ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143235 topics in this forum
-
மஹிந்த அரசு வெளியில் சிங்கள மக்களிடம் தம்மை ஓர் அனைத்துலகத்திற்கு அடிபணியாத தலைமைத்துவம் என்று காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே பீதியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சர்வதேச சக்திகளை உள்வாங்கி தமிழர்களது போராட்டத்தினை ஒடுக்கியது போன்று தற்போது சர்வதேச நெருக்கடிகளையும் எதிர்கொள்ளலாம் என்று மஹிந்த அரசு நினைத்தது. உள்ளூரில் விடுதலைப்புலிகளை வென்று சிங்கள இனத்தை காப்பாற்றிய மன்னன் போன்றும் வெளியுலகிற்கு பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதியினை நிலை நாட்டியவர் போன்றும் காண்பிக்கும் தோற்றம் நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்பதனை மஹிந்த அரசு கட்டம் கட்டமாக உணரும் காலம் நெருங்குகின்றது. சர்வதேச போர்க்குற…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிங்கள அமைச்சர் விமல் விரவன்ச அங்குள்ள ஐ.நா அலுவலகம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதன் ஊடக பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார் என்பது தெரிந்ததே ஆனால் இது தொடர்பிலான மன்னிப்பு கோரல் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி கொழும்பில் பல மட்டங்களில் எழுந்துள்ளது. அரசாங்கம் விமல் வீரவன்சவின் கருத்தினை ஓர் தனிப்பட்ட கருத்தாக இருப்பதாக பூசி மெழுக பார்க்கின்றது. ஐ. நா வில் உறுப்புரிமை வகிக்கும் நாடொன்று ஐ. நாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாணியில் ஈடுபடுவது அந்த நாட்டில் ஐக்கிய நாடுகளில் பணிகளினை பாதிக்கும் என்பதும் கூடவே உறுப்புரிமை தொடர்பிலும் மீழாய்விற்கு உட்படுத்தப்பலாம் என்பதும் குறிப்பிடத்தக்கத…
-
- 1 reply
- 949 views
-
-
மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களப்படையினர் இடித்து தரைமட்டமாக்கி அழித்துவருவது எல்லோருக்கும் தெரிந்ததே ஆனால் அந்த இடிக்கப்பட்ட மாவீரர் இல்லங்களில் படையினர் தற்போது படை முகாம்களை நிறுவி வருகின்றனர். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், மற்றும் வடமராட்சி எல்லாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியன இவ்வாறு முட்கம்பிகளால் அடைக்கப்பட்டு சிங்கள படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. Eelanatham
-
- 3 replies
- 959 views
-
-
லண்டனில் நடைபெற்ற மக்கள் பொதுக்கூட்டம். - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் சந்திப்பு. குசனையலஇ 02 துரடல 2010 13:05 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று லண்டனில் நடைபெற்றது. நேற்று (01-07-2010) லண்டன் ஈலிங்க் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினரான திருமதி.பி.லதிதசொரூபினி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மாலை 7:10 ற்கு ஆரம்பமான இந்த நிகழ்வை நா.க.த.அ மக்கள் பிரதிநிதியான லலிதசொரூபினி ஆரம்பித்துவைத்தார். அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த கூட்டம் சுமார் மூன்று மணித்தியாலங்களாக தொடர்ந்து இடம்பெற்றது. இந்த மக்கள் பொதுக் கூட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்க…
-
- 11 replies
- 1.5k views
-
-
ul 4, 2010 / பகுதி: செய்தி / செம்பிறை மட்டக்குளி பிரதேசத்தில் காவற்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் மட்டக்குளி பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஒன்று தற்போது நிலவிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவற்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள ஒருவரை கைது செய்து தாக்கியதில் அவர் மரணமடைந்ததைத் தொடர்ந்தே, பொது மக்கள் காவற்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனது. இதனை கலைக்க முயன்ற காவற்துறையினரை பொது மக்கள் தாக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அங்கு 10க்கும் மேற…
-
- 0 replies
- 847 views
-
-
தெற்கில் சென்று வெளிநாடுகள் பற்றிச் சிங்களத்தில் தூற்றிப் பேசிவிட்ட பின்னர் அந்நாடுகளிடம் சென்று ஆங்கிலத்தில் கும்பிடும் செயற்பாடானது இராஜதந்திர நடவடிக்கைகளில் அரசாங்கம் போடும் இரட்டை வேடத்தையே எடுத்துக் காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி.நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பேசும்போதே ரவூப் ஹக்கீம் இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; சர்வதேச நாணய நிதியம் தயாரித்துக் கொடுத்த அறிக்கையையே பதில் நிதியமைச்சர் சரத் அமுனுகம வரவுசெலவுத் திட்டமாகக் கொண்டு வாசித்தõர். அவர் வாசித்தது பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய அறிக்கையே தவிர, வரவு…
-
- 0 replies
- 1.2k views
-
-
குற்றம் புரிந்தவர்கள், தீர்ப்பு வழங்கும் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்கிற உண்மை அரசுகளுக்கு பொருந்தாது என்பது போலிருக்கிறது. இன்றைய புவிசார் அரசியலின் போக்கு ""யாரோ விதிக்கும் நிபந்தனைக்கோடுகளின் எல்லைக்குள் நின்றபடி அங்கும் இங்கும் அங்கலாய்த்து ஓடுகிறார்கள்'' என்கிற சாம் பிரதீபனின் நிஜக் கவிவரிகள், சமகால யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. அரசால் அமைக்கப்பட்டுள்ள பட்டறிவிலிருந்து கற்ற நிபுணர் குழுவினை வரவேற்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டினையே இங்கு குறிப்பிடுகின்றேன். போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் முதன்மைத் தூதுவர் ஸ்டீபன் ரப் (குகூஉகஏஉN கீஅகக) அவர்கள் அரசின் நிபுணர் குழு குறித்த தனது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி அமெரிக்காவின் இரட்டைப் போக்கினை அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் ஆர்வலர் 17 பேருக்கு இந்தியாவில் பட்டங்கள் வழங்கிக் கௌரவிப்பு! இலங்கையின் மனித உரிமைகள் ஆர்வலர்கள் 17 பேருக்கு இந்திய பல்கலைக்கழகங்களால் கௌரவ பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. டில்லி இந்திரா காந்தி திறந்த பல்கலைக் கழகம், பங்களூர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய புனர்வாழ்வு சபை இப்பட்டங்களை வழங்கிக் கௌரவித்தது. எட்டுப் பேருக்குப் பேராசிரியர் விருதும்,ஐந்து பேருக்கு கலாநிதி விருதும்,நான்கு பேருக்கு விஸ்ப பந்து விருதும் அவர்களின் சமூக, சமாதான சேவைகளைப் பாராட்டி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரிலுள்ள ராஜபுதன செரட்டன் ஹொட்டலில் இவ் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வுக…
-
- 0 replies
- 931 views
-
-
சென்று வந்தவர்களுக்கும்... செல்ல இருப்பவர்களுக்கும்...! - பார்த்தசாரதி திகதி: 02.07.2010 ஃஃ தமிழீழம் அன்புடன், புலத்தின் புத்திசீவிகள் என்ற நினைப்பில் கொழும்புக்கு பின் கதவு வழியாக போய் வருபவர்களுக்கு.! (இனிமேல் செல்ல இருப்பவர்களுக்கும்தான்)!! நாங்களெல்லாம் நலம்விசாரிக்கும் இடத்தில் இப்போது நீங்கள் எல்லோரும் இல்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் எழுதவேண்டிய தேவை. அதனால் இதை எழுதுகிறோம். ஏதோ உங்களுக்கு லங்காமாதாவின் அபிவிருத்திபற்றி சிந்தித்து மிச்சமாக இருக்கும் நேரத்தில்தன்னும் இதை படியுங்கள். சரி! போனவருடத்தின் அவலப்பொழுதுகளில் உங்களில் சிலர் எங்களுடன் தெருக்களில் நின்றீர்கள். தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் உங்களில் சிலர்தோன்றி…
-
- 26 replies
- 3.2k views
-
-
4 மாதங்களுக்குப் பிறகு? ஐ.நா. வலை... ராஜபக்ஷே கவலை இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளை மறைக்க, ராஜபக்ஷே பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் நிலையில்... மனசாட்சியுள்ள உலக நாடுகள் அவரை அவ்வளவு எளிதில் விடாதுபோல் இருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் ராஜபக்ஷே, தற்போது ஐ.நா. சபை அமைத்திருக்கும் மூவர் விசாரணை கமிஷனால் உச்சபட்ச நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கூடவே ஜப்பானும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு எதிராகக் குரல் உயர்த்தி இருப்பதும் ராஜபக்ஷேவின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது! ராஜபக்ஷேவுக்கு எதிராக முதல் குரலைப் பதிவு செய்தவர் சிங்கப்பூரைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பி லீ குவான் யூ, ''ஈழத் தமிழர்கள் மீதான கொடும…
-
- 6 replies
- 1.8k views
-
-
புனர்வாழ்வு என்ற பெயரில் முன்னாள் போராளிகள் பலர் படையினரால் காடுகளை அழிக்கும் வேலைகளில் ஈடுபடுத்தப்படு கின்றனர். இந்நாட்டில் மாறிமாறி வந்த அரசு கள் தமிழினத்தின் மீது ஏற்படுத்திய துவே சம்தான் இந்த நாட்டில் போராட்டம் ஒன்றுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது. எனவே அதற்கு இன்றைய அரசும் பொறுப் பேற்று அவர் கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டா வது வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவ ர் மேலும் தெரிவித்தவை வருமாறு: யுத்தம் முடிந்து சுமார் 13 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை சமர்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
11வயதில் புலியாகியவன் 17வயதில் தன்னிரு கண்களையும் ஒரு கையையும் இழந்து போனான். இன்று 31 வயது இவனுக்கு. வெற்றிகள் தந்து எங்களை வீரத்தின் அடையாளங்களாக்கிய இவர்கள் இன்று ஒரு நேர உணவுக்கே அல்லாடுகி்றார்கள். இரு கண்களையும் ஒரு கையையும் இழந்து இன்று உதவிகள் எதுவுமற்ற நிலையிலும் தன்னம்பிக்கையுடன் விவாசயம் செய்ய ஒரு தண்ணீர் இயந்திரத்தைக் கேட்கிறான். இவனது குரலைக் கேளுங்கள்.....யாராவது கருணை மனம் படைத்தோர் இவனுக்குக் கைகொடுங்கள்.
-
- 0 replies
- 2.1k views
-
-
கிழக்கின் மட்டக்களப்பில் தொடரும் பரபரப்புகளும் வெளியாகியுள்ள உண்மைத் தகவல்களும் ‐ GTN.என்னின் புலனாய்வுச் செய்தியாளர்‐ 03 July 10 04:58 pm (BST) கிழக்கின் மட்டக்களப்பில் கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இது குறித்த உண்மை நிலமைகளை அறிவதற்காக ஜீ.ரீ.என்னின் புலனாய்வுச் செய்தியாளரின் பார்வை மட்டக்களப்பை நேக்கி திரும்பியது. இதில் ஊடகங்களின் பார்வைக்கு எட்டாத தகவல்கள் ஜீ.ரீ.என்னிற்குக் கிடைத்துள்ளன. இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்பி மலை என்ற தொப்பிக்கலப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இராணுவத் தொண்டர் படையைச சேர்ந்த 4 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. கிழக்கின் காடுகளில் எஞ்சிய விடுதலைப…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழ் குடாநட்டில் சட்டவிரோத முருகைக்கல் அகழ்வுகளில் எவரும் ஈடுபடக் கூடாதென அரச அதிபர் உத்தரவு‐ 03 July 10 12:47 am (BST) யாழ் குடாநட்டில் சட்டவிரோத முருகைக்கல் அகழ்வுகளில் எவரும் ஈடுபடக் கூடாதென அரச அதிபர் கே.கணேஸ் உத்தரவொன்றை பிறப்பித்திருக்கின்றார். குடாநாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையாயின் தெற்கிலிருந்து கற்களை தருவிக்கலாம் எனவும் அவர் ஆலோசனை கூறியிருக்கின்றார். ஆனாலும் அவரது ஆலொசனையை மீறி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியான கீரிமலை மற்றும் மாவிட்டபுரத்தில் கற்கள் அகழப்படுவது நாள்தோறும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தற்போது இந்தக் கற்கள் கப்பல் மூலம் அங்கிருந்து அவசர அவசரமாக அகற்றப்படுவதாக அங்கு சென்று திரும்பிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றத…
-
- 0 replies
- 709 views
-
-
குடும்பிமலைக் குண்டு வீச்சு புலனாய்வாளர்களின் சதித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா இராணுவ அணிக்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும் அதனால் அந்த பகுதியில் விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இராணுவப் புலனாய்வாளர்களின் உள்நோக்கம் கொண்ட சதித்திட்டம் ஆகும். விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமலும், முகாங்களில் வாழும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மீள் குடியேற்றாமலும் இழுத்தடிப்பு உபாயத்தை கையாள்கின்ற…
-
- 1 reply
- 1.4k views
-
-
Jul 3, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / செம்பிறை உலகின் கவனக்குறைவாலே சிறீலங்கா அரசு தமிழ் மக்களை படுகொலை செய்து வருகின்றது -த இந்தியா டெய்லி ஊடகம் பல ஆயிரம் வருடங்கள் தாம் வாழ்ந்த பூமியில் தமக்கு சுயஅதிகாரம் வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றனர் ஆனால் உலகின் கவனக்குறைவாலே அப்பாவி தமிழ் மக்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்துள்ளது என த இந்தியா டெய்லி ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட போர்க்குற்றங்களை மேற்கொண்ட சிறீலங்கா மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா? இந்த போர்க்குற்றவாளிகள் தமிழ் மக்களை படுகொலை செய்ததை இந்தியா ஏன் அனுமதித்தது? அமெரிக்கா ஏன் மௌனமாக உள்ளது? நாசிகளை போல சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் வன்ம…
-
- 0 replies
- 800 views
-
-
-- தென்மராட்சி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மக்களை சந்தித்தார். -- "அரசியல்" வேலைகளில் ஈடுபடவுள்ளார் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32111
-
- 1 reply
- 1k views
-
-
இணையத்தில் கால்பதிக்கும் தாய்நிலம் தமிழர்களின் தாய்நிலத்திற்கும் புலத்திற்கும் பாலமாய் தமிழ் கருத்தியல் வெளியில் அச்சு வடிவத்தில் வாரப்பத்திரிகையாக பாரிஸ் நகரத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கிய 'தாய்நிலம்' பத்திரிகை எதிர்வரும் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இணையத்திலும் கால் பதிக்கிறது www.thaynilam.com என்ற இணைய முகவரியில் உலகத் தமிழ் உறவுகள் தாய்நிலத்தை தரிசிக்கலாம். 21 ம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் தமிழர்களான எங்களுக்கு அளப்பரிய இழப்புக்களையும் வீழ்ச்சியையும் தந்தது என்னவோ உண்மைதான். இந்த இந்த இழப்புக்களில் இருந்து எமது இனத்தை ஆற்றுகைப்படுத்தி மீட்பதற்கும் வீழ்சியிலிருந்து எழுச்சியை நோக்கி எமது இனத்தை உந்தி தள்ள வைப்பதற்கும் 21 ம் நூற்றாண்டு திறந்…
-
- 0 replies
- 1.6k views
-
-
குடிம்பிமலையில் சிறீலங்காவின் கிபீர் விமானங்கள் தாக்குதல் திகதி: 01.07.2010 // தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடிம்பிமலை பிரதேசத்தில் நேற்று ஸ்ரீலங்கா விமானப்படைக்கு சொந்தமான கிபீர் விமானம் குண்டுவீச்சு தாக்குதலை நடாத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியும், பய பீதியோடும் மக்கள் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடிம்பிமலைப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடாத்தியதாக அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர். திடீரென குடிம்பிமலை வான் பரப்புக்குள் பிரவேசித்த ஸ்ரீலங்கா வான்படையினரின் இரண்டு கிபீர் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குத…
-
- 3 replies
- 3.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பதிவு செய்யப்படாத நிலையில் நேற்று புதன்கிழமை அதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல் திணைக்களத்திடம் சகல ஆவணங்களுடனும் கையளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக ஆர். சம்பந்தனும் அதன் இணைச் செயலாளராக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழரசுக் கட்சிசார்பில் மாவை சேனாதிராஜாவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் சுரேஷ் பிரேமசந்திரனும் ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையாளர் தற்போது நாட்டிலில்லாததாலும் அவர் செப்டெம்பர் மாதமே நாடு திரும்பவுள்ளதாலும் அவர் நாடு திரும்பிய பின்னரே இது தொடர்பா…
-
- 2 replies
- 610 views
-
-
திருமலையில் இரண்டு இந்துக்களின் ஆலயங்களை இடிக்க ஸ்ரீலங்கா முயற்சி திகதி: 02.07.2010 // தமிழீழம் திருகோணமலை பிளட்டினம் பொயின்டில் அமைந்துள்ள இராணுவ முகாம் உள்ள இடத்தில் அமைந்துள்ள ஆஞ்சிநேயர் ஆலயம் மற்றும் ஓர்சில் கடற்கரையில் அமைந்துள்ள விஸ்ணு ஆலயம் என்பனவே அகற்றப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது. கிழக்கே திருகோணமலையில் அமைந்துள்ள, இரண்டு இந்து ஆலயங்களை அகற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை மட்டக்களப்பில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலய பகுதியில் உள்ள இராணுவ முகாமை விஸ்தரிப்பதற்கும் படையினர் முயல்வதாக அவர் தெரி…
-
- 3 replies
- 1.3k views
-
-
சென்னை: முதல்வர் கருணாநிதி யும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை: இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்க…
-
- 12 replies
- 1.8k views
-
-
http://www.manithan.net/index.php?subaction=showfull&id=1278046644&archive=&start_from=&ucat=1& நன்றி - மனிதன் இணையம்
-
- 4 replies
- 2.3k views
-
-
அங்கோலா: எனக்கு உள்ள அதிகாரத்திற்குட்பட்டுத்தான் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான குழு அமைத்தேன் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். காங்கோ நாட்டின் பொன் விழா சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்த மூன் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னுடைய திட்டத்துக்கு எதிர்மறையான செயல்பாடுகளை இலங்கை அரசு தெரிவிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க குழு அமைத்தால் இலங்கை ஆத்திரப்படுவது ஏன்? சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறிய அனைத்து குற்றவாளிகளையும் கண்டறிவதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் என்ற வகையி்ல் எனக்குள்ள அதிகாரத்திற்கு …
-
- 2 replies
- 1.5k views
-
-
வடக்கு , கிழக்கு இணைந்த ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வைத் தமிழ் மக்கள் பெற்றுக் கொள்வதற்கு, பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணம் வந்திருந்த பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் மார்க் குட்டிங்கிடம் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் முன்வைத்த கோரிக்கை இதுதான். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்த நாட்டை ஆண்டவர்கள் பிரிட்டிஷ்காரர்களே. தாம் இந்த நாட்டைக் கைப்பற்றியபோது இங்கு தனித்தனியாக இருந்த சிங்கள, தமிழ் இராச்சியங்களை ஒன்றிணைத்த வர்கள் பிரிட்டிஷ்காரர்களே. அந்த வகையில் தாம் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டிய கடமை ஒன்று இன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு உண்டு. …
-
- 4 replies
- 1.2k views
-