ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143263 topics in this forum
-
10.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதியின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 5 replies
- 1.7k views
-
-
10.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவரசன்(பைப்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள். 10.09.2000 அன்று யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் 10.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செண்பகச்செல்வன், லெப்.கேணல் எரிமலை, லெப்.கேணல் முல்லைமாறன், லெப்.கேணல் சிறிகாந்த், லெப்.கேணல் வீமன்(ஜது) உட்பட்ட கடற்புலிகளினதும், லெப்.கேணல் கலையழகன்(லுஜின்) ஆகியோரதும் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்
-
- 5 replies
- 2k views
-
-
அரசியல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்துப் பேசும் சூழ்நிலை இப்போது இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யா, மருமகன் அஸ்வின் ஆகியோருடன் கார் மூலம் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கி, சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்குள் சென்ற அவரை, கோவில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பு முடிந்ததும், வி.ஐ.பி. தரிசனம் வழியாக சென்று இரவு சுமார் 9 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் மனைவி, மகள், மருமகன் ஆகியோரும் சென்று சாமி தரிசனம் …
-
- 0 replies
- 761 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2010 கோதுமை மா கிலோ ஒன்றின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளதன்; காரணமாக பாணின் விலை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக நாளைய தினம் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் தலைவர் என் கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இது மட்டுமல்ல இன்னும் பல அத்தியவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்கலாம் காரணம் கடந்த இரு வருடங்களில் மட்டும் மஹிந்தா மூவாயிரம் மில்லியன் டொலர் கடன் வாங்கி இருக்கின்றார். இது யுத்த காலத்தில் பெற்ற ஐந்து வருட கடன்களை விட அதிகம். ஒப்பந்த வேலைகள் மூலம் பெருமளவு நிதியினை சுருட்டவும் பொதுமக்களுக்கு நம்பீக்கையினை ஏற்படுத்தி அபிவிருத்…
-
- 0 replies
- 630 views
-
-
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 10, 2010 சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகம் எதிர்வரும் நவம்பர் மாதம் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வருட காலமாக மன்னார் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது, செஞ்சிலுவைச் சங்கம் மக்களுக்குப் பெரிதும் உதவி வந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, வவுனியாவிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து உதவி செய்து வருகின்றது. இறுதிக் கட்ட போர் சூழலையடுத்து, மனிதாபிமானப் பணிகளில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்பத்தினரைச் சந்தித்து உதவி வழங்கும் பிரிவு பெரும்பணியாற்றி வந்ததாக அதன் இலங்கைத் தலைவர் போல் கெஸ்டெலா தெரிவித்துள்ளார். ஈழ நாதம்
-
- 0 replies
- 377 views
-
-
வவுனியா பிராந்தியத்துக்கான இராணுவ தலைமையகத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் சிப்பாய்கள் மூவர் காயம் அடைந்துள்ளார்கள். களஞ்சியத்தைத் துப்புரவு செய்துகொண்டிருந்தபோது கைக்குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததால் இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது. காயப்பட்ட மூவரும் வவுனியா அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10115:2010-09-10-10-26-50&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 0 replies
- 693 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இந்து ஆலயங்களின் கடவுள் சிலைகள் மூன்று நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் இனம் தெரியாத குழுவினரால் உடைத்துச் சிதைக்கப்பட்டுள்ளன. ஆதிகோணைநாதர் ஆலயம், கள்ளிமேடு முத்துமாரியம்மன் ஆலயம், பட்டிமேடு சிந்தாமணி பிள்ளையார், புதுக்குடியிருப்பு ஊரிக்காடு பிள்ளையார் ஆலயம் என்பவற்றில் உள்ள திருவுருவச் சிலைகளே இவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பிரதேச மக்கள் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து பொலிஸார் இவ்வாலயங்களுக்கு நேரில் சென்று சிலைகளைப் பார்வையிட்டனர். புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view…
-
- 0 replies
- 701 views
-
-
ஒரு இறாத்தல் பாணின் விலை குறைந்தது மூன்று ரூபாயால் நாளை முதல் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச மட்டத்தில் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ள்தாலேயே பாணின் விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இத்தகவலை வழங்கி உள்ளது. தற்போது ஒரு இறத்தால் பாணின் விலை 40 ரூபாய் . http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10089:2010-09-10-04-31-08&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 0 replies
- 606 views
-
-
ஜனாதிபதியின் புகைப்படத்தை விகாரப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிராக சுவரொட்டிகளை அச்சிட்ட நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். நுகேகொடை பிரதேசத்தில் இந்த அச்சகம் அமைந்துள்ளதாகவும், அச்சகத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சுவரொட்டிகள் வெளி மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுவரொட்டிகளை விநியோகம் செய்த நபர்களை கண்டு பிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் புகைப்படத்தை விகாரப்படுத்தி அச்சிடப்பட்ட 15 அச்சுப் பிரதிகளின் ஊடாக குறித்த அச்சகம் சுற்றி வளைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மகிந்தாவின் ஒரு சில வீடியோ நகைச்சுவைகள் பாருங்கள்
-
- 4 replies
- 1.2k views
-
-
தற்போது ‘தேசத்துரோகி’ ‘தேசபக்தன்’ என்ற சொற்தொடர்களை பயன்படுத்துவது ஒரு உயர் கலாச்சாரமாகஆகிவிட்டது. முன்னொரு காலத்தில் முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கம், பூர்சுவா என்ற சொற்பதங்;களை அதற்குரிய உண்மையான அர்த்தம் தெரியாமல் அவ்வாறு சொல்வதும், எழுதுவதும் அறிவுஜீவித்தனம் என்று சிலர் பாசாங்கு செய்து கொண்டிருந்ததைப் போலவே இப்போது ‘தேசத்துரோகி’ தேசபக்தன்’ என்ற இந்த சொற் தொடர்களை பாவிப்பதன் மூலம் சிலர் தங்களுடைய தவறுகளை அதற்குள் மறைத்து தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். துரோகி எதிர் தியாகி என்ற சொற்பதங்கள் குறிக்கும் அர்த்தங்கள் அவற்றை பிரயோகிக்கும் நபர்கள் மற்றும் காலம், இடம் என்பவற்றைப் பொறுத்து வேறுபடக் கூடியவை. இவற்றின் உண்மையான அர்த்தத்தை தீர்மானிக்க…
-
- 0 replies
- 998 views
-
-
ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்ட சிறிலங்காவில் சட்டயாப்புக்கான 18-ஆவது திருத்தம் அனலை நிதிஸ் ச. குமாரன் ஜனநாயக கோட்பாடுகளை மதியாது தன்னிச்சையாக தாம் நினைத்த அனைத்திற்கும் செயல்வடிவம் கொடுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தைப்பற்றி பேச அருகதையற்றவர்கள். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த சிங்கள ஆட்சியாளர்கள் இன்று தங்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலை வந்துள்ளது. சட்டயாப்புக்களை தங்களுக்கு வேண்டியவாறு மாற்றுவதும், தேவைப்பட்டால் அவற்றை மதியாது செயற்படுவதும் சிறிலங்காவில் ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் மகிந்த ராஜபக்சாவின் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்த வாரம் சட்டமாக்கப்பட்டுள்ள 18-ஆவது சட்ட திருத்தம் சிங்களக் கட்சிகள் தமக்குள் மோதிக்கொள்ளும் ஒரு நிலையை உருவாக்க…
-
- 0 replies
- 464 views
-
-
கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் கனடியத் தமிழ் விளையாட்டுத்;துறையுடன் இணைந்து நடத்திய இரண்டாவது உதைப்பந்தாட்டத்திற்கான தமிழீழச் சுற்றுக் கிண்ணப் போட்டி ஞாயிறு செப்டெம்பர் 5, 2010 L'Amoreaux Sports Complex இல் இடம்பெற்றது. போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து இளையோரும் பல திறமைகளையும் ஒத்துழைப்பையும் வெளிக்காட்டினர். மற்றைய விளையாட்டுவிரரிடம் இருந்து சிறப்பாக போட்டியிட்ட விளையாட்டுவீரருக்கு தமிழீழத் தேசிய சின்னங்களின் பெயர்களில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வாகை விருது சிறந்த பந்து தடுப்பாளருக்கு வழங்கப்பட்டது, சிறுத்தை விருது சிறந்து விளையாட்டுவீரருக்கு வழங்கப்பட்டது, செண்பகம் விருது எதிரணியிடம் இருந்து வரும் பந்தை தமது பக்கும் வரவிடாமல் சிறப்புற தடுத்திருந்த விள…
-
- 0 replies
- 633 views
-
-
வந்தார்கள் போனார்கள் ஏதோ எல்லாம் சொன்னார்கள். நடந்தது என்னவோ நம் இனத்துக்கு அழிவு தான்.இப்பவும் வருகிறார்கள் போகிறார்கள் ஏதோ எல்லாம் சொல்லுகிறார்கள் நடக்கப்போவது ஈழத்தில் மிஞ்சி இருக்கும் வளமும் நிலமும் பறித்தெடுத்து பங்கு போடும் வியாபார நோக்கமே தவிர தமிழர் நலம் இல்லை இல்லவே இல்லை இது கவிதையும் இல்லை..... கட்டுரையும் இல்லை...... நாம் கண்ட அனுபவம்.இந்தியாவுக்கு ஒரு துளி தமிழர் மீது இரக்கம் இருந்தால் இந்த வீடியோ நிகழ்வு நடந்ததா... இல்லையா ... உண்மையானால் அவர்களுக்கு தண்டனை என்ன...பதில் இருக்குமா, இந்தியாவிடம்.நாம் தான் முட்டாளுகள் காலம் காலமாக இந்தியாவை நம்பி முதுகில் குத்து வேண்டுகிறோம்.வீடியோ நீங்கள் பார்த்தது தான் விருப்பம் இல்லையேல் பார்க்க வேண்டாம்(கொடூரம்)
-
- 0 replies
- 954 views
-
-
09.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்காந்த் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாளும், 09.09.2006ம் ஆண்டு முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கரன், லெப்.கேணல் குட்டி, லெப்.கேணல் அரிச்சந்திரன் உட்பட்ட மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். படங்களைப் பெரிதாய்ப்பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.
-
- 8 replies
- 1.9k views
-
-
கட்சி மாறுவதற்காக பேரம்பேசலில் ஈடுபட்ட ஆழும் தரப்பு கையூட்டுக்களையும், கடைசியில் சில மிரட்டல்களையும் பிரயோகித்ததாக பிபிசி முகவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு கார் இறக்குமதி சலுகை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான தயாசிறி இந்த தகவலை இன்று வெளியிட்டார். குறித்த பெண்பாராளுமன்ற உறுப்பினரின் கணவர் ஓர் கார் இறக்குமதியாலர் என்றும் அவருக்கு சில இறக்குமதி சலுகைகளை அரசு வழங்கியதன் மூலம் பாராளுமன்ற பெண் உறுப்பினரை ஆழும் கட்சிக்கு தாவியுள்ளார் என கூறியுள்ளார் தயாசிறி ஈழ நாதம்
-
- 0 replies
- 862 views
-
-
பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள் என்று பரபரப்புத் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதி ஒருவர் அவரது வாக்குமூலத்தில் இவ்வதிரடித் தகவலை வழங்கி உள்ளார். மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.இது தொடர்பாக மராட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்களைக் கண்டு பிடித்துள்ளார்கள். இவர்களில் ஒருவர் ஹிமாயத் பெய்க் . இவர் பாகிஸ்தானின் லஹ்கர் -இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர். இலங்கையின் …
-
- 5 replies
- 1.9k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும்-அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவின் ஆதரவாளர் என்கிற போர்வையில் 24 வயதுடைய இளம் யுவதி ஒருவரை ஏமாற்றி, கடத்தி, பாலியல் வல்லுறவு , கட்டாய திருமணம் செய்துகொண்ட நபரை ஒருவரை மாத்தறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளார்கள். இன்னொரு சகா மூலமாக இளம் யுவதிக்கு இப்பேர்வழி அறிமுகம் ஆகி இருந்தார். நாமல் ராஜபக்ஸ எம்.பி மூலமாக வேலை பெற்றுத் தருவார் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார். நாமல் ராஜபக்ஸ எம்.பியிடம் இருந்து சிபாரிசுக் கடிதம் ஒன்றை பெறுகின்றமைக்காக அக்குரஸ்ஸ பிரதேசத்துக்கு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். இளம் யுவதி கடந்த செவ்வாய்க்கிழமை அக்குரஸ்ஸவுக்கு சென்றிருக்கின்றார். இளம் யு…
-
- 0 replies
- 1.1k views
-
-
தாயக உறவுகளுக்கான பொருட்கள் சேகரிப்பு உதவும் காலம் 13.09.2010 முதல் 30.09.2010 வரை முப்பத்தைந்து வருட வாழ்க்கையின் வடுக்கள் உயிரிழப்பு பொருளாதார இழப்பு தொழில் இழப்பு இடப்பெயர்வு ஏதிலிகள் வறுமை நல்லதோர் வாழ்வு செய்வோம் நம்பிக்கை கொண்டெழு தமிழா இன்றுள்ள தேவை எமது மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல் சுயமாக வாழவைத்தல் எமது உறவுகள் பொருளாதார மலர்ச்சி கண்டால் சுதந்திரம் தேடிவரும் அன்பான புலம்பெயர் வாழ் உறவுகளே ஒருவர் ஒரு பிள்ளைக்கு கல்வி உதவி ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி நீங்கள் விரும்பியபடி உங்கள் உதவிகளை வழங்கலாம் பாடசாலைப் பைக்குள் தேவையான கல்வி உபகரணங்களை வைத்து (பொருட்களின் வ…
-
- 0 replies
- 701 views
-
-
கடந்தவாரம் அயல்நாடொன்றில் இருந்து அவசர அழைப்பு. “அண்ணே நம்ம பாலா அண்ணனைப் பத்தி செய்தி ஒண்ணு வந்திருக்கு….. பாத்தீங்களா? அவர் உயிரோடுதான் இருப்பார் போலிருக்கு…… ராணுவ முகாமில் எடுத்த புகைப்படத்தோடு இன்னும் பல தகவல்கள் வெளியாகி இருக்கு……” என்றபடி நீண்டது அந்த உரையாடல். என்னது….. தோழர் பாலா இன்னமும் இருக்கிறாரா…….? அட….. அப்படியானால் இதற்கு முன்னர் வந்த செய்திகள் தவறானதுதானா?…… நெஞ்சைப் பிளக்கும் சோகங்களுக்கு மத்தியிலும் ஒரு மெல்லிய ஒளிக்கீற்று……. அந்த முனையில் இருந்து நண்பர் பேசப்பேச என் நினைவுகள் இருபத்தி ஐந்து ஆண்டுகள் பின்னே பயணிக்க ஆரம்பித்து விட்ட்து. ஈழ விடுதலைக்காகப் போராட களத்தில் குதித்த இயக்கங்களில் ஒன்றுதான் ஈரோஸ். அதனைத் தமிழில் ஈழப் புரட்சி…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் மகன் இன்றைய நல்லூர்த் தீர்த்தத் திருவிழாவின்போது பெண் ஒருவர் மீது தண்ணீரை வாரி இறைத்துள்ளார். இதனால் அங்கு சிறிய ஒரு கலவரமே மூண்டது. ஆலய சுற்றாடலில் அமளிதுமளி ஏற்பட்டது. கேணிக்கு அருகில் கடமையிலிருந்த பெண் பொலிஸார் மீதும் இளைஞர்கள் தீர்த்த நீரை அள்ளி ஊற்றியிருக்கின்றார்கள். சுவாமி தீர்த்தமாடுகின்றமைக்கு முன்பாகவே தீர்த்தக் கேணிக்குள் குதித்து விட்ட இளைஞர்கள் ஆலயத்தை விட்டு பொலிஸார் வெளியேறிச் செல்ல வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பெண் பொலிஸார் மீதும், இளம் பெண்கள் மீதும் தீர்த்த நீரை இறைத்தனர். http://www.tamilcnn.com/index.php?option=com_content&v…
-
- 8 replies
- 5.8k views
-
-
இன்று இந்த ஆண்டின் செப்டம்பர் 8ம் நாள். கலண்டரில் தொடர்ச்சியான எண்களான 8-9-10 ஆகியன இன்று இடம்பெற்றுள்ளதால், இது ராசியான எண் என்று கருதப்படுகிறது. காலை அல்லது மாலையில், 5 மணி 6 நிமிடம் 7 வினாடி நேரத்தில், இன்றைய நேரம் 5:6:7 8-9-10 என்று குறிப்பிடப்படும் என்பதால், அந்நேரத்தை சுலபமாக மறக்க முடியாது. இன்று இந்நேரத்தில் எந்த சுபகாரியத்தையும் செய்யலாம். நிறைந்த அமாவாசை தினமும் கூட.இதுபோன்ற நாட்களுக்கு ஜோதிடர்கள் முக்கியத்துவம் அளிப்பர். எண்கணித நிபுணர்களையும் கேட்கவே வேண்டாம். 8-9-10 ஆகியவற்றின் கூட்டுத் தொகை 9 என்பதால் அது ராசியான எண்ணாகக் கருதப்படுகிறது. இதே போன்ற தினம் இன்னொரு முறை வர, நூறு ஆண்டுகள் ஆகும் என்பதால், ஜோதிடத்தை நம்புபவர்களுக்கும், நம்பாதவர்களு…
-
- 4 replies
- 1.3k views
-
-
கரடி விடுவது யார்? முருக பூபதியா அல்லது சிவத்தம்பியா??!!! வருகிற தை மாதம் கொழும்பில் நடக்கவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாடு பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் அவுஸ்த்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள், இந்த மாநாடு சில தனிப்பட்ட நபர்களால் நடத்தப்படப்போகும் நிகழ்வு அல்ல, மாறாக உலகத் தமிழ் எழுத்தாள்ர் அனைவராலும் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வு என்று காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார். இதற்காக தான் தற்போதுஅ டிக்கடி எழுதிவரும் வேண்டுகோள் மடல்களில் சில பிரபலங்களின் பெயர்களையும் இணைக்கத் தவறுவதில்லை. ஆவ்வாறு முருகபூபதி அண்மையில் தனது கெஞ்சல்க் கடிதத்தில் இணைத்துக்கொண்ட ஒரு பிரபலம்தான் பேராசிரியர் சிவத்தம்பி.…
-
- 7 replies
- 1.4k views
-
-
வியாழக்கிழமை, செப்டம்பர் 9, 2010 நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலபகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புக்களுடன் கொண்டிருந்த நிலையான தொடர்பினை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விதிவிடப் பிரதிநிதி நீல் புஹுனே உறுதிப்படுத்துவார். இவ்வாறு கூறியுள்ளனர் முப்படைத்தளபதிகள். நாட்டில் யுத்தம் நடை பெற்ற காலப் பகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புகளுடன் நிலையான தொடர்பை கொண்டிருந்தது. குறிப்பாக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் நிலையான தொடர்பைப் பேணி வந்தனர். அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிக ளுடன் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து இராணுவம் கொண்டிருந்த தொடர்புகளை நீல் புஹுனே உறுதிப்படுத்துவார். அதேவேளை, மனிதாபிமா…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோகிராம் எடையுடைய தங்கம் அவர் இராணுவ தளபதியாக பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது மீட்கப்பட்டிருக்கின்றது என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் அவசர கால சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு: ”நான் பதவியில் இருந்து தூக்கப்பட்ட பின்னரும் ஏராளமான தங்கங்கள் படையினரால் மீட்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இத்தங்கங்களுக்கு எல்லாம் என்ன நட…
-
- 6 replies
- 1.7k views
-
-
கடந்த கால யுத்தத்தால் கிளிநொச்சி மாவட்டத்தில் இளம் விதவையான தாய் ஒருவர் வாழ்க்கையே சூனியம் ஆக்கப்பட்ட நிலையில் ஏக்கங்களுடன் மனம் உடைந்து போய்க் காணப்படுகின்றார். கமலேஸ்வரி விஜிதா (வயது 27) என்பவரே இந்த அவலைப் பெண் ஆவார். யுத்தத்தால் இவர் சிறுவயதிலேயே தந்தையைப் பறி கொடுக்க நேர்ந்தது. தாயார்தான் இவரை வீடுகளில் கூலிப் பணி செய்து காப்பாற்றினார். கலியாணமும் செய்து வைத்தார். திருமண வாழ்க்கையின் பலனாக இவருக்கு இரு பெண் குழந்தைகள். ஆனால் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்த கால இடப்பெயர்வின்போது கணவர் எறிகணைத் தாக்குதலுக்கு உயிர்ப்பலி ஆகி விட்டார். இடப்பெயர்வுகள், முகாம் வாழ்க்கை என்று அனுபவித்த சோதனைகள் ஏராளம். மீண்டும் சொந்தக் கிராமத்தில் ஜீவிதம்.…
-
- 0 replies
- 688 views
-