ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
15 SEP, 2023 | 03:59 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், இன்றையதினம் (15) வெள்ளிக்கிழமை, யாழ்குடா நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் …
-
- 2 replies
- 414 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 14 SEP, 2023 | 11:08 AM (நா.தனுஜா) இலங்கை தற்போது சிக்குண்டு இருப்பது கடன்பொறிக்குள் அல்ல. மாறாக அபிவிருத்தியின்மை என்ற பொறிக்குள்ளேயே அது சிக்கியிருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங், இலங்கைக்கு கடன்மறுசீரமைப்பு மாத்திரமன்றி பொருளாதார மறுசீரமைப்பும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தியுள்ளார். 'அண்மையகால உயர்மட்ட விஜயங்களும், அவர்களின் இந்து சமுத்திரப்பிராந்தியம் சார்ந்த கோணங்களும்' என்ற தலைப்பில் பூகோள அரசியல் வழிகாட்டி (புநழிழடவைiஉயட ஊயசவழபசயிhநச) என்ற அமைப்பினால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போதே சீனத…
-
- 3 replies
- 355 views
- 1 follower
-
-
Published By: VISHNU 15 SEP, 2023 | 04:08 PM பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது சொந்த நிலங்களில் இருந்து 1990 ஆம் ஆண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்து பல்வேறு இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக சின்னவளை,பொலிகண்டி, நிலவன்,கே.கே.எஸ்.மற்ற…
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 13 SEP, 2023 | 04:28 PM (எம்.வை.எம்.சியாம்) வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அதிநவீன சொகுசு ஜீப் வண்டியொன்று வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்வதற்காக குருநாகல் பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதிசொகுசு ஜீப் வண்டியொன்று குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக வலான ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கு…
-
- 7 replies
- 827 views
- 1 follower
-
-
15 SEP, 2023 | 04:04 PM யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை சேர்ச் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் வெள்ளிக்கிழமை (15) மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் கசிப்புடன் கைதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/164648
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
15 SEP, 2023 | 12:03 PM இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐ. என். எஸ். நிரீக் ஷக்” போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை (14) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர். “ஐ.என்.எஸ். நிரீக் ஷக்” கடற்படைக் கப்பல் 137 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. கப்பலின் கப்டனாக ஜீது சிங் சௌஹான் செயற்படுகின்றார். இதேவேளை, கப்பலின் கப்டன் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15)காலை சந்தித்தார். இரு…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 11:55 AM கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை (14) காலை 6 மணியளவில் மாலையாளபுரம் புதுஐயன்கன்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் நபர்களை கைது செய்வதற்காக மூன்று பொலிஸார் சென்றுள்ளனர். இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர்கள் பொலிஸாரை கண்டு குளத்திற்குள்ளாக தப்பி ஓடிய போது அவர்களை பொலிஸார் தனித்தனியாக ஒவ்வொரு வழியாக திரத்திச் சென்றுள்ளனர். இறுதியில் இரு பொலிஸார் திரும்பிய நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார். அவரை நேற்று இராணுவம் …
-
- 0 replies
- 365 views
- 1 follower
-
-
IMF இன் 57 உறுதிமொழிகளில் 38 மட்டுமே பூர்த்தி வெரிட்டே ரிசர்ச்சின் சமீபத்திய முன்னேற்றப் புதுப்பிப்பின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 17வது திட்டத்தின் கீழ் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்ட 57 கண்காணிக்கப்படக்கூடிய உறுதிமொழிகளில் 38ஐ இலங்கை நிரூபணமாக ‘நிறைவேற்றியுள்ளது’. 11 உறுதிமொழிகளின் முன்னேற்றம் இன்னும் "அறியப்படவில்லை" என்றும், அதே நேரத்தில் எட்டு உறுதிமொழிகள் "நிறைவேற்றப்படவில்லை" எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2023 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கும், இரண்டாவது கொடுப்பனவை அங்கீகரிப்பதற்காகவும் IMF இன் குழுவொன்று இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது. எவ்வாறாயினும், அது இப்போது மேலும் ஒக்…
-
- 0 replies
- 291 views
-
-
குருந்தூர் விவகாரம்: கஜேந்திரன், வினோநோகராதலிங்கம் பிணையில் விடுவிப்பு! முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற அழைப்பான் விடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு குருந…
-
- 0 replies
- 239 views
-
-
Published By: VISHNU 08 SEP, 2023 | 03:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானை விடுதலை செய்ய நீதிமன்றத்துக்குள் சூழ்ச்சி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்ட பாரதூரமான குற்றச்சாட்டால் நீதிபதிகள், சட்டமாதிபர் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் கருத்துரைப்பதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) விசேட கூற்றை முன்வைத்து உரையா…
-
- 6 replies
- 455 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குருந்தூர் விகாரைக்கு சென்ற விகாராதிபதியை, அரசியல்வாதிகளுடன் வருகைத் தந்திருந்த சில காடையர்கள் தகாத வார்தைகளால் பேசி, அங்கிருந்து வெளியேற்றியமையானது பௌத்தர்களின் மனங்களை புன்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என்றும் அப்படி நேர்ந்தால், அந்த கும்பலும் அவர்களை அங்கு அழைத்துவந்த அரசியல்வாதிகளும்,…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் (வயது 86) உயிரிழந்துள்ளார். தனது இரண்டாவது மகனான வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று (14.09.2023) காலை 7 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு காரணமாக உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் என்பதுடன் அதே பாடசாலையில் ஆசிரியராக மற்றும் அதிபராக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளதுடன், காலம் சென்ற ஆசிரியர் மாணிக்கவாசகரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதிக்கிரியை இந்த நிலையில் அவரின் உடல் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு ஜெயரட்…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 13 SEP, 2023 | 09:45 AM யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்த நிலையில், பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் தங்குமிட விடுதியில், திருகோணமலையைச் சேர்ந்த பாட்டியும், அவரது பேத்தியான சிறுமியும், வாடகைக்கு அறை எடுத்து கடந்த சில நாட்களாக தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்…
-
- 3 replies
- 394 views
- 1 follower
-
-
14 SEP, 2023 | 03:32 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டதாவது, பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும். 076 54 53 454 எனும் தொலைபேசி இலக்கத்திற்…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
Published By: VISHNU 14 SEP, 2023 | 03:28 PM சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் புதன்கிழமை (13) மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் ஆலோசனைக்கு அமைவாக இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்தசில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இதன்போது இவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164563
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் உடனடியாக மதுபானசாலை அகற்றுமாறும், அவ்வாறு மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேவேளை இப்போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/273082
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 14 SEP, 2023 | 12:21 PM இலங்கையின் குற்றவாளிகளை பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேசமயமாக்கப்பட்ட பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பயன்படுத்தவேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு - பேர்ள் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 54வது அமர்வின் ஐக்கிய நாடுகள்மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த அறிக்கை குறித்த கலந்துரையாடல்களின் போது போள் அமைப்பு தமிழ் மக்களிற்கு எதிரான யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இனப்படுகொலை ஆகியவற்றை நினைவுகூர்ந்துள்ளது. நீதிக்கான முயற்சிகள் இலங்கைஅரசாங்கத்தினதும் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணிலுக்கு மூளை இருக்கிறது ஆனால் இதயம் இல்லை, நாட்டை மீட்பதற்கான சரியான திட்டம் ஜனாதிபதியிடமோ அல்லது அரசாங்கத்திடமோ இல்லை என ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத்திற்குள் இரு பிரிவுகள் இருப்பதாகவும், அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதாகவும் தெரிவித்த ராஜித இந்த அரசாங்கத்தில் இணைவது சாத்தியமில்லாத விடயம், இந்த அரசங்கத்திற்கு எதிர்காலம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மட்டுமே இன்றைய தேவை அல்ல. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சுகாதார பிரச்சினை. களவுத்துறை சார்ந்த பிரச்சினை என பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண அரசாங்கம் தயாரா இல்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/a…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
இலங்கைக்கு புதிய உயர்ஸ்தானிகரை நியமித்தது இந்தியா! பெல்ஜியத்திற்கான தூதராக பணியாற்றும் ஸ்ரீ சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக இந்தியா நியமித்துள்ளது. அவர், விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பதவி வகித்துவரும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா 2019 ஜூலைஇ முதல் 2020 ஜூலை வரை உஸ்பெகிஸ்தானில் இந்திய தூதராகவும் பணியாற்றினார். அத்துடன் 2017 ஜூலை முதல் 2019 ஜூன் வர…
-
- 0 replies
- 378 views
-
-
புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ஆதரவு- மக்கள்மத்தியில் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம்! kugenSeptember 12, 2023 கடந்த வருடம் ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்தது முதல் கடும் மௌனத்தை கடைப்பிடித்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரது சகாவும் ஊடக உரிமையாளருமான ஒருவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சி மூலம் பாதிக்கப்பட்ட தனது பெயரை மீண்டும் கட்டியெழுப்பி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிடுகின்றார். அவரது சகா நேற்று அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவித்துள்ளார். பொதுமக்களால் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டபோதிலும் முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கின்றார் என தெ…
-
- 1 reply
- 276 views
-
-
இந்தியாவின் எதிர்கட்சி கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமை தாங்குவாரா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரிடம் கேள்விஎழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி மக்கள் ஆதரவளித்தால் நாளையே நாங்கள் அதிகாரத்திலிருக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். துபாய் விமானநிலையத்தில் மம்தாபானர்ஜி இலங்கைஜனாதிபதியை சந்தித்துள்ளார்.நவம்பரில் மேற்கு வங்காளத்தில் இடம்பெறும் மாநிலவர்த்தக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அவர் இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க என்னை துபாய் விமானநிலையத்தில் சந்தித்தார்,என்னை சிறிய உரையாடலிற்கு அழைத்தார் என மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நான் அவரை பெங்கால் உலக வர்த்தக உச்சிமாநா…
-
- 4 replies
- 788 views
-
-
12 SEP, 2023 | 04:02 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(12.09.2023) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொலிஸார், மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளடக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் ஊடாக தகவல்களை பரிமாறி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தினார். இதன்போது, கருத்து தெரிவித…
-
- 3 replies
- 385 views
- 1 follower
-
-
அரச மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் திகதி சைபர் தாக்குதல் காரணமாக பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் பரிமாற்ற தரவுகள் காணாமல் போயுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்திருந்தது. gov.lk டொமைனுக்குச் சொந்தமான தரவு அமைப்பை புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா தெ…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
Published By: VISHNU 13 SEP, 2023 | 01:35 PM வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் புதன்கிழமை (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றியை தெரிவித்த நிலையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றுகின்றவர்களுக்கு, நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
13 SEP, 2023 | 12:10 PM முல்லைத்தீவு - சிலாவத்தையில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடைமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (12) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டிலிருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தி பணம், 10 பவுண் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்செல்லும்போது கொள்ளையர்களால் வீட்டின் உரிமையாளர் பொல்லால் தலையில் தாக்கப்பட்டு 63 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில், இவ் கொள்ளை, கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்று பொலிஸாரால் கைத…
-
- 0 replies
- 526 views
- 1 follower
-