Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற உள்ளது. வீதி பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பரந்த ஒருங்கிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்துவரும் மற்றும் முழுமையடையாத வீதி பிரிவுகளின் முக்கியப் பணிகளைத் தீர்க்க இந்த நிதி ஒதுக்கப்படும். ADB இன் சலுகைக்குரிய சாதாரண மூலதன வளங்கள் வழங்கும் கடன், 4ஆவது தவணைக்கான மொத்த மதிப்பிடப்பட்ட முதலீட்டு செலவான 68.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியாகும். இந்த செலவில் 8.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசு ஏற்கும். https://thinakkural.lk…

  2. Published By: DIGITAL DESK 3 28 NOV, 2023 | 02:52 PM யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/170459

  3. தரவை துயிலும் இல்லத்தில் ஆறு பேர் கைது:.சாணக்கியன், கஜேந்திரடனுடன் பொலிஸார் வாக்குவாதம் மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான நிதர்சன் உட்பட 6 பேர் நேற்று மாலை (27) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நினைவேந்தல் நிகழ்விற்காக ஈகைச் சுடர் ஏற்றுவதற்காக மாவீரர்களின் உறவுகள் காத்திருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றது. திடீரென உள் நுழைந்த பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் அங்கு அலங்கரிக்கப்பட்ட கொடிகள…

  4. 27 NOV, 2023 | 09:59 AM யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 07 பேர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்றுள்ளனர். தனுஷ்கோடிக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினர் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காணப்படுவதால் , தொடர்ந்து அங்கு வாழ முடியவில்லை என்பதால், தமிழகம் வந்துள்ளோம் எனவும் , இதற்காக மன்னாரில் இருந்து தனுஷ்கோடி பகுதியில் எம்மை இறக்கி விட படகோட்டிக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பணம் வழங்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/artic…

  5. தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் 2023 உத்தியோகபூர்வ அறிக்கை . தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2023 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய புனிதர்களை எம் நெஞ்சங்களில் இருத்தி நெய்விளக்கேற்றி நினைவேந்தி உறுதிகொள்ளும் எழுச்சிநாள். உலகில் மிகவும் தொன்மையான எமது தேசிய இன…

  6. வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னிவிளான்க…

  7. உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும்.! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் அதிரடி. தமிழினி சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர்கள் விடுதலை பெற்று தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை நினைவு கூருவதற்காக தாயகம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழர்கள் உணர்வழிச்சியுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் சமரசமின்றி நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு ஞாயிற்…

  8. ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் 80 உயர் அதிகாரிகள் அடுத்த வாரம் டுபாய் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன உள்ளிட்ட 80 பிரதிநிதிகள் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாடு அடுத்த வாரம் டுபாயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/282432

  9. விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதை வென்ற வைத்திய கலாநிதி டி.கோபிசங்கர்! விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்ற நிலையில் “வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள்” பற்றி 2020 ம் ஆண்டு எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைக்காக வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தேசிய ஆராய்ச்சி சபையால் வருடாந்தம் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது. https://onlinekathir.com/archives/52034 இவர் @நிழலியின் …

  10. மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஜனாதிபதி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு கொழும்பு. மேதகு ஜனாதிபதி அவர்களே! கிழக்கு ஆளுனர் நியமனம். கிழக்கு மாகாணம் சிக்கலான இனத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாகாணம் என்பதை தாங்கள் முழுமையாக அறிவீர்கள்.கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படவிருக்கும் ஆளுனர் தமிழராக இருந்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பதும்,முஸ்லிமாக இருந்தால் தமிழர்கள் எதிர்ப்பதும் ,சிங்களவராக இருந்தால் தமிழ்,முஸ்லிம் மக்கள் இணைந்து எதிர்ப்பதும் கிழக்கின் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடாத்துவதில் பாரிய பின்னடைவுகளை இதுவரையிலும் ஏற்படுத்தியுள்ளது இதுவரையிலும் கிழக்கில் நியமிக்கப்பட்ட ஆளுனர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகா…

  11. Published By: VISHNU 27 NOV, 2023 | 02:28 PM உறவுகளை தகுந்த முறையில் நினைவு கூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார். பொலிஸார் பல்வேறு தடைகளை விதிக்கின்றார்கள் என கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் எல்லா வழக்குகளிலும் நகர்த்தல் பத்திரம் மூலம் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் இடம்பெற்ற கட்டளையின் பின்னர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்றையதினம் (27) முல்லைத்தீவு நீதவானால் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக 24.11.2023 வழங்கப்பட்ட இடைக்கால கட்டளை தொடர்பாக எங்களால் பிரஸ்தாபிக்கப்பட்டது. குறித்த கட்டைளையை ஒவ்…

  12. Published By: VISHNU 27 NOV, 2023 | 03:13 PM மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது திங்கட்கிழமை (27) ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று நினைவேந்தல் செய்வதை தடைசெய்ய கோரி வாழைச்சேனை, வவுணதீவு, சந்திவெளி, கொக்கட்டிச்சோலை, வாகரை, பொலிசார் இன்நாள் முன்னாள் நா.உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உட்பட ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் தலா 20 பேருக்கு எதிராக மட்டக்களப்ப…

  13. இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே வாகரை, கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது : சாணக்கியன் ! விஷமிகளால் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய முடியாது அரச இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே மட்டகளப்பு வாகரை கண்டலடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். குறித்த இடத்திற்கு நேற்று (26.11.2023) விஜயம் மேற்கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “2023 கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் தமிழர்களு…

  14. ஐங்கரநேசனுக்கு சவால் விடுக்கும் சிவாஜிலிங்கம்! காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் யார் என ஐங்கரநேசன் பகிரங்கமாக சொல்ல வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். நேற்றைய தினம் (25) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ” தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினுடைய தலைவர் ஐங்கரன்நேசன் தமிழ் கட்சிகளின் ஒழுங்கு செய்யப்பட்ட மனித சங்கிலியைப் பற்றி அவர் நார் நாராக கிழித்து போட்டு இருக்கிறார். இவர் இவ்வாறு கூறுகின்ற விடயம் எல்லாம் தொடர்…

  15. கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி! adminNovember 27, 2023 யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். மாவீரர் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது அழிக்கப்பட்டு , தற்போது இராணுவத்தினரின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2023/197858/

  16. 27 NOV, 2023 | 11:19 AM 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காத்தான்குடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வவுனியாவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து புதிய காத்தான்குடி கர்பலா பகுதிகளில் வைத்தே ஐஸ்போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன…

  17. Published By: RAJEEBAN 27 NOV, 2023 | 11:11 AM மாவீரர் நாள் மரணமான உறவினர்களைத் தமிழர்கள் நினைவுகூரும் நாள் மட்டுமன்றி தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானித்து அரசின் அடக்குமுறை இன்றி வாழும் அரசியல் சட்டகத்தைப் புரிந்து தமிழ்த் தேசத்தைப் பலப்படுத்துவதற்கான நாளாகவும் அமைகிறது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்று மாவீரர் நாளில், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும், புலம்பெயர்ந்தும் வாழும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து, சிங்கள பௌத்த தேசியவாத அரச அடக்குமுறையில் இருந்து தமிழர்களை விடுவிக்கப் போராடியவர்களை நினைவுகூ…

  18. 27 NOV, 2023 | 10:54 AM யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதான மின் வடத்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார சபையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் , மின்சாரத்தை துண்டித்து , மின் வடத்தில் பற்றிய தீயை அணைந்தனர். பின்னர் மீள அவற்றை சீர் செய்து அப்பகுதிக்கான மின்சாரத்தை வழங்கினர். குறித்த சம்பவத்தால் , அப்பகுதியில் சில மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. …

  19. சில வர்த்தகர்கள் வெள்ளைச் சீனியுடன் சாயத்தை கலந்து சிவப்புச் சீனியாக மாற்றி அதிக விலையில் விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சமகாலத்தில் சந்தையில் நிலவும் சீனித் தட்டுப்பாட்டை பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார். 217 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் வெள்ளை சீனிக்கு சாயம் பூசி 350 முதல் 370 ரூபாய் வரையான விலை விற்பனை செய்யப்படுகிறது. சீனியின் விலை இதன்மூலம் இந்த வியாபாரிகள் ஒரு கிலோ சீனிக்கு சுமார் 150 ரூபா இலாபம் ஈட்டுவதாக அவர் கூறியுள்ளார். வெளிச்சந்தையில் 260 ரூபாயில் இருந்த வெள்ளை சீனியின் விலை 310 ரூபாயாகவும், பொதி செய்யப்பட…

  20. 26 NOV, 2023 | 05:35 PM போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நிலத்தை தோண்டும் நடவடிக்கை கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (25) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் இன்றைய தினம் (26) நான்காவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த விடயம் கடந்த 19ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்…

  21. 2,763 கிராம அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “இலங்கையில் 14,022 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு கிராம அதிகாரி வீதம் 14,022 பதவிகள் உள்ளன. 30.06.2023 ஆம் திகதி அன்றைய நிலவரப்படி 2,763 கிராம அலுவலர் பணியிடங்கள் வெற்றிடங்களாக உள்ளன. அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில், 28.05.2023 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் 31.03.2023 அன்று வெற்றிடங்களை நிரப்புவதற்கான பர…

  22. Published By: DIGITAL DESK 3 18 NOV, 2023 | 10:01 AM பராமரிப்பு பணிகளுக்காக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் 6 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 165 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் எரிவாயு சுழலி ஆலை மற்றும் நீராவி சுழலி ஆலை இரண்டின் பராமரிப்பு பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்துள்ளது…

  23. 26 NOV, 2023 | 04:10 PM யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) நோயாளர் காவு வண்டியுடன், மேலும் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாயின. நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த முச்சக்கரவண்டி, நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி, நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/170297

  24. Published By: DIGITAL DESK 3 24 NOV, 2023 | 09:57 AM சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (23) குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ஜா-எல பகுதியில் நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்த திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்தவர் ஆவார். https://www.virakesari.lk/article/170107 பணியின் போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு சந்தேக நபரை கைது செய்யும் மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.