ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143267 topics in this forum
-
முப்பது வருடங்களின் பின்னர் மீளக்குடியமரப் போகின்றோம் எனக் கூறிக் கொண்டு அவசர, அவசரமாக யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்களக் குடும்பங்களை உடனடியாக இங்கு குடியேற்றும் சாத்தியங்கள் எவையும் இல்லை என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் திட்ட வட்டமாகத் தெரிவி குடியேறுவதற்கான வசதிகள் இல்லாத நிலையில் சிங்களக் குடும்பங்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருப்பது ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் கருத்துரைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து, பொருளாதார அபிவிருத்தி அமைச் சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப் புக் குழுத் தலைவருமான பஸில் ராஜபக்ஷவுக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் மீள்குடி யேற்றுமாறு கோரி யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங் கள மக்களின் நிலை க…
-
- 1 reply
- 739 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 10, 2010 கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 1500 க்கும் அதிகமானோர் குழுமியிருந்த போதும் 19 பேரே சாட்சியமளித்தனர். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆணைக்குழு சாட்சியங்களை நேற்றுப் பதிவு செய்தது. கணவன்மார், மகன்மார், உறவினர்களை இழந்த 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் கண்ணீர் மல்கியவாறு மகஜர்களுடனும் புகைப்படங்களுடனும் வருகை தந்திருந்தனர். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச ஆசன இருக்கைகள் போதாத நிலையில் குழந்தைகளைச் சுமந்த வண்ணம் இவர்கள் நின்றிருந்தனர். அனைவரதும் சாட்சியங்களை ஆணைக் குழுவினால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்களின் கடத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வந்து தாம் யாழ்ப்பாணத்தின் மைந்தர்கள் எனவும் தம்மை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்றுமாறும் சுமார் 180 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் கோரியிருப்பதன் பின்னணியில் திட்டமிட்ட குழு ஒன்று செயற்பட்டுவருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள அரச காணிகளில் இவர்களைக் குடியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அரச உயர் மட்டத்தில் சிலர் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டே யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய அரச காணிகளில் இவர்களைக் குடியேற்றுவது தொடர்பாக ஆராயவேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள்இ க…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 10, 2010 கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பெரும்பாலான பெண்கள் தங்களது கணவன்மார் மற்றும் பிள்ளைகளை படைத்தரப்பினர் கைதுசெய்த பின்னரே காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்தனர். இங்கு சாட்சியமளித்த அண்மையில் காணாமல் போன மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சகாயமணியின் மனைவி சகாயமணி மேரி யோசப் சாட்சியமளிக்கையில்; எனது கணவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மாநகர முதல்வரை சந்திக்கச் சென்றிருந்தார். ஆனால் வீடு திரும்பவில்லை. கடத்தியவர்களைத் தெரியும். எனது கணவரை அடித்து சங்கிலியில் கட்டி பற்பொடி கொம்பனியில் வைத்திருந்தனர். இங்கு உள்ள இராணுவத்தினரே இவரை துன்புறுத்தி வைத்திருந்தனர். அங்கிருந்த ஒருவரிடம…
-
- 0 replies
- 617 views
-
-
சிறிலங்காவைப் பின்பற்றி சரணடைந்தவர்களைச் சுட்டுக் கொல்லும் பாக்கிஸ்த்தான் ராணுவம் கடந்த 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெருமளவில் சரணடைந்த போராளிகள் பொதுமக்களென பல தமிழர்கலை சட்டத்திற்கு முரணான வகையில் சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்று வருவது நாம் அறிந்ததே. இவ்வாறான படுகொலைகள் சிங்கள ராணுவத்தால் வெற்றிக்கேடயங்களாக கருதப்பட்டு கொலைக்களங்களில் வீடியோ ஒளிப்படங்களாக்கப்பட்டு பின்னர் பெரும்தொகைப் பணத்திற்காக ஊடகங்களிற்கும், இன்னும் தனிநபர்களுக்கும் விற்கப்பட்டு வருவதும் நாம் அறிந்ததே. சிறிலங்காவைத் தொடர்ந்து உள்நாட்டுக் கிளர்சிகளையும், சுதந்திரப் போராட்டங்களையும் எதிர்நோக்கி வரும் இன்னும் பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சிறிலங்காவின்…
-
- 2 replies
- 874 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 10, 2010 கையில் காயப்பட்டிருந்த எனது கணவரை மருந்து கட்டுவதாகக் கூறி இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைக் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படையுங்கள். இவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட் சியமளித்த விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவப் பேச்சாளர் இராசையா சிவரூபனின் (இளந்திரையனின்) மனைவி வனிதா சிவரூபன் மன்றாட்டமாகக் கேட் டார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று ஆணைக் குழுவின் அமர்வு இடம்பெற்றது. அங்கு சாட்சியமளித்த வனிதா சிவரூபன் மேலும் தெரிவித்தவை வருமாறு: நானும் கணவரும் பிள்ளைகளும் இராணுவக் கட்டுப்பாட் டுப் பகுதிக்கு வந்துகொண்டிருந்தோம். எனது கணவர் கையில் காயமடை…
-
- 1 reply
- 985 views
-
-
கட்டுநாயக்க வானுர்தி நிலையத்தில் மூன்று தமிழர்கள் கைது அக் 9, 2010 Font size: Decrease font Enlarge font வெளிநாடு செல்லவிருந்த மூன்று தாயகத் தமிழர்கள் கொழும்பு கட்டுநாயக்க வானுர்தி நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை தடுப்புக்காவவில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருவதாக ஸ்ரீலங்கா குற்றத்தடுப்பு காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் - கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் காங்கேசன் துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில…
-
- 2 replies
- 868 views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 10, 2010 சீன அரசாங்கத்தின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் நிரந்தர இராணுவ முகாம்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, வெளிநாட்டு படைகளுக்கு இலங்கையில் பயிற்சியளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். இலங்கை இராணுவத்தின் 61 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கொழும்பு இராணுவ தலைமையக மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இராணுவ தளபதி ஜயசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார். 53 அதிகாரிகள், 1263 படையினர் அடங்கலான இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு அங்கிருந்த இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேலும் தெரிவிக்கையில்; "இப்போது…
-
- 0 replies
- 630 views
-
-
நடிகை அசினுக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டதால் பயந்துபோன அசின், கழிவறையில் ஒளிந்துகொண்டார்.கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் நடிகர் விஜய் நடிக்கும் காவலன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை அசின் நடித்து வந்தார். அசின் தடையை மீறி இலங்கை சென்றதைக் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் படப்பிடிப்புக்கு அசின் வந்திருக்கும் தகவல் அறிந்ததும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர் பெரியார் திராவிட கழகத்தினர். இதில் இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் படப்பிடிப்பு அங்கிருந்து கேரள மாநிலம் ஒத்தப்பாலம் அருகே உள்ள மணிச்சேரி கிராமத்துக்கு மாற்றப்பட்டது.…
-
- 1 reply
- 1k views
-
-
எரிவாயுக்களை கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சந்தேகத்துக்குரியவர்களை கொலை செய்தாக பொய்யான செய்தியை பரப்பியவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணையை நடத்தி வருகிறது ஆதாரங்கள் தெரியாமல் இருப்பதற்காக சீனாவி;ல் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை கொண்டே இந்த இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் பரப்பபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது இந்தநிலையில் சீனாவில் இருந்து அவ்வாறான எரிவாயு இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் எனவே இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் தமது உயர் கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உபய மெதவல தெரிவித்துள்ளார் தடுப்பில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய சித்திரவதைகளுக்கு உட்படுத்த…
-
- 1 reply
- 621 views
-
-
பறிபோகும் முல்லைத்தீவு மண்- கொதித்தெழும் மக்கள் அக் 10, 2010 முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முக்கியமான காணிகளை சிங்களவர்களும் முஸ்லீம்களும் அபகரிக்கும் சதி நடக்கிறது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முக்கியமான காணிகளை சிங்களவர்களும் முஸ்லீம்களும் அபகரிக்கும் நோக்கில் கபடமான உறுதிகளை முடித்து ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பூமியையும் வர்த்தக நிலையங்களை நடத்தக்கூடிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காணிகளையும் அரசாங்கத்தின் ஆதரவுடனும் அமைச்சர் றிசாத்பதியுதீன் அவர்களின் ஆதரவுடனும் முஸ்லீம்களும் சிங்களவர்களும் காணிகளை அபகரிக்கும் நோக்கில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் கடந்த கால யுத்தம் காரணமாக தங்…
-
- 0 replies
- 885 views
-
-
Oct 9, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா பங்குச்சந்தையில் பாரிய வீழச்சி – முதலீட்டாளர்கள் தயக்கம் சிறீங்காவின் பங்குச்சந்தையில் பாரிய வீழச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த வாரம் 6.0 விகித வீழ்ச்சி காணப்பட்டதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பங்குகளை அதிகம் விற்பனை செய்துள்ளதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன. 282.7 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் இதுவரை விற்பனை செய்துள்ளன. இந்த வருடத்தில் அவை 17.5 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பங்குகளை விற்பனை செய்துள்ளன. சிறீலங்காவில் போர் நிறைவுபெற்ற பின்னர் அதன் பங்கு வர்த்தகம் பெரும் அதிகரிப்புக்களை கண்டபோதும், தொடர்ந்து அரசு மேற்கொண்டுவரும் ஜனநாயக விரோத ச…
-
- 2 replies
- 591 views
-
-
சரியாக 23 வருடங்களுக்கு முன்னர் இதேநாள் ... 1987 அக்டோபர் 10 ஆம் திகதி அதிகாலை அமைதியாக இருந்த யாழ்ப்பாணத்தின் அமைதியைக் குலைத்துக்கொண்டு அடுத்தடுத்து பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் யாழ்ப்பாணத்தையே அதிரவைக்கின்றன. குறுகிய கால அமைதி சீர்குலைந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் பரபரப்புடன் எழுந்துவிட்டனர். என்ன நடைபெற்றது என்பது உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஏதோ நடந்துவிட்டது. இன்னும் நடக்கப்போகின்றது என்பதைப் புரிந்துகொண்ட மக்கள் வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி நின்று நிலைமைகளை அலசத் தொடங்குகின்றார்கள். இப்போது போல அப்போது தொலைபேசி வசதிகள் இல்லாமையால் தகவல்கள் முதலில் வதந்திகளாகவே வெளிவரும்! வடக்கு - கிழக்குப் பகுதிகளில் இந்திய (அமைதி காக்கும்…
-
- 0 replies
- 759 views
-
-
சிறப்புப் போர்ப் பயிற்ச்சிக்காக நான்கு இந்திய கடற்படைக் கப்பல்கள் ஒரே நாளில் சிறிலங்காவுக்கு வருகை திகதி: 09.10.2010 சிறிலங்கா கடற்டையினருடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைளில் ஈடுபடுவதற்காக இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்துள்ளன. இன்று காலை திருகோணமலைத் துறைமுகத்துக்கு மூன்று இந்தியக் கடற்படைக் கப்பல்களும் ஒரு கப்பல் கொழும்புத் துறைமுகத்தையும் வந்தடைந்தன. இந்தக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் தரப்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்வரும் 15ம் திகதி வரை இந்தக் கப்பல்கள் சிறிலங்காவில் தங்கியிருந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. இவற்றில் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள ஐ.என்.எஸ் தரங்கினி என்ற கப்ப…
-
- 1 reply
- 429 views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவம் கட்டியுள்ள உல்லாச விடுதி காங்கேசன் துறை உயர் பாதுகாப்பு வலயத்தில் சிங்கள ராணுவம் பல அறைகளைக் கொண்ட உல்லாச விடுதியொன்றை அண்மையில் தனது யாழ் மாவட்டத் தளபதியின் மூலம் திறந்து வைத்துள்ளது. 9 அதிவிசேட ஆடம்பர அறைகளையும் 22 சாதாரண ஆடம்பர அறைகளையும் கொண்ட இந்த விடுதியில் தங்குவோர் நியாய கட்டணத்தில் இதன் வசதிகளை அனுபவிக்க முடியும் என்று இலங்கை ராணுவத்தின் இணையத்தளம் கூறியுள்ளது. இதே பகுதியிலிருந்து அக்கிரமிப்பாளர்களால் விரட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தாங்கள் மீளக்குடியேறுவதற்காக விடுத்த வேண்டுகோளை இரு தினங்களுக்கு முன்னர் பொய்க்காரணங்களைக் காட்டி தனது புறங்கையால் தட்டிவிட்ட சிங்கள ராணுவத் …
-
- 62 replies
- 4.6k views
-
-
நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கு என்னவிதமான ஆடை அணியவேண்டும் என்று ஒரு சர்ச்சை இம்முறை எழுந்திருந்தது. ஆண்கள் வேட்டி, சால்வை, பெண்கள் சேலை, பாவாடை, தாவணி என, கலாசார உடைகளை அணியவேண்டும் என்று, திருவிழா தொடர்பாக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற கூட்டமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையொட்டியே இந்தச் சர்ச்சை உருவாகியிருந்தது – அல்லது உருவாக்கப்பட்டிருந்தது. ஆண்களும், பெண்களுமாக, பக்தர்கள் அனைவரும் அணியவேண்டிய உடைகள் பற்றியதான பொதுவான இந்த அறிவுறுத்தல், பெண்களது உடைபற்றிய ஒரு விவகாரமாக மட்டுமே ஊடகங்களில் அதிகளவில் வலியுறுத்தப்பட்டதே இந்தச் சர்சைக்குக் காரணமாகியது. கலாசாரம் என்பது ஏதோ பெண்களின் உடையில் மட்டும்தான் தங்கியிருப்பதுபோல, பெண்களுடைய ஆடைகளை மையமாகக் கொண்டு பெரும் வாதப் …
-
- 1 reply
- 1k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக்குளம் -10 வீட்டுத் தொகுதியில் உள்ள தமிழர் வீடு ஒன்றுக்குள் நேற்று இரவு 9.15 மணியளவில் பிரவேசிக்க முயன்ற சிங்கள இரணுவ சிப்பாய் ஒருவர் சரமாரியாகக் கத்திக் குத்துக்கு இலக்காகி உள்ளார்.இவரை சக இராணுவத்தினர் இன்று காலை உழவு இயந்திரம் ஒன்றில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றனர். இச்சம்பவத்தால் அக்கிராமம் முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவுகின்றது.அவ்வீட்டில் திருமணம் ஆகாத இளம்யுவதிகள் மூவர் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுடன் வசிக்கின்றார்கள் என்றும் சிப்பாய் தவறான நோக்கத்துடனேயே வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றிருக்கின்றார் என்றும் அக்குடும்பத்தினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வந்திருப்பவை வருமாறு:-"அப்போது…
-
- 40 replies
- 3.5k views
-
-
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய கிறிக்கற் அணியினைத் தெரிவு செய்வதற்கான பயிற்சிப் பட்டறைக்கு யாழ் வீரர்கள் இருவர் தெரிவு செய்யப்பட்டனர். ஆசியக் கிண்ணக் கிறிக்கட் போட்டி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்துஅணியினுடனான போட்டி என்பன எதிர் வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளன. இதற்கான இலங்கை அணியினை தெரிவு செய்வதற்கான பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த பயிற்சிப் பட்டறைக்காக யாழ்ப்பாணம் புனித சென்பற்றிக்ஸ் கல்லூரியின் விக்கற் காப்பாளரும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான க.றிசாந் ரியுட்டர் மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணியின் இடது கை சுழற்பந்து வீரர் தங்கராசா கோகுலன் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டவர்களாவார். http://www.newjaffna.com/fullview.php?id=NjU1
-
- 0 replies
- 716 views
-
-
சனிக்கிழமை, 9, அக்டோபர் 2010 (16:44 IST) இலங்கை தமிழர் பிரச்சனை: சோனியா உறுதி அளித்துள்ளார்: கலைஞர் இலங்கையில் தமிழர்கûள் பிரச்சனையில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதாக சோனியா காந்தி உறுதி அளித்துள்ளார் என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இன்று புதுச்சேரி, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சோனியா காந்தி தனி விமானத்தில் சென்னை வந்தார். சென்னை வந்த சோனியா காந்தியை, விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதி பூச்செண்டு கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அப்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட மத்திய மாநில அமைச்சர்…
-
- 1 reply
- 613 views
-
-
எனக்காக யாரும் மகிந்தவிடம் மண்டியிடக் கூடாது - சரத் பொன்சேகா தெரிவிப்பு திகதி:09.10.2010 தனக்காக மனைவியோ பிள்ளைகளோ சிறிலங்கா அதிபரிடம் மன்னிப்புக் கோரி மண்டியிடக் கூடாது என்று வெலிகடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறையில் நேற்று அவரது மனைவி அனோமா பொன்சேகா சென்று பார்வையிட்டபோதே சரத் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார். “நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. எனக்காக மனைவியோ பிள்ளைகளோ மன்னிப்புக் கேட்டகக் கூடாது“ என்று சரத் பொன்சேகா கூறியதாக அனோமா பொன்சேகா தெரிவித்தார். “ சரத் பொன்சேகா எந்தத் தவறையும் செய்யவில்லை. எனவே நான் அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரப் போவ…
-
- 1 reply
- 580 views
-
-
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக சென்று சிங்கள மக்கள் தாம் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் மணியன் தோட்டம் பகுதியில் வசித்ததாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அந்த இடத்தில் தற்போது தமிழ் மக்கள் குடியிருப்பதால் அதனை தமக்கு தரவேண்டாம் என தெரிவித்துள்ள அவர்கள் அரச காணிகளில் தம்மை குடியமர்த்துமாறு கேட்டுள்ளனர். தற்போது சுமார் 180 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியுள்ளதாக குடியேற வந்த சிங்களவர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாம் படித்தது தமது பெற்றோர் வர்த்தகம் செய்தமை யாவும் யாழ்ப்பாணத்தில்தான் எனக்குறிப்பிட்டுள்ள அவர் 1983 ஆம் ஆண்டு கலவரம் காரணமாக தாம் சேனைக்குடியிருப்புக்கு சென்று பின்னர் அநுரதப்புரத்தின…
-
- 1 reply
- 583 views
-
-
Oct 9, 2010 / பகுதி: செய்தி / கொழும்பின் 28 இடங்களில் விசேட பாதுகாப்பு கமராக்கள் ஸ்ரீலங்காவின் தலைநகரான கொழும்பின் 28 இடங்களில் விசேட பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் தெரிவிக்கின்றது. குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு கமராக்களை பொருத்துவதற்காக சுமார் முப்பது கோடி ஸ்ரீலங்கா ரூபா செலவாகுமெனத் தெரிவிக்கப்படுகிறது. குற்றச் செயல்களை மேற்கொண்டு தப்பிச் செல்லும் நபர்கள் பற்றிய தகவல்களை துல்லியமாக அறிந்து கொள்வதற்கு இந்த பாதுகாப்பு கமராக்கள் வழிவகை செய்யும் என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான பாதுகாப்பு கமராக்களின் மூலம் குற்றச் செயல…
-
- 0 replies
- 389 views
-
-
சனிக்கிழமை, 9, அக்டோபர் 2010 (21:24 IST) ஈழத்தமிழர்களைப் படுகொலை கண்டித்து பேசியதால் அர்ஜுன் சம்பத் கைது: வைகோ இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கைதுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லால்குடியில் சமயச் சொற்பொழிவுக்காகப் பயணித்துக் கொண்டிருந்த அர்ஜுன் சம்பத்தை வழியிலேயே போலீசார் கைது செய்துள்ளனர். ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்தது, தமிழக மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் தாக்குவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஆகிய விவகாரங்களில் சோனியா காந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுக்கூட்டத்தில் பேசியதற்க…
-
- 0 replies
- 540 views
-
-
ஈழத் தமிழர்களின் தாயக மண்ணைக் காப்பாற்ற புலம்பெயர் தமிழர்கள் முன்வருவார்களா? விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் ஆகையால் போர் முடிவுக்கு வந்துவிட்டது என இலங்கை அரசு அறிவித்ததன் பிற்பாடு தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் மெல்ல மெல்ல தமிழர் தாயகங்களுக்கு வரத்தொடங்கினார்கள் ஆரம்பத்தில் சுற்றுலாப் பயணிகள் போல வந்தவர்கள் பின்பு தொழிலுக்காகவும் அதன் பின்பு தற்போது குடியிருப்பதற்காகவும் வரத்தொடங்கி விட்டார்கள். தமிழர்களுக்கு சொந்தமான காணிகளில் எவ்வாறு இவர்கள் குடியிருக்க முடியும் என நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை தமிழர் பகுதிகளில் வெற்று நிலங்களாக காணப்படுகின்ற நிலங்கள் எல்லாமே தற்போது தமிழர்களுக்கு சொந்தமானதாக இல்லை இந்த நிலங்களை தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் சிங…
-
- 2 replies
- 650 views
-
-
சனிக்கிழமை , அக்டோபர் 9, 2010 விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இழைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ளுமாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிலாரி கிளின்டன் அழைப்புவிடும் வகையில் அவருக்கு 58 உறுப்பினர்கள் மகஜரை கையெழுத்திட்டு அனுப்பிவைக்கக்கூடியதாக அவர்களைத் தூண்டக்கூடியதாக விடுதலைப் புலிகள் சார்புக் குழு செயற்பட்டதாக ரெடீவ்.கொம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த விடயத்தில் இந்தியாவின் அனுதாபத்தை விடுதலைப்புலிகள் சார்புக் குழுவினர் பெற்றுக்கொள்வது தொடர்பாக எதிர்பார்த்திருந்தார்களேயானால், அவர்கள் முழுமையாக ஏமாற்றமடைந்திருப்பார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வாஷிங்ட…
-
- 5 replies
- 1.1k views
-