ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட, சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொலி குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் கோரிக்கை விடுத்திருப்பது குறித்து சிறிலங்கா தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
அவசரகாலச் சட்ட விதிகளே சிறிலங்கா அரச தலைவரின் உயிரைப் பாதுகாத்தது என்பதால் அதனைத் தொடர்ந்தும் நீடிக்க வேண்டி இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 425 views
-
-
சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கிளைகள் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் அடுத்த வருட தொடக்கத்தில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெறுவதற்கு சிறிலங்காப் படை எவ்வாறான உபாயங்களைக் கையாண்டது என்பதையிட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த படைத்துறை அதிகாரிகள் பலர் தற்போது கொழும்பு வந்திருப்பதாக சிறிலங்காவின் ஆங்கில நாளேடு இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பை முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா அரசு முறியடித்து நான்கு மாதங்கள் சென்றுள்ள நிலையில், இந்தப் போரில் சிறிலங்காப் படையினர் புதிய உபாயங்களைக் கடைப்பிடித்திருப்பதாகக் கருதும் உலக நாடுகள் பலவும் அந்த உபாயங்களை அறிந்துகொள்வதில் அதிகளவு ஆர்வத்தைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சக்தி வாய்ந்த நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரித்தானியா,…
-
- 2 replies
- 905 views
-
-
இலங்கையிலிருந்து ஜேர்மன் சென்ற பெரும்பான்மை இனத்தவர் ஒருவரே செனல் 4 வீடியோவின் சூத்திரதாரி : சமரசிங்க வீரகேசரி நாளேடு 9/11/2009 8:45:26 AM - இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியை யார் உருவாக்கினார்கள் என்பதனை அறிந்துகொண்டுள்ளோம். அவர்களுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். செனல் 4 விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், "இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அண்மையில் சர்ச்சைக்குரி…
-
- 0 replies
- 1k views
-
-
சேரமான் 10/09/2009, 21:37 எம்மை நீங்கள் கைவிட்டால் வேறு நண்பர்களை நாடுவோம்! ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சிறீலங்கா அரசாங்கம் எச்சரிக்கை! GSP Plus எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்தி தம்மை ஐரோப்பிய ஒன்றியம் தண்டிக்கும் பட்சத்தில், சீனா, ஈரான் போன்ற நாடுகளின் பொருண்மிய உதவியை தாங்கள் பெற்றுக்கொள்ள நேரிடும் என்று சிறீலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிரித்தானியாவின் த கார்டியன் நாளேட்டிற்கு செவ்வி வழங்கியிருக்கும் ஓய்வுபெறும் சிறீலங்கா வெளியுறவுத்துறை செயலர் கலாநிதி பாலித்த கோஹொன்ன, ஏற்றுமதி வரிச்சலுகையை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதன் மூலம் தமது நாட்டை ஐரோப்பிய ஒன்றியம் தண்டிப்பதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்: …
-
- 1 reply
- 831 views
-
-
பொட்டு அம்மான் பிரபாகரன் மரணமடைந்ததாக நீதிமன்று எதை ஆதாரமாக வைத்து கூறியது பொட்டு அம்மான் இறந்ததாக முன்னர் ஏன் அறிவிக்கவில்லை. அப்படியானால் கடற்படைத் தளபதி சூசை எங்கே.. தொடர்கின்றன மர்மங்கள்… பொட்டு அம்மானும் விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் கதிர்காமர் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று நேற்று சிறீலங்கா நீதிமன்று அறிவித்துள்ளது. இதுவரை காலமும் பொட்டு அம்மானின் மரணம் குறித்து சிறீலங்கா அரசு தெளிவான செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என்று ஊர்ஜிதமற்ற செய்திகள் பரவியிருந்தன. காரணம் அவருடைய உடலம் இதுவரை எந்த ஊடகங்களிலும் காண்பிக்கப்படவில்லை. அவர் இறந்துவிட்டாரா என்பதை அடையாளம் காண முடியவில்லை என்றும் முன்னர் ஒரு…
-
- 0 replies
- 1.6k views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் உள்ள கூடாரங்களுக்குள் மாதாந்தம் 400 குழந்தைகள் பிறக்கின்றன என்று சர்வோதய நிறுவனத்தின் தலைவர் டொக்டர் ஏ.ரி.ஆரியரத்ன தெரிவித்தார். கொழும்பில் உள்ள செடாக் நிலையத்தில் சமூக நடவடிக்கைகளுக்கான கிறிஸ்தவ சம்மேளனம் ஏற்பாடு செய்த அன்னை தெரேசா நினைவு நிகழ்வில் உரையாற்றிய அவர், பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் பெருமளவிலான கவனமும் உதவிகளும் தேவைப்படுகின்றன என்று சுட்டிக் காட்டினார். மெனிக் பாம் முகாமில் உள்ள சுகாதார அதிகாரிகள் கேட்டதை அடுத்து உடனடியாகப் பிறந்த குழந்தைகளுக்கான 800 தொட்டில்களை ஒரே தடவையில் சர்வோதய அமைப்பு வழங்கியது எனவும் தொடக்கத்தில் 400 மட்டுமே தேவையாக இருந்தபோதும் திடீரென எண்ணிக்கை அதிகரித்து விட்டது எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 1 reply
- 504 views
-
-
புலிகளிடம் இருந்து பணம் பெற்றேனா? சுப்ரமணியசாமிக்கு விஜயகாந்த் கண்டனம் ஈழத்தமிழர்களுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வருவதாகவும், அவர்களிடம் இருந்து தாம் எதையும் பெற்றதில்லை என்றும் தமிழக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகள் பட்டியலில் விஜயகாந்த் பெயரையும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழின படுகொலையை நிகழ்த்தியதால் உலக நீதிமன்றத்தின் முன்பு இலங்கை அரசு போர் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. உட்பட பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அரசின் சார்பில் தகவல்கள் பெறும் சுப்…
-
- 1 reply
- 724 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) மூத்த அதிகாரியான ஜேம்ஸ் எல்டரை நாட்டை விட்டு வெளியேறுமாறு சிறிலங்கா அரசு உத்தரவிட்டுள்ளமை மனித உரிமைக் குழுக்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. ஐ.நா. அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை சிறிலங்கா திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஆசிய மையம் கேட்டுக்கொண்டுள்ளது. விசா காலம் முடிவடைவதற்கு முன்னதாக, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறி விட வேண்டும் என ஜேம்ஸ் எல்டருக்கு சிறிலங்கா அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரது எஞ்சிய விசா அனுமதியை இரத்துச் செய்யுமாறும் குடிவரவு குடியகல்வு திணைக்களப் பணிப்பாளர் பி.அபயகோன் பணிக்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் எல்ட…
-
- 1 reply
- 384 views
-
-
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்கா அண்மையில் வெளிப்படையான பேச்சுக்களை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நியூயோர்க்கில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் இருந்து வெளியாகும் 'த நேசன்' வார ஏட்டின் அரசியல் கட்டுரை இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது. 16 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்து ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக்கைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தனர். கொழும்பில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் ஜேம்ஸ் மூரே இந்தச் சந்திப்பில் இணைய வ…
-
- 1 reply
- 546 views
-
-
வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வந்த இந்திய மருத்துவ குழுவினர் தமது சேவையை நிறைவு செய்து நாடு திரும்புவதை அடுத்து கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலோக் பிரசாத் நேற்று அவர்களுக்கு விருந்துபசாரம் அளித்தார். கடந்த ஆறு மாதங்களாகச் சேவையாற்றி வந்த இந்திய மருத்துவக் குழுவினர் கடந்த மாதத்துடன் தமது சேவைகளை நிறைவு செய்தனர். இவர்கள் நாடு திரும்பிய பின்னர் மற்றொரு குழுவினர் மனநல மற்றும் உடலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வருவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியர்களால் மெனிக் பாம் முகாமில் நடத்தப்பட்ட கள மருத்துவமனையில், இடம்பெயர்ந்தவர்கள் 50 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக நிகழ்வில் உரையாற்றிய இந்தியத் தூதுவர் தெ…
-
- 1 reply
- 430 views
-
-
ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கிய சிறிலங்கா நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சென்னையில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்கள் இணைந்து கண்டனக் கூட்டம் நடத்தவுள்ளனர். சென்னையில் உள்ள தியாகராஐநகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் நாளை சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளும் கண்டனக்கூட்டமும், கருத்துப்பகிர்வும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டளர்கள் அறிவித்துள்ளனர். இதில் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், தேவசகாயம், (ஐ.ஏ.எஸ்) லெனின், பீர் முகமது, வெங்கட் றமணன், கவிதா முரளிதரன், மோகன், (தலைவர், சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்) இராஜேஸ் சுந்தரம், (இணை ஆசிரியர், ஹெட்லைன்ஸ் ருடே) அருள்எழிலன், வின…
-
- 0 replies
- 553 views
-
-
UN extremely concerned over detention of staff members in Sri Lanka 10 September 2009 "The United Nations continues to be extremely concerned with the case of two staff members arrested by Sri Lankan authorities in June, being particularly troubled over suggestions that they were mistreated during the early days of their detention. The UN was not given any notice when the two men, who are Sri Lankan nationals, were detained while deployed in Vavuniya, in the country’s north, UN spokesperson Marie Okabe told reporters in New York today. Once it was discovered that they had "disappeared," the UN protested their arrest with many levels of the Sri Lankan Governmen…
-
- 0 replies
- 457 views
-
-
தமிழரின் பாரம்பரியப் பிரதேசமான கற்பிட்டிப் பகுதியில் ஆடம்பர உல்லாச விடுதிகளை நிர்மாணிக்கும் சிங்களம். டச்சுக் குடா எனப்படும் கற்பிட்டியை அண்டிய கடற்கரைப் பகுதியில் பெரும் பணச் செலவில் ஆடம்பர உல்லாசப் பயண விடுதிகளை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் சிங்களம் இறங்கியுள்ளது. இதற்காக சர்வதேச புகழ்வாய்ந்த உல்லாசப் பயண விடுதிகள் அமைப்பொன்றும், மத்திய கிழக்கை மைய்யமாகக் கொண்டு இயங்கும் ரியல் எஸ்ட்டேட் நிறுவனமொன்றும் சிங்கள உல்லாசப் பயணத்துறையுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. நாளொன்றுக்கு 1000 - 1500 அமெரிக்க டொலர் கட்டணமாக அறவிடப்படும் இந்த தங்குமிடங்களில் பெருமளவு உல்லாசப் பயணிகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கிறது. பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறிக்கொண்டு இந்த நடவடிக…
-
- 0 replies
- 683 views
-
-
புலிகள் நாங்கள் பதுங்கலாம்! உறங்கலாமா? - ஈழநாடு கடந்த மாவீரர்தின உரையின்போது தேசியத் தலைவர் அவர்கள் எமக்கு தெளிவான செய்தி ஒன்றைச் சொல்லியுள்ளார். ‘புலம்பெயர் தமிழர்களே போராடுங்கள்! இளையோரே போராடுங்கள்! உலகத் தமிழர்களே போராடுங்கள்! இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் இன்றைய ஈழநாடு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி அவலங்கள் உச்சக்கட்டத்தை எட்டிய பொழுது புலம்பெயர் தேசங்களில் உறக்கம் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் போர்க் குரல் எழுப்பியவாறு புலிக் கொடிகளோடு வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். உலகம் வியக்கும் வகையில் புலம் பெயர் தேசங்களில் வாழும் 90 வீதமான தமிழ் மக்கள் ‘நாங்கள் புலிகள்’ என்று அறிக்கையிட்டார்கள். சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பை உலகுக்கு அம்பலப்படுத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
மக்கள் செய்தி (09-09-09) ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 820 views
-
-
அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற புலிகளுக்கு உயிரூட்டி பூச்சாண்டி காட்டுகிறது அரசாங்கம் - பாராளுமன்றத்தில் இரா. சம்பந்தன் எம்.பி. உரை வீரகேசரி நாளேடு 9/10/2009 10:47:04 PM - அரசியல் அபிலாஷைகள் மற்றும் கபட நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டி தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இன்று சபையில் குற்றம்சாட்டினார். வட கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கோ பொலிஸுக்கோ ஆட்திரட்டல்கள் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பாராளுமன்றதில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம்…
-
- 1 reply
- 883 views
-
-
தடுப்பு முகாம்களில் "சிறை" வைக்கப்பட்டுள்ள சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் பேரின் பெயர், விவரங்கள் மற்றும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட் டால்தான், காணாமற் போனோரின் பட்டியலின் உண் மையான "பருமன்" தெளிவாகும். வன்னிப் பெருநிலப்பரப்பை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து முற்றாக மீட்டாயிற்று என அரசு அறி வித்து நான்கு மாதங்கள் கடக்கப்போகின்றன. எனினும், இதுவரை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டி ருப்போரின் முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் பகி ரங்கப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது. அது வெளிவரும்போதுதான் காணாமற்போனோர் பற்றிய உண்மை ரூபம் அம்பலமாகும். ============================================ நீண்ட காலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ள கைதிகள் மற்றும் …
-
- 0 replies
- 638 views
-
-
மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால நடைமுறை நீடிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதாக கடந்த மே மாதம் 19ஆம் நாளன்று அறிவித்திருந்த சிறீலங்கா அரசாங்கம், மகிந்த ராஜபக்சேவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகக்கூறி மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால நடைமுறையை நீடித்துள்ளது. அவசரகால நடைமுறையை நீடிப்பதற்கு எதிராக பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்த பொழுதும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த நூறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வாக்குகளுடன் அவசரகால நடைமுறையை நாடாளுமன்றத்தில் சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. இதன்பொழுது அவசரகால நடைமுறை நீடிக்கப்படுவது அனாவசியமானது என்றுகூறி, இன்றைய வாக்கொடுப்பின் பொழுது …
-
- 0 replies
- 660 views
-
-
ஏதிலி முகாம் மக்களை விடுவிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க முடியும் – சிறிலங்கா அரசாங்கம் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் உள்ள ஏதிலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களை விடுவிப்பதற்கு விரும்பும் உறவினர் நண்பர்கள் விண்ணப்பிக்க முடியும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏதிலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடைக்கலம் வழங்க விரும்புவோர் விசேட விண்ணப்பப் படிவமொன்றை பூர்த்தி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக உறவினர்கள் மற்றும் ஏனையோர் ஏதிலி முகாமில் உள்ள நபர்களுக்கு அடைக்கலம் வழங்க விரும்பினால் அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சிற்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்க…
-
- 1 reply
- 577 views
-
-
புலம்பெயர் தமிழர்களிடம் யாசிக்கும் சிங்களம்! தமது காரியங்களைச் சாதிப்பதற்கும், மற்றவர்களை முட்டாள்களாக்குவதற்கும் தாம் மனநிலை தவறியவர்கள் போல நடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதை ‘காரிய விசர்’ என்று அழைப்பார்கள். அந்த வியாதி பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளை, அதுவும் ஆளும் கட்சி சார்ந்தவர்களை முற்றாகப் பீடித்துள்ளது என்றே தோன்றுகிறது. தடந்த மாதம் பெய்த பெருமழையால் வவுனியா வதை முகாம் வெள்ளக்காடாகியதால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் பெரும் அவலங்களை எதிர் கொண்டிருந்தனர். மழை வெள்ளத்தால் கூடாரங்கள் சகதிகளாகி நிற்க, உறங்க முடியாத அவலங்களுடன் அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மல, சல கூடங்கள் நிரம்பி வழிந்ததால் மனிதக் கழிவுகள் முகாம்களுக்குள் அள்ளுண்டு வ…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் பாலித கோகன்னவிற்கு விசா வழங்குவதற்கு தெரிவிக்கப்பட்ட மறுப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய தூதரகம், அவரது விண்ணப்பம் அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டது என்று விளக்கமளித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்கான பயணங்களை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளுக்கு இலவச விசா வழங்கும் நடைமுறை எதுவும் பிரித்தானிய குடிவரவு குடியகல்வு சட்டங்களின் கீழ் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது. கோகன்னவிற்கு விசா மறுக்கப்பட்டது தொடர்பில் கேட்டபோது, "எந்த அரசியல் அடிப்படையிலும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டதான அறிகுறிகளை அந்த விண்ணப்பத்தில் எம்மால் காணமுடியவில்லை. தனிப்பட்ட முறையில்…
-
- 0 replies
- 384 views
-
-
சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் பாலித கோகன்னவிற்கு விசா வழங்குவதற்கு தெரிவிக்கப்பட்ட மறுப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய தூதரகம், அவரது விண்ணப்பம் அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டது என்று விளக்கமளித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்கான பயணங்களை மேற்கொள்ளும் அரச அதிகாரிகளுக்கு இலவச விசா வழங்கும் நடைமுறை எதுவும் பிரித்தானிய குடிவரவு குடியகல்வு சட்டங்களின் கீழ் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது. கோகன்னவிற்கு விசா மறுக்கப்பட்டது தொடர்பில் கேட்டபோது, ‘எந்த அரசியல் அடிப்படையிலும் சிபாரிசுகள் மேற்கொள்ளப்பட்டதான அறிகுறிகளை அந்த விண்ணப்பத்தில் எம்மால் காணமுடியவில்லை. தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப…
-
- 0 replies
- 703 views
-
-
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது ஜே.வி.பி. உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள். பிரேரணைக்கு ஆதரவாக 100 உறுப்பினர்களும் எதிராக 13 உறுப்பினர்களும் வாக்களித்தமையால் 87 அதிகப்படியான வாக்குகளால் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மாலை நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் வாக்களிப்பில் …
-
- 0 replies
- 488 views
-