Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Published By: DIGITAL DESK 3 14 OCT, 2023 | 12:21 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இணையனுசரணை நாடுகள் உள்ளிட்ட சகல தரப்புக்களுடனும் கலந்துரையாடித் தீர்மானிக்கப்படுமென பிரித்தானியாவின் இந்து - பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யான் தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கை விவகாரத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். கொழும்பில் கடந்த …

  2. Published By: DIGITAL DESK 3 14 OCT, 2023 | 12:07 PM தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். நாளை 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் வடக்கில் இம்முறை 71 இணைப்பு நிலையங்களும் 209 பரீட்சை மண்டபங்களும் செயல்படவுள்ளது. இவ்வாறு செயல்படும் பரீட்சை மண்டபங்களிலேயே இந்த 18 ஆயிரத்து 759 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதேநேரம், வடக்கில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் யாழ்ப்பாணம் ஒன்று வலயத்தில் 12 இணைப்பு நிலையங்களின் கீழ் 41 பரீட்சை…

  3. யாழில். காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் adminOctober 13, 2023 யாழ்ப்பாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விவசாய காணிகளில் பெரும் பகுதி விடுவிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் , உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பெருமளவான காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணப்பட்ட அரச காணிகளை காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளோம். அவற்றில் UNDP யின் நிதி அனுசரணையில் வீடுகளை நிர்மாணித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் யாழ்ப்பா…

  4. 33 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கவுள்ள வலி. வடக்கு பிரதேச சபை உப அலுவலகம் adminOctober 13, 2023 யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன சுமார் 33 வருடங்களின் பின்னர், எதிர்வரும் புதன்கிழமை முதல் சொந்த கட்டடத்தில் இயங்கவுள்ளதாக பிரதேச சபை அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வலி, வடக்கில் இருந்து 1989 ஆம் ஆண்டு கால பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்த போது , அலுவலகம் மற்றும் நூலகம் என்பனவும் இடம்பெயர்ந்த்து. இடம்பெயர்ந்த நூலகம் மற்றும் அலுவலகம் என்பன யாழின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த நிலையில் , 2016ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை உள்ளிட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மக்கள் மீள் குடிய…

  5. Published By: RAJEEBAN 13 OCT, 2023 | 03:08 PM காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன. அக்காலப்பகுதியில் இலங்கையில் பொதுமக்கள் அரசாங்கம் அறிவித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் பிரதான வ…

  6. 12 OCT, 2023 | 07:26 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பொருளாதார யுத்தத்துக்கு முகம்கொடுத்திருக்கும் எமது நாட்டை அதில் இருந்து மீட்கும் பயணத்தில் இஸ்ரேலை முன்மாதிரியாக்கொண்டு இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவரிடமும் அநுரகுமார திஸாநாயக்கவிடமும் இளைஞர் யுவதிகளிடமும் கேட்டுக்கொள்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று வியாழக்கிழமை (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், இஸ்ரேலில் இடம்பெற்று வரும் யுத்தத்தின் மூல…

  7. Published By: VISHNU 13 OCT, 2023 | 11:48 AM வவுனியாவில் யுத்தகாலத்தில் காணாமல்போன தனது மகனைத் தேடிய தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது 65) என்ற தந்தையே வியாழக்கிழமை (12) மரணமடைந்துள்ளார். இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார். அவரைத் தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கோரி போராட்டங்களில் கலந்துகொண்டிருந்த நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  8. நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கு வழங்கப்படும் இரண்டு முக்கிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நீரிழிவு மற்றும் புற்றுநோயை எதிர்நோக்கியுள்ள நோயாளர்களுக்கான மருந்துகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இது எமது நாட்டின் சுகாதார துறையை மேலும் வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் செல்கிறது. குறித்த இரண்டு அத்தியாவசிய மருந்துகளை தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தவறியுள்ளது. இவ்வாறு அத்தியாவசிய மருந்துகளை வழங்க தவறியுள்ள அரசாங்கம், தரம் குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்து மருந்…

  9. Published By: VISHNU 13 OCT, 2023 | 11:29 AM வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் என சந்தேகிக்கப்படும் பல இடங்களில் வியாழக்கிழமை (12) வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தனியார் காணியில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இறுதி யுத்தத்தின் போது குறித்த காணி அமைந்துள்ள இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தக…

  10. Published By: VISHNU 12 OCT, 2023 | 07:10 PM இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை மாநாட்டிலும் இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுவதனால், அதற்குப் பதில் அளிக்கவும், யுத்தத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் நோக்கத்திலுமே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

  11. அரசாங்கத்தினுடைய முகம் மாற்றம் அடைந்துள்ளது! “அரசாங்கத்தினுடைய முகம் தற்போது மாற்றமடைந்துள்ளது” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவல்யனுக்கும் தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (12) இடம்பெற்றது.| இச் சந்திப்பில் பிரித்தானிய அமைச்சருடன் அந்த நாட்டு இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இச்சந்திப்பின் …

  12. 11 OCT, 2023 | 05:22 PM உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி ஸாஹிர் மெளலானா : வர்த்தமானி வெளியானது! | Virakesari.lk

    • 4 replies
    • 458 views
  13. அபிவிருத்தி லொத்தர் சபைக்கு குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளும் போது 28 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து அச் சபையின் முன்னாள் தலைவர் சரண குணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார் பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்லே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரண குணவர்தன செயற்பட்ட காலப்பகுதியில் வாகனங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் போது, 28 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு தா…

  14. Published By: RAJEEBAN 10 OCT, 2023 | 10:46 AM தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் நடத்திய விதத்திற்கும் பௌத்தமதகுருவை நடத்திய விதத்திற்கும் இடையிலான வித்தியாசம் அரசகட்டமைப்பிற்குள் ஆழமாக வேருன்றியுள்ள சிங்கள பௌத்த ஆதிக்கவாதத்திற்கான தெளிவான உதாரணம் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது வார இறுதியில் வெளியான வீடியோக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை துன்புறுத்துவது ஈவிரக்கமற்ற விதத்தில் தாக்குவதை காண்பித்தன என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது. நில ஆக்கிரமிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் குறித்து மட்டக்களப்பில்…

  15. Published By: VISHNU 08 OCT, 2023 | 01:50 PM இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதன் உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஏனைய சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் எதிர்வரும் வாரத்தில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்து சமுத்திர எல்லை நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் மட்டக் கூட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/166385

  16. Published By: VISHNU 10 OCT, 2023 | 10:32 PM ஆர்.ராம் பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெலியன் மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். அவரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் வரவேற்றதோடு கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக்கும் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியைச் சந்தித்த அவர், பொருளாதா மீட்சிக்கான பதையில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள்,…

  17. Published By: VISHNU 12 OCT, 2023 | 05:27 PM பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (12) மதியம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் 01.10.2023 தீர்மானத்திற்கமைவாக வியாழக்கிழமை (12) அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக பணியாளர்களை பாதிக்கும் பிரச்சனைகளில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்தின் காலம் தா…

  18. Published By: VISHNU 12 OCT, 2023 | 05:20 PM கடற்தொழிலில் ஈடுபடும் தமக்கு தொழில் ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாஸ் நடைமுறை மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாட்டை கண்டித்து மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் வியாழக்கிழமை (12) காலை 11.45 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன் ஒன்று கூடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பள்ளிமுனை கடற்கரையில் இருந்து அட்டை பிடிக்க கடலுக்குச் செல்லும் பள்ளிமுனை கிராம மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கடற்படையினர் இடையூரை ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். …

  19. இவ் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பரீட்சை ஊழியர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. 0412 234 134 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது அவசர தொலைபேசி இலக்கமான 117 ஊடாக மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/276723

  20. இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று(11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நேற்று முக்கிய சந்திப்புகளில் ஈடுப்பட்டதுடன், ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆரம்பமாகவே 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை சார்ப…

  21. 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் சீனாவின் EXIM வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன. நீண்ட கால கடன்களை மீளச் செலுத்துவதற்கான இலங்கையின் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இந்த உடன்பாடு உதவியாக இருக்குமென நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொதுக்கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான சீன EXIM வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. கடன் பெறுநர்கள், வணிகக் கடன் வழங்குநர் குழுவுடன் சீன EXIM வங்கி தொடர்ந்தும் உறவைப் பேணுமென இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஊடகவியலாளர் கே.திலிப் அமுதனினால் ஜனாதிபதி செயலகத்திடம் தகவலறியும் சட்டத்தின் ஊடாக கோரிய போதே ஜனாதிபதி செயலகம் இந்த மறுப்பு அறிக்கையை அனுப்பியுள்ளது. …

  23. Published By: PRIYATHARSHAN 12 OCT, 2023 | 10:24 AM அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் (USNS Brunswick) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. புதன்கிழமை ( 11 ) இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலானது எதிர்வரும் 15 ஆம் திகதி இங்கிருந்து புறப்படவுள்ளது. 103 மீற்றர் நீளமுள்ள கப்பலில் 24 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர், மேலும் இந்தக் கப்பலுக்கு கப்டன் ஆண்ட்ரூ எச் பெரெட்டி தலைமை தாங்குகிறார். கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …

  24. 12 OCT, 2023 | 09:45 AM யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் கடந்த 09மாத கால பகுதிகளில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது என யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா செனரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கபப்ட்டுள்ளனர். சிலர் பிணையில் விடுக்கப்பட்டுள்ள போதிலும், …

  25. சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம் September 13, 2023 யா ழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயதுப் பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில் பணியாற்றிய தாதிய உத்தி யோகத்தர் வலம்புரிக்கு அனுப்பி வைத்துள்ள தன்னிலை விளக்கம் இங்கு பிரசுரமாகிறது . சம்பவத்துடன் தொடர்பு பட்டவரின் கருத்தை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே அவரின் தன்னிலை விளக்கம் இங்கு பிரசுரமாகிறது . ஜனனிரமேஸ் ஆகிய நான் கடந்த 2011 ஆம் ஆண்டிலிரு ந்து இற்றை வரை ஏறக்குறைய 12 வருடங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிந்து வருகின்றேன் . குறித்த சிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.