Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'அந்த போர் பற்றியோ அனுபவித்த வேதனைகள் பற்றியோ சிந்திக்கவே விரும்பவில்லை': ஒரு சிறுவனின் குமுறல்கள் [ சனிக்கிழமை, 03 ஏப்ரல் 2010, 08:53 GMT ] [ கி.வேணி ] விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா ராணுவத்திற்கும் இடையேயான போர் உச்ச கட்டத்தை அடைந்த காலமான அக்டோபர் 2008ம் ஆண்டில், தங்கள் குடும்பமே மொத்தமாக வீடுகளை கைவிட்டு வேறு வழியின்றி முல்லைத்தீவு காடுகளுக்குள் சென்றதை துயரத்துடன் குறிப்பிடுகிறான் தற்போது கிளிநொச்சியில் மீள் குடியேறி வசித்து வரும் 15 வயதுச் சிறுவன் ராகவன் சின்னதுரை. அச்சிறுவனது உணர்வுகளை பதிவு செய்துள்ளது ஐ.நா.சபையின் மனிதார்ந்த திட்டங்களுக்கான பணியகம். அதனை 'புதினப்பலகை'க்காக தமிழாக்கம் செய்தவர் கி.வேணி . ராகவன் சின்னதுரை என்ற சிறுவன் மேலும் கூறி…

    • 7 replies
    • 1.1k views
  2. தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களை எடுத்துரைக்கும் எண்ணத்துடனும், அவர்களின் விடுதலை நோக்கிய பாதையை சிறீலங்கா அரசியல் முறையைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்லவும், அதேநேரம், தமிழ் மக்களின் விருப்புக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் இவ்வாறான அரசியலைப் பயன்படுத்தி காலங்காலமாக இழைத்து வரும் பின்னடைவுக்கு மீண்டும் இடம் கொடுக்காமல் இருக்கவுமென ஓர் அரசியல் அணியாக தாயக மக்களால் 2001ம் ஆண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியான அரசியற் செயற்பாடுகளை சிறீலங்காவில் மேற்கொண்ட அதேநேரம், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஆதரவுடன் அவர்கள் வாழும் நாடுகளுடனும் பன்னாட்டுக் கட்டமைப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்த…

    • 0 replies
    • 318 views
  3. வணக்கம் தமிழ் வொயிஸ் எழுதிய “ மாயைகளின் ஆதரவுடன் களத்தில் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு” என்ற கட்டுரையைப் படித்தேன். ஆக்கத்தின் மூலம் எங்கிருந்தோ தெரியவில்லை. ஆனாலும் ஒரு சில குறிப்புக்கள். ஒவ்வொருவருக்கும் எழுதுவதற்கு உரிமையுண்டு. எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை எழுத வேண்டும். அத்தோடு, எது சரி, எது பிழை என்பதைக் கண்டறியக்கூடிய திறமையும் இருத்தல் அவசியம். பக்கப்பாடு இருக்கலாகாது. அன்றய காலகட்டத்த்கில் புலிகள் உருவாகி போராட்டத்தில் இறங்கிய பொழுது தாயகத்தின் அரசியல்வாதிகள் திரு அமிர்தலிங்கம் உட்பட, தங்களுக்கென்று இயக்கங்களை உருவாக்கி ஒன்றுக்கொன்று முரண்பட்டு, புலிகளைத்தவிர எனய இயக்கங்கள் அனைத்தும் ஒட்டுக்குளுக்களாக மாறினார்கள். ஒரு சில இந்தியாவின் தோள் ஒட்டு…

  4. பாரிய பேரழிவுக்குப் பின்னர் இந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்வதா அல்லது தன்மானத்துடன் கௌரவமாக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று வாழ்வதா என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தல் தீர்மானிக்கப் போகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் "வீடு%27 சின்னத்தில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுபவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று ஞாயிறு காலை ஆலங்கேணி, ஈச்சந்தீவு கிராமங்களில் நடந்த பிரசாரக் கூட்டங்களில் சம்பந்தன் பேசினார். ஏப்ரல் 8 பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பலம் வாய்ந்த அணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செல்லும் வாய்ப்பு உருவ…

  5. சிறீலங்கா நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறப்போகின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற பின்னர் ஆயுதப்போராட்டம் ஓய்வுக்கு வந்த பின்னர் நடைபெறும் இத்தேர்தல் மிகவும் முக்கியம்வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வருவதற்காக பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியத்தை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தவறான தலைமைத்துவத்தின் காரணாமாக அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து திசைமாறிச் சென்று தற்போது அக்கூட்டமைப்பு சிதைந்துள்ளது. ஈழத்தில் வாழும் மக்கள் வரலாறு காணாத அவலத்தை அனுபவித்திருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக சிதைந்துள்ளது. அவர்களின் இயல்புநிலை வாழ்க…

    • 2 replies
    • 708 views
  6. யாழ்ப்பாணத்தில் தொடர்கிறது அச்சம்: வரதராஜ பெருமாள் (கொழும்பு, ஏப். 4) இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடையே அச்சம் நீடிப்பதாக அப் பகுதியின் முன்னாள் முதல்வர் ஏ.வரதராஜ பெருமாள் தெரிவித்தார். 1990-ல் இலங்கையை விட்டு வெளியேறிய அவர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: *யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் கையில் துப்பாக்கியுடன் வீதிகளில் திரிந்த விடுதலைப் புலிகளோ, வேறு எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களோ, இலங்கை ராணுவ வீரர்களோ ஆதிக்கம் செலுத்தினர். *தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரசு ஆதரவு…

    • 0 replies
    • 1k views
  7. தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய ஒரேயொரு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே! – ஆசிரியர் இரா. செல்வவடிவேல் Published By editor On Saturday, April 3rd 2010. Under செய்திகள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய சிறந்த தலைமைத்துவமுள்ள ஒரே தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளங்குகின்றார் என ஆசிரியர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். யாழ் நாவாந்துறை கொட்டடி சனசமூக நிலைய முன்றலில் யாழ் மாநகரசபை உறுப்பினர் கோமகன் தலைமையில் இன்று (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த 30 ஆண்டுகாலமாக எதிர்ப்பு அரசியல் எமது மக்கள் உயிர்களையும், உடமைகளைய…

  8. பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிப்பெரும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலெழுந்து வருவதற்கான தன்மை காணப்படுகிறது.அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைப் பரந்தளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தும் தன்மை காணப்படுவதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. தமிழ்க் கூட்டமைப்புப் போன்று தமிழ்த் தேசியவாதத்தை வரிதுகொண்டிருக்கும் ஏனைய கட்சிகள் இருக்கின்றபோதிலும் அதிகளவுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டதாகத் தமிழ்க் கூட்டமைப்பு காணப்படுகிறது. உள்ளூர் ஊடகங்களும் அக்கட்சிக்குநியாயபூர்வமானதன்மையை வழங்குகின்றன. ஏனைய தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுக்கு இது இல்லை. அண்மைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் செல்வாக்கானாது…

    • 3 replies
    • 854 views
  9. பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சிதறடிக்கும் முயற்சிக்கு எதிராக எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் தமது வாக்குப்பலத்தை வெளிப்படுத்துவதே காலத்தின் கட்டாய தேவையென்ற கருத்தை அரசியல் அவதானிகள் முன்வைத்திருக்கின்றனர். பொதுத் தேர்தலுக்கு இன்னமும் மூன்று தினங்களே முழுமையாக இருக்கும் நிலையில், தமிழ் மக்களை நன்றாகச் சிந்தித்து வாக்களிப்பதற்கான கருத்துகள் அரசியல் அவதானிகளிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன.இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியமான பிரதேசமான வட,கிழக்கு மாகாணங்களின் 5 தேர்தல் மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையான அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் களமிறக்கப்பட்டு உக்கிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற…

    • 0 replies
    • 502 views
  10. தமிழ் மக்களை படுகொலை செய்த மகிந்த ராசபக்சவின் கைப்பொம்மையாக செயற்படுபவரும், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் சிறுமிகளை கடத்தி படுகொலை செய்த பிள்ளையானுக்கும் அவரது குழுவுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என பத்திரிகையாளரும், ஆசிரியருமான காரைதீவைச்சேர்ந்த வி.ரி.சகாதேவாராசா கேட்டுள்ளார். காரைதீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் படுகொலைகளைப்புரிந்த பிள்ளையானுக்கு வி.ரி.சகாதேவராசா பொன்னாடை போர்த்தினார். பிள்ளையானுக்கு காரைதீவில் பொன்னாடை போர்த்திய சம்பவம் தன்மானம் உள்ள காரைதீவு மக்களுக்கு வேதனையையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சில சலுகைகளுக்காக சகாதேவராசா போன்றவர்கள் காரைதீவு மக்களையும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களையும் அடகுவைப்பது கண்…

    • 0 replies
    • 926 views
  11. துயிலுமில்லத்தில் துரோகிகளின் விளம்பரங்கள்! தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் அதன் கைக்கூலிகளும் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்களை அழித்தும் சிதைத்தும் வருவதுடன் அந்தச் சிதைவுகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது தமது தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தும் இழிவு படுத்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. மாவீரர் துயிலிடங்கள், மாவீர்களின் நினைவுச்சின்னங்கள், நினைவுத்தூபிகள், தமிர்களின் வரலாற்றுச் சான்றுகள் என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அவற்றை இழிவுபடுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் சிங்களக் கைக்கூலிகளால் இடித்தழிக்கப்பட்டன. இந்த …

    • 0 replies
    • 912 views
  12. தமிழீழ தாயகத்தில் தமக்கு எட்டிய வழிகளில் எதையாவது பெறுவோம் அல்லது தம்மால் இயன்ற வழிகளில் எதையாவது செய்வோம் என்ற தொனியில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் மக்களிற்கு போதிக்கின்றன. இதற்கு மூலதனமாக கடந்த கால போரின் போதான இழப்புக்களை கூறி, இனி தமிழினம் இப்படியான அழிவினை எதிர்கொள்ள முடியாது, தாங்காது என பயமுறுத்தப்படுகின்றார்கள். அல்லது ஒருபடி மேலே சென்று இவ்வளவு காலமும் புலிகள் என்ன பிடுங்கினார்கள் என்றும் கேட்கப்படுகின்றது. இப்படியான கறாரான வசனங்கள் ஊடகங்களுக்கு வராமல் பார்த்து கொள்வதிலும் ஜாக்கிரதையாக இருக்கின்றனர். ஊர்களில் சின்ன சின்ன கூட்டங்களில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் என்னென்ன சொல்கின்றார்கள் என்பதன…

    • 6 replies
    • 903 views
  13. மறக்கப்பட்ட முயற்சிகளும் மாயமான கொள்கை மறக்கப்பட்ட முயற்சிகளும் மாயமான கொள்கைப்பிரகடனமும். கண்ணீர்க் கோடுகளோடு வாழ்வுப் போராட்டம் தொடர்கிறது. இன்னமும் இயல்பு நிலை வரவில்லை. ஆனாலும் எமக்காக நாம் என்கின்ற முனைப்பில் வன்னி மக்கள் வாழ்க்கை நகர்த்த மிகவும் திண்டாடி வருகின்றார்கள். இந்த இடத்தில் தேர்தல் களத்தில் முடிந்தவரையில் அனைவரும் குதித்துள்ளனர். அனைவருக்கும் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்ற ஆசை, அவா, வெப்பியாரம் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் மக்கள் தீர்ப்பு என்பது நேர்மையாக நடைபெறுமாக இருந்தால் அதுபற்றிய குழப்பத்திற்கான தேவை எதுவும் இல்லை. இந்தப் பத்தியின் நேரடியான நோக்கத்திற்கு வருகின்றோம். தேர்தல் பரப்புரைகள் நடைபெறுகின்றன. பரப்புரைகள் மூலமும் உண்மையான வ…

    • 8 replies
    • 935 views
  14. வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன. அதன் நினைவுகளை மீட்டிப்பார்கவேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள். இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் நெருப்பாற்று தாக்குதல…

  15. தமிழர்கள் உரிமை பிரச்சனைக்காக ஆயுதம் ஏந்தவில்லை எனவும் அதிகார மோகம் காரணமாகவே ஆயுதம் ஏந்தினர் எனவும் சிங்களவர் அனுபவிக்கும் எந்த உரிமையாவது தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையிலேயே சிங்களவருக்குதான் பிரச்சனை அவர்கள் வடக்கு கிழக்கு பகுதியில் சென்று வாழமுடியாதுள்ளது. அதிகாரபகிர்வு தமிழர்களுக்கு அவசியமற்றது.. ஐனசபா மற்றும் சிராம சேகவர் பிரிவு ஆகிய பிரிவு அலகுகளின் ஊடாக அதிகார பகிர்வு மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி திடடங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்என அவர் குறிப்பிட்டுள்ளார். இனரீதியாக அதிகாரபகிர்வு அவசியமற்றது எனவும் இது இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php/news/6…

  16. "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்.. உறவுகளே... சைக்கிள் சின்னத்தில் இலட்சியத்தை நோக்கிய பாதையில் பயணிக்கின்ற தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு தாயகத்தில் வாழும் உறவுகள் ஆதரவளித்து, வெற்றி பெற வைத்து, உறுதியான அரசியல் அணியாக உருவாக்க முன்வர வேண்டும். அவர்களை எமது பிரதிநிதிகளாகப் பராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையே…

    • 0 replies
    • 473 views
  17. தேர்தல் வன்முறைகள் உச்சத்தில் கஃபே இயக்கம் இலங்கையில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றுள்ள தினங்களில் இந்த வார இறுதி நாட்களே மிக மோசமானவையாக பதிவாகியுள்ளதாக கஃபே என்ற சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான இயக்கம் தமிழோசையிடம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அங்கு கட்சிகளுக்கிடையிலான வன்முறைகளும் உட்கட்சி மோதல்களும் அதிகரித்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை நகரசபையின் பிரதி மேயரும் இன்னும் சிலரும் காயமடைந்துள்ளனர். ஃபேரியல் அஷ்ரப் மற்றும் சரத் வீரசேகர ஆகிய ஒர…

    • 0 replies
    • 596 views
  18. சர்வதேசத்தின் ஆதரவைப்பெற தமிழ்க் கூட்டமைப்பை பலமான அணியாக பாராளுமன்றம் அனுப்புங்கள் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு யுத்தம் இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு உறுதியானதும் நிரந்தரமானதும் நியாயமானதும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்ற அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் சர்வதேச சமூகம், தனது அடுத்த நகர்வுக்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பை உன்னிப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான அணியாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் மாத்திரமே சர்வதேச சமூகத்தின் உறுதியான ஆதரவைப் பெறமுடியும் என்பதை ஒவ்வொரு தமிழ் வாக்காளனும் உணர…

    • 13 replies
    • 963 views
  19. யாழ்நகர் சிங்கள மயமாகின்றது - கூட்டமைப்பு வேட்பாளர் கவலை யாழ் நிருபர் சனிக்கிழமை , ஏப்ரல் 3, 2010 எமது மண் ஆக்கிரமிக்கப்படுகின்ற அதேவேளை, எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து வளங்களும் சுரண்டப் படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். வரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வரு மாறு எமது மண்ணில் இருந்து எமது மக்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் எமது மக்கள் ஒவ்வொரு வேளை உணவுக்காகவும் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். தமது சொந்தங்களைப் பிரிந்து மீள முடியாத சோகத்தில் வாடும் எமது மக்கள் தமது சொந்த …

    • 20 replies
    • 1.6k views
  20. தமிழ்தேசிய கூட்டமைப்பின்-- (கொக்குவிலில்) நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரடி ஒலிபரப்பு நேரடி ஒலிபரப்பைக் கேட்க இங்கே அழுத்துங்கள்: Live Broadcast

  21. செய்தி யாழ்ப்பாண மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்கள் 03.04.2010 சனிக்கிழமை மாலை கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலை முன்றலில் நடைபெற்ற தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் கலந்து உரையாற்றும் பொழுது பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார். எமக்கான அபிவிருத்தியைப் பேணுவதற்கும் எமக்கான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் எமக்குரிய தனித்துவமான தொன்மையான கலை, கலாசாரங்களை வளர்த்தெடுப்பதற்கு எமக்கு சட்டங்களை ஆக்கவல்ல அரசியல் பலம் தேவையாகவுள்ளது. மக்கள் இதனை உணர்ந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றம் அனுப்பி எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் இவற்றை அரசிடம் அடிபணியாது, உறுதியான முறையில்…

  22. த.தே.கூ இனை தடை செய்தால் நாம் எதிர்ப்போம்: ஜே வீ பி உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்ய பாதுகாப்புச் செயலாளருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அதனையும் மீறிச் செய்தால் மக்கள் விடுதலை முன்னணி போராட்டங்களை முன்னெடுக்கும் இவ்வாறு எச்சரித்திருக்கிறார் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்ய வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். அப்படியான ஒருநிலை ஏற்பட்டால் மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராகப் போராடும். இனி நாடு பிளவுபடாது. ஜனநாயகத்தை மதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாடாளுமன்றத்தில் இணைந்து செயற்பட எமக்கு எவ்வித தடைகளும் இல்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு அதில் தலையி…

  23. திருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் - தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம். "தனி நாடு" பற்றிப் பேச முடியாத ஆறாவது சட்டத் திருத்தத்திற்கு கீழ் தான் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பு. இந்த நாடாளுமன்றத்திற்குள் நுழையவும், அந்த அரசியலமைப்புக்குக் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் உரிமைக்காக வாதாடவும் - பேரம் பேசும் வலிமையை ஒன்று திரட்டுவதற்கான ஒரு சனநாயகப் பலமாக உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு. இதில் இணைந்திருந்த கட்சிகள் ஓர் ஒழுங்கு முறையாகப் புதுப்பிக்கப்பட்ட அமைப்பு வடிவமும் உள் சனந…

  24. வட இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது தமிழ் உச்சரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் மக்களைத் திட்டினார் ராஜபக்சே. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை அதிபர் மகிந்தே ராஜபக்ஷே பங்கேற்றுப் பேசினார். இந்த கூட்டத்தில் இலங்கை ஐனாதிபதி டெலிபுறம்டர் இயந்திரத்தைப் பார்த்து தமிழில் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார். தப்பும் தவறுமாக அவர் பேசியது தமிழ்தானா என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. ஒரு பக்கம் வறுத்தெடுக்கும் வெயில், மறுபக்கம் அதைவிட கொடூரமான ராஜபக்சேவின் தமிழ் உச்சரிப்பு. எனவே மக்கள் கூச்சலிட்டவாறு இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ர…

    • 2 replies
    • 1.1k views
  25. தமிழ் மக்களின் அபிலாஷைகள் தகர்க்கப்பட்டுவிட்டதாகவும், அரசியல் தீர்வென்பது முள்ளிவாய்க்கால் போருடன் புதைக்கப்பட்டு விட்டதாகவும் தென்னிலங்கை அரசியல் கருத்தியலாகவுள்ளது. அத்துடன் தமிழ் மக்கள் அரசியல் தீர்வில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தமிழர் பிரதேச அபிவிருத்தியே அவர்களது முற்றுழுதான இலக்காக இருக்கின்றது என்றும் தென்னிலங்கை அரசியல் வாதிகள் இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேச சமூகத்திற்கு நடை பெறவுள்ள பொதுத்தேர்தலின் மூலம் செய்தியாக தெரிவிக்க பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். இது யதார்த்தத்திற்கு புறம்பான கருத்தியல் என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கின்றனர் என்று தமிழ் கல்விமான்களும் சக ஆர்வலர்களும் தமிழ் மக்களிடம் கோரிக்கை வி…

    • 0 replies
    • 467 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.