ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143235 topics in this forum
-
இலங்கை எம்.பி.-க்களிடம் எகிறிய முதல்வர்! எதற்காக வருகிறார்கள்... என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்... ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்... பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்கள் எனப் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தவறுவது இல்லை. பலன்? டெல்லியில் இருந்து கொழும்புவில் இறங்கும்போது தமிழ் எம்.பி. ஒருவருக்கு மூக்கில் சின்னக் கொப்பளம். பேண்டேஜ் போட்டிருந்தார். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்த பிரமுகர் ஒருவர் ஏதோ கேட்க, 'இந்தியாவில் இருந்து மூக்குடைபட்டு வருகிறோம்' என்றாராம் அந்த எம்.பி. நிலைமை அப்படித்தான் இருக்கிறது! இந்நிலையில், சம்பந்தன் தலைமையில் …
-
- 8 replies
- 2.1k views
-
-
ஐ.நா நிபுணர் குழுவுக்கு எதிராக ஜெனிவாவில் சிங்களவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்! திங்கட்கிழமை, 26 ஜூலை 2010 12:34 . .இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவின் நியமனத்தைக் கண்டித்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்தின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினார்கள். இத்தாலியில் வாழ் இலங்கையர்கள் ஒன்றியம் என்கிற அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு வாபஸ் பெறப்பட வேண்டும், இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ. எஸ். பி பிளஸ் வரிச் சலுகை நிறுத்தக் க…
-
- 1 reply
- 587 views
-
-
தமிழர் பகுதிகளில் நிலையை ஆராய அயலுறவு அமைச்சக அதிகாரி அனுப்பப்படுவார்: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம் திங்கள், 26 ஜூலை 2010( 21:33 IST ) இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள அப்பகுதிக்கு அயலுறவு அமைச்சக அதிகாரி அனுப்பப்படுவார் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் குடியமர்த்துவதில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம எழுதியிருந்தார். முதல்வரின் இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். “இப்பிரச்சனைக்கு நாம் அளித்துவரும் முக்கியத்துவம், அத…
-
- 3 replies
- 664 views
-
-
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் ஏ9 சாலையோரம் உட்பட முருகண்டிப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 5000 வீடுகளில் வருகின்ற ஓகஸ்ட் மாதத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளன. இதுவரைக்கும் ஸ்கந்தபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதாக அழைத்துச் சென்றுள்ள அரசு, அவர்களை ஒரு பாடசாலைக் கட்டடத்தில் தற்காலிகமாக இருத்தியுள்ளது. சர்வதேச நிதியிலிருந்து மீள்குடியேறும் மக்களுக்காக வாங்கப்பட்ட வீடுகளின் பகுதிகள் கனரக வாகனங்களில் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, இராணுவக் குடியேற்றத்துக்காக அவை வீடுகளாக்கப்பட்டு வருவதாக அரசு சாரா நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி பகுதியில் 12,000 வீடுகளைக் கட்டி அங்கு இராண…
-
- 1 reply
- 1.4k views
-
-
புளியம்பொக்கணையில் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு; அந்தப் பிரதேச மக்கள் பெரும் அச்ச நிலையில்! கட்டளைத் தளபதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு திகதி: 26.07.2010, புளியம்பொக்கணை, கலவெட்டித்திடல், நாகேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் உத்தியோ கப்பற்றற்ற ஊரடங் குச் சட்டம் அமுல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அந் தப் பிரதேச மக்கள் இராணுவ அச்சுறுத்தலால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். இதற்கு உடனடித் தீர்வுகாண வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேற் கண்டவாறு கோரிக்கை முன்வைத்துள் ளார். கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இராஜகுருவுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற சந்திப்பிலேயே இக்கோரிக்கையை அவர் முன்வைத்தார். * சாந்தபுரம் ப…
-
- 1 reply
- 742 views
-
-
கொழும்பு மா நகரத்தில் 16 வருடங்களுக்கு பின்னர் ஆடிவேல்விழா ஜனாதிபதி மாளிகை வாயிலினூடாக கொண்டாடப்பட்டுள்ளது. தமிழர்களை பலியெடுத்த மஹிந்தவிற்கு ஆசீர்வாதம் கொடுத்து விட்டு முருகப்பெருமான் பலத்த பாதுகாப்புடன் வீதியுலா வந்தார். சிறிகதிர்காம வேலாயுத சுவாமிகள் ஆலயத்தில் இருந்து யோர்க் வீதியூடாக சென்ற முருகப்பஎருமாள் மஹிந்தவிற்கும் பாரியாருக்கும் ஆசீர்வாதம் வழங்கி விட்டு சுற்றுலா முடித்து வீடு திரும்பினாராம்.
-
- 4 replies
- 1.4k views
-
-
Jul 26, 2010 / பகுதி: செய்தி / யாதவன் சுவரொட்டிகளை ஒட்டிய 6 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் கைது றுகுணு பல்கலைக்கழக மாணவரின் உயிரிழப்புத் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு கோரும் சுவரொட்டிகளை ஒட்டிய பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ன, இவர்கள் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த வேளையில் நுகேகொடைப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கூறினார். ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்ககலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கிருளைப்பனை பொலிஸாரினாலும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட…
-
- 1 reply
- 631 views
-
-
உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்வுகளின் வரிசையில், யூலை 25ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் Queen’s Park முன்றலில் பாரிய ஒன்றுகூடல் ஒன்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா பிரதிநிதிகள், கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன அழைப்பு விடுத்துள்ளன. 27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேய கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல. விவேகத்துடன் விரைந்து செயற…
-
- 6 replies
- 1k views
-
-
Jul 26, 2010 / பகுதி: செய்தி / யாதவன் வெள்ளைக்கொடிச் வழக்கு 29ம் திகதிக்கு ஒத்தி. வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளை கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டார் என சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்தாக ஜெனரல் பொன்சேகா மீது குற்றஞ் சுமத்தப்பட்டு வழக்கு பதிவாகியுள்ளது. இது தொடர்பாக அவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது இவ்வழக்கினை மேல்நீதின்றுக்கு தள்ளிய நீதிபதி அவரை எதிர்வரும் 29 ம் திகதி மேல் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் அதுவரை இராணுவப் பாதுகாப்பில் வைக்குமாறும் கொழும்பு நீதிவான் ரஷ்மி சிங்கப்புள்ளி உத்தரவிட்டுள்ளார். மன்றில் ஜெனரல் சரத் பொன்சேகா சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரருக்க…
-
- 0 replies
- 664 views
-
-
Jul 26, 2010 / பகுதி: செய்தி / யாதவன் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பெண்கள் இலங்கையின் வடக்கே போர் நடைபெற்ற வன்னிப்பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் பல பெண்கள் ஈடுப்பட்டுள்ளனர். யுத்தச் சூழலில் கணவரை இழந்த பெண்கள், தடுப்புக்காவலில் கணவனைப் பிரிந்துள்ள பெண்கள், கணவன் காணாமல் போனதால் தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு எவ்எஸ்டி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். கண்ணிவெடி அகற்றும் பணியில் 45 பெண்கள் உட்பட 600 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக எவ்.எஸ்டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்திலேயே கண்ணிவெடிகள் மிகவும் நெருக்கமாகக் காணப்படுவதாக…
-
- 0 replies
- 432 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளெக் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மாளிகையில் காலை உணவுச் சந்திப்பொன்றில் ரொபர்ட் பிளெக் கலந்துகொண்டதாக ஜனாதிபதி அலுவலக அதிகாரியொருவர் கூறியுள்ளார். இலங்கை அரச தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோரை ரொபர்ட் பிளெக் சந்தித்துப் பேசுவார் என அமெரிக்க இராஜாங்கச் செயலகம் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/index.php?option=com_content&view=article&id=4371:2010-07-21-06-01-23&catid=1:latest-news&Itemid=107
-
- 10 replies
- 848 views
-
-
வடக்கில் நிரந்தர படைத்தளங்களை அமைக்க சீனா அனுசரணை விடுதலைப்புலிகள் மீள எழுச்சி பெறுவதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் முறியடிக்கும் தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நிரந்தர பாதுகாப்புத் தளங்களை அமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று அதிகாரபூர்வமான அரச அதிகாரிகள் கூறியுள்ளனர். இராணுவ உயர்மட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்புப் படைகள் நகர்த்தப்பட்டிருப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக த ஐலண்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக ஏ9 வீதியில் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே சுகந்திபுரத்தில் 68 ஆவது பிரிவுத் தலைமையகத்தை இராணுவம்அமைத…
-
- 1 reply
- 462 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கை அரசாங்கம் வியட்நாம் புலனாய்வுத் துறையிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளது. பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன தலைமையிலான குழு ஒன்றுக்கும், வியட்நாம் வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வியட்நாம் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், இலங்கையின் வடக்கு பகுதியில், கண்ணி வெடிகயை அகற்றும் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்பட்டமைக்கும் வியட்நாம் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை வியட்நாமின் இலங்கைக்கான தூதரகம் மீண்டும் எதிர்வரும் 2011ம் ஆண்டின் ஆரம்பத்தில் கொழு…
-
- 0 replies
- 662 views
-
-
மட்டக்களப்பில் கன்னபுரம் கிராமவாசிகளை அக்கிராமதில் முருகன் கோவில் ஒன்று அமைக்கப் போவதாக கிரமடத்தில் இருந்தவர்களை இலங்கை அரசு வெலியேற்றியுள்ளது. விசேட இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கிராமவாசிகளை ஏமாற்றி வெளியெற்றிய பின்பு, அதே இடத்தில் இப்போது பெளத்த கோவில் ஒன்றை அமைப்பதாகத் தெரிய வருகிறது. முருகன் கோவிலை எதிர்பார்த்திருந்த கிராம வாசிகளைக் கொண்டே பெளத்த விகாரை நிறுவப்படும் இடத்தைச் சுத்திகரித்துள்ளனர் இராணுவத்தினர். கல்லோயா குடியேற்றத்திட்ட காலத்திலிருந்து இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகமாகப் பலியாகிவருவது கிழக்கு மாகாண மக்களே. கருணா மற்றும் பிள்ளையான் தலைமையிலான அரச துணைக் குழுத் தலைவர்களின் துணையோடு கிழக்கு மாகாணம் சூறையாடப்ப்ப…
-
- 0 replies
- 605 views
-
-
ஆளும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு மாகாணத்தில் காணிகள் படையினரால் அபகரிக்கப்படுகின்றமையைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கின்றார். அதே போல் கிழக்கு மாகாணத்துக்கு முதலமைச்சராக முடிசூடப்பட்டிருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தனால் பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்பாக அரசின் ஊதுகுழலுக்கு ஏற்ப ஆடத்தான் முடிகிறதே தவிர கிழக்கு மாகாண தமிழ் மக்களுடைய உரிமைகளைப் பாதுகாத்திட முடியாமல் இருக்கின்றமையும் உறுதியாகிறதுஎன்று கிழக்கு மாகாண சபையின் ஈ.பி.ஆர்.எல்.எப் -பத்மநாபா கட்சி உறுப்பினரான இரா.துரைரட்ணம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குரிய 1400 …
-
- 0 replies
- 880 views
-
-
07 வயதுச் சிறுமி ஒருத்தியை 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி உள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பிரதேசத்தில் இக்பாலியல் வல்லுறவு இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இம்முதியவரை கைது செய்துள்ளார்கள். இதே நேரம் சப்ரகமூவா மாகாணத்தின் ரூபன்வெல்ல பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமி ஒருத்தியை 22 வயது வாலிபன் ஒருவர் கற்பழித்துள்ளார். இவரையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=7074:-60-----07---&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676
-
- 0 replies
- 1.4k views
-
-
ஜி.எல்.பீரிஸ் அவர்களுக்கு வெளி நாட்டமைச்சு பதவிகளை மஹிந்த கொடுத்தாலும் அவரை 24 மணி நேரமும் உரிய கண்காணிப்புக்களை பாதுகாப்பு எனும் பேரிலும் மற்றும் பல துணை சேவைகளை வழங்குதல் எனும் பேரிலும் கண்காணிக்கபட்டுக்கொண்டிருக்கின்றாராம். கடந்த வாரம் இடம்பெற்ற ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியுடனான கூட்டத்தில் ஜி.எல் பீரிஸ் இற்கு தெரியாமலே மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். மிக அருகாக இருந்து என்ன கதைக்கிறார்கள் என கேட்டுக்கொண்டிருந்தனராம். இதுபற்றி ஐக்கிய தேசியக்கட்சி பீரிஸ் அவர்களை கேட்டபோது பீரிஸ் தனக்கும் இப்போதான் தெரியும் என்று கூறியுள்ளார். இதுமட்டுமன்றி பீரிஸ் அவர்களின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்பதாக கூறப்படுகின்றது. பீரிஸ் அவர்களின்…
-
- 0 replies
- 823 views
-
-
இவ்வருடம் முதல் 4 மாதகாலப் பகுதியில் 430 சிறார்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவி;க்கப்பட்டுள்ளது. இவர்களில் 270 பேர் சிறுமிகள் எனவும் 150 பேர் சிறுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 225 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு ஓடிப்போவது மற்றும் கடத்தல்கள் ஆகியன இக்காணாமல்போதல் விவகாரத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் 12-18 வயதுக்கிடைப்பட்டவர்களாவர். சுமார் 117 பேர் 16 வயதானவர்களாவர். அநுராதபுரம் பகுதியிலிருந்தே பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளனர். அப்பகுதியில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 50 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட சிறார்களில் பலர…
-
- 0 replies
- 522 views
-
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை மேலிடத்தில் இருந்துவந்த கட்டளைகளுக்கு இணங்க சுட்டுக்கொண்டதாக பொன்சேகா கூறிய கருத்துக்கள் தொடர்பாக நிதிமன்றம் இன்று விசாரிக்கின்றது. அரசினால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இந்த விசாரணையினை இன்று செய்கின்றது. இதற்காக பொன்சேகாவை நீதிமன்றில் முன் நிறுத்துமாறு கூறப்பட்டுள்ளது. இன்று பொன்சேகா தனது கருத்திற்கான வலுவான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் இல்லாவிடில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும். Eelanatham
-
- 1 reply
- 941 views
-
-
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆரியகுளத்தடியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 4ஆம் வருட மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 25) சுண்டுக்குளியைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனான கலிஸ்ரஸ் கஜேந்திரன் (வயது 25) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்கள் ஆவர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதியுள்ளவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இம்மாணவர்கள் இருவரின் சடலங்களும் மரண விசாரணைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் …
-
- 0 replies
- 717 views
-
-
வெள்ளைவானில் வந்தோரால் கடத்தப்பட்ட வவுனியா வாடிவீட்டு உரிமையாளர் 6 லட்சம் ரூபா கப்பம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் கடந்த 23ஆம் திகதி வெள் ளிக்கிழமை இரவு வவுனியா தோணிக்கல் வீதிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வவுனியா வாடிவீட்டு உரிமையாளரான தோத்ணிக்கல், சிவன் கோயிலடியைச் சேர்ந்த மாரிமுத்து கதிர்காமராசா (வயது48) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழமைபோல தனது கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது வீட்டுக்குச் சமீபமாக வைத்து வெள்ளைவானில் வந்தோரால் வழிமறிக்கப்பட்டுக் கடத்தப்பட்டார். கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் இவரது கைத்தொலைபேசி மூலம் கடத்தல்காரர்…
-
- 0 replies
- 604 views
-
-
இனத்துரோகி ”கருணா”ஸின் குற்றச்சாட்டு - நாம் தமிழர் சட்டப்படி சந்திக்கும். தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆகவே, இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது. கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும். சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக்கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னி…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆறு நோயாளர் காவுவண்டிகளில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட படுகாயமடைந்த இராணுவத்தினர்!! மணலாறு காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த படையினரை ஏற்றிய ஆறு நோயாளர் காவு வண்டிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு சென்றுள்ளன. வன்னியில் இருந்து கிடைத்துள்ள நம்பகரமான தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- நேற்று முன்னாள் முற்பகல் சில மணி நேரங்களுக்குள் குறித்த ஆறு நோயாளர் காவுவண்டிகள் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அதில் இருந்து பல இராணுவத்தினர் காயம் அடைந்த நிலையில் சிகிச்கைக்காக இறக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த இராணுவத்தினர் எந்த வகையில் காயம் அடைந்தனர…
-
- 2 replies
- 2.3k views
-
-
நடுவு நிலையான தூதுவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் - இந்தியாவிடம் கூட்டமைப்பு வேண்டுகோள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-24 06:34:04| யாழ்ப்பாணம்] இலங்கையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகளை நேரில் பார்வையிடுகின்றமைக்காக இந்தியா வில் இருந்து அனுப்பப்படுகின்ற விசேட தூதுவர் எந்தப்பக்கமும் சாராதவராக-நடுவுநிலையானவராக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு இந்தியப் பிரத மர் மன்மோகன் சிங் இலங்கையில் தமிழர் களின் மறுவாழ்வு பணிகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை நேரில் வந்து பார்வையிட விசேட தூதுவர் ஒருவரை நியமிக்கவுள்ளார். இந் நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட் ட…
-
- 4 replies
- 718 views
-
-
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்-4 பேர் காயம் வெள்ளிக்கிழமை, ஜூலை 23, 2010, 8:58[iST] ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசி அவர்கள் நடத்திய தாக்குதலில் நான்கு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். ஜூலை 17ம் தேதி ஒரு படகு காணாமல் போனது. இதையடுத்து 20 பேர் கொண்ட மீனவர்கள் குழு அந்தப் படகை தேடி கடலுக்குள் சென்றது. தனுஷ்கோடி அருகே காணாமல் போன படகு மிதப்பதைப் பார்த்து அதை தங்களது படகுடன் இணைத்து கரைக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு இலங்கை மீனவர்கள் வந்துள்ளனர். தமிழக மீனவர்கள் படகை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசித…
-
- 7 replies
- 783 views
-