ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142940 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடித்திருப்பதன் மூலம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தை தேர்தலை நடத்தாமல் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கான திட்டத்துடன் அரசாங்கம் செயற்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 330 views
-
-
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானப் பாதையில் ஏற்படுத்தப்பட்டிருந்த தடையைப் பாதுகாப்பு அமைச்சு தளர்த்தியுள்ளது. இதனால் உள்ளூர் விமானங்கள் யாழ்ப்பாணத்துக்கு நீண்டதூரம் சுற்றிச் செல்லும் நிலைமை தவிர்க்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் இடையில் விமான சேவையில் ஈடுபட்டிருந்த உள்ளூர் விமானங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மேலாகப் பறப்பதைத் தவிர்த்து கொழும்பிலிருந்து புறப்பட்டு மன்னாரை அண்மித்த கடற்பரப்பின் மேலாகச் சென்று யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தன. கொழும்பிலிருந்து இலகுவான வான்பாதை மூலம் யாழ்ப்பாணத்தை விமானங்கள் சென்றடையலாம் என சிவில் விமான சேவைகளின் பதில் பணிப்பாளர் பராக்கிரம திஸ்ஸாநாயக்க கூறினார…
-
- 0 replies
- 980 views
-
-
சிறிலங்காவின் பத்திரிகை ஆசிரியர்கள் இருவர் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை பிரான்சை தலைமையகமாகக் கொண்டுள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. இது ஊடக சுதந்திரத்தை மீறும் ஒரு செயற்பாடு எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றத
-
- 0 replies
- 356 views
-
-
மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலும் முடக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ளனர் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முன்நாள் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றியபோது மேலும் தெரிவித்துள்ளதாவது: நாம் இந்த நாட்டின் மக்கள். இந்த மக்களாலேயே இங்கு அரசியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. எமக்குள் புதைந்திருக்கும் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட வேண்டிய உரிமை எமக்கு உள்ளது. இந்த நாட்டுக்காக, நாட்டின் அபிவிருத்திக்காக நாம் என்ன செய்தோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது நாட்டில் நாம் விரும்பியவற்றை செய்வதற்கு எமக்கு உரிமை உண்டு. ஆன…
-
- 0 replies
- 401 views
-
-
யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் சென்று உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அரசியல் வேலைகளை மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேற்று வியாழக்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் தொடர்பான அரசியல் பணிகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்வதற்கு பாதுகாப்பு வழங்காமை குறித்து உடனடியாகத் தலையிடுமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறையிட்டதையடுத்தே தற்போது பாதுகாப்பு அமைச்சினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளதாவது: யாழ்ப்பாணம், வவுனியா பகுதிகளுக்குச் செ…
-
- 0 replies
- 396 views
-
-
வன்னியில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் ரி-56 ரக ஆயுதம் ஒன்று உட்பட பல பொருட்களுடன் வான் ஒன்றில் சென்றுகொண்டிருந்த இராணுவ லெப்டினன்ட் ஒருவர் உட்பட மூவர் ஹபறணை, எரலிய ஓயா பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவரின் மனைவி உட்பட மூவரை தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 945 views
-
-
வவுனியா மருத்துவமனையில் அவயவங்களை இழந்த 20 ஆயிரம் மக்கள் உள்ளனர்; அவர்களில் பெரும்பாலானவர்கள் எறிகணைத் தாக்குதல்களில் அவயவங்களை இழந்தவர்கள் என மருத்துவர் தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் இறுதியாக நடைபெற்ற சமரில் 20 ஆயிரம் மக்கள் அவயவங்களை இழந்துள்ளதாக காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கிவரும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரச படையினரின் எறிகணை வீச்சுக்களினாலேயே பெருமளவான மக்கள் உயிரிழந்துள்ளதாக கண்ணால் கண்ட சாட்சிகள் எமது ஊடகவியலாளர்களிடம் இரகசியமாக தெரிவித்துள்ளனர். நாம் இந்த ஆய்வுகளை ஒரு வாரமாக மேற்கொண்டிருந்தோம்.…
-
- 4 replies
- 820 views
-
-
-
தடுப்பு முகாமில் 25,000 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர் - அரசே உறுப்படுத்தியது வன்னியில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் தொடர்பான முழுமையான விபரங்களை சிறீலங்கா அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. 262,632 பேர் மட்டுமே தடுப்பு முகாம்களில் இருப்பதாகவும், இவர்களில் 134,464 பேர் பெண்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வவுனியா முகாம்களில் 282,000 இற்கும் மேற்பட்ட மக்கள், அல்லது மூன்று இலட்சம் வரையிலான மக்கள் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. இது பற்றிக் கருத்து வெளியிட்ட சிறீலங்கா அரசாங்கம், கந்த மே மாதம் 11ஆம் நாள், 287,598 பேர் இந்த முகாம்களில் இருந்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது. அவ்வாறெனில் 24,966 பேருக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழு…
-
- 1 reply
- 819 views
-
-
சிறீலங்கா ஜனாதிபதி, புத்தரின் ஒரு அவதாரமாகின்றார் !!. Le Temps France Vanessa Dougnac Sri Lanka samedi13 juin 2009 Mahinda Rajapaksa, le président-Dieu பெரும்பான்மை சிங்களர்கள் (விடுதலைப்புலிகளிடமிருந்து) நாட்டை விடுவித்ததற்காகவும் ஒன்றுபடுத்தியதற்காகவும் நாட்டின் அதிபரை கொண்டாடுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. மிக குறைந்த எதிர்ப்பே இருந்ததால் அதிகாரம் ராணுவமயப்படுத்தப்பட்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் சக்திவாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள். வெள்ளை மேலங்கி, சிவப்பு நிற கழுத்து துண்டு சகிதம் கருப்பு மீசையுடன் புன்னகைக்கும் மஹிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் கொழும்பு நகர சுவரெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. சிலவற்றில் ராணுவ வீரர்களுடனும், சிலவற்றில் அதிபரின் ஆலோசகரு…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருதமிழ் இளைஞர்கள் கைது திகதி: 18.06.2009 // தமிழீழம் கடந்த ஞாயிறு காலை கட்டார் இல் இருந்து சிறீலங்காவிற்கு விடுமுறையில் சென்ற இரு இளைஞர்கள் கட்டுநாயக்கா சர்வதேச நிலையத்தில் வைத்து எதுவித காரணங்களும் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் உறவினர்களால் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் உறவினர்களுடன் வாகனத்தில் செல்ல இருந்த நேரத்தில் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் பின்னர் வாகன சாரதியையும் வாகனத்தையும் விடுதலை செய்ததாக தெரியவரகிறது. [sankathi]
-
- 3 replies
- 1.3k views
-
-
யுத்த கால மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச ரீதியில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : மனித உரிமை கண்காணிப்பகம் திகதி: 18.06.2009 // தமிழீழம் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், நாட்டில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை குறித்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமை பாரதூரமான ஒரு நிலைமையாகும் என மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றச் செயல்க…
-
- 0 replies
- 499 views
-
-
சிறிலங்காவின் செய்தி நிருபர்கள் நாட்டைவிட்டு விரட்டப்படுகிறார்கள் திகதி: 18.06.2009 // தமிழீழம் சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தோ அல்லது விமர்சித்தோ செய்தி வெளியிடும் சிறிலங்கா செய்தியாளர்கள் நாட்டைவிட்டு விரட்டப்படுகிறார்கள் என சர்வதேச ஊடகக் கண்காணிப்பகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரமே குறைந்தது 11 சிறிலங்காச் செய்தியாளர்களாவது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள் என்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (சி.பி.ஜெ) கூறியுள்ளது. உலகம் முழுவதும் நடந்த இது போன்ற சம்பவங்களில் இது 25 விகிதமாகவுள்ளது என்பதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சி…
-
- 0 replies
- 473 views
-
-
-
கனடாவிலிருந்து 200 அகதிகள் நாடு கடத்தப்படும் நிலை [ லங்கா தகவல் நிறுவனம் ] - [ Jun 18, 2009 04:00 GMT ] கனடா, மொன்றியல் நகரில் தங்கியிருக்கும் 200 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். 200 இலங்கை அகதிகள் தற்போது இலங்கைக்கு திரும்பிச்செல்லும் நிலையை எதிர்நோக்கியிருப்பதாக மொன்றியலில் தமிழர்களுக்காக செயலாற்றிவரும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, இந்த நாடு கடத்தலை தடுக்கும் வகையில், கனடா அரசாங்கம் விசேட விண்ணப்பங்களை பரிசீலிக்குமெனத் தாம் நம்புவதாகவும்; அந்தக் குழு குறிப்பிட்டது. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் தமிழ் நடவடிக்கை குழு தெரிவித்தது. இதேவேளை, சுவிட்ஸ்லாந்தில…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரபல Economist சஞ்சிகை விநியோகத்திற்கு இலங்கையில் தடை ? உலகின் முதனிலை சஞ்சிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் தி எகனோமிஸ்ட் சஞ்சிகை விநியோகத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009 ஜூன் 12ம் திகதி வெளியான சஞ்சிகையை விநியோகம் செய்யக் கூடாதென பாதகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த எகனோமிஸ்ட் சஞ்சிகையை இலங்கை சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எகனோமிஸ்ட் சஞ்சிகையை வருடம் முழுவதும் பெற்றுக் கொள்வதற்கான வாடிக்கையாளர்கள் சுமார் 11000 ரூபாவினை விஜித புத்தகசாலைக்கு சந்தாவாக செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தத்திற்கு பின்னரான இலங்கை குறித்து தி எகனோமிஸ்ட் சஞ்சிகையில் பிரசூரம…
-
- 2 replies
- 669 views
-
-
விடுதலைப்புலிகளின் ஈழ மருத்துவ பிரிவில் 9 எம்.பி.பி.எஸ் மருத்துவர்களும், ஈழ மருத்துவ பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற 20 மருத்துவர்களும், 40 தாதிமாரும், 400 ஊழியர்களும் பணியாற்றியதாக வவுனியா நலன்புரி நிலையம் ஒன்றில் தங்கியிருந்த போது, கைதுசெய்யப்பட்ட ஈழ மருத்துவ பிரிவின் தலைவர் மனோஜ் என்ற செல்வவிநாயகம் குவேந்திரராஜா தெரிவித்துள்ளார். காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் மருத்துவ அணியின் பிரதானியாக டொக்டர் அன்ரி என அழைக்கப்படும் எம்.பி.பி.எஸ் மருத்துவரான பத்மலோசினி செயற்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரும், அதன் மூத்த உறுப்பினருமான கரிகாலனின் மனைவி என தெரிவிக்கப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
வவுனியாவில் நெலுக்குளம் மயானத்திற்கு அருகில் இன்று அதிகாலை காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் எனவும் தம்மிடம் சரணடையாததால் தாம் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். சயணைட் வில்லை ஒன்றும், ஒலி எழும்பாமல் சுடக் கூடிய துப்பாக்கி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனார். இதேவேளை இன்று அதிகாலை நெலுக்குளம் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக ஏற்கனவே இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டிருந்துடன் மூன…
-
- 1 reply
- 1.3k views
-
-
SL govt hands greater powers to Chief of Defence Staff Sri Lankan Prime Minister Ratnasiri Wickremanayake presented a Bill to parliament on June 9 to create a new Chief of Defence Staff (CDS) post with substantial powers. Just three weeks after proclaiming victory over the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE), this is another move to strengthen the military’s role, and consolidate the politico-military cabal that now surrounds President Mahinda Rajapakse.
-
- 0 replies
- 908 views
-
-
சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகளை கண்டித்தோ அல்லது விமர்சித்தோ செய்திவெளியிடும் சிறிலங்கா செய்தியாளர்கள் நாட்டைவிட்டு விரட்டப்படுகிறார்கள் என சர்வதேச ஊடகக் கண்காணிப்பகம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரமே குறைந்தது 11 சிறிலங்காச் செய்தியாளர்களாவது நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள் என்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (சி.பி.ஜெ) கூறியுள்ளது. உலகம் முழுவதும் நடந்த இது போன்ற சம்பவங்களில் இது 25 விகிதமாகவுள்ளது என்பதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சித்து செய்திவெளியிடும் நிருபர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் கடுமையான பழிவாங்குதலையும் மற்றும் வ…
-
- 0 replies
- 729 views
-
-
தமிழீழத்தை நோக்கிய தூரநோக்குப் பயணத்திற்கு மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் இராமசாமி கூறியுள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருப்பதாவது:- உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் ஒரே கனவு கண்டிப்பாக தமிழீழத்தை நோக்கியதாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.தற்போதைய சூழ்நிலையில் ஆயுதப்போராட்டம் தணிந்த நிலையில் இருப்பது போன்ற ஓர் தோற்றம் ஏற்பட்டுள்ளதால் தமிழீழத்தை நோக்கிய பயணம் மழுங்கி விட்டதென்ற எண்ணம் ஏற்படக்கூடாது. தமிழினத்தின் தானைத்தலைவன் பிரபாகரனின் கனவு இலட்சியம் எல்லாம் எப்பெ…
-
- 0 replies
- 566 views
-
-
அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால் ....... கச்சத்தீவை மீட்க சட்டப் பேரவையில் :தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். நன்றி நக்கீரன் . தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு , மத்திய அரசுக்கும் ஒரு தந்தி அடித்து விட்டால் ........ காலுக்குள்ளை கச்சை தீவு கிடக்கும் .
-
- 11 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கே.பி.யின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கற்பனையை கனவுலகத்திலேயே மட்டுப்படுத்துவோம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.swissmurasam.net/srilanka/14961...7-14-40-00.html
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய சட்டத்தின் பி…
-
- 13 replies
- 1.5k views
-