ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
பியசேனாவின் ஆதங்கம் - எனது தலைவன் எம்ஜீஆர் அண்ணா போல் தலைவர்கள் நம்மிடம் இல்லை - ஒலிப்பதிவு!
-
- 0 replies
- 1k views
-
-
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளில் சுமார் 25 கரையோரப் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்ற காரணத்தினால் இவ்வாறு முகாம்கள் அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடற்படை முகாம்கள் ஒரே வலையமைப்பின் கீழ் உருவாக்கப்பட உள்ளது. வடக்கு, கிழக்கின் சகல கேந்திர நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கடற்படை முகாம்கள் நிறுவப்பட உள்ளன.http://www.tharavu.com/2010/09/blog-post_55.html
-
- 1 reply
- 2k views
-
-
கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒரு மீனவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 30 படகுகளில் சென்ற 120 இந்திய மீனவர்களை சுற்றிவளைத்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கியுள்ளனர். இந்திய மீனவர்களை தமது படகுகளில் ஏற்றியே தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களிடம் இருந்து இறால், மற்றும் வலைகளை பறித்துக் கொண்டு துரத்தி விட்டதாகவும் பிரிஐ தெரிவித்துள்ளது. அதேவேளை இந்திய மீனவர்கள் தாக்கப்பட்ட செய்தியை சிறிலங்கா கடற்படை மறுத்துள்ளது. அப்படியான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்றும் இது சிற…
-
- 6 replies
- 1k views
-
-
12.09.1999 அன்று யாழ். நல்லூர் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் செந்தமிழ் (செந்தமிழ்ச்செல்வன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 12.09.2001 அன்று மட்டக்களப்பு அரணகல்வில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவகாமி அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்
-
- 7 replies
- 1.6k views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 12, 2010 பிரபல தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி சி. வை. தாமோதரம்பிள்ளை (செப்டம்பர் 12, 1832 - ஜனவரி 1, 1901, சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்) பண்டைய சங்கத் தமிழ் நூல்கள் செல்லரித்து அழிந்து போகாது, தமது அரிய தேடல்கள் மூலம் அவற்றை மீட்டெடுத்து, காத்து, ஒப்பிட்டு பரிசோதித்து, அச்சிட்டு வாழ வைத்த முதல்வர். தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும் என்ற அரிய நோக்கங்களோடு தொண்டாற்றியவர். தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியும் இவரே. தாமோதரனார் வைரவநாதபிள்ளை, பெருந்தேவி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆங்கிலத்தையும் கற்று…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 12, 2010 அபிவிருத்தி மற்றும் மீள் குடியமர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து அரசாங்கம் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று யாழ்.செயலகத்தில் நடத்தவுள்ள அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்று இன்றைய கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளவிருப்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தாமும் பங்குபற்ற விருப்பதாக கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் …
-
- 0 replies
- 509 views
-
-
ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 12, 2010 18 வது அரசமைப்பு சீர்திருத்தம் தொடர்பினால் அரசமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளரான பி.ஜே. குரோவ்லி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் : ""நல்ல அரசாங்கத்தின் கொள்கைகளையும் ஜனநாயகத்தையும் மற்றும் சுயாதீன அரச நிறுவகங்களையும் விருத்தி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுக்கிறது. சுயாதீன நிறுவகங்களுக்கு தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரிகளை நியமித்தல், அதிகாரப் பகிர்வை அதிகப்படுத்துதல், பேச்சுவார்த்தை மற்றும் தேசிய நல்லிணக்கத்தை விருத்தி செய்தல் உட்பட ஜனநாயகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க…
-
- 0 replies
- 639 views
-
-
தமிழகத்தில் ராஜபச்சேவின் வெள்ளை வான்! அலறும் ஈழத்தமிழர்கள்! விடுதலைச் சிறுத்தைகளின் முயற்ச்சியால் கொள்ளையர்கள் கண்டுபிடிப்பு திகதி:11.09.2010 இலங்கையில் வெள்ளை வேனைக் கண்டாலே நடுங்குவார்கள். சிங்கள ராணுவத்தினரால் ஆபரேட் செய்யப்படும் வெள்ளை வேன்களை பற்றி பேசவே ஈழத் தமிழர்கள் பயப்படுவார்கள். கொடுமைகளின் சின்னமாக இலங்கையில் இன்றும் இயக்கப்பட்டு வரும் வெள்ளை வேன்களை தமிழகத்திலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இயக்குகிறார்கள் என பயங் கலந்த இரகசிய குரலில் சொல்கிறார்கள் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள். கடந்த வாரம் திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார் ஈழத் தமிழ் இளைஞர் சிவபாலன். ஒரு வெள்ளை நிற மாருதி வேன் வந்து அவர் அருகே நின்றது…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஸ்ரீலங்காவின் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்த்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகள் கிடைத்த அதேவேளை எதிராக 17 வாக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு சார்பாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் எம்.பியசேனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க, லக்ஸ்மன் செனவிரட்ண, அப்துல் காதர், மனுஸ நாணயக்கார ஏர்ல் குணசேகர, பீ திகாம்பரம், பிரபா கணேசன், ஜே ஸ்ரீ ரங்கா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். …
-
- 11 replies
- 5k views
-
-
இந்தியாவும் சீனாவும் பரம வைரிகள்.அதே நேரம் இரண்டு நாடுகளும் உலகின் சர்வவல்லமை பொருந்திய நாடுகளாக நிலைமாற்றம் பெற்று வருகின்றன. மூன்றாவது உலகப் போர் இடம்பெறுமாக இருந்தால்,அது இந்தியாவுக்கும் சீனாவுக்கு மானபோரில் இருந்து ஆரம்பிப்பதாக அமையும்.அந்தளவிற்கு இரண்டு நாடுகளினதும் எதிர்த்தன்மை அதிகரித்த வண்ணமுள்ளதுடன் உலகமும் அந்த இரண்டு நாடுகளின்பால் பிளவு பட்டிருப்பதைக் காணமுடியும். இந் நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு முற்பட்டது. விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தில் இந்தியாவிடம் முழுமையான உதவிகளைப் பெற்று போரில் வெற்றி கொண்ட இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு, இந்தியாவின் வற்புறுத்தலில் இருந்து விடுபடுவதற்கும்,இந்தியாவின் அச்சுறுத்தலை …
-
- 3 replies
- 1.1k views
-
-
செப் 11, 2010 / பகுதி: செய்தி / புறக்கோட்டையில் கோப்பாய் தமிழ் பெண்ணொருவரின் சடலம் மீட்பு கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பிரிவில் தூக்கிட்டுக் கொண்ட நிலையில் - யாழ் - கோப்பாய் தமிழ் பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். காலைவேளையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்தனர். தொடர்மாடிக் கட்டடம் ஒன்றில் மேற்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. patjhivu
-
- 0 replies
- 927 views
-
-
Print | E-mail : Email this Article சனிக்கிழமை, 11, செப்டம்பர் 2010 (19:43 IST) இலங்கை: இந்து கோவில்களில் சிலைகள் உடைப்பு இலங்கையில் உள்ள இந்து கோவில்களில் உள்ள சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்துக்கள் குற்றம் சாட்டியுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் திருகோணமலை பகுதியில் உள்ள இந்து ஆலயங்களில் கடந்த பல மாதங்களாக இந்துக்கள் வழிபடும் சிலைகள் உடைக்கப்படும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன என்று, அப்பகுதியில் உள்ள இந்துக்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். திருகோணமலை, ஆதிகோணேஸ்வரர், கள்ளிமேடு முத்துமாரியம்மன், பட்டிமேடு சிந்தாமணி பிள்ளையார், …
-
- 0 replies
- 794 views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 11, 2010 தமிழீழ தேசிய தலைவரின் அன்னை அவர்களை காண வருபவர்களின் தொகை அதிகரித்து வருவதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அன்னை பார்வதி அவர்களுக்கு சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என கூற முடியாது என கூறுகின்றார் சிவாஜி சிலவேளைகளில் நீராகாரத்தையும் மாத்திரம் உட்கொள்ளக் கூடியதாகவும், சிலவேளைகளில் திண்ம ஆகாரத்தையும் உட்கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும், சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் நிலை உள்ளதாகவும் உடல்நிலை சற்று முன்னேறுவதும் பின்னடைவதுமாக காணப்படுகிறது எனவும் சிவாஜி குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலம் பனாகொட தடுப்பு முகாமில் இருந்த காரணத்தினால் அவருடைய நிலைமையில் கடுமையான நிலைமை ஏற்பட்ட…
-
- 1 reply
- 969 views
-
-
11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் திருவருள், லெப்.கேணல் வேங்கை உட்பட்ட கடற்புலி மாவீர்களினதும், லெப்.கேணல் தமிழ்மாறன் (கஜேந்திரன்) அவர்களினதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 7 replies
- 1.9k views
-
-
நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். நான் இறந்தபின்னர் என்னை என்தாயார் இறந்த முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் அடக்கம் செய்யுங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ளதமிழ் அரசியல் கைதி கூறியுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சியை சேர்ந்த ஆனந்தராஜா என்ற கைதி பல வருடங்களாக விசாரணைகளின்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். 2006ம் ஆண்டு விடுதலைப்புலி சந்தேக நபராக இவர் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது தாய் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார். தந்தை இறந்து பல வருடங்களாகின்றது. தற்போது உறவினர்களும் எங்குள்ளனர் …
-
- 0 replies
- 763 views
-
-
ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக ஆட்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது – ரணில் விக்ரமசிங்க 11 September 10 01:30 am (BST) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாம் தவைணக்காக ஆட்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு எதிராக செயற்படுவோரின் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் அதேவேளை, கட்சிக்கு ஆதரவாக செயற்படுவோருக்கு உறுப்புரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் கூட்டங்க…
-
- 2 replies
- 693 views
-
-
கூட்டமைப்பின் கூத்துக்களை அம்பலப்படுத்துகிறார் பியசேன எம்.பி! வெள்ளி, 10 செப்டம்பர் 2010 21:19 . . தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூத்துக்களை வெளிப்படுத்துகின்றார் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன. அரசமைப்புத் திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்த அவர் தான் அரசை ஏன் ஆதரிக்க வேண்டிய நிலை வந்தது என்பதை விளக்குகிறார். அவர் தனது தற்போதைய நிலைப்பாடு குறித்து தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இருந்து முக்கிய விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக அவர் கொட்டித் தீர்த்த ஆதங்கங்கள் இதோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாரம்பரியமான கட்சி ஆனால்…
-
- 1 reply
- 1.7k views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 11, 2010 அக்கரைப்பற்று முஸ்லிம் அரசியல் வாதியின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. அதிகாலை 3 மணியளவில் அக்கரைப்பற்று 6 ஆம் பிரிவு மத்திய கல்லூரி வீதியில் அமைந்துள்ள அரசியல்வாதியான செய்கு இஷடீனின் இணைப்பாளரான ஐ.எம்.இப்ரகாமின் வீட்டின் மீதே, இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது எவருக்கும் உயிராபத்தோ, காயமோ ஏற்படவில்லை எனவும் வீட்டின் சுவர் பகுதிகள் மாத்திரம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Eelanatham
-
- 0 replies
- 645 views
-
-
விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை காண வருபவர்களின் தொகை அதிகரித்து வருவதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிலவேளைகளில் நீராகாரத்தையும் மாத்திரம் உட்கொள்ளக் கூடியதாகவும், சிலவேளைகளில் திண்ம ஆகாரத்தையும் உட்கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும், சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் நிலை உள்ளதாகவும் உடல்நிலை சற்று முன்னேறுவதும் பின்னடைவதுமாக காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலம் பனாகொட தடுப்பு முகாமில் இருந்த காரணத்தினால் அவருடைய நிலைமையில் கடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளதை தன்னால் காணக்கூடியதாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் …
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த எடிசன் எமில் ஜெனிபர் லண்டனிலிருந்து அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் சுயவிருப்பத்திற்கு மாறாக மனிதாபிமானம் இல்லாமல் தாக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஆவணங்களில் வலுக்கட்டாயத்தின் பெயரில் பலவந்தமாக ஒப்பம் இடப்பட்டு கை,கால்களுக்கு விலங்கு பூட்ட நான்கு குடிவரவு அதிகாரிகளினால் தாக்கப்பட்டு விமானத்தில் ஏற்றி நாட்டிற்கு அனுப்பியுள்ளார்கள்.அதன் பின்னர் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமான நிலையினால் உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனும…
-
- 1 reply
- 751 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2010 மிஹின் லங்கா விமான சேவை, அதன் பிராந்திய நிலையம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி திறந்து வைக்கிறது. இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக நாளைய இளைஞர்கள் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கலந்து கொள்வாராம் . விமானபோக்குவரத்து மஹிந்த குடும்பவே நிர்வகிக்கின்றது. மிஹின் லங்கா இவர்களது குடும்ப சொத்தாகும். யாழ்ப்பாணம் கொழும்பு விமான சேவையின் வாய்ப்பினை மிகின் லங்கா கவரும் நோக்கமே இந்த அலுவலக திறப்பு. மிகின் லங்கா இறக்கும் தருவாயில் இருந்தது. பின்னர் சீன கம்பனி பணத்தை அள்ளி இறைத்து இரு விமானங்களையும் கொடுத்துள்ளது. இது ஏற்கனவே யாழில் குடியேறியுள்ள இந்தியன் எயர்வேர்ஸ் நிறுவனத்திற்கு ஆப்பு வைப்பதாக…
-
- 1 reply
- 910 views
-
-
நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறியாது உரிமைகள் பறிக்கப்பட்டதும் அதேவேளை ஜனநாயகத்துக்கு ஆணி அறையப்பட்டதுமான 18ஆவது திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுக்காத பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சார்ந்துள்ளது என்று அக்கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம். சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். சுய இலாபத்துக்காக கட்சி தாவுகின்ற நிலை இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த கலாசாரத்தை நியாயப்படுத்தி பிரதமரே உரையாற்றியது கவலைக்குரியது. எவ்வாறிருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எவரும் கட்சி தாவுவதற்கு தயாராக இல்லை. மக்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் எம்மில் எவரும் விலைபோக மாட்டார் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று…
-
- 4 replies
- 1.6k views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 9, 2010 கூட்டமைப்பினை இலங்கையில் தடை செய்ய வேண்டும். அவர்கள் தமிழ் மக்களிற்கு இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் சொல்லி ஏமாற்றுகின்ரனர். அரசாங்கத்தை பற்றி பொய் உரைக்கின்றனர். நான் தமிழ் மக்களிற்கு பணி செய்ய விரும்புகின்றேன். அதனாலேயே ஆளும் கட்சிக்கு தாவினேன் என நியாயம் கற்பித்தார் அம்பாரை மாவட்ட கூட்டமைப்பு எம்.பி. பியசேனா. ஈழ நாதம்
-
- 13 replies
- 1.9k views
-
-
படித்ததில் பிடித்தது நான் இந்தப்படம் எடுப்பதினால் உலகம் மாறிவிடுமென்று எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்'ஸ் லிஸ்ட் எடுத்ததுக்கூட அந்தப் படுகொலையில் உயிரிழுந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிற்பதற்கே. அந்தப் படத்தை நான் எடுத்ததிற்கு காரணம் அந்தக்கதை சொல்லப்படவேண்டும் என்பதினால் தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுச்செய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்தவர். இதில் 'ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட்' இரண்டாம் …
-
- 2 replies
- 655 views
-
-
சில ஊடகங்கள் என்னை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மக்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு செல்லவேண்டிய புனிதப் பணிக்கு மாறான செயற்பாடுகளை செய்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு சரத் பொன்சேவிற்கு நடந்துள்ள விடயமே நடக்கும் என்பதை நான் மிக துணிவுடன் சொல்கின்றேன் என மிரட்டல் விடுத்துள்ளார். சமுர்த்தி ஊழியர் ஒருவரை மேர்வின் சில்வா மரத்தில் கட்டி தண்டித்தமையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டியதை அடுத்து அவரது பிரதி அமைச்சுப் பதவி பறிபோனது.நேற்று 18ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேறிய பின்னர் அவரது பிரதியமைச்சர் பதவி மீண்டும் அளிக்கப்பட்டது. பிரதி அமைச்சுப் பதவி மீண்டும் கிடைத்ததை அடுத்து களனியப் பிரதேசத்தில் தனது ஆதரவாளர்களுடன் பால்சோறு பகிர்ந்துண்டு மகிழ…
-
- 0 replies
- 822 views
-