ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
யாழ் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு! August 22, 2023 யாழ் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (21.08.23) மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று (22.08.23) சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் யாழ…
-
- 0 replies
- 466 views
-
-
Published By: RAJEEBAN 22 AUG, 2023 | 09:56 AM குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் என்ற இந்திய புலனாய்வுப் பிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யவேண்டாம் என உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்தரப்பினர் மற்றும் தனிநபர்கள் குறித்து தகவல்களை திரட்டுமாறும் எச்சரிக்கையாகயிருக்குமாறும் உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் தங்கள் புலனாய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளன என ஐலண்ட் தெரிவித்துள்ளது. குருந்தூர் மலை தொடர்பில் உடனடி மதக்கலவரம் சா…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 22 AUG, 2023 | 10:01 AM மன்னார் - தலைமன்னார் பிராதன வீதியில் பயணித்த இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (21) மாலை மன்னார் - தலைமன்னார் பிராதன வீதியில் தலைமன்னார் பொலிஸ் பிரிவான பருத்திப் பண்ணையில் இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில், தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மனோகரன் நிசாந்தன் பேசாலையில் இருந்து தன…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2023 | 04:36 PM வைத்தியர்கள் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டுக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் விதித்துள்ள அதிக வரிப்பணமும் தற்போது நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதான காரணம் எனவும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலை நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் குணரத்ன தெரிவித்தார். வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் இருவர் இருந்த இடத்தில் ஒருவரையும் அல்லது மூவர் இருந்த இடத்தில் இருவரையும் பண…
-
- 9 replies
- 432 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 AUG, 2023 | 07:57 PM யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு 8:30 மணியளவில் பதிவானதாக பொலிசார் தெரிவித்தனர். முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் உள்ளடங்கிய கும்பல் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததுடன் குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி, சோக்கேஸ் , சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளதுடன் இருமோட்டார் சைக்கிள்களை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
Published By: VISHNU 21 AUG, 2023 | 04:50 PM நாடு பூராகவும் உள்ள 101 கிராமங்களில் 1401 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தெரிவிக்கின்றது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 661 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 338 வீடுகளின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் 101 கிராமங்களில் 07 கிராமங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, யா…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
21 AUG, 2023 | 03:09 PM முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் தண்ணிமுறிப்பு குள பகுதியில் வைத்து 6 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும…
-
- 6 replies
- 552 views
- 1 follower
-
-
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 1990ஆம் ஆண்டு ஏறாவூரில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நூல் ஏறாவூர் தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவரும் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுவுறச் சங்கங்களின் பொது முiகாமையாளருமான எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் கடந்த வெள்ளியன்று 18.08.2023 ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூல் விமர்சன ஆய்வுரையை கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் செய்ன் நிகழ்த்தினார். ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா, நிருவாக அலுவலர் ஜாஹிதா உட்பட காத்தான்குடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூ…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
புலம்பெயர் முதலீடுகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் - முன்னாள் பிரதி அமைச்சர் கருணா சந்திப்பு Published By: Vishnu 21 Aug, 2023 | 11:17 AM கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கலந்துரையாடினார். இச்சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் திங்கட்கிழமை (2108.2023) நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது புலம்பெயர் நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். …
-
- 5 replies
- 583 views
-
-
20 AUG, 2023 | 08:24 PM 1976 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கச்சதீவு எமக்குரிய கடற்பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நாம் 80 விதமான கடல் விளை நிலங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடத்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (18) தமிழ்நாடு மீனவர்கள் மாநாட்டில் கச்சதீவை மீட்போம் என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் வரப்போகிற நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல்கள் வரும்…
-
- 4 replies
- 688 views
- 1 follower
-
-
காத்தான்குடி வரலாற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வீதியில் இறங்கி போதை வஸ்து பாவனைக்கு எதிராகவும் போதைவஸ்து விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சத்திய பிரமாணத்திலும் ஈடுபட்டனர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மதனம் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களுடனும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பாரிய ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அக்சா ஜும்மா பள்ளிவாயல் ஆகியவற்றிலிருந்து ஆரம்பமான பாரிய கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு வந்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் சத்திய பிரம…
-
- 14 replies
- 925 views
-
-
”பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்” ”அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இன்றையதினம் இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பில் ”அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்டுகின்றனர்” என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த கூற்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பைத்தியக்காரர்கள் அவ்வாறுதான்பேசுவார்கள். அவர்கள் தொடர்பில் கவலைகொள்ள வேண்டாம். அவ்வாறானவர்கள் இங்கும் உள்ளார்கள் அங்கும் உள்ளா…
-
- 3 replies
- 790 views
- 1 follower
-
-
21 AUG, 2023 | 04:40 PM கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும், பிரபல தமிழ் ஆசிரியருமான ஜீவரஙஞ்சினி எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு கிளிநொச்சியிலிருந்து கணவருடன் உந்துருளியில் வட்டக்கச்சி நோக்கி பயணிப்பதற்காக கிளிநொச்சி நகர் ஏ-9 வீதியில் காக்கா கடைச் சந்தியில் வட்டக்கச்சிக்கு திரும்பும் போது எதிர்பக்கம் வந்த காருடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த ஆசிரியர் …
-
- 1 reply
- 340 views
- 1 follower
-
-
21 AUG, 2023 | 02:34 PM கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சட்ட விரோத மணல் அகழ்வுக் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கைமீறிச் செல்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறான சட்ட விரோத மணல் அகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும், குறிப்பாக, கடலுக்கு அண்மையில் உள்ள கிராமங்களில் அதிகமாக சட்ட விரோத அகழ்வுச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் முழுக் கிராமமும் பாதிக்கப்படுகின்ற ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், இச்செயற்பாடுகளை கட்டுப்படுத்த தவறினால், தமது ஊர்களை தாம் இழந்துவிட நேரிடும் எனவும் கவலையோடு கூறியுள்ளனர். கிளிநொ…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
21 AUG, 2023 | 01:28 PM இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடுதுணிகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று (21) அதிகாலை 04.14 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-126 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்நிலையில் அவர் கொண்டு வந்த உடுதுணிகளைச் சோதனையிட்டபோதே இந்த 4 கடவுச்சீட்டுகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
20 AUG, 2023 | 05:20 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கடும் வறட்சி நிலையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடியமடு, பாவக்கொடிசேனை உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி தாம் தினமும் சிரமப்படுவதாகவும், குடிநீருக்காக மிக நீண்ட தூரம் பயணித்து குடிநீரைப் பெற்றுக் கொள்ள வேண்டி துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாகவும் கடந்தகால யுத்த பாதிப்புக்களை எதிர்கொண்ட அம்மக்கள் தினமும் அதிகாலை வேளையில் குடிநீர் எடுப்பதற்காக மிக நீண்ட தூரம் கால் நடையாகச் செல்லும்போது காட்டு யானைக…
-
- 1 reply
- 230 views
- 1 follower
-
-
20 AUG, 2023 | 05:11 PM முல்லைத்தீவு, உணாப்பிலவு பகுதியில் அமைக்கப்பட்ட மதுபானசாலைக்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முல்லைத்தீவு மாவட்டம் உணாப்பிலவு பகுதியில் புதிதாக சில்லறை மதுபானசாலை நிலையமொன்று இம்மாதம் 15ஆம் திகதி திறக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராம மக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்தோடு, அவர்கள் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றினை கடந்த 16ஆம் திகதி புதன்கிழமை வழங்கியுள்ளார்கள். இந்நிலையில், கடிதம் வழங்கியும் இதுவரை மதுபானசாலையை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த கிராம மக்கள் …
-
- 5 replies
- 583 views
- 2 followers
-
-
மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும் செயல் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் அரசாங்கம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சீ.வை.பி. ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நாட்டில் அனைத்து மக்களுக்கும் தங்களின் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள…
-
- 8 replies
- 756 views
-
-
“இனவாதங்களை தூண்டிவிட்டு தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்க முயற்சி” இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார். …
-
- 1 reply
- 318 views
-
-
20 AUG, 2023 | 02:22 PM உணவருந்திய பின்னர் சோடா குடித்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (19) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை சங்கானை பகுதியை சேர்ந்த ரவீந்திராசா ரசித்தன் (வயது 34) என்பவர் உணவருந்திய பின்னர் சோடா குடித்தவேளை மயங்கி விழுந்துள்ளார். கடையில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/162767
-
- 5 replies
- 875 views
- 1 follower
-
-
இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்கு சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை உரிய முறையில் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு புரியும் மொழியில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். …
-
- 5 replies
- 577 views
-
-
மாற்றத்துடனான கல்வி முறையொன்றே நாட்டுக்கு அவசியம் ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க நேற்று முன்தினம் (18) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த அவர் முதலில் பல்கலைக்கழக மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படைவீரர் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பகுப்பாய்வு ஆய்வு கூடத்தை (Analytical Laboratory) திறந்துவைத்த சாகல ரத்னாயக்க, பல்கலைக்கழக மைதானத்தில் கட்டப்பட்டு வரும் கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளையும்…
-
- 0 replies
- 190 views
-
-
19 AUG, 2023 | 09:10 PM கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார்.. கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் 2020 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றவர் இவர். மொரட்டுவ பல்கலைகழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி பயில சென்றிருந்தார். https://www.virakesari.lk/article/162729
-
- 3 replies
- 640 views
- 1 follower
-
-
மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பம் இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் இன்று (20) முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்கிறது. கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வ ஒன்லைன் முன்பதிவு முறையில், ஆகஸ்ட் 20 முதல் வாரந்தோறும் ஆறு முறை மதுரை – கொழும்பு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது. இதன்படி, பட்ஜெட் கேரியர் இந்தியாவின் மதுரை மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இடையே வாரத்தில் ஆறு நாட்கள் (புதன்கிழமை தவிர) விமான சேவைகளை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 196 views
-
-
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு (படங்கள்) வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றை திருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி…
-
- 3 replies
- 883 views
- 1 follower
-