ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
இந்திய அமைதிப்படையினரால் யாழ். ஆஸ்பத்திரி ஊழியர் 21 பேர் படுகொலையுண்ட நினைவு நாள் யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 21 பணியார்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கடமை நேரத்தில் பலியான இந்த 21 பணியாளர்களினதும் நினைவாக வைத்தியசாலையில் உள்ள அவர்களுடைய உருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கொல்லப்பட்ட பணியாளர் களின் உறவினர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலர் இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் யாழ். போதனா வை…
-
- 0 replies
- 569 views
-
-
யாழ். வைத்தியசாலை இதய சிகிச்சை விடுதி செயலிழக்கும் அபாயம் யாழ்ப்பாணம் போதனா வைத் திய சாலையில் அமைந்துள்ள இதய சிகிச்சை விடுதி (Cardio -logy Ward)தற்காலிகமாகச் செயலிழக்கும் நிலை தோன்றியுள்ளதாக மிக நம்பகமாக அறியப்படுகிறது. இதனை அறிந்து இதய நோயாளர் மிகுந்த மனக்கி லேசமும் கவலையும் அடைந் துள்ளனர். ஆனால் இதய சிகிச்சை விடுதியை மூடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார். உதயனுக்குக் கிடைத்திருக்கும் தகவல் பிழையானது என்று உறுதிபடத் தெரிவித்தார். குறிப்பிட்ட விடுதியை இயக் குவதற்குத் தேவையான வைத்திய அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும் அதனால் விடுதியை மூடுமாறு கோரிக்கை விடுப்பட் ட…
-
- 0 replies
- 532 views
-
-
பொன்சேகாவுக்கே இந்த நிலைமையென்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்ன? கேள்வி எழுப்புகிறார் சுமந்திரன் பயங்கரவாதத்தை ஒழித்தவரென அரசினாலும் சிங்கள மக்களினாலும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட சரத்பொன்சேகாவுக்கு இன்று இந்த நிலைமை என்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்னவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சுமந்திரன் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நீதிபதிகளுக்கான சம்பள அதிகரிப்புத் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது; நீதிமன்றம் ஓரளவுக்கு சுயாதீனமாக இயங்குகின்றது. எனினும் சுயாதீனமாக இயங்குவதற்கான சூழல், களம் உருவாக்கப்படவில்லை. வவுனியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டோருக்…
-
- 0 replies
- 530 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை 4வது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. டக்ளஸ் தேவானந்தா, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிந்து விசாரணை நீதிமன்றம் பிறப்பி…
-
- 5 replies
- 906 views
-
-
சர்வதேச மனித உரிமைக் குழுக்களை லண்டனில் கடுமையாகச் சாடினார் பீரிஸ் “காலனித்துவ சிந்தனையில் வெளிப்பாடு உள்நாட்டு யுத்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நியமித்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிப்பதை மனித உரிமைகளுக்கான சர்வதேசக் குழுக்கள் நிராகரித்ததை காலனித்துவத் தன்மை வாய்ந்தது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சாடியுள்ளார். நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகமும் லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையும் பிரசெல்ஸை தளமாகக் கொண்ட சர்வதேச நெருக்கடிக் குழுவும் இலங்கையின் குழுவை விமர்சித்திருந்ததுடன், சாட்சியமளிக்க முன்வருமாறு அக்குழு விடுத்திருந்த அழைப்…
-
- 0 replies
- 418 views
-
-
யாழ்ப்பாணம், ஒக்ரோபர் 21 தாம் நேரடியாகப் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்ட வகையில், போர் முடிவடைந்த போதும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று நேற்று யாழ்ப்பாணம் வந்த ஐரோப்பியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அரச அதிபர் உள்ளிட்ட யாழ். சிவில் நிர்வாகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனம்மற்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பிரிட்டிஷ் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி இக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். இந்தக் குழுவினர் நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்து நிலைமைகளைப் நேரில் பார்வையிட்டனர். யாழ். அரச செயலகத்தில் அரச அதிபர் தலை…
-
- 0 replies
- 470 views
-
-
மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதாக புதிய வரவு செலவுத் திட்டம் இருக்காது எதிர்வு கூறுகிறது ஐ.தே.க. சிறீலங்கா அரசு இம்முறை சமர்பிக்கவிருக்கும் வரவுசெலவுத்திட்டமும் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஒன்றாகவே இருக்கும் எனத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுத் தரும் பட்ஜெட்டாக அது இருக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அன்று தனியார்மயப்படுத்தலை எதிர்த்தவர்கள் இன்று அரசுடமையாக்கப்பட்டிருக்கும் அனைத்து துறைகளையும் படிப்படியாக தனியாருக்கும் வெளிநாடுகளுக்கும் விலைபேசிக் கொண்டிருப்பதாகவும் ஐ.தே.க.சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட…
-
- 0 replies
- 371 views
-
-
புதன்கிழமை, அக்டோபர் 20, 2010 வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்திக் பெறுமதி 490 மில்லியன் ரூபாவென ஆளும் கட்சி பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 110 கிலோ கிராம் தங்கம் விசாரணைக்கென உரிய இடத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று பாராளுமன்றில் எழுப்பிய வாய்மூல வினாவிற்கு விடையளிக்கும் போதே தினேஷ் குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டார். தயாசிறி ஜயசேகர பாராளுமன்றில் மூன்று கேள்விகளை எழுப்பியதாகவும் அதற்கு ஆளும் கட்சி பிரதம கொரடா பதிலளித்ததாகவும் எமது பாராளுமன்றச் செய்…
-
- 1 reply
- 706 views
-
-
கே.பி. மீதான அடிப்படை விசாரணை இன்னரும் பூர்த்தியடையவில்லை அரசாங்கம் அறிவிப்பு விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் மீதான அடிப்படை விசாரணை இன்னும் முடிவடையவில்லை என நேற்று புதன்கிழமை சபைக்கு அறிவித்துள்ளஅரசாங்கம், கே.பி. உட்பட கைதான விடுதலைப்புலி சர்வதேச செயற்பாட்டாளர்கள், வன்னிப் படை நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை முடக்கி அவ்வமைப்பிற்கு சொந்தமான சொத்துகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம்.பி.தயாசிறி ஜயசே…
-
- 0 replies
- 392 views
-
-
தொண்ணூறுகளில் கிழக்கில் அப்போதைய இராணுவத்தினர் மக்களை சித்திரவதை செய்தனர். பலர் காலில் விழுந்தபோதும் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டனர். எனவே அன்று இவ்வாறான சம்பவங்களை இயக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அன்று மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவங்களே நான் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு காரணமாக அமைந்தன என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மேலும் நாட்டில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் சுயாதீனமாக இயங்க வைக்கப்படவேண்டும். இந்த விடயத்தில் நல்லிணக்க ஆணைக்குழு பாரிய வகிபாகத்தை வகிக்க முடியும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர…
-
- 0 replies
- 379 views
-
-
தமிழுலகை எவ்வாறு 2009ம் ஆண்டு மே 18ம் திகதி புரட்டிப் போட்டதோ அதே போன்று தமிழ் ஊடக உலகைப் புரட்டிப் போட்ட நாளாக 2009 ஒக்டோபர் 19ம் திகதி வரலாற்றில் இடம்பெறுகிறது. தமிழ்த் தேசியத்திற்கான புனித பணியாக செயற்பட்டு வந்த புதினம் இணையத்தளம் நிறுத்தப்பட்ட நாள் இதுவேயாகும். புதினம், தமிழ்நாதம் என இரண்டு இணையத்தளங்கள் போராட்டத்தின் நியாயத்தை வெளியுலகிற்குக் கொண்டு வருவதற்கான ஊடகங்களாக தமிழீழ வரலாற்றில் மாத்திரமல்ல அதையும் தாண்டி உலகளாவிய தமிழர்களின் வரலாற்றில் சேவையாற்றிக் கொண்டிருந்தன. மேற்குலக ஊடகங்களே மேற்கோள் காட்டும் ஒரு தளமாக பரிணமித்த புதினம் செய்தித் தளம் தமிழீழ மக்களுடன், போராட்ட சக்தியுடன் நேரடித் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டதன் மூலம் உடணடிச் செய்திகளை உலகிற்குக…
-
- 6 replies
- 785 views
-
-
விடுதியொன்றை நிர்மாணிப்பதாக கூறி ஜப்பானிய பெண்ணொருவரிடம் மோசடி அக் 21, 2010 திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் ஆடம்பர விடுதியொன்றை நிர்மாணிப்பதாக கூறி, ஜப்பானிய பெண்ணொருவரிடம் 24 கோடி ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் கணவன், மனைவியை தாம் ஹம்பாந்தோட்டையில் கைதுசெய்துள்ளதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். sangathie
-
- 0 replies
- 292 views
-
-
Oct 21, 2010 / பகுதி: செய்தி / மாங்குளம், மல்லாவி வீதியில் கண்ணிவெடி - மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் மாங்குளம் சந்தியை அண்மித்த மல்லாவி வீதியில் கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. மாங்குளம் பகுதியில் படைத்தரப்பு பாரிய தளங்களை அமைத்திருக்கின்ற நிலையில் மக்களும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் தொடர்ந்தும் இந்தப் பகுதிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் - மாங்குளம் மல்லாவிச் வீதிப்பகுதியில் இந்தக் கண்ணிவெடி மீட்கப்பட்ட சம்பவம் மக்களிடம் பெரும் பதட்டத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. pathivu
-
- 0 replies
- 575 views
-
-
அணு மின் உற்பத்தித் திட்டம் - அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை அக் 21, 2010 அணு மின் உற்பத்தித் திட்டம் குறித்து அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸ், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலீ சம்பிக்க ரணவக்கவை சந்தித்து - இலங்கையின் அணுத் திட்டம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 2020ம் ஆண்டின் பின்னர் இலங்கையில் அணு மின் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் ரணவக்க அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. sangathie
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கை வெளிவிவகார அமைச்சு நாட்டின் நன்மதிப்பை நிலைநாட்டும் நோக்கிலான பிரச்சாரப் பணிகளுக்காக 12 மில்லியன் ரூபாவினை செலவிட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளில் இலங்கையின் நன்மதிப்பை பிரச்சாரம் செய்யும் பணி சில நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுவுட் சோர்சிங் (தூரத்திலிருந்து கடமைகளை மேற்கொள்ளல்) என்னும் முறையின் அடிப்படையில் குறித்த நிறுவனங்கள் இலங்கையின் நன்மதிப்பை மேம்படுத்தும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்திற்காகவா வெளிவிவகார அமைச்சு இயங்கி வருகின்றதென அவர் கேள்வி…
-
- 0 replies
- 529 views
-
-
Sri Lankan Born Container King Ian Kiru Karan Becomes Hamburg Minister Ian Kiru Karan, Born in Point Pedro in 1939, went to Germany from the United Kingdom here he was studying in 1970 and built one of the world’s biggest container leasing companies in Hamburg. He recently hit the headlines there when he was sworn as Economics Minister in that city state. Karan began life in Germany as a dishwasher in a vegetarian restaurant and later joined a container company as a clerk before being promoted a manager due to exceptional ability. He later went on to found his own business in 1977 earning the nickname "Container King" in the North Germany port city of …
-
- 2 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகள் தடை விவகாரம்: இந்திய அரசிடம் பிரதமர் ருத்ரகுமாரன் கோரிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்திரகுமாரன் இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையையொட்டி தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வில் இருபக்கங்களின் நியாயங்களும் கேட்டறிவதற்கான வாய்ப்பு இல்லாத தன்மைபற்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘’தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம். இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினைப் புதுப்பிப்பது தொடர்பாக தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வானது தவறுகள் கொண்டதென நாடுகடந்த தமிழீழ அ…
-
- 0 replies
- 663 views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2010 விடுதலை புலிகளுக்கு அமெரிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு முயன்றார் என கைது செய்யப்பட்ட சிங்கபூர் நபரான பால்ராஜ் மீதான குற்றச்சாட்டு மெரிலாண்ட் ஜூரியில் நேற்றைய தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குழுவினருக்கு ஆயுத ரீதியான உதவியை வழங்க முன் வந்தார் என குற்றம் சுமத்தி பால்ராஜிற்கு ஆகக்கூடியது 15 வருடம் சிறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பால்ராஜ் வழங்கிய வாக்குமூலத்தினை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரது சகாக்களாகிய மூவருக்கு 3 தொடக்கம் 5 வருடம் சிறைப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைகள் மூலம் விடுதலைப்புலிகளிற்கும் , பால்ராஜிற்கும் இடையில் பெருந்தொகை பண பரிமாற்றங்கள் இடப்பெற்று வந்தமை உறுதிப்படுத்தப்பட்ட…
-
- 3 replies
- 929 views
-
-
"தமிழ் ஈழம் மலர தீக்குளித்த என் அண்ணனின் கனவு நிறைவேறவில்லையே''-முத்துக்குமாரின் தங்கை வேதனை சென்னை: தமிழ் ஈழம் மலருவதற்காக தீக்குளித்த என் அண்ணன் முத்துக்குமாரின் கனவு நிறைவேறவில்லை, என்று அவரின் தங்கை தமிழரசி கண்ணீருடன் கூறினார். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக நேற்று காலையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து சென்னை பத்திரிக்கையாளர் மன்ற வளாகத்தில் நேற்று மாலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் [^], பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், தேசிய விடுதலை இய…
-
- 2 replies
- 718 views
-
-
புலிகள் பக்க நியாயங்களையும் கேளுங்கள்! - இந்தியாவுக்கு பிரதமர் ருத்ரகுமாரன் வேண்டுகோள் நியூயார்க்: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் [^] மீதான தடையை நீட்டிப்பது அல்லது விலக்குவது குறித்து தற்போது நடைபெற்றுவரும் விசாரணை அமர்வில் புலிகளின் தரப்பு நியாயங்களையும் எடுத்து வைக்க வாய்ப்பு தரவேண்டும் என இந்திய அரசுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் [^] வி. ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது வாதத்தை முன்வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டுமென இந்திய அரசாங்கத்திடம் மரியாதையுடன் வேண்டிக் கொள்கிறோம். இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் [^] மீதான தடையினைப் புதுப்பிப்பது …
-
- 2 replies
- 1.2k views
-
-
நெடியவனை நாடுகடத்த வேண்டுமாம் - பேரினவாதி றொகான் குரணத்தினாவின் புலம்பல் அக் 17, 2010 Font size: விடுதலைப்புலிகளின் பெருமளவான தலைவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், குறிப்பாக நெடியவன் அனைத்தலகத்தின் நடவடிக்கைகளுக்கு பெறுப்பாக இருப்பதால் அவரை நாடுகடத்த வேண்டும் என சிறீலங்கா அரச பயங்கரவாதத்திற்கும், மனித உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றங்களுக்கும் துணைபோகும் சிங்கள பேரினவாதி றொகான் குணரத்தினா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் இருந்து வெளிவரும் பேரினவாத சிந்தனை கொண்ட லக்பிம வாரஏடு மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப்புலிகள் அமைப்பு கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் ஒன்று சேர்ந்து வருகின்றது. அவர்களை கைது செய்யும் வல்லமை சிறீலங்கா அரசிடம் கிடையாது. எனவ…
-
- 36 replies
- 3.1k views
-
-
பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இன்று புதன்கிழமை பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின்போது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகரமானதும் வெளிப்படையானதுமான விசாரணைக்கான பிரிட்டனின் கோரிக்கையை வில்லியம் ஹேக் மீள வலியுறுத்துவாரென பிரிட்டிஷ் வெளிவிவகார அலுவலகப் பேச்சாளர் கூறியதாக த ரெலிகிராவ் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறது. 2009 ஜனவரிக்கும் மே மாதத்திற்கும் இடையில் 8000 - 10000 இற்கிடைப்பட்ட பொதுமக்கள் இறந்திருப்பதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை,உலகத் தமிழர் பேரவை புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினரால…
-
- 0 replies
- 535 views
-
-
நடப்பாண்டைவிட 2011 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவின ஒதுக்கீட்டை 6 சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்திருக்கிறது. அரசாங்கம் 215 பில்லியன் ரூபாவை (1.92 பில்லியன் டொலர்) 2011 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினமாக ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இத்தொகையானது தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் ஐந்தில் ஒரு பங்காகும். யுத்தம் முடிவுக்கு வந்தபோதும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது பெற்றுக்கொண்ட ஆயுதங்கள், இராணுவ உபகரணங்களுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டியிருப்பதால் பாதுகாப்புச் செலவினத்துக்கு அதிகளவு தொகையை ஒதுக்கிட வேண்டியிருப்பதாகஉத்தியோகபூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன. இரண்டு கோடி மக்களைக் கொண்ட இலங்கையின் பாதுகாப்புச் செலவினத்துக்கு பாரியதொகை ஒதுக…
-
- 0 replies
- 425 views
-
-
யாழ் கோட்டை நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு வருவதுபோல், நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சங்கானைக் கோட்டைகள், சங்கிலியன் தோப்பு, மந்திரி மனை, நிலாவரைக் கிணறு என்பனவும் விரைவாகப் புத்தாக்கம் செய்யப்படவேண்டும். யாழ்ப்பாணம் முற்றிலும் ஒரு புதினமாக இருப்பது பலரது வருகைக்குக் காரணமாயிருக்கிறது. நீண்ட காலமாகப் பிரிந்திருந்த தம் தேசத்தையும், உறவுகளையும் காண்பதற்காய் புலம்பெயர் தமிழர்கள் வந்தவண்ணமுள்ளனர். ஜுலை, ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்கள் கோவில் திருவிழாக் காலம் என்பதும் இவர்களது வருகைக்கான மேலதிக ஊக்கியாகியது. திடீரென அதிகரித்துள்ள இந்த வருகைகள், இதனால் எமது பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் பொருளாதார முன்னேற்றம் என்பன, யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத்துறையை விரிவு பட…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிட முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த போது ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதனின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி குமரன் பத்மநாதனின் சொத்துக்கள் தொட…
-
- 0 replies
- 832 views
-