ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143242 topics in this forum
-
போரின் காரணமாக, வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை, இம்சைக்கு உள்ளாக்குவதில் பெயர் பெற்று விளங்கியது மெனிக்பாம் எனப்படும் செட்டிகுளம் முகாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக, அங்கிருந்து தமது உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு, பிள்ளை குட்டிகளுடன் ஓட்டமும் நடையு மாகச் சென்ற அகதிகளில் மிகப் பெரும்பாலானோர் மெனிக்பாமில் முட்கம்பி வேலிகளுக்குள் மிருகங்கள் போன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அங்கு மனிதச் "சித்திரவதைகளும்' மனிதாபிமானமற்ற கொடூரங்களும் அதிகாரத்தனத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்டதும் மறக்க முடியாதவை. (Human rights abuse) அதனால் மெனிக்பாம் அகதிகள் முகாம் சர்வதேசரீதியில் பெயர் பெற்றது. அங்கிருந்த பெரு…
-
- 0 replies
- 789 views
-
-
தேசத்துரோகிகளும் - தேசபக்தர்களும்....... திகதி: 06.08.2010, தற்போது 'தேசத்துரோகி' 'தேசபக்தன்' என்ற சொற்தொடர்களை பயன்படுத்துவது ஒரு உயர் கலாச்சாரமாக ஆகிவிட்டது. முன்னொரு காலத்தில் முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கம், பூர்சுவா என்ற சொற்பதங்;களை அதற்குரிய உண்மையான அர்த்தம் தெரியாமல் அவ்வாறு சொல்வதும், எழுதுவதும் அறிவுஜீவித்தனம் என்று சிலர் பாசாங்கு செய்து கொண்டிருந்ததைப் போலவே இப்போது 'தேசத்துரோகி' தேசபக்தன்' என்ற இந்த சொற் தொடர்களை பாவிப்பதன் மூலம் சிலர் தங்களுடைய தவறுகளை அதற்குள் மறைத்து தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். துரோகி எதிர் தியாகி என்ற சொற்பதங்கள் குறிக்கும் அர்த்தங்கள் அவற்றை பிரயோகிக்கும் நபர்கள் மற்றும் காலம், இடம் என்பவ…
-
- 0 replies
- 964 views
-
-
வெள்ளிக்கிழமை, 6, ஆகஸ்ட் 2010 (15:24 IST) இலங்கை அரசியலில் கொலைகாரர்களுக்கே இடம்: சந்திரிக்கா இலங்கையில் நடந்துவந்த போர் முடிவுக்கு வந்தபோதும், இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை என்று விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, இலங்கை அரசியலில் சதித்திட்டம் தீட்டக்கூடியவர்கள், கொலை, மோசடிகள் புரிபவர்கள் ஆகியோருக்கே இடம் உள்ளது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் வாழும் போரால் பாதிப்புக்குள்ளான பெண்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, புத்தளம் பிஸ்ருல் ஹாபி நினைவு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சந்திரிக்கா, பொருளாதாரத்தை மட்டும் கட்டியெழுப்புவதன் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்…
-
- 2 replies
- 612 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள்அரசியல் புகலிடம் கோருவோரைப் போன்று பாசாங்கு செய்து ஏனைய நாடுகளுக்குள் நுழைவதாகவும் அவர்கள் அந்நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பர் எனவும் கோத்தபாய கூறியுள்ளார். புகலிடம் கோருவோரை நாட்டுக்குள் அனுமதிக்கும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எச்சரித்துள்ளது. எனவும் கூறினார் காலியில் நடைபெறும் கடல்பாதுகாப்பு தொடர்பான மாநாடொன்றில் வெளிநாடுகளிலிருந்து வந்த தூதுக்குழுவினர் முன்னிலையில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். http://www.eelanatham.
-
- 1 reply
- 937 views
-
-
இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டுதோறும் ஜூலை மாதத்தை, துயர்துடைப்பு மாதமாக அனுஷ்டித்து வருகிறது. அந்த வகையில் துயர்துடைப்பு மாத நிகழ்வுகளில் இறுதி நிகழ்வாகவும், கறுப்பு ஜுலை நினைவாகவும், அடைக்கலம் தந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கும் நன்றிக் கடனாகவும் நடைபெறும் “இரத்த தானம்”, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.30 மணிவரை Southbank இல 51, Clarke வீதியில் அமைந்துள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் …
-
- 0 replies
- 631 views
-
-
வடக்கில், சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள் வதற்காக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட் டங்களில் தமிழ் மக்களின் பத்தாயிரம் ஏக்கர் காணியை அரசாங்கம் கையகப்படுத்த இருப்பதாகத் தமிழ்த்தேசி யக் கூட்டமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது; அம்பலப் படுத்தியிருக்கிறது. பிரதானமாக மேற்கூறிய மாவட்டங்களில் அமைக் கப்படும் இராணுவ முகாம்களில் பணிபுரியும் படை யினரின் குடும்பங்களைக் குடியமர்த்தவே தமிழர் நிலம் சுவீகரிக்கப்பட உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் சுட்டிக்காட்டி உள்ளனர். வடக்கு, கிழக்கின் பாதுகாப்புக்கருதி அங்கு நிரந்தர இராணுவ முகாம்களும் படைத்தளங்களும் அமைக்கப் படும் என்றும் அவற்றில் பணிபுரியும் இராணுவத்தினரின் குடும் பங்கள் தங்கிவாழ, அந்தப் பிரதேசங்களில் இராணுவக் குடியே…
-
- 0 replies
- 916 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி இன்று 14வது நாளில் தனது மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் தொடர்ந்துவரும் நிலையில், அவருடன் இத்தாலியில் இருந்தும் மக்கள் இணைகின்றனர். இத்தாலியில் இருந்து பிரான்ஸ் நோக்கி தற்பொழுது சென்றுகொண்டிருக்கும் மக்கள் இன்னும் சில மணிநேரங்களில் தம்மையும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைத்துக்கொள்ள இருக்கின்றனர். அதேவேளை, பிரான்ஸ் மக்கள் 12 பேர் வரையில் தற்பொழுது சிவந்தனுடன் இணைந்து நடந்து செல்வதுடன், இன்று காலையில் இருந்து இவர்கள் இதுவரை 14 கிலோமீற்றர் நடந்து சென்றுள்ளனர். நேற்றும் பலர் இணைந்து நடந்திருந்ததுடன், நடை பயணம் நிறைவுபெறும் வேளையிலும் சுமார் 50 பேர் வரையில் இந்த மனிதநேயப் பயணத்தில் தம்மை இணைத்திருந்தனர். Provins …
-
- 0 replies
- 887 views
-
-
யுத்தம் நிறைவடைந்த பின்னரும், அவசர நிலைமைகளில் வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்கள், மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு வரமுடியாத சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளரிடம் தாயகத்தில் உள்ள பல உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறிப்பாக, ஸ்ரீலங்காவில் தமது திருமணத்தை நடத்தக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் முறையிட்டுள்ளனர். இதன் காரணமாக, ஸ்ரீலங்காவின் கலாசாரத்தை ஒத்த இந்தியாவிலேயே திருமண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கடந்த காலங்களில் ஸ்ரீலங்காவில் இருந்து அகதிகளாக ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்று, அங்கு வதிவிட உரிமை பெற்றுக் கொண்டவர்களின், உறவினர்கள் ஸ்ரீலங்காவில் இருக்கின்றனர். புலம்பெயர் உறவுகள் ஸ்ரீலங்காவிலேயே திருமணத்தை செய்துக் கொ…
-
- 0 replies
- 993 views
-
-
ஆனையிறவில் இருந்து சிங்கள சிப்பாய்கள் பயணித்த பஸ் ஒன்று வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 21 சிப்பாய்கள் காயமைடைந்த சம்பவமொன்று இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. விடுமுறையில் வீடுகளுக்கு சென்றுகொண்டிருந்த சிப்பாய்கள் பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிப்பாய்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் கூறினர். பஸ்ஸின் கூடிய வேகம் காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டை மீறி இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ப…
-
- 0 replies
- 611 views
-
-
கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தனக்கான எதிர்காலம் கருதி வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பாரானால் தான் அதனது தலைமைப் பதவியிலிருந்து உடனடியாக விலகி விடுவேன் என அதன் தற்போதைய தலைவர் சி. தவரட்னம் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட மீனவ சாமச சம்மேளனத்தின் தலைவராக நீண்ட காலம் சி. தவரட்னம் இருந்து வருகின்றார். யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவ அமைப்புக்களின் பெயர் குறிப்பிட்டு சொல்லக் கூடிய முக்கிய தலைவராக அவர் நீண்ட காலம் கடமையாற்றி வருகின்றார். அவர் யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ள கேபியின் ஊரான மயிலிட்டியைச் சேர்ந்தவராவார். குளோபல் தமிழ்ச் செய்திகளுடனான விசேட உரையாடலில் கேபி தனது நெருங்கிய…
-
- 0 replies
- 878 views
-
-
Aug 6, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈழவன் கே.பி. குழு விரிக்கும் சதி வலைக்குள் புலம்பெயர் தமிழர்கள் நாம் சிக்கமாட்டோம்!! தமிழீழம் தோற்றுப்போனதா...? தோற்கடிக்கப்பட்டதா...? என்ற பல கேள்விகள் முள்ளிவாய்க்காலில் உருவான போர்க்கள மாற்றத்தின் பின்னரான விவாதமாகத் தொடர்கின்றது. தமிழீழ மண்ணில் விடுதலைப் போர்க் களம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாகவே, எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான போர்க் களத்தைப் புலம்பொயர் தேசங்களை நோக்கி நகர்த்திவிட்டார். தமிழீழ விடுதலையை வென்று எடுப்பதற்காக பொறுப்பை புலம்பெயர் தமிழர்களின் தோள்களில் ஒப்படைத்திருந்தார். நடக்கப்போவதை பல பத்து வருடங்களுக்கு முன்னரே கணித்து அறிந்து கொள்ளும் தீர்க்கதரிச சிந்தனை கொண்…
-
- 0 replies
- 602 views
-
-
Aug 6, 2010 / பகுதி: செய்தி / கனடிய நிருபர் கப்பலில் வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள் 200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர் ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். அந்த நிகழ்ச்சியின் போது சட்டத்தரணியும், குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான விடயங்களில் நிபுணருமான லோர் வோல்ம…
-
- 0 replies
- 605 views
-
-
எந்த உத்தரவுப் பிரகாரம் கே.பி. கைது செய்யப்பட்டார்? நீதிமன்ற அறிவுறுத்தலாஇ கோத்தபாயவின் நடவடிக்கையா? கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டுள்ளாரா? அவ்வாறாயின் அவர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரிலா? அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் நடவடிக்கையின் பிரகாரமா? இவ்வாறு நாடாளுமன்றில் நேற்றுக் கேள்விக் கணைகளைத் தொடுத்தார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநயக்கா. இது தொடர்பாக அவர் சபையின் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மிகப் பயங்கரமானவனவரான கே.பி. தொடர்பாக நான் இந்தச் சபையில் சில கேள்விகளை முன்வைக்கின்றேன். கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளாரா அப்படியாயின்இ அது நீதிமன்றத்தின் அறி…
-
- 0 replies
- 603 views
-
-
ஒற்றுமையாக எங்கள் உணர்வை வெளிபடுத்தி இலட்சியம் அடைவோம்.
-
- 0 replies
- 687 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு களத்தில் ஆயுதங்களை மௌனித்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு இன்றுள்ள மிகப்பெரிய சவால் 'தமிழ் டயஸ்போரா" (Tamil Diaspora) எனப்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம்தான். கடந்த மூன்று தசாப்த காலத்தில், போர் காரணமாகவும், தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களுடைய தாயகத்தில் பிரயோகிக்கப்பட்ட ஒடுக்குமுறைகளினாலும் கொழும்புக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கக்கூடிய ஒரு சக்தியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பது உண்மை. இந்த தமிழ் டயஸ்போரா ஒரு பலமான சக்தியாக இருப்பதென்பது தமக்கு எப்போதும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கருதுவதால்தான் அதனை இலக்குவைத்து செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் இப்போது முன்னெடுத்திருக்கின்றது. இன்றைய நிலையில் தமிழ் ட…
-
- 1 reply
- 721 views
-
-
ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - காய்ச்சி எடுக்கும் அமீர் இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர். ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தல…
-
- 7 replies
- 1.4k views
-
-
கொழும்பு-ஆபாசப்படம் எடுத்தவர்கள் கைது : சிக்கியவர்கள் தமிழ்ப்பெண்களா? கொழும்பு, பெட்டா மல்வத்த சாலையில் நெடுங்காலமாக இளம்பெண்களை வைத்து நீலப்படம் எடுத்த நான்கு இளைஞர்களை கொழும்பு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குறுந்தகடுகள், படமெடுக்கும் கருவிகள், சஞ்சிகைகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலில் சிக்கியுள்ள பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களா அல்லது வதை முகாம்களில் வாடும் அப்பாவிப் பெண்களைக் கடத்தி வந்து இவ்வாறு படமெடுக்கின்றனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வதை முகாம்களிலிருந்து அவ்வப்போது கடத்திச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களை மயக்க மருந்து கொடு…
-
- 0 replies
- 1.5k views
-
-
http://www.theelders.org/media/mediareleases/sri-lankas-disturbing-actions-met-by-deafening-global-silence
-
- 0 replies
- 513 views
-
-
இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 5, 2010, 17:22[iST] வாஷிங்டன்: இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. 2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா [^]வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் [^] லக்தர் பிராஹி…
-
- 1 reply
- 593 views
-
-
சிறிலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது.உருத்திரகுமாரன் திகதி: 04.08.2010, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் உருத்திரகுமாரன் அவர்களுடனான முழுமையான செவ்வி கேள்வி: நாடுகடந்த அரசாங்கம் தனது முதலமர்வினை மேற்கொண்டதன் பிற்பாடு அதன் செயற்பாடுகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலமர்வில் தனக்கான அரசியல் அபைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும் உடனடியான முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக்குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அரசியல் அமைப்பு விவகாரக்குழுஇ அரசியல் அமைப்பு உபகுழுஇ கல்வி, பண…
-
- 2 replies
- 692 views
-
-
பிரபா கணேசன் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாகவும் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆளும் தரப்புடன் இன்று இணைந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் நடவடிக்கை தொடர்பில் மனோ கணேசன் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு தற்சமயம் பயணம் மேற்கொண்டுள்ள மனோ கணேசன் தமது பயணத்தை இடை நிறுத்திவிட்டு நாடு திரும்புவதற்கு முன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன் மூலம் பிரபா கணேசன் எம்பி எமது கட்சிக்கும், தமிழ் இனத்திற்கும் துரோகம் இழைத்துவிட்டார். அத்துடன் கடந்த 10 வருடங்களாக நான் முன்னெடுத்து…
-
- 3 replies
- 1.1k views
-
-
விபரங்களுக்கு பின்வரும் கோப்புகளைப் பார்வையிடவும். http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0001.pdf http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0002.pdf http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0004.pdf http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0006.pdf http://www.yarl.com/forum3/uploads/monthly_08_2010/scansione0009.pdf
-
- 0 replies
- 854 views
-
-
திண்ணைக்குக் காத்திருந்த வீரர்கள் GTNற்காக ஆனந்தத் தாண்டவன்:‐ நன்றி சிரச ரீவி:‐ வீடியோ கிளிப் வீடியோ கிளிப்பில் உள்ள உரைகளின் தமிழாக்கம்:‐ முல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா விஜயம் செய்திருந்தார். அவர் பங்கு கொண்ட நிகழ்வென்றில் ஆற்றிய உரைகள் இங்கு தரப்படுகிறது. இந்த உரை சிரச தொலைக்காட்சிச் சேவையின் செய்தியில் இருந்து பெறப்பட்டது. அதன் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. எஸ்.பீதாம்பரம்‐ அதிபர் சிதம்பரப்புரம் அரச தமிழ் பாடசாலை எமது புதுக்குடியிருப்பு எல்லைக்குள் ஒருமுறை காலடி எடுத்து வைத்து பாருங்கள், பிரதேசம் மயானத்தை விட கேவலமாக இருக்கிறது.…
-
- 3 replies
- 1.5k views
-
-
மீண்டும் கொழும்பில் வெள்ளை வான்கள்! 2 persons abducted in white van in Borella [TamilNet, Wednesday, 04 August 2010, 10:43 GMT] Two persons including a woman were abducted in Colombo Tuesday night around 10.30 p.m. by unidentified persons arrived in white van. The couple were walking along the road between Borella and Fort when the van stopped and forcibly took them and fled, according to complaints lodged with the Borella Police. Whereabouts of both persons were still not known according to preliminary inquiry by the police. The victims identities also were not revealed by the police.
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜனநாயக மக்கள் முன்னணியில் போட்டியிட்ட பிரபா கணேசன், பெ.திகாம்பரம் ஆகியோர் மஹிந்தவுடன் இன்று இணைந்து கொண்டனர். இதனை பிரபா கணேசன் இன்று காலை உறுதிப்படுத்தினார். எதிரணியில் இருந்து கொண்டு தாம் தமது மக்களுக்கு எதனையும் செய்ய முடியாது என கூறிய பிரபா கணேசன் தான் மஹிந்தவுடன் இணைவதாக கூறினார். ஈழநாதம்
-
- 2 replies
- 947 views
-