ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம் வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் இன்று(11) மற்றும் நாளைய(12) தினங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. நல்லிணக்க பொறிமுறைகள், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, காணி விடுவிப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள டெலோ மற்றும் புளொட் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இனப் பிரச்சினைக்கு தீர்வு – சமஷ்டி என்ற அடிப்படையிலேயே இந்த பேச்ச…
-
- 17 replies
- 940 views
-
-
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (10) நண்பகல் 12.00 மணி முதல் நாளை (11) நண்பகல் 12.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று காலை 08.30 மணியளவில் 8.80N மற்றும் 88.90Eக்கு அருகில் மையம் கொண்டது. இது இன்று மாலையில் புயலாக வலுவடைந்து பின்னர் மத்திய வங்கக் கடலில் நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று நாளை இலங்கை வரவுள்ளது. கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம், இந்தாண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக IMF ஊழியர்கள் குழு மே 11 முதல் 23 ஆம் திகதி வரை இலங்கையில் இருப்பார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக பங்கேற்கவுள்ளார். https://thinakkural.lk/article/252919
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
Published By: VISHNU 10 MAY, 2023 | 09:02 PM இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மே 20-ஆம் திகதிக்குள் விடுவிக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாரிய போராட்டம் வெடிக்கும் என இராமநாதபுரம் மீனவ சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என குறிப்பிட்டுள்ள சங்கத்தின் செயலாளர் இது தொடர்பான மகஜரை இந்திய மத்திய அரசின் அதிகாரிகளிடம் கையளிப்பதற்காக தமிழக முதலமைச்சரிடம் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 65 மீனவர்களைத் தவிர, 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தி…
-
- 8 replies
- 703 views
- 1 follower
-
-
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய படலங்களை வழங்கும் நடவடிக்கை, அமைச்சரவையின் அனுமதியின் பிறகு தொடங்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை தேசிய மின் கட்டமைக்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கு சூரிய படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கு சூரியப்படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படும். இதற்காக ஒரு வீட்டுக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் என அம…
-
- 6 replies
- 493 views
- 1 follower
-
-
முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்ற திட்டம் !! நாட்டில் தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் நாளை வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1331638
-
- 2 replies
- 267 views
-
-
இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை இந்தியா நீடித்துள்ளது! அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கிய கடனுதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா மேலும் நீடித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு இந்தியாவால் சுமார் 4 பில்லியன் டொலர் அவசர உதவி வழங்கப்பட்டிருந்தது. இந்த கடன் உதவியின் ஒரு பகுதியான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை அடுத்த ஆண்டு மார்ச் வரை இந்திய அரசாங்கம் நீடித்துள்ளது. …
-
- 5 replies
- 337 views
-
-
முன்னாள் போராளிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் இலங்கை அரசாங்கம்! Vhg மே 09, 2023 விசாரணைகள் என்ற பெயரில் முன்னாள் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்யலாம், அவர்களின் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முடக்கி விடலாம் என்று அரசு நினைக்குமாயின் அது அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிருக்கு எதிர…
-
- 2 replies
- 308 views
-
-
யாழில். அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு – குற்ற செயல்களுக்காக திருடப்படுகிறதா ? May 9, 2023 யாழ்ப்பாண நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.. அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் காவல் நிலையங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். வீடுகளுக்கு முன்பாக , கடைகளுக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு , ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்திடுவோம் எனும் நோக்கில் , மோட்டார் சைக்கிள் திறப்புக்களை எடுக்காமலும், மோட்டார் சைக்கிள்களை இயங்கு நிலையில் விட்டும் சிலர் செல்கின்ற சமயங்…
-
- 1 reply
- 229 views
-
-
Published By: VISHNU 09 MAY, 2023 | 07:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புள்ளிவிபரங்களின் பிரகாரம் தனிநபர் ஒருவரின் வருமானம் 13772 ரூபாவுக்கு குறைவாக இருந்தால் அது வறுமை நிலையாகும். அதன் பிரகாரம் தோட்டப்புறங்களின் வறுமை நிலையானது, சுமார் 56 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் அரசாங்கத்தின் நிவாரணங்கள் வழங்கும் திட்டத்தில் தோட்டங்களில் இருக்கும் குடும்பங்களில் 50 சதவீத்துக்கு அதிகமானவர்கள் இதற்கு உள்வாங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்த…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 5 09 MAY, 2023 | 01:50 PM ( எம்.நியூட்டன்) ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களுக்கு மேல் அனுமதிப்பது என்பது முட்டாள் தனமானது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றது என அறக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாடசாலையின் ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்களும் அதற்கு மேலும் மாணவர்களை அனுமதித்தல் என்னும் கல்வி அமைச்சின் முடிவானது முட்டாள்தனமானது. இதனால் கிராமப்புற பாடசாலைகள் ஆயிரக்கணக்கில் மூடப்படும். மாணவர்களும் பெற்றோர்களும் நகர்ப்புறம்நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகும். கிராமங்களின் நிலவளம், தொழில்வளம், …
-
- 1 reply
- 413 views
- 1 follower
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரின் அறிவிப்பின்போதே இந்த விடயத்தை சபைக்கு அவர் தெரிவித்தார். அரச தரப்பு எம்.பி.யான பிரேம்நாத் சி. தொலவத்தவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் (திருத்த) சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்க கோரி ஓய்வுபெற்ற இராணுவ பிரிகேடியர் கே.அதுல எச்.டி சில்வா, ஷெனாலி டி.வடுகே மற்றும் ஜெஹான் ஹமீட் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட…
-
- 15 replies
- 679 views
-
-
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை! சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும்,இன்று (செவ்வாக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்கள் மீன்பிடி இழுவை படகுகளில் கடல் வழியாக பயணம் செய்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சித்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து, கைது செய்யப்பட்ட இவர்கள், நாடு கடத்தப்படாமல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெ…
-
- 0 replies
- 325 views
-
-
92,000 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் இருகின்றனர் – அலி சப்ரி அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 92 ஆயிரத்து 435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்கு உள்ளோ அல்லது அதற்கு வெளியேயோ தமிழ் நாட்டில் தங்கியுள்ளனர் என்றார். தமிழகத்தில் தற்போது மொத்தம் 106 அகதிகள் முகாம்கள் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தமிழக அகதிகள் முகாம்களில் தற்போது 19,046 குடும்பங்களைச் சேர்ந்த 58,435 நபர்கள் தங்கியிருப்பதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார். சுமார் 10,000 குடும்பங்…
-
- 0 replies
- 198 views
-
-
Published By: DIGITAL DESK 5 09 MAY, 2023 | 02:03 PM (எம்.மனோசித்ரா) அரச வைத்தியசாலைகளில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கான மருத்துவ செலவுக்காக அறவிடப்படும் தொகை பல வருடங்களுக்கு புதுப்பிக்கப்படாமலுள்ளது. இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தற்போது வெளிநாட்டவர்கள் நாட்டில் சிகிச்சை பெறும் போது அல்லது சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது அவற்றுக்கு தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை விட பன்மடங்கு குறைவான கட்டண அறவீட்டு முறைமையே அரச வைத்தியசாலைகளில் காணப்படுகிறது. எனவே சுகாதார அ…
-
- 3 replies
- 301 views
- 1 follower
-
-
Published By: VISHNU 09 MAY, 2023 | 03:49 PM சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மறவன்புலோ சச்சிதானந்தம் அவர்கள் இன்றையதினம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது, இலங்கை சிவபூமி. பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர். நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள். தாயின் கருவறையில் வினைவழிப் பிறந்த மனிதரைக் கடவுளாகத் தமிழர் கொள்வதில்லை, சைவர் கொள்வதில்லை. …
-
- 7 replies
- 646 views
- 1 follower
-
-
முஸ்லிம்களின் சமூக சவால்களை கலந்தாலோசிக்க அமைச்சர் நஸீர் அஹமட் அவசர அழைப்பு (ஊடகப்பிரிவு) முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபை தயாரிக்கும் தருணம் வந்துள்ளது. இனியும், தனித்தனியாகச் செயற்பட்டு சமூக உரிமைகளை வெல்ல முடியாதென்பதே நிதர்சனமாகியுள்ளதாக அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முனைப்புடன் செயற்படுவதை நான் அறிவேன். எனவே, இழக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீளப்பெறவும்,இதனுடன் தொடர்புடைய ஏனைய பிரச்சினைகள் குறித்தும் …
-
- 1 reply
- 233 views
-
-
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்! இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் துபாயிக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப…
-
- 10 replies
- 956 views
-
-
போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்க வேலைத்திட்டம்!! யாழ்ப்பாணம் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன், சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்துடன் இணைத்து குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உதவி பிரதேச செயலாளர் சங்கீதா கோகுலதர்சன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் …
-
- 0 replies
- 161 views
-
-
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் 09 May, 2023 | 10:22 AM (நா.தனுஜா) உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் பாதகமான தன்மை குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கேட்டறிந்துகொண்ட ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட அதிகாரிகள்குழு, அச்சட்டமூலம் தொடர்பில் தமது அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி…
-
- 0 replies
- 167 views
-
-
ஜனாதிபதி – தமிழ்க் கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று(09) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/ஜனாதிபதி-தமிழ்க்-கூட்டம/
-
- 7 replies
- 428 views
-
-
Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 05:08 PM ஓமான் நாட்டுக்கு பணிப் பெண்களாக வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு சித்திரைவதைக்குள்ளாகி இலங்கை தூதரகத்தில் தஞ்சடைந்து 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 74 பணிப்பெண்கள் தங்களை நாட்டிற்கு அனுப்புமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர். நாட்டிலுள்ள முகவர்கள் ஊடாக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற பணிப் பெண்கள் வீட்டின் உரிமையாளர்களால் அடித்தும், நெருப்பால் சூடு வைத்தும் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பாதுகாப்பான இட…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 05:37 PM மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரின் தனியார் கிளினிக்கிற்கு ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 9 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி சுமார் 5 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவமானது நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் தனியார் கிளினிக்கில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 9 மணியின் பின் கிளினிக் வளாகத்தினுள் நுழைந்த இரண்டு பேர் சிங்களத்திலும் தமிழிலும் பேசிக்…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 03:23 PM மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (8) துரித விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றில் வந்தவர்கள் இனிப்பு பண்டங்களை வழங்கி குறித்த மாணவரை பலவந்தமாக ஏற்றிச் …
-
- 6 replies
- 468 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 MAY, 2023 | 04:07 PM 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா கோவில்குளம் கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பட்டானிச்சூர் கமநலசேவை நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-