Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுகததாஸ விளையாட்டரங்கில் நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற" வாட்டர் போலோ' விளையாட்டின் போது கொழும்பில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையின் மாணவிகள் மீது விமானப்படை விளையாட்டு வீரர்கள் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொகுகேயிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டின் இறுதிப்போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த முறைப்பாடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.தண்ணீரில் இடம்பெற்ற இந்தப்போட்டியின் போது தம்மை பாலியல் ரீதியான முறையில் மோசமாக துன்புறுத்தியதாகவும் இது இந்த விளைய…

  2. ஈழத் தமிழருக்கு ஆதரவாக ரஜினி பிறந்த நாள் அன்று ரசிகர்கள் உண்ணாவிரதம் நடிகர் ரஜினிகாந்தின் வேண்டு கோளை ஏற்கும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு வருவதால் அவர்களுக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாமென்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண…

  3. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பனங்காட்டுக்களத்தில் இருந்து 2 சடலங்களை தகவல் ஒன்றின் பேரில் அக்கரைப்பற்று காவற்துறையினர் மீட்டுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இறந்தவர்களது சடலங்களாக இவை இருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலங்கள் தற்போது அடையாளம் காண்பதற்காக அக்கரைப்பற்று எழுதுமட்டுவான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுக் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  4. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சினிமா டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் ஜாமீனில் விடுவித்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது. டைரக்டர்கள் 2 பேருக்கும் கீழ்கோர்ட்டு அளித்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற‌ கிளை காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கே.என்.பாஷா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:- கீழ்கோர்ட்டு டைரக்டர்களுக்கு ஜாமீன் அளித்தது சரி தான். ஒருவரது ஜாமீனை ரத்து செய்ய 2 விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகி விட்டார். அவர் சாட்சி…

  5. Mangala Samaraweera revealed in parliament, that the government has unloaded 14.4 million kilogrammes of bombs in the Wanni. 14.4 million kilogrammes of today's military grade explosive is equivalent to the explosive force of over 18 kilotonnes of TNT. The nuclear weapon dropped by the United States on distant Hiroshima had an estimated yield of between 13 to 18 kilotonnes of TNT. http://www.thesundayleader.lk/20081116/spotlight-1.htm [தமிழ் மொழி பெயர்ப்பு] இதுவரையில் வன்னி மீது மொத்தம் 14.4 மில்லியன் கிலோகிராம் எடையுள்ள குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சவை மேற்கோள் காட்டி, மங்கள சமரவீர இலங்கை பாராளுமன்றத்தில் தெ…

    • 10 replies
    • 3.1k views
  6. திருமலை-யாழ். கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம் வீரகேசரி இணையம் 11/22/2008 11:57:48 AM - திருகோணமலைக்கும் யாழ்குடாநாட்டுக்கும் இடையிலான பயணிகள் கப்பல்சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசபடைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்த நிலையில் ஏ ஒன்பது வீதி மூடப்பட்டது. இந்த நிலையில் கடல்வழிப்பாதை மூலமே குடாநாட்டுக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கப்பல் சேவை அநேகமாக மீண்டும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படலாம் என உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக கப்பல்சேவை இடைநிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவ…

  7. இராணுவத் தளபதி நேற்று வன்னி விஜயம் இராணுவத்தினரால் பூநகரி, மாங்குளம், கொக்காவில் உள்ளிட்ட பகுதிகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னி படைத் தலைமையகத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது; மேலும், நேற்று வெள்ளிக்கிழமை இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், வன்னிக்கான இராணுவத் தலைமைச் செயலகத்தில் உயர்மட்டத் தளபதிகளுடனும் பிரிகேடியர்களுடனுமான சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தார். மேலும், யாழ்ப்பாணத்துக்கு மிகக்கிட்டிய பாதையான "ஏ32' வீதியினை விரைவில் திறப்பது குறித்தும் இங்கு…

    • 0 replies
    • 1.3k views
  8. திருக்கோயில், விநாயகபுரத்தில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டதுடன் அவரது தாயார் காயமடைந்தார். கொல்லப்படடவர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோயில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  9. கனடாவின் மொன்றியல் நகரில் கியூபெக் தமிழ் மாணவர் சமூகத்தின் 30 மணிநேர அறப்போர் நிகழ்வு நேற்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 409 views
  10. கிழக்கில் மீண்டும் வன்முறை தலைதூக்கியுள்ளது – அங்கிளிக்கன் பேராயர்: http://www.globaltamilnews.net/tamil_news....=2461&cat=1 கிழக்கு மாகாணத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளதாகவும், இது ஓர் அபாயகரமான நிலை எனவும் அங்கிளிக்கன் திருச்சைபையின் பேராயர் டுலிப் டி சிக்கேரா தெரிவித்துள்ளார். அண்மையில் நாவற்காடு பிரதேசத்தில் வைத்து வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சம்பவங்கள் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமைக்கான ஓர் அறிகுறியாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த

  11. இந்தியாவின் உண்மையான நண்பன் நாங்கள்தான் என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு ஒன்றுக்கு இ மெயில் மூலம் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் உண்மையான நண்பன் விடுதலைப் புலிகள் இயக்கம்தான் என்றும், புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கைக்கு அளிக்கும் அனைத்து ராணுவ உதவிகளையும் இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கவிட்டு எங்களது போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.எங்களது இயக்கமும், மக்களும்தான் இந்தியாவுக்கு உண்மையான நண்பர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் …

  12. "பிச்சை எடுக்கிறானாம் பெருமாளு, அதப் புடுங்குறானாம் அனுமானு" என்றொரு கிராமியப் பழமொழி உண்டு. அதற்கேற்றாற்போல் தான் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் செயற்பாடும் உள்ளது. இலங்கையிலுள்ள இந்திய வமிசாவளியினர் இந்தியாவில் தமது சொந்த பந்தங்கள் பற்றித் தகவல் தெரிந்துகொள்ள வேண்டுமாயின் 20000 இந்திய பெறுமதிப் பணத்தை செலுத்தி அறிந்துகொள்ளலாம் என தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியப் பெறுமதியில் 20ஆயிரம் என்றால் இலங்கைப் பெறுமதிப்படி 44 ஆயிரத்து 800 ரூபா செலுத்த வேண்டும். இலங்கை மலையக மக்கள் (இந்திய வமிசாவளியினர்) இந்தத் தொகையை செலுத்துவதானால் கிட்டத்தட்ட 8மாதங்கள் உழைக்க வேண்டும். அதாவது சனி ஞாயிறு தினங்கள் உட்பட 8மாதச் சம்பளத்தையும் செலவுசெய்யாமல் சேமித்தால் தான் இந்தப்பணத்…

  13. காலியில் மினி சூறாவளி 25 வீடுகள் சேதம் வீரகேசரி நாளேடு 11/21/2008 8:07:44 PM - காலி, திலக்கஉதான கிராமத்தில் நேற்று வீசிய மினி சூறாவளி காரணமாக 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இன்று பிற்பகல் 1.30 மணியளவிலிருந்து 1.45 மணிவரையில் இம்மினி சூறாவளி வீசியுள்ளது. நன்பகலுக்குப் பின்னர் மெதுவாக வீசத்தொடங்கிய காற்று பின்னர் மினி சூறாவளியாக மாறியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. இவ்வனர்த்தம் காரணமாக சேதமடைந்த பல வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ள போதும் பொதுமக்கள் எவருக்கும் காயமெதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திலையில் நாட்டின் ஏனைய பாகங்களில் சூறாவளி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கில்லை எனவும்…

  14. பூநகரி பக்கத்தை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றியதற்கு யாழ்ப்பாணத்து தமிழ் மக்கள் அதனை வரவேற்று மகிழ்ந்துள்ளார்கள் என்று இலங்கை ராணுவ இணையதளம் இந்த படங்களை வெளியிட்டுள்ளது, நம்பவே முடியல. ரொம்ப ஆசர்யமா இருக்கு.

    • 61 replies
    • 8k views
  15. புதுடெல்லி கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தத்தை அறிவிக்க சிறிலங்கா அரசு தயாராகி வருவதாகவும், அதற்கான தருணத்தை அதிபர் ராஜபக்ச எதிர்பார்த்த வண்ணமிருப்பதாகவும் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர கூறியுள்ளார். யுத்தத்தில் அரசு பெரும் பின்னடைவைக் கண்டு வருவதாகவும் போர்முனையின் உண்மைத் தகவல்களை வெளியிடுவதை அரசு தடுத்து வருவதாகவும் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார். நேற்று வியாழக்கிழமை கொழும்பு ரொஸ்மிட் பிளேஸிலுள்ள மங்கள சமரவீரவின் புதிய அமைப்பான பாதுகாப்புப் பணியகத்தின் இரண்டாவது செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; பூநகரி படையினர் வசமானதை நாம் கு…

  16. கனடா வாழ் தமிழ் மக்களுக்கு ஒம்னி தொலைக்காட்சி கனடிய தமிழர் புனர் வாழ்வுகளகத்தை தடை செய்வதா இல்லையா என ஒரு கருத்து கணிப்பு செய்கின்றார்கள். 416 260 4005 என்ற இலக்கத்துக்கு அழைத்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.நன்றி. இலக்கம்1 -- ஆம் இலக்கம் 2 -இல்லை

  17. தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் கைப்பற்றப்பட்டதனை சிங்கள பாடசாலைகளில் படையினரை பாராட்டி வெற்றி விழா கொண்டாடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  18. கைக்கு எட்டியும் வாய்க்குக் கிட்டாத இந்தியாவின் நிவாரணப் பொருள்கள் [22 நவம்பர் 2008, சனிக்கிழமை 3:00 மு.ப இலங்கை] யுத்தப் பேரவலத்தில் சிக்கி, சொல்லொணா துன்ப துயரங்களுக்குள் ஆழ்ந்து கிடக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கான நிவாரண மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ‘சாமி வரம் கொடுத்தும் பூசாரி இடங்கொடுக்காத மாதிரியான’ முட்டுக்கட்டைகளினால் முடங்கிப் போய்விடுமோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. கொழும்பு அரசு யுத்த வெறித் தீவிரத்தோடு தொடுத்திருக்கும் கொடூரப் போரில் சிக்கி, நாதியற்று, அல்லாடும் ஈழத் தமிழர்களின் நிலை கண்டு தமிழகம் கொதித்து எழுந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகம் விஸ்வரூபம் எடுத்துக் கிளர்ந்ததை அடுத்து, ஈழ மண்ணில் அந்தரிக்கும் …

  19. முகமாலை மோதல்களில் படையினருக்கு இன்று பலத்த சேதம் உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 450ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் GTN ற்கு கிடைத்த தகவலின்படி முகமாலை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற மோதலில் 200ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 200ற்கு மேற்பட்ட படையினர் காயம் அடைந்தும் இருப்பதாக அரசாங்க உள்ளகத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் இன்றைய மோதல் குறித்து வெளியாகி உள்ள மற்றைய தகவலில் பரந்தன் நோக்கிச் சென்ற இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு அற்றிருப்பதாகவும் அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த…

  20. தமது இன்னுயிரை ஈந்து விடுதலைப் போருக்கு வீறுசேர்த்த மாவீரர்கள், அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும் அருஞ்செயல்களும் மக்களிடம் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினரும் அவலப்படக் கூடாது. என்ற நோக்கின் அடிப்படையில் எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானது தான் தமிழீழ மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப் போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்துநூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவு கூர இயலாது என்றி நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரத் தக்கதாக தமிழீழ விடுதலைப் போரில் முதற்களச் சாவடைந்த இய…

  21. வன்னியில் மாவீரர்களின் பெற்றோர்கள் மதிப்பளிப்பு [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 11:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னிப்பெரு நிலப்பரப்பில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் நேற்று முன்நாள் நடைபெற்றன. விசுவமடு மேற்கு மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்றது. விசுவமடு மகாவித்தியாலய முதல்வர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி பிரதீப் ஏற்றினார். தமிழீழ தேசியக் கொடியினை “சுதந்திரப் பறவைகள்” ஏட்டின் ஆசிரியர் தமிழவள் ஏற்றினார். மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு விசுவமடு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் செம்மண்ணன் சுடரேற்றி, மலர்மாலையினை சூட்டினார்.…

  22. எட்னா தயாரிப்புகள் மீதான தடையை நீக்கியது நீதிமன்றம் - அவற்றில் மெலமைன் இல்லையாம் [22 நவம்பர் 2008, சனிக்கிழமை 3:05 மு.ப இலங்கை] ‘எட்னா’ நிறுவனத் தயாரிப்பான சொக்லேட்டுகளிலோ, அந்நிறுவனம் பயன்படுத்தும் பால் வகைகளிலோ ‘மெலமைன்’ என்ற விசப் பதார்த்தம் இல்லை என சுகாதார அமைச்சு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியது. இதனை அடுத்து, இதற்கு முன்னர் ‘எட்னா’ நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விடுத்திருந்த தடை உத்தரவுகளை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்துச் செய்து கட்டளையிட்டது. நுகர்வோர் விவகார அதிகாரசபை சமர்ப்பித்த மனு ஒன்றைக் கவனத்தில் எடுத்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், அதன் அடிப்படையில் ‘எட்னா’ சொக்லேட் உற்பத்தி நிறுவனத்தின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.