ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அவுஸ்திரேலியாவின் முன்னாள் ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் விமானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு பரிசாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெள் ஸ்டீபன்ஸ், பீச்கிராப்ட் KA350 விமானத்தை வழங்கும் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார். பீச்கிராஃப்ட் கேஏ350 கிங் ஏர் ஒரு நவீன இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானமாகும். “இந்தப் பரிசு இலங்கையின் கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்தும். இது நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான எங்கள் நெருங்கிய ஒத்துழைப்பின் மேலும் ஒரு நிரூபணமாகும்” என உயர் ஸ்தானிகர் ட்வீட் மூலம் தெரிவித்தார். https://thinakkural.lk/article/253475
-
- 4 replies
- 553 views
- 1 follower
-
-
சிங்கப்பூரில் ஆகக்கூடிய வருமானத்தை பெறக்கூடிய தாதியர் தொழில் துறையில் இலங்கையருக்கு தொழில் வாய்ப்புகான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த தொழில் வாய்ப்புகான ஊழியர்களை குழுக்களாக அனுப்பும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிங்கப்பூருக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும் 36 பேரைக்கொண்ட முதலாவது தாதியர் குழுவினருக்கு விமான பயணச்சீட்டுகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கிவைத்தார். https://thinakkural.lk/article/253465
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான கடிதம் அண்மையில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டது. 2022 வருடாந்த மற்றும் பத்தாண்டு இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி, இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களது சேவைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கடமைகளுக்கு சமூகமளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இது சட்டவிரோதமான செயலாகும். அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அவர்களது பாடசாலைகளில் இருந…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
Published By: NANTHINI 13 MAY, 2023 | 11:20 AM தலைமன்னாரில் 3 பிள்ளைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வியாழக்கிழமை (11) பிற்பகல் 3.30 மணியளவில் வீதியால் சென்றுகொண்டிருந்த மூன்று பெண்பிள்ளைகளை அவ்வழியே வாகனத்தில் பயணித்த இருவர் கடத்த முயற்சித்துள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அந்த ஊருக்கு பொருட்களை விற்கச் சென்ற வாகன சாரதி, அவரது உதவியாளர் என இருவரை சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கட…
-
- 0 replies
- 428 views
- 1 follower
-
-
13 MAY, 2023 | 12:14 PM வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நீலியாமோட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வெளியில் சென்றுவிட்டு இன்று அதிகாலை தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது வீட்டின் அறையில் உறங்கி கொண்டிருந்த தனது மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பெண் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்ய…
-
- 3 replies
- 469 views
- 1 follower
-
-
காலிமுகத்திடல் போராட்டம்-பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்-நாமல் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்தக் போராட்டத்தின் அங்கமாக இருந்தவர்களிடம் சில வெளிநாட்டு சக்தியின் பங்கு இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே உரிய நேரத்தில் மேலதிக தகவல்கள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எங்களுடன…
-
- 0 replies
- 317 views
-
-
Published By: NANTHINI 13 MAY, 2023 | 11:23 AM யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி கோவில் பகுதியில் வைத்து இருவர் வெள்ளிக்கிழமை (12) ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே முச்சக்கரவண்டியில் ஹெரோயினை கொண்டு சென்ற இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைதான பனிப்புலம், பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான நபரிடமிருந்து 2 1/2 கிராம் ஹெரோயினும், தொட்டிலடி, சங்கானை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது. இந்நிலையில், கைதாகி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் த…
-
- 1 reply
- 561 views
- 1 follower
-
-
யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு – கட்டுப்படுத்த கோரிக்கை! May 12, 2023 யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதனால் ஆட்கள் அற்ற தனியார் காணிகளுக்குள் உள்ள பனை மரங்களில் நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்கின்றனர். காணிக்குள் விழும் பனம் பழங்கள் ஊடாகவே பனாட்டு செய்வதாகவும், பனம் பழங்களின் விதைகள் கொண்டு, பனம் பாத்தி செய்து அதன் ஊடாகவே பனம் கிழங்கு, ஒடியல் என்பவற்றை பெற்றுக்கொள்வதாகவும் ச…
-
- 14 replies
- 946 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதே ஜனாதிபதியின் உண்மையான இலக்காக இருக்க வேண்டும் - சுதந்திரக் கட்சி Published By: Nanthini 12 May, 2023 | 09:48 AM (எம்.மனோசித்ரா) வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாக இருந்தால் அதில் எவ்வித சிக்கலும் இல்லை. நாம் அதிகாரப்பகிர்வை எதிர்ப்பவர்கள் அல்லர். ஆனால், தேர்தலை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார் என்றால் அது நியாயமற்றது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 371 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரின் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை சபைக்கு அவர் தெரிவித்தார். அரச தரப்பு எம்.பி.யான பிரேம்நாத் சி. தொலவத்தவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே.அதுல எச்.டி சில்வா, ஷெனாலி டி.வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட…
-
- 15 replies
- 679 views
-
-
Published By: DIGITAL DESK 3 12 MAY, 2023 | 03:35 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் அரசியல் தலையீடின்றி, உண்மையில் வறுமையில் இருப்பவர்கள் யார் என்பதனை அடையாளம் கண்டு வழங்க வேண்டும். இனங்களுக்கு இடையிலான சமத்துவ கொள்கை பின்பற்றப்பட்டிருந்தால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைந்திருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும்…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 12 MAY, 2023 | 04:19 PM யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடையில் வியாழக்கிழமை வாங்கிய கொத்து ரொட்டியினுள் பழுதடைந்த இறைச்சி காணப்பட்டதாக நபர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் கடையினை சோதனையிட்ட போது , பழுதடைந்த குளிர் சாதன பெட்டியினுள் சமைத்த , சமைக்காத கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி என 45 கிலோ இறைச்சி மீட்கப்பட்டதுடன், உணவகத்தின் பல சுகாதார சீர்கேடுகள்…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மாத்தறை, காலி மாவட்டங்களிலும் இன்றும் (12) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது. வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலவும் Mocha சூறாவளியின் தாக்கத்தால் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்கள் உள்ளிட்ட மேலும் சில பிரதேசங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல், தென் கடற்பிராந்தியங்களிலும் மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் ம…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
ஒரு வாரத்திற்குள் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவேன்-மேர்வின் சில்வா! தனக்கு சந்தர்ப்பம் வழங்கும் பட்சத்தில் நாட்டில் டெங்கு நோய் பரவலை ஒரு வாரத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை தாம் ஆட்சிக்கு வந்தால் டெங்கு ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிகளுடனும் சுகாதார அமைச்சுடனும் பேச்சுவார்த்தை நடத்துவன் என்றும் தெரிவித்துள்ளார். இப்போது அரசியல்வாதிகள் இந்த திட்டத்தில் ஈடுபடவில்லை, என்றும் தற்போதைய சுகாதார அமைச்சர் எனது நண்பர், அவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.என்றும் அவர் கூறினார். அத்துடன் அமைச்சர் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டும…
-
- 5 replies
- 256 views
-
-
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது! – சவேந்திர திட்டவட்டம் யாழ்., தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்ற முடியாது.” – இவ்வாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது. இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டி…
-
- 29 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்! இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் துபாயிக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப…
-
- 10 replies
- 956 views
-
-
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். …
-
- 9 replies
- 1.2k views
-
-
காலிமுகத்திடல் போராட்டம்-பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்-நாமல் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்தக் போராட்டத்தின் அங்கமாக இருந்தவர்களிடம் சில வெளிநாட்டு சக்தியின் பங்கு இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே உரிய நேரத்தில் மேலதிக தகவல்கள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எங்களுடன…
-
- 0 replies
- 200 views
-
-
காலிமுகத்திடல் போராட்டம் மே 9இன் பின்னரே வன்முறையாகியது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் மே 9ஆம் திகதியன்று காலை ஆதரவாக ஒன்றுகூடிய தரப்பினர் காலி முகத்திடலுக்கு சென்று அமைதிவழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே 9 ஆம் திகதிக்கு பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை 2 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், “அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுற…
-
- 0 replies
- 307 views
-
-
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதியின் பிறகு தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை தேசிய மின் கட்டமைக்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கு சூரிய படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கு சூரியப்படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படும். இதற்காக ஒரு வீட்டுக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் என அம…
-
- 6 replies
- 493 views
- 1 follower
-
-
16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் கைது !! 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் இன்று காலை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதான அவர், கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர் எனவும் சந்தேக நபர் திருமணமானவர் என்றும் அவருக்கு எதிராக மனைவியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் போது எடுத்த வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்த…
-
- 0 replies
- 318 views
-
-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை அனுப்ப முயன்ற குழு கைது !! 33 பேரை அவுஸ்ரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற 5 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 33 பேரும் தலா 2 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2023/1331643
-
- 0 replies
- 199 views
-
-
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லம் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டம்! Vhg மே 11, 2023 இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லம் விடுவிக்கப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயார் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரின் பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். 15 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த மூன்று தசாப்த கால கொடூர உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக முல்லைத்தீவு- அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணியை தம்மிடம் மீளப் பெற்றுக்கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் நிறைவடைந்து…
-
- 0 replies
- 321 views
-
-
Published By: VISHNU 07 MAY, 2023 | 07:05 PM சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன. விகாரைகளை கட்டி, அதை பராமரிக்க ம…
-
- 13 replies
- 890 views
- 1 follower
-
-
இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை இந்தியா நீடித்துள்ளது! அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா மேலும் நீடித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு இந்தியாவால் சுமார் 4 பில்லியன் டொலர் அவசர உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த கடன் உதவியின் ஒரு பகுதியான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்திய அரசாங்கம் நீடித்துள்ளது. …
-
- 5 replies
- 336 views
-