ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
நாடு கடந்த பொறியில் சிக்குமா தமிழ்த் தேசியம்? அமெரிக்காவிலிருந்து ஓர் ‘ஆழமான வட்டம்’ சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவிற்கும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையின் பிரதான அதிகாரிகளுக்கும் பல வருடங்களாக ஆலோசனை வழங்கிவருகிறது. இந்த ‘ஆழ்வட்ட’த்திலிருந்து மீளமுடியாத ஒரு பொறிக்குள்ளேயே கே.பி. சிக்கியதாக 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்தேறிய விடயங்களை வரிசைக்கிரமமாக அடுக்கி ஆராயும்போது புலப்படுவதாக தமிழ்த் தேசிய இராணுவ விஞ்ஞான ஆய்வாளர்கள் சிலர் தீர்க்கமாக நம்புகின்றனர். குறிப்பாகஇ புலம்பெயர் சூழலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்போர் வெளிப்படுத்திய தாக்கம் காரணமாக குறித்த ‘ஆழ்வட்டம்’ சலனமடைந்தாலும் ‘பொறி’ சுதாகரிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப…
-
- 7 replies
- 1.3k views
-
-
இடர்நிலத்தில் இன்னும் ஏன் இப்படித் துயரம்? : தீபச்செல்வன் இங்கு நடக்கிற ஒவ்வொன்றுமே போர்தான். துயரமான போர்..... தீராத போர் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஒவ்வொரு இரவும் விடிகிறபோது தங்கள் வாழ்வில் ஒரு விடியல் வந்து விடாதா? என்று விம்மி நிற்கிற மக்களின் கனவுகள் இங்கே நொறுக்கப்பட்டிருக்கின்றன. மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த நிலத்தில் விடப்பட்ட மக்களின் துயரம் சொல்லி மாளாதவை. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கோணாவில், யூனியன்குளம், இரத்தினபுரம், திருவையாறு போன்ற 25 கிராமங்களில் உள்ள மக்களுக்கு தகரங்கள் தருகிறோம் என்று முதலில் சொன்னவர்கள் பின்னர் இந்தியா தந்தால் நாங்கள் தருகிறோம் என்றார்கள். மிதிவெடிகளை அகற்றிய பின் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள…
-
- 3 replies
- 808 views
-
-
யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம்: ஆயுதமுனையில் நகைகள், பணம் பறிப்பு! திகதி:30.09.2010 வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை ஆயுத முனையில் அச்சுறுத்தி பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மட்டுவில் தெற்கில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் வெளியில் சென்ற வேளை வீட்டினுள் நுளைந்த இனந்தெரியாத இருவர் ஆயுத முனையில் தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். நீளக் காட்சட்டை அணிந்திருந்த அவர்கள் மேட்டார் சைக்கிளில் வந்தனர் என்றும் மேலும் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தியே நகைகளைக் கொள்ளையடித்தனர். என்றும் தெரிவிக்கப்பட்டது. தாங்கள் படைய…
-
- 3 replies
- 997 views
-
-
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் ஆறு நாட்களுக்கு முன் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை ஐ.நா சபை இருட்டடிப்பு செய்து விட்டது என்று அமெரிக்காவின் நியூயோர்க்க நகரில் இருந்து வெளியாகும் இன்னர் சிட்டி பிரஸ் பத்திரிகை குற்றஞ்சாட்டி உள்ளது. பான் கீ மூன் -ராஜபக்ஸ சந்திப்பில் உண்மையில் நடந்தது என்ன? என்று கேள்வி கேட்டிருக்கும் அப்பத்திரிகை இச்சந்திப்பு குறித்து இரு தரப்பினராலும் முரண்பாடான அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்றும் சுட்டிக் காட்டி உள்ளது. இம்முரண்பாடுகள் ஏன் ஏற்பட்டன? என்று இப்பத்திரிகை பான் கீ மூனின் ஆலோசகர் Nicholas Hayson இடம் நேரடியாக வினவி உள்ளது. பான் கீ மூன் - மஹிந்தர் ஆகியோ…
-
- 0 replies
- 740 views
-
-
பாகிஸ்தானில் உள்ள லக்ஸ்கார் ஈ தெய்பா எனப்படும் தீவிரவாத அமைப்புக்கு அனுப்புவதற்காக சிறீலங்காவுக்கு கொண்டுவரப்பட்ட வெடிமருந்தே கடந்த 17 ஆம் நாள் கரடியனாற்றில் வெடித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கரடியனாறு காவல் நிலையத்தில் இரு கொள்கலன்களில் சேமிக்கப்பட்ட வெடிமருந்துகள் ஒலுவில் துறைமுகம் ஊடாக பாகிஸ்தானுக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னனியில் இந்தியாவில் தாக்குதல்களை முன்னெடுத்துவரும் லக்ஸ்கார் ஈ தொய்பா என்ற அமைப்பே செயற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வைத்து சிறீலங்கா துடுப்பாட்ட அணி மீது தாக்குதலை மேற்கொண்ட இந்த அமைப்பபு சிறீலங்காவில் இயங்கி வருவதாகவும், அதன் 100 உறுப்பினர்கள் சிறீலங்காவில் உள…
-
- 0 replies
- 1k views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 30, 2010 தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் பிரதான கட்சிகள் இரண்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள், இனப் பிரச்சினைக்கான தீர்வைச் சாத்தியமற்றதாக்கி வருகின்றன என அரசியல் அவதானிகளும் கல்வியியலாளர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஒழிக்கப்பட்டதை அடுத்து சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தேவையற்றது என்று ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட கருத்துக் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு கவலை வெளியிட்டனர். இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு கட்சி எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் மற்றைய கட்சி எதிர்ப்பதே வழமையானது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
பேச்சுவார்த்தையை விரும்பாததால் யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதி - பாதுகாப்பு செயலர் பெருமிதம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-30 07:38:44| யாழ்ப்பாணம்] மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றபோது இரா ணுவ நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இரு வழிகளில் யுத்தத்தை நிறைவு செய்ய சந்தர்ப்பம் இருந்தது. அப்போது அனைவரும் பேச்சு வார்த்தை மூலம் யுத்தத்தை நிறைவு செய்வோம் என்றனர்.ஆனால் ஜனாதிபதி, யுத்தத்தின் மூலம் நிறைவு செய்யலாம் என்று யுத்தத்திற்கு தயாரானார் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிடடு ராஜகிரியவில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் வங்கிக் கற்கைகளுக்கான நிலையத்தில்…
-
- 1 reply
- 722 views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 30, 2010 இறுதிக்கட்ட யுத்தம் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பிரான்ஸ், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர்கள், ஐ.நா. பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் அமைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். எனினும், யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் வரையிலும் இந்தியா ஒருபோதும் அழுத்தம்கொடுக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதேசங்களை கைப்பற்றினோம். ஆனால் இறுதிமுடிவு எட்டப்படவில்லை. எனினும் ஜனாதிபதியின் தலைமைத்துவம் மற்றும் குழுவாக இணைந்து செயற்படுதல் மூலமாகவே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது. உலகம் மிகவேகமாக வளர்ந்த அந்த தருணத்தை நாம…
-
- 2 replies
- 578 views
-
-
‘தமிழ் ஈழம் என்பது கரைந்துபோன கனவுதான்’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருப்பது, அவர்களது ஆசையே தவிர… வேறு இல்லை! தமிழ் ஈழம் என்பது ஒரு வரலாற்றுத் தேவை. சிங்களத் தீவில் சிக்கல் உற்ற இரு தேசிய இனங்களுக்கான தீர்வுத் திட்டம்தான் தமிழ் ஈழம். அதைக் கனவு என்று சொல்கிறவர்கள்தான் கனவு காண்கிறார்கள். ஒரு தேசிய இனத்தின் உரிமையில் நினைவு, கனவு ஆராய்ச்சிகளுக்கு இடம் இல்லை. தமிழ் ஈழம் என்பது உலகின் முதற்குடியும், மூத்த குடியுமான தமிழ் இனத்தின் தாய் மடி. மகிந்த ராஜபக்ஷேவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயகா 1956-ல், ‘இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணம் தமிழர்களின் வழி வழித் தாயகம்’ எனக் கூறினார். 1963 ஜூன் 5-ம் தேதி, சென்னையில…
-
- 2 replies
- 1.1k views
-
-
வடபகுதியில் அரசாங்கத்தினாலும் சர்வதேச அமைப்புக்களினாலும் செய்யப்படுகின்றதாக கூறப்படும் அபிவிருத்திபணிகளில் 400 இற்கு மேற்பட்ட தனியார் ஒப்பந்தகாரர்கள் வேலைகளை செய்கின்றார்கள். இவர்களில் 350 இகு மேற்பட்டவர்கள் தென் இலங்கை சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பல அமைச்சுக்களின் கீழ் சிபார்சுகளின் அடிப்படையில் இலஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களை எடுத்து செய்கின்றனர். இதனால் செய்யப்படுகின்ற வேலைகளில் நேர்த்தியின்மை, தரமின்மை காணபப்டுவதனை உள்ளூர் தமிழ் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். இதனால் குறித்த பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் வடமாகாண ஆழு நர் சந்திரசிறியினால் அச்சுறுத்தப்பட்டும் வருகின்றனர். எனினும் ஒப்பந்த காரர்கள் சிலர் வேலை செய்துள்ளதா…
-
- 0 replies
- 584 views
-
-
விடுதலைப்புலிகளின் காலத்தில் காணிகள் இல்லாதவர்கள், வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள், மாவீரர் போராளிகள் குடும்பங்கள், விதவைக்குடும்பங்கள் என நூற்றுக்கணக்கான குடும்பங்களிற்கு காணிகள் பகிர்ந்தளிக்கபட்டன. வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன, மாதிரி கிராமங்கள் உருவாக்கப்பட்டன. இந்த திட்டங்கள் அனைத்தும் ஓர் அரசாங்கம் என்ற வகையில் அபிவிருத்தி, புனர்வாழ்வு என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன. இதற்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, அரசாங்கம் ஆகியோரின் ஒப்புதல்களுடனேயே புனர்வாழ்வுக்கழகம் போன்ற உள்ளூர் அமைப்புக்கள் செய்தன. இந்த திட்டங்களிற்குரிய காணிகள் அனைத்தும் உரிய முறையில் சட்ட ரீதியாக அனுமதிகள் பெற்றே செய்யப்பட்டன. முடிக்குரிய நிலங்கள் அதற்கான பதிவுகளுடனும், தனியார் …
-
- 0 replies
- 778 views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 30, 2010 LTTE தடுத்து வைக்கப்பட்ட 418 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா கலாசார மண்டபத்தில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டி.ஈ.டபிள்யூ குணசேகர தலைமையில், விடுதலைப் புலி உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், "இறுதிக் கட்டப் போரின் போது, 11ஆயிரத்து 800 முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் இலங்கைப் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். என தொகையினை திரித்துக்கூறினார். இவர்கள் பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டதாகவும். 12 நலன்புரி நிலையங்களில் இவர்களுக்கு தொழில் சம்பந…
-
- 0 replies
- 641 views
-
-
தமிமீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களைகத் தடுத்து வைத்திருப்பது சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமானது . போரில் ஈடு பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்; இல்லையேல் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு வலி யுறுத்தி உள்ளது சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் அமைப்பு அவசர காலச் சட்டத்ததைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அந்த அமைப்புக் கண்டித்துள்ளது. சர்வதேச அமைப்பு வெளியிட்ட அறிக்கை யின் முக்கிய அம்சங்கள் வருமாறு: கடந்த வருடம் போர் முடிவடைந்த காலத்தில் சரணடைந்த கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் எண்ணாயிரம் பேர் வரை இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தத்…
-
- 0 replies
- 707 views
-
-
அணு சக்தி உலைத் திட்டத்தால் சூழலியலாளர்கள் அதிர்ச்சிப் பீதி! .அணு சக்தி உலையை நிர்மாணிக்கும் இலங்கையின் திட்டம் நாட்டில் உள்ள சூழலியலாளர்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, யப்பான், ரஷ்யா, உக்குரைய்ன், ஜேர்மனி போன்ற சில நாடுகளிலேயே அணு சக்தி உலைகள் உள்ளன. இந்நிலையில் அணுசக்தி உலையை 2025 இல் நிர்மாணிப்பது இலங்கையின் நீண்ட காலத் திட்டங்களில் ஒன்று என்றும் இதற்கான பேச்சுக்களை அரசு ரஷ்யா உட்பட சில நாடுகளுடன் நடத்தி உள்ளது என்றும் மின்சக்தி வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் மின் தேவைகளை எதிர்காலத்தில் சரியான முறையில் பூர்த்தி செய்வதற்கு அணு மின் சக்தி தேவையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்…
-
- 0 replies
- 926 views
-
-
நீர்வழங்கல் சபைக்குத் தண்ணீர் காட்டும் அமைச்சர் டக்ளஸ் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபைக்கு குறைந்தது 101,36,443 ரூபாய் செலுத்த வேண்டியவராக உள்ளார் என்று தமிழ்.சி.என்.என் இற்கு நம்பகமாகத் தெரிய வந்துள்ளது. அமைச்சருக்கு கொழும்பில் இரு வீடுகள் உள்ளன.கொழும்பு-5, பார்க் வீதியில் ஒரு வீடு உள்ளது. இதற்கான நீர் கட்டண நிலுவையாக அமைச்சர் இது வரை 83,65,695 ரூபாயை செலுத்த வேண்டும். கொழும்பு-4, லெயார்ட்ஸ் மாவத்தையில் மற்ற வீடு உள்ளது. அதற்கான நீர்க் கட்டண நிலுவையாக அமைச்சர் இது வரை 17,70,750 ரூபாயை செலுத்த வேண்டும். ஆனால் இவ்வீடுகளுக்கான நீர் விநியோக நடவடி…
-
- 0 replies
- 823 views
-
-
ஏழு நாடுகளைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் கொடிய பயங்கரவாத அமைப்பு என இலங்கை அரசினால் தெரிவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டதென்பதனை அறிந்து கொள்ளும் நோக்கில் உயர் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். யுத்த வியூகம் மற்றும் பயன்படுத்தப்பட்ட களத் தந்திரோபாயங்கள் குறித்து இந்த வெளிநாட்டு இராணுவ உயரதிகாரிகளுக்கு இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் விளக்கமளிக்க உள்ளனர். பங்களாதேஷ், சீனா, கட்டார், சவூதி அரேபியா, நைஜீரியா மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த உயர் இராணுவ அதிகாரிகள் இந்த விஜயத்தில் க…
-
- 2 replies
- 590 views
-
-
தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமே தோல்வியடைந்துள்ளதே தவிர தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்னும் முடிவுறவில்லை என த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். புலிகளைத் தோற்கடித்ததால் அரசியல் தீர்வுக்கான தேவை இல்லையென ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள் பி.பி.சி செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார். இவ்வாறு இவர் கூறிய விடயம்பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே திரு அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அழிவிற்கும் அவல வாழ்க்கைக்கும் ஆளும் அரசாங்கம் மாத்திரம் காரணமல்ல பிரதான பாத்திரம் ஐக்கிய தேசிய கட்சிதான். அன்று ஐக்கிய தேசிய கட…
-
- 1 reply
- 493 views
-
-
போராட்டங்களை நடத்துதன் மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முடியாதென அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அமைச்சர் கிறிஸ் பிறவுன் தெரிவித்துள்ளார். அண்மையில் அவுஸ்திரேலியாவின் விலாவுட் தடுப்பு முகாமில் ஒன்பது இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான போராட்டங்களை நடத்துவதன் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கைகள் தனிப்பட்ட நபரை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். http://www.tharavu.com/2010/09/blog-post_3778.h…
-
- 1 reply
- 754 views
-
-
அம்பாறை ஊரணி பிரதேசத்தில் அதிரடிப்படையினரின் முகாம் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அகற்றப்பட்டதை தொடர்ந்து, 1990 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற சென்ற போது, சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது குற்றம்சுமத்தியுள்ளனர். முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தமது காணிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். சிங்களவர்கள் தமது காணிகளை கைப்பற்றியுள்ள நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கு இடையில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் சிங்க…
-
- 1 reply
- 638 views
-
-
சர்வதேச அபிப்பிராயத்துக்கு சிங்கள அரசு இடங்கொடுக்கவில்லை [ விடுதலைப்புலிகள் ] - [ Sep 29, 2010 04:00 GMT ] இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கும் கண்டனங்களுக்கும் மகிந்த அரசு பணிந்துகொடுக்குமா? என்ற வினா பலமானமுறையில் எழுப்பப்படுகின்றது. நோர்வே அனுசரணை - இணைத்தலைமை நாடுகளின் பங்குபற்றல் என்ற வகையில் இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகிவிட்டது. ஜெனீவா - 2 பேச்சுக்கு சர்வதேச செய்திநிறுவனங்கள் அளித்த முக்கியத்துவம் பாரியது. பேச்சுக்கள் ஜெனீவாவில் நடந்தபோது இணைத்தலைமை நாடுகளின் பெரும்பாலான பிரதிநிதிகள் கொம்பில் தங்கிநின்றனர். இலங்கை இனப்பிரச்சினையில் சர்வதேச அக்கறை அதிகரித்துவிட்டது| என்று ஊடகங்கள் இதற்கு வியாக்கியானம் செய்தன.…
-
- 1 reply
- 820 views
-
-
தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களையே காப்பாற்ற முடியாத தமிழகத்தினர் ஏனைய நாட்டினரை எவ்வாறு காப்பற்ற முடியும் ‐ சோ. சாந்தலிங்கம் 29 September 10 01:58 am (BST) தமிழகத்தினரால் தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களையே காப்பாற்ற முடியாத நிலையில் ஏனைய நாட்டில் வாடி, வதங்கி வாழும் தமிழர்களை எவ்வாறு காப்பாற்ற போகிறார்கள்? எனவே, தமிழ்நாட்டை நம்பி ஏமாந்து விடாமல் தமிழர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளில் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தொல்லியலாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான முனைவர் சோ. சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார். மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாவின் முன்னோடி நிகழ்வான ஆய்வரங்கில் கலந்து கொண்டு "செம்மொழியும் அதைக் காக்க வேண்டிய கடமையும்" என்ற தலைப்பில் உரையாற்று…
-
- 1 reply
- 767 views
-
-
அல்பிரட் துரையப்பாவை புலிகள் படுகொலை செய்யவில்லை: திவயின யாழ். மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் படுகொலைச் சம்பவம் குறித்த உண்மை 35 ஆண்டுகளுக்கு பின்னர் அம்பலமாகியுள்ளதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் மேயராகக் கடமையாற்றிய அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருத்துக்களை வெளியிட்ட ஆங்கில இணையதளமொன்றின் (ஏசியன் ட்ரிபியூன்) ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். அல்பிரட் துரையாப்பாவை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமர்தலிங்கத்தின் மூத்த மகன் காண்டீபன் அமர்தலிங்கமே படுகொலை செய்ததாக அவர் குறிப்பி…
-
- 1 reply
- 798 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு தடை நீடிப்பு: வைகோ வாதாட அனுமதி மறுப்பு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி ஐகோர்ட் நியமித்த சிறப்பு தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. நீதிபதி விக்ரம்ஜித் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், அதன் அனுதாபி என்ற முறையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார். வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ஆஜராகவில்லை என்றும், அந்த இயக்கத்தின் உறுப்பினர் அல்ல என்பதால் இந்த வழக்கில் ஆஜராக முடியாது என்றும், மத்திய அரசு மற்றும் தமிழக அர…
-
- 1 reply
- 730 views
-
-
Sep 29, 2010 / பகுதி: செய்தி / கொழும்பு வங்கியொன்றில் லலித் கொத்தலாவலவின் பெட்டகத்திலிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது கொழும்பிலுள்ள வங்கியொன்றில் லலித் கொத்தலாவலவின் பெட்டகத்திலிருந்து 6.5 கோடி பெறுமதியான நகைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர். இந்த நகைகள் லலித் கொத்லாவலவினாலோ அவரின் மனைவியினாலோ பிரகடனப்படுத்தப்படாதவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நகைகளில் வைரங்கள், மாணிக்கங்கள் மற்றும் பெறுமதியான கற்களும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் தெரிவித்தார். sankathi
-
- 1 reply
- 532 views
-
-
கண்ணுக்குப் புலப்படாத ஆதரவு? [ உதயன் ] - [ Sep 29, 2010 04:00 GMT ] இலங்கை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட் டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித அதிகாரமும் வழங்க படவில்லை என்றும் இலங்கை சம்பந்தமான விடயங்களில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே அக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது; எவ்வித சட்ட அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தம்மைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவுபடுத்தி இருக்கிறார் குறிப்பிட்ட நிபுணர் குழுவின் விசாரணை தொடர்பாக இலங்கை அரசும் அதன் தலைவரும் வீணே அச்சம் கொள்ளத்தேவையில்லை; அலட்டிக்கொள்ளத் தேவைய…
-
- 0 replies
- 1.5k views
-