ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
Tigers reiterate consent to ceasefire [TamilNet, Saturday, 08 November 2008, 16:42 GMT] Liberation Tigers Political Head B. Nadesan, when contacted by TamilNet on Saturday, following reports of Tamil Nadu leaders seeking clarification on LTTE's stand on ceasefire, said "there is no hesitation on our side to reiterate our position that we have always wanted a ceasefire." It is the Government of Sri Lanka (GoSL) that unilaterally abrogated the ceasefire, Mr. Nadesan said and added that the Tigers were only fighting a defensive war since Colombo has thrust upon Tamils an aggressive war. Earlier, the State Secretary of the Communist Party of India (CPI), Mr. D. Pandi…
-
- 0 replies
- 2.1k views
-
-
நீரலை மேல் பச்சை இலைகள் படர்ந்திருக்க... நீர்ப் பரப்புக்கு மேல் சற்றே தலைநீட்டி இதழ் விரித்துச் சிரிக்கும் தாமரை மலர்கள்... ஆனால், ஒரு தாமரை சீறிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் சீறியிருக்கும் தாமரை, மலரல்ல; திரைப் பாடலாசிரியை தாமரை! கடந்த 5-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தாமரை, ''ஈழத் தமிழர்களின் பெயரைச் சொல்லி தமிழக அரசு திரட்டும் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசாகூடக் கொடுக்க மாட்டேன்!'' என்று சீறியிருப்பது, பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தாமரையை சந்தித்தோம். 'நிதி கொடுக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன?' ''இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் எ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை இந்தியா இதுவரை! ப.திருமாவேலன் ஈழத்தில் வெடிகுண்டு சத்தம் கேட்கும்போதெல்லாம், பக்கத்து தேசத்-தில் உள்நாட்டு மோதல் நடப்பது நமக்கு நல்லதல்ல என்று இந்தியா நினைத்-தது. அதுவும் அங்கே பாதிப்புக்குள்ளாகும் இனத்தைச் சேர்ந்த-வர்கள் இங்கேயும் கோடிக்கணக்கில் வாழ்கிறார்கள் என்பதால் கூடுதல் கவனம் தந்தது. பிரதமர் இந்திரா காந்திதான் இந்த ஆபத்தை முழுமை-யாக உணர்ந்த முதல் மனுஷி! அவர் காலத்தில்தான், இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியா தனது நேரடிக் கவனத்தைச் செலுத்தி, 'கேட்பதற்கு யாரும் இல்லை என்று நினைக்காதே!' என்ற முதல் எச்சரிக்கையை விடுத்தது. அது முதல் அங்கு போய் வந்த அதிகாரிகள், அமைச்சர்கள் பலர். அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? அதுபற்றிய சம்பவச் சுருக்கம் இ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ராமேசுவரம், நவ. 6- இலங்கையில் ராணுவத் திற்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பகுதியை சுற்றி வளைத்து கைப்பற்றும் நோக்கத்தில் வான்வழியாகவும், தரை வழியாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வரு கின்றனர். பதிலுக்கு விடுதலைப்புலிகளும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போரில் காயம் அடையும் விடுதலைப் புலிகள் ராமேசுவரத்துக்கு அகதிகள் போர்வையில் ஊடுருவலாம் என்று கருதப் படுகிறது. மேலும் ராமேசுவரத்தில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் தமிழக மீனவர் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க இந்திய…
-
- 8 replies
- 3.5k views
-
-
சிறீலங்காப் படையில் மேலும் 10 ஆயிரம் பேரை இணைக்க நடவடிக்கை சனி, 08 நவம்பர் 2008, 14:38 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காப் படையினருக்கு ஆட்திரட்டும் நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் மீண்டும் முன்னெடுத்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் 10 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துக் கொள்ளவுள்ளோம் என சிறீலங்காப் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போது 3300 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன
-
- 1 reply
- 701 views
-
-
அண்மைய நாட்களாக வவுனியாவில் அப்பாவி தமிழ் மக்கள் கடத்தி படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதும், இக்கோரச்சம்பவங்களின் பின்னணியில் வவுனியாவில் இருந்து செயற்படும் ஒட்டுக்கும்பலான புளொட் இருப்பதாக வவுனியா மக்கள் தெரிவிக்கிறார்கள். http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27426
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பு வாகரைக்கு அண்மையாகவுள்ள மற்றொரு அதியுயர் பாதுகாப்பு வலயமான கதிரவெளியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா படையினரது முகாம் ஒன்றிற்குள் ஊடுருவிய மூன்று பேர் கொண்ட அணி, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் துணைப்படை ஆயுதக் குழுவைச் சேர்ந்த 16 அகவையுடைய யுவராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்மூலம் சிறுவர்களை துணைப்படை பிள்ளையான், மற்றும் கருணா குழுக்கள் தமது குழுக்களில் இணைப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர் 20 அகவையுடைய இராசமாணிக்கம் செல்வராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடைசியில் எதனை எழுதக்கூடாது என்று எங்கள் பேனா முனைகள் தயங்கியதோ, அதை எழுதியே தீர வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இன்னமும் இதயத்தின் ஓரத்தில் கசியும் நம்பிக்கையின் கடைசித் துளி ஈரத்தில் எழுதப்படும் உணர்வின் வெளிப்பாடு இது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், ஆழிப் பேரலைபோல் பொங்கி எழுந்த எம்மக்களின் உணர்வுகளை உண்டியல் ஓட்டைகளில் அடைக்க முயலும் உங்கள் ராசதந்திரங்கள் ஒரு புறம் அரங்கேற, தமிழ் மக்களின் பிணங்களின் மீது ஏறி தொலைந்து போன தங்கள் முகவரியைத் தேடி அலையும் காங்கிரஸ் கணவான்கள் ஒருபுறம், எம்.ஜி.ஆரின் பின வண்டியில் துவங்கிய அரசியல் பயணத்தை, ராசீவின் உடல் சிதறல்களில் வேகப்படுத்தி, ஈழத் தமிழர்களின் கல்லறைகளில் நிறைவு செய்யத் துடிக்கும் பார்ப்பன பனியா ஜெய…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஓபமாவின் வெற்றி சொல்லும் செய்தி முதலில் ஓபமாவின் வெற்றியின் முன்னால் உள்ள செய்தி அல்லது உண்மை என்னவென்றால் அவர் ஒரு கறுப்பின ஐனாதிபதியல்ல அவர் ஒரு அமெரிக்க ஐனாதிபதிஇதில் எந்த சமரசமும் அவர் செய்யமாட்டார் செய்யவும் முடியாது அடுத்தது உலகவழக்கில் இப்போதெல்லாம் தேர்தல்களில்வாக்களிக்கும்ப
-
- 23 replies
- 2.9k views
-
-
சென்னை இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பை மட்டும் வலியுறுத்துவதால், போர் நிறுத்தம் ஏற்படுவது சாத்தியமா என்பது குறித்து தமக்கு தெரியவில்லை என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக தலைவர் கோ.க.மணி கடந்த வாரம் விடுத்த அறிக்கையில் விடுதலைப்புலிகளை தாங்கள் ஆதரிக்கவில்லை, தங்களுக்கும் அவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை, அவர்களைப் பார்த்ததே கூட இல்லை என்பதைப் போல கூறி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. ஆனால் நேற்றைய தினம் பா.ம.க. நிறுவனத் தலைவர் சேலத்தில் கூறும்போது தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளால் மட்டுமே முடியும் என்றும், அவர்களை தீவிரவாதிகள் என்ற க…
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா அரசு மற்றும் அதன் இராணுவத்துடன் இணைந்து கொண்டு தமிழ் துரோகக் குழுக்கள் தமிழ் மக்களுக்கும் அந்த தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் புலிகளுக்கும் எதிராக மேற்கொள்கின்ற நடவடிக்கை போன்று, ஒரு காலத்தில் அமெரிக்காவிற்கு எதிரான வியட்நாம் போரில், வியட்நாமிய மக்களில் சிலரும் போராடிய மக்களுக்கும் வியட்கொங் போராளிகளுக்கும் எதிராக அமெரிக்காவுடன் இணைந்து நின்று செயற்பட்டனர். தங்கள் சொந்த மக்களை அழிப்பதற்கு, தங்கள் சொந்த மண்ணை அந்நியப் படைகள் நாசமாக்குவதற்கு யாருடன் இணைந்து நின்று போராடினார்களோ, அவர்களும் கைவிட்டு சொந்த நாட்டு அரசும் கைவிட்ட நிலையில் இன்று அவர்கள் எப்படி வாழ்கின்றார்கள். பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் வியட்நாம் அரசிற்குக் கூடத் தெரிய…
-
- 1 reply
- 2.1k views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்கள் தனியாக சென்னையில் எதிர்வரும் 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கம் சார்பில் இராமேஸ்வரத்தில் பேரணி, பொதுக் கூட்டம் நடந்தது. அடுத்து சென்னையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் திரையுலகினர் சார்பில் மனிதச் சங்கிலி நடந்தது. கடந்த 1ம் தேதி நடிகர் சங்கம் சார்பிலும், 5ம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சார்பிலும் உண்ணாவிரதம் இருந்தனர். நடிகர் சங்க உண்ணாவிரதத்தில் பங்கேற்ற விஜய், 'இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்ட…
-
- 0 replies
- 1.8k views
-
-
கதிரவெளியில் கருணா குழுவினரின் முகாம் மீது தாக்குதல்: ஒருவர் பலி! மேலும் இருவர் காயம் சனி, 08 நவம்பர் 2008, 16:20 மணி தமிழீழம் [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பில் சிறீலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரின் முகாம் இனம் தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வாகரையில் அமைந்துள்ள கதிரவெளி முகாமே இவ்வாறு இனம் தெரியாதோரோல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது கருணா குழு ஆயுததாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதோடு, மேலும் இரு ஆயுததாரிகள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் 16 அகவை என படையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் 20 அகவையு…
-
- 0 replies
- 931 views
-
-
கனேடியப் படையதிகாரியுடன் சிங்களப் பேரினவாதப் படையதிகாரிகள். அண்மையில் அமெரிக்க பசுபிக் மற்றும் ஆசியப்பிராந்தியத்துக்கான கடற்படைத் தளபதி சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் பயங்கரவாதப் படையினர் தமிழீழத்தில் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை பாராட்டி முடிப்பதற்குள்.. இன்று கனேடிய பாதுகாப்பு அதிகாரி யாழ்ப்பாணம் சென்று பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். 1999/2000 ஆண்டுகளிலும் ஆனையிறவு தளம் விடுதலைப்புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்குள் இருந்த சமயத்தில் இப்படிப் பன்னாட்டு படையதிகாரிகளும் பார்வையிட்டு ஆனையிறவு தளத்தைப் பலப்படுத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் நிலை கொண்டிருப்பது சிங்கள இராணுவமா அல்லது நேட்டோ படைகளா..??! ----------- …
-
- 0 replies
- 682 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து தற்போது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களை படையினர் இரவு வேளைகளில் பெயர் பட்டியலுடன் வீடுகளுக்கு சென்று விசாரிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இருமருங்கினையும் உள்ளடக்கியதாக கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் படையினர் புதிய இராணுவம் முகாம்களை அமைத்துள்ளனர். இப்படைமுகாம்களிலிருந்து இரவு வேளைகளில் வீடுகளுக்கு சென்றே முன்னாள் போராளிகளை தேடிவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். .... http://www.orunews.com/?p=2514
-
- 0 replies
- 841 views
-
-
நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம் நாகை : நாகை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்த மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில், பாபு என்ற மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை அங்கிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அறிந்…
-
- 1 reply
- 1.3k views
-
-
உலகத் தமிழர்களை மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பதுதான் வேதனை என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
அடுத்த சில நாட்களில் கிளாலி வாவி பகுதி கைப்பற்றப்படும் என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை விவகாரத்தில் தன்னை அனைத்துத் தரப்பினரும் குறை கூறுவதால் மன வருத்தம் அடைந்த முதல்வர் கருணாநிதி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மூத்த திமுக தலைவர்களும் அமைச்சர்களும் கோட்டைக்கு விரைந்து அவரை சமாதானப்படுத்தினர். முதல்வர் இராஜினாமா செய்தியால் நேற்று கோட்டையில் பெரும் பரபரப்பு நிலவியது. இராஜினாமா கடிதத்தை அவர் எழுதிவிட்டதாக தகவல் வந்ததையடுத்து திமுக அமைச்சர்கள் பலரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு கோட்டைக்கு ஓடி வந்தனர். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கட்சிகள் ஒன்று திரள மறுப்பதோடு, தன்னையே குறை கூறி வருவதால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட…
-
- 6 replies
- 2.4k views
-
-
MI-24 உலங்கு வானூர்திகள் பூநகரி பகுதியில் விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடங்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தியுள்ளன. வீரகேசரி இணையம் 11/8/2008 11:46:19 AM - இலங்கை விமானப்படையினரின் MI-24 உலங்கு வானூர்திகள் நேற்று இரவு 9.45 மணியளவில் பூநகரி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடங்கள் மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த வெற்றிகரமான விமானத்தாக்குதல் விடுதலைப்புலிகளுக்குப் பாரிய சேதங்களை விளைவித்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் [சனிக்கிழமை, 08 நவம்பர் 2008, 11:14 மு.ப ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான எத்தகைய உதவியையும் வழங்கக் கூடாது ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக சட்டமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: | இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான எத்தகைய உதவியையும் வழங்கக் கூடாது ஆகிய இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் புதன்கிழமை (12.11.08) தமிழக சட்ட…
-
- 0 replies
- 672 views
-
-
ஈழத்தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கின்ற முறையில் தமிழகம் திரண்டெழுகின்றது. தலைவர்கள் தடம் புரண்டாலும் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுகின்ற நிகழ்ச்சி டெல்லி அரரைசயும், இலங்கை அரசையும் சிந்திக்க வைப்பது உறுதியென த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.உ ஈழவேந்தன் தெரிவித்தார். அவரது அறிக்கையில் : 'பற்றி எரிகின்ற ஈழத்தமிழா பிரச்சினையில் ரஜினியின் துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை' என்று ஜூனியர் விகடனுக்கு வழங்கிய நேர்காணலில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் இரத்த மழையில் மரணப் படுக்கையில் வாழ்வுக்காக சாவைத் தாங்கும் ஈழத்தமிழரின் பிரச்சினையில் நடிகர் ரஜினி காட்டிய துணிச்சல் கலைஞர் கருணாநிதியிடம் துளியும் இல்லை. ராமதாஸ் கையாளுகின்ற கடும் சொற்களை நாம் கையாள விரும்பவில்ல…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் இந்திய மத்திய அரசாங்கத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 614 views
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தரைவழியாகப் பயணிக்காது உலங்கு வானூர்தியிலேயே நாடாளுமன்றத்திற்குச் சென்று வருகின்றார். அச்சம் காரணமாகவே அவர் தரைவழியாகப் பயணிக்காது, உலங்கு வானூர்தியில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றதில் ஆரம்பித்துள்ள பாதீட்டை மீதான விவாதத்தில் கலந்துகொள்ளவே நிதியமைச்சர் என்ற அடிப்படையில் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று வருகின்றார். இதேவேளை, கிழக்கின் உதயம் போன்று வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை தமது அரசு ஆரம்பித்துள்ளதாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவும் தமது படைகளால் விரைவில் கைப்பற்றப்படும் என்றும், சிறீலங்கா அரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/
-
- 4 replies
- 2k views
-
-
மகிந்தவின் யுத்தத்தில் தப்பியோடிய ராணுவத்தினரின் எண்ணிக்கை 25000 - ராவய மகிந்த யுத்தத்தை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை தப்பியோடியுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை 25000 இலும் அதிகம் என்று சிங்கள வார இதழான ராவய தெரிவித்திருக்கிறது. இந்த தை மாதம் வரையிலும் தப்பியோடியவர்களின் எண்ணிக்கை 15000 என்று படை வட்டாரங்களை ஆதாரங்காட்டி இச்செய்தி வெளிடப்பட்டிருக்கிறது. போர் நடக்கும் பிரதேசங்களில் இருந்து தலைமறைவாகும் தமது சகாக்களைக் கண்டுபிடிக்க அங்கிருந்து வெளியேறும் பேரூந்துகள், மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் என்று ராணுவத்தின் காவல்ப்பிரிவு கடுமையான சோதனைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகச்சாயலிலும், உடல்கட்டமைப்பிலும் ராணுவ வீரனைப் போல இருக்கும் ஆண்…
-
- 0 replies
- 1.1k views
-