ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143542 topics in this forum
-
இந்தியா – கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே ஆதரவு : மொராகொட இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. கனடா முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானது என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற ரீதியில், பயங்கரவாதம் குறித்து சிறிதளவு கூட சகிப்புத் தன்மையை வெளிப்படுத்தக் கூடாது எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். https://athavanne…
-
- 3 replies
- 664 views
-
-
24 SEP, 2023 | 03:02 PM இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) வருகை தந்துள்ள நிலையில், அவரை ஈழத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். யாழ். கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சந்தோஷ் நாராயணன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் 'யாழ் கானம்' பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளமை குறிப்பிடத…
-
- 3 replies
- 539 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 SEP, 2023 | 05:04 PM (நா.தனுஜா) இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு, கடந்த வாரம் முழுவதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்துகொண்டது. இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாடு திரும்பியுள்ள பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் (Sinopec) நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது. எரிபொருள் இறக்குமதி கடந்த மே மாதம் 22 ஆம் திகதி நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசிப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவின் Sinopec நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, 20 ஆண்டுகளுக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க Sinopec நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சியின் விலைக்க…
-
- 23 replies
- 1.4k views
- 2 followers
-
-
Published By: VISHNU 26 SEP, 2023 | 05:10 PM ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அரசதரப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு யாழ் மாவட்டச் செயலகத்தில் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடலொன்றை நிகழ்த்தியுள்ளது. தமிழர் தாயகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இக்கலந்துரையாடல் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. ஆனால், அரசதரப்பு எத்தகைய தீவிரங்காட்டினாலும் போரில் உயிரிழந்த அனைவருக்கம் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதற்குப் பேரினவாதம் உயிரோடிருக்கும்…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர். இலங்கையிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக சிறிய மீன்பிடி படகில் புறப்பட்டவர்கள் படகு பழுதடைந்ததால் நடுக்கடலில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு டியாகோ கார்சியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். 2021 ஒக்டோபர் 3 முதல் அவர்கள் அந்த தீவில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் புகலிடக்கோரிக்கையை கோரியவேளை பிஐஓடி ஆணையாளர் அவர்களை சட்டபூர்வமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என தெரிவித்தார். புகலிடக்கோரிக்கையாளர்கள் பத்து பேர் இதற்கு எதிராக உச்சந…
-
- 0 replies
- 213 views
-
-
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம்! தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாட்கள் இன்று ஆரம்பமாகவுள்ளது, தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முதலாம் நாள் நிகழ்வு இன்று நண்பகல் 12 .30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. https://akkinikkunchu.com/?p=255795
-
- 15 replies
- 2.3k views
- 2 followers
-
-
இந்த ஆண்டில் இதுவரை 16 நிலநடுக்கங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன. அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11.20 மணியளவில் மொனராகலை புத்தல பகுதியில் ரிச்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவானது. நாட்டில் நிறுவப்பட்டுள்ள நான்கு நில அதிர்வு அளவீடுகளிலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/274606
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
காணி அபகரிப்புக்கு எதிராக மயிலத்தமடுவில் போராட்டம்! மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் பண்ணையளர்களினால் 11 ஆவது நாளாக தொடர்ச்சியாக வீதி ஒரங்களில் கொட்டும் மழையிலும் வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றார்கள். அவர்களின் போரட்டத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக பங்குபற்றிய போது. வருகின்ற ஜனாதிபதி விஜயத்தின் போது பாரிய அகிம்சா வழி போராட்டம் ஒன்றினை மே…
-
- 0 replies
- 363 views
-
-
முல்லைத்தீவில் புலிகளின் தங்கத்தைத் தேடித் தொடரும் அகழ்வுப்பணி! முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கண்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அகழ்வுப் பணியானது இன்று மீண்டும் தொடரப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் ஆரம்பமாகிய அகழ்வு பணியானது மாலையுடன் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயுதங்களோ, நகைககளோ மீட்கப்படாத நிலையில் இன்று (26) காலை 9 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிவான் நீ…
-
- 0 replies
- 612 views
-
-
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகக் கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘முரளி-800’ திரைப்படத்தை திரையிட இலங்கை திரைப்படக் கண்காட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ‘முரளி-800’ திரைப்படம் வரும் அக்டோபர் 6 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. ‘முரளி-800’ திரைப்படத்திற்காக கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, முரளியின் மீதான மரியாதையின் அடையாளமாக இலங்கை சினிமா சட்டமும் விசேட அனுமதியளித்து மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக …
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
இலங்கைக்கு 10 ரயில் என்ஜின்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இந்த ரயில் என்ஜின்கள் கடன் உதவியாக இலங்கைக்கு பெறப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த என்ஜின்களை கொண்டு வருவதற்கு முன், ரயில்வே துறை அதிகாரிகள் குழு இந்தியா சென்று தர சோதனை செய்ய உள்ளது. என்ஜின்கள் இல்லாததால் அடிக்கடி ரயில் இயக்கம் தடைபடுவதாக வும் பழைய என்ஜின்கள் பழுது நீக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/274081
-
- 3 replies
- 407 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரி பொறுப்பு - பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம்! kugenSeptember 24, 2023 மட்டக்களப்பு - புனானியில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஷரிஆ பல்கலைக்கழகத்தின் உரிமத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு தொடர்ந்தும் வழங்கவும் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்லூரிக்கு வழங்கவும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரத்தில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கியூபா மற்றும் அம…
-
- 1 reply
- 170 views
-
-
Published By: RAJEEBAN 25 SEP, 2023 | 09:53 AM சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியை சந்தித்தவேளை விக்டோரியா நூலண்ட் இது குறித்த அமெரிக்காவின் கரிசனையை வெளியிட்டுள்ளார். இது குறித்து பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சர் நடுநிலை நாடு என்ற வகையில் வெளிநாட்டு கப்பல்கள் விமானங்கள் இலங்கைக்குள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பது தொடர்பில் நிலையான செயற்பாட்டு முறையொன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அனைத்து நாடுகளுடனும் ஒரேமாதிரியான அணுகுமுறையையே இலங்கை பின்பற்றுகின்றது என தெரிவித்துள்ள வெள…
-
- 2 replies
- 697 views
- 1 follower
-
-
யாழ்.வேலனை மத்திய கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் ஒன்று தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. “கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வழங்கியுள்ள அறிவித்தலே இந்த சர்ச்சைக்கு காரணமாக மாறியுள்ளது. அத்தோடு இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பலரும் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். மாணவர்களின் போசாக்கு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஐக்கிய ந…
-
- 161 replies
- 12k views
- 2 followers
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பல்கலைக்கழக அனுமதித் தேவைகளைப் பூர்த்தி செய்த மாணவர்கள், குறிப்பிட்ட கற்கை நெறிகளுக்கான விசேட தகுதிகளைக் கொண்டிருக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான முடிவுத் திகதி கடந்த 21 ஆம் திகதி என அறிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 405 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 25 SEP, 2023 | 01:07 PM யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் அருந்தி விட்டு, ஏணையில் உறங்கிய 03 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கி.ஹரிகரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாய் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) தாய்ப்பால் கொடுத்து விட்டு, குழந்தையை ஏணையில் உறங்க வைத்துள்ளார். நீண்ட நேரமாக குழந்தை எழும்பாததால், சந்தேகம் அடைந்து குழந்தையை எழுப்பிய போது, குழந்தை அசைவற்று இருந்துள்ளது. அதனையடுத்து, குழந்தையை சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். https://www.virakesari.lk/article/165398
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
நிலத்தில் ‘சுழற்காற்று’ நிலை அல்லது நீரில் சுழற்காற்று, வெள்ளம் ஏற்பட்டால் அதன் அருகில் கூட செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சூறாவளி மற்றும் சுழற்காற்றுகளின் பொது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதால் இது ஆபத்தான நிலை என்றும் இதன்போது அருகிலுள்ள அனைத்தும் இதில் இழுக்கப்படும் , எனவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது, புகைப்படம் எடுப்பது அல்லது வீடியோ பதிவு செய்வது போன்ற ஆபத்தான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) பம்பலப்பிட்டிக்கு அண்மித்த கடற்பகுதியில் ஏற்பட்ட தும் அவ்வாறானதொரு ஆபத்தான நிலையே என அவர் தெரிவித்துள்ளார். மிகவு…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
25 SEP, 2023 | 10:38 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலையில் உள்ள கைத்தொழில் வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய, இலங்கை அரசாங்கங்கள் நெருக்கமாகச் செயற்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இரு நாடுகளுக்கும் இடையே படகு சேவைகளை விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் , மும்பையில் ஒக்டோபர் 17-19 வரை நடைபெறவுள்ள உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாட்டுக்காக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் கொழும்பில் கடந்த வாரம் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கடல்சார் துறையில…
-
- 0 replies
- 508 views
- 1 follower
-
-
எமது ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கில் திருமலை, அம்பாறை தமிழர்களின் நிலை மிக மோசமாகும் : பா.உ. த.கலையரசன் By kugen எந்த சந்தர்ப்பத்திலும் எமது ஒற்றுமை சீர்குலையக் கூடாது என்று கருதுபவன் நான். ஏனெனில் அவ்வாறு ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கில் தமிழர்களின் நிலை மோசமாகும். அதிலும் அதிகம் பாதிக்கப்படப் போகின்ற மாவட்டங்களாக அம்பாறை திருகோணமலை மாவட்டங்களே இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். பாண்டிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் த…
-
- 0 replies
- 165 views
-
-
கிழக்கு ஆளுநருடன் சாணக்கியன் சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியோர் சந்தித்துள்ளனர். இவ் சந்திப்பின் முக்கிய காரணம் மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்துவரும் அறவழிப் போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தங்கள் போராட்டத்திற்கு வரவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக அவரிடம் ஆவணம் கையளிக்கப்பட்டது. எனிலும் இவ் காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உ…
-
- 0 replies
- 333 views
-
-
Published By: DIGITAL DESK 3 24 SEP, 2023 | 09:53 AM ஆர்.ராம் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக உண்மைகளைக் கண்டறியப்பட வேண்டுமாயின் ஐக்கிய நாடுகளின் பிரசன்னத்துடனான சர்வதேச விசாரணையொன்றே அவசியம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்திலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிலும் கொல்லப்பட்டவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை அரசாங்கம் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்தும் பொறுப்பின்றிச் செயற்பட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடரி…
-
- 1 reply
- 269 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் கவனத்திற்கு... பொலிஸாரின் அனுமதியை பெறாது சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் திலீபனின் நினைவேந்தல் ஊர்வலத்தை நடத்தியது முற்றிலும் தவறு என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளமை எமது கவனத்தை ஈர்த்திருக்கிறது. சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறு நினைவேந்தல் ஊர்வலத்தை முன்னெடுத்து தேவையில்லாத இனக்கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சிப்பதாகவும் ஆளுநர் குற்றஞ்சுமத்தியுள்ளார். ''இதுபோன்ற ஊர்வலங்கள் சிங்கள மக்கள் வாழும் ஊர்களில் தவிர்க்கப்பட வேண்டும். ஏனைய இனத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் பொறுப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண…
-
- 1 reply
- 378 views
-
-
கிழக்கின் அவமானம் பிள்ளையான் - திரிபோலி பிளட்டூன் (கூலிக்கு கொலை செய்யும் படைப்பிரிவு) Vhg செப்டம்பர் 23, 2023 கடந்த இரு நாட்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும், அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது. நேற்றைய தினம் 22.09.2023 சாணக்கியனின் உரையானது. கிழக்கின் அவமானம் பிள்ளையான் என்னும் சந்திரகாந்தன் பல கொலைகளுக்கு காரணமான ஒருவர் இவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் அத்துடன் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் பல கொலைகள் தொடர்பிலும் அசாத் மெளலானாவினால் குற்றம் சாட்டப்பட்ட பெய…
-
- 0 replies
- 399 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு! தாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 கருத்து வெளியிடும்முன்னரே நாம், தான் பின்னணியில் உள்ளவர்கள் யார், மூலக்காரணம் என்ன என்பது தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டிருந்தோம். மலல்கொட அறிக்கையை அரசாங்கம் ஒழித்துக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தான் இது வெளியே வந்தது.தெரிவுக்குழுவின் அறிக்கையில் பகுதி ஒன்றை மட்டும்தான் எமக்கு பார்க்க முடியும். இரண்டாம் பாகத்தைப் பார்க…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-