Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிர்களுக்கு தனி நாடு வழங்கப்படின் பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது- பிரித்தானிய அமைச்சர் இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு உருவாக்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது என பிரித்தானியாவின் ஆசிய மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான அமைச்சர் லோர்ட் மலொச் பிரவுண் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் காணப்படுகின்றன. விடுதலை புலிகள் அமைப்பு அயுதங்களுடன் மோதலில் ஈடுபடுகின்றது . தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் காணப்படுகின்றது.எனவே இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் அதனை ஆதரிக்காது என அவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/

  2. கடற்சமரில் காயமடைந்த கடற்படைவீரர் மரணம் மன்னார் நாச்சிக்குடாப் பகுதியில் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுடன் இடம்பெற்ற மோதலின் போது காயமடைந்த கடற்படை வீரர் ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்தார் காயமடைந்த மேலும் மூன்று கடற்படையினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதேவேளை இந்த மோதலின் பின்னர் தொழில்களில் ஈடுபட்டிருந்த பள்ளிமுனை மீனவர்களைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மு.ப.11.00 மணியளவில் நாச்சிக்குடா பகுதியில் வலைப்பாடு கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும் கடற்படையினருக்கும் இடையில் 4 மணித்தியாலங்கள் கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இந்தச் சண்டைகளில் 3 பெரிய படகு…

    • 0 replies
    • 1.4k views
  3. பதவி ஆசையில் தமிழனே தமிழனுக்கு இரண்டகம் இழைத்தான்! -காசி ஆனந்தன் -நக்கீரன் பதவி ஆசையில் தமிழனே தமிழனுக்கு இரண்டகம் இழைத்தான்!'' உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நேர்காணல் "பத்து தடவை பாடை வராது! பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா! செத்து மடிதல் ஒரேமுறைதான் சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!' -தமிழீழ விடுதலைப் போராட்டக்களத்தில், துப்பாக்கியோடு, ஒவ்வொரு போராளியும் ஏந்திச் செல்லும் காசி ஆனந்தனின் கவிதை ஆயுதம் இது. "ஈழத் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது இவரது இலக்கியம்' என்று சிங்கள அரசால் வழக்குத் தொடுக்கப்பட்டு, கொடிய சிறை வாழ்வு அனுபவித்த ஒரே ஈழத் தமிழ்க் கவிஞர். பாவேந்தர் பாரதிதாசனின் தொடர்ச்சி யாக எழுதி வருபவர் என தமிழ்க்கவிதை மரபில் மேலோ…

  4. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம் இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர். கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும்…

  5. ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு தேவையான வகையில் இராணவ நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சிவிலியன்களைப் போன்றே தொண்டு நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் கடப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வெளியேறி, வவுனியாவில் இருந்து இயங்குமாறு ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதனை வெளியேற்றமாக கருதக் கூடாது எனவும், ஓர் இடம் நகர்வாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பூவியி…

  6. http://sites.google.com/site/stopgspplus/Home குழு மின்னஞ்சலில் வந்தது.

  7. வன்னிக்களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்றும் பல இடங்களில் உக்கிர சமர்கள் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்குடன் இராணுவத்தினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். வன்னேரிக்குளம் பகுதி நோக்கி நேற்றுக்காலை பெருமெடுப்பில் இராணுவம் முன்னேற முயன்றவேளையில் அங்கு இரு தரப்புகளுக்கும் இடையே போர் மூண்டது. ஏறக்குறைய நான்கு மணித்தியாலயங்கள் நடந்த இந்தச் சண்டையில் குறைந்தது 22 படையினர் கொல்லப்பட்டனர். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இராணுவத்தை சற்றுத்தூரம் முன்னேறவிட்டு, பிறகு எமது படையணிகள் தீவிர முறியடிப்புப் பாய்ச்சலை மேற்கொண்டன. அப்போது உயிரிழந்த தமது சகா…

  8. இலங்கையில், குறிப்பாக வன்னியில், மனிதாபிமான விவகாரங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன எனக் கருதும் இணைத்தலைமை நாடுகள், அவை குறித்து ஆராய்வதற்காக அவசரக் கூட்டம் ஒன்றை அடுத்த வாரத்தில் நியூயோர்க்கில் நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இந்தக் கூட்டம் அவசர அவசரமாக அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் செயற்பட்ட சர்வதேச உள்நாட்டுத் தொண்டர் அமைப்புகள் மற்றும் ஐ.நா. நிறுவனங்களை குறுகியகால அறிவித்தலோடு அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றிய கொழும்பு அரசின் நடவடிக்கையாலும் அப்பிரதேசங்களில் வெடித்திருக்கும் கொடூர யுத்தத்தாலும் மனிதப் பேரவல நெருக்கட…

  9. இன்று இலங்கையில் அரசாங்கம் வன்னி நிலத்தை மீட்டு இலங்கையை முற்று முழுதாக தன் வசப்படுத்தும் நோக்கில் தனது படை நடவடிக்கை ஆரம்பித்து பல இடங்களை கைப்பற்றி வரும் இத்தருணத்தில் வன்னி மீதான பாரிய கண்மூடித்தனமான தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. அந்தப் பாரிய போரில் பல பொதுமக்கள் கொல்லப்பட போகின்றார்கள் என்பது இங்கு நன்றாகவே புரியக்கூடிய உண்மை. அத்தருணத்தில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் இறக்கும் வாய்ப்பக்களே அதிகம். இந்த பாரிய தாக்குதலில் பொதுமக்கள் இறக்கும் போது வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்படும் என்பதை கருத்தில்க் கொண்டு உடனடியாக அந்த அழுத்தத்தை மறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியதாகவும் அதற்கு தலைமை தா…

  10. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் இறுதிக்கட்ட யுத்தம் இலகுவானதாக இருக்காவிட்டாலும் இது நினைக்கும் அளவில் அச்சமடையக் கூடிய ஒன்றாக இருக்காது என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அனுரபிரியதர்ஸன யாப்பா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வன்னியில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் மீது விடுதலைப்புலிகள் விஷ வாயுத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில், அரசாங்கம் இதனை மனித நேயத்திற்கான யுத்தம் எனக் குறிப்பிட்ட போதிலும் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இரண்டு தரப்புக்கும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும், இரத்தம் சிந்தும் மிகவும் கொடூரமாக மா…

  11. மட்டக்களப்பில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 12 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவமும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மட்டக்களப்பு - கல்லடி, உப்போடை, நொச்சிமுனை மற்றும் நாவற்குடா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சோதனையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ராசிக் குழு உறுப்பினர் இந்த தேடுதலின் போது, படையினருக்கு உதவியாக செயற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். ஆண்கள் சகலரையும் நாவற்குடா பேச்சியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்ற படையினர் விசாரணையின் பின்னர் 12 பேரை கைதுசெய்துள்ளனர். வீடு வீடாகச் சென்று இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. படையினரின் இந்தச் சோதனை காரணமாக கல்முனை - மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்துக்கள் மூன…

  12. வன்னிப்பெரு நிலப்பரப்பில் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அவல நிலைமைகள் தொடர்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  13. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடந்த சில நாட்களாக 45 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களிலும் இரகசிய தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

  14. விசுவமடு மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: அப்பாவி பெண் படுகொலை [வெள்ளிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2008, 06:16 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர். விசுவமடு மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று வியாழக்கிழம பிற்பகல் 4:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதலை நடத்தின. இதில் அழகு கிருஸ்ணவேணி (வயது 47) என்பவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர், கிளிநொச்சி உதயநகர் மேற்கிலிருந்து இடம்பெயர்ந்தவர் ஆவார். அன்னலட்…

  15. இந்திய மத்திய அரசசைக் கண்டித்து தொடரூந்து மறியல் போராட்டம் - கி.வீரமணி சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவிகளை வழங்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகம் எதிர்வரும் 23ஆம் திகதி தொடரூந்து மறியல் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் நேற்று முன்தினம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இக் கூட்டத்தின் போது, அண்ணாவின் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படுவது, சிங்கள அரசுக்கு இராணுவ தளபாடங்களை வழங்குதல் மற்றும் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது போன்ற மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்தும், ஒரிசா சம்பவத்தை கண்டித்தும், வரும் 23ஆம் திகதி தொடருந்த…

  16. புலிகளுக்கு எதிரான கூட்டில் ஆசிய வல்லாதிக்க சக்திகள் ஆசியப் பிராந்தியத்தில் மிக முக்கிய சிக்கல்களுள் ஒன்றாகியிருக்கும் இலங்கை இனப்பிரச்சினை, அதன் விளைவான பெரும் உள்நாட்டுப் போர் ஆகியவை தொடர்பில் ஆசிய வல்லாதிக்க சக்திகளின் ஈடுபாட்டைத் தொட்டுக்காட்டி ஆய்வுக் கட்டுரை ஒன்று நேற்றுக் கொழும்பு ஆங்கிலத் தினசரி ஒன்றில் வெளியாகியிருக்கின்றது. அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில அம்சங்கள் சுவாரசியமானவை; கூர்ந்து சிந்திக்கத்தக்க கருத்து நிலைப்பாட்டைக் கொண்டவை. இந்த ஆசியப் பிராந்திய விடயங்களில் தலைமைத்துவத்துக்கு பிராந்திய வல்லாதிக்கச் "சண்டித்தனத்துக்கு' போட்டியிடுகின்ற பிரதான சக்திகள் இந்தியாவும் சீனாவும் என்பது வெளிப்படையாக யாவருக்கும் தெரிந்த உண்மை. அதேபோல, இந்திய உபகண்டப்…

  17. கிளிநொச்சி மாவட்டத்தில் சிறீலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் சீ.எப். விஷவாயு கிரனைட் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக பாதுகாப்பு முன்னரங்கில் உள்ள படையினருக்கு முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்... விடுதலைப் புலிகள் இராசன ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளின்போது இராணுவத்தினர் பயன்படுத்தும் சீ.எப். விஷவாயுவைக் கக்கும் கிரனைட் குண்ட…

  18. வன்னிப்பெரு நிலபரப்பில் இடம்பெயர்ந்து மனிதப் பேரவலத்திற்குள் சிக்கியுள்ள இரண்டு லட்சம் மக்களை காப்பாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் அனைத்துலக மட்டத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  19. கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 2005ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து காணாமல் போனவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களில் 261 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லையென மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 42 பேர் மாத்திரமே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதா

  20. புலிகளின் வானோடிகள் குறித்து ஆராய்ந்து வரும் சிறிலங்கா புலனாய்வுத்துறை [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 07:37 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழீழ விடுதலைப் புலிகளின் வானோடிகளின் திறன் குறித்து அவற்றை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்த விரைந்த சிறிலங்கா வான் படையினரின் மூலம் தெரிந்து கொண்டுள்ள அரச புலனாய்வு வட்டாரங்கள், இவ்வளவுக்கு புலிகள் எவ்வாறு வானூர்தி ஓட்ட பயிற்சி பெற்றார்கள் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இது தொடர்பில் அறிய வருவதாவது: வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்த வந்த புலிகளின் வானூர்திகளை கலைத்து சென்று தாக்குதவதற்கு கொழும்பிலிருந்து சென்ற சிறிலங்கா வான் படையின் எஃப்-7 வானூர்திகள் அந்த கும…

  21. வன்னேரியில் படையினரின் நடவடிக்கைக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 25 படையினர் பலி; 85 பேர் காயம் [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 07:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னேரிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 85 படையினர் காயமடைந்துள்ளனர். படையினர் இரு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வன்னேரிப்பகுதியில் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படையினர் தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொண்டனர். படையினரின் இத்தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பலமான தாக்குதலை நடத்தினர். …

    • 0 replies
    • 1.4k views
  22. இந்தியாவில் புலிகளின் தடையை நீடிப்பதற்கான காரணத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்து [ வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 01:11.36 PM GMT +05:30 ] இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாயின் அதற்கான காரணத்தைச் சமர்ப்பிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திற்கு நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது தொடர்பாக அமைப்பட்டிருக்கும் விசேட நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது. நீதிமன்றுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி விக்ரம்ஜித் சென் , தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை மேலும் இரு வருடங்களுக்கு நீடிக்க வேண்டுமாயின் நாளைய தினத்திற்குள் அதற்கான நியாயமான சான்…

  23. ஒன்றரை வருடங்களாக பின்வாங்கி செல்வதை தந்திரோபாய நடவடிக்கை என்று கூறமுடியாது: சரத் பொன்சேகா [வியாழக்கிழமை, 18 செப்ரெம்பர் 2008, 06:50 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] போரில் ஒன்றரை வருடங்களாக பின்வாங்கி சென்றுகொண்டு அதனை தந்திரோபாய நடவடிக்கை என்று கூறமுடியாது. விடுதலைப் புலிகளின் கடைசி நாட்கள் எண்ணப்படுகின்றன என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள சுமார் 12,000 போராளிகளில் தற்போது 3,000 பேரளவிலேயே உள்ளனர். இவர்களும் கடைசி ஆள் வரை நின்று சண்டையிடுவதைவிட எப்படியாவது தப்பியோடிவிட வேண்டும் என்ற நிலை…

  24. இந்தியாவின் ஜம்மு மாநிலத்தில் இலங்கை இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவற்துறையினர் கைது செய்துள்ளனர் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதக் குழுக்கள் மற்றும் காவற்துறை தொடர்பான தகவல்களை இணையமூடமாக பெற்றுக்கொள்ள குறித்த சந்தேக நபர் முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜம்முவில் அமைந்துள்ள இன்டர்நெட் கபே ஒன்றின் உரிமையாளர் காவற்துறையினருக்கு வழங்கியத் தகவல்களை அடுத்து குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமான இளைஞனின் பெற்றோர் கனடாவில் வசிப்பதாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்கு வருகை தந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பெற்றோர் இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் மாறி மாறி தங்கியிருப்பதாக…

  25. வன்னேரிக்குளத்தில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று வியாழக்கிழமை வன்னேரிக்குளம் நோக்கி மேற்கொண்ட முன்னகர்வு முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரது இரு உடலங்களும் படைக்கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. பெரும் எறிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் மேற்கொண்டு முன்னகர்வுகளுக்கு எதிராக போராளிகள் கடுமையாக எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்துஇ படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். இதன்போதே 25 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.