ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை. வரும் ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பில்லியன் ரூபாய் இந்திய மானியமாக வழங்கப்படும் இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிர்த் தகவல்களின் தரவுகளும் அடங்கும். முன்னதாக, டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது 76 சுயவிபரம் கோரப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை பெற சுயவிபரம மட்டுமே தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய டிஜிட்டல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, பெயர், முகவரி, பிறந்த திகதி, பாலினம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கட்டாயம் அளிக்க வேண்டும். …
-
- 4 replies
- 472 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 03:40 PM இந்தியா ஒரு பிராந்திய தலைவர் மாத்திரமில்லை, அதன் அண்டை நாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நிறுவனங்கள் உட்பட ஏனைய உலகம் என்ன செய்வது என விவாதித்துக் கொண்டிருந்த வேளை இந்தியாவே உண்மையில் இலங்கைக்கு உதவ முன்வந்தது எனவும் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியா சாதித்துள்ள விடயங்கள் எங்களிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் இயல்பான நன்மையை பெற்றவர்கள் யார் என்றால் எங்களை சுற்றியுள்…
-
- 8 replies
- 894 views
- 1 follower
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்று (19) வாழைச்சேனை நீதிமன்றில் இடம்பெற்ற போது பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைவாக, வாழைச்சேனை பொலிஸாரினால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை நீதவான் ரிஸ்வான் சந்தேகநபர்கள் நால்வருக்கும் பிணை வழங்கினார். இந்த வழக்கு மீண்டும் ஜனவரி முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேரும் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டி…
-
- 2 replies
- 462 views
- 1 follower
-
-
19 DEC, 2023 | 03:58 PM (எம்.மனோசித்ரா) நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இரண்டு வருடங்களில் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு உயர்தர வகுப்புக்களுக்கான 60 திறன் வகுப்பறைகளை நிறுவுகின்ற முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவி வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய பெறுகை திணைக்களத்த…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை! adminDecember 18, 2023 உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக போய்கோண்டிருக்கும் விடையம் இந்த உலகத்தமிழர்களுடைய நாடகம் இந்திய மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குநர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்ட…
-
- 13 replies
- 1.3k views
-
-
சென்னையிலிருந்து யாழுக்கு வந்த விமானம் தரையிறங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது! (புதியவன்) இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் தரையிறக்க பல முறை சுற்ற செய்தும் மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் தற்போது சென்னை விமான நிலையத்தை நோக்கி செல்கிறது.(இந்த தகவலை யாழ்ப்பாண சர்வதேச விமானநிலைய தரப்புக்கள் உதயனுக்கு உறுதிப்படுத்தின) (ஐ) சென்னையிலிருந்து யாழுக்கு வந்த விமானம் தரையிறங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது! (newuthayan.com)
-
- 0 replies
- 379 views
-
-
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் மூன்று பொலிஸ் சாட்சிகள் மற்றும் இரண்டு சிவில் சாட்சிகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (5) தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது , நவம்பர் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் பொலிஸ் நிலையத்தில் கடையாற்றிய பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூன்று பொலிஸ் சாட்சியங்கள் தமது சாட்சியை …
-
- 2 replies
- 362 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 DEC, 2023 | 01:17 PM மன்னார் கரிசல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம் பெற்றுள்ளது. பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை சென்ற போது அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் திங்கட்கிழமை (18) பெற்றோர் பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அ…
-
- 1 reply
- 623 views
- 1 follower
-
-
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணங்களில் சாத்தியமான குறைப்புக்கான அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதிகரித்த நீர் மின் உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் நிலக்கரி கொள்வனவு என்பன மின் கட்டண குறைப்பிற்கான இரு முக்கிய காரணிகளாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறிப்பிட்டார்: 2023 இல் நிலக்கரி கொள்வனவுகள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருந்ததாகவும், இது சாத்தியமான செலவினச் சேமிப்பிற்கு பங்களித்ததாகவும் அனுருத்த குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சரியான விலை மாற்றங்களை தீர்மானிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மின் கட்டண திருத்தங்களுக்கான முன்மொழ…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
18 DEC, 2023 | 11:12 AM கேரளாவில் கொரோனா வைரசின் புதியமாறுபாடு வேகமாக பரவிவருவதை தொடர்ந்து எச்சரிக்கையாக உள்ளதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் மிகவேகமாக பரவும் இலகுவில் அடையாளம் காணமுடியாத கொரோனா வைரசின் புதியமாறுபாடு பரவிவருவதை தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் பரவும் புதிய நோயினால் இலங்கைக்கு எப்போதும் ஆபத்து என்பதால் இலங்கை எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளது என சுகாதார அமைச்சின் கொரோனா விவகாரங்களிற்கான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். கேரளாவில் பரவும் புதிய வகை கொரோனா காரணமாக நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 362 views
- 1 follower
-
-
ஓய்வு வயதை அறிவித்தார் சுமந்திரன் வி.ரி. சகாதேவராஜா இலங்கை தமிழர் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு, காரைதீவு தமிழரசுக் கட்சி கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி கிளைப் பணிமனையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இலங்கை தமிழர் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில், “எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயதாகிறது 65-ல் நான் ஓய்வு பெறுவேன்” என்றார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஓய்வு-வயதை-அறிவித்தார்-சும…
-
- 2 replies
- 577 views
-
-
இலங்கைக்கு வரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்தியா. அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. சிங் யாங் ஹாங் 03 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்படும் என்றும் அதற்காக இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கத…
-
- 25 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதோடு 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்! யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பருத்திதுறையில் 146.1 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. தெல்லிப்பழையில் 142 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் திருநெல்வேலியில் 43 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. (19.12.2023) காலை 10 மணி வரையான நிலவரப்படி யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்…
-
- 0 replies
- 274 views
-
-
ஹரிகரன் இசைநிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது December 18, 2023 யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு மேடை ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சி சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த உங்களை மனவருத்தத்தில் ஆட்ப…
-
- 0 replies
- 517 views
-
-
ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுதான் அவசியம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார் அமெரிக்கக் காங்கிரஸின் உறுப்பினர் டொன்டேவிஸ். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இப்போதும் அடக்குமுறைகள் தொடர்கின்றன. ஆதலால்தான் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான தீர்வு இப்போது தேவையாகவுள்ளது என்றும் அவர் தன் கருத்தை, நிலைப்பாட்டைப் பதிவு செய்திருக்கின்றார். நல்லது. ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கக் காங்கிரஸினரோ அல்லது கனேடிய நாடாளுமன்றத்தினரோ ஆதரவைத் தெரிவிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல. 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலம் முதல் இந்தக் கோரிக்கை மற்றும் வலியுறுத்தல்களை அவர்கள் முன்வைத்தே வந்திருக்கின்றார்கள். இந்…
-
- 0 replies
- 284 views
-
-
Published By: VISHNU 18 DEC, 2023 | 09:12 PM (நா.தனுஜா) உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் வழங்குகின்ற அங்கீகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்திறன்மிக்க கண்காணிப்பை முடிவுக்குக்கொண்டுவரும் எனவும், அது நல்லிணக்க செயன்முறையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் இலங்கை ஆய்வாளர் அலன் கீனன் எச்சரித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானியத்தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ட் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சாண்டில் ஷால்க் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வடமாகாணத்துக்குச் சென்றிருப்பதுடன், அங்க…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
Published By: VISHNU 18 DEC, 2023 | 08:34 PM (நா.தனுஜா) நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரச மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும். இம்மறுசீரமைப்புக்களுக்கு உரியவாறான முக்கியத்துவம் வழங்கப்படாவிடின், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுவதாக 6 அமைப்புக்களை உள்ளடக்கிய 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பு' எச்சரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஊழல் எதிர்ப்புசார் மறுசீரமைப்புக்களில் நிலவும் முன்னேற்றமின்மை குறித்து ட்ரான்ஸ்பே…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
18 DEC, 2023 | 10:06 AM பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட சிராட்டிக்குளம் கிராமம் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று நீர் புகுந்துள்ளமையினால் வீடுகளில் கூட உணவுகளை தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் இல்லாத நிலையில், 7/8 கிலோமீற்றர் தூரமுள்ள நட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு சென்றே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் தெரிவித்த மக்கள் பறங்கியாறு பெருக்கெடுத்து குடிமனைக்குள்ளாக பாய்வதால் வைத்தியசாலைக்கு கூட செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக தெர…
-
- 1 reply
- 388 views
- 1 follower
-
-
தமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறுகின்றார். ஆனால் அவரது ஆட்சிகாலத்தில்தான் கொலைகள் அரங்கேறின. கையில் வேண்டுமானால் இரத்தக்கறை இல்லாமல் இருக்கலாம் ஆனால், அலுமாரியில் நிச்சயம் எலும்புக்கூடுகள் இருக்கும் - என்று ஐக்கிய மக்கள் சக்தி சாடியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது:- பெரமுனவின் மாநாட்டில் உரையாற்றிய மஹிந்தராஜபக்ச, தமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை என்றும் எம்முடன் இணையுங்கள் என்றும் கூறியுள்ளார்.2005 முதல் 2015 வரை மஹிந்த ராஜபக்சதான் ஜனாதிபதியாக இருந்துள்ளார். அவரது சகோத…
-
- 0 replies
- 390 views
-
-
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 2024இல் இருந்து இன்னும் 12 ஆண்டுகளுக்கு ரணில் விக்கிரமசிங்க தேசத்தை நடத்த அனுமதித்தால், இலங்கை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாறும். இல்லை என்றால், தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்,” என வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/285098
-
- 1 reply
- 266 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 18 DEC, 2023 | 03:58 PM உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10 முதல் டிசம்பர் 12 வரை சந்திப்புக்கள் நடத்தப்பட்டன. இடைக்கால செயலக அதிகாரிகள் குழுவின் யாழ்ப்பாண விஜயமானது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான விடய…
-
- 1 reply
- 418 views
- 1 follower
-
-
கார்த்திகைப் பூ விவகாரம் : யாழில் ஒருவர் உயிரிழப்பு! கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூச்செடியின் கிழங்கை உட்கொண்ட நிலையில், சுகவீனம் அடைந்துள்ளார். அதனையடுத்து அவரை வீட்டார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1363384
-
- 3 replies
- 621 views
-
-
இலங்கைக்குப் பெருமை சேர்த்த `புசாந்தன்`. மலேசியாவில் இடம்பெற்ற Asian Classic Powerlifting Championship 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1363534
-
- 6 replies
- 547 views
-
-
வற் வரி தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்! 2024 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20 ஆயிரத்து 467 ரூபாவை VAT செலுத்த வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில், 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9 ஆயிரத்து 941 ரூபாவை VAT வரியாக செலுத்தி வருகின்றது. இதன்படி, இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய VAT வரித் தொகையானது 105 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டு அரசாங்கம் எதிர்பார்க்கும் மறைமுக வரி வருமானம…
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
தொடர் மழையினால் சிறுவர்களுக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றுடன் ஹெபடைடிஸ் நோய் குழந்தைகளையும் பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார். முறையான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்வதன் மூலம் குழந்தைகளை இந்நிலையில் இருந்து பாதுகாக்க முடியும் என நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் விசேட வைத்தியர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/285002
-
- 1 reply
- 424 views
- 1 follower
-