Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் பேசினால் செத்துப் போ! ''கடல் ஒரு வேட்டைக் காடு. வலை போடும் மீனவன் அதன் வேட்டைக்காரன். வேட்டைஆடுபவனுக்கு எல்லைகள் ஏது? தத்தமது அதிகார எல்லைகளைத் தூக்கிப்பிடிக்கக் கடல் நீருக்குள் கோடு போட்ட அரசுகள், அதை மீன்களுக்கும் சொல்லிஇருக்கலாம்!'' - ஜோ டி குரூஸ் அழுத்தி உச்சரிக்கும் வார்த்தை ஒவ்வொன்றிலும் என்னால் மீன் வாசத்தை உணர முடிந்தது. ''நான் ஒரு பிறவி மீனவன்!'' என்று நெஞ்சு நிமிர்த்துகிற ஜோ, தென் தமிழக மீனவக் கிராமமான உவரியின் பிள்ளை. நெய்தல் நிலத்தின் நிலையற்ற வாழ்வை உப்பு மொழியோடு பதிவு செய்திருந்த இவரது 'ஆழி சூழ் உலகு', தமிழ் எழுத்துலகின் முக்கியப் பிரதிகளில் ஒன்று! இலங்கை ராணுவத்தின் குண்டுகளுக்கு அவ்வப்போது தங்கள் உயிர்களைத் தின்னத் தருகிற ராமேஸ்…

  2. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய விமானத் தாக்குதல், யாழ்ப்பாணத்திற்கு 3000 துருப்பினரை ஏற்றிச் செல்லத் தயாராகவிருந்த ‘ஜெற் லைனரை’ இலக்காகக் கொண்டது என டெய்லி மிறர் ஆங்கிலப் பத்திரிகையின் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜயசிறி தெரிவித்திருக்கிறார். ஜெட் லைனர், ஆயிரக்கணக்கான படையினரை ஏற்றிக்கொண்டு மறுநாள் யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட தயார்நிலையிலிருந்ததாகவும், கடற்படையினரின் பதில்தாக்குதல் தாக்குதல் காரணமாக ஜெட் லைனர் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் டெய்லி மிறர் பாதுகாப்புப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள் கடற்படைத்தளத்தை நோக்கி வருவதனை அன்றிரவு 8.45 மணியளவி…

    • 0 replies
    • 1.8k views
  3. சுற்றிவளைத்து அடக்கும் தந்திரோபாயத்திற்கு எதிரான பின்வாங்கும் தந்திரோபாயம் -எரிமலை- கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கோணமலை துறைமுகத்தின் மீது விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடத்திய தாக்குதலானது பல்வேறு படைத்துறை, அரசியல் பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதாவது, சிறிலங்கா அரசும் அதன் படைகளும் விடுதலைப் புலிகள் போரிலே தோற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர்கள் அனைவரையும் அழிக்கப்போவதாகவும் ஆளுக்காள் தென்னிலங்கையிலே அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துறைமுகத்திலே வான்புலிகளின் தாக்குதல் நடைபெற்றமையானது விடுதலைப் புலிகளின் படைத்துறை வலிமையினை தென்னிலங்கைக்கும் அனைத்துலகத்திற்கும் பறைசாற்றுவதாக அமைந்து…

  4. மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், வன்னி பாதுகாப்புப் படையினரின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி, மத விவகாரங்களை மேம்படுத்தல், மன்னாரின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டதாக தெரியவருகிறது. மன்னார் பிராந்தியத்தின் அபிவிருத்திப் பணிகளை வேகப்படுத்துவது குறித்த அரசாங்கத்தின் திட்டங்களை வன்னிப்பிராந்திய கட்டளைத் தளபதி மன்னார் ஆயரிடம் விளக்கிக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், பாதுகாப்புப் படையினரதும், பொலிசாரினதும் ஒத்துழைப்புடன் இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது. …

  5. சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகம் மீது வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தியுள்ள தாக்குதலானது களநிலைமை குறித்த மறு மதிப்பீடு ஒன்றிற்குச் செல்ல வேண்டியதானதொரு நிர்ப்பந்தத்தைச் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு மட்டுமல்ல வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்றே உறுதியாக நம்பலாம். கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் என்பனவற்றின் அளவு, தொகை என்பன இங்கு முக்கியமானதொரு விடயம் அல்ல. சிறிலங்காப் படைத்தரப்பின் அதி முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையம் ஒன்றின் மீது இலக்குத் தவறாது வான்புலிகள் தா…

    • 0 replies
    • 1.1k views
  6. முகமாலையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு [வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 08:08 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முகமாலை களமுனையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகமாலை கண்டல் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர். இதில் மூன்றுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். பல படையினர் காயமடைந்தனர். இதே பகுதியில் நேற்று முன்நாள் பிற்பகல…

    • 0 replies
    • 839 views
  7. சிறீலங்காவிற்கான ஈரான் தூதரகத்தின் படைத்துறை அதிகாரிகள் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஸவை நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பிரிகேடியர் அமினி ரன்ஜ்பார் (Amini Ranjbar) மற்றும் பிரிகேடியர் சாயிட் ராசா அஸ்கரே நேகா (Seyed Reza Asgharey Nekah) ஆகியோரே கோத்தபாயவைச் சந்தித்தனர். இவர்களில் பிரிகேடியர் அமினி ரன்ஜ்பார் சிறீலங்காவிலிருந்து இடமாற்றம் பெற்றுச்செல்வதால், பிரியாவிடைக்கான சந்திப்பாக இது அமைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சிறீலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா பங்களாதேஸில் சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, பங்களாதேஸிற்குச் சென்று, அந்த நாட்டின் படைத்தளபதிகளைச் சந்தித்து நேற்ற…

  8. அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் தாக்குவதாக விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வன்னி பகுதியில் நெடுங்கேனி என்ற இடத்தில் வியாழக்கிழமை வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரும், ஒரு சிறுவனும் சிக்கி இறந்தனர். இது இலங்கை ராணுவத்தின் கைவரிசைதான் என விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆனால், பொதுமக்களை தாங்கள் தாக்குவதில்லை என வழக்கம்போல ராணுவம் தெரிவித்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேறி அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வருமாறு தமிழர்களுக்கு இலங்கை அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியை நோக்கி படைகள் முன்னேறு…

  9. சுவிட்ஸ்லாந்ததின் வெளிவிவகார அமைச்சர் மிசிலின் காமி ரே ( Micheline Calmy-Rey) திங்கட்கிழமை சுவிசின் தலைநகரான பேர்னில் சுவிசின் 170க்கும் மேற்பட்ட ராஜதந்திரிகளுக்கு மத்தியில் உரையாற்றுகையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் சுவிஸ் பேசுவதற்குத் தயாராக உள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் உள்ள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுடன் தாம் பேசுவதற்குத் தயார் என அவர் கூறிய முன்னேற்றகரமான கருத்து தமிழீழ மக்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளதாக அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். மற்றவர்களால், அரசியல் அதிகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாக இருந்தாலும் கூட சுவிஸ் பேசுவதற்குத் தயார் என அவர் தெரிவித்துள்ள கருத்து ஒரு புதிய அரசியல் திருப்பமாக உள்ளது. நல்லதுக்கும் கெ…

    • 0 replies
    • 1.8k views
  10. தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரால் அண்மையில் திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டுத் தாக்குதல்கள் நிராயுதபாணிகளாகச் சென்ற படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிராயுதபாணிகளாகச் செல்லும் இராணுவப் படையினரை ஏற்றிச் செல்லும் ஜெட்லைனர் என்ற கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக் காட்டப்படுகிறது. விடுமுறைக் காலத்தை முடித்து மீண்டும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் கடமையில் ஈடுபடச் செல்லவிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலகுரக விமானங்கள் பற்றிய ராடர் தகவல்கள் வழங்கப்பட்ட இரண்டு மூன்று நிமிடங்களில் புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப…

  11. இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கு ரஸ்யா பூரண ஒத்துழைப்பு வழங்குமென தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக் சீ செடர் அரசாங்கத்திடம் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ரஸ்யா பூரண ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்தில் பயங்கரவாத்திற்கு எதிரான இலங்கையின் குரல் ஓங்குவதற்கு ரஸ்யா ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்

  12. பாகிஸ்தானில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் பத்து நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் என அறிவிக்கப்பட்டதன் பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளை அழிக்க பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி வருவதாக கடந்த 17 ஆம் திகதி தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் வெளியாகி மூன்று தினங்களின் பின்னர் பாகிஸ்தானில் உள்ள ஆயுத தொழிற்சாலை மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ந்தும் பாகிஸ்தான் இலங…

  13. படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது அதிரடிப்படையினரின் 59ஆம் பிரிவினர் வன்னியில் மேற்கொண்ட படைநகர்வினையடுத்து பாலமோட்டைப்பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது http://www.virakesari.lk http://puspaviji13.net84.net

  14. தனு‌ஷ்கோடி அருகே ‌மீ‌ன்ப‌ிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி ‌சி‌றில‌‌ங்க கடற்படையினர் கடுமையாக தாக்கி உ‌ள்ளன‌ர். ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ராமே‌ஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 533 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற ‌மீனவ‌ர்‌க‌ள், தனுஷ்கோடி 3ஆம் தீடை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தன. அப்போது ‌சி‌றில‌ங்க கட‌‌ற்படை‌யின‌ர் துப்பாக்கியா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ண்டே ‌மீனவ‌ர்க‌ள் இரு‌ந்த இட‌த்தை நோ‌‌க்‌கி வ‌ந்தன‌ர். பின்னர் அவ‌ர்க‌ள், இ‌ந்த பகு‌தி‌க்கு‌ள் ஏ‌ன் ‌மீ‌ன் ப‌ிடி‌க்க வ‌ந்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டு ‌‌‌‌மீனவ‌ர்க‌ளை மிர‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ர் பட‌‌கி‌ல் இரு‌ந்த மீனவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து உருட்டுக் கட்டைகளா‌ல் தா‌க்‌கின‌ர். அவ…

    • 40 replies
    • 3.5k views
  15. மனித உரிமைகளுக்கான குரலை நசுக்கும் முயற்சி 29.08.2008 நாட்டில் மிக மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல் நிலைவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத அதிகார வர்க்கம், அந்த மனித உரிமை மீறல்கள் குறித்துக் குரல் கொடுக்கும் தரப்புகளின் குரல் வளையை நசிப்பது குறித்தே அதிகம் சிந்தித்து வருகின்றது. மனோகணேசன் எம்.பிக்கு எதிரான பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் பலமணி நேர விசாரணையை அத்தகைய அடக்குமுறை நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே நோக்கவேண்டியிருக்கின்றது. அதனையே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சுட்டிக்காட்டியிருக்கின்றா

  16. நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தின் போது இன்று தேர் வீதி வலம் வரும் போது சப்பறம் அடியார்களின் மேல் விழுந்ததில் 15 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற சப்பற திருவிழாவினையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்பறம் இவ்வாறு விழுந்துள்ளது.காயம்டைந்தவர்

  17. 'தொல் தமிழர் முருகனிலிருந்து - நல்லூர்க் கந்தன் வரை" -.சபேசன் (அவுஸ்திரேலியா)- ஈழச் சைவத் தமிழ் மக்களிடையே மிகப் பிரபல்யமான, புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான - நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் தேர்த் திருவிழா ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் கொடியேற்ற நாளில் இருந்து இறுதி நாள் உற்சவமான, பூங்காவனத் திருநாள் வரை, உலவுகின்ற அந்த உற்சாகமான, குதூகலப் பக்தி கலந்த நாட்கள், எம்மவர் மனதில் என்றென்றும் நினைவில் நின்று நிழலாடுகின்ற விடயமாகும். ஆனால் அன்று மயிலேறி, மூன்று உலகமும் வலம் வந்ததாகச் சொல்லப்பட்ட முருகன், பின்னர் சிங்கள இராணுவ அடக்குமுறையின் கீழ் - ஊரடங்குச் சட்டத்தின் கீழ் - அமலாக்கப்பட்ட…

  18. புலிகளின் வானூர்தி தாக்குதல் தந்திரோபாயமானது: கோத்தாபய ராஜபக்ச [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 07:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதலானது தந்திரோபாயமானது என்பதுடன் உளவியல் ரீதியான தாக்குதலும் கூட என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தலைநகர் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் தங்குவார்களாக இருந்தால் அவர்களுக்கான சகல சலுகைகளையும், உதவிகளையும் அரசாங்கம் வழங்கும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் எல்லோரும் ஆயுதப்பயிற்சி பெற்றிருக்கின…

    • 3 replies
    • 1.9k views
  19. மட்டக்களப்பு சிறையில் குண்டுவெடிப்பு: நான்கு ஈ.பி.டி.பி.யினர் உட்பட ஏழு பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 07:26 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிடிக்கின்றது. இச்சம்பவத்தில் ஏழு கைதிகள் படுகாயமடைந்து அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவு

  20. புலிகளின் வானூர்தி தாக்குதலில் 10 படையினர் பலி- 40 பேர் காயம்: கொழும்பு தகவல் [வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2008, 09:40 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] சிறிலங்கா கடற்படையின் கிழக்கு கட்டளைத் தலைமையக தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் பத்து கடற்படையினர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர் என்று சிறிலங்கா படைத்துறை ஊடாக பெறப்பட்ட கொழும்பு மையத்தகவல் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்தி நான்கு குண்டுகளை வீசின. இரு அதிகாரிகளின் விடுதிப் பகுதிகள் மீது குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இரண்டு கடற்படைப் படகுகள் இதில் அழிந்தன என்று ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதினம்

    • 1 reply
    • 1.3k views
  21. தென் தமிழீழத்தில் திருமலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புப் படையான சிறீலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய தலைமையகம் மீதான வான் புலிகளின் வெற்றிகர தாக்குதலில் பங்கெடுத்த வான்புலிகளும் தேசிய தலைவரும். தாக்குதலின் பின் போராளிகள் வெற்றிகரமாக தளம் திரும்பி இருக்கின்றனர். தாக்குதலில் பங்கேற்ற வேங்கைகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக..! http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26765

    • 24 replies
    • 5.8k views
  22. அமெரிக்க நாட்டு இந்து மதத் துறவியும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபைத் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு அவருடைய 58 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார். கடந்த சில தினங்களாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறறு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியுள்ளார். Lawrence Anthony Schafaka என்ற இயற்பெயர் கொண்ட அவர் 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி பென்சில்வேனியாவில் பிறந்தார். 20 வயதில் இந்து மதத்தில் நாட்டம் கொண்டு இந்தியா சென்று இந்து சமயத்தைத் தழுவி தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்று தந்திரதேவா என்னும் துறவிப் பெயர் பூண்டு இந்து மத துறவியானார். பின்னர் இலங்கை வந்த இவர் 1983 ஆம் ஆண்டில் பாடல்…

    • 17 replies
    • 3.1k views
  23. அமைச்சரவையில் விரைவில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியில் முரண்பாடுகளை கொண்டுள்ள 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் இவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த அமைச்சரவை மாற்றங்களை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் சில அமைச்சர்களின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும் ஜனாதிபதி இந்த எதிர்ப்புகளை கவனத்தில் கொள்ளாது தனது தீர்மானத்தை மேற்கொள்வார் என நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50

  24. உணவு நஞ்சானதால் 202 படையினர் வைத்தியசலையில் அனுமதி.... Atleast 202 soldiers belonging to the Senanigama army camp in Dehiaththakandiya have been admitted to the Mahiyangana and Dehiaththakandiya hospitals due to what appeared to be food poisoning, Police Media spokesman confirmed. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=24642

  25. வவுனியாவில் இருமுனை முன்நகர்வு முறியடிப்பு: 7 படையினர் பலி; 17 பேர் படுகாயம் [வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை மற்றும் குஞ்சுக்குளம் பகுதிகள் ஊடாக சிறிலங்காப் படையினர் இரு முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாலமோட்டை மற்றும் குஞ்சுக்குளம் பகுதிகள் ஊடாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் தமது பின்தளங்களில் இருந்து செறிவான எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தீவிர …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.