ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது... ஓராண்டு சிறை! சென்னை, ஜூலை. 17, 2010: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றத்துக்காக, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதனால், அவர் இன்னும் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாது. இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் நாம் தமிழர் அமைப்பு சார்பி்ல், சென்னையில் கடந்த 10 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய சீமான், இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு …
-
- 22 replies
- 3.4k views
-
-
பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் புதிய புத்தர் சிலை திகதி: 17.07.2010 // தமிழீழம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தற்போது புதிய புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. மடு தேவாலயத்திலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவிலேயே இந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீள்குடியேற்றம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது sankathi
-
- 1 reply
- 486 views
-
-
ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். அவரது வீரவணக்க நாள் இன்று ( வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983) லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர். சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் ம…
-
- 0 replies
- 644 views
-
-
வெலிக்கந்தையில் படையினர் ஊசி மருந்து செலுத்தியதில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு! பெருமளவான போராளிகள் தாக்கத்திற்கு உட்பட்டனர்! வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு படையினர் ஒரு வகை ஊசி மருந்தினை தடுப்பு மருந்து என்ற பெயரில் செலுத்தியமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெருமளவானோர் காய்ச்சல் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெலிக்கந்தை பகுதியில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் பலநூற்றுக் கணக்கானவர்களை உள்ளடக்கிய தடுப்பு முகாம் ஒன்று உள்ளது. அந்த முகாமில் அனைத்துப் போராளிகளுக்கும் நோய்த் தடுப்பு மருந்து செலுத்துவதற்காக அனைவரையும் அணிதிரளுமாறு படையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.…
-
- 1 reply
- 1.3k views
-
-
நல்லூர் கந்தனை வழிபட பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு பிற்போக்குவாதம். நல்லூர் கந்தன் ஆலைய வருடாந்த உற்சவம் விரைவில் வர இருக்கிறது. இவ்விழா தொடர்பான சில முக்கிய முடிவுகள் யாழ் மேயர் யோ.பற்குணராசா தலையில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் தென் பகுதியிலிருந்து வரும் பக்தர்களுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் இன்னும் பல விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமான விஷயமாக தமிழ் பெண்களின் மரபான உடையென்று ஆண்களால் தீர்மானிக்கப்பட்ட சேலை, தாவணி,நீளப்பாவாடை சட்டை மட்டுமே அணிந்து நல்லூர் கந்தன் உற்சவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று இதை மீறி ஜீன்ஸ், சுடிதார், அரைக்கால் சட்டை அணிந்து வந்து தமிழ் பெண்களின் பாரம்பரீயத்தையே இழிவு செய்பவர்களை அனுமதிக்க முடியாது எ…
-
- 26 replies
- 3.4k views
-
-
ஈழ மாதாவின் இதயத்துடிப்பு நின்றுவிடவில்லை இன்றைக்கும் சாட்சியாக இன்னும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. தமிழீழ உறவுகளே!!!!........கலங்காதீர் நாங்கள் நெருப்புக்குள் குளித்தவர்கள். இருப்பிழந்து போகமாட்டோமென்று ...............ஜனனங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.காடு எமது கெரில்லா போரின் முக்கிய பகுதி எமது போராட்டம் அதிக நெருக்கடிக்குள்ளான போதெல்லாம் அதனை அழிய விடாது வளர்த்த பெருமை காடுகளுக்கேயுண்டு. இவ்வாறு தான் நான்காம் கட்ட ஈழப்போரின் போதும் என்றுமில்லாதவாறு அம்பாறை மாவட்ட வனம் ஆற்றிய பங்கு அளப்பரியது. 2005ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து வன்னியிலிருந்து குறிப்பிட்ட தொகை போராளிகள் அம்பாறை மாவட்டத்திற்க்கு அனுப்பப்பட்டதுடன் வட,தென் தமிழீழ போராளிகள் இணைந்து செய்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சனிக்கிழமை, 17, ஜூலை 2010 (17:4 IST) இலங்கையில் உண்மை நிலையை அறிய சிறப்பு தூதரை அனுப்ப வேண்டும்: பிரதமருக்கு கலைஞர் கடிதம் பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதிக்கு நேற்று கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், ‘’இலங்கையில் தமிழ் சிறுபான்மை மக்கள் நிலைகுறித்து தாங்கள் எழுதிய கடிதத்திற்கு பெரிதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த மாதத்தில் இலங்கை பிரதமர் வருகை தந்தபோது அவருடன் விவாதங்களோடு, அண்மையில் வருகைபுரிந்த இலங்கை நாடாளுமன்றத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினரின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளேன். இலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் அங்கு வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எனது அரசு உறுதியாக மேற்…
-
- 3 replies
- 682 views
-
-
Jul 17, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை சிறிலங்கா மீதான தீர்ப்பு பிறருக்கு எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் -பாக்கிஸ்தான் செய்திப் பத்திரிக்கை “தமது மண்ணில் போரிடும் பிற நாடுகளுக்கு சிறிலங்கா மீதான தீர்ப்பு எச்சரிக்கையாக வரவேண்டும்” என்று பாக்கிஸ்தானின் செல்வாக்கு மிகுந்த செய்திப் பத்திரிக்கை டோன் தனது ஆசிரியர் கட்டுரையில் தெரிவித்துள்ளது. ஐநாவின் போர் குற்றவியல் விசாரணைக் குழு நியமனம் அதற்கு சிறிலங்கா அரசின் எதிர்ப்பு ஆகியவை பற்றி விமர்சனம் செய்யும் ஆசிரியர் கட்டுரையில் மேற்கூறிய குறிப்பு காணப்படுகிறது. “இந்தப் போர் இராணுவத்தால் நடத்தப்பட்டாலும் அதற்கு ஜனாதிபதியின் முழு ஆதரவும் இருந்தது தமிழ் ஈழம் என்பது தீர்க்கப்பட முடியாத பிரச்சiனை அதற்க அரசியல் தீ…
-
- 0 replies
- 599 views
-
-
கலைஞர் தமிழுக்கு செய்ததாக சொல்வது...... தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தியாச்சு..... எல்லாருக்கும் தமிழில் பேசியதற்கு விருது கொடுத்தாச்சு... தமிழில் படித்தவருக்கு அரசு வேலை கொடுத்தாச்சு.... தமிழில் பொறியியல், மருத்துவ படிப்பு கொண்டுவந்தாச்சு... விளம்பர பலகையெல்லாம் தமிழில் மாற்றியாச்சு.... தமிழில் படங்களுக்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு கொடுத்தாச்சு.... கலைஞர் தமிழருக்கு செய்தது........ தமிழை வைத்து பல ஆயிரம் கோடிகள் சம்பாதிச்சாச்சு..... ஈழத்தில் தமிழ்மக்களை லட்ச கணக்கில் கொன்றாச்சு முழுவதுமாக கொல்வதற்கு உண்ணாவிரதமும் இருந்தாச்சு.... தமிழக மீனவர்களை சுட்டு கொல்ல மூழு உரிமையும் ராஜபக்சவுக்கு கொடுத்தாச்சு...... உலகத்தமிழர்களை அழிக்க சோனியாவுக்…
-
- 0 replies
- 708 views
-
-
கொழும்பைச் சேர்ந்த நீதவான் ஒருவர் இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நீதவானின் வீட்டில் பணிப் பெண்ணாக கடயைமாற்றிய யுவதி மீது இவ்வாறு பாலியல் ரீதியான மற்றும் வேறும் விதமான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சித்திரவதைகள் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், நீதவானின் அழுத்தம் காரணமாக இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த யுவதியின் சகோதரர் நுவரெலியா காவல் நிலையத்திலும் இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த யுவதி உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்…
-
- 2 replies
- 983 views
-
-
இலங்கைக்காக ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் புஹ்னே கடந்தவாரம் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் கடுமையான நிப்பந்தனைகளுடன் கூடிய செய்தியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் குடும்பத்தினருக்கான பாதுகாப்பு, மஹிந்த வாக்குறுதியளித்ததன் படி மீழ்குடியமர்வு நடவடிக்கைகள் ஆகியன இந்த விசேட செய்தியில் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது. ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனுக்கு இலங்கை நிலைவரம் பற்றியும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலர்களின் நிலைமை பற்றியும் நீல் புஹ்னே எடுத்துக்கூறியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஐ.நா. சபையுடன் ஏற்படுத்த…
-
- 1 reply
- 618 views
-
-
அன்பு…. அக்கா அசினிற்கு : பா.மாணிக்கம் அன்புள்ள அக்கா அசினிற்கு, பாக்கெட் பரிஸ்சிலிருந்து பணம் போட்டு உங்கள் படங்களைப் பார்த்து உங்களை வளர்த்து விட்ட பாமரத் தமிழ் ரசிகன் எழுதிக் கொள்ளும் சிறு கடிதம் இது. வசதிகளும் வாய்ப்புகளும் பெருகி இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக நீங்களும் வளர்ந்து விட்டது குறித்து எனக்கு எந்த சந்தோசமும் இல்லை அதே நேரம் கவலைகளும் இருந்ததில்லை எல்லா பாமரர்களைப் போல அதில் அசினோ, த்ரிஷாவோ நன்றாக நடித்தால் ரசித்து விட்டுக் கலைந்து செல்கிற சாராசரி நான். எந்த வம்பு தும்புகளுக்கும் செல்லாமல் நானுண்டு என் வேலையுண்டு என்று கழிகிறது என் வாழ்க்கை. இந்த நேரத்தில்தான் வித்தியாசமாக உங்களின் இலங்கைப் பயணம் தொடர்பான பேட்டி …
-
- 7 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு? மன்மோகன் சிங் கலைஞரை கேட்டுள்ளார்!!!!! முக்கிய-செய்திஉப-கண்டம்இணைய-பதிப்புமலேசிய நிருபர் வெள்ளிக்கிழமை, யூலை 16, 2010 இலங்கையில் உள்ள தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கருணா நிதியினை ஆலோசனை வழங்குமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். கருணா நிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு தேவை. அவர்கள் நிம்மதியாகவும் கெளரவமாகவும் வாழ ஓர் தீர்வு கிடைக்க நாம் விரும்புகின்றோம் இது தொடர்பாக உங்கள் ஆலோசனையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு கூறியுள்ளார் மன்மோகன் சிங். கடந்த மூன்றாம் திகதி கலைஞருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. . Eelana…
-
- 11 replies
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல, இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் பிரச்னை என்று இந்தியா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை என்பது இந்திய மீனவர்களைப் பாதிக்கக்கூடியது என்ற வகையில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு பிரச்னை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இலங்கையில் முல்லைத் தீவு பகுதிகளில் மீன்பிடிக்க சீனர்களுக்கு அனுமதி அளிக்க இலங்கை தயாராகி விட்டதாகத் தெரிகிறது. இலங்கையின் வளர்ச்சிப் பணிகளில் துணைபுரிகிறோம் என்கிற சாக்கில், பெருமளவில் சீனா கால் பதித்திருப…
-
- 1 reply
- 997 views
-
-
Jul 17, 2010 / பகுதி: செய்தி / யாதவன் மக்கள் அதிர்ச்சி! சிங்கள மருத்துவர் பிணையில் விடுவிப்பு சரவணை மருத்துவத்தாதி தர்ஷிகா கொலை வழக்கின் சந்தேகதாரியான சிங்கள மருத்துவரைப் பிணையில் விடுவிக்குமாறு கடந்த வியாழக்கிழமை ஊர்காவற்றுறை குற்றவியல் நீதிமன்றில் போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தும், அதற்கு நீதவான் மறுப்புத் தெரிவித்திருந்தார். ஆனால் காவல்துறை மீண்டும் ஒரு மனுவை நேற்று யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்து குறித்த மருத்துவரை பிணையில் விடுவிக்கும்படி கேட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஒரு லட்சம் ரூபா பணம் மற்றும் உத்தரவாதப் பிணையில் விடுவித்துள்ளார். இச்செய்தி குடாநாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வருகி…
-
- 1 reply
- 765 views
-
-
நிபுணர்கள் குழுவால் கம்போடியாவுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படலாம் பீதியில் -மஹிந்த இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற முறைகள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு, இலங்கைப் படையினரின் யுத்த குற்ற விசாரணைக் குழுவாக மாறும் அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த நிபுணர் குழுவுக்கு எதிராக இலங்கையில் எதிர்ப்புகள் வெளியிட்ட வேளையில் இந்தக்குழு, தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாக பான் கீ மூன் தெரிவித்திருந்தார். எனினும் தற்போது படையினர் மீது யுத்தக்குற்றச்சாட்டை சுமத்தும் முதல் கட்ட நடவடிக்கையாக இந்தக்குழுவுக்கு அலுவலர்களாக எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னர் ச…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட 27 அகவையுடைய குடும்பநலத்தாதி தர்சிகா சரவணனின் படுகொலை தொடர்பாக வேலணை மருத்துவமனையில் பணியாற்றிய சிங்கள மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவான பரப்புரையில் கொழும்பின் சிங்கள ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பிட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் நெஞ்சுவலி எனக் காரணம்கூறி யாழ் மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவர் தாக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட காயத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பின் ஊடகங்கள் தெரிவிப்பதுடன், மருத்துவரை நியாயப்படுத்தும் வகையில் தகவல்களை திரித்து செய்தி வெளியிட்டு வருகின்றன. குற்றம…
-
- 1 reply
- 711 views
-
-
வடக்கில் கண்ணி வெடிகளையும் அகற்றும் பொறுப்பும் பசில் ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலகண்ணி வெடிகளை அகற்றுவதற்காக சிறீலங்கா அரசு தேசிய தொடர்பு மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதனை அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாலர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாகாணங்களில் இதுவரை 2 லட்சத்து 66 ஆயிரம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இதற்காக 860 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் சில தகவல்களின் படி, நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வே…
-
- 1 reply
- 412 views
-
-
மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம்-80 மீனவர்கள் படுகாயம்! வெள்ளிக்கிழமை, ஜூலை 16, 2010, 11:14[iST] ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலமே இல்லைஎன்றாகி விட்டது. மீண்டும் மீண்டும் அவர்களை தாக்கி சீரழித்துக் கொண்டிருக்கிறது இலங்கை கடற்படை. நேற்றும் 80 மீனவர்களை தாக்கி காயப்படுத்தி விரட்டியிருக்கிறது இலங்கை கடற்படை. இலங்கைக் கடற்படையினர் கையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம். குறிப்பாக ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களின் நிலையும், வாழ்க்கையும் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. கடலுக்குள்ளேயே போக முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். இவர்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு கவலைய…
-
- 5 replies
- 1k views
-
-
சொந்த மண்ணில் போரில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் இலங்கை தொடர்பான தீர்ப்பு எச்சரிக்கையாக வேண்டும் ‐ பாக்கிஸ்த்தான் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளின் தீர்ப்பானது சொந்த நாட்டில் யுத்தத்தில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும் என பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிகையான டோண் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியான, இலங்கையின் "போர்க்குற்றங்கள்" எனும் தலைப்பில் வெளியான இத்தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு விசுவாசமான அமைச்சர் ஒருவர் தலைமையிலான ஆர்ப…
-
- 1 reply
- 850 views
-
-
பல முதுபெரும் பல தலைவர்கள் தமிழருக்கு சம ஆட்சி அரசு தேவையில்லை சிங்களவரும் தமிழரும் சகோதரர்களாக எப்பொழுதும் இருக்கலாம் என்று தமிழின விரோத அரசியலை நடத்தினார்கள். தந்தை செல்வாவின் பல அறவழிப் போராட்டங்களை ஒடுக்க பல தமிழ் தலைவர்களை இலங்கை அன்று உருவாக்கியது. இராணுவத் தீர்வே தமிழீழத்தை பெற்றுத்தரும் என்ற கொள்கையுடன் ஆயுதம் ஏந்திய போராளிகளுக்குள் பல முரண்பாடுகள். ஒவ்வொரு இயங்கங்களும் நான் பெரிதா நீ பெரிதா என்ற அடிப்படையில் எதிரியின் சூழ்ச்சியில் வீழ்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தினார்கள். பின்னாளில் பல எட்டப்பர்கள் உருவானார்கள். தமிழீழ விடுதலையைப் பெற்றெடுக்கக்கூடிய ஒரே விடுதலை அமைப்பாக விடுதலைப் புலிகள் வளர்ந்ததும் விடுதலைப் புலிகளுக்கு எதிர…
-
- 1 reply
- 1.3k views
-
-
மாலைதீவு எதிரணி தலைவருக்கும் ஆழும் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட முறுகலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை இழந்த மாலைதீவு அதிபர் பெரும் சங்கடத்தில் இருந்தார். இதனை தீர்க்க மஹிந்த கடந்தவாரம் மாலைதீவு சென்று திரும்பினார். கூடவே மஹிந்த மாலைதீவு பிரச்சினை தம்மால் சுமுகமாக தீர்க்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் சில தினங்களில் எதிரணியினர் செய்த ஆர்ப்பாட்டத்தினை காரணம் காட்டி எதிரணியினரின் தலைவரை அந்த நாட்டின் படைகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆகவே மஹிந்த இராஜபக்ஷ தான் இவ்வாறு தனது பாணியில் மாலைதீவு அதிபருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் பான்கிமூன் மாலைதீவு அரசியல் பிரச்சினையில் தலையிட முடிவெடுத்துள்ளார். இதற்கு இந்தியா முழு மூச்சா…
-
- 0 replies
- 992 views
-
-
ரெடி என்ற இந்திப் படத்தில் நடிக்கத்தான் அசின் இலங்கை போனார். என் வேலை நடிப்பது. ‘இடத்தை முடிவு செய்வது தயாரிப்பாளர்-இயக்குநர். நான் என்ன செய்யட்டும்’ என்று அப்பாவியாய் கொழும்பு பத்திரிகையாளர்களிடம் கேட்டார். அடுத்த நாளே, “இலங்கை அழகான, அருமையான நாடு. இங்கிருந்து போகவே மனசில்லை. சென்னைக்குப் போனால் என்ன செய்வார்களோ என்று பயமாக உள்ளது. ஆனால் காவல் காதல் படத்துக்காக போக வேண்டியுள்ளதே என்று பசப்பின. அதோடு விட்டாரா. அடுத்த நாள் அவர் எங்கு சென்றார் தெரியுமா? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மறுநாள் காலை வவுனியா பொது வைத்தியசாலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஆளும் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண…
-
- 22 replies
- 3.2k views
-
-
இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது ‐ இன்னர் சிற்றி பிரஸ்‐ 16 July 10 12:26 pm (BST) இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது என்று ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகள் வியாழனன்று தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றுமு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் ஜசிக்கா நியூவேர்த் நியமிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். ஜசிக்கா நியூவேர்த் ஐநாவின் மனித உரிமைப் பணியகத்தின் நீண்டநாள் உறுப்பினர் என்றும்…
-
- 3 replies
- 1.2k views
-
-
கொழும்பு, ஜூலை 16 நாட்டில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகள் உள்ளன என்று காணி உறுதிப்பத்திரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அக்காணிகள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படமாட்டா. அவர்களுக்கு வேறு இடங்களில் காணிகளைத்தான் வழங்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயங்களும் இராணுவ முகாம்களும் நீக்கப்படாமல் அவ்வாறே இருக்கவேண்டும் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்றன என்று அடையாளம் காணப்படும் இடங்களில் மேலும் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்து…
-
- 6 replies
- 753 views
-