ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142930 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை வரை உலக சமூகம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று காலை அந்த பகுதிக்குள் புகுந்த சிங்களப் படையினர் பாரிய இரத்தக் களரியை ஏற்படுத்தியிருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகிய இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரையில் உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தமது …
-
- 0 replies
- 455 views
-
-
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து 'புதினம்' செய்தியாளர் செய்மதி தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட 'புதினம்' செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே: பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடி…
-
- 7 replies
- 1.2k views
-
-
மோதலை இடைநிறுத்தி, மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கான உடனடித் தேவைகளை கவனிப்பதை நோக்கமாகக் கொண்டு கொழும்பு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், தனது பயணம் எந்தவிதமான பயனையும் பெற்றுத்தராத நிலையில் இன்று நியூயோர்க் திரும்புகின்றார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனது சிறப்புப் பிரதிநிதியாகவே அவரை கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தார். நியூயோர்க்கில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் புதுடில்லி சென்று இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய பின்னர் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு கொழும்பு சென்ற விஜய் நம்பியார், நேற்று சிறிலங்கா அதிகாரிகளுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்தினார். சிறிலங்காவுக்கு ஒரு மாத காலத்தில் …
-
- 3 replies
- 1.6k views
-
-
"வடபகுதியில் இடம்பெற்ற போரினால் உருவாகியிருக்கும் பாரிய மனிதாபிமான பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்" என சிறிலங்கா அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 353 views
-
-
தம்மை காப்பாற்றக்கோரி போரில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்கள் அனைத்துலக சமூகத்திடம் விடுத்த வேண்டுகோள்களை அனைத்துலக சமூகமும் சரி, மனிதாபிமான அமைப்புக்களும் சரி முற்றாக புறக்கணித்துள்ள நிலையில் அந்த மக்களின் இறுதி மூச்சுக்களை அடக்கும் தாக்குதல்களை சிறீலங்கா படைகள் ஆரம்பித்துள்ளன. முள்ளிவாய்கால் பகுதி குருதியினால் தோய்ந்து போகின்றது, அங்கு குழந்தைகளினதும், பெண்களினதும், முதியவர்களினதும் மரணஓலங்கள் மட்டுமே குண்டு சந்தங்களுக்கு மத்தியில் எழுகின்றன. பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பெருமளவானோர் காயமடைந்துள்ளதுடன், அவர்களும் மரணமடைந்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் முன்நகரும் படையினரால் சுட்டு கொல்லப்படுகின்றனர். இரண்டாம் உலகப்போரின் பின்னர் ஒரு குறுகிய நேரத்தி…
-
- 0 replies
- 2k views
-
-
கொழும்பில் பிரித்தானிய தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் தூதரகத்தின்மீது தாக்குதல் ‐ கண்ணாடிகள் சேதம்: பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பில் பிரித்தானிய தூதரகத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் சிலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையின் உள்விவகாரத்தில் மிலிபேண்ட் தலையீடுவதாகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் குற்றம்சுமத்தியுள்ளனர். பிரித்தானிய தூதரகத்தின் மீது ஆத்திரமடைந்த சிலர் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் ஆயிரம் பேர் கொண்ட குழு இந…
-
- 2 replies
- 1.4k views
-
-
"போரை நிறுத்துவது தொடர்பாகவும் உடனடிப் போர் நிறுத்தம் தொடர்பாகவுமே நாம் நேற்று தொடக்கம் பேசிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது சரணடைவதோ ஆயுதங்களைக் கையளிப்பதோ அல்ல. அப்பகுதியில் படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எனவும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சிச் சேவையான 'சனல் - 4' தொலைக்காட்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அளித்த பிரத்தியேகப் பேட்டியின்போது பத்தமநாதன் தெரிவித்தார். …
-
- 1 reply
- 832 views
-
-
Tim Martin Planning to go on hunger strike to highlight the plight of Tamils in Vanni. ரிம் மாட்ரின் அவர்கள், வன்னி மக்களின் பேரவலத்தை உலகிற்க்கு தெரிவித்து வேண்டிய நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். Gentleman Tim, an English man, was an aid worker in vanni and feel that the genocidal behaviour of Sri Lankan government and its armed forces must be exposed to save the Tamils. Muthukkumaran laid the foundation for the political recognition of Tamil Eelam struggle. Let's hope Tim will make the next necessary step for establishing the right to self determination of Tamils. மின்னஞ்சலில் கிடைத்தது.
-
- 1 reply
- 1.7k views
-
-
35 000 மேல் மக்கள் கொலை; இராசயனங்கள் கொண்டு உடலங்களை எரிக்கும் ராணுவம்; உடனடியாக ஐநாவை இதனை செய்மதி படம் எடுக்க வேண்டுகோள் விடுங்கள்.அல்லது இனம் இருந்த அடையாளமும் இல்லது போய்விடும் The real culprits behind Sri Lankan war; more than 50,000 killed In Sri Lanka, no access to carnage until victory speech, UN lowers expectations
-
- 1 reply
- 2.1k views
-
-
தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகள் தலைவரின் சிந்தனைகள் என்ற புத்தகத்திலிருந்து மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உதிர்த்த சில சிந்தனைத்துளிகள் _40685781_203prab-ap * இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில் வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன. தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை. * உண்மையில் எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கையில் தங்கியிருக்கவில்லை. எமது வெற்றியானது எமது கையில் எமது பலத்தில் எமது உறுதிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது…
-
- 0 replies
- 4.5k views
-
-
18/05/2009, 10:35 [சுடர்நிலா] மருத்துவர்கள் தடுத்துவைப்பு ஆனால் ஐ.நா.விடமிருந்து ஒரு குரலுமில்லை: இன்னர் சிட்டி பிறஸ் மிக அவலமானதும் இராணுவத்தின் கொடூரத்தாக்குதலின நடுவிலும் நின்று காயமடைந்த மக்களுக்கு மருத்துவம் புரிந்த 6 வைத்தியர்களை சிங்கள இராணுவமானது வெளித்தொடர்பேதும் இல்லாமல் ஓமந்தையில் தடுத்துவைத்திருக்கிறதாக தெரிய வருகிறது. இது தொடர்பில், ஐ.நா. ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதையிட்டு இன்னர் சிட்டி பிறஸ் செய்தி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. முள்ளிவாய்க்காலில் இறுதிவரை பணிபுரிந்த மருத்துவர் சத்தியமூர்த்தி, மருத்தவர் சண்முகராஜா, மருத்துவர் வரதராஜா மற்றும் ஏனைய 3 மருத்துவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் ஓமந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும…
-
- 0 replies
- 672 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் ஒத்திவைத்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் நாளை காலை 8:30 நிமிடத்துக்கு தொடங்கும் எனவும் அறிவித்திருக்கின்றார். ஜோர்தானில் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச, நேற்று அவசரமாக கொழும்பு திரும்பினார். நேற்று மாலையிலேயே தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு சிறப்பு உரை ஒன்றை அவர் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உரை நாளை காலை நாடாளுமன்றத்தில் இடம்பெறும் என பின்னர் தெரிவிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இறுதிப்பகுதியும் நேற்றுடன் விடுவிக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையிலேயே அவரது உரை …
-
- 0 replies
- 713 views
-
-
இலங்கை நிலவரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்று விசேட கூட்டம் : இலங்கை நிரவம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் நடைபெறவுள்ள இலங்கை விவகாரம் குறித்த சந்திப்பினைத் தொடர்ந்து 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளனர். இலங்கையில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனி…
-
- 1 reply
- 1.3k views
-
-
மகிழ்ச்சியில் கொண்டாடித் திளைக்கிறது தென்னி லங்கை. தெற்கு எங்கும் வெற்றிக் களிப்பு. பேருவகை ஆரவாரம். எதிரி தேசத்தை அடியோடு வீழ்த்திய சந் தோஷம். சிறுபான்மையினரான தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிவிட்ட பெருமிதத்தில் வெடிக்க வைக்கப்படும் பட்டாசுகளால் தலைநகரம் அதிர்கின்றது. இனி என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி. சர்வதேசம் கைவிட்டுவிட்டது. "தொப்புள் கொடி"உறவுகளும் எதிர்பார்த்ததைச் செய்யவில்லை. அல்லது செய்ய முடியாமல் போயிற்று. இனி, அடக்குமுறைக் குள் நசிந்து கிடப்பதுதான் வாழ்வு என்றாகி விடும் என்ற அவநம்பிக்கையின் எல்லையில் தமிழினம். "தர்மத்தின் வாழ்வு தன்னை ‹து கவ்வும். எனினும் தர்மம் ஒரு நாள் வெல்லும்." என்பதுதான் மானுடத் தின் அசையாத நம்பிக்கை. இன்று நிலைமை என்…
-
- 0 replies
- 2k views
-
-
வணங்கா மண் பயணத்தை ஆரம்பித்தது At 2200h (French Summer Time UTC +2) on 7 May 2009 the Mercy Mission ship, “Captain Ali” (IMO: 6619920) set sail from Fos-Sur-Mer, France on the 2nd leg of the “Mercy Mission to Vanni”. The Captain Ali is carrying approximately 884 metric tons of food, medicine, and other essential humanitarian relief items destined for the 330,000 Tamil civilians in the Vanni area of Northern Sri Lanka displaced by the war. The “Mercy Mission to Vanni” began the 1st leg of its journey from the Port of Ipswich, UK on 20 April 2009. VANANGAMAN - Mercy Mission to Vanni Ship En Route to Sri Lanka - More Photos will be updated S…
-
- 3 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களை களைவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்காவின் சமாதான முன்னெடுப்புக்களின் ஒருங்கிணைப்பாளருமான எரிக் சொல்ஹெய்ம், சுயாதீன மதிப்பீட்டுக் குழுவை போர் நடைபெறும் பகுதிக்கு அனுப்புவதே தமக்கு முன்னுள்ள தற்போதைய பணியாகும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அனைத்துலக ஊடக நிறுவனமான ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.05.09) நான் பல தடவைகள் தொடர்பில் இருந்தேன். அனைத்துலக சமூகத்திடம் அவர்கள் தமது ஆயுதங்களைக் கையளிப்பதற்கு தயாராக உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். போர் இடம்பெறும் பகுதியில் உள்ள காயமட…
-
- 0 replies
- 742 views
-
-
போர்ப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு போரில் ஈடுபட்டுள்ள தரப்புக்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கும் புனித பாப்பரசர் ஜோன் போல், அவர்களுக்கு உடனடித் தேவையாகவிருக்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவதற்கு உதவி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். வத்திக்கான் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவரின் வழமையான ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே புனித பாப்பரசர் இதனைத் தெரிவித்தார். ஆன்மீக ரீதியாக அனைத்து இலங்கையர்களுடனும் தான் நெருக்கமானவராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் புனித பாப்பரசர், இலங்கைத் தீவில் அமைதி ஏற்படவேண்டும் என பிர…
-
- 0 replies
- 504 views
-
-
புலியின் ஸினைபர் தாக்குதலுக்கு ஆளான ஒரு சிங்கள ஆர்மிகாரன். http://www.liveleak.com/item?a=view&token=e2c_1241612264
-
- 4 replies
- 3.5k views
-
-
வடபகுதியில் கடும் போர் இடம்பெற்ற வேளையிலும் இறுதிவரையில் அங்கிருந்து பணியாற்றிய மருத்துவர்கள் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு எந்தவிதமான வெளித்தொடர்புகளும் இல்லாத வகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும் அதனையிட்டு ஐ.நா. மௌனமாக இருப்பதையிட்டு 'இன்னர் சிட்டி பிறஸ்' கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் கடந்த பல மாதகாலமாக இரவு பகலாக படுகாயமடைந்த நோயாளர்களைப் பாதுகாப்பதற்காக கடுமையாக உழைத்த இந்த மருத்துவர்கள், அங்கிருந்து வெளியேறி வவுனியா வந்தபோது ஓமந்தையில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மருத்துவர்களான வரதராஜா, சண்முகராஜா, த.சத்தியமூர்த்தி உட்பட ஆறு மருத்துவர்கள் இவ்…
-
- 1 reply
- 574 views
-
-
-
A key Tamil Tiger leader has spoken exclusively to Channel 4 News, saying their chief is still alive and they want a political solution. Alex Thomson reports. In an exclusive interview, LTTE Tamil Tigers head of international relations Selvarajah Pathmanathan said: - Tamil Tiger leader Velupillai Prabhakaran is in the beseiged zone with 2000 Tamil fighters - He spoke to by phone to Prabakharan for four hours and the orders to lay down arms came from him - This is not a surrender, they are laying down arms to protect 25,000 injured Tamils in the area - 3000 civilians have been killed in the area in the last 24 hours - The doctors who were spe…
-
- 2 replies
- 3k views
-
-
இது இன்று இறுதியாக வந்த செய்தி...Times online UK இல வந்துள்ளாது.... உண்மை பொய் தெரியாது...ஆயினும் அவசியம் கருதி பிரசுரிக்கின்றேன். விரும்பினால நிர்வாகம் இதனை தூக்கவும் நெஞ்சம் வெடிக்கும் கனதியுடன் இங்கு பிரசுரிக்கின்றேன் மூலம்: http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6301821.ece THE satellite call came in the early hours of yesterday. The Tamil Tiger leader was desperate. For the first time in their decades-long struggle against the Sri Lankan government, the rebels were offering to lay down their weapons in return for a guarantee of safety. “Don’t say surrender,” insisted the leader, speaking calmly, despite the obvious desperation o…
-
- 47 replies
- 8.5k views
-
-
படுகாயமடைந்த 25 ஆயிரம் தமிழர்கள் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பரிதாப மரணம்: களத்தில் இருந்து சூசை தகவல் [ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 04:33 பி.ப ஈழம்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டு, உடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்திருக்கின்றார். சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 25 ஆயிரம் பேர் மருத்துவப் பராமரிப்புக்கள் எதுவும் இல்லாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில் மரணமடைந்திருப்பதாகவும் சூசை இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக ஊடகங்…
-
- 2 replies
- 729 views
-
-
முதல் நன்றி எவரின் கணிப்புகளை கண்டும் மயங்காமல் ஓட்டளிப்பவர்கள் நாங்கள் என நிருபித்ததற்கு இரண்டாம் நன்றி ஈழ பிரச்னை முக்கியமான பிரச்சினையாக நினைத்து ஈழ மக்கள் எங்கள் தொப்புள் கோடியே என நிரூபிப்பதற்காக வேறு அனைத்து வகையிலும் பிறரை விட நல்லாட்சி புரிந்து கொண்டு இருக்கும் திமுக / காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து ஏறத்தாழ 57% எதிராக நல்ல வாக்குகளாக வாக்களித்ததற்கு மூன்றாம் நன்றி ஒரே பக்கம் சாய்ந்து பின்னர் அழுதுகொண்டு இருக்காமல் ஒரே பிரச்னையான ஈழ பிரச்சனைக்காகவே திமுக கூட்டணியிலிருந்து 10 க்கும் மேற்பட்ட இடங்களை பிடுங்கி எதிர்கட்சிக்கு கொடுத்ததற்கு. மேலும் இப்போது பத்துதான் ஒழுங்கா ஈழ பிரச்னையை கையாளவில்லைஎன்றால் மொத்தம் பறிபோகும் ( சட்டமன்ற தேர்தல் ) என தி…
-
- 11 replies
- 3.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளனர் என நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார். எரிக் சொல்கைம் விடுதலைப் புலிகளுடன் பல தடவைகள் இன்று(17.05.2009) தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு போரை நிறுத்தி மூன்றாம் தரப்பினரை போர்ப் பகுதிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றாலும் இன்னும் போர் முடிவுபெறவில்லை என எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.நோர்வே ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நன்றி: http://www.tamilseythi.com/world/erik-solh...2009-05-17.html
-
- 0 replies
- 2.3k views
-