ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142945 topics in this forum
-
ஞாயிற்றுக்கிழமை, 21, ஜூன் 2009 (16:45 IST) நாங்கள் தோற்றதில் வருத்தமில்லை;புலிகள் தோற்றதுதான் கவலையாக இருக்கிறது: வைகோ பேச்சு சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டம் சேலம் ஜங்சன் அருகில் உள்ள பி.சி.சி. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கு.சீ.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வர வேற்றார். ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர், ‘’மதிமுகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க வில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆன…
-
- 1 reply
- 1.2k views
-
-
மேற்குலகத்தை சிறிலங்காவின் பக்கம் திருப்புவதில் பௌத்த துறவிகள் முக்கியப் பணிகளை ஆற்ற வேண்டும்: மகிந்த ராஜபக்ச திகதி: 21.06.2009 // தமிழீழம் மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடித்து சிறிலங்காவை காப்பாற்ற உலகில் உள்ள பௌத்த நாடுகள் முனவர வேண்டும். இந்த நாடுகளை சிறிலங்காவின் பக்கம் திருப்புவதில் பௌத்த துறவிகள் முக்கியப் பணிகளை ஆற்ற முடியும் என நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது வேண்டுகோள் விடுத்திருக்கின்றார் பண்டைய காலத்தில் இருந்து பௌத்த துறவிகள் சிறிலங்காவின் வரலாற்றில் பல முக்கியப் பணிகளை ஆற்றியுள்ளனர். அவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அந்தப் பணிகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர். சங்கதி
-
- 1 reply
- 576 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 21, ஜூன் 2009 (8:48 IST) இந்திரா காந்தியை சீக்கியர்கள் படுகொலை செய்ததற்காக சீக்கிய இனத்தை அழித்தார்களா? கர்நாடக தமிழர் பேரவையின் ஆண்டுவிழா ஊப்ளியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்றதால்தான் இன்று அவர்களுக்கு பேரழிவு ஏற்பட்டது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இதில் எந்த உண்மையும் இல்லை. இந்திரா காந்தியை சீக்கியர்கள் படுகொலை செய்ததற்காக சீக்கிய இனத்தை அழித்தார்களா? அதற்கு பிறகு தானே ஒரு சீக்கியரை பிரதமர் பதவியில் அமர வைத்து இருக்கிறார்கள். இலங்கை பிரச்சினையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரா…
-
- 4 replies
- 835 views
-
-
மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடித்து சிறிலங்காவை காப்பாற்ற உலகில் உள்ள பௌத்த நாடுகள் முன்வர வேண்டும் என்று அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 842 views
-
-
மட்டக்களப்பு பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர்களின் விருப்பம் பெறப்படாமல் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டுளள்து வீரகேசரி இணையம் 6/21/2009 11:20:43 AM - வடக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு மட்டக்களப்பு மற்றும் கல்குடா கல்வி வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அவர்களின் விருப்பம் பெறப்படாமல் இம் மாதச் சம்பளப்பட்டியலில் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டுளள்து. எவ்வித காரணமோ, முன்னறிவித்தலோ,சம்மதமோ இன்றி தங்களுடைய சம்பளப் பட்டியலில் அதிகாரிகளினால் தன்னிச்சையாக ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டிருப்பது குறித்து அதிர்பர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதோடு தமது அதிருப்தியையும் வெளிப்ப…
-
- 2 replies
- 603 views
-
-
இலங்கையில் ஐ.நா நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் ஐ.நா அதிகாரிகள் புகைப்படக்கருவி, செல்லிடப்பேசிகள் என்பன கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுவதன் மூலம் ஐ.நா குருடர் ,செவிடர் நிலையில் உள்ளது என இண்டர் சிற்றி பிறஷ் நேற்று முந்தினம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது: இலங்கையிலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு புகைப்படக்கருவிகள்,கமராக்கள
-
- 2 replies
- 676 views
-
-
சிறிலங்கா அரசு மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீட்கப்பட்டு அவர்களுக்குரிய இயல்பு வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 739 views
-
-
தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் வடக்குக்கு தனியான அரசியல் தீர்வு தேவையில்லை - இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வீரகேசரி வாரவெளியீடு 6/21/2009 9:41:20 AM - தென் பகுதி மக்கள் அனுபவிக்கும் சம உரிமையை வட பகுதி மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்களின் பொருளாதார நிலைமை வளம்பெற செய்ய சந்தர்ப்பம் வழங்க வேண்டும். வடக்குக்கு என தனியான அரசியல் தீர்வு தேவையில்லை என்பதே எனது கருத்தாகும் என இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வெள்ளமுள்ளிவாய்க்காலில் நடந்த வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு மேலும் உரையாற…
-
- 1 reply
- 539 views
-
-
வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் அரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி நிதியத்தினால் கிழக்கு மாகாண கல்வி வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒருநாள் சம்பளம், எவ்வித முன்னறிவித்தலும் இன்றி அறிவிடப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கபப்ட்டுள்ளது. மட்டக்களப்பு மற்றும் கல்குடா கல்வி வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து, எவ்வித காரணமும், முன்னறிவித்தலோ,சம்மதமோ இன்றி, இம்மாத சம்பள பட்டியலில் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டுள்ளது குறித்து அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி நிதியத்துக்கு, கிழக்கு மாகாண சபையின் கீழ் சேவையாற்றும் அரசாங்க ஊழியர்களிடம் இ…
-
- 0 replies
- 619 views
-
-
-
அனைத்துலக நாணய நிதியத்தின் மீது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவே சிறிலங்காவுக்கான கடன் தொகை தாமதமடைந்து வருகின்றது என்று அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் காப்ரல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 708 views
-
-
வன்னிக் களமுனைகளில் பணியாற்றிய படைத்துறை கட்டளை அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 501 views
-
-
இலங்கையின் வடக்கில் 6 ஆயிரம் ஏக்கரில் இலங்கை கடற்படையினர் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ள உள்ளதாக மேலதிக பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி அமைச்சர் தர்மதாச பண்டா தெரிவித்துள்ளார். கைவிடப்பட்ட நிலங்களில் இந்த பயிர் செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது. வடக்கில் 25 ஆயிரம் ஏக்கரில் மரமுந்திரிகையை பயிரிட இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தபானம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதில் 6 ஆயிரம் ஏக்கரில் கடற்படையினர் இந்த பயிர் செய்கையில் ஈடுபட உள்ளதாகவும் தர்மதாச பண்டா குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர மூன்று வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 400 ஏக்கரிலும், திருகோணமலையில் ஆயிரம் ஏக்கரிலும் மரமுந்திரிகையை பயிரிட மேலதிக பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டில் காணப…
-
- 6 replies
- 1.5k views
-
-
"நாடுகடந்த தமிழீழ அரசு" என்ற விடயத் தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந் தச்சம்பந்தமும் கிடையாது என்று நாடாளு மன்ற உறுப்பினர்சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளி யிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக் கப்பட்டிருப்பவை வருமாறு: நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஆச்சரி யம் அளிக்கின்றது. இந்த நடவடிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு விதத்திலும் தொடர்புபட மாட்டாது. எவரும் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் எம்மீது திணிக்க முடியாது. எமது இனத்தின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்புணர்வோடு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை வென்றெடுக்கு…
-
- 23 replies
- 2.9k views
-
-
வன்னியில் இருந்து ஆயுதக் கடத்தல் - இராணுவ தரப்பைச் சேர்ந்தவர்கள் கைது திகதி: 20.06.2009 // தமிழீழம் வன்னிப் பகுதியில் இருந்து ரி56 ரக துப்பாக்கி கணினி, ரவைகள், வான் என்பனவற்றைக் கொண்டுவந்த சிறிலங்கா இராணுவத்தின் லெப்ரினன்ட் ஒருவர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மற்றுமொருவரும் ஹபரணை சோதனைச் சாவடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஹபரணைக்கு வரும்போது இவர்களின் பொதிகளைச் சோதனையிட்ட போது இப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த வியாழக்கிழமையும் வான் ஒன்று ஹபரணை சோதனை நிலையத்தில் கைப்பற்றப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஒரு இராணுவ சார்ஜன்டை பொலிஸார் தேடிவருகின்றனர். சங்கதி
-
- 3 replies
- 1.2k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருப்பது ரொம்பவும் வேதனையான விடயம் என்று தமிழின உணர்வாளரும் நடிகருமான சத்தியராஜ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 433 views
-
-
யாழ். குடாநாட்டிலும் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி : காரைநகர் கூட்டத்தில் பசில் ராஜபக்ச அறிவிப்பு வீரகேசரி இணையம் 6/19/2009 4:46:18 PM - வடபகுதியில் யாழ். குடாநாட்டு கடற்பரப்பிலும் 24 மணி நேரமும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கலாம் என்றும் இதுவரையில் மீன்பிடிப்பதற்கு அங்கு அமுலில் இருந்து வந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரைநகர் தியாகாராஜா மகாவித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் செயலணிக் குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் மீன…
-
- 11 replies
- 1.4k views
-
-
இலங்கையும் மாலைதீவும் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள இணக்கம் : இலங்கைக்கும், மாலை தீவிற்கும் இடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்ள மாலைதீவு ஜனாதிபதியும், இலங்கை வெளிவிவகார அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி எதிர்வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு சென்றுள்ள மாலைதீவு ஜனாதிபதி முஹமட் நசீட்டிற்கும், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை வெற்றிகரமாக தோற்கடித்தமைக்கு தமது மனமார்ந்த பாராட்டுக்களைத…
-
- 2 replies
- 755 views
-
-
இலங்கையில் நடந்த போரில் ஏராளமான தமிழர்கள் காயமடைந்ததுடன்இ முகாம்களில் உண்ண உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பா வாழ் தமிழர்கள் கேப்டன் அலி (வணங்காமண்) என்ற கப்பலில் 884 டன் உணவுஇ மருந்து மற்றும் உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இந்த கப்பலில் இருந்து உதவிப் பொருட்களை இறக்க அனுமதிக்காமல் இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து வணங்காமண் கப்பல் சென்னைக்கு திரும்பியது. சென்னை துறைமுகம் அனுமதிக்காததால்இ இந்த கப்பல் தற்போது இந்திய கடல் எல்லையில் முகாமிட்டிருக்கிறது. இந்நிலையில் வணங்காமண் கப்பல் ஊழியர்களுக்கு சென்னை துறைமுகம் குடிநீர் அனுப்பியுள்ளது. மேலும் வணங்காமண் கப்பல் ஊழியர்களுக்கு வேண்டிய மருத்துவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூர்ப் பணியாளர்கள் இருவர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. தமிழர்களான இவர்கள் இருவரும் கடந்த எட்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், பாதுகாப்புத் தரப்பினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தற்பொழுதே தெரியவந்திருப்பதாகவும் ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “அவர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றி எமக்கு எதுவும் தெரியாது” எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ.என்.எச்.சீ.ஆர். மற்றும் யூ.என்.பி.எஸ். ஆகிய அமைப்புக்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுத்…
-
- 0 replies
- 757 views
-
-
உலகில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு நாம் மிகவும் வலிமை மிக்க சட்டவியலாளர்களாக இருப்போம். இந்த சபையில் மக்களின் உரிமைகளுக்காக எமது வாக்கை நாம் பயன்படுத்துவோம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் தன்னை புதிதாக இணைத்துக்கொண்டுள்ள அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 706 views
-
-
20/06/2009, 13:02 ] சிறிலங்கா கேட்டிருந்த ஐ.எம்.எவ் கடன் இன்னும் அதம் சபையின் அங்கீகாரத்துக்குத் தயாராக இல்லை: ஐ.எம்.எவ் அதிகாரி சிறிலங்காவின் பண நெருக்கடி மிக மோசமாக இருந்தாலும், அது கேட்டிருந்த, ஐ.எம்.எவ்., சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையானது அதன் நிர்வாகிகளின் அங்கீகாரத்துக்கு இன்னும் தயாராக இல்லை என்றும், இறுதி உடன்படிக்கை வரும்போதெல்லாம், அத்திட்டம் நிர்வாகிகளின் சபைக்கு அனுப்பப்படும் என்றும், ஐ.எம்.எவ். பேச்சாளர், கரோலின் அற்கின்ஸன், நேற்று, வெள்ளிக்கிழமை, தெரிவித்துள்ளார். சிறிலங்கா விண்ணப்பிருந்த குறைந்தது $1.9 பில்லியன் டொலர்களானது சில கிழமைகளுக்குள் அங்கீகரிக்கப்படும் என, அற்கின்ஸன், கடந்த மாதம், அறிவித்திருந்தார். அமெரிக்காவின் அங்கீகாரத்துக…
-
- 0 replies
- 884 views
-
-
இலங்கையில் "சுயாட்சி தமிழ் மாநிலத்தை' வலியுறுத்துகிறார் சுப்பிரமணியன் சுவாமி இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் சுயாட்சியுடைய தமிழ் மாநிலத்தை இலங்கையில் உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் என்பன இலங்கைக்கு உதவியுள்ளதாகவும் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைப்பதற்கான அரசியலமைப்பு மூலமான உத்தரவாதத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தூண்டுவதற்கான தார்மிகப் பொறுப்பு இந்த நாடுகளுக்கு உண்டு என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் சுவாமி இதனைக் கூறியதாக "இந்து' பத்திரிகை நேற்று வியாழக் கிழமை தெரிவித்திருக்கிறது. …
-
- 2 replies
- 1.6k views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுவதற்காக, ஐரோப்பிய வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட, அத்தியாவசிய உணவு, மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கடந்த ஏப்ரல் 20 பிரித்தானியாவில் இருந்து புறப்பட்ட 'வணங்காமண் கப்பல்', தற்போது சென்னை துறைமுகத்திற்கு அருகாமையில், இந்திய கடற்பரப்பினுள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் 8 ஆம் திகதி, சிறிலங்கா கடற்பரப்புக்குள் நுழைந்த இக்கப்பல் சிறீலங்கா கடற்படையினரால், சுற்றிவளைக்கப்பட்டதுடன், தடுத்துவைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டது. அத்துடன், அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் ஆயுதங்கள் எவையும் இக்கப்பலில் இல்லை என தெரிவிக்கப்பட்டது. எனினும், விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்காகவே இக்கப்பல் இங்கு, வந்…
-
- 0 replies
- 763 views
-
-
இலங்கையின் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் அரசியல்வாதிகள் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே. அருமைலிங்கம் அந்த வரிசையில் இறுதியாக இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அருமைலிங்கம் ஈ.பி.டி.பி கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட தமிழ் …
-
- 2 replies
- 1.8k views
-