ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
Heavy fighting erupts in Kugnchup-paranthan [TamilNet, Wednesday, 24 December 2008, 08:14 GMT] The Liberation Tigers of Tamileelam (LTTE) fighting formations were engaged in a heavy fighting with the Sri Lanka Army (SLA) in Kugnchup-paranthan, where the SLA suffered a debacle a few weeks ago, according to initial reports from the area. Heavy fighting was reported from 4:00 a.m. in the village, which the SLA claimed it had occupied on Tuesday.
-
- 27 replies
- 5.8k views
- 1 follower
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பில் சிறிலங்கா இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையேயான போர் நடவடிக்கைகளில் ஆட்பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக வட கிழக்கிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களிலிருந்து பெருமளவிலான இராணுவத்தினரும், பொலிஸாரும் வன்னிக்களமுனைக்கு அனுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், அப்பகுதிகளில் மீண்டும் துணை இராணுவ குழுக்களின் உறுப்பினர்களை சிறிலங்கா அரசானது ஆயுதங்களுடன் இறக்கியுள்ளது. ..... http://www.orunews.com/?p=3108
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான மொழியறிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்றாக்கி விட்டது ஆங்கில அதிகாரம். சமீபத்தில் அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென்மத்திய பகுதியில் பல ஆயிரம் வருட பராம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசி பெண் மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்து போனார். இவள் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். அவளது மரணத்தோடு உலகிலிருந்து ஒரு மொழி முற்றிலுமாக மறைந்து போனது. இனி அந்த மொழி பேசும் இனக்குழு உலகில் யாருமில்லை. பல்கலைகழகங்களின் முயற்சியால் அந்தச் மொழி சொற்கள் சேகரிக்கபட்டுள்ளன. ஆனால் அதை …
-
- 0 replies
- 1.8k views
-
-
விமானப்படையால் புலிகளுக்கு ஏற்படுத்தக் கூடிய உச்சக் கட்ட இழப்பு எவ்வளவு ? நிலவரத்துக்காக களமுனையிலிருந்து கபிலன் வன்னியில் இலங்கை விமானப்படை கிளஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் குழு வாங்கி வந்ததே இந்தக் கிளஸ்டர் குண்டுகள். இதற்கு முன்னர் இலங்கை விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் எம்.கே-83 குண்டுகளையும், பதுங்கு குழிகளை அழிக்கின்ற லேசர் வழிகாட்டல் ஏவுகணைகளையுமே பயன்படுத்தி வந்தன. இப்போது விமானப்படை ரஷ்யாவிடம் இருந்து இரண்டு புதிய வகைக் குண்டுகளை கொள்வனவு செய்திருக்கிறது. அவற்றில் ஒன்று தான் கிளஸ்டர் குண்ட…
-
- 0 replies
- 2.8k views
-
-
வான் படையின் உதவியில் தங்கியுள்ள சிறிலங்காவின் இராணுவ நகர்வு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான தரைப்படையினரின் முயற்சிகளின் போது அவர்களுக்கு ஏற்பட்டு வரும் பாரிய இழப்புக்கள் காரணமாக வான்படையினரின் உதவிகளைத் தற்போது தரைப்படையினர் அதிகம் நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக கிளிநொச்சியை நோக்கியதான பல முனை நகர்வுகளின் போது சிறிலங்காத் தரைப்படையினர் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கில் படுகாயமடைந்தும் களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையிலும், அதனால் போரிடும் படைச் சிப்பாய்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உளவுரண் பாதிப்புகளினாலும் வான்படையின் உதவிகளை தரைப்படைத் தளபதி சரத்பொன்சேகா அதிகம் எதிர்பார்த்து நிற்பதாகவும், இதனால் தற்போது குண்டு…
-
- 0 replies
- 1.4k views
-
-
தென்பகுதிக்கு விடுமுறையில் செல்கின்ற படையினர் அப்பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் தினமும் கையொப்பமிட்டவாறே விடுமுறையைக் கழிக்க வேண்டும் எனவும் விடுமுறை முடிந்த பின்னர் மீண்டும் பணிக்குச் செல்லும்போது உரிய காவல் நிலையங்களில் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. படையில் இருந்து தப்பி ஓடுவோரின் தொகையைக் குறைப்பதற்கான ஏற்பாடாவே இதனை நோக்க வேண்டியுள்ளது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டம் : தம்மை விடுதலை செய்விப்பதாக அரசியல்வாதிகளால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கமைய தாம் விடுவிக்கப்படவில்லை எனவும், இதன்காரணமாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் களுத்துறை, வெலிக்கடை, பூசா, மகசீன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 1,200க்கும் அதிகமான கைதிகள் ஈடுபடவுள்ளனர். ஏற்கெனவே உண்ணாவிரதம் மேற்கொள்ள தாம் எடுத்த முடிவை அரசியல்வாதிகள் தந்த உறுதிமொழி காரணமாகக் கைவிட்டதாகவும் இம்முறை உறுதிமொழிகள் எதனையும் கேட்கப்போவதில்லை…
-
- 0 replies
- 583 views
-
-
சிறிலங்காவின் சனாதிபதியில் இருந்து இராணுவப் பேச்சாளர் வரையில் கிளிநொச்சி நோக்கியதான படைத்தரப்பினரின் முன்னேற்றம் தடைப்பட்டிருப்பதற்குக் காரணம் தேடத் தலைப்பட்டுள்ளனர். இந்த வகை யில் கடந்த வாரத்தில், சிறி லங்கா சனாதிபதி, இராணுவத் தளபதி, இராணுவப் பேச்சாளர் என ஒவ்வொருவரும் தம்மால் கண்டுபிடிக் கத்தக்கதான காரணங்களைக் கூறியுள்ளனர். இவர்கள் மூவரும் தெரிவித் துள்ள காரணங்களையும் தொகுத்து நோக்கின் பின்வரும் அம்சங்கள் முதன் மைப்படுத்தப்பட்டுள்ளன. 01.கிளிநொச்சியை கைப்பற்று வதற்காகப் படைத்தரப்பினர் அவசரப் படவில்லை. 02.அனுபவம் வாய்ந்த போராளி களை விடுதலைப் புலிகள் களத்தில் நிறுத்தியுள்ளனர். 03.விடுதலைப் புலிகள் கனரக மற்றும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர்.…
-
- 0 replies
- 1.6k views
-
-
வன்னிச் சிவிலியன்களின் நிலைமை குறித்து அரசாங்கம் அதிக கரிசனை காட்ட வேண்டும் - UNHCR : வன்னிச் சிவிலியன்களின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் அதிக கரிசனை காட்ட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் சிவிலியன்கள் தடுத்து வைக்கப்படக் கூடாதென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவன பிரதிநிதி வொல்டர் கெலின் தெரிவித்துள்ளார். வன்னியில் 200,000 முதல் 300,000 பேர் வரையில் இடம்பெயர்ந்திருப்பதாகவும் அரசாங்கம் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட…
-
- 1 reply
- 614 views
-
-
கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு போதுமான குடிநீர் கூட இல்லை மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வன்னியிலிருந்து 300க்கும் மேற்பட்ட மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் இரண்டு இடைத்தங்கல் முகாங்களில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடம்பெயர்ந்து வந்த மக்களை அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கூட சென்று பார்வையிட படைத்தரப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இடம்பெயர்ந்தவர்கள் வெளியிடங்களுக்கு செல்லவுமுடியாது வெளியில் உள்ள உறவினர்கள் வந்து பார்வையிட முடியாதளவுக்கு இறுக்கமான தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவி…
-
- 1 reply
- 639 views
-
-
அளம்பில் பகுதியில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 12/25/2008 9:23:23 PM - முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினருக்கும், புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு அளம்பில் ஊடாக நேற்று படையினர் முன்னேற முயற்சித்துள்ளனர். கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேற முயன்ற படையினரை வழிமறித்து புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 950 views
-
-
பரசூற் மூலம் கொத்தணிக் (கிளஸ்ர்) குண்டு வீச்சு திகதி: 24.12.2008 // தமிழீழம் // [வன்னியன்] கிளிநொச்சி மருத்துவமனையை அண்டிய பகுதிகளில் சிறிலங்கா வான்படை விமானங்கள் ‘பரசூற்' மூலமாக சர்வதேச ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகளை இறக்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. கொத்தணிக் குண்டுகளை இறக்கப்பயன்படுத்தப்பட்ட ‘பரசூற்' தற்போது அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 29ம் திகதி கல்லாறு இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையினர் கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்தியே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை அப்பகுதியில் கிடந்த குண்டுச் சிதறல்கள் மற்றும் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேவ…
-
- 32 replies
- 7.8k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை : திமுகவிற்கு காங்கிரஸ் எச்சரிக்கை டெல்லி : தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்பமொய்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், அண்மைக்காலமாக, தமிழகத்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது த…
-
- 1 reply
- 1.6k views
-
-
வெற்றியை நெருங்கும் வேளையில் நத்தார் செய்தி மிகவும் பொருத்தமானது - கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி வீரகேசரி நாளேடு 12/24/2008 11:10:31 PM - இலங்கை வாழ் மக்களிடம் மிக நீண்ட காலமாக குடிகொண்டிருந்த அவநம்பிக்கை என்னும் தடையை உடைத்து, பயங்கரவாதத்தை முறியடித்து வெற்றியை நெருங்கும் இவ்வேளையில் நத்தார் கொண்டு வரும் அன்பும் கருணையும் பொதிந்த செய்தி மிகவும் பொருத்தமானதாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நத்தார் பண்டிகையானது இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் சமாதானத்தின் இளவரசராக இவ்வுலகில் பிறந்த இயேசுநாதரின் பிறப்பு பற்றிய மகிழ்ச்சிகரமான செய்தியை உலகிற்குக் கொண்டு வர…
-
- 2 replies
- 1.5k views
-
-
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகளை வவுனியா பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மீட்டுள்ளனர். வவுனியா நகரில் நேற்றையதினம் சந்தேகத்திடமான நபர் ஒருவரின் நடமாட்டம் குறித்து அறிந்த இரகசியப் பொலிஸார் அந்த நபரை நகர் பகுதியிலுள்ள தேவாலயத்தில் கைதுசெய்ய முற்பட்டுள்ளனர். அதன்போது அந்த நபர் தன்னிடமிருந்த சைனட் வில்லையை உண்ண முற்பட்டதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாகவும் வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து பெற்ற தகவல்களையடுத்து இன்று காலை விஷேட பொலிஸ் அணி செட்டிக்குளம் புஞ்சிக்குளம் பெரியமுறிப்பு பிரதேசத்தின் காட்டு பகுதிக்கு சென்று தேடுதல் நடத்திய போது மிகவும் சக்தி வாய்ந்த குண்டுகளை மீட்டுள்ளனர். இதுவரையில்…
-
- 1 reply
- 3.3k views
-
-
ஈழத்தில் தினமும் அதிகரித்துவரும் மனித அவலத்தை தவிர்பதற்காகவும், தற்போது தாயகத்தில் இடம்பெயர்ந்து அல்லலுறும் எம் உறவுகளின் துயர் துடைப்பதற்காகவும், இயற்கை அன்னையின் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளின் புனர்வாழ்விற்காகவும் அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 'அவசரகால உதவி நிவாரணத்திட்ட நிதி சேகரிப்பு” நிகழ்வு இன்றையதினம் (25.12.2008) அவுஸ்ரேலியாவிலும், நியூசிலாந்திலும் நடைபெற்றது. இந்த நத்தார் வேண்டுதல் ரேடியோதொன் நிகழ்ச்சியானது, விக்ரோரிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் மெல்பேண் 3CR தமிழ்க்குரல் வானொலி ஊடாகவும் 24 மணி நேர இன்பத்தமிழ் வானொலியின் ஊடாகவும் நேரடியாக ஒலிபரப்பானதோடு, இவ் ஊடகங்களுடன் மெல்பேணின் 3ZZZ தமிழோசை, வானமுதம், வானிசை, மற்ற…
-
- 0 replies
- 674 views
-
-
படைத்தரப்பைச் சேர்ந்தவரை மீட்க புலிகளிடம் பேச்சுவார்த்தை: சிறிலங்கா இராணுவப் பேச்சாளளர் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 06:20 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] கிளாலி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையினை அரசாங்கம் மேற்கொள்ளும் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் உள்ளவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். அவரை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் வசம் படைத்தரப்பைச் சேர்ந்தவர் இரு…
-
- 15 replies
- 2.3k views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் தாமதம் ஏற்படும் - கெஹலிய ரம்புக்வெல்ல : தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் தாமதம் ஏற்படும் என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகரில் சிவிலியன்கள் இன்னமும் தங்கியிருப்பதனால் முழுவீச்சில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சுமார் 150,000 த்திற்கும் அதிகமான சிவிலியன்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் போது சிவிலியன்களுக்கு சேதம் ஏற்படக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையான உத்தரவு பிறப்பித்துள…
-
- 0 replies
- 1.8k views
-
-
அரச சார்பற்ற தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் மன்னார் மக்களுக்கான தனது பணிகளை நிறுத்தி வெளியேறத் தீர்மானித்துள்ளது. மன்னாரில் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசத்தில் இருந்தவாறு விவசாயம், வாழ்க்கைதர மேம்பாடு, சிறுவர் போசாக்கு, மற்றும் கடற்றொழில் ஊக்குவிப்பு என்பறவற்றிற்கு இந்த அமைப்பு உதவி புரிந்து வந்திருந்தது. சிறீலங்கா படைகளினால் மன்னார் வல்வளைக்கப்பட்டுள்ளபோது பலமுறை இடம்பெயர்ந்த மக்களுடன் இந்த அமைப்பும் இடம்பெயர்ந்து இயங்கி வந்தது. இந்த நிலையில் சிறீலங்கா அரசின் அறிவித்தலை அடுத்து வன்னியில் இருந்து வெளியேறி வவுனியாவில் இயங்கிவந்த ஒக்ஸ்பாம், தனது வடக்குப் பிரதேசத்திற்கான அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளது. http://www.tamilskynews.com/…
-
- 0 replies
- 607 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வது தொடர்பாக சிறிலங்காவின் முப்படைத் தளபதிகளுடன் அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 388 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டு;ள்ளதுடன் இதன்போது படையினருக்கு பலத்த இழப்பு எற்பட்டுள்ளதாகவும் ஆயதங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை பெரும் சூட்டாதரவுடன் படையினர் அளம்பில் ஊடாக முன்நகர்வை ஆரம்பித்தனர். இதற்கெதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் முறியடிப்பு தாக்குதல் நடத்தி படையினரை தமது பழைய நிலைக்கு துரத்தியடித்தனர். இதில் படையினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஆயதங்கள் பல விடுதலைப்புலிகளினால் மீட்க்கப்பட்டுள்ளன. இதன்படி ஆர்.பி.ஜி - 01,ஆர்.பி.ஜி எறிகணை - 01,புறப்ளர் - 01,நடுத்தர ரவைகள் 1 ,128, தலைக்கவசம் உட்பட பெருமளவிலான ஆ…
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கைக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்கா அதன் பிரஜைகளுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைகான சுற்றுலாக்கள் மற்றும் தங்கியிருத்தலை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அதன் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பயங்கர தாக்குதல்கள் இடம்பெறக் கூடும் என்பதனால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு மற்றும் பெரும்பான்மையான கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்வது ஆபத்தானதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. வட மாகாணம், அனுராதபுரம், மதவாச்சிய, ஹொரவபொத்தான, கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட பிரதேசங்கள் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு நேரட…
-
- 3 replies
- 1.4k views
-
-
நேபாளத்தில் பிரச்சந்தா தலைமையிலான மாவோயிஸ்ட்டுகளின் ஆட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இந்திய "றோ" இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்ற காலவரையறைக் குறிப்பிட முடியாவிட்டாலும் விரைவில் கைப்பற்றி விடுவோம் என்றும் ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் இன்னமும் கிளிநொச்சியில் இருப்பதாகவும் சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
http://www.orunews.com/?p=3101 சில வருடங்களுக்கு முன், இதே கிறிஸ்மச் தினத்தில் ஆராதனையில் இருந்த 'மாமனிதர்' ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இன்று இறுதியாக மாதாவே இலக்கு!!! இன்னும் கிறிஸ்தவ உலகம் மௌனத்தில் .......?????????????????????????????????????
-
- 4 replies
- 2k views
-