Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. UNHCR பயங்கரவாத அமைப்பா…? – தாய்லாந்திலிருந்து ஏதிலியின் குரல் UNHCR இல் பதிவு செய்து தாய்லாந்தில் இருக்கும் தமிழீழ ஏதிலிகளை கனடிய சர்வதேச காவல்துறையும், சிறீலங்கா காவல்துறையினரும் முறையற்ற முறையில் கைது செய்கின்றனர். இது தொடர்பாக தாய்லாந்திலுள்ள ஈழ ஏதிலி ஒருவர் நம்மை தொடர்புகொண்டு அளித்த செவ்வி… http://meenakam.com/?p=10692

  2. வட மாகாணத்துக்கான அபிவிருத்திக் குழுவின் கூட்டம் எதிர்வரும் 19ம் திகதி வவுனியா இராணுவ தலைமை முகாமில் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ள நிலையில் அவரது பாதுகாப்புக் கருதியே இராணுவ முகாமில் அதனை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழு கூட்டமும் திருமலை கடற்படை முகாமில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வடக்கு அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். www.tharavu.com

  3. எமது கட்சயில் இருந்து எம்மை உதாசீனம் செய்வோருக்கு பதிலடி கொடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எமது கட்சியிலிருந்து சொந்த முடிவின் அடிப்படையில் அரசுடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசன் எம்பிக்கு எமது பொதுச்செயலாளரினால் கடந்த ஆகஸ்ட் 09ம் திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் கிடைக்கவில்லை. இது அவரது உதாசீன போக்கை தெளிவாக எடுத்துகாட்டுகின்றது. அத்துடன் தான் வேறு ஒரு கட்சியை அமைக்கப்போவதாகவும் ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக தான் எடுத்த தனிப்பட்ட முடிவுகளை திரு…

    • 0 replies
    • 558 views
  4. பிரபாகரன் இருக்கிறாரா என்பது குறித்து காலம் பதில் சொல்லும்-'பிரதமர்' ருத்திரகுமாரன் புதன்கிழமை, அக்டோபர் 13, 2010, 10:44[iST] லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறியுள்ளார் நாடு கடந்த தமிழீழ அரசின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள உருத்திரகுமாரன். பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு அவர் அளித்துள்ள பேட்டி: ''நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?'' ''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப்படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்றை சட்டங்களாக என்றுமே ஏற்கவில்லை. நாடு …

  5. 13.10.1997 அன்று வவுனியா மாவட்டம் பெரியமடுப்பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் சந்திரகாந்தன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 13.10.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அன்பரசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கம் படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.

  6. புதன்கிழமை, 13, அக்டோபர் 2010 (10:16 IST) இடிஅமீன் ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பா? கி.வீரமணி கண்டனம் டெல்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ‘இடிஅமீன்’ ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதா என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஈழத் தமிழர்களை அவர்கள் அந்த நாட்டின் சொந்த குடிமக்கள் என்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், இன ஒடுக்கல் என்ற அடிப்படையில், அன்றாடம் அழித்து ஒழித்ததோடு, அவர்களில் உயிருடன் வாழும் மக்களை, முள்வேலிக்குள் பட்டியில் அடைக்கும் ம…

  7. செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 12, 2010 ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்த ஆணைக்குழு நேற்று ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்தது. இங்கு காணாமல்போன, கடத்தப்பட்ட உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு சுமார் 700 மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் சுமார் 35 பேர் வரை சாட்சியமளித்தனர். யுத்தம் முடிவடைந்து அனைவரும் தமது குடும்பத்தினருடன் வாழும் நிலையில் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமல் தவிக்கின்றோம். தயவுசெய்து எமது கணவன்மாரை, சகோதரர்களை, பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவிடம் நேற்று திங்கட்கிழமை பெண்கள் பலர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர். கி…

  8. பாராளுமன்றத்தில் தேவையான சட்டமூலத்தை நிறைவேற்றாமல் புதிய முறைமையின் கீழ் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தவிருக்கும் அரசாங்கமானது வட்டாரங்களை இரகசியமான முறையில் மட்டுப்படுத்தும் வேலைகளை முன்னெடுத்துச் செல்வதாக அரசாங்கத்தின் மீது பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இக் குற்றச் சாட்டைத் தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து தேவையான அடிப்படை வேலைகளைச் செய்யுமாறு உத்தியோகபற்றற்ற முறையில் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தும்போது வெளிப்ப…

  9. பல தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்ட தமிழருவி சஞ்சிகை வெளியீட்டு விழா 1.10.2010 வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணியளவில் Homebush ஆண்கள் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. மொழியால் இணைந்து உணர்வாய் எழுவதற்காய் சிட்னியில் ஊற்றெடுத்திருக்கும் தமிழருவி விழாவில் திரு. திருநந்தகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். திருமதி சோனா பிறின்ஸ் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்வில் மங்கள விளக்கை திருமதி. திருநந்தகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார். மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து இன மொழி விடுதலைப் போராட்டங்களில் வீரச்சாவடைந்தோருக்கும் அந்நிய சக்திகளால் படுகொலை செய்யப்பட்டோருக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கம் நிறைவடைந்ததும் சுதா தனபாலசிங்க…

  10. வன்னி யுத்தத்தில் கைதான ‐ காணாமல் போன ‐ தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களை விடுவிக்கக் கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் ‐ உதுல் பிரேமரட்ன‐ GTN செய்தியாளர் 12 October 10 10:08 pm (BST) வன்னி யுத்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டு காணாமல் போன மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அனைத்திலங்கைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இன்று யாழ் நகரில் அதனது தலைவர் உந்துல் பிரேமரட்னவினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் யுத்த நடவடிக்கைகள் காரணமாக பலர் காணாமல் போயுள்ளனர். அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சிறைச…

  11. அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ _ட்டிக்காட்டியுள்ளார். பாணந்துறை ரன்கொத்த விஹாரையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கொழும்பு, ஒக். 13 அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் கடன் வழங்கும்சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டிக்காட்டியுள்ளார். பாணந்துறை ரன்கொத்த விஹாரையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற் றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கை தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாக வகை…

    • 4 replies
    • 628 views
  12. சில மாதங்களுக்கு முன் சிங்கள பெண்மணி ஒருவர் சவூதி அரேபியாவில் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அவரது அரேபியா முதலாளியால் ஆணி, ஊசி உடலில் ஏற்றி சித்திரைவதை படுத்தப்பட்டார். அரேபியாவில் ஐந்து இலட்சம் சிங்கள, இசுலாமிய பெண்கள் வீட்டு வேலைக்காரர்களாக இருக்கிறார்கள். இவர்களில் ஒவ்வொரு வருடமும் ஐம்பது பேருக்கும் மேல் கொலையுண்டும், ஆயிரக்கணக்கானவர்கள் சித்திரை வதை படுத்தியும் ஸ்ரீ லங்காவிற்கு விரட்டி அடிக்கப்படுவார்கள். ஸ்ரீ லங்கா சர்வாதிகாரிகளும் வெளிநாட்டு செலவாணியை அள்ளித்தரும் இந்த துறையை விட்டுத்தர விரும்பாது இந்த கொடுமைகளை மூடி மறைப்பார்கள். ஆனால் ஆணி, ஊசி ஏற்றி கொடுமைப்படுத்தப்பட்ட சிங்கள பெண்மணியின் செய்தி ஆங்கில ஊடகங்களால் வெளிச்சம் போட்டு உலகத்திற்கு …

    • 0 replies
    • 833 views
  13. கைதடி கோப்பாய் பாலத்தின் புனர்நிர்மானப் பணிகள் பூர்த்தியாகி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் அந்த பாலத்தினூடாக வாகனங்கள் போவதற்கு வழி இல்லாது இருக்கின்றது. தற்காலிகமாக போடப்பட்ட பாலத்தின் பாதையூடாக பெரும் சிரமங்களின் மத்தியில் பயணிகள் செல்வது மிகவும் கவலையளிக்கும் விடயமாக உள்ளது. இப் பால வேலைகள் பூர்த்தியாகியும் வீதியுடன் சேரும் இப்பாலத்திற்கான இணைப்புப் பாதையின் வேலைகள் இன்னமும் செய்து முடிக்காது அப்படியே உள்ளது. இவ் வீதி, பாலம் புனரமைப்பின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவருக்கு பிரித்துக் கொடுத்த நற் பலனின் காரணமாகவே இவ்வாறு இப்பாலத்தினூடான பயணம் பூர்த்தியாகாது இழுபடுகின்றது. அரச அதிகாரிகள் முதல் விவசாயிகள் வரை செல்லகின்ற முக்கிய பாதை தென்மராட்சி - வலிகாமம் இ…

    • 0 replies
    • 1.4k views
  14. புலம்பெயர் தமிழ் மக்களே சிறீலங்காவுக்கு வருமானத்தை வழங்குகின்றனர் October 12th, 2010 boycott-sri-lanka-04-dollar போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்காவின் உல்லாசப்பயணத்துறை அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளபோதும், அது புலம்பெயர் தமிழ் சமூகம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்வதால் ஏற்பட்டது என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் முடங்கிக்கிடந்த உல்லாசப்பயணத்துறை போர் நிறைவுபெற்ற பின்னர் அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது. கட்டுநாயக்கா அனைத்துலக விமானநிலையத்தின் ஊடாக சிறீலங்காவுக்குள் நுளையும் மக்களின் தொகையை கொண்டு இந்த கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆன…

  15. மட்டக்களப்பு மாவட்டதில் நாளை 13ஆம் திகதி புதன்கிழமை சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கென சுனாமி தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் டச்பார் கிராம சேவகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நிலையத்தின் மாவட்ட பதில் இணைப்பாளர் ஏ.எம்.எம்.கசீர் தெரிவித்தார். நாளை மாலை 3.00 மணிக்கு குறித்த இடங்களை மையப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது…

  16. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர்களான பா.அரியநேத்திரன், பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் உட்பட ஐவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் இன்று விடுதலை செய்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்ததாகவும், போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியதாகவும், அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் குற்றம் சுமத்தி காத்தான்குடி பொலிஸார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம், வேலையற்ற பட்டதாhரிகள் சங்க தலைவர் ஆகியோர் மீது வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தது. க…

  17. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ தளபதிகளில் ஒருவராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக இருக்கின்றமையால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மிகவும் மன வேதனையை அனுபவித்து வருகின்றார். கொழும்பு நகர சபை மண்டப வளவில் வைத்து புலிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலால் அவர் அடைந்த கடுமையான வேதனையை விட இது அதிகமானது.” கொழும்பு நகரசபை மண்டப வளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மீது 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்று…

  18. நோர்வேயின் மனிதாபிமான நிறுவனத்துக்கு எதிராக இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை! செவ்வாய், 12 அக்டோபர் 2010 05:11 மின்னஞ்சல் அச்சிடுக PDF கடந்த 30 வருடங்களாக இலங்கையில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வரும் நோர்வே நாட்டு மனிதாபிமான அமைப்பான FORUT நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மஹிந்த அரசு முடுக்கி விட்டுள்ளது என ஒஸ்லோவில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் செய்தி பிரசுரித்துள்ளன. 1981 ஆம் ஆண்டு முதல் FORUT நிறுவனம் இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக தற்போது Arne Bang City உள்ளார். இவர் அங்கு தொடர்ந்து கடமையாற்றவோ, தங்கி இருக்கவோ முடியாது என்று இலங்கை அரசு அறிவ…

  19. குடியேறப் போகிறோம் எனக் கூறிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து தங்கியுள்ள சிங்கள மக்கள் தமக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருமாறு வைத்தியசாலை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது: யாழ்.ரயில் நிலையத்தில் தங்கி யுள்ள மக்களின் சார்பில், பிரதிநிதி மல்காந்தி தலைமையில் நேற்றுச் சென்ற ஒரு குழுவினர், தமது பெயர் விவரங்கள் மற்றும் கல்விச் சான்றி தழ் என்பவற்றை கொண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி யிடம் சமர்ப்பித்தனர். இங்கு வந்துள்ள சிங்கள மக் களில் அநேகமான இளைஞர், யுவதிகள் உயர்தரக் கல்வியை நிறைவு செய்தவர்களாக உள்ளனர். இவர்களில் தாதிய பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்கள், கொழும்பு மற்றும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.