ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143653 topics in this forum
-
-
- 0 replies
- 2.7k views
-
-
மட்டக்களப்பில் குண்டு வெடிப்பு: காவற்துறை அதிகாரி உட்பட இருவர் பலி; காவல்துறையினர் உட்பட 11 பேர் காயம் [ புதன்கிழமை, 21 சனவரி 2009, 02:50.30 AM GMT +05:30 ] மட்டக்களப்பு தலைமை காவற்துறை நிலையத்திற்கு அண்மையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காவற்துறை அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்தாகவும் காவல்துறையினர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந் பொது மகன் ஒருவர், ச…
-
- 0 replies
- 813 views
-
-
-
வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினரின் விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இந்த இராணுவ விமானம் சற்று முன்னரே வீழ்த்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது. இது குறித்து சிறீலங்கா அரச தரப்பிலிருந்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தோ எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/lanka-...2009-01-21.html
-
- 43 replies
- 10.9k views
-
-
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு முழக்கங்கள் எழுப்பினர். சென்னையில் லயோலா கல்லூரி, மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு அமைதியான முறையில் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர். …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
-
வன்னிப்பகுதியில் யுத்த பிரதேசத்தினுள் சிக்கியுள்ள மக்களின் பாதுகாப்புக்காக மோதலற்ற பிரதேசம் அறிவிப்பு வீரகேசரி இணையம் 1/21/2009 6:51:40 PM - விடுதலைப் புலிகளின் பிரதேசத்தினுள் இருக்கும் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் அங்கு வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மோதலற்ற பிரதேசம் ஒன்றினை இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வன்னி இராணுவ தலைமையகம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் 25 ஆம் கிலோ மீற்றரில் இருந்து 32 ஆம் கிலோ மீற்றர் மைல் கல் வரையிலான சுமார் 7 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தில் அந்த வீதியின் வடக்குப் பக்கமாக உள்ள சுமார் 4 கிலோ மீற்றர் …
-
- 4 replies
- 1.6k views
-
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தனது நாட்டையும் மக்களையும் விட்டு வெளியேறும் நோக்கமற்றவர் என இந்தியாவின் முன்னாள் இராணுவ புலனாய்வு துறை அதிகாரியான ஹரிகரன் தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா இராணுவ தளபதி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் நாட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்று தெரிவித்த கருத்து தொடர்பிலேயே ஹரிகரன் இந்த பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ளார் தனது போராட்டத்தை கைவிட்டு வெளியேறும் மனோபாவம் பிரபாகரனுக்கு கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் தமிழீழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சி என்பது பிரபாகரன் என்ற ஒரு தனிமனிதனை மையப்படுத்தியதாகவே நிகழ்ந்துள்ளதாக பிரபாகரனின் வாழ்கை வரலாற்றை எழுதிய இந்திய ஊடகவியலாளர் நாரணசுவாமி தெரிவித்துள்ளார் விடுதலைப்புலிகள்…
-
- 1 reply
- 2.8k views
-
-
Navy fires at high flying aircraft Navy had last night fired at a suspicious high flying aircraft over Mulativu. Defence sources added that LTTE is only in possession of low flying aircraft. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=38377
-
- 9 replies
- 4.6k views
-
-
சிங்களவர்-தமிழர்களுக்கு இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி: விமல் வீரவன்ச [ புதன்கிழமை, 21 சனவரி 2009, 03:08.15 AM GMT +05:30 ] சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பேதத்தை ஏற்படுத்த சர்வதேச அமைப்புக்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது படையினர் மற்றும் பொதுமக்கள் பெரும் உள ரீதியான தாக்கங்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச நிறுவனங்கள் வெளியிடும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நூலக கேந்திர மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட வடக்கு பிரதேச…
-
- 0 replies
- 2.1k views
-
-
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையே நடைபெற்ற நேரடி மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 503 views
-
-
இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றத்தை தலையிடக் கோரிக்கை [ புதன்கிழமை, 21 சனவரி 2009, 04:28.50 AM GMT +05:30 ] இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச நீதிமன்றம் தலையிட்டு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ். பிரபாகரன் கோரியுள்ளார். சர்வதேச மத்தியஸ்தர்கள் கவுன்ஸில் இயக்குநர்களில் ஒருவராகவுள்ள எஸ்.பிரபாகரன் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு:- இலங்கைத் தமிழர்களை முற்றிலுமாக அழிக்கும் விதத்தில் அந்நாட்டு அரசு போரைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது போன்ற மனிதப் படுகொலைகளை உலகில் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது. இலங்கையில் இயல்பு நிலை திரும்ப உலகநாடுகள் முயன்று வருகின்றன. சர்வதேச மத்திய…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையினை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று கையளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 407 views
-
-
" சுதந்திரத் தமிழீழம் மலருமா , மலராதா என்பது இன்று கேள்வியல்ல, மாறாக தமிழீழத்தின் எல்லையின் இருபுறத்திலும் சிங்களம் பலியிடத் தயாராக இருக்கும் உயிர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதுதான் இன்றைய கேள்வி" தமிழ்நெட் இணையத் தளத்தில் நடத்தப்படும் கருத்துக்கள் பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதை இங்கே இணைத்திருக்கிறேன். 'Lives lost yielding nothing to Colombo' [TamilNet, Tuesday, 20 January 2009, 17:59 GMT] "It is not a question of whether Tamil Eelam will become independent. Rather, it is a question of how many lives, on both sides of the Tamil Eelam border, the Sinhala regime(s) are prepared to waste in the process," write…
-
- 2 replies
- 2.6k views
-
-
தமிழின அழிப்பினைத் தீவிரப்படுத்துவதற்காக சிங்கள அரசாங்கம் மருத்துவ சேவைகளையும் தற்போது கையில் எடுத்துச் செயற்படுகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 651 views
-
-
விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல : இங்கிலாந்து அமைச்சர் திங்கள், 19 ஜனவரி 2009( 20:53 IST ) எல்லா அமைப்புகளையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது, ஒவ்வொரு அமைப்பையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு அல்ல என்று இங்கிலாந்து அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார். மும்பையில் பயங்கரவாதத் தாக்குதலிற்கு உள்ளான தாஜ்மஹால் நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: அமெரிக்காவில் அல்-காய்டா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டது…
-
- 32 replies
- 5.6k views
-
-
வீரகேசரி இணையம் - மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் பொலிஸ் சார்ஜனொருவரும் பொதுமகனொருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸ் காவலரண் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்படடிருந்த சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு தூர இயக்கி கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட பொதுமகன் சின்ன உப்போடையைச் சேர்ந்த முற்சக்கர வண்டிச் சாரதியான வல்லிபுரம்(வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் வழமை போல் பாடசலையில் மாணவர்களை விட்டு விட்டு பெற்றோல் நிரப்புவதற்காக அருகிலுள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு சென்றபோது இ…
-
- 0 replies
- 883 views
-
-
வீரகேசரி நாளேடு - இந்தியா, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பாராளுமன்ற சம்பிரதாயங்களை ஆராய்வது அவசியமானது. எனினும் பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய உரைக்கு இடையில் பாடல் ஒலிக்கின்றது என்று ஐ.தே.க. வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ஐ.தே.க.வினால் திகதி குறிப்பிடாமல் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்றைய பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருக்காமை தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்ச்சைக்கு மத்தியில் எழுந்த ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற சம்பிரதாயங்களை தேடி அறிந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசி…
-
- 0 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு - தமிழக சட்ட சபையில் இன்று சகல கட்சிகளும் இலங்கைப் பிரச்சினை குறித்து குரல் எழுப்பும் என தெரிவிக்கப்படுகிறது. தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. ஆண்டில் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. தமிழகத்தில் கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் திருமங்கலம் இடைத் தேர்தலை சந்தித்த சூட்டுடன் இந்தக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் இலங்கைப் பிரச்சினையை சகல கட்சிகளுமே அவரவர் கோணத்தில் எழுப்பவுள்ளன. திருமாவளவன் விவகாரத்தை வைத்து தி.மு.க. வை காங்கிரஸே நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் கூட்டணியை விட்டு விலகியிருந்தாலும் திருமாவளவன் விஷயத்தில் மட்டும் தி.மு.க. வுக்கு பா.ம.க. துணை நிற்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி இணையம் - ஜனநாயக நீரோட்டத்தில் இணந்துள்ள அமைப்புகள் பொது மக்களிடமோ அல்லது வர்த்தகர்களிடமோ அல்லது வேறு எவரிடமேனும் கப்பம் கேட்டால் அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் எவ்வித வித்தியாசமும் இராது என கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எட்வின் குணதிலக்க நேற்று மட்டக்களப்பு நகரில் வர்த்தகர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடை பெற்ற இக்கூட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களும் கட்டிட ஒப்பந்தக்காரர்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பொலிஸ் மா அதிபர், ''எமக்குக் கிடைத் தகவலின்படி ஆயுத போராட்டத்திலிருந்து ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்துள்ள சில அமைப்புகள்…
-
- 4 replies
- 1k views
-
-
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு வந்த இலங்கையைச் சேர்ந்த 120 பக்தர்கள், நாடு திரும்ப வேண்டிய விமானத்தை தவற விட்டதால், கொழும்பு செல்ல முடியாமல் சென்னையில் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர் . யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 பக்தர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு இருமுடி கட்டி கேரளாவுக்கு சென்றனர். குருசாமி ரவிசாமி என்பவரின் தலைமையில் இந்தத் தமிழ் பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொண்டனர். ஐயப்ப தரிசனத்தை சிறப்பாக முடித்து விட்டு கடந்த 18ம் தேதி காலை பத்தரை மணி விமானத்தில் கொழும்பு திரும்ப முன்பதிவு செய்திருந்தனர். திட்டமிட்டபடி 17ம் தேதி திருச்சி வந்த அவர்கள் அங்கிருந்து பஸ்ஸைப் பிடித்து சென்னை வந்தனர். ஆனால் அன்றைய தினம் விழுப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் சிறிலங்கா படை புலனாய்வாளர்களால் இன்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கையில் அமைதி தவழ்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு இனியும் காலந்தாழ்த்தாது மேற்கொண்டு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தவாறு நாளும் வதைப்படும் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்று இந்த அரசு கேட்டுக்கொள்கிறது என்று தமிழ்நாடு ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 419 views
-