொடியோ,கறுப்புக்கொடியோ எதுவும் காட்டிக்கொண்டு சிவிலியன்கள் வரவில்லை எனவும் அவர்கள் வெறும் கைகளுடனேயே சரணடைய வந்தார்கள் எனவும் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில்…

    • 0 replies
    • 539 views
  7. [TamilNet, Monday, 15 November 2010, 21:11 GMT] In an ‘extraordinary meeting’ convened in Bangalore, Saturday and Sunday, Eezham National Democratic Front (ENDLF), a paramilitary group based in India, passed a resolution urging India to send a ‘new peace making force’ to fulfil the promise made by Rajiv Gandhi on the North-East Provincial Council. If India can’t help it should constitute a higher level international committee of countries that accommodated the refugees to bring in justice, the resolution further said. ENDLF, mainly having former members of PLOTE and led by Paranthan Rajan, is a pro-Indian militant outfit created by the Indian intelligence agencies to de…

  8. சீனாவைப் படிக்கும் இந்திய உளவுப் பிரிவின் ஆலோசகர்கள் சென்னையில் கூடுகின்றனர் வருகிற டிசெம்பர் மாதம் சென்னை கொட்டேல் சவீராவில் , " சீன எழுச்சியும் அயல் நாடுகளில் அதன் தாக்கமும்" எனும் கருப்பொருளில் நடைபெறவிருக்கும் இந்திய முக்கிய உளவு அதிகாரிகளின் கருத்தரங்குபற்றி அதன் பத்திரிக்கை பின்வருமாறு சொல்கிறது, " இந்தியா உற்பட்ட தனது அயல்நாடுகளுடனான சீனாவின் தொடர்பாடல் என்பது நிலம் தொடர்பான பிணக்குகளைப் பெரும்பாலும் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் சீனாவின் இந்த புதிய வழிமுறை என்பது அதனுடனான எதிர்கால தொடர்புகளை வகுத்துக்கொள்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது". இந்தியாவின் மூன்று முக்கிய உளவு நிறுவனங்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதோடு, அவற்றில் ஒன்று …

    • 7 replies
    • 947 views
  9. சிங்களவர்களின் அட்டகாசத்தில் யாழ் நிலம் பாழாகிறது: குமுதம் இதழில் தீபச்செல்வன் [ ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2010, 01:31.40 PM GMT +05:30 ] ஈழப் போர் தொடங்கிய காலத்தில் அதாவது 30 வருடங்களுக்கு முன்னர் செயழிலந்த யாழ் புகையிர வழிகளிலும் புகையிரத நிலைய அலுவலகத்தின் கட்டிடங்களிலும் சில மாதங்களின் முன்னர் தமிழ் மக்கள் சிலர் இருக்க இடமின்றி தங்கியிருந்தார்கள். யாழ் நகரத்தின் மையத்தில் இருக்கிற புகையிரத நிலையம் வடக்கின் புகையிரத சேவையின் வீழ்ச்சியின் அடையாளமாகவும் இனப்பிரச்சினையால் ஏற்பட்ட மனமுறிவின் அடையாளமாகவும் இருந்து வந்தது. அந்த புகையிர நிலையத்தில் வைத்துதான் யாழ்ப்பாண மக்களை இராணுவத்தினர் சோதனைகளுக்கு உட்படுத்தி வெளியிடங்களுக்கு அனுமதிப்பார்கள். புகையிரத வழ…

  10. ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010 இந்த மாத இறுதியில் வருகைதரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் எதனையும் கொடுக்கமாட்டார் என்று தெரிகிறது. இந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நாட்டுக்குள்ளேயே காணப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைமைகளிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கிருஷ்ணாவின் பயணம் அமையும் என்று புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. எதிர்வரும் 25ஆம் திகதி கிருஷ்ணா இலங்கை வருகிறார். அந்தப் பயணத்தில் அரச தலைவர்களைச் சந்திக்கும் கிருஷ்ணா, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து நேரடியாக எந்த அழுத்தங்களையும் வழங்கமாட்டார் எனப் புதுடில்லி வட்டாரங்கள் கூற…

  11. ஊர்காவற்துறையின் தம்பாத்திப் பகுதியில் இரவோடிரவாக ஏற்றப்பட்ட புலிக் கொடி படையினரால் அகற்றப்பட்டது‐GTN செய்தியாளர் 15 November 10 01:16 pm (BST) ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மீண்டும் 2ம் தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில் இலங்கை முழுவதும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. காலையில் தேசியக் கொடி ஏற்றும் மற்றும் மரம் நாட்டும் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இடம்பெற்றது. ஆனால் மாறாக ஊர்காவற்துறையின் தம்பாட்டிப் பகுதியில் யாரோ இரவோடிரவாக புலிக் கொடியை ஏற்றியுள்ளார்கள். இந்தப் புலிக்கொடியை ஏற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக தம்பாத்தி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் படையினரால் சுற்றி வளை…

  12. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடிப்படை இராணுவ, அரசியல் கட்டமைப்புகள் எல்லாமே முள்ளிவாய்க்காலில் கடந்த வருடம் மே மாதத்துடன் முற்றாக அழிந்து போய் விட்டன. அதை மீளப் புனரமைப்பதற்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதன் புலிகள் இயக்கத்துக்குத் தலைமையேற்று வழிநடத்த முற்பட்டபோது, இலங்கையின் புலனாய்வுப் பிரிவு அவரை மலேஷியாவில் பிடித்துக் கொழும்புக்குக் கொண்டு வந்து சேர்த்தது. அதன் பின்னர் புலிகள் இயக்கத்தை வெளிநாடுகளில்இயங்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. வன்னியில் புலிகள் அமைப்பு வலுவாக இயங்கிய காலத்தில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட நிதி சேகரிப்புக் கட்டமைப்புத் தான் இப்போதும…

  13. எமது மக்களின் இயல்பான வாழ்விற்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஏ9 பாதை அகலமாக்கல் மற்றும் புனரமைப்பு அபிவிருத்தி திட்டத்துக்கான தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், புனரமைப்புப் பணிகளின் போது உள்ளுர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதுடன் அடுத்த நேரம் என்ன நடக்கும் என்ற நிலைமாறி இன்று நம்பிக்கையான வாழ்வைக் கிடைக்கச் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாகவும், எமது சமூகம் எதிர்காலத்தில் வளமான தேசத்…

  14. காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 'நாம் இலங்கையர் அமைப்பினால்" நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் இன்று யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால் நடைபெற்றது. இதன் போது குறித்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டதாகவும், திடீர் என நான்கு புறங்களிலும் இருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் கற்கள், முட்டை, தக்காளி ஆகியவற்றால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோ…

  15. ஜே.வி.பி.யினர் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவம் - ஜ.ம.மு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்த ஜே.வி.பி எம்.பி சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட குழுவினர் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறை தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் ஒரு வடிவமாகும். அத்துடன் இதை ஜே.வி.பி.யை விரும்பாத தமிழ் மக்கள் நடத்திய தாக்குதல் என்று வர்ணிப்பது மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கையாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளத…

  16. கடற்புலிகள் தளபதிகளில் ஒரவரான விநாயகம் நலமாக இருக்கிறார்: கொழும்பு ஊடகம் பரபரப்பு தகவல். [sunday, 2010-11-14 04:47:53] கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதமளவில் சாலை பகுதியில் நிலைகொண்டிருந்த 55 ஆவது படையணியினர் மீதான ஊடறுப்பு தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கடற்புலிகளின் துணைத்தளபதி கேணல் விநாயகம் தற்போது வெளிநாடு ஒன்றில் நலமாக இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடற்புலிகள் தளபதிகளில் ஒரவரான விநாயகம் கொல்லப்பட்டதாக சிறீலங்கா படைத்தரப்பு பல தடவைகள் உறுதிப்படுத்தியபோதும், அவரின் சடலம் கைப்பற்றப்படவில்லை. கிளிநொச்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தமது கொல்லப்பட்ட தளபதிகளையோ அல்லது போரளிகளையோ விடுதலைப்புலிக…

  17. பண்டா செல்வா ஒப்பந்தமும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் இலங்கையின் வடக்கும் கிழக்கும் இலங்கைத் தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையிலேயே செய்து கொள்ளப்பட்டவை. இந்த எண்ணக்கருவை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் அதனடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார் பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம். யாழ்ப்பாண செயலகத்தில் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை இங்கு சாட்சியமளித்த யாழ். மாநகர முன்னாள் ஆணையாளர் சி.வி.கே.சிவஞ்ஞானம் கடந்த 60 வருட காலத்தில் கற்றுக்கொண்ட அரசியல் பாடம் தமிழ் மக்கள…

    • 0 replies
    • 768 views
  18. Started by akootha,

    வணக்கம் 2009 இனப் படுகொலை முடிந்து ஒரு வருடமும் தாண்டி விட்டது. உயிரிழந்த தமிழரை நினைவு கூரும் நிகழ்வுகளையும் தாண்டி விட்டோம். சிங்களவர்களும் வெற்றியின் ஒரு வருடத்தை கொண்டாடியாயிற்று. இந்த வேளையில் உலகளாவி வாழும் தமிழ் நண்பர்களுக்கு எனது அன்பான வணக்கம். கடந்த வருடம் மிகவும் துக்ககரமான சம்பவங்களின் பின்னர் மிகவும கோரமான இனப் படுகொலையின் பின்னர் கவலையுடன் நாம் இருக்கிறோம். தமிழர் போராட்டத்தின் அடித்தளம் தங்களைத் தாமே ஆண்ட தமிழினத்தின் இறையாண்மை படிப்படியாக அவர்களின் விருப்பத்திற்கெதிராக பறிக்கப்பட்டது. 1930 - 1940 களில் ஐரோப்பிய ஆட்சியாளர்களிடம் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி, பின்னர் சுதந்திரப் பேச்சு எழுந்த போது தமிழர்கள் தமக்கு சரிநகர் உரிமை வேண்டும…

    • 0 replies
    • 778 views
  19. கடந்த 23ம் திகதி (23.10.2010) எமது மாதிரிப்பண்ணை முழங்காவிலில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் அவுஸ்திரேலியா பிரதிநிதி திரு. S. சுந்தரமூர்த்தி, கனடா பிரதிநிதி திரு. இன்பநாயகம் – பேரின்பநாயகம் ஆகியோர் மரம் நாட்டி ஆரம்பித்து வைத்தனர்.இந்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பு, நவீன தொழிநுட்ப அறிவை வழங்கும் நோக்குடன் இந்த மாதிரிப்பண்ணை ஆரம்பித்து வைக்கப்பட்டது. எமது மாதிரிப்பண்ணை பற்றிய ஆங்கில இணையத்தளம் http://modelfarm.nerdolanka.org/. நேர்டோவின் மாதிரிப்பண்ணை பற்றிய மேலதிக படங்களுக்கு இங்கே சொடுக்கவும்!

    • 45 replies
    • 3.5k views
  20. தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு யாழ். ஊர்காவல்துறை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று காலை இடம்பெற்றபோது மர்மநபர்கள் கொண்ட கும்பல் ஒன்று நாசகார வேலைகளில் அங்கு ஈடுபட்டது. குறிப்பாக புலிகள் இயக்கத்தின் ஊடகத் துறைப் பொறுப்பாள்ராக இருந்த தயா மாஸ்ரர் ஊர்காவல்துறையில் வைத்து ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கினார். இச்சாட்சியத்தை மர்மநபர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தார். இவர் பொலிஸாரிடம் கையும் மெய்யுமாக அகப்பட்டார். பின் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். பொதுமக்கள் சாட்சியம் அளித்தபோது மர்மநபர்கள் அங்கு உலாவினார்கள். பொதுமக்களை கூர்ந்து அவதானித்துக் கொண்டனர். சாட்சியங்களையும் குறிப்பெடுத்தனர். அத்துடன் பொதுமக்களைப் புகைப்படம் பிடித்தும் …

    • 0 replies
    • 842 views
  21. திங்கட்கிழமை, நவம்பர் 15, 2010 ஈழ நாதம் கிளி நொச்சியில் மக்களின் காணிகளை சுவீகரித்து அரச தேவைகளுக்கு பயன்படுத்தல் தொடர்பில் விசேட உயர்மட்ட மாநாடு நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த கால யுத்த நடவடிக்கை முடிவடைந்தமையைத் தொடர்ந்து கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினைகளினை ஆராய்வதற்கான மாநாடு என இந்த மானாட்டிற்கு பெயர் சூட்டப்பட்டாலும் காணி சுவீகரிப்பதனையே இது மையமாக கொண்டது. இந்த மா நாடு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நடைபெற்றது. வெளி நாட்டமைச்சர் நாமல் ஆக்யோர் காணி சுவீகரிப்பிற்கு வந்தது பெரும் ஐயத்தை தோற்றுவித்துள்ளது. வழமையாக டக்ளஸ், ஆழுனர் சந்திரசிறி மற்றும் பசில் இராஜபக்‌ஷ ஆகி…

  22. திங்கட்கிழமை, நவம்பர் 15, 2010 மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி சுனாமி வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்க்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு உப்போடையை சேர்ந்த மரியநேசன் பிரான்சிஸ் (47வயது) என்ற குடும்பஸ்த்தரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரை காணவில்லையென நேற்று தமது பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவரை தேடிவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். Eelanatham.Net

  23. திங்கட்கிழமை, நவம்பர் 15, 2010 dakku யாழில் வைத்து அரசாங்கத்தின் இரகசிய படைப்பிரிவினரின் தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி உட்பட மூவர் பலத்த காயமடைந்து நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஏனையோரை டக்ளஸ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்ற டக்ளஸ் காயப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு வைத்தியர்களைப் பணித்ததோடு தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதனை அவதானித்துள்ளாராம். Eelanatham.Net

  24. திங்கட்கிழமை, நவம்பர் 15, 2010 ஷெல் வீச்சில் காயமடைந்த எனது அம்மாவுக்கு உதவ வழி தெரியா மல் அழுது புலம்பிய வேளையில் காயப்பட்டவர்களுடன் சேர்த்து அம்மாவையும் இராணுவத்தினர் தனி பஸ்ஸில் ஏற்றிச் சென்றனர். ஆனால் இன்றுவரை அம்மாவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார் 13 வயதுச் சிறுமி செ.இலக்கியா. சாவகச்சேரி சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள தென்மராட்சி கலை, கலாசார மண்டபத்தில் நேற்று முன் தினம் மாலை நல்லிணக்க ஆணைக் குழு அமர்வு இடம்பெற்றது. அங்கு சாட்சியமளிக்கையிலேயே மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் தரம்08 இல் கல்வி பயிலும் மாண வியான செல்வதாசன் இலக்கியா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் எனது அப்பா இறந்…

  25. திங்கட்கிழமை, நவம்பர் 15, 2010 ஈ.பி.டி.பியினர் மற்றும் கடற் படையினர் எமது நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி விட்டு எனது கணவனைக் கடத்திச் சென்றார்கள். இவ் வாறு கடத்தப்பட்டவரின் மனைவியான ம.மேரிமக்ரெலின் சாட்சிமளித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு நேற்று வேலணை மண்கும்பான் பிள்ளையார் கோயில் திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு சாட்சியம் அளித்த மேரி மக்ரெலின் மேலும் கூறியது: 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 17 ஆம் திகதி இரவு 9.45மணியளவில் வீட்டுக்கு வந்தவர்கள் எனது கணவரை "மக்சி" என்று பெயர் கூறி அழைத்தார்கள் பின்னர் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள். அவர்கள் உள்ளே வந்தபோது வெளியில் சிலர் தமிழில் உரையாடிக் கொண்டிருப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.